செவ்வாய், 11 அக்டோபர், 2022

Nobel Prize in Chemistry: “Click Chemistry” Nobel Prize in Chemistry for 2022

கேலக்ஸி மற்றும் ஆன்டி கேலக்ஸி: அறிவியல் என்னும் விண்கலத்தில் பயணிக்கும் அத்துனை பேர்களுக்கும் ஒரு நற்செய்தி பரப்பிரமவாசிகள்[ஏலியன்கள்] இருக்கும் உலகத்திற்கு அருகாமையில் நாங்கள் பறந்து கொண்டிருக்கின்றோம் வெகுவிரைவில் தரை இறக்கிவிடுவோம்.. கடவுளின் தடயங்களை தேடி…

இந்த உலகத்திற்கு ஒரே ஒரு இயற்பியலைத்தான் கொடுக்கமுடியும். இரண்டு இயற்பியல் ஒரு போதும் இருக்கமுடியாது. இயற்கை அல்லது கடவுள் இதில் ஏதாவது ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும்.

அண்டவெளியில், இணையான ஒரு பிரபஞ்சம் இருக்குமாயின் அது ஆன்டிக் பிரபஞ்சமாகத்தான் இருக்கமுடியும். அதாவது நிழல் பால்வீதி மண்டலம் மற்றும் நிழல் கிரகங்கள்.

ஆன்டி துகள்களை அண்டவெளியில் தேடவேண்டிய அவசியமில்லை எங்களுடைய உடலே தினமும் ஒவ்வொரு நொடிக்கும் ஆன்டி துகள்களை வெளியிடுகின்றன.

உடலில் பொருள் மற்றும் எதிர்பொருள் மோதுகின்றபோது ஆன்டி துகள்களை வெளியிடுகின்றன. [தூய சக்தி: ஒளி/ஃபோட்டான்]

எடுத்துக்காட்டாக: பொட்டாசியம் 40, இது கதிரியக்கமுள்ள ஓரிடமூலகம் [ஐசோடோப்பு]. இது உணவுகளிலுள்ள இயற்கையான பொட்டாசியம் மற்றும் கதிரியக்க ஓரிடமூலகம் K-40 இன் 0.012% ஐக் கொண்டுள்ளது, இது 1.27 பில்லியன் ஆண்டுகள் அரை ஆயுளையும்  கொண்டுள்ளது.

அதாவது நாங்கள் உண்ணும் உணவுகள் மூலம் சிறிதளவு இந்த கதிரியக்கமுள்ள ஓரிடமூலக தனிமங்களும் உடலில் சேர்கின்றது. இதை பண்டோரா, அழகான தீமை என்று விபரிக்கலாம்.

இது கால்சியம் Ca-40 இன் அடிப்படை நிலைக்கு β மாற்றத்தின் மூலம் 90 % சிதைக்கின்றது, 10 % β+ உமிழ்வு வழியாக சிதைந்து அல்லது ஆர்கான் Ar-40 [பாசிட்ரான்(+) மற்றும் நியூட்ரினோ] இன் உயிரோட்டமான நிலையைப் பிடிக்கின்றது.

அதாவது இயல்பான கால்சியத்தில் எலக்ட்ரான் களையும்(-), ஓரிடமூலக கால்சியத்தில் Ca-40 பாசிட்ரான்(+) வெளியிடுகின்றது. இது ஆன்டிக் துகள்கள்.

ஆன்டிபொருளுக்கான விளக்கம்: பரப்பொருள் குவார்க்ஸ், கூறுகளை உருவாக்கின்ற கட்டுமான பொருள் இதில் பொருள் மற்றும் எதிர்பொருள் உள்ளது. எடுத்துக்காட்டாக: இயல்பான மூலகத்தில் புரோட்டான்[+] நியூட்ரான்[0] மற்றும் எலக்ட்ரான்களை(-) கொண்டது. இதுவே ஆன்டிக் கூறுகளில் எதிராக இருக்கும். அதாவது ஆன்டி மூலகத்தில் புரோட்டான்[-] நியூட்ரான்[0] மற்றும் [பாசிட்ரான்(+) கொண்டது.

இரண்டிற்குமான எதிர்ச்செயல்: மெட்டீரியல்  <-->  ஆன்டி மெட்டீரியல் ஒன்றை ஒன்று தள்ளுகின்றது இதுபெருவெடிப்புக்கு  காரணியானது. இதனுடைய விளைவு ஒளித்துகள்கள் [ஃபோட்டான்]. அண்டவெளியில்மெட்டீரியல்ஆன்டி மெட்டீரியல் துகள்களை அள்ளி கொட்டியது

விஞ்ஞானிகள் பெருவெடிப்பு பின்னணி கதிர் வீச்சு மூலம்  இந்த ஆன்டி மெட்டீரியல் துகள்களைஅளவிடுகின்றார்கள்.   எனவே ஆன்டி மெட்டீரியல்ஆன்டி கேலக்ஸி, ஆன்டி உலகம் [ பாதாள உலகம்] கண்டிப்பாக இருக்கின்றது அதாவது நிழல் பால்வீதி மண்டலம் மற்றும் நிழல்கிரகங்கள் கண்டிப்பாக இருக்கின்றது.   

இன்றைய அறிவியல் ஒரு கலப்பு, ஒன்றை மட்டும் கற்று ஒரு பிரயோஜனமும் இல்லை. அது வேதியியல், இயற்பியல், அணுவியல், குவாண்டம் இயற்பியல் மற்றும் மின்காந்தவியல், பொறியியல் கலந்த ஒரு பாடம். வேதியியல் தெரிந்தால்தான் இயற்பியலை புரிந்து கொள்ளமுடியும்.

அணுவியல் தெரிந்தால்தான் மருத்துவம் புரியும், நோய்களை குணமாக்க புதிய மருந்து கருவிகளை கண்டுபிடிக்க உதவும். ஒன்றை ஒன்று சார்ந்தது. நாளைய மருத்துவ உலகம் மருந்தும் கையுமாக அலையும் என்று நினைக்காதீர்கள். அது வேறுவிதமாக செயல்படும் கண்ணுக்கு தெரியாத ஆற்றல் சக்திகளை [நியூட்ரினோ சக்தி] பயன்படுத்தி, நோய்களை குணமாக்கும் ஆற்றலுள்ளதாக பரிமாணம் அடைந்திருக்கும்.

எடுத்துக்காட்டாக: லேசர், கதிரியக்க மருத்துவம் மற்றும் ரோபோ அறுவைசிகிச்சை, தடுப்பூசி, பாக்டீரியோபேஜ் தெரப்பி, மரபணு சிகிச்சை. கிரிஸ்பர் கேஸ்9, மரபணு வெட்டி, ஆய்வக உறுப்பு தயாரிப்பு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்யை, ஆய்வக தயாரிப்பு, செயற்கை உறுப்பு, கருவி, இதயமுடுக்கி, இரத்தம் கழுவுதல் என்று இன்று சாத்தியமான மருத்துவங்கள். நாளைய  மருத்துவம் இதைவிட மிக சிறந்ததாக இருக்கும்.

உடல் உறுப்பு பழுதா!  வெட்டி எறி, ஆய்வக உதிரிபாக தயாரிப்புகள் உனக்கு கை கொடுக்கும் தீராத நோய்களா, கிரிஸ்பர் கேஸ்-9 மரபணு வெட்டி, தொற்றுநோய் பாண்டமிக், இருக்கவே இருக்கின்றது மெசஞ்சர் தொழில் நுட்பம்.

கூகுளிடம் கேட்டால் சகல நோய்களுக்கும் விளக்கமும் தீர்வும் மருந்து சொல்லும். இணையதளங்கள் அவ்வளவு திறமையாக பதிலளிக்கின்றன.

நாளைய மனிதன் தனக்கு, ஆஸ்துமா, அலர்ஜி/ஒவ்வாமை, சர்க்கரை நோயிருக்குதென்று சொல்லிட்டு திரியமாட்டான், தீராத நோய்கள் நீங்கலான, உடல் ஊனமற்ற ஒரு புதிய தலைமுறையை இன்றைய அறிவியல் உருவாக்கிவிடும்.

ஒரு மருத்துவருக்கு மருத்துவ கல்வி இருந்தால் மட்டும் போதாது கணினி மற்றும் மருத்துவ கருவிகளை இயக்க அதன் முடிவுகளை படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். நாளைய மருத்துவம் இதை விட நிறைய பிரிவுகளை கொண்டுள்ளதாக, ரோபோக்களை இயக்கி அறுவைசிகிச்சை செய்யும் தொழில்நுட்பமாக பரிமாணம் அடைந்திருக்கும்.

இன்றைக்கும் கூட சீனாவில் காண்டாமிருகம் கொம்பை உரைத்து மருத்துவம் பார்க்கின்றார்கள் அதில் ஒன்றுமே இல்லை எங்களுடைய விரல் நகத்திலுள்ள கெரட்டின் தட்டு, அது எப்படி நோய்களை குணமாக்கும்.

எருமையின் கொம்பை உரைத்து குடிக்க கொடுத்தாலும் ஒன்றுதான், நகத்தை கடித்து தின்றாலும் ஒன்றுதான். இதுபோன்ற தவறான மருத்துவ முறைகளுக்கு புதிய மருத்துவம் முற்றுப்புள்ளி வைக்கும்.

2015 ஆண்டிற்கான நோபல்பரிசு தாமஸ் லிண்டால் பழுதுபார்க்கும் அமைப்பு இருக்க வேண்டும் என்று ஊகித்து அதைத் தேடிச் சென்றார். மேலும் அவர் ஒன்றைக் கண்டுபிடித்தார்.

இன்று நமக்குத் தெரிந்த வாழ்க்கை டிஎன்ஏ பழுதுபார்க்கும் வழிமுறைகளைச் சார்ந்தது. 1970கள் வரை DNA (deoxyribonucleic acid) ஒரு நிலையான மூலக்கூறு என்று கருதப்பட்டது. இருப்பினும், டோமஸ் லிண்டால் தனது ஆராய்ச்சியின் மூலம் டிஎன்ஏ விரைவான விகிதத்தில் உடைகின்றது என்பதைக் காட்டினார்.

உதாரணமாக, சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் கதிர்வீச்சு, புற்றுநோயை உண்டாக்கும் பொருட்களால் மரபணு சேதமடைகின்றது. இந்த சேதத்தை சரிசெய்வதற்கு அஜீஸ் சான்கார் கண்டுபிடித்த ஒரு குறிப்பிட்ட வழிமுறை தேவைப்படுகின்றது.

பால் மோட்ரிச், மறுபுறம், உயிரணுப் பிரிவின் போது டிஎன்ஏ எவ்வாறு பிழைகளைச் சரிசெய்கின்றது என்பதைத் தனது படைப்பின் மூலம் காட்டினார். நோபல் பரிசு பெற்ற முதல் துருக்கிய விஞ்ஞானி சான்கார் ஆவார்.

டிஎன்ஏ பழுதுபார்ப்பது; ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசு: தாமஸ் லிண்டால் (சுவீடன்), பால் மோட்ரிச் (அமெரிக்கா) மற்றும் அஜீஸ் சான்கார் (அமெரிக்கா/துருக்கி) ஆகியோர் மரபணு சரிசெய்தல் குறித்த தங்கள் கண்டுபிடிப்புகளுக்காக வேதியியலுக்கான 2015 நோபல் பரிசைப் பெறுகின்றனர். டிஎன்ஏவின் சேதத்தை சரிசெய்யும் வழிமுறைகளை அவர்கள் கண்டுபிடித்தனர்.

உயிரணுப் பிரிவின் போது டி.என்.டிஎன்ஏவின் புதிய இழைகள், அடிப்படை ஜோடிகளின் ஒரே மாதிரியான வரிசையுடன், அசல் இழையின் சரியான நகல்களாகும். கலத்தின் மரபணு தகவலுக்கான அடிப்படைக் குறியீடுகளின் இந்த வரிசை இரசாயனங்கள் மற்றும் கதிர்வீச்சு டிஎன்ஏவில் உள்ள தளங்களை சேதப்படுத்தும். மரபணு தகவலைப் பாதுகாக்க, குறியீட்டில் உள்ள பிழைகள் சரிசெய்யப்பட வேண்டும். குறைபாடுள்ள பாகங்கள் வெட்டப்பட்டு மாற்றப்படுகின்றன.

ஜீரணிக்கக்கூடிய மற்றும் ஜீரணிக்க முடியாத சர்க்கரைகள்: ஜீரணிக்கக்கூடிய சர்க்கரைகள் ஒற்றை மற்றும் இரட்டை சர்க்கரைகள். பழச்சர்க்கரை[பிரக்டோஸ்] பால் சர்க்கரை[லாக்டோஸ்] கரும்பு சர்க்கரை[சுக்ரோஸ்] திராட்சை சர்க்கரை [குளுக்கோஸ்] பீர் சர்க்கரை[மால்டோஸ்] மற்றும் கார்போஹைட்ரேட் சர்க்கரைகள் செரிமானத்தின் போது தனிப்பட்ட குளுக்கோஸ் மூலக்கூறுகளாக எளிதில் உடைக்கப்படுகின்றது.

ஜீரணிக்க முடியாத சர்க்கரை செல்லுலோஸ் சர்க்கரைகள். இலை தழை தண்டு மரப்பட்டை, காகிதம் போன்ற நார்ச்சத்து உணவுகள். இதிலுள்ள சர்க்கரைகள் இறுக்கமாக ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளது.

அவ்வளவு எளிதில் மனித செரிமான நொதிகளினால் உடைத்து விடமுடியாது. எனவே இந்த உணவுகள் ஜீரணிக்கப்படாமல், அதாவது சர்க்கரை உடைக்கப்படாமல் பெரும் குடலுக்கு தள்ளிவிடப்படுகின்றது. அங்கு வாழும் குடல்-வாழ்-நல்ல பாக்டீரியாக்கள் நார்ச்சத்தை உடைத்து தமக்கு தேவையான சர்க்கரையை எடுத்துக்கொள்கின்றது.

இதிலுள்ள சர்க்கரைகள் ஒரு ப்ரீபயாடிக் ஆகும். இந்த ப்ரீபயாடிக் குடல் பாக்டீரியாக்களுக்கு உணவளித்து, குடலை சீராகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றது. இதில் உடைக்கப்படும் சர்க்கரை, சர்க்கரை உயர்வுக்கு ஒருபோதும் காரணியாகாது. சர்க்கரை நோயாளிகள் பயமின்றி தாராளமாக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

செரிக்கப்படாத நார்ச்சத்து உணவுகள் சிறுகுடலில் இருந்து பெரும் குடலை அடைந்தவுடன் அங்கு அவை நன்மை பயக்கும் பல வேலைகளை செய்கின்றது. குடல்-வாழ்-நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளித்து அவைகளின் பணியை ஊக்கிவித்து அவைகளை வேலை வாங்குகின்றது.

நார்சத்து உணவுகள் ஒரு தயாரிப்பு மேலாளராக செயல்படுகின்றது. வளர்சிதைமாற்றத்தில் பங்கெடுக்கும் பியூட்ரிக் அமிலம், புரோபியோனிக் அமிலம் மற்றும் அசிட்டிக் அமிலம் போன்ற குறிகிய கொழுப்பு அமிலங்களை இந்த பாக்டீரியாக்கள் திரிக்கின்றது.

நன்மை செய்யும் இந்த பாக்டீரியாக்களுக்கு நார்ச்சத்து உணவுகள் விருந்தளிக்கின்றது. இந்த நார்சத்து சர்க்கரை இன்யூலின் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது.

கூனைப்பூக்கள்[Artichokes]: இந்த பூக்கள் ஜீரணிக்கமுடியாத நார்ச்சத்து இன்யூலின் நிறைந்த உணவு. சர்க்கரை நோயாளிகள், மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்தது. இதிலுள்ள இன்யூலின் பிரக்டோஸ் சர்க்கரை ஒரு ப்ரீபயாடிக் ஆகும்.

பிரக்டோஸ்[C₆H₁₂O₆] என்பது இயற்கையாக நிகழும் வேதியியல் இணைப்பு. ஒரு மோனோசாக்கரைடாக, பிரக்டோஸ் கார்போஹைட்ரேட்டுகளில் ஒன்றாகும்.

இன்யூலின் தாவரங்களில் கார்போஹைட்ரேட் சேமிப்புப் பொருள் பிரக்டோஸ் சர்க்கரைச் சங்கிலி இணைப்பை கொண்டது. இன்யூலின் பிரக்டான்களின் குழுவிற்கு சொந்தமானது.

மறுபுறம் மனிதர்களாகிய நாம் கிளைகோஜனை, கல்லீரலிலும் தசைகளிலும் கார்போஹைட்ரேட்களை சேமிப்பு பொருளாக கொண்டுள்ளோம். எனவே இது குளுக்கோஸ் சங்கிலியை கொண்டிருப்பதால் இது குளுக்கான் குழுவிற்கும் சொந்தமானது.

தாவரங்களில் கார்போஹைட்ரேட்களின் சேமிப்பு வடிவம் 10 க்கு உற்பட்ட குறுகிய பிரக்டோஸ் சங்கிலிகள் ஒலிகோசாக்கரைடு, பாலிசாக்கரைடு என்று அழைக்கப்படுகின்றது.

மனிதர்களில் சேமிப்பு வடிவம் கிளைகோஜ, எல்லாமே குளுக்கோஸ் சங்கிலி இணைப்பை கொண்டவை தேவைப்படும் போது குளுக்கோஸாக உடைக்கப்படுகின்றது.

மனிதர்களில் விலங்குகளில் கார்போஹைட்ரேட்களின் சேமிப்பு வடிவம் கிளைகோஜன். இது குளுக்கோஸாக உடைக்கப்பட்டு சத்தி பரிமாற்றத்திற்கு பயன்படுகின்றது.

இன்யூலின் பிரக்டோஸ் சர்க்கரை சங்கிலி, 35 பிரக்டோஸ் மூலக்கூறுகளினால் ஆனது. இதை மனித செரிமான நொதிகளினால் உடைப்பது கடினம். பாக்டீரியாக்கள் அதை செய்கின்றது அந்த சர்க்கரையை உணவாகவும் எடுத்துக் கொள்கின்றது. [இன்யூலின் சூத்திரம். C₆nH₁₀n+2O₅n+1]

இன்யூலின் நார்ச்சத்து சர்க்கரையின் நன்மைகள்: ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் மிகைப்படையும் நோய் எதிர்ப்பை அமைதிப்படுத்தும். கால்சியம் உறிஞ்சுதலை ஊக்கிவிக்கின்றது. எடை இழப்புக்கு வழிவகை செய்கின்றது. பருமன் சர்க்கரை நோயாளியின். எடையை சமச்சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றது.

குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கின்றது. நாள்பட்ட குடல் அழற்சி நோய்களை மேம்படுத்துகின்றது. குடல்சளிச்சவு மீளுருவாக்கம். லிப்பிட், கொழுப்பு வளர்சிதைமாற்றத்தினை சமப்படுத்துகின்றது. பெரிய குடலில் இன்யூலின் நார்ப்பொருள் அதிகளவு திரவத்தினை உறுஞ்சி மலக்கழிவினை உப்பவைத்து மலச்சிக்கலை விடுவிக்கின்றது.

இன்யூலின் உள்ள உணவுகள்: [இயற்கையான ஒரு ப்ரீபயாடிக்குகள்] கூனைப்பூக்கள், சிக்கரி வேர், அஸ்பாரகஸ், வெங்காயம், லீக், பூண்டு, வாழைப்பழங்கள், கோதுமை, கம்பு, பார்லி. மற்றும் ஜெருசலேம் கூனைப்பூ கிழங்கு மேலும் மருத்துவ சந்தையில் பவுடர் மற்றும் மாத்திரை வடிவிலும் இன்யூலின் கிடைக்கின்றது. இன்யூலின் சூத்திரம். C₆nH₁₀n+2O₅n+1]

கூனைப்பூக்களில் உள்ள விற்றமின்கள்: ஃபோலிக் அமிலம் , விற்றமின்-சி, விற்றமின்-கே மற்றும் கால்சியம், தாமிரம், இரும்பு, மாங்கனீஸ், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் மற்றும் இன்யூலின் உள்ளன.

மருத்துவத்திற்கான நோபல் பரிசு: ஸ்வீடன் பரிணாம விஞ்ஞானி பாபோவுக்கு கிடைத்திருக்கின்றது. இவர் மேக்ஸ் பிளாங்க் ஆராய்ச்சி துறை ஜெர்மனியில் ஆய்வுகளை மேற்கொண்டவர்.

ஸ்வான்டே பாபோ அவரின் சுய சிந்தனையால் பேலியோஜெனெடிக்ஸ் ஆராய்ச்சி துறை நிறுவப்பட்டது. இப்போது இந்த துறை நியண்டர்டால்களை மனித மரபணு ஆராய்ச்சியின் சூப்பர் ஹீரோக்களாக மாற்றியுள்ளது.

இவரைப் போலவே தந்தையும் நோபல் பரிசு பெற்றவர் மருத்துவத்துக்கான நோபல் பரிசின் புதிதாக முடிசூட்டப்பட்டு, குடும்ப பாரம்பரியத்தை தொடர்கிறார். ஒரு ஆஸ்திரிய தந்தை மகன் அணிக்கு இந்த மரியாதை கிடைத்திருக்கின்றது. அவரின் 30 வருடங்களுக்கு மேலான கடின உழைப்பின் பிரதிபலனாக இந்த பரிசு கிடைத்திருக்கின்றது.

எது நம்மை தனி மனிதனாக ஆக்குவது. நவீன மனிதன் ஆப்பிரிக்காவிலிருந்து உலகம் முழுவதையும் காலனித்துவப்படுத்தினர்கள்.

உடற்கூறியல் ரீதியாக நவீன மனிதர்களான ஹோமோ சேபியன்ஸ் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் சுமார் 3,00,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றினார்கள் என்பதற்கான ஆதாரங்களை ஆராய்ச்சிகள் வழங்குகின்றது.

அதற்கு முன்பே, சுமார் 4,00,000 முதல் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு, நமது நெருங்கிய உறவினர்களான நியாண்டர்தால்கள், ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவை உருவாக்கி காலனித்துவப்படுத்தினர். சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேபியன்களின் குழுக்கள் ஆப்பிரிக்காவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து அங்கிருந்து உலகின் பிற பகுதிகளுக்கும் பரவினார்கள்.

எனவே ஹோமோ சேபியன்ஸ் மற்றும் நியாண்டர்தால்கள் யூரேசியாவின்[ஐரோப்பா+ஆசியா] இணைந்த பெரும்பகுதி முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்தனர். கலப்பு உறவுகள் வைத்துக்கொண்டார்கள். காலப்போக்கில் நியாண்டர்டால்கள் அழிந்துபோனார்கள்.

இவர்கள் அழிந்து போனதிற்கான காரணம் சரியாக தெரியாவிட்டாலும். இவர்கள் அறிவியல் ரீதியாக கொஞ்சம் பின்தங்கியே இருந்தார்கள். நவீன மனிதனைவிட சற்று உயரம் குறைவு,180-200 கிலோ எடை அவர்களின் ஆயுள் 30 வயதினை தாண்டியதில்லை.

அவர்கள் கடினமான ஒரு மொக்குத்தனமான வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்கள் என்று நியாண்டர்டால்களின் ஆய்வுகள் சொல்கின்றது [அவர்கள் புத்திசாலியா இல்லையா என்பது சரியாகத்தெரியாது]

இருப்பினும், அழிந்துபோன நியாண்டர்டால்களுடனான நமது உறவைப் பற்றி இன்று நாம் அறிந்திருப்பது மரபியல் தகவல்களிலிருந்து மட்டுமே அறிய முடியும்.

நியாண்டர்டால்களுடனான எங்களுடைய மரபணு தொடர்பு நபருக்கு நபர் வெவ்வேறு மரபணு பாகங்களை கொண்டுள்ளனர்.

இதை அவர் நவீன மனிதனிடத்திலிருந்து நியாண்டர்டால மரபணுவை ஒழுங்குபடுத்தி காட்டினார். எந்த நியாண்டர்டால் மரபணு பாகங்களை கொண்டுள்ளவர்கள் அதிகமாக தொற்றுநோய், சர்க்கரை நோய், அலர்ஜி போன்ற தீராத நோய்களினால் பாதிக்கப்படுகின்றார்கள் என்று கண்டறிய முடியும். இதற்காகத்தான் மருத்துவத்திற்கான பரிசு கிடைத்தது.

நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்த நியாண்டர்தால்கள் தங்களுக்கு தேவையான நெருப்பு, கல் வேட்டைக்கருவிகள் மற்றும் குகைச்சுவர் ஓவியங்கள் எதையும் உருவாக்கவில்லை அதற்கான ஆர்வமும் அவர்களிடத்தில் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்கின்றது ஆய்வுகள். தாங்கள் வாழ்ந்ததற்கான எந்த தடயங்களையும் அவர்கள் விட்டுச்செல்லவில்லை.

கட்டுமரங்களை கட்டவோ கடலை கடக்கவோ எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. அவர்களின் தவறு, தங்களை அடுத்த தலைமுறை வாழ்க்கைக்கு தகுதி உள்ளவர்களாக மாற்றிக் கொள்ளவில்லை.

நாங்கள் எதற்காக காலனித்துவப்பட்டிருந்தோம் அறிவியலில் பின்தங்கியிருந்ததினால். இதே நிலைமையில் தான் அன்று நியாண்டர்தால்கள் இருந்தார்கள். இதன் நிமித்தம் அவர்கள் நவீன மனிதனிடம் அடிமைப்பட்டு இருந்திருக்கலாம்.

மறுபுறம் ஹோமோசேப்பியன்கள் அதாவது நவீன மனிதன் பசிபிக் பகுதியிலுள்ள ஒவ்வொரு தீவையும் வெறும் 65,000 ஆண்டுகளில் காலனித்துவப்படுத்தினர்கள்.

மூன்று மனித மரபணுக்களின் ஒப்பீடு: அழிந்துபோன உயிரினங்களின் மரபணு தகவல்களை மறுகட்டமைப்பு செய்தல் [பேலியோஜெனோமிக்ஸின் Paleogenomics] பகுப்பாய்வு. அதற்காக அவர் 1990 இல் ஸ்வாண்டே பாபோ முனிச்சில்/ஜெர்மனியில் உள்ள லுட்விக் மாக்சிமிலியன்ஸ் பல்கலைக்கழகத்திற்கு நியமிக்கப்பட்டார், அங்கு அவர் பேராசிரியராக பணியாற்றினார்.

பாபோ, தொன்மையான டிஎன்ஏ குறித்த தனது பணியை தீவிரப்படுத்தினார். நியண்டர்டால்களின் மைட்டோகாண்ட்ரியாவின் (இழைமணி) டிஎன்ஏவை பகுப்பாய்வு செய்ய அவர் முடிவு செய்தார். அவற்றின் சொந்த டிஎன்ஏவைக் கொண்ட செல்களில் கட்டமைப்பு ரீதியாக வேறுபட்ட பகுதிகள். மைட்டோகாண்ட்ரியல்(இழைமணி) மரபணு சிறியது, கலத்தில் உள்ள மரபணு தகவலின் ஒரு பகுதியை மட்டுமே கொண்டுள்ளது.

ஆனால் இது ஆயிரக்கணக்கான பிரதிகளில் உள்ளது, இது வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றது. அவரது அதிநவீன முறைகள் மூலம், 40,000 ஆண்டுகள் பழமையான எலும்புத் துண்டிலிருந்து மைட்டோகாண்ட்ரியல் (இழைமணி) டிஎன்ஏ பகுதியை வரிசைப்படுத்துவதில் பாபோ வெற்றி பெற்றார், இதன் மூலம் அழிந்துபோன நமது உறவினரின் மரபணுத் தகவலின் ஒரு பகுதியை முதல் முறையாக கிட்டத்தில் அணுகினார்.

மனித உடலில் மின்நிலையமாக இயங்கும் மைட்டோகாண்ட்டியா[இழை மணி] தாய்வழி மரபணு தகவல்களை மட்டுமே கொண்டுள்ளது.

சமகால மனிதர்கள் மற்றும் சிம்பன்சிகளுடனான ஒப்பீடுகள்: நியண்டர்டால்கள் மரபணு ரீதியாக வேறுபட்டவை என்பதைக் காட்டியது. சிறிய மைட்டோகாண்ட்ரியல்(இழைமணி) மரபணுவின் பகுப்பாய்வுகள் வரையறுக்கப்பட்ட தகவலை மட்டுமே வழங்கியதால், பாபோ இப்போது நியண்டர்டால்களின் அணுக்கரு மரபணுவை வரிசைப்படுத்த முயன்றார்.

அதற்கான ஒரு இடத்தை தேடினார் அந்த நேரத்தில் ஜெர்மனி/லீப்ஜிக்கில் மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிட்யூட்டைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

இங்கே, பாபோ மற்றும் அவரது பல்துறை குழுவானது தொன்மையான எலும்பு எச்சங்களிலிருந்து டிஎன்ஏ வை தனிமைப்படுத்தி பகுப்பாய்வு செய்வதற்கான முறைகளை சீராக மேம்படுத்தி கொண்டனர்கள்.

டிஎன்ஏ வரிசைமுறையை மிகவும் திறமையானதாக மாற்றியமைக்க புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஆராய்ச்சி குழு பயன்படுத்திக் கொண்டது.

இறுதியாக, 2010 இல் பாபோ, முதல் நியண்டர்டால்களின் மரபணு வரிசையை வெளியிட முடிந்தது. ஒப்பீட்டு பகுப்பாய்வுகள் நியண்டர்டால்கள் மற்றும் ஹோமோ சேபியன்கள் மிக சமீபத்திய பொதுவான மூதாதையர்கள், சுமார் 8,00,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டுகின்றது.

கூடுதலாக, பாபோ மற்றும் அவரது குழுவினர் இப்போது உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து நியண்டர்டால்களுக்கும் நவீன மனிதர்களுக்கும் இடையிலான உறவை இந்த ஆய்வின் மூலம் படிக்க முடிந்தது.

நியாண்டர்டால்களின் டிஎன்ஏ வரிசைகள் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த நவீன மனிதர்களை விட ஐரோப்பா அல்லது ஆசியாவிலிருந்து வரும் நவீன மனிதர்களின் வரிசைகளை ஒத்ததாக பகுப்பாய்வுகள் காட்டுகின்றன.

நியாண்டர்தால்கள் மற்றும் ஹோமோ சேபியன்கள் தங்கள் ஆயிரம் ஆண்டுகால சகவாழ்வின் போது இனக்கலப்பு செய்தனர் என்பதே இதன் பொருள்.

ஐரோப்பிய அல்லது ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த நவீன மனிதர்களில், மரபணுவில் ஒன்று முதல் நான்கு சதவீதம் வரை நியாண்டர்டால்களிலிருந்து வருகின்றது.

டெனிசோவா மனிதன்: இறுதியில், பாபோ மற்றும் அவரது மேக்ஸ் பிளாங்க் ஆராய்ச்சி துறை லீப்ஜிக்/ ஜெர்மனி, குழு டெனிசோவன்ஸ் என்ற முன்னர் அறியப்படாத மனித மூதாதையைக் கண்டுபிடித்தனர் . இதற்கு அடிப்படையானது ரஷ்ய டெனிசோவா குகையில் கண்டுபிடிக்கப்பட்ட விரல் எலும்பிலிருந்து டிஎன்ஏ வரிசையின் பகுப்பாய்வு ஆகும்.

டெனிசோவன்கள் நியாண்டர்டால்கள் மற்றும் நவீன மனிதர்களுடன் (ஹோமோ சேபியன்ஸ்) நெருங்கிய தொடர்புடையவர்கள், ஆனால் இரண்டு இனங்களிலிருந்தும் மரபணு ரீதியாக வேறுபட்டவர்கள்.

சாராம்சம்: மனிதன் குரங்கில் இருந்து வந்தவன் கிடையாது. மனிதனுக்கும் குரங்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை அது வேறு உயிரினம் இது வேறு உயிரினம். நியாண்டர்டால்கள் மற்றும் நவீன மனிதர்கள் (ஹோமோ சேபியன்ஸ்) சமகாலத்தில் வாழ்ந்த இரண்டு மனித இனம்.

இந்த இரண்டு குலமும் இன்றைய மனித சமூகம்போல் அவர்களுக்குள்ளே அடிக்கடி மோதல்களும் சண்டையும் சச்சரவுகளும் இருந்திருக்கின்றது. பிற்காலங்களில் நவீன மனிதனினால் நியாண்டர்டால்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டார்கள். இவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் எங்களிடத்தில் எஞ்சி இருக்கும் மரபணு மட்டும் தான். இன்றைய மனிதன் நியாண்டர்தால் மற்றும் ஹோமோ சேபியன்கள் மரபணு கலப்பு உள்ள ஒரு இனம்.

மரபியல் நிபுணர் ஸ்வாண்டே பாபோ: நமது மரபணுவில் புதைந்து கிடக்கும் நியண்டர்தால் பற்றிய டிஎன்ஏயை துப்புதுலக்கிவர். ஒரு விரிவான உலகளாவிய ஆய்வின் முடிவுகளை அவர் முன்வைத்து,  நவீன மனிதர்களின் ஆரம்ப வடிவங்கள் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிய பிறகு நியண்டர்டால்களுடன் இணைந்தன என்பதற்கான டிஎன்ஏ ஆதாரத்தை முன்வைத்தார். 

ஆம், நம்மில் பலருக்கு தெரியாது  எங்களுடைய மூதாதையினர் ஹோமோ சேபியன்களின் சமகாலத்தில் வாழ்ந்து மடிந்துபோன   நியாண்டர்டால் என்ற ஆதிமனிதன், எங்களுடைய டிஎன்ஏ யில் இன்னும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றான் என்று,

மரபியல் நிபுணர் பாபோ டிஎன்ஏயை ஒழுங்கு படுத்தி நமது மரபணுவில் புதைந்து கிடந்த, நியண்டர்தால்  என்ற மனிதனை வெளியே கொண்டு வந்தார்  இதுமட்டுமில்லாமல்   ரஷ்ய டெனிசோவா குகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குழந்தையின் விரலின்   ஒரு சிறிய எலும்புத் துண்டிலிருந்து இன்னுமொரு புதிய மனித இனத்தை அடையாளம் கண்டார். 

இன்று நாங்கள் ஒன்றாக இருந்தாலும் பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மண்ணில்  மாறுபட்ட மனித குலங்கள்/இனங்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். 

நியாண்டர்டால்  VS நவீன மனிதன்

- அகலமான மண்டை ஓடு.

- அகன்ற நெற்றி.

- பெரிய மூக்கு.

- நீண்ட புருவம்.

- பரந்த மார்பு.

- பெரிய அகலமான விலா எலும்புக் கூடு..

- குறிகிய முன்கை.

- பரந்த இடுப்பு.

- குறுகிய கால் முன்னெலும்புகள்.

- அழுத்தமான முடி

- பளுப்பு/வெள்ளை சருமம் மற்றும் நவீன மனிதனைவிட சற்று உயரம் குறைவு, சுமார் 180-200 கிலோ எடை.


தனிப்பட்ட சந்திப்புகள் 

[நவீன மனிதன், நியாண்டர்டால் இனக்கலப்பு ]

ஹோமோ சேபியன்ஸ் மற்றும் நியாண்டர்டால்கள் எவ்வாறு இனக்கலப்பு செய்தார்கள் அல்லது இவ்வாறு இனக்கலப்பு செய்திருக்கலாம். பெண்கள் இல்லாத குழுமமாக, பயணப்பட்ட நவீன ஹோமோ சேபியன்கள்  நியண்டர்டால்  பெண்களை மணந்தார்கள்.


சுமார் 100,000 ஆண்டுகளுக்கு முன்பு, நவீன ஹோமோ சேபியன்கள் முதலில் யூரேசிய நிலப்பரப்பை ஆக்கிரமித்தனர்.அவர்கள் மத்தியதரைக் கடலின் கிழக்கு விளிம்பில் வடக்கிலிருந்து நியண்டர்டால்களை சந்தித்திருக்கலாம், அங்கு அவ்வப்போது தாம்பத்திய இனப்பெருக்கம் செய்தார்கள். இதன் நிமித்தம் நியண்டர்டால்களின் மரபணு தடயங்கள் இன்றைய மக்களின் மரபணுவில் காணப்படுகின்றன.


நியாண்டர்டால் அருங்காட்சியகம் உங்களை வரவேற்கின்றது.முகவரி: Talstr.300 - 40822 மெட்மேன், ஜெர்மனி


நாங்கள் வசிக்கும் எசன் நகரத்திற்கு அருகாமையிலிருக்கும் மெட்மேன்/எர்க்ராத் டிசில்டோப்ஃ[Düsseldorf] கிழக்கே நியாண்டர்டால் பள்ளத்தாக்கு உள்ளது. சரியாக 166 ஆண்டுகளுக்கு முன்பு[1856 இல்] இங்கு தொல்மனிதனுடைய தொல்லியல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.


நியாண்டர்டால்கள் ஐரோப்பாவில் மட்டுமின்றி இலங்கை இந்தியா போன்ற ஆசிய நாடுகளிலும் வாழ்ந்தவர்கள் அங்கு தோண்டினாலும் கூட [அகழ்வாராய்ச்சி] நியாண்டர்களுடன் எச்சங்கள் கண்டிப்பாக கிடைக்கும்.


நியண்டர்டால் டிஎன்ஏ கலப்பு எங்களுக்கு நோய் அபாயத்தை அதிகரிக்க செய்கின்றனவா?  ஹோமோ சேபியன்ஸ் மற்றும் நியாண்டர்தால்கள் உடலுறவு கொண்டார்கள், ஆனால் அவை முழுமையாக மரபணு ரீதியாக இணக்கமாக இல்லை. இருப்பினும் நியண்டர்டால்களுடன் உடலுறவு கொண்டது, நவீன மனிதர்களுக்கு அவர்களின் மரபணு வேறுபாட்டைக் கொடுத்துள்ளது.

ஹோமோ சேபியன்ஸ் + நியண்டர்டால் டிஎன்ஏ கலப்பு = ஐரோப்பா மக்கள். ஹோமோ சேபியன்ஸ்+ நியண்டர்டால்/டெனிசோவா மனிதன் டிஎன்ஏ கலப்பு = ஆசிய மக்கள் என்று பொதுப்படையாக சொல்லப்படுகின்றது. இவர்களின் தாம்பத்திய இணக்கத்தினால் உருவானவர்களா நாங்கள் ?

இது போன்ற கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது. ஆம், நியண்டர்டால்களும் நவீன மனிதர்களும் கண்டிப்பாக ஒருவருக்கொருவர் உடலுறவு வைத்துள்ளார்கள், அநேகமாக பல முறை பல இடங்களில் ஐரோப்பாவின் வெவ்வேறு பகுதிகளில்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இன்று ஆப்பிரிக்காவில் வசிக்காத மக்களின் மரபணுவில் 1.5 முதல் 2.1 சதவிகிதம் மரபணு பொருட்கள் உள்ளன, அவை நியாண்டர்டால்களிலிருந்து தெளிவாக வருகின்றன. ஆப்பிரிக்கா சகாரா பாலைவனத்திற்கு கீழே வசிக்கின்ற மக்கள் நியண்டர்டால் மரபணு கலப்பு இல்லாதவர்கள்.

இரண்டு சமீபத்திய ஆய்வுகள் இப்போது இந்த டிஎன்ஏ மனித மரபணுவில் சமமாக விநியோகிக்கப்படவில்லை என்பதைக் காட்டுகின்றது.

மனிதர்களில் கெரட்டின் இழைகளின் கட்டமைப்பு மரபணுவின் புரதங்கள் தோல் மற்றும் முடியில் காணப்படுகின்றன. ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பா அல்லது ஆசியாவின் குளிர்ச்சியான பகுதிகளுக்குச் செல்லும் போது உடற்கூறியல் ரீதியாக நவீன மனிதர்களை மாற்றியமைக்க இது உதவியிருக்கலாம்,

எடுத்துக்காட்டாக, விற்றமின்-டி வளர்சிதை மாற்றத்தில் தோலின் நிற மாற்றத்தில் ஒரு பங்கு வகிக்கின்றது [வெள்ளை/பளுப்பு கறுப்பு நிற தோல் மற்றும் கண், தலைமுடியின் நிறம்

நவீன மனிதன் மற்றும் நியாண்டர்டால் பாலியல் பங்காளிகள் அவர்கள் சந்தித்த நேரத்தில் மரபணு ரீதியாக முழுமையாக ஒத்துப்போகவில்லை என்பதை இரண்டு ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன. மனித மரபணுவின் சில பகுதிகளில் நியண்டர்டால்களின் தடயங்கள் ஏன் இல்லை என்பதை இது விளக்குகின்றது. அதாவது இரண்டு இனங்களிடையே இனக்கலப்பு நடந்திருக்கின்றது அது பொருத்தமில்லாததாக இருந்திருக்கின்றது. மேற்கோளாக: பசுமாட்டை எருமையுடன் இனக்கலப்பு செய்ததுபோல்.

இவர்கள் சொல்லுகின்றது போல், ஹோமோ சேபியன்ஸ், நியண்டர்டால்கள் பாலியல் பங்காளிகளாக இருந்திருந்தால் அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளின் மரபணுக்கள், சரிக்கு சரிபாதி [23+23=46] தாய் தந்தையினரின் மரபணுக்களை கொண்டவர்களாக இருந்திருக்க வேண்டும் இதுதானே நியதி, ஆனால் நியண்டர்டால்களின் மரபணுக்கள் எங்களிடத்தில் அங்கும் இங்குமாக 1,5 விழுக்காடுகள் மட்டுமே உள்ளது.

இது எப்படி நடந்தது. இதற்கு ஏதாவது வேறு காரணங்கள் இருக்குமா, வைரஸ் தொற்று நோய்கள் இந்த மரபணுக்களை இடம்மாற்றியிருக்கலாம். அல்லது இன்று புதிய வகை காய்கறி, நெல் இனங்களை உருவாக்கியது போல் யாரோ ஒருவர், காலநிலைகளை சமாளிப்பதற்காக புதிய மனித இனத்தை உருவாக்க முயற்சித்து, மரபணு மாற்றம் செய்திருக்கலாம்..?

நியண்டர்டால்களின் மரபணுக்கள் முழுமை இல்லாமல் எங்களிடத்தில் இடைச்செருகலாக இருப்பதினால், அது எங்களை நோயாளியாக்கின்றது. [ இரத்த உறவு திருமணங்கள் நோயுள்ள வாரிசுகளை உருவாக்குவதுபோல் ]

ஓசை மொழி அதுதான் முதல் மொழி  ↦💜💙💛

உலக மொழிகளின் தொடக்கம், அந்த மொழிகளின் எழுத்துருவங்களின் தொடக்கம். இந்த மூன்று மனித இனங்களின் யார் முதலில் மொழிவளர்ச்சி உள்ளவர்களாக இருந்திருப்பார்கள்.

ஆதி மனிதன் தொடர்ச்சியாக பேசுவதற்கு இன்று இருப்பது போல் அதிகமான சொற்கள் அவர்களிடத்தில் இருந்திருக்காது. குறைவான சொற்களை பயன்படுத்தி, இணைச்சொற்கள் ஏதுமில்லாமல்  திரும்பத்திரும்ப ஒரிரு சொற்களையே முறித்து முறித்து அவர்களினால் பேசியிருக்க முடியும்.[மேற்கோளாக இரு, போ, வா, , கீ என்ற ஒலிகளை எழுப்பி இருப்பார்கள்]

ஆதி மனிதன் மிகவும் சொற்பமான ஒலிகளை எழுப்பியும் மற்றும் தலை, கை போன்ற உடல் அசைவுகளை கொண்டே  மற்றவர்களுடன் பேச்சுத் தொடர்பு வைத்திருப்பான்.

இன்றைய நடையில் சொன்னால்  ஐம்பதுக்கும் குறைவான சொற்களை  கொண்டே ஆதி மனிதன் உரையாடி இருப்பான் என்பது வெளிச்சமானதொரு உண்மைஇந்த குறைச்சலான சொற்களை கொண்டு தொடர்ச்சியாக அவர்களினால் ஒருபோதும் பேசியிருக்க முடியாது. அந்த உரையாடல் கூச்சலாகவும் கத்தலாகவும் தான், இருந்திருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

இன்றைக்கும் கூட அமேசான், ஆப்பிரிக்கா பழங்குடி மக்கள் சொற்பமான சொற்களை வைத்தே உரையாடுகின்றார்கள். இந்த மொழிகளுக்கு எழுத்துருவம் மற்றும் புது மொழி சொற்களின்  கலப்புகள் எதுவும் கிடையாது அவர்கள் பேசினால் ஒரே கூச்சல் ஒலியாகத்தான் இருக்கும் எதுவுமே புரியாது, ஆனால் அந்த மக்களுக்கு அது புரிகின்றது.

2000 ஆண்டளவில் வாழ்ந்த மக்களால் கூட இன்று நாங்கள் பேசுவதுபோல் ஓரிரு நிமிடங்கள் தொடர்ச்சியாக திரைப்பட வசனங்கள் போல் பேசியிருக்க முடியாது. அதற்கு எடுத்துக்காட்டாக இன்று நம்முடன் வாழும் அமேசான், ஆப்பிரிக்கா பழங்குடி மக்களின்  உரையாடலை எடுத்துக்கொள்ளலாம்.   

பின்னால் மக்கள் பெருகி சமூகமாக வளரும் போது வேறும் பல புது சொற்கள் இணைந்து ஒரு நீண்ட உரையாடலுக்கு வழியை திறந்து விட்டது, ஆனால் சகலருக்கும் பொதுவானதாக இருந்த அந்த "ஓசை மொழிஒரேமாதிரியான ஒலியுடன்தான் பேசப்பட்டு வந்தது. அதற்காக ஒருவன் கா கா, கீ கீ என்றால் அதை தமிழ் மொழி என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. அது சகலருக்கும் பொதுவான  பறவையின் ஓசை.

தொடர்ச்சியானதொரு உரையாடல்/பேச்சு தொடங்கியதே நிறைய வளமான நல்ல சொற்கள் வந்த பிற்பாடுதான். ஒரு மொழியை மொழி என்று அடையாளப்படுத்தியது எழுத்துருவம் மற்றும் அதில் பிறந்த சொற்களும் தான்

ஒரேமாதிரியான ஒலியுடன் பேசப்பட்டு வந்த  ஓசை மொழியை பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட  மாறுபட்ட எழுத்துருவங்கள் உச்சரிப்பு என்ற பெயரில்  சிதைத்து புதுப்புது ஒலிகளை ( சொற்களை) இணைத்து பல மொழிகள் உருவாக காரணமானது. எழுத்துருவங்கள் எந்த உச்சரிப்பை சொல்லிக் கொடுத்ததோ, அந்த உச்சரிப்பே அந்த மொழியின் ஒலியானது, பின்பு அது மொழியானது.

எந்த இனம் அதிகமாக சொற்களஞ்சியங்களை வைத்திருந்தார்களோ அவர்களே முதலில் இரண்டு வார்த்தைகளை தொடர்ச்சியாக பேசத்தொடங்கியிருப்பார்கள். தமிழ் மொழி நிறைய சொல் வளங்களை கொண்டது. பள்ளிக்கல்வி வந்த பிற்பாடுதான்  ஒரு மொழி பரவலாக்கப்பட்டது. பலராலும் பேசப்படும் போது  அந்த மொழி ஒரு இனத்தின் அடையாளமானது.

இதற்கு முன்னால் ஓரிரு மக்கள் மட்டுமே மொழித்திறன் உள்ளவர்களாக இருந்திருப்பார்கள். பள்ளிக்கல்வி இல்லாத மொழிகள்  குறுகி,சிறு குழு மக்களிடையே பேசப்படுகின்றது.சிலது  காலப்போக்கில் காணாமல்போய்விட்டது. உலக மொழிகளின் தொடக்கம், அந்த மொழிகளின் எழுத்துருவங்களின் தொடக்கத்திலிருந்து தொடங்குகின்றது.  

வேதியியலுக்கான நோபல் பரிசு: 2022 ஆம் ஆண்டிற்கான “கிளிக் கெமிஸ்ரி” வேதியியலுக்கான நோபல் பரிசு, கரோலின் பெர்டோஸி, மோர்டன் மெல்டல் மற்றும் பேரி ஷார்ப்லெஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

ஒரு இரசாயன மூலக்கூறை மற்றொரு இரசாயன மூலக்கூறாக மாற்றுவது. மருந்துகள் முதல் அன்றாடம் பயன்பாட்டு பொருள்கள் வரை தயாரிப்பதற்கு தொழில்துறை ஊக்கிகள் தேவை. இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசுகளை வென்றவர்களின் கண்டுபிடிப்புகள். வேதியியல் துறை தன்னை முழுமையாக புதிப்பித்துக்கொள்கின்றது.

ஒரு வினையூக்கி உண்மையில் என்ன செய்கின்றது? இந்த தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்ள, உங்களுக்கு முதலில் சில அடிப்படைகள், கொஞ்சம் வேதியியல் அறிவும் தேவை:

இரசாயன மூலக்கூறுகள் அணுக்களால் ஆன கலவைகள், அவை அணுக்கரு மற்றும் எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வேதியியல் தனிமமும் அதன் உட்கருவைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எலக்ட்ரான்களைக் கொண்டிருப்பதால், அது மற்ற அணுக்களுடன் வினைபுரிய விரும்பும் மற்றும் தனித்துவமான விருப்பங்களையும் கொண்டுள்ளது.

அயனிகள் ஆக்கம், இரண்டு மூலகங்களின் அயன் பிணைப்பு —-> ஒரு மூலக்கூறாக மாறுவது எடுத்துக்காட்டாக: [சமையல் உப்பு: Na++ Cl- = NaCl] [மெக்னீசியம் குளோரைடு: Mg2+ + Cl- = MgCl2 [மதிப்பு: Mg2++2Cl] [சோடியம் ஒக்சைடு: Na++O2- = Na2O [ மதிப்பு: 2Na+O ]

அரை உலோகம் மற்றும் உலோகம் அல்லாதவையுடனான பிணைப்புக்கள் கடைசி ஓடுபாதையிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை வைத்து ஒரு மூலக்கூறு கட்டமைக்கப்படுகின்றது. மெக்னீசியம் குளோரைடு தயாரிப்புக்கு மெக்னீசியத்தின் வெளி எலக்ட்ரான்கள் இரண்டு, மெக்னீசியம் எப்பவும் இந்த இரண்டு எலக்ட்ரான்களை கழட்டிவிடவே பார்க்கும்.

குளோரினுக்கு வெளி எலக்ட்ரான்கள் ஏழு, இது முழுமை அடைவதற்கு ஒரு எலக்ட்ரான் மட்டுமே தேவை, மெக்னீசியம் இரண்டு வெளி எலக்ட்ரான்களை வைத்திருப்பதால் குளோரின் இரண்டுதரம் இணைய வேண்டியிருக்கின்றது.

சோடியம் [Na+]  ஒரு எலக்ட்ரானை  இழந்து, முழுமை அடைந்து, கூடுதலாக ஒரு புரோட்டானைக் கொண்டுள்ளது. இது நேர்மறையாக சார்ஜ் செய்யப்பட்ட அயனிகள்[P+] 

குளோரின் [Cl-] ஒரு எலக்ட்ரானை  சேர்த்து, முழுமை அடைந்து, கூடுதலாக ஒரு எலக்ட்ரானைக் கொண்டுள்ளது. இது எதிர்மறையாக சார்ஜ் செய்யப்பட்ட அயனிகள்[e-]

இதனால்தான் கார/களிவுலோகங்கள் மற்றும் ஹலோஜன்கள், சால்கோஜனைடுகள்  எப்பவும் தாக்கம் புரியக்கூடியவைகள்.

சுலபமாக விளங்கிக்கொள்ள: பெரும்பாலும் அரை உலோகங்களுக்கு இரண்டு பொண்டாட்டி, உலோகம் அல்லாதவைக்கு இரண்டு அல்லது மூன்று கணவன்மார்கள். சமையல் உப்பு ராமரும் சீதையைப்போல் தங்கள் உறவுகளை வைத்துக்கொள்கின்றது. ஒரு முனைப்புக்காக இதை சொல்லியிருக்கின்றேன்.

தனிம அட்டவணையில் அரை உலோகம்[காரவுலோகம்,களிவுலோகம்] முழு உலோகங்கள்[பட்டறை அல்லது வார்ப்பு உலோகம்] மற்றும் உலோகம் அல்லாதவை. இதில் இரும்பு செப்பு போன்ற வார்ப்பு உலோகங்கள், உலோக பிணைப்புகள். இவைகளை ஒன்று சேர்த்து உருக்கும் போது எந்த தாக்கங்களும் ஏற்படாது. மற்றும் உன்னத வாயுக்கள் இவைகள் எந்த தொந்தரவுக்கும் வருவதில்லை.

ஆனால் அரை உலோகம் மற்றும் உலோகம் அல்லாதவையுடனான ஒரு பிணைப்பை ஏற்படுத்தும் போது அவை தாக்கம் புரிகின்றது. வெடித்து சிதறும், எரியும் அல்லது புகையும். இது போன்று ஒரு சில எதிர்வினையை காட்டுகின்றது.

இவைகள் வினையூக்கிகளாக செயல்படுகின்றது. இவைகளின் விளைபொருள் சாதுவான உப்புக்கள். இதை நீங்கள் உணவாகவோ அல்லது மருந்தாகவோ பயன்படுத்திக் கொள்ளமுடியும். இந்த இடத்திலிருந்துதான் கெமிஸ்ட்ரி என்ற பாடமே தொடங்குகின்றது.

இந்த இணைப்புக்கள் அத்துனையும் வேதியியலின் புனித மந்திரமாக பார்க்கப்படுகின்றது. இந்த வேதியியல் பிணைப்பு மூலமாகத்தான் நமது உலகமும், நமது பிரபஞ்சமும் இன்றைக்கு இருக்கின்றது. நம்மைச் சுற்றியுள்ள அத்துனை பொருட்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அணுக்களைக் கொண்டுள்ளது.

இருப்பினும் இந்த இரசாயனப் பிணைப்புகள் எங்கும் காணப்பட்டாலும் அதன் பிணைப்புகள் இன்றுவரைக்கும் ஒரு மர்மமாகவே உள்ளது அதை எப்போதும் எங்கு பார்த்தாலும் ஒரு ஆச்சரியமாகவே இருக்கின்றது. எப்படி இதெல்லாம் நடந்தது.

எடுத்துக்காட்டாக: நீரின் பிணைப்பு, ஒவ்வொருமுறையும் தண்ணீர் குடிக்கும் போது ஆச்சரியமூட்டுகின்றது. அதனை யார் எதற்காக மடித்தார்கள். நீரைப்போல் மற்றய தனிமங்களையும் மடித்து புதிய மூலக்கூறுகளை உருவாக்கமுடியுமா..?

பரப்பிரம இயற்கை, இரசாயன எதிர்வினைகள் மற்றும் அணுக்கள் ஒன்றோடொன்று பிணைப்புகளை உருவாக்கும் அல்லது அவற்றைப் பிரிக்கும் திறன் இல்லாவிட்டால், நமது பிரபஞ்சம் இன்றும் பாலைவனமாகவும் காலியாகவும் இருந்திருக்கும்.

கோள்கள், நிலவுகள் அல்லது சிறுகோள்கள் போன்ற திடமான உடல்கள் எதுவும் இருந்திருக்காது. மேலும் நீர், நமது மரபணுப் பொருள் DNA, நமது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் போன்ற மிக முக்கியமான மூலக்கூறுகள் எதுவுமே இருந்திருக்காது..

எங்கும் பரவியிருக்கும் இரசாயனப் பிணைப்புகளின் முக்கியத்துவம் இந்த உலகத்தில் அவசியமாக இருந்தபோதிலும், அவற்றின் இயல்பு மற்றும் பன்முகத்தன்மை முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. சமீபத்தில், வேதியியலாளர்கள் அணுக்கள் மற்றும் அவற்றின் ஜோடிகளைப் பற்றி சில புதிய விஷயங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு “கிளிக்-கெமிஸ்ரி” என்ற தலைப்பை கொடுத்திருக்கின்றார்கள்.

அணுக்கள் பொதுவாக குழுக்களாக ஒன்றிணைகின்றன, அதில் அவை வசதியாக இருக்கும். எடுத்துக்காட்டாக, கார்பன் அணுக்கள் (C) மற்ற கார்பன் அணுக்களுடன் பிணைக்க விரும்புகின்றன. அவை சங்கிலிகள், குறுக்குவெட்டுகள், வட்டங்களை[கிராஃபைட் வளையம்] உருவாக்குகின்றன.

கார்பன் மூலக்கூறுகள் மிகவும் பல்துறை செயல்பாடுகளை கொண்டது மற்றும் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் அவைகளின் பிணைப்புகள் நிகழ்கின்றன.

உணவில் உள்ள விற்றமின்கள், எரிவாயு, பெட்ரோல், கிட்டத்தட்ட அத்துனை உயிரினங்களுக்கும் ஆற்றல் வழங்குபவராக அவை அவற்றிற்கு அர்ப்பணிக்கப்பட்ட வேதியியல் துறையைக் கொண்டுள்ள கரிம வேதியியல் கூறுகள். சுருக்கமாக சொன்னால் கார்பன் இல்லாமல் எதுவுமே இல்லை.

கார்பன் அணுக்கள் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டவுடன், அவற்றைப் பிரிப்பது கடினம். நீங்கள் ஒரு வேதியியல் எதிர்வினையை மேற்கொள்ள விரும்பினால், அதில் நீங்கள் மற்றொரு மூலக்கூறுடன் வினைபுரிய வேண்டும், இந்த எதிர்வினையைத் தொடங்க உங்களுக்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகின்றது அல்லது ஒரு வினையூக்கி தேவைப்படுகின்றது.

19 ஆம் நூற்றாண்டில் மனித உடலுக்குள் இதேபோன்ற ஒன்றைக் கண்டனர். அங்கு, நொதிகள் அத்துனை முக்கிய செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகின்றன.

அவை செரிமானம், வளர்சிதை மாற்றம் மற்றும் கைவினை ஆகியவற்றை உயிரினத்திற்குத் தேவையான அத்துனை மூலக்கூறுகளுடன் ஒழுங்குபடுத்துகின்றன. அவை தொடர்ந்து பொருட்களை மீண்டும் மீண்டும் மற்ற பொருட்களாக மாற்றுகின்றன. அவை உடலில் உள்ள அத்துனை உயிர்வேதியியல் எதிர்வினைகளின் இயக்கிகள்.

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வேதியியலாளர்கள் இந்த கொள்கையை ஆய்வகத்தில் நகலெடுக்கத் தொடங்கினர். உடலில் உள்ள நொதிகளைப் போலவே சோதனைக் குழாயில் எதிர்வினைகளைத் தொடங்கும் பொருட்களை அவர்கள் கண்டறிந்தனர்.

1909 ஆம் ஆண்டில், ஜெர்மன் வேதியியலாளர் ஃபிரிட்ஸ் ஹேபர் காற்றில் இருந்து நைட்ரஜனை அம்மோனியாவாக மாற்றினார், இது தொழில்துறை உரங்களைத் தயாரிக்கப் பயன்படுகின்றது. இந்த ஹேபர்-போஷ் செயல்முறை மட்டுமே கற்பனை செய்யக்கூடியது, ஏனெனில் ஒரு உலோகத்தின் மேற்பரப்பில் உள்ள அணுக்கள் மாற்றத்தை ஆதரிக்கின்றன.

இன்று, இத்தகைய வினையூக்கிகள் உலகின் மொத்த தேசிய உற்பத்தியில் சுமார் 35 சதவீதத்தில் ஈடுபட்டுள்ளன. அவை பாராசிட்டமால்[காய்ச்சல் வலிநிவாரணி] போன்ற மருந்துகளைத் தயாரிக்க மருந்துத் துறையில் பயன்படுத்தப்படுகின்றன.

கார்களில் வினையூக்கி மாற்றிகள், வெளியேற்ற வாயுக்களில் உள்ள நச்சுப் பொருட்களை பாதிப்பில்லாததாக ஆக்குகின்றன. அவை பிளாஸ்டிக் தயாரிக்கவும் மறுசுழற்சி செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன. சுருக்கமாக: அவை எல்லாவற்றிலும் உள்ளன.

கிளிக் கெமிஸ்ரி, இந்த கண்டுபிடிப்பின் மூலம் ஒரு மருந்து, குறிப்பாக புற்றுநோய் மருந்து நோய் உள்ள இடங்களுக்கு, வேறு எந்த இடங்களையும் பாதிக்காமல் நேரடியாக கட்டிக்கு சென்று அங்கு செயல்படுவது. இதனால் எதிர்காலத்தில் பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகளை தயாரிக்கமுடியும்.

எடுத்துக்காட்டாக: ஒருதருக்கு சிறுநீரகம் அல்லது பித்தப்பை கல் இருந்தால் அதை கரைக்கும் மருந்தை அந்த இடத்திலேயே ஒரு கிளிக்கில் உருவாக்கி அதை கரைய வைக்கமுடியும். இதுவொரு மந்திர செயல் இல்லையா……!

எதிர்வினை முடுக்கிகளுக்கு நோபல் பரிசுகள் மீண்டும் மீண்டும் வழங்கப்பட்டதில் எந்த ஆச்சரியமில்லை அது புதுப்புது பரிமாணங்களை திரும்பத் திரும்ப எடுக்கின்றது.

கிளிக்-கெமிஸ்ரி: கிளிக் வினையில் செயல்படும் அசைட் மற்றும் அல்கைன் குழுக்கள் ஒன்றோடொன்று வினைபுரிந்து தொடக்க மூலக்கூறுகளை ஒன்றோடொன்று இணைக்கின்றது. செப்பு-Cu வினையூக்கி, வேதியியல் எதிர்வினை உயிரியக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது.

எல்லாவிதமான மூலகங்களையும் ஒரு கிளிக்கில் மூலக்கூறு பிணைப்பினை ஏற்படுத்த முடியும் என்கின்றது இந்த புதிய கண்டுபிடிப்பு.

ஒரு மாயம் ஒரு மந்திரம் உங்களுக்கு தேவையான சர்க்கரை, உப்பு, விற்றமின், மருந்து மாத்திரைகள் மற்றும் சாயங்கள், வாசனை திரவியங்கள், சாம்பல்[விபூதி] எதுவாக இருந்தாலும் ஒரு கிளிக்கில், ஒரு சொடக்கில் எந்த இடத்திலும் உருவாக்கமுடியும்.

உயிரியல்பு எதிர்வினைகள், நீங்களாகவே லெகோ கல் அடுக்குவதுபோல் உங்களுக்கு தேவையான மூலக்கூறுகளை உருவாக்கிகொள்ளமுடியும். பிணைய முடியாத தனிமங்களையெல்லாம் இதன் மூலம் இணைக்க வைக்கமுடியும் என்கின்றது இந்த புதிய கிளிக்-கெமிஸ்ரி.

கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம் எதிர்கால மருத்துவம் எப்படியிருக்குமென்று. இந்த கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகம் அல்லது வேற்றுகிரகங்களில் மனிதர்கள் குடியேறி வாழ்வதற்கு உதவும். என்னுடைய காலத்தில் நடக்கும், ஆனால் அதை எழுதுவதற்கு என்னுடைய வயது இடந்தருமா தெரியாது..? 

கிளிக் செய்யும் வேதியியல் கருவிகள்.

Triazol- டிரைசோல்[1,2,3] இரசாயன பிணைப்பு C₂H₃N₃

Alkyne- அல்கைன் கார்பன் பிணைப்பு HC=-C-CH₂CH₃

Azide-அசைட் நிறப்பொருள்.

அமில உப்புகள் மற்றும் கரிம சேர்மங்கள் ஆகும்.

செப்பு-Cu வினையூக்கி அல்லது செப்பு வினையூக்கி இல்லாமலும்.

* கிளிக் கெமிஸ்ட்ரியை அனைவரும் பயன்படுத்தலாம்.

* கிளிக் செய்யும் வேதியியல் செயல்முறை விளக புத்தகம், கருவிகளை விலைக்கு வாங்கமுடியும்.


செப்பு வினையூக்கிய அசைட்-அல்கைன் சைக்ளோடிஷன் (CuAAC) ஒரு 5-உறுப்புள்ள ஹீட்டோரோசைக்கிளை உருவாக்குவதற்கு ஒரு ஆல்கைனுடன் ஒரு அசைட்டின் செப்பு-வினையூக்கிய எதிர்வினை, Cu(I)-வினையூக்கிய அசைடு-அல்கைன் சைக்லோடிஷன் (CuAAC), உயிர் இணைப்புகளின் தொகுப்புக்கான ஒரு சக்திவாய்ந்த எதிர்வினை ஆகும்.

இயற்பியலுக்கான நோபல் பரிசு: அக்டோபர் 2022, மூன்று குவாண்டம் இயற்பியலாளர்களான அலைன் ஆஸ்பெக்ட், ஜான் கிளாசர் மற்றும் அன்டன் ஜீலிங்கர் ஆகியோர்களுக்கு இந்த வருடம் இயற்பியலுக்கான நோபல் பரிசை பெற்றனர். அவர்களின் புதிய ஆராய்ச்சி குவாண்டம் தொழில்நுட்பங்களுக்கு புதியது.


தொலைவின் நடவடிக்கைகள் [entanglement] ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் குவாண்டம் [entanglement] சிக்கலின் சாத்தியமான விளைவுகளை "தூரத்தில் பயமுறுத்தும் செயல்" என்று அழைத்தார். இப்போது மூன்று இயற்பியலாளர்கள் நோபல் பரிசைப் பெற்றுள்ளனர், இது இணைப்பின் தனித்தன்மையைப் பற்றிய கடைசியாக மீதமுள்ள சந்தேகங்களை சோதனை ரீதியாக நீக்கியது.


இரண்டு துகள்கள் தனித்தனியாக இருந்தாலும் அவை ஒன்றாகவே செயல்படுகின்றன என்ற உண்மையை கண்டறிந்தார்கள். இது குவாண்டம் இயற்பியலில் ஒரு மந்திர செயலாக பார்க்கப்படுகின்றது.


சிக்கிய குவாண்டம் நிலைகளை பயன்படுத்துவது, குவாண்டம் நிலையை ஒரு துகளிலிருந்து மற்றொரு துகளுக்கு நீண்ட தூரம் மாற்றுவது சாத்தியம் என்று காட்டினார்கள். குவாண்டம் சிக்கல் என்பது குவாண்டம் இயக்கவியலின் பண்புகளை வரையறுக்கவில்லை,


இரண்டு துகள்கள் சிக்கிய குவாண்டம் நிலையில் இருக்கும்போது ஒரு துகளின் அளவை அளவிடும் ஒருவர், சரிபார்ப்பு தேவையில்லாமல் மற்ற துகள் மீது சமமான அளவீட்டின் முடிவை உடனடியாக தீர்மானிக்க முடியும். அவை இரண்டின் முடிவுகளும் ஒன்றாகத்தான் இருக்கும்.


இந்த குவாண்டம் தொழில்நுட்பம் புதிய தொழிநுட்பங்களுக்கு வழிவகை செய்யும். குவாண்டம் கணினிகள் கடினமான எண்கணித புதிர்களை உடைக்க, சூப்பர் கணினிகளை உருவாக்க இந்த கண்டுபிடிப்பு உதவும்.


அவனின்றி எதுவுமே அசையாது, பரப்பிரமம் அசைந்தால் நாங்களும் அசைகின்றோம். குவாண்டம் இயக்கவியலில் ஒரு அணுவின் இயக்கம் எப்படியிருக்குமென்று எவருக்குமே சரியாக தெரியாது.


ஒரு உண்மையை சொன்னால், அதை எங்களினால் சுலபமாக விளங்கி கொள்ளமுடியும் ஏனென்றால் அது எங்களுக்குள்ளே இயல்பாக உள்ளது. பொய் செயற்கையானது அதை விளங்கி கொள்வது கடினம்.


இயற்பியலில் பெரும்பகுதி புனைவு, கற்பனையாக சொல்லப்பட்டவை, குவாண்டம் இயக்கவியல் ஒரு புரியாத புதிராக இருந்ததினால்தான் என்னவோ, இயற்பியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனே தலைசுற்றி தூக்கி எறிந்ததொரு கோட்பாடு அதனால்தான் அவர் அதைதூரத்திலிருந்து பயமுறுத்தும் ஒரு செயல்” என்று வர்ணித்தார்.


சாதாரண இயல்பு நிலையில் எங்களுடைய கையிலுள்ள ஒரு பொருளின் தன்மையை துல்லியமாக சொல்லிவிட முடியும் அது கறுப்பா சிவப்பா, திரவமா அல்லது திண்மமா என்று,


ஆனால் குவாண்டம் இயக்கவியலில் ஒரு பொருளின் தன்மையை அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாது அது, இதில் எதுவாகக்கூட இருக்கலாம்..


குவாண்டம் சிக்கல் அல்லது பிணைப்பு சார்பு, குவாண்டம் என்டாங்கிள்மென்ட் [Entanglement] என்பது இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட, இயற்பியலில் ஒரு பகுதியாகும்.


குவாண்டம் சிக்கலில் சிக்கவைத்த இரண்டு எலக்ட்ரான்களில் ஒன்றை பூமியிலும் மற்றொன்றை தொலை தூரத்திலுள்ள இன்னுமொரு கிரகத்தில் வைத்தாலும். இரண்டும் தங்களிடையே தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன. இந்த இரண்டினுடைய பிணைப்பு சார்பு பண்புகளும் ஒன்றை ஒன்று சார்ந்ததாக இருக்கும்.


இந்த கோட்பாடு, ஒரு காலத்தில் ஒளியின் வேகத்தை விட வேகமாக தகவல்களை அனுப்பும் சாத்தியங்களுக்கு ஒரு நம்பிக்கையை அளிக்கின்றது.

குவாண்டம் சூப்பர் நிலையை விளங்கி கொள்வதற்காக ஒரு பூனை கதை. ஷ்ரோடிங்கரின் பூனை என்பது ஆஸ்திரிய இயற்பியலாளர் எர்வின் ஷ்ரோடிங்கர் (1887-1961) முன்மொழியப்பட்ட ஒரு சிந்தனை பரிசோதனையாகும், குவாண்டம் இயக்கவியலின் முழுமையற்ற தன்மையை நிரூபிக்க உதவும் நோக்கம் கொண்டது.


அவருடைய பெட்டிக்குள்ளே இருக்கும் பூனை இறந்திருக்கும் அல்லது உயிருடன் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது. அவர் பெட்டியை திறக்கும் வரைக்கும் அந்த பூனை இரண்டும் கலந்த ஒரு சூப்பர் நிலையில் இருக்கும்.


சரி இருக்கட்டும் இதற்கான விளக்கத்தை பார்ப்போம்.... ஒரு பெட்டிக்குள்ளே ஒரு பூனை ஒரு நச்சு பாட்டில்,  குறுகிய அரை ஆண்டுள்ள ஒரு கதிர்வீச்சு தனிமம்,  மற்றும் கதி்ர் வீச்சினை அளவிடும் கீகர் கவுண்டர், நச்சு பாட்டிலை உடைக்கும் ஒரு கருவி. அங்கு வைக்கப்பட்டுள்ள கதிர்வீச்சு தனிமம் சிதையும் போது அது கதிர்வீச்சினை வெளியிடுகின்றது,


இது  கீகர் கவுண்டர் காட்டி முள்ளை அசைய வைத்து, நச்சு பாட்டிலை உடைக்கும்  கருவியை இயக்குகின்றது.இந்த நிகழ்வு சில சமயங்களில்  நடக்கலாம் அல்லது நடக்காமல் கூட போகலாம்.


இதற்கு காரணம் குறுகிய அரை ஆண்டு உள்ள கதிர்வீச்சு தனிமம், அது ஒரு மணித்தியாலத்தில் சிதையலாம் அல்லது ஒரு வருடம் கழித்தும் கூட சிதையலாம் அல்லது சிதையாமல் கூட போகலாம். இதனால்தான் பெட்டியை ஒரு மணித்தியாலம் கழித்து திறந்து பார்க்கும் போது,


அந்த பூனை உயிருடனோ அல்லது இறந்தும் கூட இருக்கலாம். பெட்டியை திறப்பதற்கு முன்னால் அந்த பூனை இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கின்றது. இந்த நிலையைத் தான் சூப்பர் நிலை என்று இயற்பியலில் அழைக்கப்படுகின்றது. 


சூப்பர் நிலையிலுள்ள[மேல் சுழல்/கீழ்சுழல்] இரண்டு எலக்ட்ரான்களை பிரித்து ஒன்றை பூமியிலும் மற்றொன்றை தொலைதூரத்திலுள்ள ஒரு கிரகத்தில் வைத்தாலும் அதனுடைய பண்புகள் எப்பவும் மாறாதது அவை இரண்டும் தங்களுக்கிடையே ஒரு தொடர்பினை வைத்திருக்கும்.


பூமியிலுள்ள எலக்ட்ரான் மேல் சுழல் என்று காட்டினால் தொலைதூரத்திலுள்ள மற்ற எலக்ட்ரான் உடனடியாக கீழ்சுழல் என்று காட்டுகின்றது. தூரத்திலுள்ள எலக்ட்ரான் உடனடியாக ஒரு பதிலை சொல்லுதில்லையா.


இதை இன்னும் சுலபமாக விளங்கி கொள்வதற்கு, ஒரு கருவறையில் சூப்பர் நிலையில் இருந்த, இரட்டை குழந்தைகளில் ஒன்றை அமெரிக்காவிலும் மற்றொன்றை ஐரோப்பாவில் வளர்ந்தாலும் அதனுடைய பண்புகள் ஒரு போதும் மாறாதது. ஐரோப்பாவில் வளரும் பிள்ளையை கிள்ளி வைத்தால் அது அமெரிக்காவில் வளரும் பிள்ளைக்கு வலிக்கின்றது.     


ஐரோப்பா பிள்ளைக்கு  40 °C  டிக்ரி காய்ச்சல் என்றால் அமெரிக்காவில் வளரும் பிள்ளைக்கும் கண்டிப்பாக  40 °C  டிக்ரி காய்ச்சல் இருக்கும். ஒளியைவிட அதிவேகமாக பயணிக்கும் இந்த தகவலை அமெரிக்கா செல்லாமலே இங்கு இருந்தபடியே துல்லியமாக சொல்லிவிட முடியும். இதைத்தான் அவர்கள் குவாண்டம் என்டாங்கிள்மென்ட் நிலை என்று சொல்லுகின்றார்கள்.


இது அதிசயம் ஆனால் நடக்கின்றது நீ ஒன்றை நினைத்தாய் அது அங்கு நடக்கின்றது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நம்ப மறத்த ஒன்றினை இவர்கள் கண்டுபிடித்திருக்கின்றார்கள் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.


பரப்பிரமம் மண்ணில் உயிர்களை படைத்து, சும்மா விட்டுவிட்டு போகவில்லை அதை ஆட்டிவித்து கொண்டும் இருக்கின்றான்.


ஆம், நாங்கள் சூப்பர் நிலையிலிருந்த ஒரு நட்சத்திர துகள்களிலிருந்து வந்தவர்கள் அதனுடைய பண்புகளில் நாங்கள் இருப்பதில் என்ன ஆச்சரியம். எங்களுக்கான நட்சத்திரம் பழுதுபட்டால் அது எங்களையும் பாதிக்கின்றது. இதைத்தான் வான சாஸ்திரம் என்று நமது முன்னோர்கள் சொன்னார்கள்.


குவாண்டம் என்டாங்கிள்மென்ட்: முதன்முறையாக இயற்பியலாளர்கள் 150 மில்லியன் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் ஆய்வகத்தில்  உற்பத்தி செய்யப்பட்ட ஒளித்துகள்களுடன் சூரியனிலிருந்து வரும் ஃபோட்டன்களுடன் குறுக்கிட்டு சிக்கவைத்துள்ளார்கள்.


இந்த இரண்டு வகையான ஒளித்துகளின் தோற்றத்திற்கு இடையே சுமார் 150 மில்லியன் கிலோமீட்டர் தூரம் இருந்தும், ஒரு துகளின் நிலை மாற்றம்  தானாகவே பங்குதாரரின் நிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தியிருந்தது.


அதாவது, பூமியிலுள்ள எலக்ட்ரான் மேல் சுழல் என்று காட்டினால் தொலைதூரத்திலுள்ள மற்ற எலக்ட்ரான் உடனடியாக கீழ்சுழல் என்று காட்டியது. தங்களுக்குள்ளே புலப்படாத ஒரு தகவல் பரிமாற்றதினை  இரண்டும் கொண்டிருந்தது


முக்கியமான இயற்பியல் குறியீடுகள்.

- ஹாமில்டன் ஆப்ரேட்டர் [இயக்கிகள்-H ^]

- அலை செயல்பாடு [Ψ]

- சக்தி [E]

- டெல்டா [Δ or δ]

- ஃபோட்டான்[γ]  


அலை செயல்பாடு [Ψ] : குவாண்டம் இயற்பியலில் அலை செயல்பாடு முக்கியமாக பார்க்கப்படுகின்றது. குவாண்டம் இயக்கவியலில், அலைச் செயல்பாடு, அடிப்படைத் துகளின் இடஞ்சார்ந்த இடத்தில் உள்ள  துகள்களின் அமைப்பை விவரிக்கின்றது.


ஃபோட்டான்[γ] : ஒளி குவாண்டம் அல்லது ஒளி துகள்கள் என்றும் அழைக்கப்படும் ஃபோட்டான்கள்,  மின்காந்த கதிர்வீச்சை உருவாக்கும் ஆற்றல் தொகுப்புகள் ஆகும்.


ஒளியின் வேகத்தில் பயணிக்கின்ற இந்த ஃபோட்டான் துகள்கள் ஒவ்வொன்றும் ஆற்றல் கொண்டது மற்றும்  ஃபோட்டான்கள் அணு ஓட்டில் உருவாக்கப்படுகின்றன.


அவற்றின் ஆற்றலுக்கும் ஒளியின் அதிர்வெண்ணுக்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளது.  ஒளி, மின்னல், இடி, ஒலி, சத்தம், கதிர் வீச்சு, மின்காந்த அலை எதை எடுத்தாலும் அதற்குள்ளே துகள்கள்தான் ஓடித்திரிகின்றது. அதுவும் இறந்து போன ஒரு  பரப்பொருள் [மெட்டீரியல்]


ஹாமில்டன் ஆப்ரேட்டர் [இயக்கிகள்-H ^] :குவாண்டம் இயக்கவியலில், ஹாமில்டன் ஆபரேட்டர் என்பது ஆற்றல் மதிப்புகளை அளவிடும் ஆபரேட்டர் ஆகும். மற்றும் காலப்போக்கின் வளர்ச்சியைக் குறிக்கின்றது. எனவே இது ஆற்றல் ஆபரேட்டர் ஆகும். எடுத்துக்காட்டாக, இது ஹைட்ரஜன் அணுவில் உள்ள எலக்ட்ரானின் ஆற்றல் அளவை வழங்குகின்றது


மக்களின் நலனுக்காக புதுப்புது கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து தருகின்றார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.


ஒரு கண்டுபிடிப்புக்கு பின்னால் இன்னும் பல கண்டுபிடிப்புகள் ஒழிந்திருக்கும், பழைய கண்டுபிடிப்புகள் நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாமல் அவர்கள் ஏதாவது ஒன்றை கணிக்கமுடியாமல் மிச்சம் வைத்து கடந்து வந்திருப்பார்கள்.


இன்றைய புதிய தொழில்நுட்ப வசதிகள் அவர்கள் கடந்துவந்த இடங்களை திரும்ப ஆய்வுகளுக்கு உட்படுத்தும் போது புதிய கண்டுபிடிப்புகள் வெளிவருகின்றன. நன்றி.


குறைஞ்சது 70 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து படிக்கமுடியும். அவ்வளவு வசதிகளை கூகுள் உங்களுக்கு செய்துதந்திருக்கின்றது.


[எலக்ட்ரான் ஆற்றல், மின்சாரம், வேதியியல் பற்றி நிறைய எழுதியிருக்கின்றேன் தேடிப்படிக்கவும்] இதில் அழுத்தினால் மொழிபெயர்ப்புக்கு வசதியாக ஒவ்வொரு கட்டுரைகளும் புத்தக வடிவில், தனித்தனி பக்கமாக கிடைக்கும். https://mahesva.blogspot.com/?view=magazine








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக