ஞாயிறு, 26 டிசம்பர், 2021

சர்க்கரை நோய் & மனநோய்: உங்கள் ஆன்மாவுக்கு எப்ப உதவி தேவை, சர்க்கரை நோய் பாதிப்புக்களினால் ஏற்படும் மனவழுத்தம் காலப்போக்கில் மனநோயாக மாறுகின்றது, சர்க்கரை உயர்வு தரும் பாதிப்புக்களை காட்டிலும் சர்க்கரை இறக்கம், இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படுத்தும் பயம், விரக்தி மனச்சோர்வு கவலை, குழப்பம்தான்  மனநலக் குறைபாட்டினை ஏற்படுத்துகின்றது.  

சர்க்கரை நோய்கு மருந்து மாத்திரைகள் இன்சுலின் ஏற்றிக்கொள்வது காலப்போக்கில் அலுத்து ஒரு அக்கறையில்லாமல் தூக்கி போடத்தோன்றும். வேளாவேளைக்கு மருந்து, இன்சுலின் செலுத்துவது தவறிப்போகின்றது. பல சர்க்கரை நோயாளிகள் இந்த இடத்தில் தவறிப்போகின்றார்கள் உடலில் சோம்பல் குடிகொண்டு அவர்களது ஊக்கம் தன்னை பற்றிய ஒரு அக்கறை கைவிடப்படுகின்றது, இதனால் இவ்வளவு காலமும் கட்டிக்காத்த ஆரோக்கியம் பாழ்பட்டுப்போகின்றது.

இந்த இடத்தில் உங்கள் ஆன்மாவிற்கு உதவி தேவைப்படுகின்றது. அது உங்கள் குடும்ப உறுப்பினர்களின் உதவியாக கூட இருக்கலாம். வேளாவேளைக்கு மருந்து, இன்சுலின் செலுத்துவது உணவு உடற்பயிற்சியை திரும்பவும் செயல்படுத்துவது முக்கியமானது. இல்லாது போனால் இதனுடைய பாதிப்புக்கள்  சிறுநீரக செயலிழப்பு, பாதங்களில் எரிச்சல், புண் மற்றும் விழித்திரை எரிப்பு(குருடு) ரெட்டினோபதிக்கு வழிவகுக்கும்.

பொதுவில் மக்கள் 30 வயதிலிருந்து வருடத்திற்கு பத்து சதவிகித தசைகளை இழக்கிறார்கள். தசைகள் படிப்படியாக கொழுப்பாக மாற்றப்படுகின்றன. நமது உடலின் அன்றாடச் செயல்பாட்டிற்குத் தேவையான புரதச்சத்துக்கள் உணவின் மூலம் கிடைக்காவிட்டால், உடல் அவற்றை தசையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியே எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

நிலவு பார்த்த நண்டு போல் உடல் தன்னைத்தானே தின்று தசையை இழந்து வெறும் கோதாக இருக்கும் இதன் நிமித்தம் ஒருவர் தனது கட்டழகு தசையை(மசில்) இழந்து சுருங்கி தொங்கும் கை, தொப்பை விழுந்த உடலமைப்பு ஏற்படுகின்றது.

சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக புரதச்சத்து உணவுகளை எடுக்கவேண்டும் அத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட உடற்பயிற்சியும் அவசியமானது. இந்த செயல்பாடு இழந்த தசையை மீண்டும் கட்டமைத்துக் கொள்வதற்கு உதவுகின்றது.

சர்க்கரை இறக்க அறிகுறிகள்: பதட்டம், கை கால் உதறல் இதய படபடப்பு, தலை சுற்றல், மயக்கம். உடனடியாக குளுக்கோசு, குளிர் பானங்கள் எடுத்துக் கொள்ளவும்.

சிறுநீருடன் அதிகளவு சர்க்கரை வெளியேறும்  அதனுடன் அல்புமின் புரதங்களும்  வெளியேறும் இது சர்க்கரை நோயின் தீவிர தன்மையை காட்டுகின்றது.

அல்புமின் என்பது: உடலில் பல்வேறு முக்கிய செயல்பாடுகளைக் கொண்ட ஒரு புரதமாகும். எடுத்துக்காட்டாக,  திரவங்களை எடுத்துச் செல்லும் ஒரு போக்குவரத்துப் பொருளாக  செல்களுக்கு உள்ளேயும் வெளியேயும் திரவங்களின் விநியோகத்தில் முக்கியமான பங்காற்றுகின்றது..அல்புமின்  இரத்த சீரத்தில் உள்ள மொத்த புரதத்தில் 60 சதவிகிதம் ஆகும். இது முக்கியமாக கல்லீரல் செல்களில் (ஹெபடோசைட்டுகள்) உருவாகின்றது,

அல்புமின் புரத குறைபாடு/வெளியேற்றம் இருதய மற்றும் சிறுநீரக அபாயத்தைக் குறிக்கின்றது

சிறுநீர் அல்புமின் வெளியேற்றம் அதிகரித்தால், அல்புமின் இழப்பு தொடர்ந்து ஏற்படுகிறதா என்பதை மருத்துவ பரிசோதனையில் சரிபார்க்க வேண்டும். "மைக்ரோ அல்புமினுரியா" இருந்தால், அதாவது சிறுநீர்-புரத இழப்பு இருந்தால் வருடத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை பரிசோதனை செய்வது அவசியமானது அல்புமின் புரத இழப்பு அதிகமாக இருந்தால் சிறுநீரக பாதிப்பை காட்டுகின்றது. இது போன்ற மோசமான நிலை ஏற்படாதவாறு முன்கூட்டியே உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

சர்க்கரை நோய் ஒருவரை துரத்தும் பிரம்மஹத்தி தோஷம், விரும்பியதை உண்ணமுடியாது, கஞ்சியும் கூழும்  குடிக்கவைக்கும் உணவுத்தடை, எதிலும் நாட்டமின்மை, ஆரோக்கியமான சர்க்கரை நோய்காலத்தில் புரதச்சத்து உணவுகளை உண்ணவேண்டிய தேவையிருந்தது  அதற்கு எதி்ர்மாறாக சேதமடைந்த சிறுநீரகங்களினால் புரதத்தை சாதாரணமாக செயலாக்க முடியாது,

உங்கள் உணவில் சர்க்கரை, கார்போஹைட்ரேட்  உணவுகளை மட்டுமின்றி உடலுக்கு அவசியமான புரத சத்து உணவுகளையும்  குறைவாக உண்ண வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றீர்கள் மேலும் கொழுப்பு, உப்பு(சோடியம்)  குறைவாக உள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

வாழ்க்கை பூராகவும் சர்க்கரையுமில்லை, உப்புமில்லை உணவுத் தேவையே உங்களை சலிப்படைய வைக்கின்றது. நல்ல மருத்துவ ஆலோசனை மருத்துவம் உங்கள் ஆன்மாவை மீட்டெடுக்க உதவும். நன்றி

தடுப்பூசி போடுங்கள். பெருமளவு ஆன்டிபாடிகள் உங்கள் உடலுக்கு பாதுகாப்பை தருகின்றது. 

டேய்! ஆன்டிபாடி வாடா வெளியே நான் கொரோனா வந்திருக்கேன் சண்டைக்கு வாடா பயந்தான்கொள்ளி..

வேண்டாம் போயிடு ... தடுப்பூசி உன்னை பற்றிய தகவல் எல்லாம் சொல்லிட்டான், நீ முகத்தை மாற்றிய செய்தி உள்பட  நான் அடிச்சா தாங்கமாட்டாய் வந்த இடத்திற்கே திரும்பி ஓடிடு..




 


சனி, 25 டிசம்பர், 2021

பூஞ்சை-நச்சு(அஃப்லாடாக்சின்கள்) அஃப்லாடாக்சின்கள்என்பது மைக்கோடாக்சின்களாகும், அவை அஸ்பெர்கிலஸ் இனத்தின் இரண்டு வகையான பூஞ்சைகளினால்  உற்பத்தியாகின்றன, இவை முக்கியமாக சூடான மற்றும் ஈரப்பதமான காலநிலை கொண்ட பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றது.

அஃப்லாடாக்சின்-(பி1) என்பது பொதுவில் உணவில், பருப்பு, கடலை, விதைகள், அரிசி, வடகம், அப்பளம், மோர் மிளகாய்  காய்கறிகளில் மற்றும் சமையல் செய்த உணவுகளில்  அதிகளவில் உருவாகும் ஒரு பூஞ்சை வகையாகும், இது மரபணு நச்சு, அதாவது மரபணுக்களை சீர்குலைத்து சிதைக்ககூடியது கல்லீரல் திசுக்களின் சிதைவு மற்றும் கல்லீரல் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்லாடாக்சின்களில் இதுவும் ஒன்றாகும்.

சூடான ஈரப்பதம் பூஞ்சைகளின் வளர்ச்சியை ஊக்கிவிற்கின்றது.உங்கள் வீட்டு சமையலறை பொருட்களை இரண்டு முறைகளில் பக்குவபடுத்தி வைத்துக் கொள்ளுங்கள். உடன் காய்கறிகள் மற்றும் சமையல் செய்த உணவுகளை குளிர் ஊட்டியில் சரியான குளிரூட்தல் (மெது குளிர்நிலை +5,+6°C டிகிரி மற்றும் உறை குளிர் நிலை -15, -18°C டிகிரியில் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

எப்பொழுதும் சமையலறை நீராவி பிடித்து ஈரப்பதம் உள்ள ஒரு இடமாகத்தான் இருக்கும் இந்த இடத்தில் உலர் நிலை பொருட்களை வைத்தால் கண்டிப்பாக பூஞ்சை பிடிக்கும், உலர் பொருட்களை தனியாக வேறொரு ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைத்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

கண்டிப்பாக இன்சுலின், மருந்து மாத்திரைகளை சூரிய ஒளி இல்லாத உலர் நிலை+25°C டிகிரிக்கு மேலே வெப்பம் இல்லாதவாறு இருக்கவேண்டும். அதிக வெளிச்சம், ஈரப்பதம் வெப்பம் மாத்திரைகளை செரிக்க வைத்து விடும். அதாவது பழுதடைந்துவிடுகின்றது.

பழுதுபட்டு காலாவதியான மாத்திரைகள், இன்சுலினை பயன்படுதினால் அதனால் எந்த பிரயோசனமும் இல்லை. இது போதாதென்று செயலிழந்த மாத்திரைகள் தீராத நோய்களை உண்டாக்கும் இரத்த நச்சூறலையும் உடலில்/கல்லீரலில் ஏற்படுத்திவிட்டு போகும். தவறுகள் எம்மிடத்தில் மனித உடல் அவ்வளவு சீக்கிரத்தில் பாழ்பட்டு போவதில்லை படைப்பின் திறன் அவ்வளவு வல்லமை வாய்ந்தது

மருந்து மாத்திரைகள், மருத்துவம் இல்லாத கற்கால வாழ்விற்கு ஏற்றவாறு மனித உடல் வீரியம் மிக்கதாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. மனிதனுக்கான நோய்ச்சூழல் 99 விழுக்காடு வாழ்வியல், உணவு, மாசுபட்ட சுற்றுச்சூழல் போன்ற வெளிக்காரணங்களே மனிதனை பீடிக்கும் நோய்காரணிகளாக இருக்கின்றது.

பூஞ்சை (அஃப்லாடாக்சின்கள்) பிடித்த உணவுகளை கையுறை, முகக்கவசம் அணிந்து அப்புறப்படுத்துங்கள்

IgE அளவு அதிகரிப்பு: இம்யூனோகுளோபுலின் E (IgE) ஆன்டிபாடிகள் சில ஒவ்வாமை எதிர்விளைவுகளை மத்தியஸ்தம் செய்வதற்கு காரணமாகின்றன IgE  ஒவ்வாமை கண்டறிதலில் பங்கு வகிக்கின்றது.

புரோட்டீன் தடுப்பூசிகள்: புரோட்டீன் அடிப்படையிலான கொரோனா தடுப்பூசிகளின் தயாரிப்புக்கள் இப்போது அதிகரித்து வருகின்றன. Novavax அதன் தயாரிப்புக்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் சந்தை ஒப்புதலுக்கு விண்ணப்பித்துள்ளது. குறைவான தயாரிப்புக்காலம் குறைந்த செலவின் நிமித்தம் அடுத்து வரும் வருடங்களில் இந்த தடுப்பூசியின் பயன்பாடும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புரோட்டீன் தடுப்பூசிகள். மெசஞ்சர் (“mRNA”)  தடுப்பூசி மற்றும் வெக்டர்/திசையன் தடுப்பூசிகளுக்கு இணையாக செயல்படக்கூடிய ஒரு தடுப்பூசி, இத்தகைய தடுப்பூசிகள் பயன்பாட்டிலுள்ள நலிவடைந்த/இறந்த பழைய தடுப்பூசிகளை விட பாதுகாப்பானதா? இது தொற்றுநோயை எவ்வாறு எதிர்த்து போராடுகின்றது.

Novavax (/NVX-CoV2373 ) என்பது: கொரோனா(சார்ஸ்-கோவி-2)  நோய்க்கிருமிக்கு எதிரான புரத அடிப்படையிலான ஒரு தடுப்பூசி அல்லது புரத சப்யூனிட் தடுப்பூசிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. சப்யூனிட் என்பது ஒரு புரத மூலக்கூறாகும், புரத மூலக்கூறுகளுடன் இணைந்து செயல்படும் புரதத்தை உருவாக்குகின்றது.

இது புரத வளாகம் என்றும் அழைக்கப்படுகின்றது. முன்னர் அங்கீகரிக்கப்பட்ட மரபணு, மெசஞ்சர் தடுப்பூசிகளுக்கு மாறாக, புரத அடிப்படையிலான தடுப்பூசியின் மைய செயலில் உள்ள மூலப்பொருள் செயற்கையாக ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட  "செயற்கை பெப்டைடுகள்". முனைப்புரதம்-S1/S2 (ஸ்பைக் புரதம்) ஆகும்.

ஒரு தடுப்பூசியின் தொழில் பாடே, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுக்கட்டாயமாக சண்டைக்கு இழுக்கும் ஒரு செயல் முறைதான். இந்த செயற்கையான பெப்டைடுகள். (ஸ்பைக் புரதம்) செயல்பட வம்பு சண்டைக்கு வலுச்சேர்க்க ஒரு பொட்டென்டியேட்டருடன் கலக்கப்படுகின்றது.

இந்த துணை பொருட்கள் உள்ளார்ந்த நோயெதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்தும் பொருட்கள் அதாவது கொம்பு சீவி விடும் பொருட்கள். இந்த உள்ளடக்க பொருட்கள் இல்லாமல் தடுப்பூசிகள் செயல்படாது எதிர்காலத்தில் நோய்க்கிருமியின் முக்கியமான கட்டமைப்புகளை அங்கீகரிப்பதில் அவை நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கின்றன.

மெசஞ்சர் தடுப்பூசிகள் முனைப்புரதத்தை உடல் திசுக்களை பயன்படுத்தி உற்பத்தி செய்கின்றது, புரத அடிப்படையிலான தடுப்பூசிகளில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சார்ஸ்-கோவி-2(ஓமிக்ரான் மாறுபாடு) ஸ்பைக் புரதத்தை உள்ளடக்கியது அவ்வளவுதான் இரண்டுக்குமான வித்தியாசம்

தடுப்பூசி வகைகள்

நலிவடைந்த/இறந்த தடுப்பூசிகள்

முழுவதும் செயலிழக்கப்பட்டது.

நேரடி/உயிர்வளர்ச்சி.

 

புரோட்டீன் தடுப்பூசிகள்.

செயற்கை பெப்டைடுகள்.

 

மறுசீரமைப்பு துணைக்குழு

முனைப்புரதம் (ஸ்பைபுரோட்டீன்)

 

மெசஞ்சர் தடுப்பூசிகள் mRNA

RNA/DNA.

 

வெக்டர் தடுப்பூசி

மறுசீரமைப்பு பாக்டீரியா திசையன்கள்.

மறுசீரமைப்பு வைரஸ் திசையன்கள்.

 



வெள்ளி, 17 டிசம்பர், 2021

வைரஸ்கள் ஒரு ரோபோ : ஏன், வைரஸ்கள் சுயமாக இனவிருத்தி செய்து கொள்ள முடிவதில்லை, அதற்கான காரணமென்ன. வைரஸ்கள் உண்மையில் ஒரு உயிரினம் இல்லை அதுவொரு நானோ துகள்களினால் செய்யப்பட்ட ரோபோ, உயிரற்ற ஒரு ஜடம் அஃறிணை பொருள் கொண்டது. பூமியிலிருந்து செவ்வாய்க்கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் ரோவர்களுக்கு இணையானது.

வைரஸ்களுக்கு எப்படி செயல்பட வேண்டும் என்று முன்கூட்டியே தகவல்கள் செலுத்தப்பட்டு விட்டன, அதன்படியே அவைகள் தானியங்கி முறையில் இயங்கி கொண்டுயிருக்கின்றன. அவைகளை அழிக்கமுடியாது. வைரஸ்கள் தங்களை தாங்களே நகலெடுக்கும் ஒரு முறையை கைவசம் வைத்திருக்கின்றது. ஒன்றிலிருந்து பத்தாகவும் பத்து, பல மில்லியன் களாகவும் நகலெடுத்து தங்களை தக்கவைத்துக்கொள்ளுகின்றது.

வைரஸ்களை செயற்கையாக உருவாக்க முடியுமா..? இந்த கேள்விக்கான பதில் பல பில்லியன் மதிப்பு வாய்ந்தது. நவீன தொழில் நுட்பத்தில் உருவான தடுப்பூசிகளில் வைரஸ் துகள்களுக்கு இணையான இன்னுமொரு செயற்கையான நானோ துகள்களை உருவாக்கமுடியும் என்றால், ஒரு வைரஸின் கருப்புரதத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக இன்னுமொரு வைரஸ்களின் தகவல்களை செருகி வைத்து ஒரு புதிய கலப்பின வைரஸ்களை உருவாக்க முடியும், இது இன்றைய நவீன தொழில் நுட்ப வசதியால் சாத்தியமான ஒன்று.

ஒரு பாதிப்பு இல்லாத வைரஸின் கருப்புரதத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பாதிப்புக்களை ஏற்படுத்தும் இன்னுமொரு வைரஸ்களின் தகவல்களை செருகி வைத்து ஆபத்துக்களை உருவாக்கும் வைரஸ்களை உற்பத்தி செய்யமுடியும்.ஆனால் கொரோனா அப்படியான ஒரு வைரஸ் கிடையாது அதனுடைய 30,000 மரபணு கட்டுமான தொகுதியில் தனியாக முனைப்புரதத்தில் (S1/S2) மட்டுமே மாறுபாடுகளை கொண்டுள்ளது. தற்சமயம் உலவும் புதிய வைரஸ்களும் இதையே பின்பற்றுகின்றன, இது வைரஸ்களுக்கு இருக்கும் இயல்பானதொரு தகவல் அமைப்பு.

இந்த உலகம் ஒரு விஞ்ஞானியால் மட்டும் ஆளப்படவில்லை, பல விஞ்ஞானிகள், பட்டதாரிகள், புத்திஜீவிகளினாலும் இந்த உலகம் கண்கானிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் அமைப்பில் ஏதாவது ஒரு தில்லுமுல்லு செய்திருந்தால் கண்டிப்பாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கும் அதனுடைய மரபணு வரிசை சீர்குலைந்திருதிருந்தால் அதுவே காட்டிக்கொடுத்துவிடும். கொரோனா வைரஸின் பூர்விகம் இன்று வரைக்கும் அப்படியேதான் இருக்கின்றது.

கொரோனா வைரஸின் புதிய தலைமுறை வைரஸ்களும் இயல்பாகவே மரபணு மாற்றமடைந்த வைரஸ்கள் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம். வைரஸ்களின் மரபணு கட்டமைப்பு தெரிந்திருந்தால் மட்டுமே புதிய வைரஸ் மாறுபாடுகளுக்கு எதிராக இன்னும் சக்திவாய்ந்த மருந்து மாத்திரைகளை தயாரித்துக் கொள்ளமுடியும். கொரோனாவை எந்த இடத்தில் தட்டினால் சிதைக்கமுடியும் என்ற புது யுத்தியும் பிறக்கும்,

இந்த அறிவை பெற்ற விஞ்ஞானிகள் ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கிய A,G,C, U/T நான்கு மரபணு (மெசஞ்சர்) குறியீடுகளை பயன்படுத்தி 20 அமினோ அமிலங்களை கொண்டு, வைரஸின் முனைப்புரதத்தை சமைக்கும் அற்புதமான மெசஞ்சர்-RNA தொழில் நுட்பத்தினை உருவாக்கினார்கள்.

ஒரு கண்டுபிடிப்பு அதனுடன் முடிந்துவிடுவதில்லை அதற்குள்ளே இன்னும் பல கண்டுபிடிப்புகள் மறைந்திருக்கின்றன. இதை முறையாக கற்றறிந்திருந்தால் தற்சமயம் புழக்கத்திலிருக்கும் தடுப்பூசிகளை மெசஞ்சர்-RNA தொழில் நுட்பத்திற்கு மாற்றமுடியும்.

வைரஸ்கள் தங்களை நகலெடுப்பதற்கு முன்பாக முற்றிலுமாக குலைக்கப்பட்டு, மரபணு குறியீடுகளை பயன்படுத்தி தனித்தனி உதிரிப்பாகங்களாக நகல் எடுக்கின்றது. புதிதாக நகல் எடுத்த உதிரிப்பாகங்கள் மீண்டும் கூட்டுப்பொருத்தல் (அசெம்பிள்) செய்யப்பட்டு புதிய வைரஸ்கள் வெளியேறுகின்றது. எடுத்துக்காட்டாக: கார் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு இணையானது வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக உதிரிப்பாகங்களை  உற்பத்தியாக்கி இறுதியில் ஒரிடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதுபோல் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

வைரஸ் கட்டமைப்பு: SARS-CoV-2 நான்கு வகையான கட்டமைப்பு புரதங்களாலானது ஸ்பைக் புரதம் (S1/S2) RBD (முனைப்புரதம்) M (சவ்வு புரதம்), E (உறைப்புரதம்) மற்றும் N (நியூக்ளியோகாப்சிட்). N புரோட்டீன்கள் உள் பகுதியை அடைத்து RNA மரபணுவைக் கொண்டிருக்கின்றன S, E மற்றும் M ஆகியவை வெளிப்புற ஷெல்லை உருவாக்குகின்றன. மேற்பரப்பில் உள்ள அத்துனை புரதங்களும் ஆன்டிஜென்கள். (அந்நிய துகள்கள்)

இந்த ஆன்டிஜென்கள் தடுப்பூசிகளின் தயாரிப்பில். மிகவும் முக்கியமான S புரதமாகும், இது ACE2 ஏற்பி வழியாக வைரஸ்கள் உடல் செல் இடையே மேற்பரப்பு தொடர்பை ஏற்படுத்துகின்றது. அதாவது வைரஸ்கள் தங்களை நகல் எடுப்பதற்காக உடலில் நுழையும் வாயில்.

லிப்பிட் இரட்டை அடுக்கு (கொழுப்பு படலம்): வெளியில் தொற்று ஏற்படாதவாறு கைகளுக்கு சவர்காரம் போட்டு கழுவும்போது இந்த லிப்பிட்/கொழுப்பு சவர்கார நுரையில் கரைந்து வைரஸ்கள் சிதைவுறுகின்றது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் வைரஸ்களை கொல்ல முடியாது ஏனென்றால் அவைகள் உயிரற்ற ஒரு ஜடம் ஆனால் சிதைக்கமுடியும் அதாவது சுக்குநூறாக உடைக்கமுடியும்.

ஸ்பைக் புரதம் (S1/S2) RBD (முனைப்புரதம்): தடுப்பூசிகள் இந்த முனைப்பரதங்களுக்கு எதிராக தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும், வைரஸ்கள் தங்களை தக்கவைத்துக் கொள்வதற்கு மாறுபாடு அடைகின்றன, அப்படி மாறுபாடு அடைந்த வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசிகள் தயாரிப்பது கடினமான ஒன்று, ஒவ்வொரு வருடமும் புதிய மாறுபாடுகளுக்கு எதிராக புதிய மேன்பாடு தழுவிய தடுப்பூசி செலுத்துவது அவசியமான ஒன்று.

முனைப்புரதம் மூன்று பகுதிகளை கொண்டது: [RBD – முனைப்புரத தலை] [S1-முனைப்புரத மார்பு] [S2- முனைப்புரத உடல்] பெரும்பாலும் சூரசம்ஹாரம், பத்மா சூரன் தலையை மாற்றுவது போல் கொரோனா வைரஸ்கள் அடிக்கடி தலையை மட்டுமே மாற்றுகின்றது.செயற்கை ஆன்டிஉடல்கள் தயாரிப்பில் தலையை குறி வைக்காமல் கழுத்து பகுதியை குறிவைக்கும் ஆன்டிஉடல்களை தயாரித்தால் எல்லாவகைக்குமான ஒரு தடுப்பு மருந்தாக இருக்கும்.

சவ்வு புரதம் (M) மற்றும் உறை புரதம் (E) : வெளிப்புற ஷெல்லை உருவாக்குகின்றன. மேற்பரப்பில் உள்ள அத்துனை புரதங்களும் ஆன்டிஜென்கள்.(அந்நிய துகள்கள்)

நியூக்ளியோகேப்சிட் புரதம்(N) (கருப்புரதம்) : SARS-CoV-2 நியூக்ளியோகேப்சிட் புரதங்கள் வைரஸ் RNA மரபணுவை பிணைக்கும் முக்கியமான கட்டமைப்பு புரதமாகும். புதிய சிகிச்சை உத்திகளுக்கு, குறிப்பாக COVID-19 இன் பிந்தைய மாறுபாடுகளுக்கு N-கருப்புரத நடுநிலைப்படுத்தல் ஒரு நம்பிக்கைக்குரிய இலக்காக இருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றது. இதை நடுநிலைப்படுத்துதல் அல்லது சீர்குலைக்கும் மருந்துகளை தயாரித்தல்.

ஒற்றை இழை-RNA (ஒற்றைக்கால் மரபணு வரிசை) : பொதுவாக வைரஸ்கள் ஒற்றை இழை அல்லது இரட்டை இழைகள் கொண்டது கொரோனா ஒற்றை இழை கொண்ட வைரஸ். சிதைந்த டிஎன்ஏ பிரதி அல்லது வாசிப்புக்காக பிரிக்கப்படும் போது இது விளைகின்றது. பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினையில் (PCR), இதை வெப்பமாக்குவதன் மூலமும் அடையலாம்.

கொரோனா வைரஸின் 30,000 மரபணு கட்டுமான தொகுதியில் தனியாக  உதிரிப்பாகங்கள் தயாரிக்க பயன்படும் மெசஞ்சர் பகுதியை மட்டும். வெட்டியெடுத்து தடுப்பூசி/மருந்து மாத்திரைகள் தயாரிப்பது. மெசஞ்சர் (mRNA) தடுப்பூசி இந்த முறையை கொண்டது.

பூஸ்டர் தடுப்பூசி: ஓமிக்ரான் மாறுபாடு, டெல்டா மாறுபாட்டை விட வெகு சுலபமாகவும் விரைவாகவும் தொற்றக்கூடியது. இரண்டு மாறுபாடுகளும் கொரோனா தொற்றின் அடிப்படை நோய்குறிகள்தான், ஓமிக்ரான் நுரையீரல் திசுக்களை குறுகிய காலத்தில் பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்கின்றது.

அதாவது நுரையீரலை அரித்து தின்னுகின்ற வேகம் கூடியது. இருப்பினும் நோயின் கடுமை நபருக்கு நபர் மாறுபடுகின்றது ஆரோக்கியமான இளையவர்களுக்கு மிதமானதாகவும். முதிர்வயது நோய் தடுப்பாற்றல் குறைந்தவர்களுக்கு சற்று கடுமையாக நோய்குறிகள் ஏற்படலாம். இன்றைய நிலவரம் கருதி அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி அவசியமானது.

குறைந்தது ஒரு ஆறுமாத காலத்திற்காவது உங்கள் இரத்தத்தில் கொரோனாவுக்கு எதிராக ஆன்டிஉடல்களின் செறிவு உயர்ந்து காணப்படும். இது கடுமையான தொற்றிலிருந்து உடனடியாக உங்களை பாதுகாக்கின்றது.

6-9 மாதங்கள் கடந்த பிற்பாடு, ஆன்டிஉடல்களின் செறிவு குறைய தொடங்கும். தொடர்ந்து வரும் வருடங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்தால் திரும்பவும் பூஸ்டர் தடுப்பூசி அவசியமானது. கொரோனா தொற்று முற்றுலுமாக மறையும் வரைக்கும் உங்கள் நோய்க்காப்பு திறனை புதுப்பித்தல் அவசியமானது. ஏனென்றால் உங்களுக்கு போடப்பட்ட முதல் தடுப்பூசிகள் வீரியம் குறைந்து காலாவதியாகிவிடும்.. இது உங்களை மருத்துவமனை சிரமங்களிலிருந்து தள்ளிவைக்க உதவுகின்றது.

புதிதாக பிறந்த ஒரு மழலை தன் தாயிடமிருந்து, தன்னை பாதுகாத்துகொள்வதற்கு ஆயுதங்களை (ஆன்டிஉடல்களை) கடனாக பெற்றுவருகின்றது இது 12-18 மாதங்கள் குழந்தையை தொற்று நோயிலிருந்து பாதுகாக்கின்றது. குழந்தையின் நோய்க்காப்பு திறன் பலம் பெற்றவுடன் இந்த ஆன்டிஉடல்கள் காணாமல் போய்விடுகின்றது.

அது போலத்தான் தடுப்பூசிகளினால் வெளிப்படும் ஆன்டி உடல்களும் அவசியம் இல்லாத பட்சத்தில் அவைகள் மறைந்துவிடுகின்றது. நினைவக-B செல்களில் அந்நிய உடல்களுக்கு (ஆன்டிஜென்) எதிரான ஆன்டிஉடல்களின் தகவல் பதிவுமட்டும் இருக்கும். இது நோய் எதிர்பின் பாரம்பரியம் நன்றி…

சவர்க்காரம் போட்டு கை கழுவுதல்: சோப்பு மூலக்கூறுகள் இரண்டு முனைகளைக் கொண்டுள்ளன ஒரு முனை நீர் (H2O) மூலக்கூறுகளுடனும், மற்றொரு முனை கொழுப்புடனும் இணைகின்றது. சோப்பு மூலக்கூறுகள் கொரோனா வைரஸின் கொழுப்பு அடுக்கை உடைக்கின்றன. பாதுகாப்பு உறை இல்லாமல், சிதலமடைந்த வைரஸ்களினால்  நகலெடுத்து  பெருக முடியாது.

வைரஸ் கட்டமைப்பு: SARS-CoV-2 நான்கு வகையான கட்டமைப்பு புரதங்களாலானது, ஸ்பைக் புரதம் (S1/S2) RBD (முனைப்புரதம்) M (சவ்வு புரதம்), E (உறைப்புரதம்) மற்றும் N (நியூக்ளியோகாப்சிட்). N புரோட்டீன்கள் உள் பகுதியை அடைத்து RNA மரபணுவைக் கொண்டிருக்கின்றன S, E மற்றும் M ஆகியவை வெளிப்புற ஷெல்லை உருவாக்குகின்றன.மேற்பரப்பில் உள்ள அத்துனை புரதங்களும் ஆன்டிஜென்கள்.(அந்நிய துகள்கள்)

இந்த ஆன்டிஜென்கள் தடுப்பூசிகளின் தயாரிப்பில். மிகவும் முக்கியமான S புரதமாகும், இது ACE2 ஏற்பி வழியாக வைரஸ்கள்  உடல் செல் இடையே மேற்பரப்பு தொடர்பை ஏற்படுத்துகின்றது. அதாவது வைரஸ்கள் தங்களை நகல் எடுப்பதற்காக உடலில் நுழையும் வாயில்.

- கொழுப்பு சவ்வு (லிப்பிட் அடுக்கு)

- ஸ்பைக் கிளைகோபுரோட்டீன் (S1, S2)

- உறை புரதம் (E)

- சவ்வு புரதம் (M)

நியூக்ளியோகேப்சிட்

- நியூக்ளியோபுரோட்டீன் (N)

- (+) RNA மரபணு

 


புகைத்தல்; ஒரு சிகரட் எரியும் போது அதன் புகையில் 6,000 இரசாயனங்கள் வெளியிடப்படுகின்றன, அவற்றில் 250 தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள், அவற்றின்நுள்ளும் 90 நச்சுக்கள் புற்றுநோய்க்காரணிகள். நிகோடின் வெவ்வேறு நச்சு வடிவங்களாக மாறுகின்றது

 



ஞாயிறு, 12 டிசம்பர், 2021

ஓமிக்ரான் மாறுபாடு, ஏன் மற்றய பிறழ்வுகளை விட ஆபத்தானது.  கொரோனா வைரஸின் 30,000 மரபணு கட்டுமான தொகுதியில் தனியாக  முனைப்புரதத்தில் (S1) மட்டும் 33 மாறுபாடுகளை கொண்டுள்ளது. தற்சமயம் உலாவும் புதிய  இந்திய பிறழ்வு - டெல்டா வைரஸ்களின் முனைப்புரதம் 11-18 வரையிலான மாறுபாடுகளை மட்டுமே கொண்டுள்ளது. இது 60 % ACE-2 ஏற்பிகளுடன் மிகவும் இலகுவாக இணையக்கூடியது..

தென்னாப்பிரிக்கா பிறழ்வு – ஓமிக்ரான் உடல்/நுரையீரல் திசுக்களில் 90 %  ACE-2 ஏற்பிகளுடன் மிகவும் இலகுவாக இணையக்கூடியது. அதாவது ஓமிக்ரான் மாறுபாடு, டெல்டா மாறுபாட்டை விட வெகு சுலபமாகவும் விரைவாகவும் தொற்றக்கூடியது.

ஸ்பைக் புரதத்தில் (S1) முக்கியமான பிறழ்வுகள். ACE-2 ஏற்பி பிணைப்பு தளத்தின் மூலம் வைரஸ்கள் பிரதி எடுப்பதற்கு உடல் செல்களில் ஊடுருவுகின்றது. இந்த புதிய மாறுபாடுகள் பழைய மாறுபாடுகளைவிட  90 % ACE-2 ஏற்பிகளுடன் மிகவும் இலகுவாக இணையக்கூடியது..

ஸ்பைக் புரதத்தில்(S1) உள்ள மாறுபாடுகள்.

B.1.1.7-பிரிட்டிஷ் பிறழ்வு – ஆல்பா.

(செப்டம்பர் 2020,S1-10-13  மாறுபாடுகள்)

 

B.1.351-தென்னாப்பிரிக்கா பிறழ்வு – பீட்டா.

(அக்டோபர் 2020,S1-10 மாறுபாடுகள்)

 

B.1.1.28-பிரேசில் பிறழ்வு – காமா.

(டிசம்பர் 2020,S1-11 மாறுபாடுகள்)

 

B.1.617-இந்திய பிறழ்வு - டெல்டா.

(அக்டோபர் 2020,S1-15-18 மாறுபாடுகள்)

 

B.1.1..229-தென்னாப்பிரிக்கா பிறழ்வு – ஓமிக்ரான்

(நவம்பர் 2021,S1-33-34 மாறுபாடுகள்)




வெள்ளி, 10 டிசம்பர், 2021

வைரஸ்கள் எதற்காக மாறுபாடு அடைகின்றன..? அவைகள் தங்களை இனவிருத்தி செய்து கொள்ள விரும்புகின்றன அதற்காக வைரஸ்கள் பரவ விரும்புகின்றது. அவைகள் ஒட்டுண்ணிகள் போல் முட்டையிட்டு இனவிருத்தி செய்வதில்லை, எனவே வைரஸ்கள் தன்னைத் தானே நகலெடுக்கின்றது. அவைகளினால் சுயமாக நகல் எடுக்க முடிவதில்லை அதற்காக அவைகள் எங்களை தேடிவருகின்றது. மனித செல்களை அவைகள் பிரதி அடிக்கும் இயந்திரமாக பயன்படுத்துகின்றது.

அப்படி பிரதி எடுக்கும் போது அவைகள் கள்ளநோட்டு அடிக்கும் கும்பல்போல் ரவுடித்தனமாக நடந்து கொள்ளுகின்றன. நகல் எடுத்ததும் அச்செடுத்த செல்களை அழித்து விட்டு செல்கின்றன.

வைரஸிலிருந்து வரும் புதிய நகலும் தன்னைத்தானே நகலெடுக்கின்றது. அப்படியே அது நீண்டு கொண்டே செல்கின்றது. அப்படி நகலெடுக்கும்போது அவைகளில் பிழைகள் ஏற்படும். அந்த பிரதிகள் வித்தியாசமானவைகள் அதனால் வைரஸ்களின் அமைப்பு மாறிவிட்டது இந்த மாற்றம் பிறழ்வு, புதிய மாறுபாடு என்று அழைக்கப்படுகின்றது.

இது அடிக்கடி நடக்கின்றது பெரும்பாலான நேரங்களில், நகல் பிழைகள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. வைரஸ்கள் உடலில் நுழைவதும் தெரியாது அது நகல் எடுத்து வெளியேறுவதும் தெரியாது இது பாதிப்பு இல்லாத தொற்று என்று அழைக்கப்படுகின்றது.

சில நேரங்களில் ஒரு நகல் எடுப்பு வைரஸை மேம்படுத்துகின்றது. அதாவது ஒரு சில உயிரினங்களில் பிரதியெடுத்து வெளியேறும் போது அந்த வகை வைரஸ்கள் வேகமாக பரவுகின்றது. இந்த புதிய மாறுபாடு வைரஸ்கள் நம் உடலில் உள்ள செல்களை நன்றாக ஊடுருவிச் செல்லுகின்றது.

நகல் வைரஸ்கள் ஒரேமாதிரி உருவ அமைப்பில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை, அவைகள் மேற்பரப்பில் ஊனமுற்று சிதைந்தும் கூட இருக்கலாம் ஒருசில பகுதிகளில் முனைப்புரதங்கள் காலியாகவும் பாதி, நீள்வட்டம் ஓவல், கசக்கிய வடிவமாக இருக்கலாம். அதனுடைய அமினோ அமில சங்கிலி சீர் குலைந்து மாறுபட்டு காணப்படலாம் இதன் நிமித்தம் அதனுடைய புரத அமைப்பு முற்றிலுமாக மாறுபட்டு காணப்படுகின்றது.

வெவ்வேறு விலங்கு மற்றும் நாட்டுமக்களின் உணவுப்பழக்கம், உடல்வாசி வைரஸ்கள் நகல் எடுத்து வெளியேறும் போது வீரியம் அடைய செய்கின்றது, புதிய மாறுபாடுகள் உருவெடுக்கின்றது. அசைவ உணவு வைரஸ்களுக்கு விருந்து, தொற்றுநோய் காலங்களில் சைவ உணவு மிகச்சிறந்தது.

தீராத நோயாளிகள், புற்றுநோய், ஏய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் அதிகளவு மருந்து மாத்திரைகள் எடுப்பவர்களின் உடல் திசுக்கள் நாறி உப்பிபோயிருக்கும் இந்த செல்களில் நகல் எடுத்த வைரஸ்கள் சிதைவுற்று வெளியேறுகின்றன, தற்சமயம் உலவும் புதிய மாறுபாடு டெல்டா வைரஸ்கள் தீராத நோயாளியிடமிருந்து உருமாறி வந்திருக்கலாம். ஓமிக்ரான் வைரஸ் ஒரு எச்.ஐ.வி நோயாளியிலிருந்து தோன்றியிருக்கலாம். *(இருக்கலாம் என்று முடிவுறுவது சரியாக தெரியாது என்று பொருள்படும்)

மனித உடல் வைரஸ்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அவைகள் தங்களை தக்கவைத்துக்கொள்வதற்கு மாறு வேடம் போடுகின்றது அதன் மூலம் வைரஸ்கள் நம்மை நன்றாக பாதிக்கலாம். இதன் நிமித்தம் மனிதர்கள்/விலங்குகள் கடுமையாக நோய் அல்லது இறப்பு வரை இட்டுச்செல்லுகின்றது. இந்த வைரஸ்கள் மிகவேகமாக பரவுகின்றதினால் அதன் தொடக்கம், மூலத்தை கண்டுபிடிப்பது கடினம். .

இப்போது வேதாளம் முருங்கமரத்தில் மீண்டும் உடலில் ஏதோ நடக்கின்றது புதிய மாறுபாடு மற்றும் சிறந்த வைரஸ் பழைய வைரஸை இடமாற்றம் செய்கின்றது. இப்போது வைரஸ்கள் தன்னைத் தானே அறிமுகம் செய்கின்றது

சும்மா சிவனே என்று கிடந்த என்னை எதற்காக தட்டி எழுப்பினாய் அதற்கான தண்டனைதான் இது, பட்டுத்தெளிந்துகொள் இது உனக்கான பாடம் கற்றுக்கொள். காடுகளையும் காட்டு விலங்குகளையும் தொந்தரவு செய்யாதே இந்த முறை தப்பித்துக் கொண்டாய் மீண்டும் வந்தால் தாங்கமாட்டாய், நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று சொல்லி விடை பெற்றுக்கொண்டது ஓமிக்ரான்.

◼ஓமிக்ரான் வைரஸ் ஒரு ஏய்ட்ஸ் நோயாளியிடமிருந்து தொடங்கியிருக்கலாம். ஓமிக்ரானைப் பற்றி இதுவரை அதிகம் அறியப்படாததால்,  புதிய SARS-CoV-2 பரம்பரையின் தற்போது பரவலிலுள்ள உள்ள இந்திய-டெல்டா மாறுபாட்டின் வழித்தோன்றல் அல்ல.

ஒன்று மட்டும் நிச்சயம், மாறுபாடு வைரஸ் மரபணுவில் பல மாற்றங்கள் உள்ள டெல்டாவை விட கொரோனா வைரஸ் குடும்ப மரத்தின் வேறு கிளையில் ஓமிக்ரோன் வைரஸ் வைக்கப்பட்டுள்ளது.

◼உலகம் முழுவதிலுமிருந்து வைரஸின் வரிசைமுறை முடிவுகளின் தரவுத்தளத்தில்  ஓமிக்ரானின் ஆரம்ப வடிவம் ஆல்பா மற்றும் டெல்டா போன்ற நான்கு மாறுபாடுகள் தோன்றுவதற்கு முன்பே அதன் சொந்த வைரஸ் வகையாக உருவாக்கப்பட்டுவிட்டது. அப்படி என்றால் இவ்வளவு காலமும் எங்கிருந்தது அல்லது  அறியப்படாமல் மறைந்திருந்ததா..?

◼கோவிட்-19, ஆரம்ப காலப்பகுதியில் தொற்றுநோயின் தொடக்கத்தில், பாதிக்கப்பட்ட விலங்குகளில் SARS-CoV உடன் இணைந்து ஓமிக்ரான் மாறுபாடு தோன்றியிருக்கலாம்.  ◾ஒரு கொறித்துண்ணி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட  பின்னர் வைரஸ் இந்த விலங்கில் குடியேறி, நீண்ட காலத்திற்கு மேலும் வளர்ச்சியடைந்து பிறழ்ந்திருக்கலாம்...?

◼டென்மார்க்கில், 2020 இல் ஒரு பிறழ்வு கண்டறியப்பட்டது வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகின்றது என்று, ஓமிக்ரான் இப்போது அதையே செய்து கொண்டிருந்திருக்கலாம். பிறழ்வு முதலில் மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்குத் தாவி பின்னர் மீண்டும் பிறழ்ந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம்..?  நன்றி மகேஷ்-இரவி

 




வியாழன், 9 டிசம்பர், 2021

Are you immune now?

நீங்கள் இப்போது நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவரா? புதிய மாறுபாடு ஓமிக்ரான் பரவல், முன்கூட்டியே தடுப்பூசி செலுத்தியவர்களின் நிலை என்ன? நீங்கள் கோவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி போட்டுவிட்டீர்களா? அப்படியானால் உங்களுக்கு போடப்பட்ட தடுப்பூசி, SARS-CoV-2 வைரஸ்க்கு எதிராக செயலில் உள்ளதா,

நீங்கள் இப்போது புதிய மாறுபாடு கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவரா, அப்படியானால் அது எவ்வளவு ஆன்டிஉடல் செறிவைக் கொண்டது. ஒரு சராசரி காப்பு திறனுக்கு நிறைய படைவீர்ர்கள் அதாவது பெருமளவு ஆன்டிஉடல்கள் இரத்தத்தில் காணப்படுகின்றது.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு எவ்வளவு கால இடைவெளி தேவைப்படுகின்றது, ஆய்வகம் மற்றும் சுய பரிசோதனையில் உங்கள் இரத்த ஆன்டிபாடிகளின் செறிவை கொண்டு தீர்மானிக்கமுடியும்.

நீங்கள் தீராத நோய்களினால் பீடிக்கப்பட்டிருந்தால் அல்லது முதிர்வயது காரணமாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலமிழந்து நோஞ்சானாக இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஊக்கதடுப்பூசி தேவைப்படுகின்றது.

மெசஞ்சர் (mRNA) தொழில்நுட்பத்தை கொண்ட, பயோன்டெக் / ஃபைசர் மற்றும் மாடர்னாவின் கொரோனா பூஸ்டர் தடுப்பூசிகளில் புதிய வைரஸ் டெல்டா, ஓமிக்ரான் முனைப் புரதங்களை(S1/S2) புதிய மேன்பாடு தழுவி தயாரிக்கப்படுகின்றது.

அதாவது உங்களுக்கு பழைய வைரஸ்களுடன் இணைந்து புதிய வைரஸ் தொற்றில்லிருந்தும் 90 விழுக்காடுகள் பாதுகாப்பு கிடைக்கின்றது. இன்றைய நிலவரம் கருதி கண்டிப்பாக அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படுகின்றது.

தடுப்பூசி போடாதவர்களின் நிலை என்ன? SARS-CoV-2 கொரோனா வைரஸால் பாதிக்கப்படும்போது, ​​வைரஸை எதிர்த்துப் போராடக்கூடிய ஆன்டிபாடிகள் நோயெதிர்ப்பு T செல்கள் இயல்பாகவே உருவாகின்றன, PCR பரிசோதனை மூலம் SARS-CoV-2 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு குணமடைந்தவர்களில், தற்போதைய நிலையில், அவர்கள் ஓரளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்று கருதப்படுகின்றது. இருப்பினும், காலப்போக்கில் ஆன்டிபாடிகளின் எண்ணிக்கை குறைகின்றது. இவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி அவசியமானது.

ஆய்வகத்தில் எப்போதும் IgG ஆன்டிஉடல் சோதனைகளின் இலக்கு ஆன்டிஜெனை (முனைப்புரதம் S1/S2) மட்டுமே பயன்படுத்துகின்றன. மறுபுறம், நேர்மறை IgG + உறுதிப்படுத்தல் சோதனையின் பொதுவான மதிப்பீடுகளிலிருந்து ஒரு தொகுப்பில் 3 இலக்கு ஆன்டிஜென்கள் கண்டறியப்படுகின்றது.

முனைப்புரதம்(S1, S2) மற்றும் நியூக்ளியோகேப்சிட்-(கருப்புரதம்) (Nc) புரதத்திற்கு எதிரான ஆன்டிபாடிகள் செயலில் உள்ளதா, உண்மையில் நோய்த்தொற்று ஏற்பட்டதா என்பதை மதிப்பிடுவதற்கு, ஆன்டிபாடியின் சுயவிவரத்தின் ஒட்டுமொத்த மதிப்பீடு மிகவும் நம்பகமானதாக பார்க்கப்படுகின்றது. நோயின் கடுமையான போக்கு T-செல்களும் பார்க்கப்படுகின்றது. தீராத நோய்களின் நிமித்தம் மற்றும் முதிர்வயது காரணமாக IgG ஆன்டிஉடல் சோதனைகளின் மதிப்பீடு குறைவானதாக காணப்படலாம்.




திங்கள், 6 டிசம்பர், 2021

stutter

திக்குவாய்💙💚💛 பேச்சுத் திணறல் (பால்பூடீஸ்) என்பது மோட்டார் தொடர்பான பேச்சுக் கோளாறாகும், அதாவது ஒருவரின் சரளமான பேச்சு ஓட்டம் தடைபடுகின்றது. (மோட்டார் இயக்கம் என்பது உடல் இயக்கத்திற்கும் அறிவாற்றல் வளர்ச்சிக்கும் இடையிலான ஒரு உறவு)

தத்தத்தன தத்தத் தனதன இது பொதுவாக எந்த அறிவிப்பும் இல்லாமல் வந்து வந்து போகும் பூனை என்று சொல்வதற்கு பதிலாக பூ-பூ-பூ……..பூ …. னை, கோழி, கோ-கோ……ழி ஈ என்ற எளிமையான சொற்கள் குழந்தையின் உதடுகளிலிருந்து சரளமாக வெளிவர விரும்புவதில்லை, அதற்குப் பதிலாக அவை ஒரு ஒலி அல்லது ஒரு எழுத்தை மீண்டும் மீண்டும் கூறுகின்றன.

சில சமயங்களில் பேசுவது முற்றிலுமாக நின்று முழு வார்த்தையும் சிக்கிக் கொள்ளுகின்றது. இரண்டு நிமிடங்கள் கடந்து மீண்டும் முழுமையாக வந்து போகும். பள்ளியில் ஆசிரியர் கேட்கும் ஒரு கேள்விக்கு பதில் சொல்வதற்குள்ளே அடுத்த பாடத்திற்கு மணியடித்துவிடுவார்கள்.

பேச்சு கோளாறின் போது ஏற்படும் கண் சிமிட்டுதல் மூச்சு வாங்கும் சுவாசம், நடுங்கும் உதடுகள், துளிரும் வியர்வை மாறுபட்ட தலை முக அசைவுகளையும் குழந்தையிடம் கவனிக்க முடியும். உலக மக்கள் தொகையில் சுமார் ஒரு சதவீத மக்கள் இந்த கோளாற்றினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் இதில் பெண்களை விட ஆண்களே அதிகம்.

திக்கு வாய்க்கும் உளறு வாய்க்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு அதிக மதுபானம், கல்லீரல் பாதிப்பால் நாக்கு தடித்து ஏற்படும் பேச்சு தடுமாற்றம், வார்த்தைகள் சுருங்கி உச்சரிப்பு கோளாற்றை ஏற்படுத்துவதுண்டு

இதனுடைய காரணிகளை களைந்துவிட்டால் குணமாகிவிடும். பேச்சுத் திணறலுக்கு நீண்டகால பயிற்சியும் நல்ல மருத்துவ ஆலோசனை, பேச்சு சிகிச்சையாளரின் உதவியும் தேவைப்படுகின்றது. திக்குவாய் உள்ள பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலைகள் நல்ல அரவனைப்பு அவர்களை மீட்டெடுப்பதற்கு உதவுகின்றது.

மூளையில் தவறான தொடக்கம் சரளமாகப் பேசும் மொழிப் பகுதிகளின் போதிய ஒருங்கிணைப்பு இல்லாமல் போவது ஒரு பிள்ளை பேசும் போது நாக்கு தடுமாறுகின்றது

குழந்தைகளில் திணறல் பெரும்பாலும் குழந்தை பருவத்திலேயே பேச்சு ஓட்டத்தின் தொந்தரவுடன் தொடங்குகின்றது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சரியான காரணத்தை அடையாளம் காண முடியாது. அவர்களின் இந்த மழலை வாழ்க்கை காலகட்டத்தில், அவர்கள் புதிய சொற்களைக் கற்றுக்கொள்கிறார்கள்,

மூளை சேமிப்பதில் மும்முரமாக உள்ளது மற்றும் புதிய பதிவுகள் செயலாக்கப்பட வேண்டிய நிர்பந்தத்தில் பேசுவதற்கு சொற்கள் இல்லாமல் பேச்சுத் திணறல் ஏற்படலாம். இது இயல்பானது குழந்தை வளரும்பருவத்தில் காணாமல் போய்விடும்.

திணறல் காரணங்கள்: பல்வேறு காரணங்களால் கண்டறியப்படலாம் என்று இன்றைய ஆராய்ச்சிகள் கூறுகிறது. அதில் ஒரு காரணம் நரம்பு சமிக்ஞைகளின் தொந்தரவு. குழந்தை பருவத்தில் அதிர்ச்சிகரமான மூளை காயம், மண்டையில் அடிபடுதல் விபத்து அல்லது நோய்களின் நிமித்தம் மூளை பாதிப்பு போன்ற உடல்ரீதியான காரணிகளும் திக்குவாய்க்கு சாத்தியமான காரணங்களாகும்.

கொரோனாவின் நீண்டகால பாதிப்புக்கள்: பொதுவாக எல்லா வைரஸ்களும் மரபணுக்களை அறுத்து சீர்குலைத்து விடக்கூடியது. கொரோனா வைரஸை சொல்லவா வேண்டும் அது தன்பாட்டில் ஏதோ செய்து கொண்டிருக்கின்றது.

கோவிட் -19 நரம்புகள் மற்றும் மூளையின் செயல்பாடுகளை சீர்குலைக்கின்றது. SARS-CoV-2 கொரோனா வைரஸ் மூளையில் கோளாறுகளை ஏற்படுத்தும். மூளை வீக்கம், செல்கள் மற்றும் இரத்த நாளங்களில் செயலிழப்பு, இரத்தகசிவு மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் எதிர்வினைகளுக்கு வழிவகுக்கும். இது பேச்சு திணறல் மட்டுமின்றி ஒருவரின் ஒட்டுமொத்த பேச்சையும் நிறுத்திவிடும்.

சம்பந்தப்பட்ட பேச்சு உறுப்புகளின் மோட்டார் கோளாறுடன் இணைந்து, பேச்சு ஓட்டத்தின் சீர்குலைவுகள் உருவாகலாம். குழந்தைகள் பேசுவதை விட வேகமாக சிந்திப்பதால் பேசும்போது திணறுகிறார்கள்.

திக்குவாய் (பால்புடிஸ்) உளவியல் ரீதியாகவும், மரபணு ரீதியாகவும் ஏற்படலாம். அடிக்கடி ஏற்படும் மன வருத்தம், கடுமையான மன அழுத்தம், அதிர்ச்சி, பயம் கடுமையான கோவம், குடும்பப் பிரச்சனைகள், பெற்றவர்களின் சண்டைகளினால் குழந்தைகளின் மனம்/மூளை பாதிக்கப்படுகின்றது. .

பிள்ளைகளை படி படி என்று தொல்லை கொடுக்கும் பெற்றவர்களின் கடுமையான போக்கு உணர்ச்சி அழுத்தத்தைத் தூண்டும் சூழ்நிலைகள் பேச்சுத் திணறலை  மட்டுமின்றி சில சமயங்களில் ஒட்டுமொத்தமாக பேசும் திறனும் முடக்கப்படுகின்றது. பிள்ளைகளின் திக்கு வாய்க்கு பெற்றவர்கள் கூட ஒரு காரணமாக அமையலாம்.

திறமையாக பேசும் ஒருவர் தனக்கு ஒரு துன்பம் ஏற்பட்டு, நீதிமன்றம் செல்லும்போது அவரால் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் போகின்றது அவ்வளவு தூரம் ஒருவரின் பேச்சுத்திறனை துன்பம் மன வேதனைகள் தடுத்துவிடுகின்றது.

கடும் கோபம் எரிச்சல், சரளமாக பேசும் ஒருவரின் பேச்சை முடக்கி விடுகின்றது தன்னுடைய எண்ணங்களை மற்றவர்களுடன் பரிமாற முடியாமல் போகும்போது அதை செயலில் காட்டுகின்றார். யாரையாவது போட்டு அடிப்பது தன்னுடைய அன்பை காட்ட முத்தம் கொடுப்பது. தான் சொல்ல வந்ததை இப்படி சொல்லி முடிக்கின்றார்.

உளவியல் காரணிகள்: மன உளைச்சலுக்குப் பிந்தைய வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்தும் ஒருவருக்கு பேச்சு திணறல் ஏற்படலாம். பயம், பதட்டம் போன்றவற்றுடன் இது நிகழ்ந்து அதன் பிறகும் தொடரலாம். இந்த கோளாறு உள்ள பிள்ளைகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் போது மிகவும் மோசமானதாக வளர்கின்றது, அதாவது கிண்டல், கேலி அவமானம் போன்றவை அந்த பிள்ளையின் பேச்சு கோளாற்றை தீவிரமடைய செய்கின்றது.

நரம்பியல் காரணிகள்: பேச்சு தடுமாற்றத்தை பாதிக்கக்கூடிய சாத்தியமான நரம்பியல் காரணிகள் பற்றி பல்வேறு அனுமானங்கள் உள்ளன. உதாரணமாக, பேசுவதற்குப் பொறுப்பான நரம்பு சமிக்கைகளின் இடையூறு அல்லது பேச்சு உறுப்புகளின் மோட்டார் தொந்தரவுகள் திணறலைத் தூண்டும் என்று நம்பப்படுகின்றது.

கூடுதலாக, விஞ்ஞானிகள் மூளையில் ஒரு குறிப்பிட்ட பகுதி திணறலுக்கு முக்கிய பங்களிப்பாக இருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். இது மூளையின் முன் பகுதியில் அமைந்துள்ள ஒரு அதிகப்படியான நெட்வொர்க் ஆகும். பாதிக்கப்பட்ட நபர்கள் இதன் பாதிப்பால் தடுக்கப்படுகிறார்கள் மற்றும் பேச்சு இயக்கங்களைத் தயாரிக்கவோ அல்லது செயல்படுத்தவோ முடியாது, இது சரளமான உச்சரிப்பை சீர்குலைக்கின்றது.

பேச்சுத் திணறலுள்ள பிள்ளைகள் அவசரகாலங்களில் அவர்களினால் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவமுடியாமல் போகலாம், அதற்கு அவர்களை வாட்ஸ்அப்பில் விரைவாக எழுதும் எழுத்துப் பயிற்சி கொடுங்கள். அவர்களின் உடல் கை அசை மொழியை விரைவாக புரிந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் அதற்கான பயிற்சியும் கொடுங்கள். இது அவர்களை ஆபத்தான காலத்தில் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்வதற்கு உதவும். நன்றி.

பேச்சுத் திணறல்

- எழுத்துஒலி.

- வரைவிலக்கணம்.

- கட்டுப்படுத்துதல்.

- கடுமையான போக்கு.

- மன அழுத்தம்.

- தகவல் தொடர்பு.

- ஒழுங்கின்மை.

- உரை/பேச்சு.