திங்கள், 30 மே, 2022

monkey pox

குரங்கு பெரியம்மை வைரஸ்: ஆர்த்தோபாக்ஸ் வைரஸ், ஒரு நேரியல் இரட்டை இழையுடைய DNA 170 முதல் 450 நானோ மீற்றர் வரை அளவைக் கொண்டுள்ள ஒரு இனமாகும்.

ஆர்த்தோபாக்ஸ் வைரஸ்கள் காட்டு விலங்குகளிடம் இருந்து தொற்றக்கூடிய ஒரு வைரஸ். அதாவது “ஜூனோசிஸ்” ஒரு விலங்கியல் நோய். பாலூட்டிகளின் பெரியம்மை என்றும் குறிப்பிடப்படுகின்றன. வைரஸ்கள் முதலில் விலங்குகளிடமிருந்து நேரடியாக மனிதர்களுக்கு மட்டுமே பரவுகின்றது.

பெரும்பாலும் பாதிக்கப்பட்ட கொறித்துண்ணிகள் செல்லப் பிராணி, வளர்ப்பு விலங்குகளின் நெருங்கிய சகவாழ்வு, மற்றும் கடையில் இறக்குமதி செய்யப்பட்ட தோல், இறைச்சி முதலில் விற்பனையாளர்களுடனும், பின்னர் புதிய உரிமையாளர்களுடனும் தொடர்பு இந்த புதிய தொற்றுநோய் பரவலுக்கு காரணியாக இருக்கலாம்.

முக்கியமாக ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸ் அதிகமாக பரவியிருந்தது / பரவுகின்றது. முதல் முதலில் இந்த வைரஸ் புகார் பதிவானது, 1970 இல் காங்கோவில் ஒன்பது மாத சிறுவனில் அடையாளம் காணப்பட்டது. அப்போதிருந்து, மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவில் சிறிய நோய் தொற்றுக்கள் மீண்டும் மீண்டும் வெடித்தன. இதுவரை, ஆப்பிரிக்க கண்டத்திற்கு வெளியே மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சில பதிவுகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன.

2003 இல், குரங்கு-பெரியம்மை முதன்முதலில் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சலால் சுமார் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கானாவில் இருந்து அமெரிக்காவிற்கு கொறித்துண்ணிகள் இறக்குமதி செய்யப்பட்டதே இதற்கு காரணம் என கண்டறியப்பட்டது. பின்னர், கிரேட் பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் (2018), சிங்கப்பூர் (2019) மற்றும் மீண்டும் அமெரிக்காவில் (2021) ஐரோப்பா/ ஜெர்மனி (2022) புதிய தொற்றுக்கள் பதிவாகியிருக்கின்றது.

இந்த விலங்கியல் நோய் பரவலுக்கு முழுமுதல் காரணியாக இருப்பது இறக்குமதி செய்யப்பட்ட காட்டு விலங்குகள் மற்றும் இறைச்சி உணவுகள் என்பது வெட்டவெளிச்சமான உண்மை.

அதிர்ஷ்டவசமாக குரங்கு பெரியம்மை வைரஸ் பரவலுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தால் மட்டுமே சாத்தியமாகும், தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருங்கி பழக வேண்டும், நீர் கொப்பளங்கள் துளி அல்லது நெருங்கிய உரசல், அந்தரங்க தொடர்புகள் தேவைப்படுகின்றது 

வைரஸ் தொற்று ஏற்பட்டு முதல் மூன்று வாரங்களுக்குப் பிறகுதான் நோய்குறிகள் தெரிகின்றது அதற்கு பிறகுதான் பரவுகின்றது. நோயின் முதல் அறிகுறிகள் காய்ச்சல் தசை வலி சோர்வு அதற்கு பிறகு தோலில் கொப்புளங்கள் போடத்தொடங்குகின்றது.நோயின் மொத்த காலம் 2-3 கிழமைகள்.

இந்த காலத்தில் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தால் மட்டுமே தொற்று ஏற்படும். தொற்று ஏற்பட்டவர்கள் பெரியம்மை நோயைப்போல் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டாலே போதும் பரவலை முற்றுலுமாக தடுக்கமுடியும். இதுவொரு (எண்டெமிக்) உள்ளூர் தொற்றுநோய் பெரியளவில் பரவும் என்பது சாத்தியமில்லாத ஒன்று.

மனித பெரியம்மை, குரங்கு பெரியம்மை பெரியளவில் உயிர் ஆபத்துக்களை ஏற்படுத்தாவிட்டாலும் முகத்தில் சருமத்தில் தீராத வடுக்களை ஏற்படுத்திவிட்டு போகும். உங்கள் முக அழகிற்கு தீங்கிழைக்கும் அசிங்கமான ஒரு நோய். பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு, பாக்டீரியா தோல் தொற்று, நிமோனியா அல்லது மூளையழற்சி விளைவுகள் பலமானதாக இருக்கும்.

தீங்கிழைக்கும் இந்த வைரஸ்களின் தீராத பாதிப்புக்களை முன்கூட்டியே தடுக்க கூடிய வல்லமை தடுப்பூசிகளுக்கு மட்டுமே இருக்கின்றது. நோயின் கடுமையான போக்கு, கொப்பளங்கள் ஏற்படுத்தும் வடுக்களிலிருந்து 85 விழுக்காடுகள் உங்கள் பிள்ளைகளின் முக அழகை தடுப்பூசிகள் காப்பாற்றித்தருகின்றது.

58-60 களில் பெரியம்மையினால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்தால் தெரிந்து கொள்வீர்கள். முகத்தில் எவ்வளவு வடுக்களை அவர்கள் சுமக்கின்றார்கள் என்று. இன்று இந்த வைரஸ் இல்லாது அழித்து ஒழித்த பெருமை தடுப்பூசிகளையே சேரும்.

திரும்பவும் இந்த வகை வைரஸ்கள் வெளியில் தலை காட்டுவது வருத்தம் தருகின்றது. எனக்கு போடப்பட்ட பெரியம்மை தடுப்பூசி காலாவதியாகி 50 வருடங்களுக்கு மேலாகின்றது. நோய் எதிர்ப்பு சக்தி பழைய பகையாளியை இன்னும் நினைவில் வைத்திருக்கின்றதா என்பது கேள்விக்குறிதான். இன்னுமொரு தொற்று ஏற்பட்டால்தான் தெரியும் நோய் எதிர்ப்பு சக்தியின் நினைவாற்றல் எவ்வளவு பலம் வாய்ந்ததென்று,

பெரியம்மை நோய் எங்களுக்கு ஒன்றும் புதியதல்ல, அதனுடைய கடுமையான போக்கு, கொடூரம் குறித்து ஏற்கனவே அனுபவப்பட்டவர்கள். வேப்பிலைக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு அதனுடைய கொடூரம் அன்றிருந்தது.

இன்று அது குரங்கின் முகமூடியை போட்டுக் கொண்டு வந்திருக்கின்றது. பெரியம்மையை அருகிலிருந்து பார்த்த அனுபவமுள்ள உங்கள் தாத்தா பாட்டியிடம் அதனுடைய தீவிரம் குறித்து கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். அவர்களும் பெரியம்மை குறித்து கதை கதையாக சொல்வார்கள்.

அதிக காய்ச்சல் குரங்கு பெரியம்மை அறிகுறிகளில் ஒன்று. அதிக காய்ச்சல் குரங்கு பெரியம்மை காய்ச்சலின் அறிகுறியாகும். இது பொதுவாக திடீரெனவும் வேகமாகவும் 40 டிகிரி செல்சியஸ் வரை உயரும். குரங்கு பாக்ஸ் நோய்த்தொற்றின் பல அறிகுறிகளில் காய்ச்சலும் ஒன்று.

காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகள் தோன்றி சுமார் ஒன்று முதல் மூன்று நாட்களுக்குப் பிறகு உடலில் அரிப்பு சொறி ஏற்படுகின்றது. இது பொதுவாக நோயாளியின் முகத்தில் தொடங்கி, கைகளின் உள்ளங்கைகள் அல்லது பாதங்களின் உள்ளங்கால்கள் போன்ற உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கின்றது.

பிறப்புறுப்பு பகுதி மற்றும் சளி சவ்வுகளிலும் தோல் மாற்றங்கள் ஏற்படலாம். சொறி முதலில், சொறிந்து சிவந்த தோலில் சிவப்பு புள்ளிகளாக கவனிக்கப்படுகின்றது, அவை கொப்புளங்களாக மாறி சீழ் நிரப்பப்பட்டு, சில நாட்களுக்குப் பிறகு அதன்மேல் ஒரு மேலோடு உருவாகின்றது.

மேலும் காய்ச்சலைத் தவிர, நோய்த்தொற்றின் முதல் சில நாட்களில் கடுமையான தலைவலியும் ஏற்படுகின்றது. தலைவலி குரங்கு பெரியம்மை காய்ச்சலின் மிக முக்கியமான அறிகுறிகளில் ஒன்றாகும்.

தலைவலி மட்டுமின்றி, உடல் மற்றும் தசை வலி, மூட்டு மற்றும் தசைக் கட்டு வலியையும் ஏற்படுத்தும். குறிப்பாக முதுகுவலி பெரும்பாலும் குரங்கு பாக்ஸுடன் தொடர்புடையது.

வீங்கிய நிணநீர் கணுக்கள் குரங்கு பாக்ஸின் அறிகுறியாகும். நிணநீர் கணுக்களின் காணக்கூடிய வீக்கம் குரங்கு பாக்ஸால் கூட சாத்தியமாகும்.

பல நோய்களில், குறிப்பாக கழுத்து பகுதியில் உள்ள நிணநீர் கணுக்கள் வீங்குகின்றன. ஆனால் அக்குள் அல்லது இடுப்பு பகுதியில் உள்ள நிணநீர் முனைகளும் பாதிக்கப்படலாம்.

இருமல் மற்றும் தொண்டை வலி, குரங்கு பாக்ஸின் அரிய அறிகுறிகள். குரங்கு காய்ச்சலின் சில சந்தர்ப்பங்களில், இருமல் மற்றும் தொண்டை புண் கூட ஏற்படலாம். மறுபுறம், சோர்வு, கூதல் குளிர் உணர்தல் போன்ற அறிகுறிகளும் அரிதாக ஏற்படலாம். இது போன்ற அறிகுறிகள் வேறு காரணங்களின்றி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை பார்க்கவும்.

மருத்துவரின் பரிந்துரை, வலி நிவாரணிகள் ஆரம்ப அறிகுறிகளைப் போக்க உதவும். கடுமையான சந்தர்ப்பங்களில் வைரஸைத் தடுக்க (டெகோவிரிமேட்) மருந்து மற்றும் தடுப்பூசியும் உள்ளது.

டெகோவிரிமேட் (tecovirimate) என்பது ஆர்த்தோபாக்ஸ் குடும்ப பிரதிநிதிகள்: மனித பெரியம்மை மற்றும் குரங்கு பெரியம்மை போன்ற வைரஸ்களுக்கு எதிராக செயல்படும் ஒரு வைரஸ் தடுப்பு மருந்தாகும். நன்றி




திங்கள், 23 மே, 2022

What are the differences between glucose and galactose, fructose?

இயற்கையின் சில விதிகள்: இயற்கை ஒரு சில விதிகளுக்கு உட்பட்டுத்தான் இயங்கி கொண்டிருக்கின்றது. அந்த விதிகளை கண்டு சொல்வதுதான் அறிவியலின் கடமை. இன்று நாங்கள் பயன்படுத்தும் சர்க்கரைகள் குறித்து ஒரு தவறான கருத்து பலரிடம் இருக்கின்றது.

சர்க்கரை நோயாளிகள் இந்த உணவு, எந்த சர்க்கரையை உணவில் எடுத்துக்கொள்ளலாம் என்ற ஒரு தடுமாற்றம் சர்க்கரை நோயாளிகள் மத்தியில் இருக்கின்றது. சிறுமுழு தானியங்கள், மாமிசம், காய்கறிகள்: தாவரத்தின் எந்த பகுதியை நீங்கள் உணவாக எடுத்தாலும்; சாறு, கள்ளு, மாப்பொருள், நார்ப்பொருள் அது கார்போஹைட்ரேட்டுகள் கொண்டுதான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.

கார்போஹைட்ரேட்டுகள் என்றால் அது சர்க்கரைதான், சர்க்கரையின் ஒரு மறு பெயர்தான் கார்போஹைட்ரேட்டுகள் அது கார்பன் கொண்டு கட்டமைக்கப்பட்டதினால் அந்த பெயரை தாங்கி வருகின்றது.

உங்களுக்கு பழக்கமான ஒரு சொல் ஹைட்ரோகார்பன் அதை புரட்டிப்போட்டுப்பாருங்கள் கார்பன்+ஹைட்ரோ எரிசக்தி அதேதான் சர்க்கரையும், இதுவும் ஒரு எரிபொருள். அதில் ஒட்சிசன் (O) இல்லாது இருக்கும் எடுத்துக்காட்டாக: மீத்தேன்: CH₄ பியூட்டேன்: C₄H₁₀ சர்க்கரையில் ஒட்சிசன் (O) இணைந்திருக்கும்

இந்த கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரைகள் உணவு செரிமானத்தின் போது உடைக்கப்பட்டு உடலின் சக்தி பரிமாற்றத்திற்கு குளுக்கோஸ் என்ற ஒற்றை சர்க்கரை பயன்படுகின்றது.

50 வயதை கடந்த ஒரு சர்க்கரை நோயாளிக்கு உணவுக்கட்டுப்பாடு விதிமுறைகள் ஓரளவிற்கு சாத்தியப்படும். அதுவே சிறுபிள்ளைகள், இளையவர்களை கடைபிடிக்க சொன்னால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள அல்லது கடைப்பிடிக்க தவறுவார்கள்.

அவர்களும் மற்ற பிள்ளைகள் போல் சாக்லேட், பர்கர், பீட்சா, ஐஸ்கிரீம் என்று சாப்பிட ஆசைப்படுவார்கள். இல்லை உனக்கு தினமும் வரகரிசி சோறும் காய்கறி கூட்டும் என்று சொன்னால் கேட்பாங்களா?. அவர்களும் மற்ற பிள்ளைகள் போல் உணவில் சமநிலை பேணுவதற்கு,

அவர்கள் எந்த உணவை உண்ணவேண்டும், எந்த சர்க்கரை எந்த உணவில் இருக்கின்றது எது எனக்கு பொருத்தமாக இருக்கும் என்று அவர்களாகவே முடிவுசெய்து உண்பதற்கு, அதற்கான ஒரு தெளிவைப்பெறுவதற்கு இந்த கட்டுரை அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன். குளுக்கோஸ்-(C₆H₁₂O₆) ஒற்றை சர்க்கரை இந்த சர்க்கரை தான் உடல் சக்தி பரிமாற்றத்திற்கு அவசியமானது.

பழ சர்க்கரை, பால் சர்க்கரை, மால்டோஸ், கேலக்டோஸ், பிரக்டோஸ், இவைகள் அத்துனையும் இரட்டைச் சர்க்கரை வகைகள் மற்றும் தேன், வீட்டுச் சர்க்கரை போல் இரட்டைச் சர்க்கரை (சுக்ரோஸ்) ஆகும், இது சர்க்கரை கிழங்கு, கரும்பு மற்றும் பனை, தென்னை மரக் கள்ளிலிருந்து தயாரிக்கப்படுகின்றது 50% பிரக்டோஸ் மற்றும் 50% குளுக்கோஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

தேனில் தனித்துவமான சர்க்கரைகள் ஏதுமில்லை கரும்பு, கருப்பட்டியிலுள்ள அதே சர்க்கரை கூறுகள்தான் தேனிலும் இருக்கின்றது. தேன் 80 விழுக்காடுகள் சுக்ரோஸ் அதாவது கரும்பு சர்க்கரை மற்றும் 17 விழுக்காடுகள் தண்ணீர் மிகிதம் பிரக்டோஸ்=(பழச்சர்க்கரை+குளுக்கோசு) = (C₆H₁₂O₆)  (இரட்டை) D-குளுக்கோசு மற்றும் 3% புரதங்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள், விற்றமின்கள், தாதுக்கள், நிறங்கள், சுவை, தேன் மக்கு, ராயல் ஜெல்லி போன்ற பிரத்தியோக பொருட்களையும் கொண்டுள்ளது.

தேனீக்கள் பூக்களிலுள்ள நெட்ரா, என்று சொல்லக்கூடிய சர்க்கரை தண்ணியை பயன்படுத்திதான் தேனை தயாரிக்கின்றன. எல்லாமே கார்போஹைட்ரேட்டுகள் கொண்டு கட்டமைக்கப்பட்ட சர்க்கரைகள் தான். இதில் எந்த சர்க்கரை நல்லது எது கெட்டது என்று எதுவும் கிடையாது எல்லாமே ஒரே சர்க்கரை கூறுகள்தான்.

பரம்பரை என்சைம் குறைபாடு உள்ளவர்களுக்கு சில வகை சர்க்கரையின் முறிவைத் தடுக்கின்றது. அதாவது ஒவ்வாமையை ஏற்படுகின்றது, ஒரு சிலருக்கு பழ சர்க்கரையிலுள்ள பிரக்டோஸ்-(C₆H₁₂O₆)  (இரட்டை) D-குளுக்கோசுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

அதுபோல் பால்சர்க்கரையிலுள்ள லாக்டோஸ்-(C₁₂H₂₂O₁₁) ஒவ்வாமை, மால்டோஸ்-(C₁₂H₂₂O₁₁) பீர் குடிபானத்திலிருக்கும் சர்க்கரை, கேலக்டோஸ்-(C₆H₁₂O₆) (இரட்டை) D-குளுக்கோசுகள் பருப்பு, கடலை வகைகள் மற்றும் பால் தயாரிப்புகளிலுள்ள சர்க்கரை இதுவும் ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

குளுக்கோசு மற்றும் கேலக்டோஸ், பிரக்டோஸ் இடையிலான வித்தியாசங்கள்/ வேறுபாடுகள் என்ன ? எல்லாமே குளுக்கோசுதான் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சர்க்கரைகள் இருப்பினும் ஒரே ஒரு வித்தியாசம் மட்டும் இருக்கின்றது அதனுடைய கட்டமைப்புகள் மட்டும் மாறுபடுகின்றது. நேரியல் வடிவத்தில் (பிஷ்ஷர் ப்ரொஜெக்ஷன்) *படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

குளுக்கோஸுக்கு ஹைட்ராக்சில் குழு மூலக்கூறின் வலது பக்கத்தில் 4 வது கார்பனில் அமைந்துள்ளது. கேலக்டோஸைப் பொறுத்தவரை, ஹைட்ராக்சில் குழுவானது மூலக்கூறின் இடது பக்கத்தில் 4 வது கார்பனில் அமைந்துள்ளது.

லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு, லாக்டேஸ் என்சைம் லாக்டோஸை குளுக்கோஸ் மற்றும் கேலக்டோஸாக உடைக்கின்றது. (உடல் ஜீரணிக்கக்கூடிய சர்க்கரையின் வடிவங்கள்)

அதனால்தான் லாக்டோஸ் இல்லாத பால், அதே சர்க்கரை உள்ளடக்கம் இருந்தாலும், சாதாரண பாலை விட இனிப்பானதாக இருக்கின்றது. இந்த இணைப்பு சர்க்கரைகள் உள்ள உணவுகள் மற்றும் பல சர்க்கரைகள் (பாலிசாக்கரைடுகள்) அதில் சர்க்கரை இருந்தும் இனிப்பு சுவையை காட்டாது. அது உடைக்கப்படும் போது இனிப்பு சுவையுள்ளதாக மாறுகின்றது. பழச்சர்க்கரை மற்ற எல்லா சர்க்கரைகளையும் விட இனிப்பு சுவை கூடியது.

கேலக்டோஸ் இரத்த சர்க்கரையை அதிகரிக்குமா ?: கேலக்டோஸ், குளுக்கோசின் இன்னுமொரு வடிவம் (ஸ்டீரியோசோமர்கள்) அடிப்படையில் ஒரே அமைப்பைக் கொண்டிருக்கின்றன (C₆H₁₂O₆) அதே மூலக்கூறு சூத்திரமும் ஆனால், அணுக்களின் இடஞ்சார்ந்த அமைப்பில் (கட்டமைப்பு) வேறுபடுகின்றன. மற்றும் பால் சர்க்கரையின் ஒரு பகுதியாகும்.

மனித ஊட்டச்சத்துக்கு முக்கியமான மோனோசாக்கரைடுகளில் கேலக்டோஸ் ஒன்றாகும். அதனால்த்தான் பரப்பிரமம் (இயற்கை) தாய்ப்பாலில் அதனை வைத்திருக்கின்றது. இது கல்லீரலில் குளுக்கோஸ்- 1 - பாஸ்பேட்டாக மாற்றப்பட்டு, பின்னர் கிளைகோஜனாக சேமிக்கப்படுகின்றது,

அல்லது குளுக்கோஸாக மாற்றப்பட்டு இரத்த சுழற்சியில் வெளியிடப்படுகின்றது. கேலக்டோஸை உட்கொண்ட பிறகு இரத்த பிளாஸ்மா குளுக்கோஸின் அதிகரிப்பு சிறியது என்று அறியப்படுகின்றது. பால்சர்க்கரை = (லாக்டோஸ் = கேலக்டோஸ்+குளுக்கோசு)

கேலக்டோஸ் உள்ள உணவுகள்: பால் மற்றும் பால் தயாரிப்புகள். பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளில் பலசர்க்கரைகள் (பாலிசக்கரைடுகள்)) வடிவத்தில் உள்ளது.

லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கும் கேலக்டோஸ் ஏற்றது. அதிகமாக உட்கொள்ளும் போது மட்டுமே இது ஒரு மலமிளக்கி விளைவைக் கொண்டிருக்கின்றது. சர்க்கரை நோயாளிகள் கூட இந்த சர்க்கரையை எடுத்துக் கொள்ளலாம், ஏனெனில் அது அவர்களின் இரத்த சர்க்கரை அளவை ஒருபோதும் அதிகரிக்காது. நன்றி.

சுக்ரோஸ் = [பிரக்டோஸ் +குளுக்கோசு ](C₆H₁₂O₆)  (இரட்டை) D-குளுக்கோசு

மால்டோஸ் = [குளுக்கோசு +குளுக்கோசு ](C₁₂H₂₂O₁₁)

லாக்டோஸ் = [கேலக்டோஸ் +குளுக்கோசு](C₁₂H₂₂O₁₁)

நாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்துனை சர்க்கரைகளும்  இரட்டை  சர்க்கரை கொண்டு கட்டமைக்கப்பட்டது. பெரும்பாலான உணவு தயாரிப்புகளிலும் இந்த இரட்டை  சர்க்கரைகள் தான் பயன்படுத்தப்படுகின்றது.

உடலுக்கு தொழிற்சாலை அல்லது வீட்டு சர்க்கரைகள் அவசியம் தேவைதானா ? : அதிகளவு வெளி நுகர்வு சர்க்கரைகள் உடலுக்கு அவசியம் இல்லாத ஒன்று மனித உடலுக்கு கூடுதல் சர்க்கரைகள் எதுவும் தேவையில்லை. நமது மூளை மற்றும் பிற உறுப்புகள் சரியாக செயல்பட “டெக்ஸ்ட்ரோஸ்” எனப்படும் ஒற்றை சர்க்கரை (மோனோசாக்கரைடு) குளுக்கோஸ்  (C₆H₁₂O₆)  தேவைப்படுகின்றது.

நம் உடல் பல உணவுகளிலிருந்து எடுத்துக்காட்டாக, அரிசி, இட்லி, பாண், ரொட்டி, உருளைக்கிழங்கு மற்றும் சிறுமுழு தானியங்களிலிருந்து சர்க்கரையை தானே உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

உடல் தானே உற்பத்தி செய்த சர்க்கரையை தேவைக்குப்போக மிகிதமுள்ளதை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றலும் உள்ளது. இந்த சேமிப்பு கற்கால மனிதனுக்கு  ஒரு நன்மையாக இருந்தது உணவு இல்லாத காலத்தில் சேமிப்பு ஆற்றல் சக்தியாக மறுசுழற்சி செய்யப்பட்டது.

இன்றைய வாழ்வியலில் உடல் சேமித்த சர்க்கரையை மறுசுழற்சி செய்வதற்கு கால அவகாசம் கொடுப்பதில்லை மூன்று வேளை, ஐந்து வேளை  என இடை வேளையில்லாமல் போட்டு முழுங்குவது.  

கார்போஹைட்ரேட்கள் தசைகள் மற்றும் கல்லீரல் உயிரணுக்களில் கிளைகோஜன் வடிவில் சேமிக்கப்படுகின்றது. இது இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகின்றன. இந்த கிளைகோஜன் கட்டமைப்பு கொழுப்பாக மாற்றப்பட்டு வயிற்றுப்பகுதிகளில் (தொப்பை) நிரந்தர சேமிப்பாக சேமிக்கப்படுகின்றது.

உணவில் இருந்து அதிகப்படியான குளுக்கோஸ் கொழுப்பாக மாற்றப்பட்டு சேமிக்கப்படுகின்றது. இன்று இது  ஒரு பிரச்சனையாக உள்ளது அதிகளவு சர்க்கரை உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களை ஊக்குவிக்கின்றது. இன்று சர்க்கரை இல்லாத உணவுத்தயாரிப்புகளை வாங்குவது என்பது அவ்வளவு சுலபம் கிடையாது அத்துனை உணவுகளிலும் வீட்டுச்சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கின்றது.

அதில் எந்த சர்க்கரை எந்த அளவில் சேர்க்கப்பட்டிருக்கின்றது என்று ஒன்றொன்றாக ஆராய்ந்து பார்த்து கண்டுபிடிப்பதற்கு நேரம் இருக்காது. நீங்கள் சர்க்கரை சேர்க்காத உணவுகளை தேர்வுசெய்ய விரும்பினால். சர்க்கரை இல்லாத உணவு என்பது இயற்கையான, சுயமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

நீங்கள் குறைவாகவோ அல்லது சர்க்கரை இல்லாமல் சாப்பிடவோ விரும்பினால், உங்கள் தினசரி உணவிலிருந்து தயாரித்த உணவுப் பண்டங்களை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக இயற்கையான பொருட்களைக் கொண்டு, உடன் காய்கறிகள், பருப்பு வகைகள், கடலை, விதைகள், சர்க்கரை சேர்க்கப்படாத பால் பொருட்கள், மீன், இறைச்சி மற்றும் முட்டைகள் மற்றும் உயர்தர தாவர எண்ணெய்களை பயன்படுத்தி. நீங்களே சமைத்து சாப்பிடுவது நல்லது.

எல்லாமே கார்போஹைட்ரேட், சர்க்கரை என்றால் ஏன் பச்சை காய்கறிகள், உருளைக்கிழங்கில் இனிப்பு சுவை தெரிவதில்லை, அதற்கு காரணம் இவைகள் உடைக்க முடியாத நீண்ட சர்க்கரை சங்கிலி இணைப்பை கொண்டுள்ளது.  பலசர்க்கரைகள் (பாலிசாக்கரைடுகள்) வடிவத்திலுள்ளது

(குளுக்கோசு+பிரக்டோஸ்+கேலக்டோஸ்) / குளுக்கோசு+குளுக்கோசு+குளுக்கோசு)

கரும்பு, தேன், பழத்திலுள்ள இரட்டை சர்க்கரையை வாயிலுள்ள உமிழ்நீர் நொதியங்கள் உடைத்து விடுகின்றது அதனால் அதிலுள்ள இனிப்பு சுவை நாவில் நேரடியாக தெரிகின்றது. அதனால்த்தான் இவைகளை நேரடி சர்க்கரை என்று அழைக்கப்படுகின்றது. பச்சை இலை தழை உருளைக்கிழங்கை உடைக்கக்கூடிய நொதியங்கள் மனித குடலில் இல்லை, அது ஜீரணமாகாது. விலங்குகள் அதை ஜீரணிக்கக்கூடியவை.

மனிதன் சிறுமுழு தானியங்கள் உருளைக்கிழங்கை அவித்து சமையல் செய்துதான் சாப்பிடமுடியும் அப்படி வேக வைக்கும் போது அதிலிள்ள சர்க்கரை சங்கிலி உடைக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக; வெங்காயத்தை வேக வைத்து சாப்பிடும் போது அதிலுள்ள இனிப்பு சுவை மேலோங்கியிருக்கும்.




வெள்ளி, 20 மே, 2022

Arsenic is rice poisoning

வெண்கலம் மற்றும் பித்தளை உலோகங்களிடையே உள்ள வித்தியாசங்கள்: மனிதன் முதல் முதலில் கண்டுபிடித்த உலோகம் செப்பு இல்லை வெண்கலம், காரணம் இயற்கையில் செப்பு தனியாக இருப்பதில்லை ஆர்சனிக்-(33 As) என்ற நச்சு தனிமத்துடன் இணைந்திருக்கும்.

இந்த இரண்டு உலோகங்களையும் பிரித்தெடுக்கும் தொழில் நுட்பம் கற்காலத்தில் இருந்திருக்க வாய்பே இல்லை. அப்படி இந்த இரண்டு உலோகங்களும் இணைந்திருப்பதினால் அது வெண்கலத்தின் நிறத்தையும் அதனின் தன்மையையும் பெறுகின்றது.

ஆதி மனிதன் காத்திரமான ஒரு கலப்பு உலோகத்தைதான் பயன்படுத்தியிருக்க முடியும் அதை வைத்துதான் கல்வெட்டுகளை செதுக்கியிருக்கின்றான். சுத்தமான செப்பு உளியை வைத்து கல்வெட்டுக்களை செதுக்கியிருக்க முடியாது.

சுத்தமான செப்பு பிற்காலத்தில் தொழிற்துறை வளர்ச்சி காலத்தில் வந்தது இன்று நாங்கள் பயன்படுத்தும் அத்துனை வெண்கல பொருட்களும் நச்சு ஆர்சனிக் பிரித்தெடுக்கப்பட்டு, அதற்கு பதிலாக தகரம் கலந்து வார்க்கப்படுகின்றது.

நீங்கள் பயன்படுத்தும் வெண்கலம், பித்தளை மற்றும் செப்பு பொருட்கள் கடவுள் சிலைகள், குத்துவிளக்கு, சமையல் மற்றும் பூசை பாத்திரங்கள் ஆர்சனிக் மாசு இல்லாமல் பார்த்து வாங்குங்கள். ஆர்சனிக் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது, பண்டைய காலங்களிலிருந்து அறியப்பட்டு வருகின்ற ஒரு நச்சு பல நோய்களின் அடித்தளமாக இந்த நச்சு விளங்குகின்றது.

புராணங்களில் இதை பாஷாணம் என்று அறியப்படுகின்றது. உலோகங்களை விட அரை உலோகங்கள் ஆபத்தானது. ஆர்சனிக் ஒரு அரை உலோகம், பாதி உப்பின் தன்மை கொண்ட ஒரு கெமிக்கல், இது நீரில் கரைந்து கலந்து விடும். (தனிம அட்டவணையில் அயோடினை சுற்றுயுள்ள அத்துனை தனிமங்களும் அரை உலோகம் அல்லது உலோகம் அல்லாதவைகள், அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்).

இதன் நிமித்தம் நுரையீரல், தோல்:(முகம் மற்றும் சருமம் முரட்டு தோலாக மாறும்) கல்லீரல், கணையம் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம். ஆர்சனிக் மனித ஆரோக்கியத்தில் கடுமையான தீங்கை விளைவிக்கும். செப்பு ஆலைகள் வெளியேற்றும் கழிவுநீர், புகை காற்றின் மூலம் ஆர்சனிக் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றது. இப்படி சுற்றுப்புறம் மாசுபடும் போது அந்த பிராந்தியத்தில் சாகுபடியாகும் உணவு அரசி, சிறு முழு தானியங்கள், காய்கறி, குடிநீர் என்று பல உணவுப்பொருட்களையும் மாசுபடுத்துகின்றது.

ஆர்சனிக் அனைத்து உணவுகளிலும் இயற்கையாக சிறிய அளவில் காணப்படுகின்றது, முக்கியமாக சிறுமுழு தானியங்கள், அரசி, ரொட்டி, காய்கறி, மீன், இறைச்சி மற்றும் குடிநீரில் காணப்படுகின்றது. இது சுற்றுப்புற மாசுபடுதலை பொறுத்து இதன் விழுக்காடுகள் அதிகரிக்கின்றது.

அரிசியை தினமும் உணவாக உட்கொள்பவர்களுக்கு ஆர்சனிக் செறிவு இரத்தத்தில் அதிகரித்து காணப்படும் இது அவர்களுக்கு பலதரப்பட்ட சுகாதாரபிரச்சனைகளை இட்டுச்செல்லும். அரிசி ஒரு காலத்தில் நல்ல உணவுதான் இன்று அது நச்சு உள்ளதாக மாறியிருக்கின்றது. அதற்கு காரணமும் நாம்தான். எங்களுடைய உணவு எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷம் வைத்து கொல்லுகின்றது என்பதை கூட அறியாமல், இனம் புரியாத நோய்களுடன் தினமும் போராடிக்கொண்டிருக்கின்றோம்.

(வெண்கலம் CuSn (85% செம்பு Cu 29 + 15% தகரம் 50 Sn) (பித்தளை (CuZn) = செப்பு Cu 29 + துத்தநாகம் 30 Zn) இரண்டு உலோகமும் காந்தவியல் உள்ளது. (துத்தநாகம் மற்றும் தகரம் காந்த பண்புகளை கொண்டது)

நச்சு கனரக உலோகங்கள்: ஆர்சனிக், காட்மியம், நிக்கல், குரோமியம், பாதரசம், ஈயம், காலியம், கோபால்ட், அலுமினியம். ஆண்டிமனி மற்றும் செப்பு, செப்பு மனித உடலுக்கு ஒரு சுவடு கூறுகளாகத்தான் தேவைப்படுகின்றது. அளவுக்கு அதிகமாக எடுக்கப்படும் போது இதுவும் ஒரு நச்சு.

அலுமினியம் பொதி அட்டைகள், உணவுப்பொருட்களை சுற்றவும் அதிகமாக பயன்படுகின்றது. நிக்கல், குரோமியம் தண்ணீர் குழாய்களில் வெள்ளி பூச்சாகவும் காட்மியம் பெருமளவில் பெயிண்ட், வர்ண பூச்சுகளில் கலந்திருக்கின்றது. சுவரொட்டிகள், போஸ்டர்கள் வாயிலாக மழை நீரில் வழிந்தோடி குடிநீரில் கலக்கின்றது

இந்த உலோகங்கள் எல்லாம் இன்றைய வாழ்வியலில் பரவலாக்கப்பட்ட உலோகங்கள். நாங்கள் பயன்படுத்தும் அன்றாட பொருட்கள், சாதனங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வெளி பூச்சுகளாகவும் கலந்திருக்கின்றது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் வாழ்ந்தாலே போதும் உங்கள் மருத்துவத்திற்கான செலவுகள் தானாகவே குறைந்து போகும். கனிமச்சத்துக்கள் விற்றமின்கள் உடலுக்கு முக்கியம், ஏனென்றால் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துதல் அல்லது காயங்களைக் குணப்படுத்துதல் போன்ற பல்வேறு செயல்முறைகளுக்கு அவை தேவைப்படுகின்றன. பொதுவாக, சமச்சீர் உணவில் இருந்து நமக்குத் தேவையான பெரும்பாலான கனிமசத்துக்கள் மற்றும் விற்றமின்களைப் பெறுகிறோம்.

இருப்பினும் இது போன்ற நச்சு கனரக உலோகங்கள் உடலுக்கு அவசியமான கனிமசத்துக்களுடன் கலந்து உறுஞ்சப்படும் போது அவைகளும் பயன்பட முடியாமல் வீணாகின்றது அல்லது நச்சாக மாறுகின்றது. இதனுடன் அயோடின்-131 போன்ற அரை ஆயுள் கதிரியக்க தனிமங்கள் மற்றும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இணைந்து தைராய்டு தொடங்கி சிறுநீரகம் வரை பதம் பார்த்துவிட்டு போகும்.

கதிரியக்க அயோடின்-131, தைராய்டு ஹார்மோன் சுரப்புக்கு தேவையான நல்ல அயோடின் இருக்கவேண்டிய இடத்தில் ஒட்டி இருந்துகொள்ளும்.

அயோடின் 131 - கதிரியக்கச் சிதைவு மற்றும் அயோடினின் பண்புகள்: பிந்தையது பீட்டா கதிர்வீச்சாக வெளிப்படுகின்றது. கருவில் உள்ள 53 புரோட்டான்கள் மற்றும் 78 நியூட்ரான்கள் கொண்ட அயோடின் அணுவிலிருந்து, பீட்டா-மைனஸ் சிதைவின் மூலம் நிலையான (செனான்- Xe 54) 131 உருவாகின்றது.(நல்ல அயோடின் கருவில் உள்ள 53 புரோட்டான்கள் 74 நியூட்ரான்கள்)

இது தைராய்டு புற்றுநோய்க்கும் சுய-உடல்-தாக்கி நோய்க்கும் காரணியாகின்றது. சுற்றுப்புற மாசு, அணுவுலை விபத்து காலத்தில் அயோடின் நிறைந்த உணவுகள் மாத்திரைகளை எடுத்தால் கதிரியக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். நன்றி..

ஆர்சனிக், அரை உலோகம் மற்றும் கணினி உதிரிப்பாகங்களில் அரை கடத்தியாக பயன்படுகின்றது. ஆர்சனிக் இணைப்பு இரசாயன கலவைகள் அதிக நச்சுத்தன்மை கொண்டவை.




திங்கள், 16 மே, 2022

நியோபியம்-Nb அணு எண் 41, அரிதாக நிகழும் சாம்பல் நிறத்தில் உள்ள ஒரு கனரக உலோகம். இது ஒரு இரசாயன தனிமம் மற்றும் மாறுதல் உலோகங்களில் ஒன்றாகும். கால அட்டவணையில் 5 வது காலகட்டத்திலும் 5 வது துணைக்குழுவிலும் உள்ளது. தங்கம் வெள்ளிபோல் கதிரியக்கம் மற்றும் நச்சுத்தன்மை இல்லாதது.

கைவினைபொருட்கள், ஆபரணங்கள் மற்றும் சிறு தொழில் கருவிகள், எலெக்ட்ரானிக் சாதனம், வெல்டிங் பற்றவைப்பு செய்வதற்கு நல்ல இணக்கமான ஒரு உலோகம். இது மாறுபட்ட மின் அழுத்தத்தில் பல வர்ணங்களாக, மயில் நிறங்கள் போன்று மாறக்கூடிய ஒரு மாயாஜால தனிமம்.

இதன் நிமித்தம் கைவினைபொருட்கள், ஆபரணங்கள் தயாரிப்பில் அதிகமாக விரும்பி பயன்படுத்தப்படுகின்றது. பல வண்ண திருமண மோதிரங்கள், காதணிகள் இந்த உலோகத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றது.

நியோபியம் 1801 இல் சார்லஸ் ஹாட்செட் என்பவரால் முதல் முதலில் கொலம்பியாவில் உள்ள ஒரு நதிப் படுகையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தனிமத்திற்கு கொலம்பியம் என்று அன்று பெயரிட்டார். 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நியோபியம் கொலம்பியம் என்றுதான் அழைக்கப்பட்டது. பிற்பகுதியில் அது பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

1844 ஆம் ஆண்டு வரை பெர்லின் பேராசிரியர் ஹென்ரிச் ரோஸ், நியோபிக் மற்றும் தந்தாலக் அமிலம் இரண்டும் வெவ்வேறு பொருட்கள் என்று காட்டினார். ஹாட்செட்டின் அதன் பெயரைப் பற்றி அறியாத அவர், இது தந்தாலத்துடன் (73-Ta ) ஒத்திருக்கின்றதை பார்த்து, மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட கொலம்பியம் தனிமத்திற்கு தந்தாலஸின் மகள் நியோப் என்று பெயரிட்டார்.

தந்தாலம்-74Ta உலோகமும் ஆபரணங்கள் செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றது. பல வண்ண திருமண மோதிரங்கள்: அரிதான சிவப்பு தங்கம் இந்த உலோகத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றது.

பரிசு கேடயம், வெற்றி பதக்கம், நினைவு டொலர், மயில், பொன் வண்டு, கடவுள் சிலைகளை  நியோபியம் தனிமத்தில் செய்து அசத்த முடியும்.  ஒரு மாறுதலுக்காக தங்கம் வெள்ளியை விடுத்து, இது போன்று அரிதான உலோகங்களினால் செய்யப்பட்ட மோதிரங்களை உங்கள் திருமணத்தில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அனோடிக் ஒட்சிசனேற்ற நிறம். அனோடிக் ஒட்சிசனேற்றத்தில், ஒரு மின்சாரம் வெளிப்புற சுற்று வழியாக பாயும் போது பொருட்கள் ஒட்சிசனேற்றப்படுகின்றன. ஒட்சிசனேற்றம் என்பது ஒரு பொருள் எலக்ட்ரான்களை இழக்கின்றது. இவை ஒரு மின்முனை, அனோட் மூலம் எடுக்கப்படுகின்றன.

அனோட் என்பது: ஒரு மின்னாற்பகுப்பு கலத்தில் நேர்மறையாக சார்ஜ் செய்யப்பட்ட மின்முனை (+நேர்மறை துருவம்).

சல்பூரிக் அல்லது குரோமிக் அமிலம்) மின்னாற்பகுப்பு முறையில், . அதாவது மின்னோட்டத்தால் சிதைந்தது. அனோட் மேற்பரப்பில் (நியோபியம்) ஒக்சைடு அடுக்கு உருவாகின்றது (மாறுபட்ட மின் அழுத்தத்தில் நிறங்கள் உருவாகின்றது) (தங்க முலாம் பூசும் ஒரு தொழில் முறை)





சனி, 14 மே, 2022

Sugar = (glucose + fruit sugar)

குளுக்கோஸ்:

கார்போஹைட்ரேட்டுகள்- எளிய சர்க்கரைகள் (மோனோசாக்கரைடுகள்) இரட்டை சர்க்கரைகள் (டிசாக்கரைடுகள்) பல சர்க்கரைகள் (பாலிசாக்கரைடுகள்) என்று பல சர்க்கரைகள் இருந்தாலும் உடலின் சக்தி பரிமாற்றத்திற்கு குளுக்கோஸ்(C₆H₁₂O₆) என்ற ஒற்றை சர்க்கரைதான் தேவை.  

பல ஒற்றை அல்லது எளிய சர்க்கரைகள் இயற்கையிலுள்ளன, சிறந்தவை: பழச் சர்க்கரை (பிரக்டோஸ்), டெக்ஸ்ட்ரோஸ் (குளுக்கோஸ்) மற்றும் கேலக்டோஸ் இந்த எளிய சர்க்கரைகள் செரிமானத்தின் போது உடைக்கப்பட வேண்டியதில்லை மற்றும் இந்த சர்க்கரை உடனடியாக இரத்த ஓட்டத்தில் உடலால் உறிஞ்சப்படுகின்றன. அங்கே இவை இன்சுலின் உதவியுடன் உடலுக்கு ஆற்றல் சப்ளையராக சேவை செய்கின்றது.

மற்ற சர்க்கரைகள் செரிமானத்தின் போது உடைக்கப்பட வேண்டிய சர்க்கரைகள் எடுத்துக்காட்டாக: பால் சர்க்கரை (லாக்டோஸ்) குடலில் சுரக்கப்படும் லாக்டாஸ் என்ற நொதியத்தின் உதவியுடன் பால் சர்க்கரை  உடைக்கப்பட்டு, குளுக்கோஸ் உடலின் பயன்பாட்டிற்கும் கழிவு சர்க்கரை குடல்-வாழ் பாக்டீரியாக்களுக்கும் உணவாகின்றது. (லாக்டோஸ் = பால் சர்க்கரை = குளுக்கோஸ் + கேலக்டோஸ்) இதிலுள்ள கேலக்டோஸ் கழிவுச்சர்க்கரை.

தாய்ப்பாலிலுள்ள பால்சர்க்கரை குழந்தைகளுக்கு அவசியமானது. குடல்-வாழ்-நல்ல-பாக்டீரியாக்கள் வளர்ச்சி பெறுவதற்கு உதவுகின்றது. ஒரு சில பிள்ளைகளுக்கு இரண்டு வயதிற்குமேல் இந்த நொதியம் சுரப்பதை நிறுத்திக்கொள்கின்றது இதன் நிமித்தம் லாக்டோஸ் சகிப்புத்தன்மை ஏற்படுகின்றது.

இரட்டை சர்க்கரை இரட்டை சர்க்கரைகள் (டிசாக்கரைடுகள்) கரிம-வேதியியல் எளிய சர்க்கரைகளின் கலவைகள் (மோனோசாக்கரைடுகள்). மனித உயிரினம் டிசாக்கரிடேஸ்களைப் பயன்படுத்தி பிரிக்கின்றது, இதன் விளைவாக வரும் எளிய சர்க்கரைகளிலிருந்து ஆற்றலைப் பெறுகின்றது. சுக்ரோஸ் (கரும்பு மற்றும் பீட் சர்க்கரை), மால்டோஸ் (மால்ட் சர்க்கரை) மற்றும் லாக்டோஸ் (பால் சர்க்கரை) ஆகியவை அடங்கும்.

பழங்கள், காய்கறிகள், டேபிள் சர்க்கரை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு மற்றும் கரும்பு (சுக்ரோஸ்) மால்டோஸ் மால்ட் சர்க்கரை இயற்கையாக ஏற்படாது  பீர் போன்ற மால்ட் பொருட்களில் உருவாக்கப்படுகின்றது. பால்சர்க்கரை: பால் மற்றும் பால் பொருட்கள் (லாக்டோஸ்)

சாராம்சம்: ஒற்றை சர்க்கரை உள்ள உணவுகளை எடுத்தால் அது உடனடியாக உடலில் உறிஞ்சப்படுகின்றது. இரட்டை சர்க்கரை உணவுகள் கொஞ்சம் காலதாமதமாகும் பல சர்க்கரைகள்(பாலிசாக்கரைடுகள்) உள்ள உணவுகளை நீங்கள் எடுத்தால் உடைக்கப்பட்டு உறுஞ்சப்படுவதற்கு நீண்டநேரம் எடுக்கின்றது.

கார்போஹைட்ரேட்டுகள் (சாக்கரைடுகள்)

ஒற்றை/எளிய சர்க்கரைகள் (மோனோசாக்கரைடுகள்) உள்ள உணவுகள்

டெக்ஸ்ட்ரோஸ் = குளுக்கோஸ், பழங்கள், தேன், திராட்சை.

பிரக்டோஸ் = பழ சர்க்கரை கேலக்டோஸ், பால் சர்க்கரை.

இரட்டை சர்க்கரைகள் (டிசாக்கரைடுகள்) உள்ள உணவுகள்.

லாக்டோஸ் = பால் சர்க்கரை = குளுக்கோஸ் + கேலக்டோஸ் பால் மற்றும் பால் பொருட்கள்.

மால்டோஸ் = மால்ட் சர்க்கரை = குளுக்கோஸ் + குளுக்கோஸ் (பீர்)

பல சர்க்கரைகள் (ஒலிகோசாக்கரைடுகள்)

உள்ள உணவுகள்.மால்டோடெக்ஸ்ட்ரின் பெரும்பாலும் கார்போ தயாரிப்புகளில் காணப்படுகின்றது ரஸ்க், மிருதுவான ரொட்டி.

பல சர்க்கரைகள் (பாலிசாக்கரைடுகள்) உள்ள உணவுகள். ஸ்டார்ச் சத்து: தாவர மற்றும் சிறுதானியங்களான கேழ்வரகு, தினை, கம்பு, வரகு, சாமை, குதிரைவாலி, போன்ற தானிய பொருட்கள் (பாண், ரொட்டி),  காய்கறிகள், சோள மாவு, உருளைக்கிழங்கு மற்றும் கோதுமை.

செல்லுலோஸ்: நார்ச்சத்து உணவுகளிலுள்ள சர்க்கரை.

கிளைகோஜன்: விலங்கு பொருட்கள், இறைச்சி உணவுகளிலுள்ள சர்க்கரை.

ஒற்றை சர்க்கரை என்பது- குளுக்கோஸ் இரட்டை சர்க்கரை (டிசாக்கரைடு) என்றால் என்ன? : இரண்டு எளிய சர்க்கரைகளின் கலவை இரட்டைச் சர்க்கரை எனப்படும்.

பல சர்க்கரைகள் (பாலிசாக்கரைடுகள்) என்றால் என்ன? : பல எளிய சர்க்கரைகள் நீண்ட மூலக்கூறு சங்கிலிகளில் வரிசையாக இருக்கும்போது, ​​பல சர்க்கரைகள் என்று அழைக்கப்படும். காய்கறிஸ்டார்ச்சத்து,   பாலிசாக்கரைடு மற்றும் சிறிய துகள்களின் அமைப்பைக் கொண்டுள்ளது.  

இந்த பாலிசாக்கரைடுகள் நீண்ட காலத்திற்கு ஆற்றலை வழங்குகின்றன, மேலும் அவை சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை நேர தாமதத்துடன் செரிமான மண்டலத்தில் உடைந்து, பல மணிநேரங்களுக்கு இரத்தத்தில் நிலையான இரத்த சர்க்கரை அளவினை கொடுக்கின்றது.

அளவுக்கதியமான கார்போஹைட்ரேட்டுகளை உடல் கிளைகோஜனாக (C₂₄H₄₂O₂₁) சேமிக்கின்றது, இதில் சுமார் 5000 குளுக்கோஸ் எச்சங்கள் உள்ளன. விரதம்/ உணவுப் பற்றாக்குறை மற்றும் குறிப்பாக விளையாட்டு உடல் உழைப்பின் போது இந்த கிளைகோஜன் குளுக்கோஸ் சக்தியாக மாற்றப்பட்டு பயன்படுத்துகின்றது. இப்படி மாற்றப்பட்ட சர்க்கரைக்கும் (குளுக்கோஸ்) இன்சுலின் தேவை.

இது போன்ற அவசரகால தேவைகளுக்காக கிளைகோஜன் தசைகளில் மற்றும் குறிப்பாக கல்லீரலில் சுமார் 400 கிராம் வரை சேமிக்கப்படுகின்றது. உடலின் சக்தி பரிமாற்றத்திற்கு குளுக்கோஸ்(C₆H₁₂O₆) என்ற ஒற்றை சர்க்கரைதான் தேவை. மற்ற சர்க்கரைகளை குடல் செரிமான நொதியங்கள் உடைத்து ஒற்றை சர்க்கரையாக மாற்றுகின்றது. இந்த சக்தி பரிமாற்ற இடைவெளியை சர்க்கரை நோயாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

சர்க்கரை= (குளுக்கோஸ் + சர்க்கரை)

ஒற்றை சர்க்கரை: குளுக்கோஸ் (C₆H₁₂O₆)

பழச்சர்க்கரை: வாழைப்பழம், மாம்பழம், திராட்சைப்பழம், தேன், தர்பூசணி, பலாப்பழம், வத்தகப்பழம்,சோளம் சிரப்.

கேலக்டோஸ் சர்க்கரை: சுண்டல் கடலை. பருப்பு, பயறு.. பிஸ்தா, முந்திரி. கொட்டைகள், தலாம் விதை பெரும்பாலும் வாயு உற்பத்தி விதைகள்.

பால் சர்க்கரை: பால் தயாரிப்புகள், வெண்ணைய், தயிர், மோர். பாலாடைக்கட்டிகள். ஐஸ்கிரீம், பால்பவுடர்.

பாலியோல்- சர்க்கரை: மது/ஒயின் பொதுவாக புளிப் பழங்கள்: ஆப்பிள், இலந்தை, லிச்சி, நெல்க்காய், பேரிக்காய், பிளம்ஸ், பனி பட்டாணி. பேரிக்காய், நெக்ட்ரைன்

பிரக்டான்ஸ்- சர்க்கரை: அஸ்பாரகஸ், பிரஸ்ஸல்ஸ் முளைகள், பூண்டு/உள்ளி, காலிஃபிளவர், வெங்காயம், காளான்கள், கோதுமை தானியம்.

ஒற்றைச்சர்க்கரை  (மோனோசாக்கரைடுகள்)

அத்துனை கார்போஹைட்ரேட்டுகளும் மோனோசாக்கரைடுகளால் கட்டமைக்கப்பட்டவை. மோனோசாக்கரைடு என்பது குளுக்கோஸ்(C₆H₁₂O₆) (எளிய சர்க்கரை) என்று பொருள்படும், மற்றய அனைத்து வகையான சர்க்கரைகளும்  டிசாக்கரைடுகள் அல்லது இரட்டைச் சர்க்கரைகள், ஒலிகோசாக்கரைடுகள், பல சர்க்கரைகள் (பாலிசாக்கரைடுகள்) என்று அழைக்கப்படுகின்றது, அத்துனை சர்க்கரை வகைகளும் அடிப்படை கட்டுமானத் தொகுதியாக குளுக்கோஸ் (மோனோசாக்கரைடுகள்) கொண்டு கட்டமைக்கப்பட்டது.

நாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்துனை சர்க்கரைகளும் இரட்டை  சர்க்கரை கொண்டு கட்டமைக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக;  டேபிள் சுகர்= சுக்ரோஸ்  (C₁₂H₂₂O₁₁)  = [ பழ சர்க்கரை+குளுக்கோஸ்] மற்றும் [குளுக்கோஸ்+குளுக்கோஸ்]  தேன், கரும்பு சர்க்கரை, பணை வெல்லம், தென்னங்கருப்பட்டி, கிழங்கு சர்க்கரை, பழ சர்க்கரைகள் (மாம்பழம்,வாழைப்பழம்) சுக்ரோஸை டிசாக்கரைடுகள் (இரட்டை சர்க்கரைகள்) என்று வகைப்படுத்தலாம்.

இதிலிருந்து பகிரப்படும் குளுக்கோசு, சக்தி பரிமாற்றத்தில் பயன்படுத்தப்படுகின்றது. மற்ற உணவுகளிலுள்ள  பல சர்க்கரைகள் (பாலிசாக்கரைடுகள்) இரட்டை சர்க்கரைகளாக உடைக்கப்பட்டு, குளுக்கோசு உறுஞ்சப்படுகின்றது. நீங்கள் எந்த வடிவத்திலுள்ள சர்க்கரையை எடுத்தாலும்  உடல்  குளுக்கோஸ்,  ஒற்றைச்சர்க்கரையைத்தான் எடுக்கின்றது. இதில் குளுக்கோசு பகிரப்படும் நேர தாமதத்தை சர்க்கரை நோயாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

சர்க்கரை பகிரப்படும் நேரம்

குளுக்கோசு - உடனடியாக.

சுக்ரோஸ் -   10-15 நிமிடங்கள்.

பாலிசாக்கரைடுகள்- 2 மணித்தியாலம்.

 

ஸ்டார்ச் சத்து: கடலை, விதைகள், சிறுதானியங்கள் போன்ற

நீண்ட சர்க்கரைகள்- 4- 5 மணித்தியாலங்கள்.

 

செல்லுலோஸ்: நார்ச்சத்து உணவுகளிலுள்ள சர்க்கரை.

கிளைகோஜன்: விலங்கு பொருட்கள், இறைச்சி உணவுகளிலுள்ள சர்க்கரை. இரட்டைச் சர்க்கரைகளை காட்டிலும் இந்த உணவுகளில் நிறைய குளுக்கோஸ்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றது. இது கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கப்பட்டு, நாள் முழுவதும் சக்தி வழங்குகின்றது. அதுவும் சரியாக இன்சுலின் கிடைக்கும் பட்சத்தில்.


சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த உணவுதான் நல்லது என்று எதுவும் கிடையாது, இன்சுலின் ஊசி எடுப்பவர்கள்  காலை, மதியம் என்று உடல் உழைப்பை பொறுத்து உணவுகளை தரம்பிரித்து எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை இறக்கமுள்ளவர்கள் உடனடியாக சக்தி கிடைப்பதற்கு குளுக்கோஸ் அல்லது பழரசம், வாழைப்பழம் எடுத்துக்கொள்ள வேண்டும்.