திங்கள், 22 மே, 2023

Keratin and L-Cysteine, food product: The body's own keratin has a protective function for hair, skin and nails. K

கெரட்டின் மற்றும் எல்-சிஸ்டைன், உணவு தயாரிப்பு: உடலின் சொந்த கெரட்டின் முடி, தோல் மற்றும் நகங்களைப் பாதுகாக்கும் செயல்பாட்டைக் கொண்டுள்ளதுகெரட்டின் அமினோ அமிலங்களிலிருந்து , அதாவது புரதங்களுக்கான அடிப்படை கட்டுமானத் தொகுதிகளிலிருந்து உருவாகின்றது. கெரட்டின் மயிர், நகம் விலங்குகளின் கொம்புகளிலுள்ள ஒரு கட்டுமான பொருள் 


எல்-சிஸ்டைன் இது  மனித/விலங்குகளின் கல்லீரலால் தொகுக்கப்படுகின்றது. எனவே, விலங்குகள், விலங்கு உணவுகளில் அதிகமாக காணப்படுகின்றன.


மனித முடியிலிருந்து எல்-சிஸ்டைன் பெறப்பட்டது. இது ஒரு கடந்த காலம். இன்று அனுமதிக்கப்படுவதில்லை. இன்று அவை குடலில் வசிக்கும் பாக்டீரியா எஸ்கெரிச்சியா கோலியிலிருந்து மரபணு பொறியியலால் தயாரிக்கப்படுகின்றன. [செயற்கை தொகுப்பு] எல்-சிஸ்டைன் மனித முடியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு சுடப்பட்ட பொருட்களில் [பேக்கரி உணவுகள்] பயன்படுத்தப்பட்டது.


மனித முடியை [ E 920 = L-cysteine ] என்ற சேர்க்கைக்கான தொடக்கப் பொருளாகப் பயன்படுத்தக்கூடாது. இது ஐரோப்பா உணவு சேர்க்கைகளுக்கான விவரக்குறிப்புகளுடன்  கட்டுப்படுத்தப்படுகின்றது. E 920 உணவு தயாரிப்பில் சேர்ப்பது மாவை மேலும் மீள்தன்மையுடையதாகவும், பிசைவதற்கு எளிதாகவும் செய்கின்றது.


சட்டவிரோத பயன்பாடு என்பது எல்லா இடங்களிலும் பரவலாக உள்ள ஒன்று, அடிப்படை மூலப்பொருட்களிலிருந்து அதிலுள்ள சேர்மங்களை பிரித்தெடுத்த பிறகு அதனுடைய பூர்விகத்தை கண்டு கொள்வது கடினம்


கூடுதலாக, சிஸ்டைன் வாயுக்கள் நல்ல புஷ் புஷ் என்று பஞ்சுபோன்ற பேஸ்ட்ரி நீண்ட நேரம் இருப்பதையும் அவை அவற்றின் நிலைத்தன்மையைத் தக்கவைப்பதையும் உறுதி செய்கின்றது. சிஸ்டைன் காரமான உணவுகளின் சுவையை அதிகரிக்க முடியும் எனவே இது பெரும்பாலும் சுவைகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றது.


எல்-சிஸ்டைன் ஒரு அமினோ அமிலம், அதாவது புரதங்களின் கட்டுமானத் தொகுதி. இது சிறு பிள்ளைகளில் ஆரம்ப கட்டமாக இருக்கும் பெரியவர்களில்  வளர்ச்சி பெற்ற கல்லீரலில்  தயாரிக்கப்படுகின்றதுமேலும், எல்-சிஸ்டைன் கெரட்டின் [= கொம்பு, இறகுகள் மற்றும் முடியில் உள்ள புரதக் கட்டுமானத் தொகுதி] அதிக அளவில் ஏற்படுகின்றது.


E 920 என்ற எண்ணுடன் ஒரு சேர்க்கையாக, அதிகபட்ச அளவைக் கட்டுப்படுத்தாமல் வேகவைத்த பொருட்கள் உட்பட அனைத்து உணவுகளுக்கும் எல்-சிஸ்டைன் அனுமதிக்கப்படுகின்றது. எல் -சிஸ்டைன் என்பது மனித உடலில் இயற்கையாகக் காணப்படும் ஒரு அமினோ அமிலமாகும் . இந்த அமினோ அமிலம் மிகவும் கந்தகம் மற்றும் புரோட்டினோஜெனிக் ஆகும்.


தேவையான அளவு வயது வந்த மனிதர்களில், எல் -சிஸ்டைன் கல்லீரலில் உருவாக்கப்படுகின்றது, எனவே மனித உயிரினத்திற்கு அவசியமில்லாத ஒரு மூலப்பொருள். இருப்பினும் இது  ஒரு நச்சுப் பொருள் கிடையாது.


எல்-சிஸ்டைன்உடலில் அமினோ அமிலம் சல்பர் பாலங்களை உருவாக்குகின்றது, இது நமது இணைப்பு திசுக்களுக்கு தேவையான வலிமையை அளிக்கின்றது. மற்றும் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகின்றது. இதன் நிமித்தம்  உறுதியான, இளமை தோற்றமளிக்கும் தோலுக்கு பங்களிக்கின்றது.


நுரையீரல் பாதுகாப்பு, ஒட்சிசன் ஏற்ற தடுப்பு [ஆன்டி ஒக்ஸிடன்ட்கள்] விளைவு மற்றும் அந்நிய ஊடுருவுகளை தடுத்து உடலைப் பாதுகாக்கின்றது. எல்-சிஸ்டைன் உடலில் விரைவாக சிஸ்டைனாக மாற்றப்படுகின்றதுஅதிகப்படியான சிஸ்டைன் செறிவு சிறுநீரக கற்களின் அபாயத்தை அதிகரிக்கின்றதுவிற்றமின் C அபாயத்தை மீண்டும் குறைக்கின்றது.


கார்பாக்சைல் குழுமம் [-COOH] என்பது; கார்பாக்சிலிக் அமிலங்களின் செயல்பாட்டுக் குழுமம் ஆகும். இது ஒரு மைய கார்பன் அணு [C], இரண்டு ஒட்சிசன் அணுக்கள் [O] ஒவ்வொன்றும் கார்பனில் இருந்து தொடங்கும் ஒற்றை மற்றும் இரட்டை பிணைப்பு மற்றும் ஒரு ஹைட்ரஜன் [H] அணுவைக் கொண்டுள்ளது.


சிஸ்டைன்: அமினோ அமிலம் சிஸ்டைன் குறிப்பாக முடி மற்றும் நகங்களில் குவிந்துள்ளது, ஆனால் குருத்தெலும்பு, எலும்புகள் மற்றும் தோலின் உருவாக்கத்தில் இது மிகவும் முக்கியமானது.


குழந்தைகள் சிஸ்டைனை உணவின் மூலம் ஓரளவு உட்கொள்ள வேண்டும் என்றாலும், மனித கல்லீரல் அதை மெத்தியோனைன் மற்றும் செரின் [அத்தியாவசியமற்ற அமினோ அமிலங்கள்] ஆகிய அமினோ அமிலங்களிலிருந்து பிற்காலத்தில் உற்பத்தி செய்துகொள்ளும். உங்கள் உணவில் பேக்கரி உணவுகளை  அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள் அது உங்கள் சருமத்தை பளபளப்பாக  வைத்திருக்கும்



செயற்கை இரத்தம்:   இரத்தத்தை செயற்கையாக உருவாக்க முடியுமாஆம், சிறிய அளவில்  சாத்தியமானது. இருப்பினும் சோதனை கட்டத்தை தாண்டி இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.


அதுவும் முற்றிலும் செயற்கையாக இல்லை இயற்கையான இரத்தத்தில் இருந்து ஹீமோகுளோபின் மூலக்கூறுகள் எடுக்கப்பட்டு செயற்கையான இரத்தத்தை உருவாக்கினார்கள். இது விலங்குகளின் இரத்தத்திலிருந்து மற்றும் காலாவதியான மனித இரத்த இருப்புகளிலிருந்து அல்லது மரபணு பொறியியல் மூலம் பெறப்படுகின்றது.


இதை செயற்கை இரத்தம் என சொல்வதைக் காட்டிலும், சேர்க்கை /கலப்பு இரத்தம்  என்று சொல்வதே சரியாக இருக்கும். இயற்கையில் இருந்து ஒன்றை எடுக்காமல் செயற்கையாக ஒன்றை உருவாக்க முடியாது.


இரத்தம் மிகவும் சிறப்பு வாய்ந்த சாறு அது வெவ்வேறு பணிகளைச் செய்கின்றது, மேற்கோளாக:  சிவப்பு இரத்த அணுக்கள் [O₂] ஒட்சிசனை எடுத்துச் செல்கின்றன மற்றும் வெள்ளை இரத்த அணுக்கள் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுகின்றன. 


இவைகளை ஒருங்கிணைத்து ஓட விடுவதற்கு இரத்த சீரம்[பிளாஸ்மா] முக்கியமான ஒன்று. ஒரு துளி இரத்தத்திற்குள்ளேயே இவ்வளவு  பணிப்புகள்  இருக்கின்றன. இவைகளை செயற்கையாக  ஒருங்கே அமைப்பது அவ்வளவு சுலபம் கிடையாது.


எரித்ரோசைட்டுகள் என்று அழைக்கப்படும் இரத்த சிவப்பணுக்கள், த்ரோம்போசைட்டுகள் என்று அழைக்கப்படும் பிளேட்லெட்டுகள் செல் துண்டுகள் மற்றும் இரத்த உறைதல் அமைப்பின் கூறுகள். லிம்போசைட்டுகள் என்று அழைக்கப்படும் இரத்த வெள்ளணுக்கள், குருதி சிறு தட்டுக்கள் இந்த  திட இரத்தக் கூறுகள், மற்ற கூறுகளுடன் சேர்ந்து, திரவ இரத்த பிளாஸ்மாவில் நீந்துகின்றன,

இரத்த குடும்பம் மிகப்பெரியது, 


இரத்த பிரிவுகள், [O, A, B AB  (R-+) ] பொருத்தமில்லாத  ஆன்டி உடல்கள் மற்றும் ஆன்டிஜென் கூறுகள் என்று ஏகப்பட்டது. அதில் நோய் எதிர்ப்பு மண்டலம்  இதைவிட பெரியது. இவைகளுடன் இணைந்து பணியாற்றும் நிணநீர் மண்டலம் ஒப்பற்றது. இங்குதான் நிலையான மற்றும் நடமாடும்  காவல் நிலையங்கள்  சிவில் மற்றும் துப்பறியும் இலாகா செயல்படுகின்றது. அவசரகாலத்தில் இவைகள் எல்லாம் ஒருங்கே இணைந்து பணியாற்றுகின்றன.


இதுவரை இரத்தத்தை பெரிய அளவில் செயற்கையாக உற்பத்தி செய்ய முடியாது என கூறிவிட்டார்கள்.


இருப்பினும் ஒருவருடைய இரத்த தானம் மூலம் மட்டுமே இன்னொருவர் உடலில் புதிய இரத்தத்தை  உருவாக்க முடியும். நன்கொடையாக வழங்கப்பட்ட ரத்தத்தை கூட நோய் எதிர்ப்பு சத்தி எதிர்த்து போராடுகின்றது இந்த நிலைமையில் சேர்க்கை இரத்தத்தை நோய் எதிர்ப்பு அமைப்பு விட்டு வைக்குமா என்ன,


அந்நிய பொருட்கள் எதுவாக இருந்தாலும், அது மாற்று அறுவை சிகிச்சை செய்த சிறுநீரகம் அல்லது இரத்தமாக இருந்தாலும், நோய் எதிர்ப்பு சக்தி  அதை எதிர்த்து கேள்வி கேட்கும். யார் நீ எப்படி இங்கு வந்தாய், இங்கு உனக்கு என்ன வேலை, பதில் இல்லையாஉடனடியாக  எதிர்த்து போராட தொடங்கி விடும்.


இதன் நிமித்தம் மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியின் பதில் தாக்குதல்களை சமாளிப்பதற்காக வாழ்நாள் பூராகவும் மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றது. செயற்கை இரத்தம் என்பது சாத்தியம் இல்லாத ஒன்று 


நோயெதிர்ப்பியல்

குரோமோசோம் 6

குரோமோசோம் 6; என்பது மனிதர்களில் மொத்தம் 23 நிறமூர்த்த கணுக்களின் இதுவும் ஒன்றாகும். பெரும்பாலான செல்களில் குரோமோசோம் 6, ஜோடிகளாக (டிப்ளோயிட் குரோமோசோம் செட்) கொண்டு கட்டமைக்கப்

http://mahesva.blogspot.de/2018/04/h-uman-l-eukocyte-ntigen-hla-molekule.html

மேலும் வாசிக்க இதில் கிளிக் செய்யவும்.


எனது சுற்றுலா: எனது சுற்றுலாவின் போது கிடைத்த ஒரு சில அனுபவங்கள், கோடைகால சுற்றுலாவின் போது, உங்களுக்கு பிடித்தமான இடங்களை சுற்றிப்பார்ப்பது உங்களுடைய மகிழ்ச்சியான தருணங்கள். இருப்பினும் ஷாப்பிங் சுற்றுலா விடுமுறையின் ஒரு பகுதியாகவும் இருக்கின்றது. சுற்றுலாப் பயணத்தின் போது உங்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி, நீங்கள் வாழும் நாட்டிற்கு திரும்பிச் செல்கையில். விமான நிலையத்தில் சில சட்ட சிக்கல்களை சந்திப்பீர்கள்.


நீங்கள் போலிப் பொருட்களை வாங்கி உங்கள் சொந்த நாட்டிற்கு  கொண்டுவர உங்களுக்கு அனுமதி உள்ளதா? அடிப்படையில் ஆம். இருப்பினும் இது ஒரு நாட்டின்  இறையான்மையை பொறுத்தது. தனிப்பட்ட பயன்பாட்டிற்கும் உங்களுக்காகவும் மட்டுமே இதை நான் எடுத்து செல்கின்றேன் என நுழைவுக் கொடுப்பனவைக் குறிப்பிடுவது முக்கியம்.. 


அதாவது உங்கள் சொந்தப் பயன்பாட்டிற்காக கொண்டு வர முடியும் விற்பனைக்காக அல்ல. மற்றும் விலங்கு தயாரிப்புகள் உயிருள்ள பொருட்கள் செல்லப் பிராணிகள் அரிய வகை பறவைகள் முட்டைகள்  முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. மதுபானம் சிகரெட் உங்கள் பாவனைக்காக சிறிய அளவு எடுத்து வர முடியும். எனக்கு அது தேவைப்படவில்லை ஒரு சில கலைப் பொருட்களை வாங்கி வந்தேன்.


தொழில்ரீதியாக கள்ளப் பொருட்களை வர்த்தகம் செய்யும் எவரும் , பொருட்கள் பறிமுதல், அபராதம் மற்றும் சிறைத்தண்டனைக்கு ஆளாக நேரிடும் .நான் வாழும் ஜெர்மனியை விட மற்ற நாடுகளில் ஒரு சில பொருட்கள் கணிசமாக மலிவானதாகவும்  இருக்கும் இருப்பினும் இந்த விலைகள்  உண்மையாக இருக்குமா..? சரியாக தெரியாது, மலிவான விலை என்றால் அது போலியானதாக இருக்கும் என சந்தேகம் எழுகின்றது, எனக்குப் பிடித்திருக்கின்றது. மிகவும் நன்றாக இருந்தால் அதை நாங்கள் வாங்கி விடுகிறோம்.


ஜாக்கிரதை. இந்த தயாரிப்புகள் திருட்டு காரணமாக மலிவானதாக இருக்கும். சில சமயங்களில் விமானநிலையத்தில் திருடப்பட்ட பொருட்கள் என்று அடையாளம் காணப்படுகின்றன. நீங்கள் அந்த பொருட்களை வீட்டுக்கு எடுத்து வர  முடியாது பறிமுதல்  செய்யப்படுகின்றன உங்கள் பணமும் நேரமும் விரையமாகும்.


அல்லது உங்களுக்கு போலி பிராண்டட் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த பொருட்கள் அசல் தரத்தில் இருந்து வேறுபடுகின்றன. குறிப்பாக சென்ட் பாட்டில் நீங்கள் செல்லும் இடமெல்லாம் சென்ட் பாட்டில் விற்பனையாளர்கள் உங்கள் கைகளை பிடித்து உங்களுக்கு அதை பேரம் பேசி விற்பதற்கே முயற்சி செய்வார். நான் பலமுறை இவர்களிடமும் தப்பிக்க முயற்சித்து இருக்கிறேன்.


நீங்கள்  ஷாப்பிங் செய்ய விரும்புகிறீர்களா, கண்டிப்பாக இதை நீங்கள்  தெரிந்து கொள்ள வேண்டும். கடந்த வருடம் என் சுற்றுலா பயணத்தின் போது "நைக் ஏர்"  காலணிகள் இரண்டு ஜோடி வாங்கி வந்தேன் விலை ரொம்ப மலிவாக இருந்தது அதை நான்  ஜெர்மனிக்கு எடுத்து வரும் போது தான் தெரிய வந்தது அது போலியானது என்று, போலி பிராண்டட்  செய்யப்பட்டது என்று இருப்பினும்  விமான நிலையத்தில் அனுமதித்தார்கள். 


மற்றும் அது பாவனையில்  தரமானதாக இருக்கின்றது. எனது பணம் வீணாகவில்லை என்பது மகிழ்ச்சியானது. சில சமயங்களில் மகிழ்ச்சியான சுற்றுலா பயணம் உங்களை திக்குமுக்காடச் செய்துவிடும். 


எல்லாத்துக்கும் கோட்பாடு உண்டு. ஆனால் சரியான பதில் மட்டும் கிடையாது. இயற்கையை மாற்றமுடியும் ஆனால் இயல்பான விதிகளை ஒரு போதும் மாற்றமுடியாது. அந்த விதிகளின் கையெழுத்து பிரதி கடவுளுடையது.


இதற்கு விளக்கம் சொன்னால்: ஆண் துணை இல்லாமல் குழந்தை பெத்துக்க முடியும். ஆனால் கருவுறுதல், பத்தாம் மாதம் குழந்தை பிறப்பது என்பது விதி, இதை யாராலும் மாற்ற முடியாது. இயற்கையில் இருந்து ஒன்றை எடுக்காமல் செயற்கையாக ஒன்றை உருவாக்க முடியாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக