திங்கள், 27 செப்டம்பர், 2021

நோய் எதிர்ப்பு சக்தியின் மறுதொடக்கம்   தவறாக வழிநடத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாக பழுதுபார்ப்பது அதை திரும்பவும் அதீத திறனுள்ளதாக புதிப்பித்தல். பொதுவாக வயதானவர்கள் 60 வயதை கடந்தவர்கள் கடுமையான ஒவ்வாமை மற்றும் சுய-உடல்-தாக்கி நோய்யுள்ளவர்கள்.

தங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை மறுதொடக்கம் செய்து புதிப்பித்தல் அவசியமானது. இதுவொரு புதிய தொடக்கத்தை உடலுக்கு கொடுக்கின்றது இதன் நிமித்தம் புற்றுநோய் காப்புதிறன், மகரந்த அலர்ஜி, பசைப்புரதம், பால்புரதம் உணவு ஒவ்வாமை மற்றும் சுய-உடல்-தாக்கி நோய்களுக்கு எதிரான ஒரு சகிப்புதன்மையை உருவாக்கும்.

இந்த நடவடிக்கையை ராணுவ முகாம்களில் தூங்கி கிடந்த, ஒரு பழைய ஒற்றைக்கண் துப்பாக்கியை வைத்திருக்கும்  இராணுவத்திற்கு புதியரக தளபாடங்களை கொடுத்து பயிற்சிவித்தல் போல் என்று வைத்துக்கொள்ளலாம். வெளியில் பயங்கர ஆயுதங்களுடன் கொரோனா சுற்றித்திரியும் போது எங்கள் உடலுக்கும் புதியரக தளபாடங்களை கையாளுவதற்கு பயிற்சி தேவை.

செயற்கை நோய் எதிர்ப்பு செயற்கையாக ஒரு குறுகிய காலத்திற்குள் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை பெறுதல் பலவீனமான பாக்டீரியா அல்லது வைரஸ் கூறுகள், மூலிகை அல்லது செயற்கை சாறுகள் மூலம் பரம நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறலாம். செயற்கையாக பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறுகிய காலத்திற்கு 1-2 வாரங்களில் உடலில் அதிகரித்து தயார்நிலைக்கு அதாவது எதிர்த்து போராட தயாராகின்றது.

மோனோசைட்டுகள் பின்வரும் வகையான வெள்ளை இரத்த அணுக்கள் உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியின் ஒரு பகுதியாகும்: மோனோசைட்டுகள் (இது மேக்ரோபேஜ்களாக (விழுங்கி செல்கள்) உருவாகின்றது) நியூட்ரோபில்ஸ். ஈசினோபில்ஸ். பாசோபில்ஸ். இயற்கை கொலையாளி செல்கள்( NK).இந்த இரத்த வெள்ளை அணுக்கள் பழுது இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.

நியூட்ரோபில்ஸ் நியூட்ரோபில்களின் பற்றாக்குறை நியூட்ரோபீனியா என்று அழைக்கப்படுகின்றது மற்றும் இதனுடைய குறைபாடு மிகவும் ஆபத்தானது. கிரானுலோசைட்டுகள் இல்லாமல், உடல் அதனது பாதுகாப்பை இழந்து படையெடுக்கும் நோய்க்கிருமிகளுக்கு மண்டியிட்டு போகின்றது அல்லது வழியை விட்டு வேடிக்கை பார்க்கின்றது.

ஈசினோபில்ஸ் ஈசினோபில்ஸ் மிகவும் குறைவாக இருந்தால், மருத்துவத்தில் இதை ஈசினோபீனியா என்று அழைக்கின்றது. இது அதிர்ச்சி. பிடிப்புகள் மற்றும் மன அழுத்த சூழ்நிலைகளுக்கு பொதுவானது, ஒட்டுண்ணிகள் அல்லது ஒவ்வாமைகளிலிருந்து ஆன்டிஜென்கள் மாஸ்ட் செல்களில் குறிப்பிட்ட IgE உடன் பிணைக்கும்போது, ​​ அவை ஹிஸ்டமைனை வெளியிடுகின்றன, இது ஈசினோபில்களை ஈர்க்கின்றது. இரத்தத்தில் உள்ள ஈசினோபில் எண்ணிக்கை எலும்பு மஜ்ஜை உற்பத்தி அல்லது இந்த வெள்ளை இரத்த அணுக்களின் தேவை மற்றும் நுகர்வுக்கான ஒரு குறிகாட்டியாகும்.

பாசோபில்ஸ் பாசோபில்ஸ் வெள்ளை இரத்த அணுக்களின் (லுகோசைட்டுகள்) குழுவிற்கு சொந்தமானது. இவை உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். ஆஸ்துமா, பருவகாலத்தில் வரும் தும்மல் தூசி/மகரந்த அலர்ஜி போன்ற சில ஒவ்வாமை எதிர்விளைவுகளின் போது, ​​இவை இரத்தத்தில் அதிகளவில் கண்டறியப்படுகின்றன. இது உடலின் சகிப்பின்மையை காட்டுகின்றது.

செல்லப்பிராணி நாய் பார்க்கின்ற வேலையை கழுதை பார்த்தால் எப்படியிருக்கும். சில சமயங்களில் நோய் எதிர்ப்பு சக்தியும் இது போல் செயல்படுகின்றது.

இயற்கை கொலையாளி(NK) இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் பாதுகாவலர்கள் பிளாஸ்மா செல்கள் பி-லிம்போசைட்டுகளிலிருந்து எழுகின்றன மற்றும் அவை நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். நோயுற்ற திசுக்களை, புற்றுநோய் செல்கள் அல்லது வைரஸ் புகுந்து பாதிக்கப்பட்ட செல்களை ரவடிகளை அடையாளம் கண்டு கொல்லும்/என்கவுண்டர் செய்யும் பொறுப்பு, அதிகாரம் இவைகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது

இருப்பினும், அதிகரித்த எண்ணிக்கையிலான இயற்கை கொலையாளி செல்கள் பொதுவாக நமது நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் கருக்கள் பொருத்துதலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.  

அதாவது  சண்டை நடந்த இடம் எப்படியிருக்கும் நல்ல செல்களையும் சேர்த்து அழிக்கும். மிகைப்பு அடைந்த நோய் எதிர்ப்பு ஆபத்தானது உடலின் நாடி நரம்பு இரத்தநாளங்கள் முக்கியமான உள்ளுறுப்புகளை மூளை செல்களை சல்லடைபோட்டு அறுத்துவிட்டு போகும். 

இதன் நிமித்தம் மூளையில் இறத்த உறைவு, பக்கவாதம், கருக்கலைப்புக்கு காரணியாகின்றது. கருப்பை புறணி பகுதியில் அதிகரித்த இயற்கை கொலையாளி செல்கள் நிராகரிப்பு எதிர்வினைக்கு வழிவகுக்கும் இது கருவை பொருத்துவதைத் தடுக்கின்றது.

ஆரம்பகால கர்ப்ப காலத்தில் தாய்க்கும் அவளது கருவுக்கும் இடையிலான இடைமுகத்தில் இயற்கை கொலையாளி உயிரணுக்களின் பெரிய எண்ணிக்கையை ஆராய்ச்சியாளர்கள் கவனித்துள்ளனர். இருப்பினும், கரு வளர்ச்சியில் கொலையாளி உயிரணுக்களின் பங்கு இதுவரை தெளிவாக அறியப்படவில்லை.

நியூட்ரோபில்ஸ் குறைபாட்டிற்கு பொதுவாகப் பெற்ற காரணங்கள். அடிக்கடி உடலில் ஏற்படும் தொற்றுநோய்கள், ஊட்டச்சத்து குறைபாடு (ஃபோலிக் அமிலம், விற்றமின் பி12) நோய்களுக்காக எடுக்கப்படும் மருந்துகள் (ஆண்டிபயாட்டிக், வலி ​​நிவாரணி)

அரிதான காரணங்கள். கோஸ்ட்மேன் நோய்க்குறி: கோஸ்ட்மேன் நோய்க்குறி மிகவும் அரிதாக பரம்பரையாக வரக்கூடிய ஒரு நோய். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் பெருமளவு குறைக்கப்பட்ட எண்ணிக்கை அல்லது நியூட்ரோபில்ஸ் முழுமையாக இல்லாதது இருப்பது இந்த நிலை பிறப்பிலிருந்து இவர்களுக்கு உள்ளது.

செடியக் ஹிகாஷி நோய்க்குறி: சாடியக்-ஹிகாஷி நோய்க்குறி என்பது மிகவும் அரிதான பரம்பரை நோயாகும், இது மீண்டும் மீண்டும் வரும் பாக்டீரியா சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் பிற நோய்த்தொற்றுகள் மற்றும் முடி, கண்கள் மற்றும் தோலில் நிறமி குறைபாடு (அல்பினிசம்) ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றது.

ஏன் தடுப்பூசி அவசியமானது இது போன்ற பரம்பரை நோய், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் மற்றும் வேறு நோய்களுக்காக மருந்து மாத்திரை எடுப்பவர்கள் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி எவ்வளவு அவசியமானது. உங்களினால் எல்லா காலத்திலும் எல்லா நேரத்திலும் உடலை குறித்து கவனம் எடுக்கமுடியாது எங்கயாவது மக்கள் நெரிசலில் அகப்படும் போதுதான் தடுப்பூசியின் அவசியமும் தேவையும் புரியும். நன்றி மகேஷ்-ரவி.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக