வியாழன், 2 செப்டம்பர், 2021

ஒரு ஆறுமாத காலம் அணுவாயுத அழிவை விட, ஒரு பேரழிவு இந்த உலகத்தில் இனி மேல் வரும் என்றால் அது தண்ணீர், உணவு மற்றும் மருந்து மாத்திரைகளின் பற்றாக் குறையாகத்தான் இருக்க முடியும்.

பல்பொருள் அங்காடி (சுப்பர்-மார்கெட்) மருந்தகங்கள் (மெடிக்கல்-ஷாப்பு) தண்ணீர், எரிவாயு, மின்சார வாரியம் மற்றும் மருத்துவமனைகள், பொதுப்பணி மாநகரசபை தமக்கான பணிகளை ஒரு ஆறுமாத காலம் நிறுத்தி வைத்தால் எப்படியிருக்கும்  நினைக்கும் போதே கை கால் பதறுது ஒதறுது இல்லையா.     

பல்லு குத்தும் சிறு குச்சியைக் கூட கடைகளில் வாங்கும் நிலமைகளில்த்தான்  இன்று நகர்புற மக்கள் வாழ்கின்றனர், இந்த நிமிடம் வரை எங்கள் வாழ்வாதாரங்கள் ஒன்று கூட எங்கள் கைகளில் இல்லை. எதை எடுத்தாலும் அரசு, அரசாங்கத்தின் உதவிகளை நம்பித்தான் எங்கள் வாழ்க்கை அமையப்பெற்றிருக்கின்றது. 

இந்த உலகத்தின் அத்துனை அதிகாரங்களும், அரசு மற்றும் அதன் அதிகார வர்க்கத்திடமும் தான் கொட்டிக் கிடக்கின்றது, இந்த சமூக பிணைப்பிலிருந்து வெளியில் வந்து வாழ எந்த ஒரு மனிதனாலும் முடியாத காரியம். 80 விழுக்காடு  மக்கள் இன்று பல்பொருள் அங்காடிகளையும், அரசின் திட்டங்களையும், சமூகநல உதவிகளையும் தங்களை பீடித்திருக்கும் தீராத நோய்களுக்கான மருந்துகளை வாங்குவதற்காக மருந்தகங்களையும் நம்பித்தான் வாழ்கின்றனர்.

இதில் ஏதாவது ஒன்று  தங்கள் நடைமுறைவாத ஒருங்கிணைப்பை விட்டு விலகும் போது, பிரச்சனைகள் நம்மை சுற்றி தடிமனாக வளர்கின்றது.

சிறு தோட்டங்களை நம்பி வாழ்ந்த கிராமத்து மக்கள் கூட இன்று மரபணு கலப்பட விதைகள், நவீன வேளாண்மை மற்றும் பெரும் பண்ணை விவசாயத்தின் தலையீடு, அரசு அதிகாரத்தின் தலையீடு என்று மாறுபட்ட அழுத்தங்கள்.

பாரம்பரிய இயற்கை வேளாண்மையை கைவிடும் நிலைமைகளில்த்தான் இன்று வாழ்கின்றார்கள், இது போதாதென்று கடலை நம்பி வாழும் கடலோர மக்களின் மீன் பிடிக்கும் உரிமைகளை இழக்கும் காலம் வெகு விரைவில் வரும். இது ஒன்றும் மனித சட்டங்கள் கிடையாதுஇயற்கையின் கட்டாயம், காலம் உங்களை கட்டாயப்படுத்துகின்றது.

சீனா: மேற்க்கத்திய தொழில் நுட்பங்களை பிரதி எடுத்து வளர்ச்சி அடைந்தாலும் அந்த நாட்டு மக்களின் கடினமான உழைப்பிற்கு இந்த உலகம் மதிப்பளித்து தலை-வணங்குகின்றது, குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்ற, கொள்கலன்-கப்பல் போக்குவரத்து, எண்ணிலடங்கா துறைமுக  சேமிப்பு அறைகள் மற்றும் களஞ்சிய சாலைகள்.

ஒட்டுமொத்த, மனித சமூகத்தின் பண்ட-மாற்று தேவைகளை பூர்த்தி செய்தாலும், மோசமான கால நிலை, கடற்கொள்ளை, கடற்-சண்டை, உலக பொருளாதாரத்தின் சரிவு, தனி மனித சர்வாதிகார போக்குஎதிர் காலத்தில் அச்சுறுத்தும் ஒரு சக்தியாக மாறக் கூடும்.

எங்களுடைய தாத்தா-பாட்டி இது போன்ற சமூக பண்டமாற்றை  ஒன்றைக் கூட நம்பி வாழ்ந்ததில்லை கடவுளையும், இயற்கையையும், வயல் வரம்பு, வீட்டுத்தோட்டம், மாந் தோப்பு, தென்னன் தோப்புஆடு, மாடு, கோழி என்று தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் வாழ்வாதாரங்களை அமைத்து.

அரிசி மா இடித்தல், காய்கறிகள் அதிகமாகக் கிடைக்கும் காலங்களில் வற்றல், ஊறுகாய் பனங்கிழங்கு ஒடியல், மரவள்ளிச் சீவல், தயிர் மோர் நெய்  என்று உணவுப்பொருட்களை தயாரித்து

தங்களுடைய கைகளை நம்பி சந்தோஷமாக வாழ்ந்தார்கள். இதெல்லாம், நம் கைகளை  விட்டு   பல காலம் ஆச்சு என்று நீங்கள் முனுமுனுப்பது சரிதான் இதற்கான மந்திர பரிகாரம் தான் என்ன?  தொடர்ந்து விவரிக்க (….) உலக பொருளாதாரத்தை பூசர்மா பூசி, மஞ்சுவிரட்ட விட்டாலும் அது ஒரு நாள் ஓரங்கட்டுவது உண்மை தான்.

இது போன்று  தொங்கி நிற்கும் இந்த சமூக பிணைப்பிலிருந்து வெளியேற, சிறு தோட்டம், சிறு பண்ணை அமைப்பது, உங்கள் உணவுத்தேவையை நீங்களே உங்களுக்காக பூர்த்தி செய்வது  தான் உங்கள் எதிர் கால வாழ்க்கைக்கு சிறந்ததொரு அரணாக அமையும் இல்லாது போனால் நீயும் வரிசையில் காத்துக்கிடக்க வேண்டிவரும். உனக்கான காலம் குறுகியது எவ்வளவு வேகமெடுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக வேகமெடு.

படித்தவன் தாய்ப்பால்தான் ருசிக்கும் என்று எவன் சொன்னது, படிக்காதவன் கொடுத்தாலும் ருசிக்கும்”

எங்கள் தாத்தா பாட்டி பெரியதாக பட்டப்படிப்பு எதுவும் படித்திருக்கமாட்டார்கள் ஆனால் பத்து பிள்ளைகளை பெற்று அழகாக வளர்க்கும் திறமையுள்ளவர்களாக இருந்தார்கள்.

நீங்கள் படித்திருக்கின்றீர்கள் வேலை பார்கிறீர்கள் உங்கள் பொருளாதாரத்தில் உங்களால் பத்துப்பிள்ளைகளை பெற்று வளர்க்க முடியுமா? கண்டிப்பாக முடியாது என்பதுதான் உங்கள் பதிலாக இருக்கும்.

எங்கள் தாத்தா பாட்டி எப்படி தங்கள்  பொருளாதாரத்தை ஈட்டினார்கள். அவர்கள் எப்படி அதை வைத்துக்கொண்டு அழகான ஒரு வாழ்க்கையை அமைத்தார்கள், அவர்களுக்குள்ளே கூடிவாழும் சமூக ஒற்றுமை இருந்தது எங்களை போல் அரசின் கைகளையும் பண்டமாற்று கப்பலையும் நம்பியிராமல் தங்கள் தேவைகளை தாங்களே கையில் எடுத்துக் கொண்டார்கள்.

அன்றைய வாழ்வியல் வடிவம் அவர்களுக்கு ஒரு அழகான வாழ்க்கையை அமைத்து கொடுத்தது. இன்றைய வாழ்வியல் வடிவம் எங்களை அலையவிட்டது.   

இப்ப சொல்லுங்கள் எது பெரியது என்று இந்த உலகத்தை அழிக்கப் போவது அணு  ஆயுத பேரழிவா அல்லது பெருகி வரும் மக்கள் தொகையா என்று ?


ஒன்றே குலம் ஒருவனே தேவன் ....... திருமூலர்

இளவரசர் சித்தார்த்தர் "சாக்கிய முனி" என்று அழைக்கப்பட்ட கெளதம-புத்தரும் கிறிஸ்த்து என்று அழைக்கப்பட்ட இயேசு நாதரும் மிகப் பழமையான இரண்டு பெரிய மதங்கள் என்று சொல்லக்கூடிய இந்து சமயம், யூத மதங்களிலுள்ள மடைமையான சில பழக்க வழக்கங்களையும் மூட நம்பிக்கைகளையும் சீர்திருத்தம் செய்தவர்கள்


இந்தியாவில் சில பகுதிகளில் யாகம், வேள்வி என்ற பெயரில் மிருகங்களை பலி செலுத்திக் கொண்டிருந்த நேரத்தில் தான் புத்தருடைய வருகையும் இருந்தது


புத்தருடைய காலத்தில் இந்து சமயத்திலும் இயேசுவின் காலத்தில் யூத மதத்திலும் கண் மூடித்தனமாக செய்யப்பட்ட மிருகபலி, மிருக வதைக்கு எதிராக கலகம் செய்து அதை மாற்றி அமைத்து கொல்லாமை என்ற புதிய கருத்தை அவர்கள் மனங்களில் விதைத்த முற்போக்கு புரட்சியாளர்கள்


அன்பே சிவம் என்று இந்து மத கோட்பாடான அன்பு நெறியைத்தான் இவர்களும் போதித்தார்கள் "அன்புதான் இன்ப ஊற்று. அன்புதான் உலக மகா சக்தி என" பகவான் புத்தரும்


கண்ணுக்கு கண்-பல்லுக்கு பல் என்று மெசபடோமிய மன்னரினால் போடப்பட்ட சட்டத்தை மாற்றி "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு" என்று அன்பு நெறியை போதித்த இயேசுவும்

இந்து கடவுள்களுக்கு எதிராக எந்த கலகமும் செய்யவில்லை,


மாறாக கடவுளின் பெயரால் ஏன் மிருகங்களை கொலை செய்கின்றீர்கள் என்று குரல் கொடுத்தவர்கள். இஸ்ரவேல் மன்னர் சாலமன் கட்டிய கோயிலில், பழைய ஏற்பாட்டின் படி, ஜனங்களின் பாவ நிவாரண பலியாக மிருகங்களை பலி கொடுத்து வந்தார்கள் இதற்கு எதிராக கலகம் செய்த இயேசுவை அந்த கோயில் மதகுருமார்கள் கொலை செய்தார்கள்.


" இவன் யார் தேவனின் சட்டங்களை மாற்றுவதற்கு " என்று ஜனங்களை ஏவி விட்டார்கள் என்று லேவியர்-நூலின் கதை சொல்கின்றது


இந்தியாவில் அவதரித்த கெளதம-புத்தருடைய மார்க்கம் சீனா ஜப்பான் இலங்கை போன்ற நாடுகளுக்கும் பரவியிருந்தது ஆனால் அங்குள்ள மக்கள் தங்களுடைய கலாச்சாரம் உணவுப்பழக்கம் உடை, மொழி சார்ந்த உணர்வுகள் எதையுமே விட்டுக்கொடுக்காமல் பகவான் புத்தரை மட்டும் ஏற்றுக் கொண்டார்களே தவிர


புத்தருடைய முதன்மை கொள்கையான கொல்லாமை மிருகவதை போன்ற எந்த போதனைகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அப்படி ஏற்றுக்கொண்டிருந்தால் கடந்த காலங்களில் இலங்கையில்இவ்வளவு கொலைகள் விழுந்திருக்குமா..?


கொசுக்களையும் ஈக்களையும் காலில் மிதிபடும் எறும்புகளையும் பனை ஓலை-விசிறியால் விசிறி விட்டு ஒட்டகத்தை விழுங்குபவர்களாக இருக்கின்றார்கள் இவர்கள். இந்தியாவில் தோன்றிய புத்தருடைய வாழ்க்கையும் போதனைகளும் இந்தியாவை விட்டு வெளியே எங்கேயும் போகவில்லை எந்த மக்களுக்காக சொல்லப்பட்டதோ அந்த மக்களே அவருடைய போதனைகளை ஏற்றுக்கொண்டார்கள் என்பது தான் நூற்றுக்கு நூறு உண்மை


புத்தமார்க்கமும் சமணமார்க்கமும் கூறின கொல்லாமை மிருகவதை போன்ற போதனைகள் இன்று வரைக்கும் இந்துக்களின் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது ஆடுகளையும் மாடுகளையும் பாம்பு தவளை என கொன்று தின்னும் இவர்களுடைய வாழ்க்கைக்கும் கொல்லாமைக்கும் என்ன சம்பந்தம் இருக்கப்போகின்றது


அவர்களின் மனதை புண்படுத்துவதாக நினைக்க வேண்டாம் இது தான் எதார்த்தம் இந்து மதம், புத்த-சமண மதப்பிரிவினர்களை புறந்தள்ளி விட்டதற்கு காரணம் இவர்கள் கடவுள்-பக்தி மறுப்பாளர்கள் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இல்லை என்றால் கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த திருவள்ளுவர்-காலத்திற்கு முன்-200-250-ம் (கி மு-550) ஆண்டின் சம-காலத்தில் அல்லது இடைப்பட்ட காலங்களில் வாழ்ந்த புத்தரையும் மகாவீரரையும் இந்து மதம் ஏற்றுக்கொண்டிருக்கும்


புத்தரும் இயேசுவும், தங்களுக்கென்று ஒரு மதப்பிரிவினை தொடங்கும் படி மக்களிடம் சொல்லவும் இல்லை, இல்லை தாங்கள் தான் கடவுள் என்று அறிவிக்கவும் இல்லை புத்தரின் வாசம் (போதனைகள்) இயேசுவிடமும் வீசியது ஆனால் யூதர்கள் கொல்லாமை யை ஏற்றுக் கொள்ளவில்லை ஏற்றுக் கொண்டிருந்தால் இயேசுவை கொலை செய்திருப்பார்களா..?

ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் அனுமன் இருக்கையில் ஏது பயம்

 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக