புதன், 13 அக்டோபர், 2021

மலக்குடல் மற்றும் மலவாயில் பெரும் குடலின் கடைசி பகுதி 16 செமீட்டர் நீளமுள்ளதை மலக்குடல் என்று அழைக்கப்படுகின்றது. மலக்குடல் மற்றும் குத கால்வாய் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. பிந்தையது ஆசனவாயில் திறக்கின்றது.

மலக்குடல் அடிவயிற்று குழிக்கு கீழே உள்ள சிறிய இடுப்பில் அமைந்துள்ளது மற்றும் இது கொழுப்பு திசுக்களால் சூழப்பட்டுள்ளது, அதன் குடல் வேர்களையும் சுற்றியுள்ளது. மலக்குடலின் மிகக் குறைந்த பகுதி சுருக்கு தசைகளினால் சூழப்பட்டுள்ளது, இது மலம் கழிக்கும் தூண்டுதல் வரும் வரை மலக்குடலில் மலத்தை சேகரிக்க உதவுகின்றது.

மலம் கழிக்கும் போது சுழல் தசைகள்(மூலம்) இறுக்கத்தை தளர்த்தி குடல் செரிமான கழிவுகளை காலியாக்கின்ற சேவையை செய்கின்றது. குத கால்வாய், மூடுதசை மற்றும் சிரை மூடி ஆகியவை முக்கியமாக மலம் மற்றும் செரிமான வாயு/காற்றுத் தொடர்ச்சியாக வெளியேறும்போதும் இருமல் மற்றும் தும்மும் போதும் மலம் கொட்டுண்டு போகாமல் பாதுகாக்கும் ஒரு சிக்கலான பொறிமுறையில் செரிமான வாயு மற்றும் மலம் கழிப்பதைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

கழிப்பறை காகிதம் அல்லது தண்ணீர் பயன்படுத்துவது எது சரியானதாக இருக்கும் மலம் கழித்தவுடன் மென்மையான கழிப்பறை எண்ணைய் காகிதம் கொண்டு துடைத்துவிடுவதுதான் மிகச்சிறந்தது தண்ணீர் சவர்க்காரம் போட்டு கழுவக்கூடாது அல்லது குறைவாக பயன்படுத்தவும்.

குறிப்பாக மழலை, குழந்தைகளுக்கு நீர் கழுவலை முற்றிலுமாக தவிர்த்துக்கொள்ளுங்கள். மிருதுவான எண்ணைய் நனைந்த காகிதம் பயன்படுத்தவும் இல்லாது போனால் மலவாயிலுள்ள கொழுப்பு, மெழுகு சுரப்பிகள் உலர்ந்து அரிப்பெடுக்கத்தொடங்கும் இதனுடைய நீண்டகால பாதிப்பு மூலநோய்க்கு வழிவகை தேடித்தரும்.

கழிப்பறை காகிதம் பயன்படுத்துவதில் எந்தவிதமான சுகாதார கேடுமில்லை நீர் கழுவலை காட்டிலும் நூறுமடங்கு சுத்தமானது. என்னடா இப்படி சொல்லிட்டாரே என்று நினைக்காதீர்கள் உடலின் நன்மை, தேவை கருதிமட்டுமே பேசுகின்றேன்.

மனிதன் என்னதான் நவநாகரீகம் அடைந்திருந்தாலும் அவன் உடல் இன்றுவரைக்கும் கற்காலத்திற்கு ஏற்றவாறுதான் இயங்குகின்றது”

மூலம், மூல நோய் எதனால் ஏற்படுகின்றது, உண்மையில் மூலநோய்  என்று தனியாக இல்லை மாறாக, அவை மனித உடற்கூறியலின் இயற்கையான ஒரு பகுதியாகும். ஒவ்வொருவருக்கும் அவை உள்ளன, மேலும் அவை மலக்குடலின் ஒரு பகுதி முக்கியமான நோக்கத்திற்காக சேவை செய்கின்றது.

மலக்குடலின் சளி சவ்வில் மூலம் உள்ளது. ஹேமிராய்டுகள் நல்ல இரத்த விநியோகத்துடன் கூடிய குகை உடல்கள், அவை நரம்புகள் மற்றும் தமனிகளுடன் சேர்ந்து ஒரு வகையான வாஸ்குலர் குஷனை உருவாக்குகின்றன.

வெளிப்புற சுழல் தசைகள், சுருக்குதசைகள் குடல் வாயிலை அடைக்க உதவுகின்றது. கடின உழைப்பு, பாரங்கள் தூக்கும் போதும், தும்மல் அல்லது இருமலின் போதும் ​​இந்த  மூலம் பயனுள்ளதாக செயல்படுகின்றது குடல் செரிமான உள்ளடக்கங்களை தற்செயலாக பிதுங்கி வெளியேறாமல் தடுக்கின்றது.

இதைச் செய்ய, மூல தசை ஓய்வில் இருக்கும்போது இரத்தத்தால் நிரப்பப்பட்டு, ஆசனவாயை மூடுகின்றது. மலக்குடல் காலியாகும்போது ​​விறைப்பு திசுக்களில் இருந்து இரத்தம் வெளியேறி, அவற்றின் அளவைக் குறைத்து மலம் வெளியேற அனுமதிக்கின்றது. இது இயல்பான ஒரு செயல்பாடுஒரு சிலருக்கு  மூலத்தின் மிகைப்படைந்த செயல்பாடு  பிதுங்கி வெளியே தள்ளி இரத்த கசிவினை ஏற்படுத்துகின்றது.

மூல நோய் பெண்களை விட ஆண்கள்தான் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள். முக்கியமான இந்த மூல தசை பிதுங்கி வெளியே தள்ளுவதற்கு பல காரணங்கள் உள்ளது  முதிர்வயது, பரம்பரைகுடும்ப அழுத்தம் மனநிலை அல்லது மரபணு குறைபாடு,நாள்பட்ட மலச்சிக்கல்(முக்கி மலம் கழித்தல்) மற்றும்  தொழில்முறை பாரம் தூக்குதல்உடற்பயிற்சி பளுதூக்குதல் அதிகநேரம் உட்கார்ந்திருக்கும்  அலுவலக வேலைகள் உடற்சூடு, உடல் பருமன், நீரிழப்பு மலமிளக்கியின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் தொற்றுநோய் காரணிகள்.

அறியாமையினால் பலர் இந்த மூல நோயினால் அவதிப்படுகின்றார்கள் வராமல் தடுப்பதற்கு முன்கூட்டியே உங்களுக்கான மூலநோய் காரணிகளை தேடுங்கள்.

தேநீர் சிகிச்சை டேன்டேலியன் வேர், இஞ்சி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக