திங்கள், 27 செப்டம்பர், 2021

நோய் எதிர்ப்பு சக்தியின் மறுதொடக்கம்   தவறாக வழிநடத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாக பழுதுபார்ப்பது அதை திரும்பவும் அதீத திறனுள்ளதாக புதிப்பித்தல். பொதுவாக வயதானவர்கள் 60 வயதை கடந்தவர்கள் கடுமையான ஒவ்வாமை மற்றும் சுய-உடல்-தாக்கி நோய்யுள்ளவர்கள்.

தங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை மறுதொடக்கம் செய்து புதிப்பித்தல் அவசியமானது. இதுவொரு புதிய தொடக்கத்தை உடலுக்கு கொடுக்கின்றது இதன் நிமித்தம் புற்றுநோய் காப்புதிறன், மகரந்த அலர்ஜி, பசைப்புரதம், பால்புரதம் உணவு ஒவ்வாமை மற்றும் சுய-உடல்-தாக்கி நோய்களுக்கு எதிரான ஒரு சகிப்புதன்மையை உருவாக்கும்.

இந்த நடவடிக்கையை ராணுவ முகாம்களில் தூங்கி கிடந்த, ஒரு பழைய ஒற்றைக்கண் துப்பாக்கியை வைத்திருக்கும்  இராணுவத்திற்கு புதியரக தளபாடங்களை கொடுத்து பயிற்சிவித்தல் போல் என்று வைத்துக்கொள்ளலாம். வெளியில் பயங்கர ஆயுதங்களுடன் கொரோனா சுற்றித்திரியும் போது எங்கள் உடலுக்கும் புதியரக தளபாடங்களை கையாளுவதற்கு பயிற்சி தேவை.

செயற்கை நோய் எதிர்ப்பு செயற்கையாக ஒரு குறுகிய காலத்திற்குள் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை பெறுதல் பலவீனமான பாக்டீரியா அல்லது வைரஸ் கூறுகள், மூலிகை அல்லது செயற்கை சாறுகள் மூலம் பரம நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறலாம். செயற்கையாக பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறுகிய காலத்திற்கு 1-2 வாரங்களில் உடலில் அதிகரித்து தயார்நிலைக்கு அதாவது எதிர்த்து போராட தயாராகின்றது.

மோனோசைட்டுகள் பின்வரும் வகையான வெள்ளை இரத்த அணுக்கள் உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியின் ஒரு பகுதியாகும்: மோனோசைட்டுகள் (இது மேக்ரோபேஜ்களாக (விழுங்கி செல்கள்) உருவாகின்றது) நியூட்ரோபில்ஸ். ஈசினோபில்ஸ். பாசோபில்ஸ். இயற்கை கொலையாளி செல்கள்( NK).இந்த இரத்த வெள்ளை அணுக்கள் பழுது இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.

நியூட்ரோபில்ஸ் நியூட்ரோபில்களின் பற்றாக்குறை நியூட்ரோபீனியா என்று அழைக்கப்படுகின்றது மற்றும் இதனுடைய குறைபாடு மிகவும் ஆபத்தானது. கிரானுலோசைட்டுகள் இல்லாமல், உடல் அதனது பாதுகாப்பை இழந்து படையெடுக்கும் நோய்க்கிருமிகளுக்கு மண்டியிட்டு போகின்றது அல்லது வழியை விட்டு வேடிக்கை பார்க்கின்றது.

ஈசினோபில்ஸ் ஈசினோபில்ஸ் மிகவும் குறைவாக இருந்தால், மருத்துவத்தில் இதை ஈசினோபீனியா என்று அழைக்கின்றது. இது அதிர்ச்சி. பிடிப்புகள் மற்றும் மன அழுத்த சூழ்நிலைகளுக்கு பொதுவானது, ஒட்டுண்ணிகள் அல்லது ஒவ்வாமைகளிலிருந்து ஆன்டிஜென்கள் மாஸ்ட் செல்களில் குறிப்பிட்ட IgE உடன் பிணைக்கும்போது, ​​ அவை ஹிஸ்டமைனை வெளியிடுகின்றன, இது ஈசினோபில்களை ஈர்க்கின்றது. இரத்தத்தில் உள்ள ஈசினோபில் எண்ணிக்கை எலும்பு மஜ்ஜை உற்பத்தி அல்லது இந்த வெள்ளை இரத்த அணுக்களின் தேவை மற்றும் நுகர்வுக்கான ஒரு குறிகாட்டியாகும்.

பாசோபில்ஸ் பாசோபில்ஸ் வெள்ளை இரத்த அணுக்களின் (லுகோசைட்டுகள்) குழுவிற்கு சொந்தமானது. இவை உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். ஆஸ்துமா, பருவகாலத்தில் வரும் தும்மல் தூசி/மகரந்த அலர்ஜி போன்ற சில ஒவ்வாமை எதிர்விளைவுகளின் போது, ​​இவை இரத்தத்தில் அதிகளவில் கண்டறியப்படுகின்றன. இது உடலின் சகிப்பின்மையை காட்டுகின்றது.

செல்லப்பிராணி நாய் பார்க்கின்ற வேலையை கழுதை பார்த்தால் எப்படியிருக்கும். சில சமயங்களில் நோய் எதிர்ப்பு சக்தியும் இது போல் செயல்படுகின்றது.

இயற்கை கொலையாளி(NK) இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் பாதுகாவலர்கள் பிளாஸ்மா செல்கள் பி-லிம்போசைட்டுகளிலிருந்து எழுகின்றன மற்றும் அவை நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். நோயுற்ற திசுக்களை, புற்றுநோய் செல்கள் அல்லது வைரஸ் புகுந்து பாதிக்கப்பட்ட செல்களை ரவடிகளை அடையாளம் கண்டு கொல்லும்/என்கவுண்டர் செய்யும் பொறுப்பு, அதிகாரம் இவைகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது

இருப்பினும், அதிகரித்த எண்ணிக்கையிலான இயற்கை கொலையாளி செல்கள் பொதுவாக நமது நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் கருக்கள் பொருத்துதலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.  

அதாவது  சண்டை நடந்த இடம் எப்படியிருக்கும் நல்ல செல்களையும் சேர்த்து அழிக்கும். மிகைப்பு அடைந்த நோய் எதிர்ப்பு ஆபத்தானது உடலின் நாடி நரம்பு இரத்தநாளங்கள் முக்கியமான உள்ளுறுப்புகளை மூளை செல்களை சல்லடைபோட்டு அறுத்துவிட்டு போகும். 

இதன் நிமித்தம் மூளையில் இறத்த உறைவு, பக்கவாதம், கருக்கலைப்புக்கு காரணியாகின்றது. கருப்பை புறணி பகுதியில் அதிகரித்த இயற்கை கொலையாளி செல்கள் நிராகரிப்பு எதிர்வினைக்கு வழிவகுக்கும் இது கருவை பொருத்துவதைத் தடுக்கின்றது.

ஆரம்பகால கர்ப்ப காலத்தில் தாய்க்கும் அவளது கருவுக்கும் இடையிலான இடைமுகத்தில் இயற்கை கொலையாளி உயிரணுக்களின் பெரிய எண்ணிக்கையை ஆராய்ச்சியாளர்கள் கவனித்துள்ளனர். இருப்பினும், கரு வளர்ச்சியில் கொலையாளி உயிரணுக்களின் பங்கு இதுவரை தெளிவாக அறியப்படவில்லை.

நியூட்ரோபில்ஸ் குறைபாட்டிற்கு பொதுவாகப் பெற்ற காரணங்கள். அடிக்கடி உடலில் ஏற்படும் தொற்றுநோய்கள், ஊட்டச்சத்து குறைபாடு (ஃபோலிக் அமிலம், விற்றமின் பி12) நோய்களுக்காக எடுக்கப்படும் மருந்துகள் (ஆண்டிபயாட்டிக், வலி ​​நிவாரணி)

அரிதான காரணங்கள். கோஸ்ட்மேன் நோய்க்குறி: கோஸ்ட்மேன் நோய்க்குறி மிகவும் அரிதாக பரம்பரையாக வரக்கூடிய ஒரு நோய். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் பெருமளவு குறைக்கப்பட்ட எண்ணிக்கை அல்லது நியூட்ரோபில்ஸ் முழுமையாக இல்லாதது இருப்பது இந்த நிலை பிறப்பிலிருந்து இவர்களுக்கு உள்ளது.

செடியக் ஹிகாஷி நோய்க்குறி: சாடியக்-ஹிகாஷி நோய்க்குறி என்பது மிகவும் அரிதான பரம்பரை நோயாகும், இது மீண்டும் மீண்டும் வரும் பாக்டீரியா சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் பிற நோய்த்தொற்றுகள் மற்றும் முடி, கண்கள் மற்றும் தோலில் நிறமி குறைபாடு (அல்பினிசம்) ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றது.

ஏன் தடுப்பூசி அவசியமானது இது போன்ற பரம்பரை நோய், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் மற்றும் வேறு நோய்களுக்காக மருந்து மாத்திரை எடுப்பவர்கள் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி எவ்வளவு அவசியமானது. உங்களினால் எல்லா காலத்திலும் எல்லா நேரத்திலும் உடலை குறித்து கவனம் எடுக்கமுடியாது எங்கயாவது மக்கள் நெரிசலில் அகப்படும் போதுதான் தடுப்பூசியின் அவசியமும் தேவையும் புரியும். நன்றி மகேஷ்-ரவி.




வெள்ளி, 24 செப்டம்பர், 2021

“கடவுள் தன்னுடைய சாயலை மனிதனுக்கு கொடுத்தார் மனிதன் கடவுளை படைத்தான்”. மனிதனுக்கு முற்காலத்திலும் கடவுள் இருந்தார் மனித கண்ணுக்கு புலப்படா எதிர் சக்தி வடிவமாக, மனிதனுக்கு பின் கண்ணுக்கு புலப்படும் நேர்மறை வடிவமாக கடவுள் மனித உருவம் பெற்றார்.

இருப்பதை வைத்து இல்லாததை தேடுதல் மனிதனை கடைப்பொருளாக வைத்து கடவுள் என்னும் மூலத்தை தேடுதல்

சம வெளி புல்தரை புல்லுண்ணிகள் ஏன் பிறந்தவுடன் ஓடுகின்றது நடக்கின்றது மனித குழந்தையால் மட்டும் ஏன் நடக்க முடிவதில்லை, அறிவில்லாமல் காட்டுமிராண்டியாக வாழ்ந்ததாக சித்தரிக்கப்பட்ட மனிதனினால் எப்படி தங்கள் பிள்ளையை நடை பழகி 4-6 வயது வரை வளர்த்திருக்கமுடியும்.

காட்டிலும் மேட்டிலும் கல்லிலும் முள்ளிலும் எப்படி அந்த குழந்தை தவழ்ந்து விளையாடியிருக்கும். தாய்பாலுக்கு பிறகு கடின உணவை அவித்து மசித்துக்கொடுக்க யார் அருகிலிருந்து இப்படி செய் என்று சொல்லிக்கொடுத்தார்.

மூளை ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் இருக்கும்போது மனிதர்களும் பாலூட்டிகளும் நடக்கக் கற்றுக்கொள்கின்றன. கொள்கையளவில், மனிதர்கள் உட்பட அனைத்து இளம் பாலூட்டிகளும் ஒரே நேரத்தில் நடக்கக் கற்றுக்கொள்கின்றனவா என்று கேட்டால் இல்லை அதாவது, மூளை வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்தவுடன் தங்கள் நடவடிக்கைகளை துரிதப்படுத்துகின்றன.

ஒரு சில பாலுட்டிகள் பறவைகள் கண் விழித்து தலை அசைக்கவே நீண்ட நாட்கள் தேவைப்படுகின்றது. இவைகள் மறைமுகமாக தங்கள் குட்டி/குஞ்சுகளை வளர்க்கும் உயிரினங்கள். சம வெளி புல்தரையில் வெட்டவெளியாக குட்டி ஈனும் புல்லுண்ணிகள் மட்டுமே பிறந்தவுடன் எழுந்து தாய்க்குப்பின்னால் ஓடும் திறன் உள்ளவைகள். இல்லாது போனால் அவைகள் காடுகளில் உயிர் வாழும் சாத்தியம் இல்லாது போகும்.

மூளை மற்றும் சிறுமூளை வளர்ச்சி சிறுமூளை வளர்ச்சி 5 வது வாரத்தில் 14-16 இல் தொடங்கி பிறப்புக்குப் பிறகுதான் நிறைவடைகின்றது. நியூரான்களின் முதிர்ச்சி நரம்புப் பிளவு மற்றும் பிளாஸ்டிசிட்டி சினாப்டிக் இணைப்புகளின் எண்ணிக்கை மூளை, சிறு மூளையின் வளர்ச்சி காலம் மனிதனுக்கு 4-6 வருடங்கள் தேவைப்படுகின்றது.

3 மாதங்கள் குழந்தை இப்போது தன் தலையை சுயமாக நிமிர்த்தி வைத்திருக்க முடியும். பிள்ளை  வயிற்றில்  நிமிர்ந்திருக்கும் போது தலையை நிமிர்த்தி பார்த்தல்  மற்றும் தாய் மடியில் படுத்திருந்து மற்றவர்களின்  செய்கைகளை கவனிக்கின்றது.

3-7 மாதங்கள் சுய சுழற்சியின் ஆரம்பம் கை கால் உதைத்தல் முதலில் பக்கத்திற்கு திரும்புதல் பின்னர் வயிற்றில் இருந்து பின்புறம் இறுதியாக பின்னால் இருந்து தொப்பை மீது புரளுதல். மற்றவர்களின்  சேட்டைகளுக்கு வாய்விட்டு சிரிக்கின்றது.

7-10 மாதங்கள் சுயாதீன இயக்கத்தின் தொடக்கம்  ஒவ்வொரு குழந்தையும் தங்கள் சொந்த வழியில் ஊர்ந்து செல்வது, தவழுதல், அன்னியத்தில் சப்பாணியாக நகர்வது.

9-15 மாதங்கள் ஆராய்ச்சி பருவம்; நாற்காலிகள், மேசை பொருள்களை எடுத்தல் தள்ளுதல், அலமாரி, லாட்சியை  இழுக்கின்றது. தளபாடங்கள் மற்றும் சுவர்களில் எழுந்து நிற்க கற்றுக்கொள்ளுகின்றது.

9-18 மாதங்கள் இறுக கைகளைப் பிடித்துக் கொண்டு குழந்தை தளபாடங்கள் மற்றும் சுவர்களில் சுதந்திரமாக நடக்க கற்றுக்கொள்கின்றது

2-3 ஆண்டுகள் குழந்தை இப்போது அதிக தன்நம்பிக்கையுடன் செயல்படுகின்றது. தன் உடலை சமாளிக்க,  கட்டுப்படுத்த தெரிந்து கொள்கின்றது. உதவியின்றி  ஓட ,நடக்க, தாவ குதிக்க முடியும் மற்றும் படிக்கட்டுகளில் ஏற கற்றுக்கொள்கின்றது.

4-6 ஆண்டுகள் இந்த வயதில் பெரும்பாலான குழந்தைகள் ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ள விரும்புகின்றது எழுத வரைய, அல்லது கிறுக்கி வைக்க  மண்ணில் கோபுரங்கள் கட்டுதல் நீங்கள் ஒரு பைக் ஓட்ட கற்றுக்கொடுக்கலாம். 5 மொழிகளை கற்றுக்கொள்ளும் திறன் மேலோங்கி காணப்படுகின்றது. 

“இயற்கையும் மனிதனும் சமாதானத்துடன் கூடி வாழ எந்த எல்லைக்கோடுகளும் சண்டையும் இல்லாத ஒரு உலகம் வேண்டும்”



ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

மண்ணில் மனிதர்கள் “கடவுள் என்பது நம்பிக்கையல்ல, அது உண்மை அதை தேட நீ வடித்த வடிவம் மட்டுமே நம்பிக்கையானது” நாங்கள் கடவுளுக்கு ஒரு வடிவத்தை கொடுத்து இப்படித்தான் இருப்பாரென்று மூளையில் நிறுத்தி வைத்திருக்கின்றோம். அதை தாண்டி எந்த வடிவத்திலும் கடவுள் வந்தாலும் எங்களினால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

உனக்கு முன்னால் கடவுள் நடந்து போனாலும் உன்னால் அவரை அடையாளம் காணமுடியாது. அந்த நம்பிகை வடிவத்தை ஒதிக்கிவிட்டு கடவுளை தேடினால் மட்டுமே உங்கள் கண்களுக்கும் கடவுள் புலப்படுவார். கடவுள் தன்னை ஒரு மறை பொருளாக, எதிர்மறை சக்தியாக இந்த உலகத்திற்கு மறைத்துக் கொண்டார் அறிவியல் மட்டும் கடவுளை தேடவில்லை உன் ஞானபுத்தியும் கடவுளை தேடுகின்றது.

நேர்மறை பொருட்களை பார்த்த கண்களினால் எதிர்மறை சக்தியை பார்க்க முடிவதில்லை. ஆனால் அதை உன்னால் உணரமுடியும். மனிதர்கள் உருவாக்கிய மதங்கள் காட்டிய வரலாறுகள் ஒன்றும் மனிதனுடைய உண்மையான வரலாறு கிடையாது. மனிதனுடைய உண்மையான வரலாறு புதைவடிவமாக இன்னும் மண்ணிலேயே கிடக்கின்றது.

மனிதர்கள் ஒரு சமூகமாக வளரும் போது மதங்கள் காட்டிய வழிகளில் தங்களை வடிவமைத்துத் கொண்டார்கள். மனிதனின் கலாச்சாரத்தை மனிதன் தோற்றுவித்த மதங்களுக்கு முன்னால் மதங்களுக்கு பின்னால் என்று பிரித்துப்பார்த்தால்.

ஆடையின்றி பிறந்தவன் ஆடை போர்த்திய கலாச்சார மனிதனாக தன்னை இந்த சமூகத்திற்கு அறிமுகம் செய்து கொண்டான். இன்று எங்களுடைய வாழ்வியல், மதங்கள் காட்டிய வாழ்வியல் முறைக்கு உட்படுத்தப்பட்டது. உணவு, உடை சமூகநீதி மொழி கல்வி, பண்டிகை என்று இன்று நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்துனை வாழ்வியல் முறைகளும் மதங்கள் அமைத்து கொடுத்தவை.

மனிதன் தன் தோற்றத்திலிருந்து அறிவுள்ளவனாகத்தான் இருந்திருக்கின்றான். ஏனென்றால் மனித பிள்ளையை வளர்ப்பது அவ்வளவு சுலபம் கிடையாது விலங்குகள் போல் மனிதப்பிள்ளை தானாக வளர்வதில்லை மனிதபிள்ளைக்கு தாய் தந்தையின் உதவி முழுமையாக தேவைப்படுகின்றது. ஒரு குழந்தையை பெற்று பாலுட்டி, உணவுட்டி அந்த குழந்தையை சுத்தம் செய்து பராமரித்து வளர்க்கும் அறிவு அவனுக்குள்ளே நிரந்தரமாகவே இருந்திருக்கின்றது.

பிள்ளை பெற்ற தாயின் இடுப்பெலும்பு நகர்தல் ஒரு பெண் கற்பம் தரிக்கும் போது அவளுடைய இடுப்பெலும்பு விரிந்து கருவில் குழந்தை வளர்வதற்கு இட ஒதுக்கிட்டை செய்து கொடுக்கின்றது. இது நிரந்தரமாக ஒரு பெண்ணை/தாயை அடையாளப்படுத்துகின்றது. தற்காலியமாக ஏற்பட்ட  இந்த இடுப்பு வலி ஒரு சில தாய்மார்களுக்கு நிரந்தரமாகி, அவர்களை வாழ்நாள் பூராகவும் வேதனைப்படுத்தும்.

இடுப்பு விளிம்பு, இடுப்பு வளைய உறுதியற்ற நிலை, அந்தரங்க சிம்பசிஸ் பகுதியில் இடுப்பை ஒன்றாக வைத்திருக்கும் தசைநார்கள் தளர்த்தப்படுவதற்கு. மிக முக்கிய காரணங்கள் உடல் அழுத்தம், கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் முந்தைய கர்ப்பங்கள் அல்லது குழந்தை பிறப்புகள். இடுப்பு வளைய உறுதியற்ற தன்மை கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்தின்போது இடுப்பு வளைய உறுதியற்ற தன்மையை உருவாக்குகின்றது.

இது இடுப்பு வலி, கீழ் முதுகு வலி,  மூட்டு எரிச்சல்  மற்றும் இடுப்பு வலியுடன் இடுப்பு வளைய உறுதியற்ற தன்மை குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களைப் பாதிக்கின்றது.

◼ஒரு பெண்ணின் இடுப்பெலும்பு நகர்ந்து பெரிதாகி காணப்பட்டாள் இவள் கருத்தரித்திருக்கின்றாள் என்று உடல் அமைப்பு அவளை அடையாளப்படுத்துகின்றது.

◼கருவில் இருக்கும் மழலை தன்னை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்துக்கொள்ள முன்கூட்டியே தயார்படுத்துகின்றது, 




வெள்ளி, 17 செப்டம்பர், 2021

யார் அடுத்த அதிபர் (2021) யார் அடுத்த அதிபர் இந்த கேள்விக்கான பதில் ஏற்கனவே எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் தயாராகவே இருக்கின்றது. ஒரு நாட்டில் ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து நீண்டகாலம் பதவியிலிருந்தால் அது நல்லாட்சியாக இருந்தாலும் நல்லதொரு ஜனநாயகத்தை அதிகார போக்காக மாற்றி, மக்களாட்சியை கேள்விக்குறியாக்கிவிடும். மாற்றம் ஒன்றே ஆரோக்கியமான ஜனநாயகத்தை வளர்த்துவிடும்.

ஜெர்மனியின் கூட்டாட்சியின் அதிபர்  ஏஞ்சலா மெர்கல் நான்கு முறை அதாவது 16 வருடங்கள்(2005-2021) ஆட்சி பொறுப்பிலிருந்து இந்த வருடம் 2021 நடக்கவிருக்கும் தேர்தலுடன் முழுமையாக ஓய்வு பெறுகின்றார்கள்.

பிரியாவிடை பெறும் அதிபர்  ஏஞ்சலா மெர்கலுக்கு எனது வாழ்த்துக்கள். நல்லதொரு ஆரோக்கியமான ஓய்வாக அவர்களுக்கு அமைய இறையருள் அருளட்டும். நல்ல தலைவர்களின் மூளை ஆலோசனை நல்ல வழியில் மக்களை எடுத்துச்செல்ல உதவும்.

இந்த தேர்தலில் மக்களின் மனநிலை என்னவாக இருக்கும், மக்கள் கருத்து, அவர்களின்  எதிர்பார்ப்பு ஒரு ஆட்சிமாற்றத்தை அல்லது ஒரு புது அதிபரை விரும்பியே இந்த முறை தேர்தல் வாக்குகள் இருக்கப்போகின்றது. சரி இருக்கட்டும் முடிவுகளை முன்கூட்டியே சொன்னால் அவ்வளவு நல்லாயிருக்காது அதுவொரு எதிர்பார்ப்பாகவே இருக்கட்டும்.

யாருக்கு அதிபராக கூடிய இலட்சணம், மந்திர புன்னகை இருக்கின்றது இந்த தேர்தல் (2021.09.26) 9வது அதிபருக்கான தேர்தல், இதில் போட்டியிடுபவர்கள் மூவர்கள் ஓலாஃப் ஸ்கோல்ஸ், (SPD) அர்மின் லாஷெட், CDU / CSU  பெண் வேட்பாளர் அன்னலேனா பேர்பாக், பசுமை கட்சி. இவர்களின் யார் பதவிக்கி வந்தாலும் நிறைய சவால்கள் காத்திருக்கின்றது, 

அதில் மிக முக்கியமானது சுற்றுச்சூழல் இயற்கை பேரழிவு பாதுகாப்பு, வேலையில்லா திண்டாட்டம், நாட்டின் பொருளாதார சமநிலை மற்றும் வெளியுறவு கொள்கை குறிப்பாக அமெரிக்காவுடனான நல்லுறவு நேட்டோ கூட்டுறவு கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிப்பதா.. அல்லது ஐரோப்பா தனக்கென ஒரு இராணுவ பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவதா.. இந்த கேள்விகளுக்கான பதில்களுடன்தான் நாளை ஐரோப்பா/ஜெர்மனி நகரப்போகின்றது.

மக்களின் வாழ்வியல் நலத்திட்டங்கள் அரசு அதிகாரத்திடமே இருக்கின்றது அந்த அரசு நல்லதாக அமைய வேண்டும் என்பதே பலரும் எதிர்பாக்கும் எதிர்பார்ப்பு எது நடந்தாலும் நல்லதாகவே இருக்கட்டும். நன்றி மகேஷ்-ரவி.   


வெள்ளி, 10 செப்டம்பர், 2021

நீங்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திவிட்டீர்களா.. தவறான பரப்புரை, பயம் உங்களை தடுக்கின்றதா ....? தடுப்பூசி பற்றி சரியான ஒரு அறிவை தெரிந்து கொண்டால் உங்கள் பயம் விலகும்...

தடுப்பூசிகள் ஒரு முற்காப்பு முறையே தவிர, அது கொரோனா வைரஸ் நோய்களை குணப்படுத்தும் ஒரு மருந்து கிடையாது. ஒருவருக்கு முன்கூட்டியே அல்லது தடுப்பூசிக்கு பின்னால் ஏற்படும் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி பொறுப்பாளியாக இருக்காது. புதுப்புது வைரஸ்களை உருவாக்கும் காரணியாக நீங்களே இருக்கின்றீர்கள். கொரோனா வைரஸ் பற்றிய ஒரு அவநம்பிக்கை இன்னும் உங்களுடன் ஒட்டியே திரிகின்றது.

அம்மை நோயைப்போல் நீண்ட கால தீராத வடுக்களை கொரோனா வைரஸ்களும் இட்டுச்செல்கின்றது. தொற்று ஏற்பட்டு நோய் குணமாகினாலும் அதற்காக எடுக்கப்படும் காலத்தில் உடலை சல்லடை போட்டு அறுத்துவிட்டு போகின்றது.

உங்களுக்கு ஏதாவது வைரஸ் தொற்று ஏற்படும் போது இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி எதிர்த்து போராடும், இதற்காக உடல் எடுக்கும் கால அவகாசத்தை தடுப்பூசிகள் சுருக்கி கொடுக்கின்றது.

தடுப்பூசி செலுத்திய ஒரு குறுகிய நேரத்தில்(காலத்தில்) மெசஞ்சர்   mRNA”  தடுப்பூசி தகவல். அமினோஅமிலங்கள் வைரஸ் புரதமாக(முனைப்புரதம்) மொழிபெயர்க்கப்பட்டு, நோய் எதிர்ப்பு அமைப்பினால்  (லுகோசைட்டுகள்: வெள்ளை இரத்த அணுக்கள்) அடையாளம் காணப்பட்டு அழிக்கப்படுகின்றது மற்றும் நினைவக செல்களிலும் பதிவாகின்றது.

இத்துடன் தடுப்பூசியின் வேலை முடிகின்றது, உடலில் தடுப்பூசி சம்பந்தப்பட்ட எந்த பொருள்களும் இல்லாமல் விழுங்கி செல்கள் முழுமையாக விழுங்கி இரத்தத்தை சுத்தம் செய்கின்றது. இந்த முனைப்புரத அமைப்பை கொண்ட வைரஸ்கள் (சார்ஸ்-கோவ்-2) ஏதாவது  ஒரு சர்ந்தப்பத்தில் உடலில் தொற்றும் போது அதை உடனடியாக அடையாளம் கண்டு தாக்கியழிக்கின்றது.

இந்த காலத்தில் மெதுவான ஒரு காய்ச்சல், தலையிடி மற்றும் உடல் வலி ஏற்படுவது இயல்பானது இந்த நிலமை ஒரு குறுகிய காலத்தில் ஒரு வரையறைக்குள்ளே இருந்தால் ஆரோக்கியமானது, மாறாக கடுமையான காய்ச்சல் தொடர் தலைவலியிருந்தால் மருத்துவரை தொடர்பு கொள்ளவேண்டும்.

தெரிந்து கொள்ளுங்கள் தடுப்பூசி செலுத்தியவர்கள் தங்களுக்கான ஒரு தடுப்பாற்றலை மட்டுமே கொண்டுள்ளனர் அவர்கள் கொரோனா வைரஸ்களை மற்றவர்களுக்கு பரப்புவர்களாகக்கூட இருப்பார்கள். தடுப்பூசிகளினால் செய்ய முடியாத ஒன்றை உங்களினால் செய்யமுடியும். புதுப்புது மரபணு பிறழ்ச்சி வைரஸ்களின் உருவாக்கத்தை தடுக்கமுடியும்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் உங்கள் உதவியால் மட்டுமே கொரோனா வைரஸ்களை ஒழிக்கமுடியும். உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் அயலவர் வீட்டு குழந்தைகளை நினைவில் வைத்து செயல்படுங்கள். எனது நன்றிகள் எப்பவும் உங்களுக்கானது இனிதானதொரு எதிர்காலத்தை உருவாக்க இன்றே புறப்படுவீர் உங்களுக்கு எனது இனிதான வணக்கங்கள்.

கொரோனா தடுப்பூசி புதுப்புது வைரஸ் பிறழ்வுகளை நிறுத்த முடியுமா? ஆம்  அதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் என்னிடம் இல்லை. ஆரம்பத்தில் இருந்த சீனா/கோவிட்-19 வைரஸ்கள் உருக்குலைந்து மறைந்து போய்விட்டது இனிவரும் காலங்களில் இந்த புதிய பிறழ்வு வைரஸ்கள்தான் 2022 வரை ஆதிக்கம் செலுத்தப்போகின்றது. அல்லது தொடர்ந்து இருக்கப்போகின்றது.

உலக சுகாதார அமைப்பு  இந்த புதிய பிறழ்வு வைரஸ்களுக்கு ஒரு புதிய பெயரை கொடுத்திருக்கின்றது. B.1.1.7-பிரிட்டிஷ் பிறழ்வு – ஆல்பா. B.1.351-தென்னாப்பிரிக்கா பிறழ்வு – பீட்டா. B.1.1.28-பிரேசில் பிறழ்வு – காமா. B.1.617-இந்திய பிறழ்வு - டெல்டா.

பிரிட்டிஷ், இந்திய, தென்னாப்பிரிக்க மாறுபாடுகள் அசல் கொரோனா வைரஸின் பல வகைகள் ஐரோப்பா/ஜெர்மனியிலும் கண்டறியப்பட்டிருக்கின்றது  B.1.1.7-பிரிட்டிஷ் மாறுபாடு இந்தியாவில் இருந்து வந்த B.1.617  இன்னும் அதிகமாக ஆதிக்கம் செலுத்திவருகின்றது.

சமீபத்திய ஆய்வுகளின்படி 20 நாடுகளில் B.1  பிறழ்வு வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா மாறுபாட்டைப் போலவே, பிரேசில் வைரஸ் முனைப்புரத (ஸ்பைக் புரத) பிறழ்வுகள் N501Y, E484K மற்றும் K417N மற்றும் பல பிறழ்வுகளும் உள்ளன.

இதன் பொருள் புதிய மாற்றங்கள் முதல் பிறழ்விலிருந்து எழுகின்றன, இது மரபணு அலங்கார கட்டமைப்பு மாற்றங்களைக் காட்டக்கூடும். குறிப்பாக, மாற்றியமைக்கப்பட்ட E484K பிறழ்வு தற்போது மந்தமான சுகாதார நடவடிக்கை, பாதுகாப்பு, தடுப்பு நடவடிக்கை இல்லாத பல நாடுகளில் பெருமளவில் பரவிவருகின்றது. பொதுவில் வைரஸ்கள் பெருகும்போது, பிழைகள் தவறான நகல் எடுப்பு மற்றும் பிறழ்வுகள்,

உடலின் எதிர்ப்புகளை சமாளித்து தன்னை தக்கவைத்துக்கொள்வதற்காக ஒரு சில அமினோ அமிலங்களை மாற்றியமைத்தும்  ஒரு சில எழுத்துக்களை விடுத்தும் கட்டமைக்கின்றது. இது போன்ற SARS-CoV-2 இன் 10,000 க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் உலகளாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வைரஸ்கள் அசலுக்கு 100 சதவீதம் ஒரே மாதிரியாக இருக்காது. நாம் தடுப்பூசி போட்ட பிறகு, உடலில் ஆன்டிபாடிகளை உருவாக்குகிறோம். இந்த ஆன்டிபாடிகளின் மிக முக்கியமான பணிகளில் ஒன்று, வைரஸ்கள்  நம் உயிரணுக்களுடன் இணைவதைத் தடுப்பது, இது தொற்றுநோயையும் தவிர்க்கின்றது.

புதிய பிறழ்வுகள் உருவாவதை இந்த நறுக்குதல் பொறிமுறை பாதிக்கலாம், இதன் பொருள் அசல் வைரஸுக்கு எதிரான தடுப்பூசி நம் உடலில் பிறழ்ந்த புதிய வைரஸ் மாறுபாட்டைக் கையாளும் போது கூட பாதுகாப்பை வழங்க முடியும். இருப்பினும்  உடலில் எல்லா சமயங்களிலும் புதிதாக உருவான வைரஸ் பிறழ்வுகளை தடுப்பூசியால் அடையாளப்படுத்தப்பட்ட எதிரியாக்கி/அந்நிய உடல்களுக்கு எதிரான ஆன்டிபாடிகள் கண்டுகொள்வதில்லை. 

மனிதனே ஒரு வைரஸ் தொழிற்சாலையாக இருக்கின்றான். இந்த புதிய பிறழ்வு வெளியிலிருந்து வரவில்லை அவருக்குள்ளேயே  உருவாகி  அவரையை காலிசெய்கின்றது 

இதனால் காரணம் தெரியாமல் நிறைய பேர் இறந்துபோகின்றார்கள்..வௌவால்கள் பரப்பியதை காட்டிலும் மனிதன்தான் கொடூரமான வைரஸ்களை உருவாக்கின்றான். இதை கட்டுக்குள்ளே வைக்கவில்லை என்றால் மனிதன் தப்பிப்பிழைப்பது கேள்விக்குறியான ஒன்று.

இன்றைய  நிலவரத்தில் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவதால், வைரஸ்கள் தொடர்ந்து மாறக்கூடிய அபாயமும், புதிய மாறுபாடுகள் தொடர்ந்து வெளிவரும். அபாயமும் இருக்கின்றது தடுப்பூசி போட்டால்  மட்டும் போதாது தொடர்ந்து சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது  கட்டாயமாக இருக்கின்றது.

இதனால்தான்  கொரோனா வைரஸ் எவ்வளவு ஆபத்தானது என்று ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.. டிசம்பர் 2019 - கோவிட் -19 தொற்றுக்கான முதல் அதிகாரப்பூர்வ, டிசம்பர் 1 ஆம் தேதி  33-43 பேர்களுடன்  தொடங்கிய ஒரு வைரஸை பாண்டமி( சர்வதேச பரவல்)ஆக்கிய பெருமை எங்களைத்தான் சேரும். .

“இன்றைய இருளுக்காக நீ கண்ணீர் வடிக்காதே, அது நாளை உனக்கு வெளிச்சமாக கூட மாறலாம்”


புதன், 8 செப்டம்பர், 2021

பிரஞ்சு மீன் சூப் (புயாபேஸ்) பாரம்பரியமாக ஆறு வெவ்வேறு மீன் இனங்களை கொண்டு இந்த சூப் தயாரிக்கப்படகின்றது. இறால், மட்டி/சிப்பி, கணவாய்/கணவாய் கூந்தல் ஆல் மீன், சால்மன் மீன், கடல் பாஸ்/ லூப் டி மெர்) மீன்கள். உங்களுக்கு இந்த மீன்கள் கிடைக்காத பட்சத்தில் உங்கள் பிராந்தியத்தில் கிடைக்க கூடிய வெடில் இல்லாத மீனை முள் எடுத்து பயன்படுத்தவும்.

தேவையான மற்றய கூட்டுப்பொருட்கள்: 5-6 பேருக்கான அளவு ஒரு கிலோ எடை கடல் உணவு, சமையலுக்கு ஏற்றவாறு முள் எடுத்து வாய்க்குள்ளே நுழைய வசதியாக சிறுசிறு துண்டுகளாக வெட்டியது மற்றும் 750 கிராம் தக்காளி தோல் நீக்கி அவித்து மசித்து ஒரு பெரிய துளையுள்ள சல்லடையில் வடிகட்டியது.

சிறிய காய்கறி வெங்காயம் (250 கிராம்) 1/2 கொத்து தட்டையான வோக்கோசு இலை(parsley) 4 தேக்கரண்டி ஒலிவ் எண்ணெய் ஒரு மேசைகரண்டி தட்டையான அளவு கும்குமப்பூ,தேவையான அளவு உப்பு, மிளகு மற்றும் 3பல் உள்ளி/பூண்டு, தேனீர் கரண்டி அளவு காய்ந்த தைம் இலை, 1-2 பிரியாணி இலை.

மீன்வடி நீர் (Fishfond) தேவையான அளவு வெள்ளை ஒயின் மற்றும் மீன் தலை, வெட்டிக் கழித்த தேவையற்ற மீன் பகுதி காய்கறிகளை நீரில் உப்பு போட்டு அவித்து வடிகட்டி எடுத்த நீர். இதை முன்கூட்டியே சமைத்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் சமையல் செய்யும் போது தண்ணீருக்கு பதிலாக இதை பயன் படுத்துங்கள்.

செய்முறை விளக்கம்: ஒரு சூடான பாத்திரத்தில் ஒலிவ் எண்ணெய். நடுத்தர வெப்பத்துடன் இரண்டு நிமிடங்களுக்கு வெங்காயம், பூண்டை போட்டு வதக்கவும்., ஏற்கனவே மசித்த தக்காளி மற்றும் பாதியாக வெட்டிய 5-6 மினி தக்காளி பழம், குங்குமப்பூ, தைம் பிரியாணி இலை ஆகியவற்றைச் சேர்த்து, மீன்ஃபண்ட்( ஏற்கனவே தயாரிக்கப்பட்ட மீன்வடி நீர்) மற்றும்

வெள்ளை ஒயின் நிரப்பவும். தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு ருசி பார்த்து சேர்த்து கொள்ளவும். மிளகு உறைப்பு போதாது என்பவர்கள் விதை அகற்றிய ஒரு உறைப்பு மிளகாயை பொடியாக நறுக்கி அல்லது பாதியாக கீறி சேர்த்துக்கொள்ளலாம்.

ஒரு கொதி நிலைக்கு வந்தவுடன், மெதுவாக மீன் மற்றைய கடல் உணவை சேர்த்து ஒரு 8-10 நிமிடங்கள் பாத்திரத்தின் மூடியை சற்று திறந்த நிலையில் மூடி வேகவிட்டு இறக்கவும் சமையலுக்கு பின் வாசனைக்காக போட்ட பிரியாணி இலையை எடுத்துவிடவும் இறுதியாக பாதி நறுக்கியும் பாதி முழு இலையாக வோக்கோசு இலையை போட்டு, பரிமாற தயாராகுங்கள்.தயாரித்த பிரஞ்சு மீன் சூப்பை ஒரு அழகான சூப் கிண்ணத்தில் ஊற்றி, பக்கெட் ரோல்ஸ்(ரொட்டி) உடன் பரிமாறவும்.

உணவக உணவு (மெனு) அட்டையில் வரவேற்பு குளிர்பானத்திற்கு பிறகு முன் உணவாக, உணவு அட்டையில் முதல் இடத்திலிருக்கின்றது சிலர் இதை பிரதான உணவாக எடுப்பதும் உண்டு. ஒரு உணவகத்தின் சமையல் எவ்வளவு தரம் எவ்வளவு சுவையானதாக இருக்கும் என்பதற்கு பிரஞ்சு-மீன்-சூப்(புயாபேஸ்) ஒரு எடுத்துக்காட்டாக பரிமாறுவார்கள்.

வாடிக்கையாளர்கள் சூப்பை சுவைத்த பின் தாங்கள் நல்லதொரு உணவகத்தை தேர்வு செய்திருக்கின்றோம் என்ற நம்பிக்கை அவர்களை மேலும் விலை உயர்ந்த பிரதான உணவுகளை தேர்வு செய்வதற்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கின்றது. கவர்ச்சி கடல் கன்னி மீன் சூப் சுவைப்பதற்கு நீங்கள் தயாரா… இதுவொரு கோடை கால உணவு

உன் செய்கையே உன்னை வடிவமைக்கின்றது நீ எதுவாக வாழ ஆசைப்பட்டாயோ அதுவாகவே நீ மாறுவாய்”




திங்கள், 6 செப்டம்பர், 2021

சால்மன் மீன் பதப்படுத்துதல்(கிராவ்-சால்மன்) அஸ்பாரகஸ் முளை, பாண்/ரொட்டி, அவித்த உருளைக்கிழங்குடன் வைத்து சாப்பிடமுடியும். உறையா கொழுப்பாக சொல்லப்படும் ஒமேகா3 கொழுப்பு அமிலம் நிறைந்து காணப்படும், குளிர் காலத்தில் சாப்பிடக்கூடிய ஐரோப்பா/ ஜெர்மன், ஸ்காண்டிநேவிய மக்களின் சுவைமிக்க அற்புதமான ஒரு உணவு. சமையல் செய்யாமல் பதப்படுத்தும் முறை இது, வெகு சுலபமானது நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்: தோலுடன், நடு முள்ளு இல்லாமல் ஒரு கிலோ பாதியாக பகிர்ந்த, சால்மன் மீன் 50 கிராம் கடல் உப்பு, 30 கிராம் சர்க்கரை, 5 தேக்கரண்டி கருப்பு மிளகு, புதிய 2 கொத்து டில் மற்றும் ஒரு கேரட், பாதி பெருஞ்சீரக அடித்தண்டு/கிழங்கு.

செய்முறை விளக்கம்: சுத்தம் செய்த சால்மன் மீனை ஒரு மேசைக்கரண்டி ஒலிவ் எண்ணைய் ஊற்றி பூசவும் பிறகு உப்பு சர்க்கரை, பொடி செய்த மிளகை தூவிவிடவும். இதை ஒரு ஓரமாக வைத்துவிட்டு. டில் மற்றும் கேரட், பெருஞ்சீரக தண்டு கிழங்கை பொடியாக நறுக்கி, ஒரு சுழற்சி மிக்ஸியில் போட்டு ஒரு கரடான பதத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த கலவையை எடுத்து முன்கூட்டியே தயார்செய்து ஓரமாக வைக்கப்பட்ட சால்மன் மீன் மேல் கொட்டி எல்லா இடத்திலும் படும்படி கெட்டியாக பரவிவிட்டு, சமையலறை பொலித்தீன் படலம் கொண்டு சுற்றி ஒரு பத்து நாட்கள் குளிர்ஊட்டியில் வைத்துக்கொள்ளுங்கள்.

பத்து நாட்கள் கடந்த நிலையில் சால்மன் மீன் இப்பொழுது பதப்படுத்தப்பட்டு தயாராகி இருக்கும், அதை எடுத்து அதன் மேல் பூசப்பட்ட காய்கறி சாந்து கலவையை வழித்து எடுத்து கொட்டிவிடவும்.

இப்ப உங்களுக்கு சுவைமிக்க சால்மன் மீன் தயாராகியிருக்கின்றது பேப்பர் அட்டை கனத்தில் சிறுசிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

100 கிராம் சால்மன் மீனிலுள்ள ஊட்டசத்துக்கள். இரும்பு சத்து, புரதம் 19.9 கிராம். கொழுப்பு. 13.6 கிராம். பொட்டாசியம். 371 மி.கி. கால்சியம் 13 மி.கி. மெக்னீசியம். 29 மி.கி. சோடியம் 51 மி.கி. பாஸ்பரஸ் 266 மி.கி..

விற்றமின் B1 (தியாமின்) 140 μg விற்றமின் B2 (ரிபோஃப்ளேவின்) 300 µg விற்றமின் B3 நியாசின் 7990 µg, விற்றமின் B5 (பாந்தோத்தேனிக் அமிலம்)




அஸ்பாரகஸ் (Spargel-ஜெர்மன்) அஸ்பாரகஸ் முளையில் குறைந்த கலோரி மற்றும் கூடிய விற்றமின்கள் உள்ளது, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல ஆரோக்கியமான தாதுக்கள் உள்ளன. இவைகள் இதயம், எலும்புகள் மற்றும் இரத்த சுழற்சிக்கு மிகவும் நல்லது. அஸ்பாரகஸில் விற்றமின் சி, ஈ அதிகளவில் உள்ளன,

இதில் குறிப்பாக மிகவும் முக்கியமான ஃபோலிக் அமிலம்(விற்றமின் 9) நிறைந்து காணப்படுகின்றது. மற்றபடி விற்றமின் பி வளாகம் சிறிய அளவில் மட்டுமே உள்ளது. சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

பச்சை/வெள்ளை, இரண்டு வகைகளும் மிகவும் ஆரோக்கியமானவை. வசந்த கால தொடக்கத்தில் இது அறுவடையாகி சந்தைக்கு வருகின்றது.

இதை எப்படி சமைப்பது அதிலுள்ள மெல்லிய தோலை சீவி ஒரு உசரமான பாத்திரத்தில் முளை வெளியில் தெரியும்படி முக்கால் பங்கு தண்ணீர் ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு,சர்க்கரை சிறிய அளவு பட்டர் மற்றும் பாதியாக நறுக்கிய தோடம்பழத்தை சேர்த்து பாத்திரத்தை மூடி மெதுவாக பனங்கிழங்கு அவிப்பது போல் பதம் பார்த்து அவித்து எடுத்து. உங்கள் விருப்பம் போல் சாலட், சூப், அல்லது இறைச்சி, அவித்த உருளைக்கிழங்கு உணவுடன் பட்டர் சாஸ் ஊற்றி பரிமாறுங்கள்.

பாத்திரத்தில் செங்குத்தாக வைத்து அடிப்பகுதி மட்டும் நீரில் அவிந்தால் போதுமானது மற்றும்படி முளை முனைப்பகுதி நீராவி பட்டு அவியும்படி பாத்திரத்தின் நீரை சரிபார்த்துக்கொள்ளுங்கள். இதற்காக பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட பாத்திரங்கள், ஹாலண்டேஸ் சாஸ் பல்பொருள் அங்காடி/சூப்பர் மார்க்கட்டில் கிடைக்கின்றது அல்லது நீங்களாகவே சாஸ் தயாரிக்கமுடியும்.

சாஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்: பட்டர்/வெண்ணைய் தேவையை பொறுத்து 3-4 முட்டையின் மஞ்சள் கரு, உப்பு 4-5 தேக்கரண்டி எலுமிச்சை சாறு,

செய்முறை விளக்கம்: வெண்ணெயை ஒரு சிறிய வாணலியில் மிதமான தீயில் உருக்கி அடுப்பில் இருந்து அகற்றி தனியாக வைத்துக் கொள்ளவும். இன்னுமொரு பாத்திரத்தில் முட்டையின் மஞ்சள் கருவை 50 மில்லி தண்ணீர், தண்ணீருக்கு பதில் வெள்ளை திராட்சை ஓயின் பயன்படுத்தலாம் உப்பு மற்றும் 4-5 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து,

ஒரு பாத்திரத்தில் வைத்து, ஒரு சூடான, கொதிக்காத நீர் குளியல் மீது கைவிசையாக முட்டை அடிக்க பயன்படுத்தும் (Whisk ) சுழல்-துடைப்பம் கொண்டு மெதுவாக அடிக்கவும் . பின்னர் அதை இறக்கி, கிளறும்போது, ​​முதலில் உருக்கி வைத்த வெண்ணையை ஊற்றவும், முதலில் சொட்டு சொட்டாக ஊற்றவும்,

பின்னர் மெல்லிய நீரோட்டத்தில் சாஸ் கிரீமி மற்றும் பளபளப்பாக இருக்கும் பட்சத்தில் அது தயாராகிவிட்டதை காட்டுகின்றது. உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சுவையை சரி பார்க்கவும். இப்ப உங்களுக்கு நீங்களாகவே தயாரித்த சுவையான ஒரு அஸ்பாரகஸ் சாஸ் தயார்.

அஸ்பாரகஸ் சாப்பிட்டால் சிறுநீர் நாற்றமெடுக்கும். எதற்காக அஸ்பாரகஸ் சாப்பிட்டால் சிறுநீர் நாற்றமெடுக்கின்றது. அஸ்பாரகஸை சாப்பிட்ட பிறகு சிறுநீர் விரும்பத்தகாத வாசனை அடிக்கின்றது இதற்கான காரணம்

அஸ்பாரகஸ் முளையில் காணப்படும் சல்பர்/கந்தகம் போன்ற அஸ்பார்டிக் அமிலத்தை கந்தக பொருட்களாக உடைக்கும் ஒரு நொதியம் பாதிக்கும் மேல் உள்ள அத்துனை  மக்களிலும் காணப்படுகின்றது உடைக்கப்பட்ட கந்தகம் சிறுநீருடன் வெளியேறும்போது விரும்பத்தகாத வாசனையைக் கொண்டுள்ளது

இந்த உலகத்தின் மூர்க்கத்தை கண்டு அஞ்சாதே, நீ உன்னை வாழத் தகுதியுள்ளவனாக மாற்றிக்கொள்.” நீ உன்னை மாற்றிக்கொள்ளும் வரை இந்த உலகம் உனக்கு இருட்டாகத்தான் இருக்கும்”


சனி, 4 செப்டம்பர், 2021

கிளைபோசேட் இந்த உலகத்தில் எத்தனையோ வகையான உணவுப்பண்டங்கள் இருந்தும் அதில் பாதிக்குமேல் உண்ணத் தகாதவையாக ஒதிக்கிவிட வேண்டியிருக்கின்றது. மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள், பழங்கள், தானியங்கள், மிக முக்கியமாக மக்காச்சோளம் சோயா தானியத்தை எடுத்துக்கொள்ளலாம்.

சோயா ஒரு அற்புதமான  உணவு, விலங்கு புரதத்திற்கு ஒப்பானது அதை மரபணு மாற்றம் செய்யப்பட்ட தானியம் என்பதற்காக ஒதிக்கிவிடவில்லை, அதை சாகுபடி செய்ய பயன்படுத்தப்படும் களைகொல்லி மனித ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிக்ககூடியது.

அதிக விளைச்சலை எதிர்பார்த்து பெருந்தொகையாக மிதமிஞ்சி பயன்படுத்தப்படும் களைகொல்லியின் தேக்கங்கள் நாங்கள் உண்ண பயன்படுத்தும் சோயா தயாரிப்புகளில் காணப்படுகின்றதுசோயாவை அதிகமாக உணவில் சேர்க்கும் போது அதிலுள்ள நச்சு களைகொல்லி தேக்கங்கள் இனம் புரியாத காய்ச்சல் கால் முட்டிவலியை ஏற்படுத்துகின்றது.

கிளைபோசேட் ஒரு களைக்கொல்லியாகும் மேலும் உலகில் அதிகளவில் பயன்படுத்தப்படும் கிளைபோசேட் பரந்த நிறமாலை களைக்கொல்லி என்று அழைக்கப்படுகின்றது. களைக்கொல்லியை எதிர்க்கும் வகையில் மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட பயிர்களை மட்டும் விட்டுவிட்டு, அது எந்த தாவரத்தையும் கொல்லும் ஆற்றல் உள்ளது.

அழகான முதுமைப்பருவம். மாதவிடாய் - கடைசி சுழற்சி, 40 முதல் 45 வயதில் பெரும்பாலும் பெண்களுக்கு ஆரம்பமாகின்றது ஆண்களுக்கும் முதுமைப்பருவ சுழற்சி 60 வயதிற்கு மேல் மெதுவாக ஏற்படுகின்றது. பெண்களுக்கு ஏற்படும் மாற்றம் போல் ஆண்களுக்கு பெரியதாக தெரிவதில்லை. இது ஒன்றும் புதிதான விடையமல்ல பெண்களுக்கு வரும் ஒரு இயற்கையான நிகழ்வுதான் இதனுடைய சுழற்சிக்காலம் குறைந்தது 15-20 வருடங்கள் நகர்ந்து செல்லும்.

இதை ஆரம்பத்திலிருந்து சரியாக கவனித்தால் நல்ல ஆரோக்கியமான, அழகான முதுமைப் பருவத்தில் அடியெடுத்து வைக்கமுடியும் இல்லை என்றால் உங்கள் பெரும் பகுதி வாழ்க்கையை நோய்களுடன் தான் காலத்தைக் கழிக்க வேண்டிவரும்.

இந்த இரத்தப் போக்கு ஓய்வு (மெனோபாஸ்) அறிகுறிகள், தோன்றும் போது உடல் எரிச்சல் மற்றும் தூக்கமின்மை, உடல் உஷ்ணம், எலும்பு தேய்தல், இதனால் ஏற்படும் முட்டிவலிகள் வளர்ச்சிக்குரிய♀ ஈஸ்ட்ரோஜன்  மற்றும் புரொஜெஸ்ட்ரோன்  ஹார்மோன் குறையும்போது இந்த அறிகுறிகள் தென்படுகின்றன.

இது ஒரு மாற்றமே தவிர இதை ஒரு நோய் என்று நினைக்காதீர்கள் முன்பு பூப்படையும் போது ஏற்பட்ட மாற்றத்துக்கு நேர் எதிரான மாற்றம் இது, பருவமடைதல்  வளர்ச்சியை நோக்கிய பயணம் இது வளர்ச்சி குன்றிய பயணம்  இதை எதிர்க்காமல், அதன் வழியில் விட்டு விடுவது தான் நல்லது. சிலர் இந்த காலத்தில் ஏற்படும் உடற் கோளாறுகளுக்காக ஹார்மோன் மாத்திரைகள் எடுக்கின்றார்கள்

இதனுடைய பக்கவிளைவு மார்பக புற்றுநோய் ஆண்களுக்கு விந்து உந்து பை (புரோஸ்டேட் புற்றுநோய்இட்டுச்செல்கின்றது இயற்கை காரணமாகத்தான் வயதான காலத்தில் எங்களுடைய வளர்சிதை ஹார்மோன்களை இன்சுலின் உட்பட குறைக்கின்றதுஇந்த காலத்தில் பாலியலை தூண்டும் மாத்திரைகள், பெரும்தீனி குடிபோதை என ஆட்டம் போட்டால் அதற்காக கடவுள்/இயற்கை பொறுப்பாளியாக முடியுமா.

ஆண்களுக்கும் உடல் எரிச்சல், தூக்கமின்மை, உடல் உஷ்ணம் போன்ற அறிகுறிகள் தென்படுவது முதுமை காலத்தில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்  குறைந்து விடுவதுதான் காரணம். இதைக் சரியான முறையில் கவனம் எடுத்தால் ஆண்களும் ஆரோக்கியமான அழகான கம்பீரமான முதுமைப் பருவத்தில் அடியெடுத்து வைக்கமுடியும்.

இந்த பருவத்தில் மிதமிஞ்சிய உணவுத்தேவைகளை குறைத்து, நல்ல ஆரோக்கியமான உணவுகளை தெரிவு செய்து உண்ண வேண்டும் அசைவ உணவுகளை முற்றாக நீக்கி அல்லது குறைத்து விடுவதுதான் சாலச்சிறந்தது. முதுமை பருவத்தில் உண்ணக் கூடிய உணவுகளில் மிகச்சிறந்தது சோயா, காய்கறிகள் மீன் உணவுசோயாவில் அதிகப் புரதச்சத்தும் குறைந்தளவு கொழுப்புச்சத்தும் உள்ளது.

வளர்ச்சிக்குரிய ஹார்மோன்களை சம நிலையில் வைத்துக் கொள்ள உதவும் ஒரு தானியம் என்றால் அது இந்த சோயா தான் மிக குறைந்த செலவில் உணவையும் மருந்தையும் ஒன்றுக்குள் ஒன்றாக வைத்த இறைவனுக்குத்தான்  நன்றி சொல்ல வேண்டும்

வசந்தகாலம் தான் அழகு என்றில்லை இலையுதிர் காலமும் ஒர் அழகுதான் முதுமையை சிவப்பு கம்பளம் விரித்து நல்வரவு சொல்லுங்கள் இல்லை என்றால் நோய் என்னும் குழிகளில் தடக்கி விழுந்து விடும் உங்கள் முதுமை. *ஆரோக்கியமான முதுமையை நாங்கள் விரும்புகின்றோம்

ஒரு கிலோ சோயாவிலுள்ள புரதம் 3-5 லிட்டர் பால்,1 கிலோ மாமிசம் அல்லது 24 முட்டைகளிலுள்ள புரதத்திற்கு சமமானது என்று ஆராச்சிகள் சொல்கின்றன.