புதன், 1 டிசம்பர், 2021

ஆன்டிபாடி சோதனைகள்: அதிகரித்து வரும் கொரோனாவின் கோரமுகங்களின் எண்ணிக்கையில், ஆன்டிபாடி சோதனை மூலம் வைரஸுக்கு எதிராக எவ்வளவு சிறப்பாக பாதுகாக்கப்படுகின்றார்கள் என்பதை அதிகமான மக்கள் கண்டுபிடிக்க விரும்புகிறார்கள்.

ஆன்டிபாடி சோதனைகள் சார்ஸ்-கோவி-2 மற்றும் புதிய மாறுபாடுகள் டெல்டா, ஓமிக்ரான் கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பை எங்களுக்கு நம்பத்தகுந்த வகையில் சுட்டிக்காட்டுகின்றனவா?

இந்த சோதனைகளை எவ்வளவு தூரம் நம்பலாம். சில சமயங்களில் பலரை தவறான பாதுகாப்பு உணர்விற்குள் தள்ள முடியும். கொரோனா வைரஸ் இல்லை என்று வாதிட்டவர்கள் கூட ஆன்டிபாடி சோதனைகள் மூலம் கொரோனாவின் கொடூர முகங்களை கண்டு அஞ்சத்தொடங்கி, தடுப்பூசியை விரும்பி போடும் அளவிற்கு உணரப்பட்டிருக்கின்றார்கள்.

நீங்களாகவே சோதித்துக்கொள்ளும் தொற்று அல்லது தடுப்பூசிக்கு எதிராக வெளியிடும் ஆன்டிபாடி சோதனைகள் நூற்றுக்குநூறு சரியான முடிவுகளை சொல்லாவிட்டாலும் ஆய்வக சோதனை 99 விழுக்காடுகள் சரியான முடிவுகளை சொல்லுகின்றது என்பது ஆறுதல் அழிக்கின்றது. தடுப்பூசி போட்டால் மட்டும் போதாது அவ்வப்போது கொரோனா சோதனை மற்றும் ஆன்டிபாடி சோதனையும் செய்து கொள்ளுங்கள்.

தொற்று/தடுப்பூசிக்கு எதிராக வெளியிடும் ஆன்டிபாடி சோதனைகள் எப்படி பார்க்கப்படுகின்றது: முதல்முதலில் உடலில் கொரோனா தொற்று ஏற்பட்டு, வைரஸ்கள் இரத்தத்தில் ஊடுருவும் போது முதன்மை எதிர்ப்பாக IgM ஆன்டி உடல்கள் வெளிப்படுகின்றது. இது தொற்று நோய்க்கான தகவல் தொடர்பு அதனை தொடர்ந்து எச்சரிக்கை மணியை அடித்துவிட்டு, இது ஓரிரு கிழமைகளில் மறைந்துவிடுகின்றன.

எச்சரிக்கையின் பிரதிபலிப்பு, இரண்டாம் கட்ட நடவடிக்கை முடுக்கிவிடப்படுகின்றது நோய் எதிர்ப்பு சக்தியின் கட்டளை ஆபத்து வந்திருக்கு கதவை மூடு, மிகவும் வேகமாக நாசி வழி தொற்று வருகையை தடுப்பதற்கு உமிழ் நீர், சளிச்சவ்வுகளில் IgA ஆன்டிஉடல் வெளிப்படுகின்றன பெருமளவில் வைரஸ்கள் உடலில் நுழைவதை தடுப்பதற்கு (தும்மல் இருமல், சளி மூக்கடைப்பு) இவைகளின் நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானது, தூண்டிவிட்டு இவைகளும் ஓரிரு கிழமைகளில் மறைந்து போகின்றது.

இவைகளை தொடர்ந்து மூன்றாம் கட்ட நடவடிக்கை முடுக்கிவிடப்படுகின்றது. IgG வெளிப்பட்டு உடல் முழுவதற்குமான பாதுகாப்பு பொறுப்பை எடுத்துக்கொள்கின்றது இவைகள் நீண்டகாலத்திற்கு இரத்தத்தில் காணப்படும் இவைகளை தொற்று அல்லது தடுப்பூசிக்கு எதிராக வெளியிடும் ஆன்டிபாடிகள் என்று கணக்கிடப்படுகின்றது.

உங்களுக்கு கடுமையான தொற்று ஏற்பட்டு பாதிப்புக்கள் அதிகமாகும் போது நான்காம் கட்ட நடவடிக்கை முடுக்கிவிடப்படுகின்றது. அதிரடிப்படை T-செல்களின் வெளிப்பாடு, கடுமையான காய்ச்சல் தொற்றுநோயை வெளிப்படையாக வெளியில் தெரிவிக்கின்றது.

ஆன்டிபாடி சோதனை எல்லா வைரஸ்களுக்குமான பொதுவான ஒரு சோதனை எந்த வகை வைரஸ் எந்த கொரோனா மாறுபாடு தொற்றியிருக்கின்றது என்பதை அறிவதற்கு PCR சோதனை தேவைப்படுகின்றது.

தடுப்பூசி/மீட்கப்பட்டது நேர்மறையான முடிவுகள் நீங்கள் ஒரு பாதுகாப்பான பக்கத்திலிருப்பதை உணர்த்துகின்றது உங்களுக்கு போடப்பட்ட தடு்பூசி செயலில் உள்ளது.அல்லது  இயல்பாகவே உங்கள் உடல் தற்காப்பை பெற்றுவிட்டது.

ஆன்டிபாடி சிகிச்சை (செயலற்ற தடுப்பூசி) மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள்-(MAK) SARS-CoV-2 நோயால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் கடுமையான போக்கின், அதிக ஆபத்து நிலையில் உள்ளவர்களுக்கு ஆரம்பகால சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஒரு சிகிச்சை முறை.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் குணமடைந்து பணிக்கு திரும்பியிருந்தார். அதற்கு பிறகு மருத்துவர்களினால் இந்த சிகிச்சையை சுருக்கமாக “ட்ரம்ப் சிகிச்சை” என்று அழைக்கப்படுகின்றது.

செயலற்ற தடுப்பூசி என்று அழைக்கப்படுகின்ற இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஆன்டிபாடிகளை உள்ளடக்கியது. உடலில் செலுத்தப்படும்போது இந்த ஆன்டிபாடிகள் உடலில் வைரஸ்கள் பெருகுவதைத் தடுக்கின்றன இந்த சிகிச்சையானது ஆன்டிபாடிகளை நடுநிலையாக்குவது மற்றும் SARS-CoV-2 வைரஸை செயலிழக்கச்செய்கின்றது,

மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் என்றால் என்ன? கொரோனா வைரஸ் SARS-CoV-2 க்கு எதிரான மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் புரதங்கள் ஆகும், அவை கொரோனா வைரஸ் SARS-CoV-2 இன் சில மேற்பரப்பு கட்டமைப்புகளில் இணைக்கும் பொருட்டு உயிரி தொழில்நுட்ப ரீதியாக ஆய்வகத்தில் உருவகப்பட்டு, பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் ஆன்டிபாடிகள், கொரோனா வைரஸில் கட்டமைப்புகளை பிணைக்கின்றன அல்லது மனித உயிரணுக்களில் உள்ள ஏற்பிகளைத் தடுக்கின்றன, இதனால் SARS-CoV-2 வைரஸ்கள் மனித உயிரணுவிற்குள் நுழைவது தடுக்கப்படுகின்றது. MAK- கொண்ட மருந்துகள் பல மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளின் கலவையை கொண்டிருக்கலாம். யாருக்கெல்லாம் இந்த சிகிச்சை அளிக்கப்படுகின்றது, மருத்துவமனைகளே முடிவு எடுக்கின்றது. 

விரைவான (COVID-19) ஆன்டிஜென் சோதனை எவ்வாறு பார்க்கப்படுகின்றது: ஆன்டிபாடி சோதனை, ஆன்டிஜென் சோதனை இரண்டும் வெவ்வேறு தகமையுடன் பார்க்கப்படுகின்றது. ஆன்டிஉடல் சோதனை நேர்மறையாக இருந்தால் உங்களுக்கு போடப்பட்ட தடுப்பூசி செயலிலுள்ளது அல்லது இயல்பாகவே உங்கள் உடல் தடுப்பாற்றலை பெற்றுவிட்டது. ஆன்டிஜென் சோதனை எதிர்மறையாக இருக்கவேண்டும்.

ஆன்டிஜென் சோதனை எவ்வாறு செயல்படுகின்றது? மூக்கு அல்லது தொண்டையில் இருந்து மாதிரி (ஸ்மியர்) எடுக்கப்பட்டு ஒரு சோதனை துண்டு மீது வைக்கப்படுகின்றது. SARS-CoV-2 வைரஸ் மாதிரி இருந்தால், அதன் புரத கூறுகள் சோதனை துண்டுடன் வினைபுரிந்து நிறத்தை மாற்றும். இந்த முடிவை நேரடியாக தளத்தில் படிக்கலாம் இதற்கான கால அவகாசம் சுமார் 30 நிமிடங்களுக்கும் குறைவாக இருக்கும்.

நுரையீரல்

-மூச்சு திணறல்.

-இருமல்.

-நெஞ்சு வலி.

 

கணையம்

-கணைய சேதம்.

-வீக்கம்.

 

சிறுநீரகங்கள்

-சிறுநீரக பலவீனம்.

-சிறுநீரகங்கள் செயலிழப்பு.

 

இரைப்பை குடல்

-வயிற்றுப்போக்கு.

-குமட்டல்/வாந்தி.

-தொண்டை வலி.

 

மண்ணீரல்

-T/B லிம்போசைட்டுகள் குறைபாடு.

-நிணநீர் நுண்குழாய்களின் முறிவு.

 

கல்லீரல்

-கல்லீரல் சேதம்.

-கல்லீரல் மதிப்புகளில் அதிகரிப்பு.

 

இரத்த குழாய்கள்

-தமனிகள் வீக்கம்.

-வாஸ்குலர் பாதிப்பு.

-தமனிகளில் எரிச்சல்.

 

மூளை

- ஆற்றல் இல்லாமை.

- மயக்கம்.

- கவலை,பயம்.

- மனச்சோர்வு.

- கவனசீர்குலைவு.

- மூளையில் புகைச்சல்.

 

இதயம்

- நெஞ்சு வலி.

-மயோர்கார்டிடிஸ்

-இதய தசை சேதம்

-அரித்மியா


இது கொரோனா வைரஸ் SARS-CoV-2 நீண்டகால பாதிப்புக்கள், இந்த கடுமையான காலத்தில் தடுப்பூசி செலுத்தி உங்களை நீங்கள் பாதுகாக்கவிடின் பிற்காலத்தில் இது போன்ற பாதிப்புக்களை சந்திக்கநேரிடும் 


கார்டியோவாஸ்குலர் கோளாறு: பொதுவாக பக்கவாதம், மாரடைப்பு காரணிகளை பற்றியே அதிகமாக தெரிந்து வைத்திருக்கின்றோம். ஒட்டு மொத்த இதய குருதி சுற்றோட்டத்தில் ஏற்படும் தமனி அடைப்புகளை பற்றி அதிகமாக தெரியாது அல்லது அதை குறித்ததொரு கவனத்தை யாரும் எடுப்பதில்லை.


சிறுநீரகம், கணையம், மண்ணீரல், நுரையீரல் போன்ற மிக முக்கியமான உள்ளுறுப்புகளில் ஏற்படும் பிளேக்(சுண்ணாம்பு கொழுப்பு படிவுகள்) இரத்த குழாய் அடைப்புகளும் மெல்ல மெல்லக்கொல்லும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன


இதயத்தில் எப்படியோ அப்படியே, இதய தமனியில் ஏற்படும் அடைப்புகள் போலவே இந்த உள்ளுறுப்புகளுக்கு செல்லும் இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகள் அவைகளுக்கு தேவையான ஒட்சிசன்O2, ஊட்டச்சத்துக்களை கிடைக்கவிடாமல் தடுக்கின்றது இதன் நிமித்தம் இந்த உறுப்புகளும் நாளடைவில் மெல்ல மெல்ல இறந்து செயல்லிழந்து போகின்றது.


இதற்கு சிறுநீரக கோளாறு, சர்க்கரை நோய் என்று வேறு பெயர்களில் அழைப்பதினால் இதற்கெல்லாம் ஆரம்ப காரணியாக இருந்த இரத்த குழாய் அடைப்புகளை குறித்து அதிகம் கவனம் செலுத்த தவறிவிடுகின்றோம்.


உங்கள் இதயத்திற்கு உண்மையில் என்ன வயது இருக்கும், அது இளமையில் முதுமை அடைந்து விட்டதா.. அதற்கான காரணம் என்ன,


கொழுப்பு/சர்க்கரை வளர்சிதை மாற்ற கோளாறு பரம்பரையாக கடத்தப்பட்ட கார்டியோவாஸ்குலர் நோய், உடல் பருமன், உடற்பயிற்சி இன்மை, பெரும்தீனி, தவறான உணவுப்பழக்கம், ஊட்டசத்து குறைபாடு, புகைத்தல், அதிகளவு மதுபானம் குடித்தல், பரபரப்பான உங்கள் வாழ்க்கை, பதற்றம், எரிச்சல் மனவழுத்தம்.


கார்டியோவாஸ்குலர் நோய்களில் மிக முக்கியமானவற்றில் உயர் இரத்த அழுத்தம், ஆஞ்சினா பெக்டோரிஸ்(இதயவலி), இருதய இரத்தக்குழாய்/ இதய தமனிகளின் அடைப்பு, மாரடைப்பு, இதய செயலிழப்பு, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம், நாள்பட்ட நுரையீரல் அடைப்புநோய்களும் அடங்கும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக