செவ்வாய், 16 மே, 2023

Toxic alcohol [adulterated alcohol] Toxic alcohol: Methanol [form:CH3OH] is a carbon-based compound that burns with a green flame.

நச்சு சாராயம் [கள்ளச்சாராயம்] நச்சு சாராயம்: மெத்தனால் [வடிவம்:CH3OH]  ஒரு கார்பனை கொண்டு கட்டமைக்கப்பட்டது இது பச்சை நிற சுடரில் எரியக்கூடியது.

அருந்தக்கூடிய மதுபானம் எத்தனால் [வடிவம்: C₂H₆O] அல்லது எத்தில் ஆல்கஹால், அனைத்து ஆல்கஹால்களிலும் மிகவும் சுவையான வடிவம் . இது இரண்டு கார்பன் அணுக்களை கொண்டு கட்டமைக்கப்பட்டது மற்றும் நீல நிற சுடரில் எரியக்கூடியது.

குடிக்கிற சாராயம் நல்லதா கெட்டதா என்று  தெரிந்து கொள்வதற்கு பெரிய சோதனைகள்  எதுவும் தேவையில்லை. கொஞ்சம் ஆல்கஹாலை ஒரு மது கிண்ணத்தில் ஊற்றி பற்ற வைத்து தெரிந்து கொள்ளலாம்.

எத்தில் ஆல்கஹால் தயாரிப்பு: சர்க்கரை அல்லது பழங்களை புளிக்கவைப்பதன் மூலம் மது தயாரிக்கப்படுகின்றது  அதாவது பாக்டீரியா மற்றும் ஈஸ்ட்களின் செயல்பாட்டின் மூலம் தயாரிக்கப்படுகின்றது.  ஈஸ்ட் பாக்டீரியாக்கள் இல்லாமல் மது தயாரிக்க முடியாது. எத்தனால், உயிர்ப்பொருளை நொதிக்கச் செய்வதன் மூலம் பெரும்பாலும் பெறப்படுகின்றது.

உயிர்மத்தின் ஆற்றலின் ஒரு பகுதி இழக்கப்பட்டு கார்பன் டை ஒக்சைடு உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆல்கஹால் தயாரிக்கும் போது புளிக்க வைத்த பதார்த்தங்களை திறந்து வைத்தால் அது வினிகர் ஆக மாறி விடுகின்றது.

வினிகர் உற்பத்தி செய்யப்படும் போது, வினிகர் பாக்டீரியாக்கள் ஆல்கஹாலை  ஒட்சிசன்-O2 உதவியுடன் முற்றிலும் அசிட்டிக் அமிலமாகவும் தண்ணீராகவும் மாற்றுகின்றது.

மதுபானம் உற்பத்தி செய்வதற்கு  புளிக்க வைத்த பதார்த்தங்களை மூடி வைக்க வேண்டும். இந்த செயல்முறை புளிக்க வைத்த பதார்த்தங்களை  ஆல்கஹாலாக மாற்றும்.[ தோசைமாவை+ ஈஸ்ட், மூடிவைத்து  புளிக்க வைத்தால்  அதற்கு ஓரு தனிச்சுவை உண்டு, திறந்து வைத்தால் அதற்கு வேறு சுவை உண்டு]

எத்தனாலும்  மெத்தனாலும் ஒரே குடுவையில் தான் உருவாகின்றது அனுபவம் மிக்க டிஸ்டில்லரி மாஸ்டர்  அதனுடைய வெப்பநிலையை சரி பார்ப்பதன் மூலம் சுத்தமான அருந்தக்கூடிய சாராயத்தை உற்பத்தி செய்கிறார்கள்.

ஸ்டில்லில் சரியான வெப்பநிலையை [80 - 85° C] அடைவதற்கு காய்ச்சி வடிப்பதற்கு நிறைய அனுபவமும் பொறுமையும் தேவை. இதில் ஏற்பட்ட தவறுதான் நச்சு சாராயமாக [ மெத்தனால்] மாறுகின்றது.

கள்ளமாக சாராயம் தயாரிப்பவர்கள் இந்த இடத்தில் தவறிப் போகின்றார்கள்.  சாராயம் குடிப்பது தவறு,  இருப்பினும் அரசு முத்திரை உள்ள மதுபானங்கள் பாதுகாப்பானவை.

தவறாக தயாரிக்கப்பட்ட சாராயத்தை குடித்த பிறகு  மெத்தனால் வேலை செய்யும் போது விஷம் ஏற்படுகின்றது. விஷத்தின் முதல் அறிகுறிகள் மெத்தனாலுடன் தொடர்பு கொண்ட 12-24 மணி நேரத்திற்குப் பிறகு தோன்றும். தலைவலி, தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி மற்றும் மங்கலான பார்வை ஆகியவை இதில் அடங்கும். நோயாளி சுயநினைவை இழக்கிறார் மற்றும் அவரது தசைகள் பிடிப்பு. இறுதியில், மாரடைப்பு மற்றும் இறப்பு ஏற்படுகின்றது .

மெத்தனால் வயிற்றில் நீண்ட நேரம் இருப்பதால், இரைப்பைக் கழுவுவது நல்ல  சிகிச்சை முறை.இன்சுலினின் உதவியின்றி உடம்பில் உள்ள சர்க்கரையை ஆல்கஹால் எரித்து விடுவதால் மூளையின் இயக்கத்திற்கு தேவையான குளுக்கோசின் அளவு குறைந்து.

கோமா நிலைக்கு கொண்டு செல்கின்றது. மதுபானம் அருந்திவிட்டு நன்றாக உறங்குகிறான் என்று சொல்வது தவறு அவர்கள் கோமா நிலையில் கிடக்கின்றார்கள். சாராயம் ஒரு விஷம். கல்லீரல் இந்த விஷத்தை நீண்ட காலமாக அறிந்து வைத்திருக்கின்றது அதனால் தான் குடிப்பவர்கள் ஒவ்வொரு முறையும் தப்பி பிழைக்கின்றார்கள்.

தாறுமாறாக  இவர்கள் பேசுவதற்கு உடலை சமநிலையில் வைத்திருக்கும் உட்காதுகள் பாதிப்படைவதால் மற்றும் சிறு-மூளை மயங்கி போவதினால்  குடிப்பவர்கள் அடிக்கடி தள்ளாடி தள்ளாடி விழுந்து உடலில் காயங்களையும், அவமானங்களையும் உண்டாக்கி கொள்கின்றார்கள் மதுவிற்கு அடிமையானவர்கள்.

பிறகு இவர்கள் தங்களுடைய வாழ்வின் தனித்தன்மைகளை இழந்து நடைப்பிணமாக அலைய வைக்கும் மற்றும் உடல்ரீதியான பாதிப்புக்கள் கடுமையான கல்லீரல் பாதிப்பு,

கல்லீரல் உடலில் இருந்து திரவங்களை உறிஞ்சி, நச்சுகளை வெளியேற்றுவதால், தோல் வறண்டு, அரிப்பு சொறி ஏற்படுகின்றது சிறுநீரக நோய் மற்றும் மூளையில் குறிப்பாக நரம்பு செல்களின் இறப்பு, நினைவாற்றல் இழப்பு, பக்கவாதம், மூளைக் கோளாறு போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆல்கஹால் தயாரிப்பது  ஒன்றும் சட்டவிரோதம் கிடையாது, இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க அரசு  உத்தரவாதம் பெற்ற தயாரிப்புகள் நல்லது [ஆல்கஹால் தயாரிக்கும் அனுமதி நாடுகளின்  இறையான்மையை பொறுத்தது]

வீட்டில் சாராயம் தயாரிக்கும் கூட்டுப் பொருட்களான சக்கரை தண்ணீர் ஈஸ்டர் இந்தக் கலவையை நொதிக்க வைத்து காட்சி வடிகட்டுவதன் மூலம் சுவை மணம் மற்றும் நிறமற்ற ஆல்கஹாலை தயாரிக்க முடியும். 

இதை நீங்கள் உணவுகள் பதப்படுத்துவதற்கும் சுவை மிக்க உணவு பண்டங்கள் தயாரிப்பதற்கும் வலி நிவாரண மருந்தாகவும் மென்மையான பானம் தயாரிக்கவும், மாமிச உணவுகளை மென்மைப்படுத்தவும் மற்றும் சுவையூட்டியாக பயன்படுத்திக் கொள்ளலாம் .

20 க்கும் மேற்பட்ட ஆல்கஹால் வகைகள் இருக்கின்றன:

பொப்பநோல் - ஆல்கஹால் (Propan-ol )   C3 H8 - OH கிருமிநாசினி மற்றும்  சுத்தம் செய்யும் திரவமாகவும் பாவிக்கப்படுகின்றது.


மெத்தில்நோல் -ஆல்கஹால் (Methan-ol)   H3 C - OH  நச்சு-எரிபொருள்.

புட்ரநோல் - ஆல்கஹால்   (Butan-ol)        H9 C4 - OH   நச்சு-எரிபொருள்


எத்தில்நோல் -ஆல்கஹால். (Ethan-ol)    H5 C2 - OH அங்கீகரிக்கப்பட்ட மதுபானம் அருந்தக் கூடியது.


சுத்தமான சாராயம்-அதன் செறிவு 48% Vol அருந்தக் கூடியது இதற்கு மேல் கூடினால் இதுவும் ஒரு நச்சு-எரிபொருள்-85%  E85 பெட்ரோல் ஆகும் பழுத்த பழங்கள் மற்றும் பழச்சாறுகளில் இயற்கையாகவே எத்தனால்- Ethanol உண்டு.


நல்ல சாராயம் கள்ள சாராயம் பொதுவாக மதுபானம் எதுவாக இருந்தாலும் அது ஒரு விஷம். ஒரு சிறிய கிளாஸ் பீர், ஒயின்  கூட காலப்போக்கில் கொழுப்பு கல்லீரலை ஏற்படுத்தும். இது இன்சுலின் முறிவு சர்க்கரை நோய்போன்ற வளர்சிதைமாற்ற கோளாறுகளை ஏற்படுத்துகின்றது.


ஆல்கஹால் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஆல்கஹால் ஒரு செல் விஷம் என்பதை பலரும் உணரவில்லை. மூளையில் உள்ள எண்ணற்ற நரம்பு செல்கள் படிப்படியாக அழிந்து போகின்றன , குடித்து ஓரிரு நாளில்  நேரடியாக இறக்காது. இருப்பினும், வழக்கமான மது அருந்துதல் நீடித்த மூளை பாதிப்பை ஏற்படுத்துகின்றது.


ஆல்கஹால் மூளையை முதுமையாக்குகின்றது அதிக மது அருந்துதல் கொழுப்பு கல்லீரலுக்கு வழிவகுக்கும்  இது வீக்கம் மற்றும் கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றது. இது கல்லீரல் அழற்சிக்கு கூட வழிவகுக்கும்.


கல்லீரலின் திசு அழிக்கப்பட்டு உறுப்பு அதன் செயல்பாடுகளை படிப்படியாக இழக்கின்றது. கல்லீரல்,  ஈரல் அழற்சி என்பது குணப்படுத்த முடியாத ஒரு நாள்பட்ட நோயாகும். நோயின் இறுதி கட்டத்தில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அவசியம்.


நீங்கள் உடல் எடை தொப்பையை குறைக்க விரும்பினால், நீங்கள் நிச்சயமாக மதுவை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மதுவைத் தவிர்ப்பது  உங்கள் எடை  கவனிக்கப்படுகின்றது. கூடுதலாக, தூக்கம் ஆழமாகின்றது, பகலில் சுறுசுறுப்பு திறன்கள் அதிகரிக்கின்றது


மற்றும் மன அழுத்தம் குறைகின்றது. மற்றொரு நேர்மறையான விளைவு நோயெதிர்ப்பு அமைப்பு வலுவடைகின்றது. தொற்று நோய் எதுவும் கிட்ட வராது, மதுவை விட்டொழித்தால்  அது உங்கள் வாழ்வை மேன்படுத்தும்


புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக