ஞாயிறு, 15 ஜனவரி, 2023

Four Civilizations: Indus [Hindu] Civilization: Agriculture & Deity Worship and Civilization.

நான்கு நாகரிகங்கள்: சிந்து [இந்து] நாகரீகம்: வேளாண்மை& தெய்வ வழிபாடு மற்றும் நாகரீகம்.

இந்த உலகத்தின் முன்னோடி நாகரிகம், கலை, மொழி, எழுத்துரு, மருத்துவம் உணவுப் பழக்கம் வேளாண்மை பற்றி பேசுவதாக இருந்தால் நான்கு ஆற்றங்கரை நாகரிகத்தில் இருந்து தான் பேச முடியும் 

எகிப்திய: நைல் நதி நாகரிகம் மெசபடோமியா: இரண்டு நதிகளின் நாகரிகம் [ யூப்ரடீஸ், டைக்ரிஸ்] சிந்து நதி நாகரிகம். மற்றும் சீனா ஹுவாங் ஹோ பள்ளத்தாக்கு நாகரிகம்.

சிந்து கலாச்சாரம் வெண்கல யுகத்தின் மேம்பட்ட கலாச்சாரங்களில் ஒன்றாகும். சிந்து கலாச்சாரம் ஹரப்பா கலாச்சாரம் என்றும் அழைக்கப்படுகின்றது, இது பண்டைய எகிப்து மற்றும் மெசபடோமியாவின் ஆரம்பகால மேம்பட்ட நாகரிகங்களுடன் மட்டுமே ஒப்பிட்டு பேச முடியும். ஏனென்றால் இந்த கலாச்சாரம் தான் முதன்மையான  கலாச்சாரமாக  எல்லா மக்களினாலும் தெரிவுசெய்யப்பட்டது.

சிந்து நதி பள்ளத்தாக்கின் ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு மேல், மக்கள் கம்பீரமான கட்டிடங்கள், குளியலறை/கழிவறை மற்றும் விரிவாக வடிவமைக்கப்பட்ட கால்வாய்கள் கொண்ட அற்புதமான நகரங்களை உருவாக்கினர்.

கிமு 2600 க்கு இடைப்பட்ட காலத்தில் ஹரப்பாவிற்கு அருகில் மற்றும் 1800 கி.மு. மொகஞ்சதாரோ சிந்து கலாச்சாரத்தின் மையங்களில் ஒன்றாகும். நகரத்தில் 30,000 பேர் வரை வாழ்ந்தனர். இந்த இடிபாடுகள் இப்போது UNESCO உலக பாரம்பரிய தளமாக உள்ளது.

பசுபதி[சிவன்]: கிமு 2-3மில்லினியத்தில் [2000 – 3000] சிந்து நாகரிகம்&சிவ வழிபாடு [ ஹரப்பா -மொகஞ்சதாரோ] செப்பு உலோக காலம். சிந்து-சிவ சின்னங்கள் வண்டி சக்கரம், அரச மரம், புலி, யானை, காளை, பசு, எருமை.

இந்திய வனவிலங்குகள் புலி, யானை, காண்டாமிருகங்கள். உள்ள ஒரு காட்டிலுள்ள ஒரு அரச மரத்தடியில் சிவன் தவம் செய்ததாக களிமண் முத்திரையில் பதிவாகியிருக்கின்றது.

இந்தக் கதை புத்த பிக்குகளால்  சித்தார்த்த கௌதமர் என்று மாற்றப்பட்டது. பகவான் புத்தரின் கதைகளில் பெரும்பகுதி உண்மை கிடையாது  அதில் புனையப்பட்ட கதைகள் ஏராளம்.

சிந்து நாகரிக பசுபதி[சிவன்] வழிபாடும் சுமேரிய நாகரிக துர்க்கை அம்மன் [இனன்னா தேவி] வழிபாடும் புராணக்கதை அல்ல, அது களிமண் மாத்திரையில் பதிவாகியுள்ள ஒரு வரலாறு. சிந்து மக்கள் பசுபதியை தலைவனாக ஏற்று அவர் கட்டளைக்கு கீழ்படிந்து வாழ்ந்திருக்கின்றார்கள். 

சிந்து நாகரிகம்,  எகிப்திய நாகரிகம் போல் மன்னர்கள் அரசர்களுடைய  வரலாற்றை சொல்லும் நாகரிகம் கிடையாது அது பொது மக்களுடைய வாழ்க்கையை சொல்லும் ஒரு நாகரிகம். மெசபடோமியா நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள், அங்கு ஏற்பட்ட நெருக்கடி,  அடிக்கடி ஏற்படும் எல்லை தகராறு யுத்தம் காரணமாக  அதிலிருந்து விடுபட்டு, சமாதானம் தேடி சிந்து வெளியில் தங்களுடைய வாழ்கையை தொடர்ந்தார்கள்.

[சத்திரிய,போர்க்குணத்தை விட்டொழித்து சமாதானத்தை தேடி வந்ததினால்  இவர்களை திராவிடர் என்று பின்னால் அழைக்கப்பட்டார்கள்] "இந்து" "திராவிடர்" என்ற பெயர்கள் எங்களுக்கு நாங்களே வைத்துக் கொண்ட பெயர்களே தவிர, வரலாற்றுப்பதிவு கிடையாது.

வேளாமை தொழில்துறை கருவிகள், கப்பல், கட்டுமரம் நவீன மாடி வீடுகள், வீதிகள், பொது வீதி அமைப்பு, மொட்டை மாடி, சமையலறை, படுக்கையறை, இணைக்கப்பட்ட குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகள், கடைத்தெரு, சந்தை, வணக்கத்தலம், முன்னோர் ஆலோசனை, பஞ்சாயத்து, பொழுதுபோக்கு அரங்கங்கள்  உள்ள ஒரு கட்டமைப்பு சமூகம் கி.மு மூன்றாம் மில்லினியத்தில் சிந்து நாகரிகத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்றால், அந்த சமூகம் எப்பேற்பட்ட அறிவுள்ள சமூகமாக இருந்திருக்கும். 


"விட்டுக்கொடுத்து  தோற்பது தோல்வியல்ல, அது மிகப்பெரிய  சமாதானத்துக்கான வெற்றி"

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Happy Pongal-2023


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக