ஞாயிறு, 29 ஜனவரி, 2023

Prolonged Coronavirus: Prolonged Covid is a disorder with many faces.

நீண்ட கொரோனா பாதிப்பு: நீண்ட கோவிட் என்பது பல முகங்களைக் கொண்ட ஒரு கோளாறு.  பாதிக்கப்பட்டவர்கள் வெவ்வேறு தீவிரத்தன்மையின் வெவ்வேறு அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிலருக்கு நோய்த்தொற்றின் கடுமையான கட்டத்திற்குப் பிறகும் சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பிறகும் ஒரு சில அறிகுறிகள் இருப்பதாக அவர்கள் விவரிக்கின்றார்கள்.

இந்த அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபட்டவை மற்றும் சில நேரங்களில் மிகவும் தனித்துவமான வேறுபட்டவையாக காணப்படும். அறிவாற்றல் செயலிழப்பு,  மூச்சுத் திணறல், இதய பிரச்சினைகள், வாசனை மற்றும் சுவை  அறிதல் கோளாறுகள், தூக்கமின்மை அல்லது உடல் மன சோர்வு ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.

இது மாறுபட்ட நோய்க்குறிகளை காட்டுகின்றது என்பதை ஆதாரப்படுத்துகின்றது. பொதுவில் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் ஒட்டுண்ணிகள் மற்றும் சார்ஸ்-கோவி-2 போன்ற நோய் தொற்றுகள் நாட்பட்ட நோய்களையும் ஏற்படுத்துவதாக நீண்ட காலமாக  சந்தேகப்பட்டதை நிரூபனமாக்கின்றது..

மேற்கோளாக: ஹான்டாவைரஸ்கள் உலகம் முழுவதும் நிகழ்கின்றன மற்றும் இந்த வைரஸ்கள்பல்வேறு வகையான நோய்களை ஏற்படுத்துகின்றன. நோய்க்கிருமிகள் எலிகள் போன்ற கொறித்துண்ணிகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகின்றன. இதனுடைய நீண்ட கால விளைவுகள் சிறுநீரக செயலிழப்புகளுக்கு காரணியாகின்றது.

கொரோனா வைரஸும் இதுபோன்ற ஏதாவது ஒரு நீண்ட கால விளைவுகளை கொண்டு வருமா என்றால் நரம்பு மண்டலங்களை பாதிப்பதாக அறியப்படுகின்றது.[autoimmune disease சுய-உடல்-தாக்கி நோய்]

மேலும் சேதமடைந்த நுரையீரல் நோயின் கடுமையான போக்கு கொரோனா வைரஸ் தொற்று கோவிட்-19 ஆல் குறிப்பாக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்துமா, சிஓபிடி அல்லது நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் போன்ற நுரையீரல் நோய்கள் உள்ளன.

ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட சுவாச நோயாகும், இது காற்றுப்பாதைகளை சுருக்கி, இருமல் மற்றும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். சிஓபிடி என்பது ஒரு நாள்பட்ட நுரையீரல் நோயாகும், இது மூச்சுத் திணறல் மற்றும் சில நேரங்களில் மூச்சடைப்பு/மூச்சுத் திணறல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றது.

இந்த நோயால், மூச்சுக்குழாய் நாள்பட்ட காலத்திற்கு வீக்கமடைகின்றது, இது நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளை படிப்படியாக அழிக்கின்றது.

நுரையீரல் ஃபைப்ரோஸிஸால் , நுரையீரல் இணைப்பு திசுக்களின் நீண்டகால வீக்கத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அல்வியோலி தழும்புகளுக்கு இடையே உள்ள மென்மையான இணைப்பு திசு. நுரையீரல் விறைத்து, விரிவடைய முடியாதபடி நுரையீரல் செயல்திறனை முடக்குகின்றது.

மேலும் கட்டுப்படுத்தப்பட்ட இதய செயல்திறன் பலவீனமான இதய செயல்திறன் கொண்ட நோயாளிகளும் கோவிட்-19 இன் கடுமையான போக்கிற்கு குறிப்பாக எளிதில் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் ஒரு நிலையான நோயெதிர்ப்பு அமைப்புக்கான வலிமையைக் கொண்டிருக்கவில்லை.

கொரோனா  வைரஸ் தொற்றின் நீண்டகால பாதிப்புகளை மக்கள்  கொஞ்சம் கொஞ்சமாக  உணர/சொல்ல தொடங்கியுள்ளார்கள்.

முன் எச்சரிக்கையாக இரத்த பரிசோதனை மூலம், [தானியக்க ஆன்டி உடல்கள் மற்றும் 20 புரதங்கள் இரத்த அடையாளம்] கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அது நீண்ட கோவிட் நோய்க்குறியாக அச்சுறுத்துகின்றத என்பதை அறிந்து கொள்ள முடியும்.

கொரோனா நாசி தடுப்பு மருந்து : இதுவரை காலமும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் தசைகளுக்குள் செலுத்தப்பட்டு. அவை முதன்மையாக உடலுக்குள் ஒரு பாதுகாப்பை உருவாக்குகின்றன.

சுவாசக் குழாய் வழியாக நமக்குள் நுழைகின்ற சார்ஸ்-கோவ்-2 வைரஸ்களை தடுப்பதற்காக முன்கூட்டியே   அந்த இடத்தில் பலமான ஒரு பாதுகாப்பை ஏற்படுத்தி வைத்திருந்தால் நமது முழு உடலும் பலமான பாதுகாப்பு அரணுக்குள்ளே வந்துவிடும்.

சுவாச வைரஸ் என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ். அதனுடைய முதல் ஆக்கிரமிப்பு நுரையீரல் தான் எனவே, முதலில் பாதுகாக்கப்பட வேண்டியது நமது காற்றுப்பாதைகள்தான்

கொரோனா தடுப்பூசி,சிரிஞ்சிற்கு பதிலாக இப்போது நாசி ஸ்ப்ரே அறிமுகமாகின்றது.

கொரோனாவுக்கு எதிரான நாசி ஸ்ப்ரே தடுப்பு மருந்து இந்தியாவில் சந்தைக்கு வருகின்றது. 2021 ஆம் ஆண்டில் இஸ்ரேலில் ஒரு கொரோனா ஸ்ப்ரே அங்கீகரிக்கப்பட்டது,

இது கொரோனா வைரஸ்கள் உட்பட அனைத்து வைரஸ்களிலும் 99 சதவீதம் வரை கொல்லும் என்று கூறப்படுகின்றது.

இது ஐரோப்பாவிலும் ஆய்வு செய்யப்பட்டு சோதிக்கப்படுகின்றது. ஆராய்ச்சி எவ்வளவு தூரம் உள்ளது மற்றும் தடுப்பு மருந்து பொருட்கள் எவ்வாறு வேலை செய்கின்றன என்ற ஆய்வுகள் நடந்து வருகின்றது.

இதற்கிடையில் இந்தியாவில் முதல் நாசி ஸ்ப்ரே தடுப்பூசி அனுமதிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றது.

பாரத் பயோடெக் இந்தியாவில் ஜனவரி 26 ஆம் தேதி கொரோனாவுக்கு எதிராக நாசி ஸ்ப்ரே தடுப்பூசியை அறிமுகப்படுத்தி இருக்கின்றது.

இது சளி சவ்வு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டு வருவதாகவும், இதனால் தொற்றுக்கு எதிராகப் பாதுகாப்பதாகவும் கூறப்படுகின்றது.

ஐரோப்பாவிலும் சீனாவிலும் கிடைக்கும் கொரோனா நாசி ஸ்ப்ரேகள் வித்தியாசமாக வேலை செய்கின்றன என்று ஆய்வுகள் சொல்கின்றன.

இருப்பினும் லேசான மற்றும்  வீட்டிலேயே சிகிச்சையளிக்ககூடிய  மூக்கு ஒழுகுதல், தொண்டை புண் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்,  தற்போதைய ஓமிக்ரான் மாறுபாட்டுடன் மற்றும் பெரும்பாலான பழைய மாறுபாடுகளுக்கு பதில் அளிக்குமாம் என்று நம்பப்படுகின்றது.

எங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி, தன்னுடைய அமைப்பில், ஒவ்வொரு எதிராளிகளையும் கண்காணித்து விசாரிப்பதற்காக தனித்தனி அதிகாரிகளை நியமித்திருக்கின்றது.  நுரையீரல் பாதிக்கப்படும் போது அவர்கள்தான் அந்த இடத்திற்கு விரைந்து ஓடிவருவார்கள்.

மகரந்தம்/மாசு [ஆஸ்துமா/அலர்ஜி]  மூக்கு, காற்றுப்பாதையை கண்காணித்து விசாரிப்பதற்காக  மாஸ்ட் செல்கள் பணியில் ஈடுபடுகின்றது. 

சிஓபிடி நோயினால் நுரையீரல் பாதிக்கப்படும் போது மேக்ரோபேஜ்கள் பணியில் ஈடுபடுகின்றது.  [புகைத்தல்/மற்றும் காரணிகள்]

கொரோனா நோயினால் நுரையீரல் பாதிக்கப்படும் போது ஒரு பெரிய ராணுவமே  [இம்யூனோகுளோபுலின் IgM, IgA, IgG ] பணியில் ஈடுபடுகின்றது. 

ஒரு நாட்டுக்குள்ளே ராணுவம் புகுந்தால் என்னவாகும், கொரோனா வைரஸ்களுடன் எதிர்த்து போராடும் போது சொந்த திசுக்களையும் சேர்த்து அழிக்கும். வைரஸ்களை விட ஆபத்தானது மிகைப்படைந்த நோய் எதிர்ப்பு சக்தி,

ஒரு முறை கிளர்ச்சி அடைந்தால் அதை தணிப்பது கடினம், அது உங்களை வாழ்நாள் பூராகவும் தொல்லை பண்ணும்.

மேற்கோளாக: ஒவ்வாமை/அலர்ஜி, குணமாக்க முடியாது இருப்பினும் மருந்து மாத்திரைகள் மூலம்  அவ்வப்போது ஏற்படும் அலர்ஜியை தணித்துக் கொள்ளமுடியும் [தானியக்க ஆன்டி உடல்கள் மற்றும் autoimmune disease சுய-உடல்-தாக்கி நோய்] 

கொரோனா தடுப்பூசிக்குப் பிறகு கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் அரிதானவை மற்றும் தடுப்பூசி சேதம், அதற்கான இழப்பீடு அரிதாகவே அங்கீகரிக்கப்படுகின்றது. இருப்பினும் தடுப்பூசியால் பாதிப்புகள் உள்ளன. ஒரு ஊடக அறிக்கையின்படி, கொரோனா தடுப்பூசியின் விளைவாக உடல்நலக் கேடு பாதிப்புகளுக்கு நிதி உதவிக்காக இதுவரை 6,000 விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன

ஐரோப்பா/ஜெர்மனியின் மத்திய மாநிலங்கள் இதுவரை 250 பேருக்கு மேல் இழப்பீடு வழங்க விரும்புகின்றன.

மற்றுமொரு செய்தித்தாள் அறிக்கையின்படி, கொரோனா தடுப்பூசியின் கடுமையான விரும்பத்தகாத பக்க விளைவுக்கான இழப்பீடுக்காக மத்திய மாநிலங்கள் இதுவரை 253 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.  நாடு தழுவிய கணக்கெடுப்பின்படி, ஜெர்மனி/பவேரியா மாநிலங்களின் ஓய்வூதிய அலுவலகங்களில் 61 மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா 38 அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுடன் முன்னணியில் உள்ளது.

ஒரு குறிப்பிட்ட அளவிலான சேதத்திற்கு மேல், மாநிலம் மாதத்திற்கு 164 முதல் 854 யூரோக்கள் வரை வாழ்நாள் முழுவதும் அடிப்படை ஓய்வூதியத்தை வழங்குகின்றது. கூடுதலாக, தேவைப்பட்டால், சிகிச்சை செலவுகள் ஈடுசெய்யப்படும் மற்றும் தொழில்சார் சேத இழப்பீடும் வழங்கப்படும்.

அதற்கு நீங்கள்,  தடுப்பூசியால் எனக்கு பாதிப்புகள் உள்ளன என முறையாக  ஆவணப்படுத்த வேண்டும்.

1808 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன, மேலும் 3968 விண்ணப்பங்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளன. இதய தசையின் வீக்கம், சைனஸ் வெயின் த்ரோம்போசிஸ் மற்றும் குய்லின்-பார்ரே சிண்ட்ரோம், நரம்புகளின் அரிய நோயானது, முக்கியமாக தடுப்பூசி சேதமாக அங்கீகரிக்கப்படுகின்றன. ஒரு ஆய்வு குழுமத்தின் கூற்றுப்படி, அவ்வப்போது இறப்புகளும் உள்ளன.

குய்லின்-பார்ரே சிண்ட்ரோம் என்பது: தசை பலவீனத்தை ஏற்படுத்தும் பாலிநியூரோபதியின் ஒரு வடிவமாகும். இந்த பலவீனம் பொதுவாக சில நாட்கள் முதல் வாரங்கள் வரை மோசமாகிவிடும், பின்னர் படிப்படியாக மறைந்துவிடும் அல்லது தானாகவே போய்விடும்.

கொரோனா வைரஸ் இன்னும் மிகவும் ஆபத்தானது, குறிப்பாக வயதானவர்கள் குழந்தைகள், நோயாளிகளுக்கு ஆபத்தானதாக மாறலாம். 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக