திங்கள், 30 மே, 2022

monkey pox

குரங்கு பெரியம்மை வைரஸ்: ஆர்த்தோபாக்ஸ் வைரஸ், ஒரு நேரியல் இரட்டை இழையுடைய DNA 170 முதல் 450 நானோ மீற்றர் வரை அளவைக் கொண்டுள்ள ஒரு இனமாகும்.

ஆர்த்தோபாக்ஸ் வைரஸ்கள் காட்டு விலங்குகளிடம் இருந்து தொற்றக்கூடிய ஒரு வைரஸ். அதாவது “ஜூனோசிஸ்” ஒரு விலங்கியல் நோய். பாலூட்டிகளின் பெரியம்மை என்றும் குறிப்பிடப்படுகின்றன. வைரஸ்கள் முதலில் விலங்குகளிடமிருந்து நேரடியாக மனிதர்களுக்கு மட்டுமே பரவுகின்றது.

பெரும்பாலும் பாதிக்கப்பட்ட கொறித்துண்ணிகள் செல்லப் பிராணி, வளர்ப்பு விலங்குகளின் நெருங்கிய சகவாழ்வு, மற்றும் கடையில் இறக்குமதி செய்யப்பட்ட தோல், இறைச்சி முதலில் விற்பனையாளர்களுடனும், பின்னர் புதிய உரிமையாளர்களுடனும் தொடர்பு இந்த புதிய தொற்றுநோய் பரவலுக்கு காரணியாக இருக்கலாம்.

முக்கியமாக ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸ் அதிகமாக பரவியிருந்தது / பரவுகின்றது. முதல் முதலில் இந்த வைரஸ் புகார் பதிவானது, 1970 இல் காங்கோவில் ஒன்பது மாத சிறுவனில் அடையாளம் காணப்பட்டது. அப்போதிருந்து, மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவில் சிறிய நோய் தொற்றுக்கள் மீண்டும் மீண்டும் வெடித்தன. இதுவரை, ஆப்பிரிக்க கண்டத்திற்கு வெளியே மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சில பதிவுகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன.

2003 இல், குரங்கு-பெரியம்மை முதன்முதலில் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சலால் சுமார் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கானாவில் இருந்து அமெரிக்காவிற்கு கொறித்துண்ணிகள் இறக்குமதி செய்யப்பட்டதே இதற்கு காரணம் என கண்டறியப்பட்டது. பின்னர், கிரேட் பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் (2018), சிங்கப்பூர் (2019) மற்றும் மீண்டும் அமெரிக்காவில் (2021) ஐரோப்பா/ ஜெர்மனி (2022) புதிய தொற்றுக்கள் பதிவாகியிருக்கின்றது.

இந்த விலங்கியல் நோய் பரவலுக்கு முழுமுதல் காரணியாக இருப்பது இறக்குமதி செய்யப்பட்ட காட்டு விலங்குகள் மற்றும் இறைச்சி உணவுகள் என்பது வெட்டவெளிச்சமான உண்மை.

அதிர்ஷ்டவசமாக குரங்கு பெரியம்மை வைரஸ் பரவலுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தால் மட்டுமே சாத்தியமாகும், தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருங்கி பழக வேண்டும், நீர் கொப்பளங்கள் துளி அல்லது நெருங்கிய உரசல், அந்தரங்க தொடர்புகள் தேவைப்படுகின்றது 

வைரஸ் தொற்று ஏற்பட்டு முதல் மூன்று வாரங்களுக்குப் பிறகுதான் நோய்குறிகள் தெரிகின்றது அதற்கு பிறகுதான் பரவுகின்றது. நோயின் முதல் அறிகுறிகள் காய்ச்சல் தசை வலி சோர்வு அதற்கு பிறகு தோலில் கொப்புளங்கள் போடத்தொடங்குகின்றது.நோயின் மொத்த காலம் 2-3 கிழமைகள்.

இந்த காலத்தில் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தால் மட்டுமே தொற்று ஏற்படும். தொற்று ஏற்பட்டவர்கள் பெரியம்மை நோயைப்போல் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டாலே போதும் பரவலை முற்றுலுமாக தடுக்கமுடியும். இதுவொரு (எண்டெமிக்) உள்ளூர் தொற்றுநோய் பெரியளவில் பரவும் என்பது சாத்தியமில்லாத ஒன்று.

மனித பெரியம்மை, குரங்கு பெரியம்மை பெரியளவில் உயிர் ஆபத்துக்களை ஏற்படுத்தாவிட்டாலும் முகத்தில் சருமத்தில் தீராத வடுக்களை ஏற்படுத்திவிட்டு போகும். உங்கள் முக அழகிற்கு தீங்கிழைக்கும் அசிங்கமான ஒரு நோய். பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு, பாக்டீரியா தோல் தொற்று, நிமோனியா அல்லது மூளையழற்சி விளைவுகள் பலமானதாக இருக்கும்.

தீங்கிழைக்கும் இந்த வைரஸ்களின் தீராத பாதிப்புக்களை முன்கூட்டியே தடுக்க கூடிய வல்லமை தடுப்பூசிகளுக்கு மட்டுமே இருக்கின்றது. நோயின் கடுமையான போக்கு, கொப்பளங்கள் ஏற்படுத்தும் வடுக்களிலிருந்து 85 விழுக்காடுகள் உங்கள் பிள்ளைகளின் முக அழகை தடுப்பூசிகள் காப்பாற்றித்தருகின்றது.

58-60 களில் பெரியம்மையினால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்தால் தெரிந்து கொள்வீர்கள். முகத்தில் எவ்வளவு வடுக்களை அவர்கள் சுமக்கின்றார்கள் என்று. இன்று இந்த வைரஸ் இல்லாது அழித்து ஒழித்த பெருமை தடுப்பூசிகளையே சேரும்.

திரும்பவும் இந்த வகை வைரஸ்கள் வெளியில் தலை காட்டுவது வருத்தம் தருகின்றது. எனக்கு போடப்பட்ட பெரியம்மை தடுப்பூசி காலாவதியாகி 50 வருடங்களுக்கு மேலாகின்றது. நோய் எதிர்ப்பு சக்தி பழைய பகையாளியை இன்னும் நினைவில் வைத்திருக்கின்றதா என்பது கேள்விக்குறிதான். இன்னுமொரு தொற்று ஏற்பட்டால்தான் தெரியும் நோய் எதிர்ப்பு சக்தியின் நினைவாற்றல் எவ்வளவு பலம் வாய்ந்ததென்று,

பெரியம்மை நோய் எங்களுக்கு ஒன்றும் புதியதல்ல, அதனுடைய கடுமையான போக்கு, கொடூரம் குறித்து ஏற்கனவே அனுபவப்பட்டவர்கள். வேப்பிலைக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு அதனுடைய கொடூரம் அன்றிருந்தது.

இன்று அது குரங்கின் முகமூடியை போட்டுக் கொண்டு வந்திருக்கின்றது. பெரியம்மையை அருகிலிருந்து பார்த்த அனுபவமுள்ள உங்கள் தாத்தா பாட்டியிடம் அதனுடைய தீவிரம் குறித்து கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். அவர்களும் பெரியம்மை குறித்து கதை கதையாக சொல்வார்கள்.

அதிக காய்ச்சல் குரங்கு பெரியம்மை அறிகுறிகளில் ஒன்று. அதிக காய்ச்சல் குரங்கு பெரியம்மை காய்ச்சலின் அறிகுறியாகும். இது பொதுவாக திடீரெனவும் வேகமாகவும் 40 டிகிரி செல்சியஸ் வரை உயரும். குரங்கு பாக்ஸ் நோய்த்தொற்றின் பல அறிகுறிகளில் காய்ச்சலும் ஒன்று.

காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகள் தோன்றி சுமார் ஒன்று முதல் மூன்று நாட்களுக்குப் பிறகு உடலில் அரிப்பு சொறி ஏற்படுகின்றது. இது பொதுவாக நோயாளியின் முகத்தில் தொடங்கி, கைகளின் உள்ளங்கைகள் அல்லது பாதங்களின் உள்ளங்கால்கள் போன்ற உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கின்றது.

பிறப்புறுப்பு பகுதி மற்றும் சளி சவ்வுகளிலும் தோல் மாற்றங்கள் ஏற்படலாம். சொறி முதலில், சொறிந்து சிவந்த தோலில் சிவப்பு புள்ளிகளாக கவனிக்கப்படுகின்றது, அவை கொப்புளங்களாக மாறி சீழ் நிரப்பப்பட்டு, சில நாட்களுக்குப் பிறகு அதன்மேல் ஒரு மேலோடு உருவாகின்றது.

மேலும் காய்ச்சலைத் தவிர, நோய்த்தொற்றின் முதல் சில நாட்களில் கடுமையான தலைவலியும் ஏற்படுகின்றது. தலைவலி குரங்கு பெரியம்மை காய்ச்சலின் மிக முக்கியமான அறிகுறிகளில் ஒன்றாகும்.

தலைவலி மட்டுமின்றி, உடல் மற்றும் தசை வலி, மூட்டு மற்றும் தசைக் கட்டு வலியையும் ஏற்படுத்தும். குறிப்பாக முதுகுவலி பெரும்பாலும் குரங்கு பாக்ஸுடன் தொடர்புடையது.

வீங்கிய நிணநீர் கணுக்கள் குரங்கு பாக்ஸின் அறிகுறியாகும். நிணநீர் கணுக்களின் காணக்கூடிய வீக்கம் குரங்கு பாக்ஸால் கூட சாத்தியமாகும்.

பல நோய்களில், குறிப்பாக கழுத்து பகுதியில் உள்ள நிணநீர் கணுக்கள் வீங்குகின்றன. ஆனால் அக்குள் அல்லது இடுப்பு பகுதியில் உள்ள நிணநீர் முனைகளும் பாதிக்கப்படலாம்.

இருமல் மற்றும் தொண்டை வலி, குரங்கு பாக்ஸின் அரிய அறிகுறிகள். குரங்கு காய்ச்சலின் சில சந்தர்ப்பங்களில், இருமல் மற்றும் தொண்டை புண் கூட ஏற்படலாம். மறுபுறம், சோர்வு, கூதல் குளிர் உணர்தல் போன்ற அறிகுறிகளும் அரிதாக ஏற்படலாம். இது போன்ற அறிகுறிகள் வேறு காரணங்களின்றி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை பார்க்கவும்.

மருத்துவரின் பரிந்துரை, வலி நிவாரணிகள் ஆரம்ப அறிகுறிகளைப் போக்க உதவும். கடுமையான சந்தர்ப்பங்களில் வைரஸைத் தடுக்க (டெகோவிரிமேட்) மருந்து மற்றும் தடுப்பூசியும் உள்ளது.

டெகோவிரிமேட் (tecovirimate) என்பது ஆர்த்தோபாக்ஸ் குடும்ப பிரதிநிதிகள்: மனித பெரியம்மை மற்றும் குரங்கு பெரியம்மை போன்ற வைரஸ்களுக்கு எதிராக செயல்படும் ஒரு வைரஸ் தடுப்பு மருந்தாகும். நன்றி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக