திங்கள், 23 மே, 2022

What are the differences between glucose and galactose, fructose?

இயற்கையின் சில விதிகள்: இயற்கை ஒரு சில விதிகளுக்கு உட்பட்டுத்தான் இயங்கி கொண்டிருக்கின்றது. அந்த விதிகளை கண்டு சொல்வதுதான் அறிவியலின் கடமை. இன்று நாங்கள் பயன்படுத்தும் சர்க்கரைகள் குறித்து ஒரு தவறான கருத்து பலரிடம் இருக்கின்றது.

சர்க்கரை நோயாளிகள் இந்த உணவு, எந்த சர்க்கரையை உணவில் எடுத்துக்கொள்ளலாம் என்ற ஒரு தடுமாற்றம் சர்க்கரை நோயாளிகள் மத்தியில் இருக்கின்றது. சிறுமுழு தானியங்கள், மாமிசம், காய்கறிகள்: தாவரத்தின் எந்த பகுதியை நீங்கள் உணவாக எடுத்தாலும்; சாறு, கள்ளு, மாப்பொருள், நார்ப்பொருள் அது கார்போஹைட்ரேட்டுகள் கொண்டுதான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.

கார்போஹைட்ரேட்டுகள் என்றால் அது சர்க்கரைதான், சர்க்கரையின் ஒரு மறு பெயர்தான் கார்போஹைட்ரேட்டுகள் அது கார்பன் கொண்டு கட்டமைக்கப்பட்டதினால் அந்த பெயரை தாங்கி வருகின்றது.

உங்களுக்கு பழக்கமான ஒரு சொல் ஹைட்ரோகார்பன் அதை புரட்டிப்போட்டுப்பாருங்கள் கார்பன்+ஹைட்ரோ எரிசக்தி அதேதான் சர்க்கரையும், இதுவும் ஒரு எரிபொருள். அதில் ஒட்சிசன் (O) இல்லாது இருக்கும் எடுத்துக்காட்டாக: மீத்தேன்: CH₄ பியூட்டேன்: C₄H₁₀ சர்க்கரையில் ஒட்சிசன் (O) இணைந்திருக்கும்

இந்த கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரைகள் உணவு செரிமானத்தின் போது உடைக்கப்பட்டு உடலின் சக்தி பரிமாற்றத்திற்கு குளுக்கோஸ் என்ற ஒற்றை சர்க்கரை பயன்படுகின்றது.

50 வயதை கடந்த ஒரு சர்க்கரை நோயாளிக்கு உணவுக்கட்டுப்பாடு விதிமுறைகள் ஓரளவிற்கு சாத்தியப்படும். அதுவே சிறுபிள்ளைகள், இளையவர்களை கடைபிடிக்க சொன்னால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள அல்லது கடைப்பிடிக்க தவறுவார்கள்.

அவர்களும் மற்ற பிள்ளைகள் போல் சாக்லேட், பர்கர், பீட்சா, ஐஸ்கிரீம் என்று சாப்பிட ஆசைப்படுவார்கள். இல்லை உனக்கு தினமும் வரகரிசி சோறும் காய்கறி கூட்டும் என்று சொன்னால் கேட்பாங்களா?. அவர்களும் மற்ற பிள்ளைகள் போல் உணவில் சமநிலை பேணுவதற்கு,

அவர்கள் எந்த உணவை உண்ணவேண்டும், எந்த சர்க்கரை எந்த உணவில் இருக்கின்றது எது எனக்கு பொருத்தமாக இருக்கும் என்று அவர்களாகவே முடிவுசெய்து உண்பதற்கு, அதற்கான ஒரு தெளிவைப்பெறுவதற்கு இந்த கட்டுரை அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன். குளுக்கோஸ்-(C₆H₁₂O₆) ஒற்றை சர்க்கரை இந்த சர்க்கரை தான் உடல் சக்தி பரிமாற்றத்திற்கு அவசியமானது.

பழ சர்க்கரை, பால் சர்க்கரை, மால்டோஸ், கேலக்டோஸ், பிரக்டோஸ், இவைகள் அத்துனையும் இரட்டைச் சர்க்கரை வகைகள் மற்றும் தேன், வீட்டுச் சர்க்கரை போல் இரட்டைச் சர்க்கரை (சுக்ரோஸ்) ஆகும், இது சர்க்கரை கிழங்கு, கரும்பு மற்றும் பனை, தென்னை மரக் கள்ளிலிருந்து தயாரிக்கப்படுகின்றது 50% பிரக்டோஸ் மற்றும் 50% குளுக்கோஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

தேனில் தனித்துவமான சர்க்கரைகள் ஏதுமில்லை கரும்பு, கருப்பட்டியிலுள்ள அதே சர்க்கரை கூறுகள்தான் தேனிலும் இருக்கின்றது. தேன் 80 விழுக்காடுகள் சுக்ரோஸ் அதாவது கரும்பு சர்க்கரை மற்றும் 17 விழுக்காடுகள் தண்ணீர் மிகிதம் பிரக்டோஸ்=(பழச்சர்க்கரை+குளுக்கோசு) = (C₆H₁₂O₆)  (இரட்டை) D-குளுக்கோசு மற்றும் 3% புரதங்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள், விற்றமின்கள், தாதுக்கள், நிறங்கள், சுவை, தேன் மக்கு, ராயல் ஜெல்லி போன்ற பிரத்தியோக பொருட்களையும் கொண்டுள்ளது.

தேனீக்கள் பூக்களிலுள்ள நெட்ரா, என்று சொல்லக்கூடிய சர்க்கரை தண்ணியை பயன்படுத்திதான் தேனை தயாரிக்கின்றன. எல்லாமே கார்போஹைட்ரேட்டுகள் கொண்டு கட்டமைக்கப்பட்ட சர்க்கரைகள் தான். இதில் எந்த சர்க்கரை நல்லது எது கெட்டது என்று எதுவும் கிடையாது எல்லாமே ஒரே சர்க்கரை கூறுகள்தான்.

பரம்பரை என்சைம் குறைபாடு உள்ளவர்களுக்கு சில வகை சர்க்கரையின் முறிவைத் தடுக்கின்றது. அதாவது ஒவ்வாமையை ஏற்படுகின்றது, ஒரு சிலருக்கு பழ சர்க்கரையிலுள்ள பிரக்டோஸ்-(C₆H₁₂O₆)  (இரட்டை) D-குளுக்கோசுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

அதுபோல் பால்சர்க்கரையிலுள்ள லாக்டோஸ்-(C₁₂H₂₂O₁₁) ஒவ்வாமை, மால்டோஸ்-(C₁₂H₂₂O₁₁) பீர் குடிபானத்திலிருக்கும் சர்க்கரை, கேலக்டோஸ்-(C₆H₁₂O₆) (இரட்டை) D-குளுக்கோசுகள் பருப்பு, கடலை வகைகள் மற்றும் பால் தயாரிப்புகளிலுள்ள சர்க்கரை இதுவும் ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

குளுக்கோசு மற்றும் கேலக்டோஸ், பிரக்டோஸ் இடையிலான வித்தியாசங்கள்/ வேறுபாடுகள் என்ன ? எல்லாமே குளுக்கோசுதான் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சர்க்கரைகள் இருப்பினும் ஒரே ஒரு வித்தியாசம் மட்டும் இருக்கின்றது அதனுடைய கட்டமைப்புகள் மட்டும் மாறுபடுகின்றது. நேரியல் வடிவத்தில் (பிஷ்ஷர் ப்ரொஜெக்ஷன்) *படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

குளுக்கோஸுக்கு ஹைட்ராக்சில் குழு மூலக்கூறின் வலது பக்கத்தில் 4 வது கார்பனில் அமைந்துள்ளது. கேலக்டோஸைப் பொறுத்தவரை, ஹைட்ராக்சில் குழுவானது மூலக்கூறின் இடது பக்கத்தில் 4 வது கார்பனில் அமைந்துள்ளது.

லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு, லாக்டேஸ் என்சைம் லாக்டோஸை குளுக்கோஸ் மற்றும் கேலக்டோஸாக உடைக்கின்றது. (உடல் ஜீரணிக்கக்கூடிய சர்க்கரையின் வடிவங்கள்)

அதனால்தான் லாக்டோஸ் இல்லாத பால், அதே சர்க்கரை உள்ளடக்கம் இருந்தாலும், சாதாரண பாலை விட இனிப்பானதாக இருக்கின்றது. இந்த இணைப்பு சர்க்கரைகள் உள்ள உணவுகள் மற்றும் பல சர்க்கரைகள் (பாலிசாக்கரைடுகள்) அதில் சர்க்கரை இருந்தும் இனிப்பு சுவையை காட்டாது. அது உடைக்கப்படும் போது இனிப்பு சுவையுள்ளதாக மாறுகின்றது. பழச்சர்க்கரை மற்ற எல்லா சர்க்கரைகளையும் விட இனிப்பு சுவை கூடியது.

கேலக்டோஸ் இரத்த சர்க்கரையை அதிகரிக்குமா ?: கேலக்டோஸ், குளுக்கோசின் இன்னுமொரு வடிவம் (ஸ்டீரியோசோமர்கள்) அடிப்படையில் ஒரே அமைப்பைக் கொண்டிருக்கின்றன (C₆H₁₂O₆) அதே மூலக்கூறு சூத்திரமும் ஆனால், அணுக்களின் இடஞ்சார்ந்த அமைப்பில் (கட்டமைப்பு) வேறுபடுகின்றன. மற்றும் பால் சர்க்கரையின் ஒரு பகுதியாகும்.

மனித ஊட்டச்சத்துக்கு முக்கியமான மோனோசாக்கரைடுகளில் கேலக்டோஸ் ஒன்றாகும். அதனால்த்தான் பரப்பிரமம் (இயற்கை) தாய்ப்பாலில் அதனை வைத்திருக்கின்றது. இது கல்லீரலில் குளுக்கோஸ்- 1 - பாஸ்பேட்டாக மாற்றப்பட்டு, பின்னர் கிளைகோஜனாக சேமிக்கப்படுகின்றது,

அல்லது குளுக்கோஸாக மாற்றப்பட்டு இரத்த சுழற்சியில் வெளியிடப்படுகின்றது. கேலக்டோஸை உட்கொண்ட பிறகு இரத்த பிளாஸ்மா குளுக்கோஸின் அதிகரிப்பு சிறியது என்று அறியப்படுகின்றது. பால்சர்க்கரை = (லாக்டோஸ் = கேலக்டோஸ்+குளுக்கோசு)

கேலக்டோஸ் உள்ள உணவுகள்: பால் மற்றும் பால் தயாரிப்புகள். பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளில் பலசர்க்கரைகள் (பாலிசக்கரைடுகள்)) வடிவத்தில் உள்ளது.

லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கும் கேலக்டோஸ் ஏற்றது. அதிகமாக உட்கொள்ளும் போது மட்டுமே இது ஒரு மலமிளக்கி விளைவைக் கொண்டிருக்கின்றது. சர்க்கரை நோயாளிகள் கூட இந்த சர்க்கரையை எடுத்துக் கொள்ளலாம், ஏனெனில் அது அவர்களின் இரத்த சர்க்கரை அளவை ஒருபோதும் அதிகரிக்காது. நன்றி.

சுக்ரோஸ் = [பிரக்டோஸ் +குளுக்கோசு ](C₆H₁₂O₆)  (இரட்டை) D-குளுக்கோசு

மால்டோஸ் = [குளுக்கோசு +குளுக்கோசு ](C₁₂H₂₂O₁₁)

லாக்டோஸ் = [கேலக்டோஸ் +குளுக்கோசு](C₁₂H₂₂O₁₁)

நாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்துனை சர்க்கரைகளும்  இரட்டை  சர்க்கரை கொண்டு கட்டமைக்கப்பட்டது. பெரும்பாலான உணவு தயாரிப்புகளிலும் இந்த இரட்டை  சர்க்கரைகள் தான் பயன்படுத்தப்படுகின்றது.

உடலுக்கு தொழிற்சாலை அல்லது வீட்டு சர்க்கரைகள் அவசியம் தேவைதானா ? : அதிகளவு வெளி நுகர்வு சர்க்கரைகள் உடலுக்கு அவசியம் இல்லாத ஒன்று மனித உடலுக்கு கூடுதல் சர்க்கரைகள் எதுவும் தேவையில்லை. நமது மூளை மற்றும் பிற உறுப்புகள் சரியாக செயல்பட “டெக்ஸ்ட்ரோஸ்” எனப்படும் ஒற்றை சர்க்கரை (மோனோசாக்கரைடு) குளுக்கோஸ்  (C₆H₁₂O₆)  தேவைப்படுகின்றது.

நம் உடல் பல உணவுகளிலிருந்து எடுத்துக்காட்டாக, அரிசி, இட்லி, பாண், ரொட்டி, உருளைக்கிழங்கு மற்றும் சிறுமுழு தானியங்களிலிருந்து சர்க்கரையை தானே உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

உடல் தானே உற்பத்தி செய்த சர்க்கரையை தேவைக்குப்போக மிகிதமுள்ளதை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றலும் உள்ளது. இந்த சேமிப்பு கற்கால மனிதனுக்கு  ஒரு நன்மையாக இருந்தது உணவு இல்லாத காலத்தில் சேமிப்பு ஆற்றல் சக்தியாக மறுசுழற்சி செய்யப்பட்டது.

இன்றைய வாழ்வியலில் உடல் சேமித்த சர்க்கரையை மறுசுழற்சி செய்வதற்கு கால அவகாசம் கொடுப்பதில்லை மூன்று வேளை, ஐந்து வேளை  என இடை வேளையில்லாமல் போட்டு முழுங்குவது.  

கார்போஹைட்ரேட்கள் தசைகள் மற்றும் கல்லீரல் உயிரணுக்களில் கிளைகோஜன் வடிவில் சேமிக்கப்படுகின்றது. இது இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகின்றன. இந்த கிளைகோஜன் கட்டமைப்பு கொழுப்பாக மாற்றப்பட்டு வயிற்றுப்பகுதிகளில் (தொப்பை) நிரந்தர சேமிப்பாக சேமிக்கப்படுகின்றது.

உணவில் இருந்து அதிகப்படியான குளுக்கோஸ் கொழுப்பாக மாற்றப்பட்டு சேமிக்கப்படுகின்றது. இன்று இது  ஒரு பிரச்சனையாக உள்ளது அதிகளவு சர்க்கரை உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களை ஊக்குவிக்கின்றது. இன்று சர்க்கரை இல்லாத உணவுத்தயாரிப்புகளை வாங்குவது என்பது அவ்வளவு சுலபம் கிடையாது அத்துனை உணவுகளிலும் வீட்டுச்சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கின்றது.

அதில் எந்த சர்க்கரை எந்த அளவில் சேர்க்கப்பட்டிருக்கின்றது என்று ஒன்றொன்றாக ஆராய்ந்து பார்த்து கண்டுபிடிப்பதற்கு நேரம் இருக்காது. நீங்கள் சர்க்கரை சேர்க்காத உணவுகளை தேர்வுசெய்ய விரும்பினால். சர்க்கரை இல்லாத உணவு என்பது இயற்கையான, சுயமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

நீங்கள் குறைவாகவோ அல்லது சர்க்கரை இல்லாமல் சாப்பிடவோ விரும்பினால், உங்கள் தினசரி உணவிலிருந்து தயாரித்த உணவுப் பண்டங்களை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக இயற்கையான பொருட்களைக் கொண்டு, உடன் காய்கறிகள், பருப்பு வகைகள், கடலை, விதைகள், சர்க்கரை சேர்க்கப்படாத பால் பொருட்கள், மீன், இறைச்சி மற்றும் முட்டைகள் மற்றும் உயர்தர தாவர எண்ணெய்களை பயன்படுத்தி. நீங்களே சமைத்து சாப்பிடுவது நல்லது.

எல்லாமே கார்போஹைட்ரேட், சர்க்கரை என்றால் ஏன் பச்சை காய்கறிகள், உருளைக்கிழங்கில் இனிப்பு சுவை தெரிவதில்லை, அதற்கு காரணம் இவைகள் உடைக்க முடியாத நீண்ட சர்க்கரை சங்கிலி இணைப்பை கொண்டுள்ளது.  பலசர்க்கரைகள் (பாலிசாக்கரைடுகள்) வடிவத்திலுள்ளது

(குளுக்கோசு+பிரக்டோஸ்+கேலக்டோஸ்) / குளுக்கோசு+குளுக்கோசு+குளுக்கோசு)

கரும்பு, தேன், பழத்திலுள்ள இரட்டை சர்க்கரையை வாயிலுள்ள உமிழ்நீர் நொதியங்கள் உடைத்து விடுகின்றது அதனால் அதிலுள்ள இனிப்பு சுவை நாவில் நேரடியாக தெரிகின்றது. அதனால்த்தான் இவைகளை நேரடி சர்க்கரை என்று அழைக்கப்படுகின்றது. பச்சை இலை தழை உருளைக்கிழங்கை உடைக்கக்கூடிய நொதியங்கள் மனித குடலில் இல்லை, அது ஜீரணமாகாது. விலங்குகள் அதை ஜீரணிக்கக்கூடியவை.

மனிதன் சிறுமுழு தானியங்கள் உருளைக்கிழங்கை அவித்து சமையல் செய்துதான் சாப்பிடமுடியும் அப்படி வேக வைக்கும் போது அதிலிள்ள சர்க்கரை சங்கிலி உடைக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக; வெங்காயத்தை வேக வைத்து சாப்பிடும் போது அதிலுள்ள இனிப்பு சுவை மேலோங்கியிருக்கும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக