வெள்ளி, 10 செப்டம்பர், 2021

நீங்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திவிட்டீர்களா.. தவறான பரப்புரை, பயம் உங்களை தடுக்கின்றதா ....? தடுப்பூசி பற்றி சரியான ஒரு அறிவை தெரிந்து கொண்டால் உங்கள் பயம் விலகும்...

தடுப்பூசிகள் ஒரு முற்காப்பு முறையே தவிர, அது கொரோனா வைரஸ் நோய்களை குணப்படுத்தும் ஒரு மருந்து கிடையாது. ஒருவருக்கு முன்கூட்டியே அல்லது தடுப்பூசிக்கு பின்னால் ஏற்படும் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி பொறுப்பாளியாக இருக்காது. புதுப்புது வைரஸ்களை உருவாக்கும் காரணியாக நீங்களே இருக்கின்றீர்கள். கொரோனா வைரஸ் பற்றிய ஒரு அவநம்பிக்கை இன்னும் உங்களுடன் ஒட்டியே திரிகின்றது.

அம்மை நோயைப்போல் நீண்ட கால தீராத வடுக்களை கொரோனா வைரஸ்களும் இட்டுச்செல்கின்றது. தொற்று ஏற்பட்டு நோய் குணமாகினாலும் அதற்காக எடுக்கப்படும் காலத்தில் உடலை சல்லடை போட்டு அறுத்துவிட்டு போகின்றது.

உங்களுக்கு ஏதாவது வைரஸ் தொற்று ஏற்படும் போது இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி எதிர்த்து போராடும், இதற்காக உடல் எடுக்கும் கால அவகாசத்தை தடுப்பூசிகள் சுருக்கி கொடுக்கின்றது.

தடுப்பூசி செலுத்திய ஒரு குறுகிய நேரத்தில்(காலத்தில்) மெசஞ்சர்   mRNA”  தடுப்பூசி தகவல். அமினோஅமிலங்கள் வைரஸ் புரதமாக(முனைப்புரதம்) மொழிபெயர்க்கப்பட்டு, நோய் எதிர்ப்பு அமைப்பினால்  (லுகோசைட்டுகள்: வெள்ளை இரத்த அணுக்கள்) அடையாளம் காணப்பட்டு அழிக்கப்படுகின்றது மற்றும் நினைவக செல்களிலும் பதிவாகின்றது.

இத்துடன் தடுப்பூசியின் வேலை முடிகின்றது, உடலில் தடுப்பூசி சம்பந்தப்பட்ட எந்த பொருள்களும் இல்லாமல் விழுங்கி செல்கள் முழுமையாக விழுங்கி இரத்தத்தை சுத்தம் செய்கின்றது. இந்த முனைப்புரத அமைப்பை கொண்ட வைரஸ்கள் (சார்ஸ்-கோவ்-2) ஏதாவது  ஒரு சர்ந்தப்பத்தில் உடலில் தொற்றும் போது அதை உடனடியாக அடையாளம் கண்டு தாக்கியழிக்கின்றது.

இந்த காலத்தில் மெதுவான ஒரு காய்ச்சல், தலையிடி மற்றும் உடல் வலி ஏற்படுவது இயல்பானது இந்த நிலமை ஒரு குறுகிய காலத்தில் ஒரு வரையறைக்குள்ளே இருந்தால் ஆரோக்கியமானது, மாறாக கடுமையான காய்ச்சல் தொடர் தலைவலியிருந்தால் மருத்துவரை தொடர்பு கொள்ளவேண்டும்.

தெரிந்து கொள்ளுங்கள் தடுப்பூசி செலுத்தியவர்கள் தங்களுக்கான ஒரு தடுப்பாற்றலை மட்டுமே கொண்டுள்ளனர் அவர்கள் கொரோனா வைரஸ்களை மற்றவர்களுக்கு பரப்புவர்களாகக்கூட இருப்பார்கள். தடுப்பூசிகளினால் செய்ய முடியாத ஒன்றை உங்களினால் செய்யமுடியும். புதுப்புது மரபணு பிறழ்ச்சி வைரஸ்களின் உருவாக்கத்தை தடுக்கமுடியும்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் உங்கள் உதவியால் மட்டுமே கொரோனா வைரஸ்களை ஒழிக்கமுடியும். உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் அயலவர் வீட்டு குழந்தைகளை நினைவில் வைத்து செயல்படுங்கள். எனது நன்றிகள் எப்பவும் உங்களுக்கானது இனிதானதொரு எதிர்காலத்தை உருவாக்க இன்றே புறப்படுவீர் உங்களுக்கு எனது இனிதான வணக்கங்கள்.

கொரோனா தடுப்பூசி புதுப்புது வைரஸ் பிறழ்வுகளை நிறுத்த முடியுமா? ஆம்  அதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் என்னிடம் இல்லை. ஆரம்பத்தில் இருந்த சீனா/கோவிட்-19 வைரஸ்கள் உருக்குலைந்து மறைந்து போய்விட்டது இனிவரும் காலங்களில் இந்த புதிய பிறழ்வு வைரஸ்கள்தான் 2022 வரை ஆதிக்கம் செலுத்தப்போகின்றது. அல்லது தொடர்ந்து இருக்கப்போகின்றது.

உலக சுகாதார அமைப்பு  இந்த புதிய பிறழ்வு வைரஸ்களுக்கு ஒரு புதிய பெயரை கொடுத்திருக்கின்றது. B.1.1.7-பிரிட்டிஷ் பிறழ்வு – ஆல்பா. B.1.351-தென்னாப்பிரிக்கா பிறழ்வு – பீட்டா. B.1.1.28-பிரேசில் பிறழ்வு – காமா. B.1.617-இந்திய பிறழ்வு - டெல்டா.

பிரிட்டிஷ், இந்திய, தென்னாப்பிரிக்க மாறுபாடுகள் அசல் கொரோனா வைரஸின் பல வகைகள் ஐரோப்பா/ஜெர்மனியிலும் கண்டறியப்பட்டிருக்கின்றது  B.1.1.7-பிரிட்டிஷ் மாறுபாடு இந்தியாவில் இருந்து வந்த B.1.617  இன்னும் அதிகமாக ஆதிக்கம் செலுத்திவருகின்றது.

சமீபத்திய ஆய்வுகளின்படி 20 நாடுகளில் B.1  பிறழ்வு வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா மாறுபாட்டைப் போலவே, பிரேசில் வைரஸ் முனைப்புரத (ஸ்பைக் புரத) பிறழ்வுகள் N501Y, E484K மற்றும் K417N மற்றும் பல பிறழ்வுகளும் உள்ளன.

இதன் பொருள் புதிய மாற்றங்கள் முதல் பிறழ்விலிருந்து எழுகின்றன, இது மரபணு அலங்கார கட்டமைப்பு மாற்றங்களைக் காட்டக்கூடும். குறிப்பாக, மாற்றியமைக்கப்பட்ட E484K பிறழ்வு தற்போது மந்தமான சுகாதார நடவடிக்கை, பாதுகாப்பு, தடுப்பு நடவடிக்கை இல்லாத பல நாடுகளில் பெருமளவில் பரவிவருகின்றது. பொதுவில் வைரஸ்கள் பெருகும்போது, பிழைகள் தவறான நகல் எடுப்பு மற்றும் பிறழ்வுகள்,

உடலின் எதிர்ப்புகளை சமாளித்து தன்னை தக்கவைத்துக்கொள்வதற்காக ஒரு சில அமினோ அமிலங்களை மாற்றியமைத்தும்  ஒரு சில எழுத்துக்களை விடுத்தும் கட்டமைக்கின்றது. இது போன்ற SARS-CoV-2 இன் 10,000 க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் உலகளாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வைரஸ்கள் அசலுக்கு 100 சதவீதம் ஒரே மாதிரியாக இருக்காது. நாம் தடுப்பூசி போட்ட பிறகு, உடலில் ஆன்டிபாடிகளை உருவாக்குகிறோம். இந்த ஆன்டிபாடிகளின் மிக முக்கியமான பணிகளில் ஒன்று, வைரஸ்கள்  நம் உயிரணுக்களுடன் இணைவதைத் தடுப்பது, இது தொற்றுநோயையும் தவிர்க்கின்றது.

புதிய பிறழ்வுகள் உருவாவதை இந்த நறுக்குதல் பொறிமுறை பாதிக்கலாம், இதன் பொருள் அசல் வைரஸுக்கு எதிரான தடுப்பூசி நம் உடலில் பிறழ்ந்த புதிய வைரஸ் மாறுபாட்டைக் கையாளும் போது கூட பாதுகாப்பை வழங்க முடியும். இருப்பினும்  உடலில் எல்லா சமயங்களிலும் புதிதாக உருவான வைரஸ் பிறழ்வுகளை தடுப்பூசியால் அடையாளப்படுத்தப்பட்ட எதிரியாக்கி/அந்நிய உடல்களுக்கு எதிரான ஆன்டிபாடிகள் கண்டுகொள்வதில்லை. 

மனிதனே ஒரு வைரஸ் தொழிற்சாலையாக இருக்கின்றான். இந்த புதிய பிறழ்வு வெளியிலிருந்து வரவில்லை அவருக்குள்ளேயே  உருவாகி  அவரையை காலிசெய்கின்றது 

இதனால் காரணம் தெரியாமல் நிறைய பேர் இறந்துபோகின்றார்கள்..வௌவால்கள் பரப்பியதை காட்டிலும் மனிதன்தான் கொடூரமான வைரஸ்களை உருவாக்கின்றான். இதை கட்டுக்குள்ளே வைக்கவில்லை என்றால் மனிதன் தப்பிப்பிழைப்பது கேள்விக்குறியான ஒன்று.

இன்றைய  நிலவரத்தில் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவதால், வைரஸ்கள் தொடர்ந்து மாறக்கூடிய அபாயமும், புதிய மாறுபாடுகள் தொடர்ந்து வெளிவரும். அபாயமும் இருக்கின்றது தடுப்பூசி போட்டால்  மட்டும் போதாது தொடர்ந்து சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது  கட்டாயமாக இருக்கின்றது.

இதனால்தான்  கொரோனா வைரஸ் எவ்வளவு ஆபத்தானது என்று ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.. டிசம்பர் 2019 - கோவிட் -19 தொற்றுக்கான முதல் அதிகாரப்பூர்வ, டிசம்பர் 1 ஆம் தேதி  33-43 பேர்களுடன்  தொடங்கிய ஒரு வைரஸை பாண்டமி( சர்வதேச பரவல்)ஆக்கிய பெருமை எங்களைத்தான் சேரும். .

“இன்றைய இருளுக்காக நீ கண்ணீர் வடிக்காதே, அது நாளை உனக்கு வெளிச்சமாக கூட மாறலாம்”


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக