ஞாயிறு, 28 நவம்பர், 2021

உப்புக்கரைசல் தெரப்பி (சமையல் உப்பு NaCl - 0,9%, சுருள் சிரை நாளங்கள்(வெரிகோஸ்): உங்கள் கால்களிலுள்ள சிரை நாளங்கள் சுருள் சுருளாக வீங்கி பருத்து கடுமையான வலியை ஏற்படுத்துகின்றது. இதற்கான ஒரு சிகிச்சை முறைதான் உப்புக்கரைசல் தெரப்பி.

ஐசோடன் (1.3% எக்டோயின், கடல் உப்பு, நீர்) : சுவாச நோய்களுக்கான ஹைபர்டோனிக் உப்பு கரைசல் சிகிச்சை பயன்படுத்தப்படுகின்றது. எக்டோயின் மற்றும் கடல் உப்பு கொண்ட ஐசோடோனிக் உப்பு கரைசல் காற்றுப்பாதைகளை இயற்கையான முறையில் ஈரப்பதம் மற்றும் நீரின் அடுக்கை உருவாக்கி பாதுகாக்கின்றது. இது சளி சவ்வை ஒரு பாதுகாப்பு அரணாக அமைத்து காற்றுப்பாதை உலர்வதை தடுக்கின்றது.

வைரஸ், பாக்டீரியா, நோய்க்கிருமிகள், ஒவ்வாமை அல்லது மாசு, வறண்ட காற்றின் வெளிப்பாடு அதிகரிக்கும் காலங்களில் வரும் சுவாச நோய்களை தடுப்பதற்கு இந்த சிகிச்சையானது உதவுகின்றது.

எக்டோயின் எவ்வாறு, எதில்லிருந்து பெறப்படுகின்றது: எக்டோயின் இயற்கை செயலில் உள்ள ஒரு மூலப்பொருள் இது தீவிர சூழல்களில் வாழுகின்ற நுண்ணுயிரிகளில் இருந்து பெறப்படுகின்றது.

எடுத்துக்காட்டாக: கீசர்கள், கடும் உப்பு ஏரிகள் கடுமையான குளிர் ஆர்க்டிக்கின் பனிப்பகுதியிலிருந்து பெறப்படுகின்றது. நுண்ணுயிரிகளில் உருவாகும் எக்டோயின் அங்கு நிலவும் தீவிர சுற்றுச்சூழல் காரணிகளிலிருந்து அவற்றைப் பாதுகாப்பதற்காக உற்பத்தி செய்யப்படுகின்றது.

எக்டோயின் என்ற இயற்கையான வேதிப் பொருள் நாள்பட்ட நிமோனியா/ நாள்பட்ட அடைப்புக்குரிய நுரையீரல் நோய் COPD க்கு எதிரான செயல்திறனை கொண்டது. இந்த சிகிச்சை முறை கோவிட்-19 எதிராகவும் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது: 80 களில் எக்டோயின் எகிப்திய சஹாராவின் உப்புப் பாலைவனத்தில் வாழ்கின்ற உயிரினங்கள் எப்படி இந்த கடுமையான சுடு உப்பு நீரில் வாழ்கின்றன,  ஏன் இங்கு வாழ்கின்ற உயிரினங்களால் மட்டுமே சாத்தியமாக இருக்கின்ற ஆய்வுகளில் எக்டோயின் என்ற வேதிப்பொருள் கண்டறியப்பட்டது. அவைகள் தங்களை சுற்றி ஒரு  உப்பு நீர் காப்பு படலத்தை (எக்டோயின்) உருவாக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

எக்டோயின் நாசி ஸ்ப்ரே,சரும கிரீம் : எக்டோயின் அல்லது 2-மெத்தில்-1,4,5,6-டெட்ராஹைட்ரோபைரிமிடின்-4-கார்பாக்சிலிக் அமிலம் (C₆H₁₀N₂O₂ என்பது தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய ஒரு வெள்ளை, படிக தூள் ஆகும். இது கடுமையா உப்பு நீர் நிலைகளில் வாழும் ஹாலோபிலிக் ஒற்றை உயிரணுக்கள்/பாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படும் ஒரு இயற்கை பொருள்.

அதிக அல்லது குறைந்த வெப்பநிலை, அதிக உப்பு செறிவு, நீரிழப்பு மற்றும் புற ஊதா கதிர்வீச்சு போன்ற தீவிர சுற்றுச்சூழல் காரணிகளுக்கு எதிராக அவை தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உற்பத்தி செய்கின்றது .

அதை அறுவடை செய்து மனிதன் தன் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றான். இது எக்டோயின் நாசி ஸ்ப்ரே,கண் சொட்டு மருந்து மற்றும் சரும கிரீம் ஒப்பனை பொருட்களில்  சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றது. கடுமையான குளிர்காலம்/ புற ஊதா கதிர்வீச்சு உள்ள கோடை  மற்றும் தொற்றுநோய் காலங்களில் உலர்ந்து காய்ந்த சருமம் நாசி காற்றுவழிபாதையை பாதுகாப்பதற்கு பயன்படுத்தலாம்

எக்டோயின் சிகிச்சை: தோல் நோய்கள் மற்றும் சளி சவ்வுகளின் எரிச்சல்களான ஒவ்வாமை, மாசு, காது கால்வாயின் வீக்கம் அல்லது சுவாச நோய்கள் போன்றவற்றின் அறிகுறி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றது. கூடுதலாக, மூக்கு மற்றும் கண் சொட்டு மருந்துகள் உலர்ந்த மூக்கு மற்றும் கண்களின் அறிகுறிகளைப் போக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றது.

எக்ஸ்ட்ரீமோலைட் குழுவிலிருந்து வரும் இயற்கைப் பொருள் எக்டோயின் நாள்பட்ட நிமோனியா, COPD மற்றும் கோவிட்- 19 க்கு எதிரான  சிகிச்சையில் .நேர்மறையான விளைவுகளை கொண்டுள்ளது.




வெள்ளி, 26 நவம்பர், 2021

வளர்சிதை மாற்றம்/கோளாறு என்றால் என்ன: (மெட்டபாலிசம்) பண்டைய கிரேக்க லத்தீன் மொழியிலுள்ள பொதுவாக ஜீரணத்தை குறிக்கும் ஒரு சொல், வளர்சிதை மாற்றம் என்பது உயிரினங்களின் உடலில் உள்ள பொருட்களின் அத்துனை இரசாயன மாற்றங்களையும் விவரிக்கப் பயன்படும் சொல்,

அதாவது உணவு செரிமானத்தின் இரண்டாம் நிலையை குறிக்கின்றது. உணவு ஜீரணமாகி உறிஞ்சப்படும் சர்க்கரை கொழுப்பு, புரதம், அமினோஅமிலங்கள் விற்றமின்கள் கனிமசத்துக்களை அடுத்த கட்ட வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது.

உதாரணமாக உணவை இடைநிலை மற்றும் இறுதிப் பொருட்களாக மாற்றுவது. இந்த உயிர்வேதியியல் செயல்முறைகள் உருவாக்க, உடைக்க மற்றும் மாற்றுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன

எடுத்துக்காட்டாக: உணவின்மூலம் உடைக்கப்படும் கார்போஹைட்ரேட் சர்க்கரையாக(குளுக்கோசுCH₁₂O₆) இரத்தத்தில் உறுஞ்சப்பட்டு, ஹார்மோன் இன்சுலின் உதவியுடன் வளர்ச்சி கட்டுமானத்தில் பயன்படுத்துவது.

ஒரு கட்டிடம் கட்டுவதற்கு தேவையான கல் மண், சிமென்ட் தண்ணீர் இருந்தும் அதை கலந்து கட்டுவதற்கு ஒரு கட்டிடபணிப்பாளர் தேவைப்படுவது போல் இரத்தத்தில் உறுஞ்சப்பட்ட கட்டுமான பொருட்களை அடுத்த கட்ட வளர்ச்சி பணிகளில் ஈடுபடவைப்பதற்கு வளர்ச்சி ஹார்மோன்கள் அவசியமானது இதில் ஏற்படும் கோளாறுதான் வளர்சிதைமாற்ற கோளாறு.

செரிமானம் என்பது;  வாய் வழியாக வழங்கப்படும் உணவை அரைத்து குழம்பாக்கிஉடல் பயன்படுத்தக்கூடிய கட்டுமானத் தொகுதிகளாக மாற்றும் செயல்முறைக்கு பெயர் ஜீரணம்/செரிமானம்.



ஞாயிறு, 21 நவம்பர், 2021

Heart attack first aid

இதய தமனிகள் (கரோனரி நாளங்கள்) இதய தமனிகள் பிளேக் அடைப்பு காரணமாக சுருக்கமடைந்து இதயத்திற்கு தேவையான இரத்தம் தடைப்படுதல். இதன் நிமித்தம் ஏற்படும் மாரடைப்புக்கள் தான் இன்று அதிகமாக நடக்கின்றது. இதற்கு கொழுப்பும் ஒரு காரணியே தவிர, முழுக்க முழுக்க அதுதான் காரணம் கிடையாது.

பிளேக்(Plaque) என்பது: பல காரணிகளினால் ஏற்படும் ஒரு படிவு உயிருள்ள பாக்டீரியாக்கள், இறந்த செல்கள் மற்றும் மீதமுள்ள கால்சியம் (எலும்புகரைதல்) சுண்ணாம்பு, கொழுப்பு, அழுக்கு மற்றும் உப்பு படிகங்கள், கெட்டிப்பட்டு திரைந்த புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், பாஸ்பேட்

மற்றும் பல நுண்ணுயிரிகளை கொண்டுள்ள சிக்கலான அடுக்குகளால் கட்டமைக்கப்பட்ட ஒரு ஒட்டும் பசையிலானொரு வெண்மையான பூச்சு. இதை இன்னும் சுருக்கமாக சொன்னால் கெத்தில், நீர் கொதிகலனின் படியும் ஒரு சுண்ணாம்பு சாந்துக்கு ஒப்பானது.

இது நபருக்கு நபர் மாறுபட்ட கட்டுமான பொருள்களை கொண்ட அடுக்கு படிவுகளாக இருக்கலாம் எடுத்துக்காட்டாக ஒரு சிலருக்கு சுண்ணாம்பு படிவுகளாக இருக்கலாம் மற்றும் சிலருக்கு கொழுப்பு, இறந்த திசுக்கள் அல்லது உயிருள்ள பாக்டீரியாக்களின் அடைப்பாக கூட இருக்கலாம்.

இது நீண்டகாலமாக ஒருவரின் இதய தமனியில் பிளேக் தேக்கமடைந்து இறுகிப்போன படிவாக இருந்தால் அதை மாத்திரைகள் கொண்டு உடைப்பது கடினம். மிகவும் நெருக்கமான ஒரு உதாரணம் சொல்வதாயின் கிட்டத்தட்ட பல் ஈறுகளில் படியும் சுண்ணாம்பு படிவுகள் போலத்தான் இதய தமனிகளிலும் பிளேக் படிகின்றது.

அதற்காக செய்யப்படும் சிகிச்சையானது, இறுகி சுருக்கமடைந்த தமனியை விரிய வைக்கும் “ஸ்டென்ட்“ பொருத்தும் சிகிச்சை கூட கடினமானதாக இருக்கும் அளவிற்கு இறுகிப்போன ஒரு சுண்ணாம்பு படிவாக இந்த பிளேக் இருக்கும். இது திடீரென்று ஏற்படுவது கிடையாது நீண்டகாலமாக கொஞ்சம் கொஞ்சமாக சேருகின்ற ஒரு படிவு இதை முன்கூட்டியே அவதானித்து சிகிச்சை அளிக்க முடியும்.

பெருந்தமனி தடிப்பு: ஒருவர் ஆரோக்கியமாக வாழும் காலத்தில் சிவப்பு இரத்த அணுக்கள், வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் பிற பொருட்கள் ஊட்டசத்து, நுண்ணுயிரிகள் கொழுப்புகளை சுமந்து தங்கு தடையின்றி இரத்தம் இதயம் உட்பட உடல் முழுவதும் பாய்கின்றது.

ஆரோக்கியமான நபருக்கு, தமனி சுவர்கள் மென்மையாகவும் சீரான தடிமனாகவும் சுருங்கி விரியும் தன்மை உள்ளதாகவும் இருக்கும். இது காலப்போக்கில், தொப்பை, உடற்பருமன் மற்றும் முதிர்வயது காரணமாக அதிக அளவு கொலஸ்ட்ரால், பிளேக் எனப்படும் அடைப்பை உருவாக்க வழிவகுக்கும்.

கொலஸ்ட்ரால் (கொழுப்பை) விட ஆபத்தானது இந்த சுண்ணாம்பு பிளேக், கொழுப்பு ஏதாவது ஒரு காலகட்டத்தில் கரைந்து போகும் இந்த பிளேக் அவ்வளவு சீக்கிரத்தில் கரைந்து போகாது.

இதய தமனிகளில் பிளேக் கட்டமைக்கப்படுவதால் கடினமாகி, தமனி குறுகலாகவும் நெகிழ்வுத்தன்மை குறைவாகவும் இருக்கும், இதை மருத்துவத்தில் அதிரோஸ்கிளிரோசிஸ் எனப்படும் நிலை அதாவது பெருந்தமனி தடிப்பு என்று அழைக்கப்படுகின்றது.

கரோனரி தமனிகளில் பெருந்தமனி தடித்து அழற்சி அது சுருங்கி விரியும் தன்மையை இழந்து போதல் இதை கரோனரி தமனி நோய், சுருக்கமாக மருத்துவத்தில் CHD( Coronary Heart Disease) என்று அழைக்கப்படுகின்றது.

இதன் நிமித்தம் இரத்த ஓட்டம் கடுமையாக குறுக்கிடப்பட்டு மாரடைப்பு (MI) ஏற்படலாம். கரோனரி தமனி 70 சதவீதத்திற்கு மேல் அடைக்கப்பட்டால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம். பிளேக் கரோனரி தமனியை முற்றிலுமாகத் தடுத்திருந்தால், ஆபத்து 100 சதவீதத்திற்கு அருகில் இருக்கின்றதை அறிவுறுத்துகின்றது.

இந்த காலகட்டத்தில் இரத்த ஓட்டம் தடைப்பட்டு, இரத்த சிவப்பணுக்கள், குருதிசிறுதட்டுக்கள் ஓரிடத்தில் குவிந்து இரத்த உறைவு உருவாவதன் மூலம் CHD, MI இன் அபாயத்தையும் அதிகரிக்கலாம். (MI என்பது சுருக்கமாக மருத்துவத்தில் மாரடைப்பு ஆபத்தை குறிக்கும் ஒரு குறியீடு)

பெரும்பாலும், பிளேக் உருவான இடத்தில் ஒரு விரிசல் தோன்றும். இது நிகழும்போது, ​​அந்த இடத்தில் இரத்தம் தடிமன் அடைந்து இரத்தம் உறைதல் அல்லது த்ரோம்பஸ் எனப்படும் இரத்த கட்டி இரத்த உறைவு அதனை தொடர்ந்து ஒரு நெரிசல் உருவாகலாம், இது இரத்த ஓட்டத்தை முற்றிலுமாக நிறுத்தும் அளவுக்கு பெரியதாகிவிடும்.

இதய தமனி சேதத்தின் அளவு, அடைப்பு எவ்வளவு கடுமையானது, அது எங்கு ஏற்பட்டது அதனுடைய நிலைப்பாட்டை புரிந்து மாரடைப்புக்கு எவ்வளவு விரைவாக சிகிச்சையளிக்கப்பட்டது என்பதைப் பொறுத்து ஒரு நோயாளி காப்பாற்றப்படுகின்றார்.

அதிர்ஷ்டவசமாக, பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியைத் தடுக்கவும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கவும் இரத்தம் தடிமன் அடைவதை தடுக்கவும் பல வழிகள் உள்ளன ஒரு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் நீங்கள் அதை பயன்படுத்தலாம்.

மன்னிக்கவும், எங்கள் மருத்துவமனையில் நல்ல வசதிகள் இல்லை என்று சொல்வது 60 களில் சொன்னால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று, இந்த 22ம் நூற்றான்டில் சொன்னால் அதை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளமுடியாது.

ஒரு இணையதள வசதியே உங்கள் கிராமத்து மருத்துவமனையை நகரத்திலுள்ள மருத்துவமனைக்கு இணையாக மாற்றியமைத்து தரும் அவ்வளவு வசதிகளை இணையதளம் உங்களுக்கு வழங்குகின்றது.

வீட்டில் இருந்தபடியே உங்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கும் பல மருத்துவ இணையதளங்கள் உள்ளது, தேவைப்பட்டால் அமெரிக்கா மருத்துவமனைகள் கூட உங்களுக்கு ஆலோசனை வழங்க தயாராக இருக்கின்றார்கள்.

இத்துடன் கைக்கு அடக்கமான, எடுத்துச்செல்லவசதியாக பல மருத்துவ உபகரணங்கள், அதுவும் உங்களால் வாங்கும் அளவிற்கு குறைந்த விலையில் மருத்துவசந்தையில் கொட்டிக்கிடக்கின்றது வாங்கி பயன்படுத்துங்கள்.

உதாரணத்திற்கு ஒன்று இரண்டு நவீன மருத்துவ சாதனங்களை படத்துடன் சொல்கின்றேன்.

1)அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், வயர்லெஸ் ஸ்கேனர் உங்கள் மொபைல் போனில் சிறந்த அல்ட்ராசவுண்ட் நேரடி இமேஜிங்/படத்தை பார்க்க முடியும்.

2)எடுத்துச்செல்ல வசதியான கையடக்க மொபைல் தொழில்முறை EKG உபகரணங்கள். இதனுடன் முதலுதவி பெட்டி, மாரடைப்பு முதலுதவி(AED), இரத்த அழுத்த மானிட்டர்கள், விரல் ஒட்சிசன் மீட்டர்.இவைகளை பயன்படுத்தும் முறை, முடிவுகளுக்கான விளக்கம் பரிந்துரை அந்த நிறுவனங்களே உங்களுக்கு வழங்குகின்றது.

தானியங்கி வெளிப்புற டிஃபிபிரிலேட்டர்கள் (AED): இந்த சிறிய சாதனத்திலிருக்கும் ஒரு பொத்தானைத் தொட்டால் உடனடியாக வேலை செய்யும். இந்த சாதனத்தின் உதவியுடன், உடனடியாக மார்பு அழுத்தங்கள் இதயத் தடுப்பு உள்ளவர்களை வெற்றிகரமாக உயிர்ப்பிக்க முடியும்.

அவசர காலங்களில் உயிர் காக்கும் பயன்பாட்டிற்காக மைய புள்ளிகளில் அனைவருக்கும் கிடைக்கும்.

ஸ்மார்ட்போன் மாரடைப்பைக் கண்டறியும் சாதனம்: ஒரு ECG கேபிள் மற்றும் ஒரு செயலி மூலம், இதய நோயாளிகள் எதிர்காலத்தில் தங்கள் நிலையைச் சரிபார்த்துக் கொள்ள முடியும். அளவீடு விரைவாகவும். ஸ்டார்ட்-அப் சாதனம் உடனடியாக நடவடிக்கைக்கான பரிந்துரையையும் வழங்குகின்றது. நன்றி

மாரடைப்பு முதலுதவி

- உடனடியாக அவசர அழைப்பு.

- பாதிக்கப்பட்டவரை நிமிர்ந்த நிலையில் இருக்கவைப்பது.

- இறுக்கமில்லாமல் மேலாடையை  தளர்த்தவும்.

- சுத்தமான காற்று கிடைக்கும்படி பார்க்கவும்.

- அவரை அமைதிப்படுத்துவது.

- அவரின் சுகாதார நிலை அறிதல்.

- பார்வையாளரில் யாராவது ஒரு அனுபவமுள்ளவர் இருந்தால் அவரை உதவிக்கு அழைப்பது.

 




வெள்ளி, 19 நவம்பர், 2021

முடுக்கி விட்ட மரணத்தின் கடிகாரம் 11:59 கொரோனாவின் கால்தடங்கள்: உங்கள் பள்ளியில் கொரோனா வைரஸைப் பற்றி ஒரு கட்டுரை எழுதச்சொன்னால் எப்படி, எதிலிருந்து தொடங்குவீர்கள் இதை ஒரு முன்னோட்டமாக வைத்து நீங்கள் அறிந்தவை தெரிந்தவை சேகரித்த தகவல்கள்,

உங்கள் சமூகத்தில் உங்கள் கண் காதுகளுக்கு எட்டிய விடையங்கள், அரசு, மக்கள், எதிர்ப்பாளர்கள், எதிர்க்கருத்து சிந்தனையாளர்கள், சமூகவலைத்தளத்தின் விவாதங்கள் என்ன சொல்கின்றது, உங்கள் தனிப்பட்ட கருத்துகளை தொகுத்து எழுதுங்கள்.

கொரோனா வைரஸ் ( nCoV-19) வினோதமான ஒரு நாவல் அதை யாரும் படிக்காமல் இருக்கமுடியாது, படித்து முடித்து அலுமாரியில் வைத்தாலும் திரும்பவும் ஒரு கதையை சொல்லி திறக்கவைக்கின்றது, இது 2019 டிசம்பரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட பெரிய கொரோனா வைரஸ் குடும்பத்தின் புதிய வைரஸாகும். இதனுடைய பிறப்பிடம் பூர்வீகம் சீனா/ வௌவால்(.)

பிப்ரவரி 11, 2020 முதல் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட இந்த வைரஸுக்கு புதிய பெயர் SARS-CoV-2 இது இன்று ஆல்பா, டெல்டா என்று சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாறுபட்ட முகங்களுடன் சுற்றித்திரிகின்றது.

இதில் டெல்டா போன்ற ஒன்று இரண்டு வைரஸ்கள் தான் விகரமடைந்து எங்களை மிரட்டுகின்றது மற்றவையெல்லாம் பாதிப்பு இல்லாத சாதாரண குளிர் காய்ச்சல், ஜலதோஷத்தை ஏற்படுத்தும் இன்புளுவன்சா வைரஸ்க்கு இணையானது.

இருப்பினும் தீவிர நோயாளிகள், வயதானவர்கள், ஊட்டசத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் பலம் இழந்த நோய் எதிர்ப்பு உள்ளவர்களுக்கு பாதிப்பு இல்லாத கொரோனா வைரஸ்களும் கடுமையான சுவாச நோய் நிமோனியாவை ஏற்படுத்தும்.

கோவிட்-19 மற்றும் சார்ஸ்-கோவி-2 க்கும் இடையில் என்ன வித்தியாசம் கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு சொற்கள் சில நேரங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன இதற்கிடையில் பெயர்கள் மாறியிருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

கடுமையான சுவாச நோய்க்குறியின் Sars-CoV-1 இல் இருந்து திரிந்து சார்ஸ்-கோவி-2 ஆல் ஏற்படும் நுரையீரல் நோயானது கொரோனா வைரஸ் நோய் சுருக்கமாக கோவிட்-19 என்று அழைக்கப்படுகின்றது,

2002/2003 நவம்பர் 2002 இல் தொடங்கிய SARS-CoV ஆல் ஏற்படுத்திய கடுமையான சுவாச நோய் பாண்டமிக், சர்வதேச பரவலாக மாற முடியவில்லை அதற்கு காரணம், சார்ஸ்-கோவி-1தீவிர கடுமையான சுவாச நோய்க்குறியை தூண்டுகின்றது இருப்பினும் அது நுரையீரல் அடித்திசுக்களில் பரவியதால் அதனால் தீவிரமாக வெளி உலகில் பரவமுடியாமல் போனது இதனால் அது, அதனது அத்தியாசத்தை மூடிவிட்டது.

சார்ஸ்-கோவி அதனது அத்தியாசத்தை சீனா/கோவிட்-19 என்ற தலைப்பில் மீண்டும் தொடங்கின்றது. கொரோனா வைரஸ் (SARS-CoV-2) மரணத்தின் கடிகாரம் அது 2019இல் முடுக்கி விடப்பட்டிருக்கின்றது.

(SARS-CoV-2) சார்ஸ்-கோவி-2 இதனுடைய விரிவாக்கம் கடுமையான சுவாச நோய்க்குறி கொரோனா வைரஸ் வகை-2 என்பது ஒரு புதிய பீட்டா கொரோனா வைரஸாகும், இது 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் COVID-19 இன் காரணமாக அடையாளம் காணப்பட்டது. பீட்டா கொரோனா வைரஸ்களில் SARS-CoV மற்றும் MERS-CoV ஆகியவையும் அடங்கும். பூர்வீக கொரோனா வைரஸ்கள் நீண்ட காலமாக பாலூட்டிகள் மற்றும் பறவைகள் மத்தியில் பரவலாக உள்ள ஒரு வைரஸ்.

பூர்வீக வெளவால்கள் SARS-CoV-2 ஐ எடுத்துச் செல்வதில்லை கோவிட்-19 தொற்று ஏற்படும் அபாயமும் அவைகளிடத்தில் இருந்ததில்லை. அதாவது அவைகளிடம் SARS-CoV என்ற வைரஸ் வகையே இருந்ததில்லை, பூர்வீக வெளவால்களில் பாதிப்பில்லாத பீட்டா கொரோனா வைரஸ் மட்டுமே இருந்தது என்பது வெளவால்களை ஆய்வு செய்தவர்களின் கருத்து.

பொதுவாக வௌவால்கள் மனிதர்களைத் தவிர்க்கின்றன அவைகள் தங்கள் உணவுத்தேவையை பூர்த்தி செய்வதற்கு இரவு நேரத்தில் மனிதர்கள் வாழும் ஊருக்குள்ளே நுழைகின்றது, மனிதர்களின் நேரடி தொடர்பு இல்லாமல் வௌவால்களால் ஏற்படும் நோய் தொற்று கிட்டத்தட்ட சாத்தியமற்றது. அதாவது அவைகளிடம் ஒட்டியிருந்த பாதிப்பு இல்லாத வைரஸ்கள் தொற்றுக்கூட சாத்தியமற்றது.

ஆனால் அவைகளை உணவு, ஆய்வுகளின் தேவை கருதி பிடிக்கும்போது, வெளவால்கள் மற்றும் காட்டு விலங்குகள் மனிதனின் நேரடித் தொடர்பில் அவை பயத்தால் கடிக்கலாம், அதனுடைய நச்சு பற்கள், நகங்கள் வீட்டு/காட்டு விலங்குகளைப் போலவே நோய்களை பரப்புகின்றன என்பது நீண்டகாலமாக அறியப்பட்ட ஒன்று.

கொரோனா வைரஸ்கள், சளி முதல் ஆபத்தான நிமோனியா வரை பல்வேறு தீவிரத்தன்மை கொண்ட சுவாச நோய்களை ஏற்படுத்தும் ஒற்றைக்கால் RNA வைரஸாகும். திரும்பவும் முதலில் இருந்தா! கொரோனா வைரஸ்கள் பற்றி ஒரு தடவையல்ல நூறுதடவை படித்தாலும் புரியாது அதுவொரு மர்மநாவல்.

1930 களில் முதன்முதலில் வீட்டுக் கோழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஏராளமான கொரோனா வைரஸ்கள் விலங்குகளின் சுவாசக்குழாய், இரைப்பை குடல், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டலத்தில் நோய்களை ஏற்படுத்துகின்றன. இதில் 7 கொரோனா வைரஸ்கள் மட்டுமே மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்துவதாக அன்று அறியப்பட்டிருக்கின்றது.

7 கொரோனா வைரஸ்களில் நான்கு வைரஸ்கள் மட்டுமே சளி அறிகுறிகளுக்கு மிகவும் பொதுவான காரணியாகும். கொரோனா வைரஸ்கள் 229E, OC43, NL63 மற்றும் HKU1 ஆகியவை ஜலதோஷத்தில் 15 முதல் 30% வரை காரணமாகின்றன.

இந்த வைரஸ்கள் காரணமாக மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா உள்ளிட்ட கடுமையான கீழ் சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள் அரிதாகவே ஏற்படலாம், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கும் அதிகளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தாது.

7 கொரோனா வைரஸ்களில் மூன்று மற்ற கொரோனா வைரஸ்களை விட மனிதர்களுக்கு மிகவும் கடுமையான மற்றும் சில சமயங்களில் ஆபத்தான சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன மற்றும் 21 ஆம் நூற்றாண்டில் அபாயகரமான நிமோனியாவின் பெரிய வெடிப்புகளை ஏற்படுத்தியது இது இன்றைய நிலவரம்.

(SARS-CoV-2) சார்ஸ்-கோவி-2 என்பது கொரோனா வைரஸ் நோய் 2019 (COVID-19) க்குக் காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது, இது 2019 இன் பிற்பகுதியில் சீனாவின் வுஹானில் தொடங்கி உலகம் முழுவதும் பரவியது. MERS-CoV 2012 இல் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறியின் (MERS) காரணம் என கண்டறியப்பட்டது.

2002 இன் பிற்பகுதியில் சீனாவில் தொடங்கிய கடுமையான சுவாச நோய்க்குறியின் (SARS) வெடிப்புக்கான காரணம் SARS-CoV என அடையாளம் காணப்பட்டது.

கடுமையான சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் இந்த கொரோனா வைரஸ்கள், பாதிக்கப்பட்ட விலங்குகளில் ஏற்படும் ஜூனோடிக் நோய்க்கிருமிகள் மற்றும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகின்றன. SARS-CoV-2 குறிப்பிடத்தக்க நபருக்கு நபர் பரவுவதைக் காட்டுகின்றது.

இந்த வைரஸ் சார்ஸ்-கோவி-2 என்று அழைக்கப்படுகின்றது. கோவிட்-19 என்பது அது மரபணு பிறழ்வு அடைந்து பரவிய காலம் புதிய பிறழ்வு 2020 அக்டோபர் மாதம் B.1.617 இந்திய பிறழ்வு கோவி-2டெல்டா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தும் வகையில் பெருக்கம் அடைந்து கொண்டிருக்கின்றது.

ஐரோப்பா/ஜெர்மனியில் இந்த டெல்டா வைரஸ்தான் நான்காம் அலையை கிளறிவிட்டிருக்கின்றது இவைகள் அத்துனையும் ஏற்படுத்தும் நோய்க்காரணி, நோய்க்குறி நுரையீரல் நோய்.

கொரோனா வைரஸ் போல் இந்த கட்டுரையும் தொடங்கி இடத்தையே மீண்டும் மீண்டும் தொட்டு தொட்டு தொடர்கின்றது அதற்கு காரணம் 100 விழுக்காடு இன்னும் சார்ஸ்-கோவி-2 கொரோனா வைரஸை பற்றிய உண்மை தெரியாததுதான். சார்ஸ்-கோவி-2 முதலில் கண்டறியப்பட்டது சீனா/ வுஹானாக இருந்தாலும் அதனுடைய தொடக்கம் எதுவென்று இன்னும் சரியாக தெரியாது.

பூர்வீக கொரோனா வைரஸை பற்றிய தகவல்கள் அத்துனையும் உண்மையானவை, சார்ஸ்-கோவி-2 பற்றிய செய்திதான் தத்தெடுத்த அனுமானமாக இருக்கின்றது. பூர்வீக கொரோனா வைரஸ்கள் இதுவரை காலமும் எந்த மாற்றமும் அடையாமல் கடந்து வந்திருக்கின்றது அது நான்கு தடவைகள் 2002/2003, 2019/2020 அதனது கட்டுமானத்திலிருந்து உடைக்கப்பட்டிருக்கின்றது.

ஒன்று மட்டும் உண்மை, கொரோனா வைரஸ்களைவிட ஆபத்தானது எதுவென்றால் அது பரவிய வேகம். கடலில் பயணம் மேற்கொண்டவர் முதற்கொண்டு விமானத்தில் பறந்தவர், புதிதாக பிறந்த குழந்தை, காடுகளில் வசிப்பவர் வரை சார்ஸ்-கோவி-2 அதி வேகமாக தொட்டிருக்கின்றது.

பூர்வீக கொரோனா வைரஸ்களின் நோய்க்குறியும் நுரையீரல் சார்ந்த நோய்கள்தான். இதுவரை காலமும் இதை தாண்டி வேறு ஏதாவது நோய்க்குறிகளை இந்த வைரஸ்கள் ஏற்படுத்தி இருக்கின்றதா என்றால் இல்லை என்ற பதிலைத்தான் சொல்ல வேண்டும்.

புதிய சார்ஸ்-கோவி-2 வைரஸ்கள் சுவாச நோய்யுடன் இணைந்த வேறு ஏதாவது நோய்க்குறிகளையும் குறிப்பாக இதயம் சிறுநீரகம் சார்ந்த நோய்களையும் ஏற்படுத்தி வருகின்றதா என்று கேட்டால் இதற்கான பதிலையும் எதிர்காலம்தான் சொல்லவேண்டும் இந்த வைரஸ்களின் நீண்டகால பாதிப்புக்கள் இன்னும் பதிவாகவில்லை (…..)

ஒன்றுமட்டும் புரியவில்லை பிறந்த காலம் தொடங்கி தொற்று நோய்களுடன்தான் நாங்கள் வாழ்கின்றோம் அப்போது பரவாத வைரஸ்கள் இப்ப மட்டும் ஏன் இந்த வைரஸ் மட்டும் இவ்வளவு வேகமாக பரவுகின்றது(……) சார்ஸ்-கோவி-2 (கொரோனா வைரஸ் ) பற்றிய செய்திகளுக்கு எவராலும் முற்றுப்புள்ளி வைத்து முடித்துவிட முடியாது

அது அடுத்த தலைமுறையையும் தொடர வைக்கும். தடுப்பூசி போட்டவர்கள் சார்ஸ்-கோவி-2 வைரஸ்களின் தாக்குதலில்லிருந்து தங்களுக்கான ஒரு பாதுகாப்பை கொண்டவர்கள். மற்றும்படி அவர்கள் தொடர்ந்து கொரோனா வைரஸ்களை பரப்பும் நபராகத்தான் இருப்பார்கள் இதனால்தான் அது இவ்வளவு வேகமாக பரவுகின்றது.

மெசஞ்சர்(mRNA) தடுப்பூசி தொழில் நுட்பம்: அற்புதமான ஒரு தொழில் நுட்பம், கப்பல் உடைந்து கடலில் மூழ்கியவன், நீரில் மூழ்கி முத்தை எடுத்து கரை சேர்ந்தது போல் கொரோனா தொற்றிலும் மனிதனுக்கு கிடைத்த ஒரு முத்தாக மெசஞ்சர்(mRNA) தடுப்பூசி தொழில் நுட்பம் கிடைத்திருக்கின்றது.

பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த தொழில்நுட்பம் புற்றுநோய் தடுப்பு ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது, இதை அப்படியே கொரோனாவுக்காக விஞ்ஞானிகள் மடைமாற்றினார்கள்.

பயோன்டெக்/ஜெர்மனி நிறுவனர்களான Özlem Türeci மற்றும் Ugur Sahin ஆகியோர் புற்றுநோய்க்கான மருந்தைத் தேடும் போது, ​​அவர்கள் கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்தனர். மெசஞ்சர்-RNA தடுப்பூசிகள் முதன்முதலில் 2002 மற்றும் 2003 க்கு இடையில் 20 வருடங்கள் மருத்துவ பரிசோதனைகளில் சோதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தடுப்பூசியில் சார்ஸ்-கோவி-2 வைரஸ்களின் எந்த துகள்களும் இல்லை, மாறாக செயற்கையாக தொகுக்கப்பட்ட அதனுடைய மரபணு வடிவம் மட்டுமே அதில் இருக்கின்றது. இது வைரஸின் DNA வரிசையிலிருந்து ஆய்வகத்தில் ஒப்பீட்டளவில் மிக எளிதாகவும் விரைவாகவும் தயாரிக்கலாம். அதாவது வேறு மூலத்திலிருந்து ஆய்வகத்தில் இந்த மெசஞ்சர் RNA வரிசையை தொகுக்கின்றார்கள்.

இது பாதுகாப்பாக லிப்பிட் என்னும் கொழுப்பு உறைக்குள்ளே அடைக்கப்பட்டு மெசஞ்சர் RNA என்று அழைக்கப்படும் வடிவத்தில் உடலுக்குள்ளே செலுத்தப்படுகின்றது.

எது தேவையோ அதை மட்டும் வெட்டி எடுத்து தொகுக்கின்றார்கள். ஒரு உதாரணத்திற்கு மாற்று அறுவைசிகிச்சைக்காக ஒரு மனித இதயம் மட்டும் தேவை என்றால், அதை உருவாக்கும் மரபணு DNA மட்டும் வெட்டி எடுத்து கருமுட்டைக்குள்ளே செலுத்தி வாடைகைத்தாய் கருவறைக்குள்ளே வைத்து வளர வைப்பது. சுருக்கமாக தேவையான உடல் உதிரிப்பாகங்களை மட்டும் உற்பத்தி செய்வது இது சாத்தியமான ஒன்று இருப்பினும் ஆய்வுகள் தடைசெய்யப்பட்டது.

இந்த தூதர் அல்லது வைரஸ் பற்றிய ஒரு செய்தியை RNA ஆன்டிஜெனை ( வைரஸ் முனை புரதம்) உற்பத்தி செய்ய செல்களுக்கு அறிவுறுத்துகின்றது.

ரைபோசோம்கள், புரதங்களின் அமினோ அமில வரிசை பற்றிய தகவலைக் கொண்டிருக்கும் டிஎன்ஏவின் அடிப்படை வரிசையின் படி புரதங்கள் அவற்றின் மீது உற்பத்தி செய்யப்படுகின்றன. அதாவது ரைபோசோம்கள் அனுப்பிய மெசஞ்சர் RNA வரிசை தகவலை வைத்துக்கொண்டு, ஆன்டிஜெனை ( வைரஸ் முனை புரதம்) உற்பத்தி செய்து வெளியிடுகின்றது,

இது சார்ஸ்-கோவி-2 வைரஸ்களின் முனை புரதத்திற்கு இணையானது இந்த அந்நிய உடலுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி, ஆன்டிஉடல்கள் உற்பத்தியாகி எதிர்த்து அழிக்கின்றது அடுத்து விரைந்து வரும் விழுங்கி செல்கள் இறந்த அந்நிய உடல் மற்றும் சண்டை நடந்த இடத்தை துப்பரவு செய்து தடுப்பூசி சம்பந்தப்பட்ட எந்த பொருள்களும் அங்கு இல்லாதவாறு துடைக்கப்படுகின்றது.

இதனுடன் அதை நினைவக B-செல்களிலும் பதிவு செய்தும் வைக்கின்றது உடலின் நோய் எதிர்ப்பில், அதனுடைய நினைவு மட்டும்தான் பதிவாகியிருக்கின்றது. உடலில் தடுப்பூசி சம்பந்தப்பட்ட எந்த பொருளும் தேங்கியிருப்பதில்லை, இத்துடன் தடுப்பூசியின் வேலை முடிகின்றது. இன்னொரு சந்தர்ப்பத்தில் இந்த உருவ அமைப்புடன் ஒரு அந்நியன் நுழைந்தால் அதை தாமதமில்லாமல் தாக்கி அழிக்கின்றது.

மடமைகளை நம்பாதீர்கள், உடலில் மைக்ரோசிப் போன்ற பொருட்கள் இருந்தால் உடனடியாக ஆன்டிஉடல்கள் எதிர்த்து போராடும் இது உங்களுக்கு தீராத காய்ச்சலை ஏற்படுத்தும் உடலில் எந்த அந்நிய பொருள்கள் இருந்தாலும் உடல் அதற்கு எதிர்ப்பை கண்டிப்பாக காட்டும்.

எடுத்துக்காட்டாக: உடல், மாற்று அறுவை சிகிச்சைசெய்த சிறுநீரகத்தையே ஏற்றுக்கொள்வதில்லை காலில் முள்ளு குத்தினால் உடல் அதற்கு எதிர்ப்பை தெரிவிக்க வலியை ஏற்படுத்தி அந்த முள்ளை எடுக்கும் வரைக்கும் உங்களை துங்கவிடாது.

ஒரு சிறிய முள்ளின் ஆர்ப்பு இருந்தாலே உங்களை என்ன பாடுபடுத்துகின்றது இரத்தத்தில் ஏதாவது அந்நிய துகள்கள் இருந்தால் நோய் எதிர்ப்பு சும்மா விட்டுவிடுமா….? உங்களுக்கு தெரியாமல் உங்கள் உடலில் ஒரு ஆணியை கூட செருகி வைக்கமுடியாது, கை கால் உடைந்து டைட்டான் பிளேட் பொருத்தியிருந்தாலும் சுற்றுலா பயணத்தின் போது விமான நிலையத்தில் அது இருப்பதை காட்டிக் கொடுத்துவிடும்.

செல்லப்பிராணிகளுக்கான சிறிய மைக்ரோசிப் என்பது உண்மைதான் ஒரு பூனை அல்லது நாயை அதன் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரை அடையாளப்படுத்த உதவும் குறியீடு சிப்பில் சேமிக்கப்படுகின்றது. உங்கள் வளர்ப்பு விலங்கு ஓடிப்போய் யாராவது கண்டுபிடித்தால், இந்த மைக்ரோசிப்பை படித்து உருமையாளரை கண்டுபிடிக்க உதவும்.

இந்த சிப் செல்லப்பிராணியின் மயிர் தோல் இடையில் பொருத்தப்படுகின்றது இதை வைத்துக்கொண்டு அந்தப்பிராணியை எந்த ஏவல் வேலையையும் செய்விக்க முடியாது அதற்குள்ளே இருப்பது வெறும் குறியீடு (கோட்) மட்டுமே இதுவும் விமான நிலையத்தில் படிக்கப்படுகின்றது.

தென்னாப்பிரிக்கா புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு B.1.1.529 உலக-சுகாதார-அமைப்பு (WHO) கோவிட்-19 கொரோனா வைரஸ்களில் நான்கு கவலைக்குரிய வகைகளை பட்டியலிட்டுள்ளது.

இதை சுருக்கமாக ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா இது கடுமையான சுவாச நோய்க்குறியின் Sars-CoV-1 இல் இருந்து திரிந்து சார்ஸ்-கோவி-2 ஆல் ஏற்படும் நுரையீரல் நோயானது கொரோனா வைரஸ் நோய் சுருக்கமாக கோவிட்-19 என்று அழைக்கப்படுகின்றது,

இதிலிருந்து இன்னும் பல வகையான வைரஸ்கள் திரிந்து கொண்டே செல்கின்றது இன்று நவம்பர் 26, வெள்ளிக்கிழமை காலை 6:00 முதல், தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு B.1.1.529 பற்றி WHO ஆராய்ந்து வருகின்றது. இதனுடைய பாதிப்புக்கள் எவ்வளவு தூரம் இருக்கும் தற்போது நடைமுறையிலுள்ள தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவம், தடுப்பூசி, மருந்து மாத்திரைகள் எதிராக செயல்படும் திறன் உள்ளதா,

இதை பற்றி மருத்துவ நிபுணர்களின் கருத்து: தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மாறுபாட்டிற்கு எதிராக தற்போது கிடைக்கும் கொரோனா தடுப்பூசிகள் குறைவான செயல்திறன் கொண்டவையாக இருக்கும் என்று பிரிட்டிஷ் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் உறுதியாக சொல்கின்றார்கள்.

இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்கள் தரையிறங்க ஐரோப்பா நாடுகள் உட்பட பல நாடுகள் தடை விதித்துவருகின்றன. இதை போல் இன்னும் எத்தனை பிறழ்வுகள் வரப்போகின்றது என்பதை எதிர்காலம்தான் பதில் சொல்லவேண்டும். இது நவம்பர் 26, 2021 கோவிட்-19 பற்றிய ஒரு ஆவண பதிவு

தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் அது உங்களை கடுமையான நுரையீரல் பாதிப்பிலிருந்து 90 விழுக்காடுகள் காப்பாற்றித்தரும். நன்றி

ஆல்பா கொரோனா வைரஸ்

நாய் கொரோனா வைரஸ்

பூனைக்குட்டி கொரோனா வைரஸ்

வௌவால் கொரோனா வைரஸ்(HKU2, HKU8)

விலங்கு சுவாச அழற்சி கோரோனா வைரஸ்

மனித கொரோனா வைரஸ்(229E, NL63)

 

டெல்டா கொரோனா வைரஸ்

புல்புல் பறவை கொரோனா வைரஸ்(HKU11)

த்ரஷ் பறவை கொரோனா வைரஸ்(HKU12)

முனியா பறவை கொரோனா வைரஸ்(HKU13)

பன்றி கொரோனா வைரஸ்(HKU14)

 

பீட்டா கொரோனா வைரஸ்

மனித கொரோனா வைரஸ்(OC43,HKU1)

CoV (SARS-CoV), (MERS-CoV)…….. CoV2(SARS-CoV2)

வௌவால் கொரோனா வைரஸ் HKU4,5,9)

முள்ளம்பன்றி கொரோனா வைரஸ்

பசு மாடு கொரோனா வைரஸ்

நாய் கொரோனா வைரஸ்

குதிரை கொரோனா வைரஸ்

 

காமா கொரோனா வைரஸ்

பெலுகா திமிங்கலம் கொரோனா வைரஸ்(SE1)

கடல்தொற்று மூச்சுக்குழாய் அழற்சி வைரஸ்