வெள்ளி, 28 அக்டோபர், 2022

Hyperkalemia [high level of potassium in the blood] :

ஹைபர்கேமியா [இரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம்] :பொட்டாசியம் உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளில் ஒன்றாகும். இவை இரத்தம் போன்ற உடல் திரவங்களில் கரைக்கப்படும் போது மின் ஏற்றத்தை சுமந்து செல்லும் தாதுக்கள். [சார்ஜ் செய்யப்பட்ட அணுக்கள்]

பொட்டாசியத்திற்கான வேதியியல் குறியீடு [K+] அணு எண்-19 [2,8,8,1] கால அட்டவணையில் இது முதல் முக்கிய குழுவில் உள்ளது பொட்டாசியம் ஒரு வேதியியல் தனிமம் மற்றும் கார உலோகங்களில் ஒன்றாகும். பொட்டாசியம் பூமியின் மேலோட்டத்தில் உள்ள பல தாதுக்களில் காணப்படும் பத்து பொதுவான கூறுகளில் இதுவும் ஒன்றாகும்.

பொட்டாசியம் தன்னிடமுள்ள ஒரு எலக்ட்ரானை இழந்து, உன்னதம் அடைய விரும்புவதினால், அது உடனடியாகவே தனக்கென ஒரு ஜோடியை தேடி, உடலில் எதிர்வினையாற்றக் கூடியது.

அயனி/எலக்ட்ரோவலன்ட் பிணைப்பு, நேர்மறை மற்றும் எதிர்மறையாக சார்ஜ் செய்யப்பட்ட அயனிகள் ஒன்றையொன்று மின்னியல் ரீதியாக ஈர்க்கும் [K+ Cl- - K1 Cl1.  —>  KCl [பொட்டாசியம் குளோரைடு]

பொட்டாசியம் தண்ணீருடனான எதிர்வினை [2 KO2 + 2 H2O 2 KOH + O2 + H2O2] மேலும் பொட்டாசியம் ஹலோஜன்களுடன் எதிர்வினைபுரியக்கூடியது. மேற்கோளாக: பொட்டாசியம் குளோரினுடன் வினைபுரிந்து உப்பை உருவாக்குகின்றது.

ஹைட்ரோகுளோரிக் அமிலம் HCl என்பது [இரைப்பை அமிலம் அல்லது உப்பு அமிலம்] ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் ஹைட்ராக்சைட்டின் எதிர்வினையால் பொட்டாசியம் குளோரைடு உருவாகின்றது: [HCl+KOHH2O+KCl] ஹைட்ரோகுளோரிக் அமிலம் + பொட்டாசியம் ஹைட்ராக்சைடு வினைபுரிந்து தண்ணீரை உருவாக்குகின்றது.

ஒரு அழகிற்கு சொன்னால் மனித உடலும் அணு மின்னியலில் இயங்கும் ஒரு மின்சார பொம்மை தான். பொட்டாசியம் வெளியிலே எப்படி எதிர்வினையாற்றுகின்றதோ அதேபோலத்தான் உடலிலும் செயல்படுகின்றது. இதன் நிமித்தம் உடல் திசுக்களில், நுரையீரல், இதயம் தசைகளில் திரவங்களின் தேக்கம் அதிகரிக்கின்றது.

உடலில் உள்ள பொட்டாசியத்தின் பெரும்பகுதி செல்களுக்குள் காணப்படுகின்றது. செல்கள், நரம்புகள் மற்றும் தசைகளின் இயல்பான செயல்பாட்டிற்கு பொட்டாசியம் மிகவும் முக்கியமானது.

உடல் இரத்த பொட்டாசியம் அளவை இறுக்கமான வரம்புகளுக்குள் பராமரிக்க வேண்டும். இரத்தத்தில் அதிக அளவு  பொட்டாசியம் [ஹைபர்கேமியா] அல்லது மிகக் குறைந்த [ஹைபோகாலேமியா] பொட்டாசியம் அளவுகள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும், எ|கா: இதய தசை இறப்பு [கார்டியாக் அரித்மியா] அல்லது இதய செயலிழப்பு [கார்டியாக் அரெஸ்ட்] கூட ஏற்படும்.

இரத்தத்தில் உள்ள பொட்டாசியத்தின் அளவை சீராக வைத்திருக்க, உயிரணுக்களில் சேமிக்கப்படும் பொட்டாசியம், பெரிய சேமிப்பு கிடங்கிலிருந்து உடல் பயன்படுத்துகின்றது.

ஒருவரின் இறப்புக்கு பிறகு, உயிரணுக்களில் சேமிக்கப்படும் பொட்டாசியம் இரத்த சீரம் பிளாஸ்மாவில் இறங்கியிருக்கும்.

பொட்டாசியம் சம்பந்தப்பட்ட பல நோய்களின் பெயர்களில்-Kal என்ற சுருக்கம் உள்ளது. மேற்கோளாக: [hyperkalemia] சரியான பொட்டாசியம் அளவை பராமரிக்க, உடல் உட்கொள்ளும் பொட்டாசியத்தின் அளவை வெளியேற்றும் அளவிற்கு சரிசெய்கின்றது.

பொட்டாசியம் எலெக்ட்ரோலைட்டுகள் [பொட்டாசியத்துடன்] உள்ள உணவு மற்றும் பானங்களில் இருந்து உறிஞ்சப்பட்டு முதன்மையாக சிறுநீரில் வெளியேற்றப்படுகின்றது. [பொதுவாக பழங்கள், குறிப்பாக வாழைப்பழம், மலை வாழைப்பழங்கள் [300-400 மி.கி] அதிகளவு பொட்டாசிய சத்தினை சேமித்து வைத்திருக்கின்றது.

ஒரு சர்க்கரை நோயாளி நாள் ஒன்றுக்கு மூன்று வாழைப்பழங்களை, தொடர்ச்சியாக மூன்று நாட்கள் சாப்பிட்டால் இரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் [ஹைபர்கேமியா] இதனை தொடர்ந்து காலப்போக்கில் இதயத்தசை இறப்பு மற்றும் இதய செயலிழப்புக்கு வழிவகை தேடித்தரும்.

ஒரு பகுதி பொட்டாசியம் செரிமான பாதை மற்றும் வியர்வை மூலம் இழக்கப்படுகின்றது. ஆரோக்கியமான சிறுநீரகங்கள் பொட்டாசியம் வெளியேற்றத்தை உணவுமுறை ஏற்ற இறக்கங்களுக்கு ஈடுசெய்யும்.

ஒரு சர்க்கரை நோயாளியின் இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு அதிகரித்தால் தசை நரம்புகள் புடைத்து, கால் பாதங்களில் அரிப்புகள் அதிகமாகும். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை மட்டுமின்றி, உப்பு, பொட்டாசியம் போன்ற உணவுகளிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.  

சர்க்கரை நோயாளிகளின்  இரத்தத்தில் பொட்டாசியம் உயர்ந்து காணப்படும், இதற்கான காரணம் இன்சுலின் குறைபாடு, உடலில் இன்சுலின் தேவையான அளவு இருந்தால்த்தான் பொட்டாசியம் உள்வாங்கப்படுகின்றது,

இரத்தத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதும் ஆபத்தானது. [சிறுநீரக, இதய செயலிழப்புக்கு காரணியானது] பொட்டாசியம் கனிமத்தை சமநிலையில் வைத்துக் கொள்ள இன்சுலின்/சர்கரையின் [குளுக்கோசு] பங்களிப்பு மிகவும் அவசியமானது. சர்க்கரை உயர்வைகாட்டிலும் இன்சுலின் துஷ்பிரயோகம், அதிகளவில் எடுக்கப்படும் இன்சுலின் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும்.  

இரத்தத்தில் அதிகரிக்கும் நீர் மற்றும் உப்பை (சோடியம்) வெளியேற்ற, ஹார்மோன் (ADH) சுரப்பு உயர்தப்படுகின்றது, இதனுடைய விளைவு உப்பு இரத்தத்தில் குறைக்கப்படுகின்றது ஆனால் பொட்டாசியம்  இரத்தத்தில் உயர்கின்றது,

பொட்டாசியம் திசுக்களுக்கு பரிமாற்றமடைய உப்பு [சோடியம்]மிகவும் முக்கியமானது, இதற்காக தமனிகள் சுருக்கமடைந்து உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது, இதுவும் ஆபத்தானது. ]சிறுநீரக, இதய செயலிழப்புக்கு காரணியானது]

அதிகமாக தண்ணீர் குடிப்பதும்  பொட்டாசியம் குறைவுக்கு காரணமாகின்றது. அளவுக்கு அதிகமான உப்பு மற்றும் உப்பு உணவுகளின் நுகர்வு. தேவையில்லாமல் அதிகளவு தண்ணீர் குடிப்பது. [அதிகளவு தண்ணீர் மூளை மற்றும் இதயத்திற்கு விஷம்]

அளவுக்கு அதிகமான  உப்பு மற்றும் நீரை  மூளையிலுள்ள பிட்யூட்டரி சுரப்பி - ஆன்டிடிரேரேடிக் ஹார்மோன்கள் (ADH) மூலம் கட்டுப்படு்த்துகின்றது [சிறுநீர், வியர்வை மூலம் உப்புகளை வெளியேற்றி சமநிலையில் வைத்திருக்க உதவுகின்றது.] அதிகளவு உப்பின் நுகர்வு, தண்ணீர் தாகத்தை அதிகரிக்க செய்கின்றது, அளவுக்கு அதிகமான தண்ணீர் குடித்தால் என்ன நடக்கின்றது

உடலில், இரத்தம் திரவ நிலைக்கு மாற்றப்பட்டு உப்பின் செறிவு குறைகின்றது, அதிகமான தண்ணீரும் உப்பும் சிறுநீராக வெளியேறுகின்றது இதன் நிமித்தம் அதிகமாக நீர் வெளியேறாமல் சமநிலையில் வைத்திருப்பதற்காக, ஹார்மோன் (ADH) சுரப்பு குறைக்கப்படுகின்றது, இதனுடைய விளைவு பொட்டாசியம்  இரத்தத்தில் உயர்கின்றது/குறைவுபடுகின்றது..

குறைந்த இரத்த அழுத்தம்  உள்ளவர்கள், இதய நோயாளிகள்  அதிகமாக தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது சாலச்சிறந்தது, , மேலும் பிட்யூட்டரி சுரப்பியின் குறைபாடு இரத்த அழுத்த நோய் மற்றும் சிறுநீரக இதய நோய்களுக்கு வழிவகை தேடித்தரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மரணப்படுக்கையில் இருப்பவங்களுக்கு நீராகாரம், பால் கொடுத்தால் நிரந்தரமாக தூங்கிடுவாங்க அதற்கு காரணமும் பொட்டாசியத்தின் செறிவு இரத்தத்தில் அதிகரித்துக் கொண்டிருப்பதுதான்.

சில மருந்துகள் மற்றும் சில நோய்கள் செல்கள் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழலுக்கு இடையில் பொட்டாசியம் பரிமாற்றத்தை பாதிக்கின்றன, இது இரத்த பொட்டாசியம் அளவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

அதிக பொட்டாசியம் அளவுகள் சிறுநீரக நோய், சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும் மருந்துகள் மற்றும் அதிகப்படியான பொட்டாசியம் சப்ளிமெண்ட்ஸ் போன்ற பல காரணங்களைக் கொண்டுள்ளன.

வழக்கமாக, அதிகப்படியான பொட்டாசியம் அறிகுறிகளை ஏற்படுத்தும் முன் கடுமையானதாக இருக்க வேண்டும், முதன்மையாக இதய தசை இறப்பு [கார்டியாக் அரித்மியாஸ்]

எலக்ட்ரோலைட்டுகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்: மற்றும் உடலில் பொட்டாசியம் எவ்வாறு செயல்படுகின்றது என்பதைப் பற்றிய கண்ணோட்டத்தையும் படத்தில் பார்க்கவும்.

மருத்துவர்கள் பொதுவாக இரத்த பரிசோதனையின் போது அதிகப்படியான பொட்டாசியம் அல்லது பிற காரணங்களுக்காக எலக்ட்ரோ கார்டியோகிராம்களைக் கண்டுபிடிப்பார்கள்.

சிகிச்சையில் பொட்டாசியம் உட்கொள்வதைக் குறைத்தல், அதிகப்படியான பொட்டாசியத்தை ஏற்படுத்தும் மருந்துகளை நிறுத்துதல் மற்றும் பொட்டாசியம் வெளியேற்றத்தை அதிகரிக்க மருந்துகளைப் பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். தேவைப்பட்டால் இரத்தம் கழுவுதல் சிகிச்சையை கூட பயன்படுத்தலாம்.

ஹைபர்கேமியா [இரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம்] நோய்க்குறிகள்; தசை இழுப்பு, தசை பலவீனம், இரைப்பை குடல் வலி மற்றும் வந்து  போகும் வயிற்றுப்போக்கு/மலச்சிக்கல்,

இரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம்பல காரணங்கள் உள்ளன, அவற்றுள் மிகமுக்கியமானது: சிறுநீரக நோய், சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும் மருந்துகள், மற்றும் அதிகளவு  பொட்டாசியம் நிறைந்த உணவுகள், இதய நோய், சர்க்கரை நோய்.

செல்லில் இருந்து பொட்டாசியம் வெளியேறுவதை அதிகரிக்க செய்யும் மருந்துகள்: பீட்டா பிளாக்கர்கள்

பொட்டாசியம் நிறைந்த உணவுகள்: பொட்டாசியம் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து என்பதால், இது அத்துனை பதப்படுத்தப்படாத உணவுகளிலும் காணப்படுகின்றது. பருப்பு விதை,,கொட்டைகள், காய்கறிகள், உருளைக்கிழங்கு, வாழைப்பழங்கள் மற்றும் முழு தானிய பொருட்கள் மற்றும் தயாரித்த உணவுகளிலும் அதிகளவில் காணப்படுகின்றது. குறிப்பாக உலர்ந்த கொத்திறைச்சி தயாரிப்புக்களில் அதிகளவில் உள்ளது.

பொட்டாசியம் மிகவும் பொதுவான உள்செல்லுலார் நேர்மறையாக சார்ஜ் செய்யப்பட்ட அயனி ஆகும். சுமார் 98% பொட்டாசியம் செல்களுக்குள் உள்ளது. பிளாஸ்மா அளவுகள் பொட்டாசியத்தில் 2% மட்டுமே பிரதிபலிக்கின்றன.

உறிஞ்சுதல் விகிதம் சுமார் 70 மிமீல்/24 மணிநேரத்திற்கு ஒத்துள்ளது; இதில் 95% சிறுநீரகங்கள் மற்றும் 5% குடல்கள் மூலம் வெளியேற்றப்படுகின்றது. பொட்டாசியத்தில் 1% இன்ட்ராசெல்லுலருக்கு மாறினால் பிளாஸ்மா அளவுகளில் 100% மாற்றம் ஏற்படும் .

பொட்டாசியத்தின் விரைவான நுகர்வு ஒருவரின் மரணமாக கூட முடியும். செல் சவ்வுகள் முழுவதும் பொட்டாசியம் விநியோகத்தை நன்றாக ஒழுங்குபடுத்துவதன் மூலம் உடல் இதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றது.

ஒருவரின் உடலில், பொட்டாசிய பிளாஸ்மா அளவுகளை வைத்து எப்ப, எத்தனை மணிக்கு இறந்திருப்பார் என்று துல்லியமாக சொல்லிவிடமுடியும். 

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட், தடயவியல் நிபுணர்களின் ஆய்வு அறிக்கைகள் மூலம் இறந்து போன ஒரு சடலத்தை திரும்பவும் பேச வைக்கமுடியும்.  

ஒரு சடலம் விமானத்திலிருக்கும் கறுப்பு பெட்டி மாதிரி, இறுதி நேரத்தில் நடந்த நிகழ்வுகள் அத்துனையும் அதில் பதிவாகியிருக்கும். தனக்கு இறுதி காலத்தில் என்ன  நடந்தது என்பதை  ஆய்வுகள் மூலம்  துல்லியமாக வெளிக்கொண்டுவரமுடியும்.  

தான் இறுதி நேரத்தில் அடித்து துன்புறுத்தப்பட்டேனா,  என்ன உணவு, என்ன மருந்துகள் கடைசியாக சாப்பிட்டேன் என்ற விபரம் முதல் கொண்டு, சகலத்தையும் அது பதிவு செய்து வைத்திருக்கும்.

மேற்கோளாக: பல மில்லியன் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த டைனோசர்கள் ஆறுமாத காலங்கள் சூரிய ஒளி, உணவு  கிடைக்காமல் இறந்து போனதை எலும்புகளில் பதிவு செய்து வைத்திருக்கின்றது. நேற்று சாப்பிட்ட உணவு இட்லியா மோர் குழம்பா என்று கண்டுபிடிப்பதா கடினம்.

நீண்ட காலத்திற்கு முன்னால் இறந்த எலும்புக் கூட்டின் இடுப்பு எலும்பு நிலையை வைத்தே, இவர் ஆணா பெண்ணா, குழந்தை பெற்றவரா  மாமிசம் சாப்பிடுபவரா [பன்றியா/மாடா]  எந்த நாட்டை எந்த இனத்தை சேர்ந்தவர் என்ற விபரம் முதற்கொண்டு சகல பயோடேட்டா  தகவல்களையும் சொல்லிவிடமுடியும்.

இறந்த பிறகு ஒருவரின் எலும்புகள் உடைக்கப்பட்டிருந்தால். இரத்தம் சீறிப்பாய்ந்திருக்காது மற்றும் வலியையும் வெளிப்படுத்தியிருக்காது

அதற்கான ஆதாரங்களை உடல் பதிவு செய்து வைத்திருக்கும் ஒருவர் பயம் பதட்டத்தில் இருந்தால் அவரின் கருவிழிகள் பெரியதாக விரிந்திருக்கும் மற்றும் அவர் இறுதியாக அணிந்திருந்த ஆடையில் பதட்டத்திற்கான மன அழுத்தம் ஹார்மோன்கள் வேர்வைத்துளிகளில் பதிவாயிருக்கும், 

ஒரு சடலம் உண்மையில் கிடந்த இடத்தில்தான் இறந்ததா அல்லது வேறு எங்கேயாவது இறந்தபிறகு இங்கு கொண்டுவந்து போடப்பட்டதா என்ற முழு விபரங்களை உடல் கிடக்கும் நிலையை வைத்தே சொல்லிவிட முடியும். நீண்ட நேரமாக உடல் ஒரே நிலையில் ஏதாவது ஒரு பக்கம் படுத்திருந்தால், 

அந்த பக்கமாக உடல் திரவங்கள் புவியீர்ப்பு விசையை நோக்கி கீழே குவிந்து போயிருக்கும், பொட்டாசியத்தின் செறிவு அந்த இடங்களில் அதிகரிக்கும் மற்றும் சடலத்தின் வெப்பநிலை ஒரு மணித்தியாலங்களுக்கு ஒவ்வொரு பாகையாக இறங்கும், இதை வைத்தே ஒருவரின் இறந்த இடம் மற்றும் நேரத்தையும் துல்லியமாக சொல்லிவிட முடியும். 

மேலும் இறந்த பிறகு எலும்புகள் அடித்து உடைக்கப்பட்டதா, அல்லது அவர் இறப்புக்கு முன்னால் உடைக்கப்பட்டதா என்ற விபரங்களை பிரேத புலனாய்வு ரிப்போர்ட் துல்லியமாக சொல்லிவிடும். 

இறந்த பிறகு ஒருவரின் எலும்புகள் உடைக்கப்பட்டிருந்தால். இரத்தம் சீறிப்பாய்ந்திருக்காது மற்றும் வலியை வெளிப்படுத்தும்

வலி மிக முக்கியமான எச்சரிக்கை செயல்பாட்டை கொண்டுள்ளது மற்றும் தீங்கு விளைவிக்கும் ஆபத்தான தாக்கங்களிலிருந்து உடலை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது. வலி ஏற்படும் போது முக அம்சங்கள் சிதைந்துவிடும் நெற்றி தசைகள் இறுக்கமாக சுருங்கியிருக்கும்.

வலியை பாரசிட்டமோல் போன்ற வலி நிவாரணி மாத்திரைகள் தடுத்துவிடும், வலி நிவாரணி மாத்திரைகளை கொடுத்து ஒருவரின் எலும்பை உடைத்தால்  அவருக்கு வலி தெரியாது அவரின் கை விரலை நெருப்பில் சுட்டால் கூட ஆ! என்று கூட கத்த மாட்டாங்கள்.

புரோஸ்ட்டக்ளாண்டின்கள்  என்பது வலியை உணர்த்தும் என்சைம்.  ஆ .. ஊ  ஊஊ... ஐய்யோ .. வலிக்குதே  தாங்க முடியல்லையே என கத்த வைப்பது, மூளையில் எண்டோர்பின் வெளியீடு, எண்டோர்பின்  என்பது வலியை தடுக்கும் ஒரு இயக்குநீர் மூளை முழுவதும் எண்டோர்பின் வெளியீடு அதிகரித்திருக்கும்.

ஒருவரின் மரணத்திற்காக அறிக்கை மற்ற எல்லாத்தையும் விட எவ்வளவு முக்கியமானது. அதில் எல்லா விபரங்களும் அடங்கியிருக்கும் ஒரு சடலத்திலிருந்து உள்ளுறுப்புகள் திருடப்பட்டதா அல்லது உடலின் ஏதாவது பாகங்களை காணவில்லையா என்ற தடயங்களை கண்டு பதிவு செய்து வைத்திருக்கும். 

தடயவியல் கல்வி சுவாரசியமானது ஒருவரின் சின்ன வயது வாழ்க்கையை கூட துல்லியமாக சொல்லிவிடக்கூடியது.

இடைக்காலத்தில் நடந்த ஒரு சம்பவம், ஒரு இளம் பெண்ணின் புகாரிது. தனக்கு ஒரு குழந்தை பிறந்ததாகவும் அது இறந்துதான் பிறந்தது என்று அருகிலுள்ள மருத்துவமனையில் அதை ஒப்படைக்கின்றது. அவர்கள் அந்த இறந்த சிசுவை தடயவியல் ஆய்வுக்கு அனுப்புகிறார்கள்.  

நிபுணர்களின் ஆய்வு அறிக்கையில் அந்த குழந்தை இறந்து பிறக்கவில்லை அதை பிறந்தவுடன் யாரோ கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், அந்த பெண்ணுக்கு திருமணம் நடப்பதற்கு முன்னால் தகாத உறவின் காரணமாக கருவுற்று பிறந்தது என்று தெரியவந்தது.

தடயவியல் நிபுணர்கள் எப்படி கொலை என்று கண்டுபிடித்தார்கள் தெரியுமா? ஒரு குழந்தை தனது தாயின் வயிற்றில் வளரும்போது, ​​அது தொப்புள் கொடி நரம்பு வழியாக ஊட்டச்சத்துக்கள் முதற்கொண்டு ஒட்சிசன்[O2] வரைக்கும் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்கின்றது.

அம்னோடிக் திரவத்தால் மூடப்பட்டிருப்பதினால் குழந்தைகள் கருவறையில் சுவாசிக்க மாட்டார்கள். கருவறையில் மடிந்திருந்த சுவாசப்பை வெளியில் விரிவடைந்து, முதல் சுவாசத்திற்கு தன்னை தயார்படுத்துகின்றது. குழந்தைகள் முழுமையாக உருவாகும்போது  மட்டுமே, முதல் சுவாசத்தை பிறப்புக்கு பிறகு உருவாக்குகிறார்கள்,

அந்த மழலை வெளிக்காற்றை உள்வாங்கியிருந்தது ஆய்வில் தெரியவந்தது, அதாவது உயிருடன் பிறந்து நீண்ட நேரமாக வெளிக்காற்றினை சுவாசித்திருக்கின்றது. காற்றிலுள்ள மாசுகள், சமையல் வாசனை உட்பட நுரையீரல் குமிழிகளில் பதிவாயிருந்தது தெரியவந்தது.

பிறந்தும் பிறவாத அந்த மழலை நான் இறந்து பிறக்கவில்லை என்னை யாரோ கொலை செய்திருக்கின்றார்கள் என்று பதிவு செய்துவிட்டு போயிருக்கின்றது.  

ஒரு சர்க்கரை நோயாளி நாலு வாழைப்பழம் சாப்பிட்டாலே போதும் பொட்டாசியம் அதிகரித்து இறந்திடுவான் இது கொலையா தற்கொலையா என்று தெரியாதவாறு அவ்வளவு இறுக்கமாக இருக்கும். இன்று கொலைகள் கூட நவீன மயமாக்கப்பட்டிருக்கின்றது. சமீபத்தில் ஐரோப்பாவில் நடந்த  கொலைகள் பொலோனியம்-210 கதிரியக்க தனிமங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

நோய்களினால் இறந்தவர்களை காட்டிலும் மருத்துவமனை தவறுகள் தாமதிக்கப்பட்ட  மற்றும் தவறான சிகிச்சை மருந்து மாத்திரைகள்,  சுகாதாரமின்மையினால் ஏற்படும் தொற்றுக்கள், எதிர்ப்புக் கிருமிகளின் பரவல்களினாலும்  இறந்தவர்கள் தான் அதிகம். 

மருத்துவக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள்,  உங்கள் கண்முன்னே நடந்த ஒரு இழப்பை  வழக்காக பார்க்காமல் ஒரு மருத்துவத்திற்கான படிப்பாக பார்க்கவேண்டும். இதன் மூலம் கல்வி பயிலும் அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு ஒரு செய்தியை உங்களினால் பதிவு செய்து வைக்கமுடியும். 


ஆர்டெரியோஸ்கிளிரோசிஸ் விஷயத்தில், தமனி இரத்த நாளங்களின் சுவர்களில் வைப்புக்கள், பிளேக்குகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை கொழுப்புகள் [லிப்பிடுகள்], சுண்ணாம்பு மற்றும் பிற கூறுகளைக் கொண்டிருக்கின்றன.

பெரும்பாலான நோயாளிகள்  இரத்த தமனி சுவர்களில் படிவுகளை கொலஸ்ட்ரால் என்று நினைத்து மருத்துவம் பார்கின்றார்கள், இ்ந்த வைப்புக்கள் [பிளேக்கு] 60 விழுக்காடுகளுக்கு மேல் சுண்ணாம்பு மற்றும் பிற கூறுகளைக் கொண்டிருக்கின்றன  [ பாக்டீரியாக்கள், உள்ளார்ந்த ஆன்டிபாடிகள், மாசுபட்ட சுற்றுச்சூழல் மாசுக்கள் மைக்ரோ பிளாஸ்டிக் போன்றவைகள்] இவை  இயல்பான இரத்த ஓட்டத்தைத் தடுக்கின்றன.

கொலஸ்ட்ரால் /கொழுப்புகள் [லிப்பிடுகள்எளிதில் கரைந்து போகக்கூடியவை. சுண்ணாம்பு படிவுகளை  அவ்வளவு எளிதில் கரைய வைக்க முடியாது  இதனுடைய நீண்டகால படிவுகள் இரத்த நாளங்கள் சுருங்கி விரியும் தன்மையை இழந்து மரத்துப்போக வைக்கின்றது

குவாண்டம் இயக்கவியலில்: [Q-பிட்(0+1)] சூப்பர் நிலையில் சிக்கியுள்ள துகள்கள்[குவாண்டம் என்டாங்கிள்மென்ட் துகள்கள்] இதில் ஒன்றை யாழ்ப்பாணத்திலும் மற்றொன்றை ஜெர்மனி, அமெரிக்காவில் வைத்தாலும் அவைகளுக்குள்ளே ஒரு அலை செயல்பாடு, ஒரு தொடர்பினை வைத்துக் கொள்கின்றன.

மேற்கோளாக: நீங்களும் உங்கள் அயல்நாட்டு நண்பர்களும் குவாண்டம் துகள் என்று வைத்துக்கொண்டால், யாழ்ப்பாணத்தில் நீங்கள் ஒரு பகடை காயை உருட்டுகின்றீர்கள் அது உங்களுக்கு ஒன்று என்று காட்டுகின்றது. அதே நேரத்தில் ஜெர்மனி, அமெரிக்காவில் வசிக்கும் உங்கள் நன்பர்களும் பகடையை உருட்டுகின்றார்கள் அவர்களுக்கும் ஒன்று என்று காட்டுகின்றது.

இன்னும் சுருக்கமாக விளக்கம் சொன்னால் பிள்ளை பசித்து அழுதால்   தாயின் மடிகளில் பால்சுரக்கும் தாய் எவ்வளவு தூரத்திலிருந்தாலும்  உள்ளார்ந்த உணர்வு, ஒரு தொடர்பு. இதைத்தான் குவாண்டம் என்டாங்கிள்மென்ட் என்கின்றது இயற்பியல்.

குவாண்டம் இயக்கவியல் இயல்பாகவே எங்களுடைய அன்றாட வாழ்க்கையில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதை நாங்கள் சரியாக கவனிப்பதில்லை.

சூப்பர் நிலை பூனை கதை போல், குவாண்டம் இயக்கவியலுக்கு நாங்களும் ஒரு கதை சொல்வோம். உங்களுக்கு தெரிந்த கதைதான் “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?” முனிவர்-> கொக்கு -> அம்மையார் இடையில் நடந்தது ψ குவாண்டம் அலை செயல்பாடு.

சூப்பர் நிலையில் சிக்கியுள்ள துகள்கள்[குவாண்டம் என்டாங்கிள்மென்ட் துகள்கள்] ஒன்றுடன் ஒன்று தொடர்பினை வைத்துக்கொள்ளுகின்றது.

ஏதோ ஒரு இடத்தில் நடந்த நிகழ்ச்சி, இந்த அம்மையாருக்கு திரும்பவும் வீடியோ படமாக தெரிந்திருக்கின்றது.

குவாண்டம் என்பது ஒரு லத்தீன் வார்த்தை, குவாண்டா “எவ்வளவு” [சிறிதா/பெரிதா] இயற்பியலாளர்கள் மிகச்சிறிய இயற்பியல் அலகுகளை கண்டுபிடிப்பதற்கு முன்பே அவைகளை குவாண்டா என்று அழைத்தார்கள்

அந்த சிறிய துகள்கள் இன்று ஃபோட்டான் துகள்கள், குவாண்டம் என்டாங்கிள்மென்ட் துகள்கள் என்று அழைக்கப்படுகின்றது.

குவாண்டம் இயற்பியலை பற்றி அதிகம் பயம் கொள்ளத்தேவையில்லை, அதை எளிதாக கற்றுக்கொள்ள முடியும், நீங்கள் அதை எளிதாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில். உங்களுக்கு புலப்படாத ஆற்றல்களின் செயல்பாடுகளைத்தான் குவாண்டம் என்கின்றது இயற்பியல்.

மேற்கோளாக: உங்கள் வலது கண்ணிமை துடித்தால் ஒரு நல்ல செய்தியும், இடது கண்ணிமை துடித்தால் ஒரு துயரம் வரப்போவதாக நீங்கள் உணர்தலும் ஒரு குவாண்டம் இயக்கவியல்தான்.

ஏதோ ஒரு இடத்திலிருந்து சூப்பர் நிலையில் சிக்கியுள்ள துகள்கள் [குவாண்டம் என்டாங்கிள்மென்ட் துகள்கள்] ψ குவாண்டம் அலை செயல்பாடு, இந்த செய்தியை உங்களுக்கு அனுப்பியிருக்கலாம்.

இது போன்ற ஐதீகங்கள், நம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கின்றது அதை நினைவு படுத்திக்கொள்ளுங்கள். சுலபமாக குவாண்டம் என்றால் என்னவென்று புரியும்.

பிறப்பு இறப்பு இடையில் ஏற்படும் வாழ்க்கை [கிளாசிக்கல்] நடைமுறை தோற்றங்கள். இதற்கு மேலேயுள்ள தோற்றங்களான ஆத்மா, பாவ புண்ணிய கணக்கு, சொர்க்கம் நரகம் மறுபிறப்பு கருட புராணம் பற்றி  சொல்லுவது குவாண்டம் கணக்கு..

சமையல் உப்பை எடுத்துக் கொண்டால் இதனுடைய கட்டமைப்பை பற்றி சொல்வது கிளாசிக்கல் இயற்பியல். உப்பிலுள்ள அணு மற்றும் அணுசார்ந்த உட்பொருட்களான குவார்க், நியூட்ரினோ, எலக்ட்ரான் மேல்/கீழ் சுழல் பற்றி பேசுவது குவாண்டம் இயற்பியல்.

எதிர்கால மருத்துவம் குவாண்டம் இயக்கவியல் அடிப்படையை கொண்டுதான் செயல்படப் போகின்றது. அதற்கு முன்னோட்டமாக நிறைய பாட புத்தகங்கள் தனியார்த்துறை பள்ளிகள், முளைக்க தொடங்கிவிட்டது.

இதற்கான கருவிகள், ஸ்மார்டபோன் ஆப் செயலிகள் கூட எதிர்காலத்தில் உருவாக்கப்படலாம். [போகர் சித்தர் கூட எங்களுக்காக ஒரு குவாண்டம் ஹீலிங் கருவியை/சிலையை உருவாக்கி தந்துவிட்டுப்போயிருக்கின்றார். அதை நாங்கள் பக்தியாக பார்த்ததினால் அதனுடைய அருமை தெரியாமல் போயிடிச்சு]

குவாண்டம் ஹீலிங்  [மேட்ரிக்ஸ் எனர்ஜிடிக்]: இதற்கான பயிற்சி வகுப்புகள், குவாண்டம் ஹீலிங் அகாடமிகள் கூட ஐரோப்பாவில் இயங்குகின்றது. குவாண்டம் ஹீலிங் மூலம், சந்தேகங்கள், கவலைகள் அல்லது தோல்வி பயம் போன்ற எதிர்மறை உணர்வுகளை விட்டுவிட்டு நீங்கள் நினைக்கும் விதத்தில் உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க முடியும் என்கின்றது குவாண்டம் ஹீலிங் அகாடமிகள்.

இணையதளத்தில் இதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றது. இரண்டு மூன்று பயிற்சி வகுப்புகளில் முழுமையாக கற்றுக்கொள்ளமுடியும் என்கின்றன இந்த பயிற்சி முகாம்கள். அதற்காக 300-350€ பணம் அறவிடப்படுகின்றது. மேலதிக விபரங்களை கூகுள் இணையதளத்தில் “குவாண்டம் ஹீலிங்” எழுதி பெற்றுக்கொள்ளுங்கள்.

குவாண்டம் ஹீலிங் எவ்வாறு செயல்படுகின்றது : குவாண்டம் ஹீலிங் ஆன்மீகம் கொண்டது, இது நவீனமானது மற்றும் உடல் ரீதியாகவும் இயற்கை அறிவியல் அறிவாலும் ஆனது.

புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் அற்புதமாக இதுவும் பார்க்கப்படுகின்றது. குவாண்டம் ஹீலிங்கிற்கும் குவாண்டம் இயற்பியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இது குவாண்டம் குணப்படுத்துதலின் செயல் திறனை நிரூபிக்கும் ஒரு முயற்சியாகும்.

மேட்ரிக்ஸ் பயன்பாட்டில், பயிற்சிகளில் இரண்டு புள்ளி முறையைப் பயன்படுத்தி பிரபஞ்சத்தில் அதிக ஒளி நிரப்பப்பட்ட ஆற்றல்களுக்கு நேரடி இணைப்பு நிறுவப்படுகின்றது.

மனித உடல் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி மட்டுமல்ல, ஆன்மாவின் ஆற்றலையும் கொண்டுள்ளது. குவாண்டம் இயற்பியல் அனைத்தும், ஆற்றலினால் ஆனது. இது அடிப்படை ஆற்றல், முதன்மை ஆற்றல் அல்லது மேட்ரிக்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றது,

அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரமாக உள்ள குவாண்டம் இயற்பியலில், ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு பொருளும் ஒரு வகையான கட்டுமானத் திட்டத்தை,  தங்களுக்குள்ளே நகல் எடுத்து கொண்டிருக்கின்றன என்று கருதுகின்றது.

ஒளி குவாண்டா எனப்படும், பயோஃபோட்டான்களைப் பயன்படுத்தி நமது உடல் தொடர்ந்து தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றது. இவ்வாறு, குவாண்டா நமது உடலின் உடற்கூறியல் செல் கலவையை கட்டுப்படுத்துகின்றது.

ஆற்றல் வேலை மற்றும் குவாண்டம் இயற்பியல் ஆற்றல் மட்டத்தில், நாம் எல்லாவற்றுடனும், எல்லோருடனும் ஏதோ ஒரு வகையில் இணைக்கப்பட்டுள்ளோம். மேலும் குவாண்டா நமது தினசரி மாற்ற செயல்முறைகளையும் ஒழுங்குபடுத்துகின்றது.

பயோஃபோட்டான்களின் பரிமாற்றத்தின் மூலம் உடல் மற்றும் உணர்ச்சித் தொந்தரவுகள் நமது செல் அளவில் உள்ள தொடர்பை அழித்து, நோய்களையும், உளவியல் மற்றும் உடலில் தூன்மையான மாற்றங்களையும் கொண்டு வரலாம் என்கின்றது குவாண்டம் ஹீலிங் மருத்துவமுறை.

நீங்களாகவே உங்கள் நோய்களை அடையாளம் கண்டு குணப்படுத்துவதற்கான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றது. இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதை பயிற்சி வகுப்புக்கு சென்றுபார்த்தால்த்தான் தெரிந்து கொள்ளமுடியும்.

குவாண்டம் குணப்படுத்துதலின் அடிப்படை தத்துவமே அன்பு தான், உங்கள் மேல் அக்கறையும் அன்பும் உள்ள ஒருவரின் கையால் ஒரு சொம்பு தண்ணீர் வேண்டி குடித்தாலே போதும் உங்களை பீடித்த நோய் கள் எல்லாம் காணமல் போய்விடும்.

வேண்டாவெறுப்பாக சமையல் செய்து, அதை திட்டித்திட்டி பரிமாறும் கையால ஒரு பிடி சாதம் கூட வேண்டி சாப்பிடாதீங்க அவ்வளவும் விசம் உங்களை பீடித்தநோய்கள் கூடுமே தவிர குறையாது. ஔவைப் பாட்டி  கொடியது என்ற வெண்பாவில் சுருக்கமாக சொல்லியிருப்பாங்க. “கொடியது அன்பிலா பெண்டிர் அதனினும் கொடியது அவர்கையினால் இன்புற உண்பது தானே”

எதிர்காலத்தில் குவாண்டம் பற்றிய அறிவியல் இன்னும் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து நோபல் பரிசுகளை பெறும் என்பதை மட்டும் உறுதியாக என்னால் சொல்லமுடியும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக