சனி, 22 ஏப்ரல், 2023

Tamil and < > Fonts of the Phoenicians: Greek fonts are different from Latin fonts

தமிழீயும் < > ஃபீனீசியர்களின்  எழுத்துருக்களும்; கிரேக்க எழுத்துருக்கள் லத்தீன் எழுத்துருக்களிலிருந்து வேறுபடுகின்றன. ஃபீனீசியர்களின்  எழுத்துருக்களிலிருந்து  பண்டைய கிரேக்க எழுத்துருக்கள் தோற்றிவிக்கப்பட்டன, கிரேக்க எழுத்துருக்களிலிருந்து லத்தீன் எழுத்துருக்கள் பெறப்பட்டவை. ஃபீனீசியர்கள் தனிப்பட்ட எழுத்துருக்களிலிருந்து எழுதும் முறையை உருவாக்கினர்.  இந்த உலகத்திற்கு 22 எழுத்துருக்களை தந்தவர்கள்.


இது உலகில் முதன்மையானது,  உலக மக்களினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது மற்றும் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டிலிருந்த மெசபடோமியா களிமண் மாத்திரைகள் மற்றும் எகிப்திய ஹைரோகிளிஃப்ஸ் [சித்திர குறியீடு] எகிப்தின் பண்டைய உயர் கலாச்சாரங்களின் எழுத்து முறைகளை முறியடித்தது. இது ஒரு வடமேற்கு செமிடிக் மொழியாகும், இது பல மொழிகளுடன் தன்னை பகிர்ந்து கொண்டது. தமிழீயும் < > ஃபீனீசியர்களின்  எழுத்துருக்களும்  சமகாலத்தில் ஒருமித்து பயணித்த எழுத்துருக்கள்


ஃபெனிசியா/ஃபீனீசியர்கள் என்பது இன்றைய இஸ்ரேல், லெபனான் மற்றும் சிரியா மாநிலங்களின் எல்லையில் கிழக்கு மத்தியதரைக் கடற்கரையில் ஒரு குறுகிய நிலத்தின் பெயர்.


இவர்கள்  பல தலைமுறைகளாக தலை சிறந்த கடல் பயணிகள்/வணிகர்கள். இவர்கள் கடலில் கப்பல்கள் கட்டி விடுவதே இவர்களின் தொழில். இவர்கள் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து  இங்கும்  எழுத்துருக்களை எடுத்து சென்றிருக்கலாம்.


சாராம்சம்: ஃபெனிசியாவின் மிக முக்கியமான கலாச்சார சாதனைகளில் ஒன்று  எழுத்துருக்களை உருவாக்கியது, இது உலக மொழிகளின் ஒரு தூய மெய் எழுத்துக்களாக கருதப்படுகின்றது. இது பின்னர் கிரேக்க மற்றும் லத்தீன் எழுத்துருக்களின் அடிப்படையை உருவாக்கியது. ஃபீனீசியன் எழுத்துருவின் தோற்றம் கிமு 2 ஆம் மில்லினியம் வரை செல்கின்றது.


உலகில் பேசப்பட்ட முதல் மொழி எதுவாக இருக்கும் ? பல மொழிகளை ஆதி மனிதர்கள் பேசியிருக்க முடியாது. அவர்கள் ஏதாவது ஒரு மொழியைத்தான் [ஓசை] பேசியிருக்க முடியும் காரணம், பேச்சு குரல் கேட்டல் உடற்கூறியில் அடிப்படைகள் சகல மனிதர்களுக்கும் பொதுவாக இருக்கின்றது. இவ்வளவு ஒலி அலைகளைத்தான் ஒரு மனிதனினால் கேட்கவும் பேசவும் முடியும். இதற்கு மேலயும் கீழேயும் அவனால் கேட்கவோ பேசவோ முடியாது.


எந்த மொழிக் குடும்பத்தை சேர்ந்த  குழந்தையாக இருந்தாலும் அது  பிறந்தவுடன் "குவாக் குவாக்" என்றுதான் கத்தும். அதற்கு காரணம்  குரல்வளை, மூச்சுக்குழாய் இடையே குருத்தெலும்பு இணைப்பு திசுக்கள் சகலருக்கும் ஒரேமாதிரியாக இருப்பதுதான்.


ஆதிமனிதன் ஒலிகளை எழுப்பி மற்றவர்களுடன்  தொடர்புகளை வைத்திருந்தான் அவன் எழுப்பிய அந்த ஓசை தான்  முதல் மொழி. உலக மொழிகளின் தொடக்கம், அந்த மொழிகளின் எழுத்துருவங்களின் தொடக்கத்திலிருந்து  தொடங்குகின்றது இதற்கு முன்னால்  அவர்கள்  ஒன்றுபட்ட ஒரு மொழியைத்தான் பேசியிருக்க முடியும்.


பண்டைய தமிழர்கள் இயற்கையின் ஒலிகளை எழுத்துருக்களாக [தமிழீ] உருமாற்றினார்கள்.  [ k] ஹாப்பா [அப்பா] என்ற ஒளியை முதல் எழுத்தாக [அ ] என்று. காளை மாடு கத்தும் ஒலியை  ம் மா [ A]   [அம்மா ] உருவாக்கினார்கள்.


ஆதி மனிதன் மிகவும் சொற்பமான ஒலிகளை எழுப்பியும் மற்றும் தலை, கை போன்ற உடல் அசைவுகளை கொண்டே  மற்றவர்களுடன் பேச்சுத் தொடர்பு வைத்திருப்பான்.


இன்றைய நடையில் சொன்னால்  ஐம்பதுக்கும் குறைவான சொற்களை  கொண்டே  ஆதி மனிதன் உரையாடி இருப்பான் என்பது வெளிச்சமானதொரு உண்மை,  இந்த குறைச்சலான சொற்களை  கொண்டு  தொடர்ச்சியாக அவர்களினால்  ஒருபோதும் பேசியிருக்க முடியாது. அந்த உரையாடல் கூச்சலாகவும் கத்தலாகவும் தான் இருந்திருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.


இன்றைக்கும் கூட அமேசான், ஆப்பிரிக்கா பழங்குடி மக்கள் சொற்பமான சொற்களை வைத்தே உரையாடுகின்றார்கள். இந்த மொழிகளுக்கு எழுத்துருவம் மற்றும் புது மொழி சொற்களின்  கலப்புகள் எதுவும் கிடையாது அவர்கள் பேசினால் ஒரே கூச்சல்  ஒலியாகத்தான் இருக்கும் எதுவுமே புரியாது, ஆனால் அந்த மக்களுக்கு அது புரிகின்றது.


பின்னால் மக்கள் பெருகி சமூகமாக வளரும் போது வேறும் பல புது சொற்கள் இணைந்து ஒரு நீண்ட உரையாடலுக்கு வழியை திறந்து விட்டது, ஆனால் சகலருக்கும் பொதுவானதாக இருந்த அந்த "ஓசை மொழி"  ஒரேமாதிரியான ஒலியுடன்தான் பேசப்பட்டு வந்தது.


தொடர்ச்சியானதொரு உரையாடல்/பேச்சு தொடங்கியதே நிறைய வளமான நல்ல சொற்கள் வந்த பிற்பாடுதான். ஒரு மொழியை மொழி என்று அடையாளப்படுத்தியதும் எழுத்துருவம் மற்றும் அதில் பிறந்த சொற்களும் தான்.


ஒரேமாதிரியான ஒலியுடன் பேசப்பட்டு வந்த  ஓசை மொழியை பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட  மாறுபட்ட எழுத்துருவங்கள் உச்சரிப்பு  என்ற பெயரில்  சிதைத்து புதுப்புது ஒலிகளை [ சொற்களை] இணைத்து பல மொழிகள் உருவாக காரணமானது. எழுத்துருவங்கள் எந்த உச்சரிப்பை சொல்லிக் கொடுத்ததோ, அந்த உச்சரிப்பே அந்த மொழியின் ஒலியானது.


தமிழ் மொழி பழைய மொழியாக இருந்தாலும் இன்றைய புதிய எழுத்துருக்கள் அடிப்படையில் அதுவும் புதிதாக பிறந்த புது மொழி குடும்பத்தை சேர்ந்தது.


தாய் மொழி  தமிழ் மொழியானது: மெசபடோமியா - சுமேரியர்களுக்கு முன் எகிப்தைப் போலவே, மெசபடோமியாவில் உள்ள தொல்பொருள் கண்டுபிடிப்புகள் 4 ஆம் ஆண்டின் இறுதியில் மற்றும் 3 ஆம் மில்லினியத்தின் தொடக்கத்தில் அங்கு நடந்த ஒரு இராணுவப் புரட்சியை ஆவணப்படுத்துகின்றன.


எகிப்தைப் போலவே, மெசபடோமியாவும்  [சுமேரியர்கள்]  இந்தோ-ஐரோப்பிய/ஆரிய வெற்றியாளர்களால் கைப்பற்றப்பட்டது மற்றும் இரத்தக்களரி தாக்குதல்களினால் அடிபணிந்தது. அதே வழியில், இரு நாடுகளின் வெற்றி அவர்களின் ஒரு வம்ச அரசாட்சியை நிறுவ வழிவகுத்தது.


வடக்கு மெசபடோமியாவில் உள்ள ஹலாஃப் கலாச்சாரம் [ஏறக்குறைய 6,000 – 5,100] மற்றும் தெற்கு மெசபடோமியாவில் உள்ள ஒபீட்/உபைட் கலாச்சாரம் [சுமார் 5,900 – 4,300] யூப்ரடீஸ் மற்றும் டைக்ரிஸ் [ நதிக்கரை நாகரீகம் ] இடையே உள்ள நிலங்கள் வன்முறையாக கைப்பற்றப்பட்டது. இதற்கு முன்பு செழிப்பான,  அமைதியான கலாச்சாரங்களில்  வாழ்ந்த மக்கள் இவர்களின் வன்முறையால் பல இடங்களுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தார்கள். [இலங்கை இந்தியா...?]


இந்தோ-ஐரோப்பிய வெற்றியாளர்களால் ஆணாதிக்கம் தொடங்குவதற்கு குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும், ஆன், ஈ, டுமுசி, மர்டுக், என்கி [ எகிப்திய கடவுள்கள்] போன்ற ஆண் கடவுள்கள் ஆரிய பூசாரி சாதியால் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பும் ஆன்மீக தாய்வழி உயர் கலாச்சாரம் செழித்திருந்தது.


5000 ஆண்டுகளுக்கு முன்பு வரை, மக்கள் தந்தையையும் கடவுளையும் அறிந்திருக்கவில்லை.  பிறந்த குழந்தைக்கு  தன்னுடைய தந்தை யார் என்று கூட தெரியாது. தாயிடம் பால் குடிப்பதனால் அந்த குழந்தை தாயை மட்டுமே அறிந்திருந்தது.


தற்கால மனித இனம் சுமார் 300,000 ஆண்டுகளாக இருந்து வருகின்றது ஆரம்பத்திலிருந்தே தாய்வழி, அதாவது தாய்வழி இனம் அறியப்பட்டது. தாய்தான் பிள்ளைகளுக்கு மொழியை சொல்லி  கொடுத்தாள். தாய் பிள்ளைகளை அதட்டிய ஒலிகளே மொழிகளாக மாறியது.  தாயின் மொழி தாய் மொழியானது. தாய் குழந்தைகளுடன் எதிரொலிக்கும் ஒலிகள் மொழிகளாக மாறியது.


இயற்கையான முதல் தெய்வ வழிபாடு. அம்மன் வழிபாடு. பெண் தெய்வ [சக்தி ] வழிபாடு உலகில் முதன்மையான வழிபாடாக இருந்தது. தந்தையே,  பிதாவே!  என்பதெல்லாம் ஆணாதிக்கம் வந்த பிறகு பெண்களுக்கு எதிராக ஆண்களினால் திணிக்கப்பட்டது.


தாய், முதல் பெண் தெய்வ வழிபாடாக இருந்து வந்தது. சுமேரியர்கள் வழிபட்ட இனன்னா தேவி, இன்று துர்க்கா தேவி, மாரியம்மன், காளி என்று அறியப்படுகின்றது.


பண்டைய பெண்கள் ஆண்களினால் பல கொடுமைகளை அனுபவித்தவர்கள். அம்மன் அருளால் அவர்கள் அன்று சுகந்திரமாக இருந்தார்கள் ஆணாதிக்கம் அவர்கள் வழிபட்ட தெய்வங்களை  பால்வினையை தூண்டும் அசிங்கமாக சித்தரிக்கப்பட்டது.


ஆண்கள் தங்கள் வழிபடும் தலங்களுக்கு  பெண்களை அனுமதிப்பதில்லை  அப்படி அனுமதித்தாலும் சில கட்டுப்பாடு விதிகளை வைத்தார்கள். மனித குலம்  தோன்றிய வரலாற்றில் இருந்து இன்று வரைக்கும் ஆண்களின் கொடுமைகளை அனுபவித்தவர்கள்.


அந்த நேரத்தில் உலகம் முழுவதையும் இணைத்த வர்த்தகம், மக்கள் செழிப்பைக் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், கலாச்சாரம் மற்றும் கல்வி, கலை மற்றும் கையேடு திறன்கள், மருத்துவ அறிவு மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் பரவல் ஆகியவற்றின் கலாச்சார பரிமாற்றத்தை செயல்படுத்தியது.


தொல்பொருள் ஆராய்ச்சியின்படி, இந்தோ-ஐரோப்பியர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட புதிய கற்காலத்தின் வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரங்கள் அத்துனையும் விதிவிலக்கு இல்லாமல், விதியற்ற, சமத்துவ, அமைதியை விரும்பும் சமூகங்களாக இருந்தன.  மற்றும் அவை  எளிதாக சூறையாடக் கூடிய, நிராயுதபாணி  பாதுகாப்பற்றவையாகவும் இருந்தது..


இந்த நாடுகள் [இந்தியா, இலங்கை] வெற்றியாளர்களுக்கு எளிதாக இரையாகின. இந்தோ-ஐரோப்பிய முதல் ஆணாதிக்க சர்வாதிகாரத்திற்கு தமிழர்களின் எழுத்துருக்கள் [தமிழீ]  இரையாகி /சூறையாடி இருக்கலாம்.


புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine




 புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக