திங்கள், 8 நவம்பர், 2021

மலைப்பிரதேசங்களில் ஏன் ஒட்சிசன்-O2 பற்றாக்குறை ஏற்படுகின்றது. உயரமான இடங்களில் எல்லையை பாதுகாக்கும் இராணுவவீர்ர்கள், மலை ஏறுபவர்கள் அல்லது சுற்றுலா செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை. மலைப்பிரதேசங்களில் 2500 மீட்டரிலிருந்து நம்மில் பெரும்பாலோருக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் தாங்கிக்கொள்ள முடியும் 3000 மீட்டரிலிருந்து எடிமா உருவாகலாம்.

4000-5000 மீட்டரிலிருந்து நீங்கள் உங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளாவிட்டால், உங்களுக்கு அடிக்கடி ஏற்படும் ஒட்சிசன்-O₂பற்றாக்குறையால் உறக்கமின்மை அதனை தொடர்ந்து இதய கோளாறு ஏற்படும். 6000 மீட்டரிலிருந்து நீங்கள் சில வாரங்கள் மட்டுமே உங்களால் உயிர் வாழமுடியும். உங்கள் ஒட்சிசன்-O₂ நிலையை சரி செய்வதற்கு எரித்ரோபொய்டின் (EPO) அதிகரிக்க செய்கின்றது.

சிலர் இன்னும் 3000 மீட்டர் காற்றழுத்தத்தை நன்றாக சமாளிக்க முடியும், இருப்பினும் எந்த நேரமும் உயிருக்கு ஆபத்தான ஒரு நிலையில்தான் அவரின் வாழ்க்கையிருக்கும். 3000 மீட்டர் முதல் 5000 மீட்டர் உயரம் வரை, நுரையீரல் வீக்கம் என்று அழைக்கப்படுகின்ற எடிமா ஆபத்து அதிகரிக்கின்றது.

எடிமா வருவதற்கான காரணம்: இந்த உயரத்தில் இருந்து காற்றில் ஒட்சிசன்-O₂ மூலக்கூறுகள் குறைவாகவே உள்ளன. நுரையீரலுக்கு போதுமான காற்று/ஒட்சிசன்-O₂ கிடைக்காதபோது, ​​நுரையீரல் தமனிகள் சுருங்குகின்றன, இது அவற்றில் அழுத்தத்தை அதிகரிக்க செய்து நரம்புகளிலிருந்து திரவத்தை நுரையீரல் குமிழி அல்வியோலிக்குள் செலுத்துகின்றது. இதன் நிமித்தம் நுரையீரல் திரவத்தினால் நிரம்பி சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறல் ஏற்படுகின்றது.

ஒட்சிசன்-O2 பற்றாக்குறையை குறுகிய காலத்தில் ஈடுசெய்ய முடியாது. மூளைக்கு விரைவாக ஒட்சிசன்-O₂ கிடைக்க இதயம் இரத்த ஓட்டத்தை சரிசெய்வதற்கு கடுமையாக வேலை செய்கின்றது. இதயம் கடல் மட்டத்திலிருந்து 4,500-5,000 உயரமான மலைபிரதேசங்களில் தினமும் வேகமாக துடிக்கின்றது. தினமும் உயர-இதய துடிப்பு, ஓய்வு-இதய துடிப்பு 20 சதவீதத்திற்கு மேல் அதிகமாக கூடாது.

பெருமூளை எடிமா: என்பது மூளையில் ஏற்படும் வீக்கம் (எடிமா) ஆகும் பல்வேறு தோற்றங்களின் அதாவது திரவங்களின் தேக்கம் பெருமூளை அளவு மற்றும் அழுத்தம் அதிகரிப்பதன் விளைவாக ஏற்படுகின்றது. மூளை கடினமான ஒரு மண்டை ஓட்டுக்குள்ளே இருக்கின்றது.

மூளையில் ஏற்படும் வீக்கம்/திரவங்களின் தேக்கங்களினால் விரிவடையும்போது மண்டை ஓடு அதற்கு இடம் விட்டுக்கொடுக்காது மாறாக திருப்பி மூளையை அழுத்தும். மிக மோசமான நிலையில், இது பெருமூளை கோமா மாரடைப்பு மற்றும் மூளை மரணத்திற்கு வழிவகுக்கும்.

7500-8000 மீட்டரிலிருந்து அதாவது இமாலய உயரத்தில் சில நாட்களுக்கு மேல் யாரும் உயிருடன் இருக்க முடியாது. ஒரு சில பறவைகள் மட்டுமே இந்த உயரத்திற்கு பறக்கின்றது.

கடுமையான வெய்யில் சூடான நாட்களில் உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் கவனிக்க தவறுவது. இரண்டு மணிநேரம் கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்களின் உடலில்லிருந்து சுமார் 6-9 லிட்டர் திரவம் வியர்வையாக வடிகின்றது. வியர்வையில் 99% தண்ணீர் மற்றும் உடலின் மிக முக்கியமான எலக்ட்ரோலைட்டுகள் என்று சொல்லப்படும் சோடியம்(Na+) கால்சியம்(Ca2+) மற்றும் மெக்னீசியம்(Mg2+) போன்ற கூறுகளும் உள்ளன.

அதிகமாக வியர்த்தால், இந்த தாதுப் பொருட்கள் உடலில் இருந்து வியர்வையில் கழுவப்படுகின்றன, நாம் பொதுவாக வெப்பமான நாட்களில் அல்லது உடற்பயிற்சி செய்யும் போது அதிகமாக தண்ணீர் குடிப்போம். வியர்வை மூலம் மட்டுமின்றி சிறுநீர் மூலமாகவும் இந்த கனிம சத்துக்களை வெளியிடுகின்றோம். உடலின் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலை சரிந்து நமது ஆரோக்கியத்தை சேதப்படுத்துகின்றது. சர்க்கரை நோயாளிகளும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் அவர்களுக்கும் இதே நிலைப்பாடுதான்.

ஏன் எலக்ட்ரோலைட்டுகள்(தாதுக்கள்) அவ்வளவு முக்கியமானது  இவைகள் மின்னேற்றமுள்ள அயனிகளை சுமந்து செல்பவை அவை இரத்தம் போன்ற திரவத்தில் கரைக்கப்படும் போது. இரத்தத்தில் உள்ள இந்த எலக்ட்ரோலைட்டுகள் சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், குளோரைடு மற்றும் பைகார்பனேட் போன்றவை நரம்பு மற்றும் தசை செயல்பாட்டை சீராக்க உதவுகின்றது. அதாவது இதயம், மூளையை இயக்கும் நேர்மின் அயனிகள் இவைகளின் திடீர் இழப்பு மரணத்தை ஏற்படுத்துகின்றது.

பரிந்துரை: சாதாரண வீட்டு குழாய் நீரை விட, விலை உயர்ந்த மினரல் வாட்டர் உடனடியாக இழப்பை ஈடுகட்ட உதவும்.

சாராம்சம்: கடவுள் இருக்கின்றார், அவர் தன்னுடைய தடையங்களை பல இடங்களில் விட்டுச்சென்றிருக்கின்றார் முடிந்தால் என்னை நீ கண்டுபிடிச்சுக்கோ, கொஞ்சம் வேதியியல் கற்றுக் கொள்ளுங்கள்.தொடர்ந்து படிக்க இதில் அழுத்தவும் Zinc Zn2 + antiviral SARS-CoV-2 virus http://mahesva.blogspot.com/2020/12/zn2.html

இரண்டு நீர் மூலக்கூறுகள்(H)  ஒரு ஒட்சிசனுடன் இணையும் போது பிணைப்பு கோணம் 104,45° பாகையாக இல்லாமல் நேராக 180° பாகையாக இருந்திருந்தால் எங்களுக்கு குடிப்பதற்கு நீர் கிடைத்திருக்காது எந்த மாற்றமும் அடையாத வாயுவாக மாறி, எங்களுடைய பூமி வியாழக்கிரகம் போல் வாயுக்களினால் நிரம்பியிருக்கும். நீரின் பிணைப்பை சற்று வளைத்து அந்த நீருக்கு இரண்டு துருவங்களை வைத்து இந்த பூமியை நீரினால் நிரப்பியிருக்கின்றார்.

காலநிலைக்கு ஏற்றாப்போல் பனிக்கரடிகளை மட்டுமின்றி மனிதனை கூட பரப்பிரமம் உருவாக்கி வைத்திருக்கின்றது. உயரமான மலைபிரதேசங்களில் உயரமான மனிதர்களை விட குள்ளமான மனிதர்கள் தங்களை தக்கவைத்துக்கொள்கின்ற உடல் திறன் உள்ளவர்கள். அதிகமாக குளிர் காற்று நாசிச்துவாரம் வழியாக செல்லாமல் தடுப்பதற்கு மூக்கை நசித்து சப்பையாகவும் குளிரினால் கண்கள் பாதிக்காமல் இருக்க தோலினால் இழுத்து மூடிய சிறிய கண்களையும் வைத்து ஒரு மனித இனத்தை படைத்திருக்கின்றது.

கடலோர மாவட்டங்களில் வாழப் பழகிய ஒருவரை இமாலய மலை பிரதேசத்தில் எல்லை காவல் பணியில் ஈடுபட்டால் இரண்டு வருடங்களுக்கு மேல் அவரால் தாக்குபிடிக்க முடியாது. நுரையீரல் பாதிப்பு அதனை தொடர்ந்து இதயமும் பாதிப்புக்கு உள்ளாகும். இந்த விடையத்தில் சீனர்கள் இமாலய பனி பிரதேசத்தில் வாழத்தகுதியுள்ளவர்கள். 

உயர நோய், உயரமான மலை,குளிர் பிரதேசங்களில்  வாழ்பவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்கள்.

- மூளை எடிமா(மூளை வீக்கம்)

- விழித்திரை இரத்தப்போக்கு,

- சிவந்த முக வீக்கம்.

- தொண்டை வலி.

 

- நுரையீரல் வீக்கம் (எடிமா)

- நுரையீரல் தக்கையடைப்பு.

- நுரையீரல் அழற்சி

- மூச்சுக்குழாய் அழற்சி.

 

- நீரிழப்பு, உலர்ந்த சருமம்.

- நீர்/திரவ பற்றாக்குறை.

 

- மாதவிடாய் அசௌகரியம்.

-கருத்தரித்தல் கோளாறு. (பெரும்பாலான பெண்களுக்கு இரண்டு/ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை  மாதவிடாய் சுழற்சி ஏற்படுகின்றது)

 

- மோசமான காயம்/ புண்களை குணப்படுத்துதல்.( அவ்வளவு சீக்கிரத்தில் காயங்கள் குணமாகாது, உயரமான இடத்தில் வாழ்பவர்கள் கடற்கரையில் நடந்தாலே போதும் அவர்களின் காயங்கள், சர்க்கரை நோய் புண்கள் சீக்கிரத்தில் குணமடையும்)

 

- கால் / கணுக்கால் வீக்கம்.

- குளிர்ந்த கால், பாதங்கள்.


கண்டு கொள்ளாமல் விடப்படும் அடிக்கடி வந்து போகும் நோய்க்குறிகள்;.

தலைவலி, தலைச்சுற்றல், சோர்வு, தூக்கமின்மை, மூச்சுத் திணறல், அழுத்த உணர்வு, படபட இதயத் துடிப்பு, பசியின்மை, வாந்தி, பலவீனமான தசைகள். தசை இழுப்பு/பிடிப்பு, இரவில் கால் உளைவு..


வாசோஜெனிக்: மூளை எடிமா, மூளை வீக்கம் காரணமாக இடைச்செல்லுலார் இடத்தில் திரவம் குவிப்பு,


சைட்டோடாக்சிசிட்டி: திசுக்களை சேதப்படுத்தும் சில இரசாயன பொருட்களின் திறன் ஆகும். நோயெதிர்ப்பு எதிர்வினையின் போது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செல்களால், T-செல்கள், இயற்கை கொலையாளி செல்கள், மேக்ரோபேஜ்களினால் இந்த சேதம் ஏற்படுகின்றது.


பெருமூளை எடிமா என்பது மூளையின் அளவு மற்றும் வெவ்வேறு தோற்றங்களின் அழுத்தத்தின் அதிகரிப்பு ஆகியவற்றின் விளைவாக மூளையின் வீக்கம் (எடிமா) ஆகும். மிக மோசமான நிலையில், இது பெருமூளை கோமா, மாரடைப்பு மற்றும் மூளை மரணத்திற்கு வழிவகுக்கும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக