ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

மண்ணில் மனிதர்கள் “கடவுள் என்பது நம்பிக்கையல்ல, அது உண்மை அதை தேட நீ வடித்த வடிவம் மட்டுமே நம்பிக்கையானது” நாங்கள் கடவுளுக்கு ஒரு வடிவத்தை கொடுத்து இப்படித்தான் இருப்பாரென்று மூளையில் நிறுத்தி வைத்திருக்கின்றோம். அதை தாண்டி எந்த வடிவத்திலும் கடவுள் வந்தாலும் எங்களினால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

உனக்கு முன்னால் கடவுள் நடந்து போனாலும் உன்னால் அவரை அடையாளம் காணமுடியாது. அந்த நம்பிகை வடிவத்தை ஒதிக்கிவிட்டு கடவுளை தேடினால் மட்டுமே உங்கள் கண்களுக்கும் கடவுள் புலப்படுவார். கடவுள் தன்னை ஒரு மறை பொருளாக, எதிர்மறை சக்தியாக இந்த உலகத்திற்கு மறைத்துக் கொண்டார் அறிவியல் மட்டும் கடவுளை தேடவில்லை உன் ஞானபுத்தியும் கடவுளை தேடுகின்றது.

நேர்மறை பொருட்களை பார்த்த கண்களினால் எதிர்மறை சக்தியை பார்க்க முடிவதில்லை. ஆனால் அதை உன்னால் உணரமுடியும். மனிதர்கள் உருவாக்கிய மதங்கள் காட்டிய வரலாறுகள் ஒன்றும் மனிதனுடைய உண்மையான வரலாறு கிடையாது. மனிதனுடைய உண்மையான வரலாறு புதைவடிவமாக இன்னும் மண்ணிலேயே கிடக்கின்றது.

மனிதர்கள் ஒரு சமூகமாக வளரும் போது மதங்கள் காட்டிய வழிகளில் தங்களை வடிவமைத்துத் கொண்டார்கள். மனிதனின் கலாச்சாரத்தை மனிதன் தோற்றுவித்த மதங்களுக்கு முன்னால் மதங்களுக்கு பின்னால் என்று பிரித்துப்பார்த்தால்.

ஆடையின்றி பிறந்தவன் ஆடை போர்த்திய கலாச்சார மனிதனாக தன்னை இந்த சமூகத்திற்கு அறிமுகம் செய்து கொண்டான். இன்று எங்களுடைய வாழ்வியல், மதங்கள் காட்டிய வாழ்வியல் முறைக்கு உட்படுத்தப்பட்டது. உணவு, உடை சமூகநீதி மொழி கல்வி, பண்டிகை என்று இன்று நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்துனை வாழ்வியல் முறைகளும் மதங்கள் அமைத்து கொடுத்தவை.

மனிதன் தன் தோற்றத்திலிருந்து அறிவுள்ளவனாகத்தான் இருந்திருக்கின்றான். ஏனென்றால் மனித பிள்ளையை வளர்ப்பது அவ்வளவு சுலபம் கிடையாது விலங்குகள் போல் மனிதப்பிள்ளை தானாக வளர்வதில்லை மனிதபிள்ளைக்கு தாய் தந்தையின் உதவி முழுமையாக தேவைப்படுகின்றது. ஒரு குழந்தையை பெற்று பாலுட்டி, உணவுட்டி அந்த குழந்தையை சுத்தம் செய்து பராமரித்து வளர்க்கும் அறிவு அவனுக்குள்ளே நிரந்தரமாகவே இருந்திருக்கின்றது.

பிள்ளை பெற்ற தாயின் இடுப்பெலும்பு நகர்தல் ஒரு பெண் கற்பம் தரிக்கும் போது அவளுடைய இடுப்பெலும்பு விரிந்து கருவில் குழந்தை வளர்வதற்கு இட ஒதுக்கிட்டை செய்து கொடுக்கின்றது. இது நிரந்தரமாக ஒரு பெண்ணை/தாயை அடையாளப்படுத்துகின்றது. தற்காலியமாக ஏற்பட்ட  இந்த இடுப்பு வலி ஒரு சில தாய்மார்களுக்கு நிரந்தரமாகி, அவர்களை வாழ்நாள் பூராகவும் வேதனைப்படுத்தும்.

இடுப்பு விளிம்பு, இடுப்பு வளைய உறுதியற்ற நிலை, அந்தரங்க சிம்பசிஸ் பகுதியில் இடுப்பை ஒன்றாக வைத்திருக்கும் தசைநார்கள் தளர்த்தப்படுவதற்கு. மிக முக்கிய காரணங்கள் உடல் அழுத்தம், கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் முந்தைய கர்ப்பங்கள் அல்லது குழந்தை பிறப்புகள். இடுப்பு வளைய உறுதியற்ற தன்மை கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்தின்போது இடுப்பு வளைய உறுதியற்ற தன்மையை உருவாக்குகின்றது.

இது இடுப்பு வலி, கீழ் முதுகு வலி,  மூட்டு எரிச்சல்  மற்றும் இடுப்பு வலியுடன் இடுப்பு வளைய உறுதியற்ற தன்மை குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களைப் பாதிக்கின்றது.

◼ஒரு பெண்ணின் இடுப்பெலும்பு நகர்ந்து பெரிதாகி காணப்பட்டாள் இவள் கருத்தரித்திருக்கின்றாள் என்று உடல் அமைப்பு அவளை அடையாளப்படுத்துகின்றது.

◼கருவில் இருக்கும் மழலை தன்னை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்துக்கொள்ள முன்கூட்டியே தயார்படுத்துகின்றது, 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக