வெள்ளி, 20 ஜனவரி, 2023

How to identify the people who lived in the Indus Civilization

சிந்து நாகரிகத்தில் வாழ்ந்த மக்களை [ஹரப்பா -மொகஞ்சதாரோ] எப்படி அடையாளப்படுத்துவது யார் இவர்கள் என்ன மொழியை பேசினார்கள்.

இந்த மக்கள் இன்றைய நிலப்பரப்பில் எங்கு வாழ்கின்றார். இந்தக் கேள்விக்கான பதிலை வெறும் தொல்பொருள் தளங்களின் அகழ்வாராய்ச்சி பதிவுகளை கொண்டு முடிவு செய்ய முடியாது. இவர்களைப் பற்றி அறிவதற்கு மரபணு ரீதியாக ஆய்வுகளும் தேவைப்படுகின்றது.

திருமணங்கள் வம்சாவளியைப் பகிர்ந்து கொள்வதற்கு உதவியது. இதை வைத்து இவர்களை ஓரளவுக்கு அடையாளப்படுத்தி விட முடியும்.

பண்டைய திருமணங்களும் விதிகளும்: பெண்கள் ஆண்களையே சார்ந்திருந்தார்கள். உறவினர்களினால் நிச்சயம் செய்யப்பட்ட ஆணாதிக்க திருமணங்களாகவே இருந்தன.

முதல் உறவினரை[மாமன் மகள்] திருமணம் செய்வது 4,000 ஆண்டுகளுக்கு முன்பு பொதுவானதாக இருந்திருக்கின்றது.

சீர்வரிசை கொடுக்கும் பழக்கமும் இவர்களிடையே இருந்தது, அதற்கான காரணம் பரம்பரை விவசாய நிலம் மேலும் மேலும் பிரிக்கப்படுவதைத் தடுக்க இது செய்யப்படுகின்றது.

சிந்து வெளியும் சிவ வழிபாடு இது அங்கு வாழ்ந்த மக்களை அடையாளப்படுத்தும் மிகப்பெரிய அடையாளம். நீர் தொட்டிகளை கட்டி தண்ணீரில் செய்யப்படும் சடங்குகளை மேற்கொண்டிருந்தார்கள். சுமார் 700 க்கும் மேற்பட்ட குடிநீர் கிணறுகள் நிறுவப்பட்டிருந்தது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதுவரை சிந்து/இந்து கலாச்சாரத்தின் 1022 குடியிருப்புகளை கண்டுபிடித்துள்ளனர். இதில் 406 பாகிஸ்தானிலும், 660 இந்தியாவிலும் உள்ளன. ஹரப்பா மற்றும் மொஹெஞ்சதாரோ ஆகியவை சிந்து நதியில் உள்ளது சிந்து என்பது நதிக்கரையை குறிக்கும் ஒரு சொல்.

ஹரப்பா கலாச்சாரத்தின் மக்கள் தங்கள் நகரங்களை முறையாக திட்டமிட்டு, சுட்ட மண் செங்கற்களால் தங்கள் கட்டிடங்களை கட்டினார்கள், தங்கள் தெருக்களில் நடைபாதைகளை அமைத்தனர் மற்றும் நீர் வடிகால்களை அவர்களுக்கு வழங்கினர். அவர்களின் வீடுகளில் ஏற்கனவே தண்ணீர் கழிப்பறைகள் மற்றும் குளியல் தொட்டிகள் இருந்தன.

சதுரங்க விளையாட்டு, பகடைக்காய் உருட்டுதல் மற்றும் சிறுவர்கள் பம்பரம் விடுதல், கோலி குண்டு விளையாட்டு மற்றும் பல்லாங்குழி [மங்காலா]விளையாட்டு என்று விளையாட்டுப் பொருட்களும் கிடைத்திருக்கின்றன.

சிந்து, வேளாண்மை மற்றும் கடவுள் நம்பிக்கை உள்ள மக்கள். சிந்து கலாச்சாரத்தின் விவசாயிகள் கோதுமை, பார்லி , பயறு , கொண்டைக்கடலை , பட்டாணி , தினை, பருத்தி, ஆளி விதை, எள் மற்றும் ஆளி செடி[கைத்தறி] ஆகியவற்றை பயிரிட்டனர். அவர்களின் முன்னோர்கள் ஏற்கனவே நீர் எருமைகளை வளர்த்து கலப்பையை கண்டுபிடித்தனர். விவசாயம் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கின்றது.

சிந்து மொழி தெரியவில்லை.இன்னும் புரிந்து கொள்ளப்படாத மொழி. ஹரப்பா/ சிந்து கலாச்சாரத்தில் இருந்து சுமார் 5000 முத்திரைகள் மற்றும் மாத்திரைகள் அறியப்படுகின்றன. இது எந்த மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்று இன்னும் சரியாக அறியப்படவில்லை.

சிந்து/இந்து நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் அமைதியும் சமாதானத்துடன் வாழ்ந்திருக்க வேண்டும். அங்கு பெரிய போர்கள் எதுவும் நடந்திருக்காது காரணம் . அங்கு வேளாண்மை கருவிகளைத் தவிர, போர் ஆயுதங்கள் கோட்டை மதில் சுவர்கள் எதுவும் கட்டப்படவில்லை. குதிரைகள் கூட கிடையாது. பொதிகளை சுமக்கும் கழுதைகளை வைத்திருந்ததாக ஆய்வுகள் சொல்கின்றது.

அது அமைதியான கலாச்சாரமாக இருந்திருக்க வேண்டும். அவர்களின் எழுத்துருக்களைப் பற்றி பேசும் போது வணிக நோக்கங்களுக்காக ஒரு சில களிமண் முத்திரைகளை மட்டும் விட்டுச் சென்றிருக்கிறார்கள். வேறு எந்த எழுத்துரு வடிவங்களையும் அவர்கள் விட்டுச் செல்லவில்லை.

இங்கு வாழ்ந்த மக்களின் இன்னும் ஒரு அடையாளம் நீல நிற/கருவிழி கண்களை கொண்டவர்கள்.

சிந்து சமவெளி மக்கள் எந்த மொழியை பேசி இருப்பார்கள்,  சரியாக தெரியாது இருப்பினும் சிந்து மொழி= [உருது + தமிழ் + சமஸ்கிருதம்] சேர்ந்த ஒரு கலவையான ஒரு மொழியை பேசியிருக்க முடியும். இன்று எங்களுடைய பார்வையில் அவர்கள் பேசிய மொழி பலமொழி கலப்பாக தெரிந்தாலும் அவர்களுக்கு அன்று ஒற்றை மொழியாகத்தான் இருந்திருக்கின்றது.

 

Microsoft Edge என்ற செயலியை தரவிறக்கம் செய்து. இந்த கட்டுரைகளை சுமார் 60 மொழிகளுக்கு மேல்   மொழிபெயர்ப்பு மற்றும் கணினி வாசிப்பு செய்யமுடியும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக