திங்கள், 24 அக்டோபர், 2022

Another new type of blood group discovered:

இன்னுமொரு புதிய வகை இரத்த பிரிவு கண்டுபிடிப்பு: பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் அரிய புதிய வகை இரத்தக் குழு அமைப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அறியப்பட்ட ஆன்டிஜென்களின் மர்மத்தை அவர்கள் தீர்த்துள்ளனர்.

எளிய இரத்த சிவப்பணுக்கள் இன்னும் நம்மை ஆச்சரியப்படுத்தக்கூடும் என்று பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆய்வின் இணை ஆசிரியரும் உயிரியலாளருமான ஆஷ் டோய் ஒரு அறிக்கையில் கூறுகிறார்.

பிரிஸ்டல் - இரத்தம் என்பது இரத்தம் மட்டுமல்ல. பெரும்பாலான மக்கள் A, B, AB மற்றும் O ஆகிய நான்கு மிக முக்கியமான இரத்தக் குழுக்களை அறிந்திருக்கிறார்கள். கூடுதலாக, இரத்தக் குழுக்களின் ரீசஸ் அமைப்பு. "ரீசஸ் காரணி நேர்மறை" அல்லது "ரீசஸ் காரணி எதிர்மறை" அவசரநிலை, [Rh+/Rh-]

இரத்தமாற்றம் அல்லது கர்ப்ப காலத்தில் இது முக்கியமான ஒரு தகவல். ஏனென்றால் எல்லா இரத்தக் குழுக்களும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போவதில்லை. பொருத்தமில்லாத இரத்த வகையை ஒரு மனிதரிடமிருந்து இன்னொருவருக்கு மாற்ற முடியாது.

ஆய்வின்படி, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த Er ஆன்டிஜென்கள் இரண்டு கர்ப்பிணிப் பெண்களிடம் கண்டறியப்பட்டது. இன்றுள்ள எந்த இரத்த வகையுடனும் இந்த Er3 ஆன்டிஜென்கள் பொருந்தாது என்றும்  பல தசாப்பங்களாக இந்த இரத்த அணு ஆன்டிஜென்கள் நம்மிடையே இருப்பதாகவும் அறியப்பட்டது.

Er ஆன்டிஜென்கள் இருப்பதாக மேலும் சந்தேகிக்கப்படும் 13 நோயாளிகளின் இரத்தத்தை ஆய்வுக் குழு ஆய்வு செய்தது. Er ஆன்டிஜென்களின் ஐந்து மாறுபாடுகளை அவர்கள் கண்டறிந்தனர்.

Era, Erb, Er3 மற்றும் இரண்டு புதிய Er4 மற்றும் Er5. நோயாளியின் டிஎன்ஏவின் மரபணு பகுப்பாய்வுக்கு பின்னர் அறியப்பட்டது, இருப்பினும் அவற்றின் மருத்துவ விளைவுகள் பற்றிய தகவல்கள் குறைவாகவே அவர்களினால் தெரிந்து கொள்ளமுடிந்தது.

[ஆன்டிஜென்கள் என்பது இரத்த சிவப்பணுக்களை [எரித்ரோசைட்டுகள்] சுற்றியிருக்கும் ஒரு புரத உறை கட்டமைப்பாகும், இது நோயெதிர்ப்பு மண்டலத்தால் அந்நியர் என அங்கீகரிக்கப்பட்ட பின்னர், எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கப்பட்டது]

மற்றும் இரண்டு கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகளின் சோகமான இழப்புடன் இந்த புதிய கண்டுபிடிப்பு இணைக்கப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில், பிறக்காத குழந்தைக்கும் தாய்க்கும் இடையில் இரத்த வகை பொருந்தாதது இது கருவில் இருக்கும் பிள்ளைக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

ரீசஸ்-Rh காரணி-D சிக்கல்கள் கர்ப்பம் ஏற்பட்டால் ஆட்டோஆன்டிபாடிகள் →ஆட்டோ இம்யூன் நோய் இரத்தம் மற்றும் அமுதசுரம்[நஞ்சுக்கொடி] வழியாக கருவில் கொண்டு செல்லப்படுகின்றது கருவில் உள்ள இரத்தம் மற்றும் நஞ்சுக்கொடி மீது IgG - ஆன்டிபாடி-இம்யூனோகுளோபூலின் தொற்றுக்கு எதிரான முதல் பாதுகாப்பை வழங்குகின்றது.

தாயின் நோயெதிர்ப்பு அமைப்பு அந்நிய ஆன்டிஜென்களுக்கு உணர்திறன் இருந்தால், ஆன்டிபாடிகள் நஞ்சுக்கொடியைக் கடந்து, பிறக்காத குழந்தைக்கு ஹீமோலிடிக் நோய்க்கு வழிவகுக்கும். அதாவது புதிதாகப் பிறந்த குழந்தையின் இரத்த சிவப்பணுக்கள் தாயின் ஆன்டிபாடிகளால் உடைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.

[ரீசஸ்-Rh காரணி, முதன் முதலில் ரீசஸ் என்ற குரங்கில் கண்டறியப்பட்டதினால் அதன் பெயரை முதன்மைப்படுத்தி வருகின்றது]

இதைத் தடுக்க தற்போது பல்வேறு சிகிச்சைகள் உள்ளன. ஆய்வில் விவரிக்கப்பட்ட நிகழ்வுகளில், இரண்டு குழந்தைகளும் இரத்தமாற்றம் செய்யப்பட்ட போதிலும் சிசேரியன் பிரிவுக்குப் பிறகு இறந்தன.

இரண்டு நிகழ்வுகளிலும், குழந்தை மற்றும் தாயின் இரத்தக் குழு பொருந்தாத தன்மையின் சாத்தியமான ஆபத்தை டாக்டர்கள் முன்னர் அடையாளம் காணவில்லை. இது மிகவும் அரிதான நிகழ்வு என்று சொல்லப்படுகின்றது. அதற்கு காரணம் இந்த புதிய வகை இரத்தம் இதற்கு முன்னால் அறியப்படாமல் இருந்ததுதான்.

AB0 இரத்தக் குழு அமைப்பு: அத்துனை இரத்த சிவப்பணுக்களும் (எரித்ரோசைட்டுகள்) ஒரு உறையால் சூழப்பட்டுள்ளன. இரத்த சிவப்பணுக்களின் அமைப்பு (ஆன்டிஜென்கள்) இரத்தக் குழுவை தீர்மானிக்கின்றது. AB0 இரத்தக் குழு அமைப்பில், சிவப்பு இரத்த அணுக்களின் உறையில் உள்ள ஆன்டிஜென்கள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன: A, B, AB மற்றும் 0 ஆகியவை நான்கு இரத்தக் குழுக்களைக் குறிக்கின்றன.

ஹீமோலிடிக் நோய் [HDN] புதிதாகப் பிறந்தவரின் ஹீமோலிடிக் நோய் [HDN]-எரித்ரோபிளாஸ்டோசிஸ் ஃபெட்டாலிஸ் என்றும் அழைக்கப்படுகின்றது. இது ஒரு தாய் மற்றும் குழந்தையின் இரத்த வகைகள் பொருந்தாதபோது ஏற்படும் இரத்தக் கோளாறு ஆகும். ஒப்பீட்டளவில் இது அசாதாரணமானது ஆரம்பகால கண்டறிதல் இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கமுடியும்.

[O- O+ A-A+ B-B+ AB-AB+] இது உங்கள் வகை கீழே உள்ள இரத்தக் குழுக்கள் உங்களுடன் ஒன்றிணைகின்றன.

நன்கொடை அளிக்கலாம்:

0-0+ B-B+ A- A+ AB- AB+ <- [O-]

0+ A+ B+ AB+ <- [0+]

A- A+ AB- AB+ <- [A-]

A+ AB+ <- [A+]

B- B+ AB- AB+ <- [B-]

B+ AB+ <- [B+]

AB- AB+ <- [AB-]

AB+ < [AB+]

இதிலிருந்து நீங்கள் பெறலாம்:

O- à [O-]

0+ 0- à [O+]

A-0- à [A-]

A+ A- 0+ 0- à[A+]

B-0- à[B-]

B+ B- 0+ 0- à [B+]

AB-A-B-0- à [AB-]

0-0+ B-B+ A- A+ AB- AB+ à [AB+]


AB+ நீங்கள் நன்கொடை அளிப்பவராக இருந்தால் AB+ à [AB+] உங்கள் வகை இரத்தப் பிரிவுள்ளவர்களுக்கு மட்டும் தான் கொடுக்கமுடியும்.


AB+ நீங்கள் பெறுபவராக இருந்தால் AB+ <- [0-0+ B-B+ A- A+ AB- AB+] எல்லா வகை இரத்தப் பிரிவும் உங்களுக்கு பொருந்தும்.


A இரத்த பிரிவு பிளாஸ்மாவில்  ஆன்டிஜன் களுக்கு பொருந்தாத B இரத்த பிரிவு ஆன்டிபாடிகளையும்.


B இரத்த பிரிவு பிளாஸ்மாவில் ஆன்டிஜன் களுக்கு பொருந்தாத A இரத்த பிரிவு ஆன்டிபாடிகளையும்.


AB  இரத்த பிரிவு பிளாஸ்மாவில் ஆன்டிபாடிகள் எதுவுமே இல்லை, அதற்கு காரணம்  A, Bயின் ஆன்டிஜன்களை வைத்திருக்கின்றது. ஆன்டிபாடிகளை  AB இரத்த பிளாஸ்மாவில் வைத்திருந்தால் உடலின் சொந்த ஆன்டிபாடிகளினால் இரத்த சிவப்பணுக்கள் சிதைக்கப்படிருக்கும்.


O இரத்த பிரிவு பிளாஸ்மாவில் A, B இரத்த பிரிவுகளின்  ஆன்டிபாடிகளை வைத்திருக்கின்றது. அதற்கு காரணம்  O இரத்த பிரிவுக்கு A, B னுடைய ஆன்டிஜன்கள் எதுவுமே இல்லை.


இதெல்லாம்  தானாக வந்ததா அல்லது  யாரோ ஒருவரின் கையினால் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டதா.?   கடவுளின் தடயங்களை தேடி…


பம்பாய் இரத்த வகையைப்பற்றி பேசினால்: பம்பாய்-H, இரத்த வகையும் O இரத்த வகையைப்போல் எந்த வகையான ஆன்டிஜென்களும் [A,B,H] இல்லாதது மேலும் ரீசஸ் Rh காரணி, A,B ஆன்டிபாடிகள் மற்றும் பிரத்தியோகமாக பம்பாய் இரத்த வகையை அடையாளப்படுத்தும் H ஆன்டிபாடிகளையும் கொண்டது.


புதிய வகை பிரிஸ்டல் இரத்தப் பிரிவும் பிரத்தியோகமாக Er3 ஆன்டிஜென்கள் கொண்டது. இது எந்த வகை ஆன்டிபாடிகள் கொண்டது அல்லது AB+ இரத்த பிரிவு போல் ஆன்டிபாடிகள் இல்லாததா என்பது எனக்கு சரியாக தெரியாது.


Rh நிலை என்பது ரீசஸ் காரணியைக் குறிக்கின்றது, இது ஒரு குறிப்பிட்ட ஆன்டிஜெனை இரத்தத்துடன் பிணைக்கின்றது. உங்கள் இரத்தம் D-ஆன்டிஜெனை [ரீசஸ் Rh காரணியை] தாங்காவிட்டால், நீங்கள் RH- எதிர்மறை உள்ள இரத்த வகையை சேர்ந்தவர்.


இந்த பூமியில் சுமார் 85 சதவீத மக்கள் Rh+ நேர்மறை இரத்தப்பிரிவை சேர்ந்தவர்கள். எங்களில் மீதமுள்ள 15 சதவீதம் பேர், Rh- எதிர்மறை இரத்தப்பிரிவை சேர்ந்தவர்கள். நாம் அனைவரையும் உண்மையில் குரங்குகளிடமிருந்து வந்திருந்தால், நாம் அனைவரும் ஒரே இரத்தக் குழுவைக் கொண்டிருக்க வேண்டும்.


எங்களுடைய இரத்தபிரிவுகள் தானாக வந்தவை கிடையாது அவை தேவை கருதி திட்டமிட்டு எங்களுடைய மரபணுவில் சேர்க்கபட்டவை, ஒவ்வொரு மனித குலமும்/இனமும் தங்களுடைய பிராந்தியத்தில் காலநிலை மற்றும் தட்பவெப்பநிலை, மிக முக்கியமாக உணவு சகிப்புத்தன்மைக்கு ஏற்றவாறு இரத்தப் பிரிவுகள் உருவாக்கப்பட்டது.


நவீன மனிதன் [ஹோமோ சேபியன்கள்] மற்றும் நியண்டர்டால்களின் இரத்த பிரிவு என்னவாக இருந்திருக்கும்: மானுடவியல் உயிரியல் கலாச்சார பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பிரிவின் குழுவினர்கள்


மூன்று நியாண்டர்டால்கள் மற்றும் ஒரு டெனிசோவனின் இரத்தக் குழு பகுப்பாய்வுகள் அவற்றின் ஆப்பிரிக்க தோற்றம் பற்றிய ஆராச்சி அறிக்கையில். யூரேசியப் பரவல் மற்றும் ஆரம்பகால ஹோமோ இனப்பெருக்கம் பற்றிய ஒரு கருதுகோள்களை உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்.


ஹோமோ சேபியன்ஸ்களின் குறைந்த மரபணு வேறுபாடு மற்றும் சாத்தியமான மக்கள்தொகை பாதிப்புக்கான கூடுதல் ஆதாரங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.


ஒரு புதிய ஆய்வில், விஞ்ஞானிகள் டெனிசோவன் மற்றும் 1,00,000 முதல் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மூன்று நியண்டர்டால் பெண்களின் ஏற்கனவே வரிசைப்படுத்தப்பட்ட மரபணுக்களை மனித பரிணாம வளர்ச்சியைப் பற்றி அறிவதற்காக மீள் ஆய்வு செய்தனர்.


சுமாராக அறியப்பட்ட 40 இரத்தக் குழு அமைப்புகளில், குழுவானது இரத்தம் ஏற்றுவதற்கு பொதுவாகக் கருதப்படும் இரத்த வகையில் அதிகம் கவனம் செலுத்தினார்கள் அதாவது ABO (இரத்தக் குழு A, B, AB மற்றும் O) மற்றும் ரீசஸ்-Rh அமைப்புகள்.


இதன் முடிவுகள் புதிய ஆச்சரியங்களையும் வழங்குகின்றன. அத்துனை சிம்பன்சிகளுன் இரத்த வகை A மற்றும் அத்துனை கொரில்லாக்களின் இரத்த வகை B என்பது போலவே அத்துனை நியாண்டர்டால்களின் இரத்த வகை O என்று நீண்ட காலமாக கருதப்பட்டாலும்,


இந்த பண்டைய ஹோமினின்கள் ஏற்கனவே ABO மாறுபாட்டின் முழு அளவை வெளிப்படுத்தியுள்ளன என்பதை ஆராய்ச்சியாளர்கள் காட்ட முடிந்தது இது நவீன மனிதர்களில் கவனிக்க முடியும். பிற இரத்தக் குழு அமைப்புகளின் விரிவான பகுப்பாய்வு,


நியாண்டர்டால் மற்றும் டெனிசோவன்களின் ஆப்பிரிக்க தோற்றம் பற்றி பேசும் அல்லீல்களை வெளிப்படுத்தியது. [அல்லீல்கள் என்பது, தாய் தந்தையினரிடம் இருந்து வரும் மரபணு தகவல்கள்] இது மனித தோற்றத்தில் ஒரு தற்செயலான நிகழ்வு கிடையாது என்பதை இந்த ஆய்வுகள் உறுதிசெய்கின்றது.


ஆஸ்திரேலிய பழங்குடியினர் மற்றும் பாப்புவான்கள் தவிர, நவீன மனிதர்களில் இல்லாத தனித்துவமான Rh அலீலை நியண்டர்டால்கள் கொண்டுள்ளனர் என்ற கண்டுபிடிப்பு ஆச்சரியம் அளிக்கின்றது. இந்த இரண்டு நபர்களும் நியண்டர்டால்கள் மற்றும் நவீன மனிதர்கள் தென்கிழக்கு ஆசியாவிற்கு குடிபெயர்வதற்கு முன் இனக்கலப்பு செய்ததற்கான சான்றுகளா..?


இறுதியாக, இந்த ஆய்வு நியண்டர்டால் மக்கள்தொகையில் வெளிச்சம் போடுகின்றது. பழங்கால ஹோமினின்கள் மிகக் குறைவான மரபணு வேறுபாடுகளைக் கொண்டிருப்பதாகவும்,


அவை கரு மற்றும் பிறந்த குழந்தை ஹீமோலிடிக் நோய்க்கு (எரித்ரோபிளாஸ்டோசிஸ் ஃபெடலிஸ்) - தாய்-கரு ரீசஸ் இணக்கமின்மை காரணமாக, நியாண்டர்டால் தாய்மார்கள் ஹோமோ சேபியன்ஸ் அல்லது டெனிசோவன், தோஷமுள்ள சக மனிதனின் குழந்தைகளைப் பெற்றெடுத்தபோது, தாய்-கரு ரீசஸ் இணக்கமின்மை வழங்கப்பட்டதை உறுதிப்படுத்துகின்றார்கள்.


இந்த சான்றுகள் குறைந்த மரபணு வேறுபாடு மற்றும் குறைந்த இனப்பெருக்க வெற்றி ஆகியவை நியண்டர்டால் அழிவுக்கு பங்களித்தது என்ற கருதுகோளை ஆதரிக்கின்றது. அதாவது பொருத்தமில்லாத [தாய்-கரு Rh இணக்கமின்மை] Rh அலீலை கொண்டுள்ளனர்.


நியாண்டர்டால் சந்ததி விருத்தி இல்லாமலும் பிறந்த பிள்ளைகள் நோய் உள்ள பிள்ளைகளாக இருந்ததினால், அதிகரிக்கும் மழலை இறப்பு நியாண்டர்டால்கள் இந்த பூமியிலிருந்து ஒட்டு மொத்தமாக அழிந்து போனார்கள் என்று இந்த ஆய்வுகளின் சாராம்சமாக இருக்கின்றது.


நியாண்டர்டால் மற்றும் டெனிசோவன்களின் இரத்தப்பிரிவுகள்

விண்டிஜா[குரோஷியா குகை]-[65-50 000 ஆண்டுகள்] B+ இரத்தப்பிரிவு.

சாகிர்ஸ்காயா[குகை வாசிகள்]-[51-45 000 ஆண்டுகள்] A+ இரத்தப்பிரிவு.

நியாண்டர்டால்[அல்தாய் மலை வாசிகள்]-[130-90 000 ஆண்டுகள்] A+ இரத்தப்பிரிவு.டெனிசோவா[அல்தாய் குகை]-[76-52 000 ஆண்டுகள்] O+ இரத்தப்பிரிவு.


வரலாற்றுக்கு முந்தைய இனங்களின் இரத்தப்பிரிவு A+ இரத்தப்பிரிவு.? [சரியாக தெரியாது]


நவீன மனிதர்களில் மட்டும்தான் AB+மற்றும் Rh- எதிர்மறை இரத்தப்பிரிவை காணமுடிகின்றது. AB+ இரத்த பிரிவு  சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் இமயமலை பகுதில் வாழ்ந்த மக்களிடம் கண்டுபிடிக்கப்பட்டது.


AB+ ஆன்டிபாடிகள் இல்லாத இரத்த பிளாஸ்மாவை கொண்டது அதேநேரத்தில் இரத்த சிகப்பு அணுக்களில் A/B இரத்தப்பிரிவினுடய ஆன்டிஜென்களை கொண்டது. இரத்த பிரிவு Rh- ஆன்டிபாடி மற்றும் ஆன்டிஜென் இரண்டினையும் கொண்டது. இவர்கள் பெரும்பாலான உணவுகளுக்கு சகிப்புதன்மை உள்ளவர்கள்..


உணவு தட்டுப்பாடு ஏற்படாதவாறு, உணவின் அடிப்படையில் பெருகி வரும் சந்ததியினர்கள் பூமியில் எல்லா பகுதியிலும் வாழவைப்பதற்காக இரத்தபிரிவு உருவாக்கப்பட்டது.


இரத்தப்பிரிவு A+ இறைச்சி உணவுகளுக்கு சகிப்புத்தன்மையுள்ளது, இரத்தப்பிரிவு B+ இறைச்சி, காய்கறி உணவுகளுக்கு சகிப்புத்தன்மையுள்ளது, இரத்தப்பிரிவு O இறைச்சி, காய்கறி, தானிய உணவுகளுக்கு சகிப்புத்தன்மையுள்ளது, [ சகிப்புத்தன்மை என்பது உணவு ஒவ்வாமையை குறிக்கும்] புதிய வகை உணவுப்பழக்கத்திற்கு எங்களுடைய இரத்த அணுக்கள் பதிலளிக்கின்றது.


பிற்காலத்தில் வந்த இரத்தப்பிரிவு  AB+ Rh- சகல உணவுகளுக்கு சகிப்புத்தன்மையுள்ளது, குறிப்பாக கடல் உணவுகளுக்கு கூடிய சகிப்புத்தன்மையுள்ளவர்கள். பெரும்பாலும் சகல உணவுகளும் இவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். இதெல்லாம் தானாகவோ தற்செயலாக ஒருபோதும் உருவாகியிருக்கமுடியாது. யாரோ ஒருவரின் திட்டத்தின் கீழ் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. கடவுளின் தடயங்களை தேடி…

பண்டைய குடும்ப உறவுகள்: இன்றைய குடும்ப உறவுகள் போல் அன்றும் தந்தை மகள் உறவு தனித்துவமாக இருந்திருக்கின்றது, ஏனெனில்குகையில் கண்டுபிடிக்கப்பட்ட பதினொரு நபர்களில் எச்சங்களில் ஒரு தந்தையையும் அவரது டீனேஜ் மகளையும் அடையாளம் கண்டுள்ளது.


விஞ்ஞானிகள் எட்டு முதல் பன்னிரெண்டு வயதுடைய சிறுவன் மற்றும் அவனது உறவினர், அத்தை அல்லது பாட்டியாக இருக்கக்கூடிய ஒரு வயது வந்த பெண்ணையும் அடையாளம் கண்டுள்ளனர்.


நியண்டர்டால் இனத்தவர் குகையில் ஒரே நேரத்தில் ஒன்றாக கூடி, உணவு உண்டு, கூட்டுக் குடும்பமாக வாழ்ந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன, எனவே அவர்கள் ஒரே சமூகத்தின் ஒரு குலத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம். மரபணு வேறுபாடு மிகவும் குறைவாக இருப்பதால், இந்த சமூகம் சுமார் 20 தனிநபர்களைக் கொண்ட குடும்பம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


தெற்கு சைபீரியாவில் உள்ள இந்த கார்ஸ்ட் குகையை வேட்டையாடும் முகாமாக பயன்படுத்தினர். காட்டெருமை, குதிரைகள் மற்றும் ஐபெக்ஸ் மந்தைகள் பள்ளத்தாக்கில் சுற்றித் திரிந்தன. நூறாயிரக்கணக்கான எலும்புகள் மற்றும் கல் கருவிகள் மற்றும் 80 நியண்டர்டால் படிமங்கள் எஞ்சியுள்ளன.


இவை இப்போது 430,000 ஆண்டுகளுக்கு முன்பு யூரேசியாவில் வாழ்ந்த நவீன மனிதர்களின் இந்த உறவினர்களின் சமூக கட்டமைப்பைப் பற்றிய தனித்துவமான பார்வையை எங்களுக்கு வழங்குகின்றன. இதன்படி, சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு. நியாண்டர்தால்கள் யூரேசியாவில் வாழ்ந்தனர்.


பழங்கால குழந்தை அடக்கத்தின் கலை புனரமைப்பு. [படம்] 10,000 ஆண்டுகளுக்கு முன்பு நாம் எப்படி நம் குழந்தைகளை சுமந்தோம் என்பதைக் காட்டுகின்றது ஒரு இளம் மழலை பெண்ணின் பழங்கால அடக்கம். ஐரோப்பாவில் மிகவும் அரிதான சிசு புதைக்கப்பட்ட ஒரு புதிய தோற்றம், 10,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் தங்கள் பிள்ளைகளை கவண்களில் சுமந்து சென்றதைக் காட்டுகின்றது.


வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் குழந்தை கேரியர்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன என்ற எண்ணத்திற்கு இந்த கண்டுபிடிப்புகள் கூடுதல்  வலுவை சேர்க்கின்றது, இருப்பினும் அத்தகைய துணிக்கான தொல்பொருள் சான்றுகள், அதாவது எந்த துணியை[விலங்கின் தோல்] பயன்படுத்தினார்கள்  என்ற விபரம் எதுவும் புதைபடிவ பதிவில் பாதுகாக்கப்படவில்லை.


தங்கள் குழந்தைகள் மேல் பாசமுள்ள அப்பா அம்மாவாகவும்  அக்கறையுள்ள தாத்தா பாட்டியாகவும்  தங்கள் குடும்ப வாரிசு தவறிப்போனது எவ்வளவு வருத்தத்தை அவர்களுக்கு கொடுத்திருந்திருக்கின்றதிற்கு  இந்த  மழலை பெண்ணின் பழங்கால அடக்கம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கின்றது. சரி இருக்கட்டும் நான் சொல்ல வந்ததை தொடர்கின்றேன்.


தந்தை வழி மரபணு தகவல்களை சொல்லும் Y குரோமோசோமில் உள்ள மரபணு வேறுபாடு, தந்தையிடமிருந்து மகனுக்கு மரபுரிமையாகவும், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு கடத்தும் தாய்வழி  வழி மரபணு தகவல்களை சொல்லும் [இழைமணி]மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏவின் பன்முகத்தன்மையையும் குழு ஆய்வு செய்தது.


மைட்டோகாண்ட்ரியல் மரபணு வேறுபாடு Y குரோமோசோம்களில் உள்ள பன்முகத்தன்மையை விட பத்து மடங்கு அதிகமாக இருந்தது. குடும்பத்தின் மரபணு வடுக்கள் பெண்களின் வருகையை விட அந்நிய ஆண்களால் குறைவாக புதுப்பிக்கப்பட்டது.


குறைந்தது 60 சதவீத பெண்கள் தங்கள் சொந்த சமூகத்தை விட்டு வெளியேறி மற்ற பழங்குடியினருடன்  ஒன்று சேர்ந்துள்ளனர் என்று குழு சந்தேகிக்கின்றது. அதாவது கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டார்கள். இதன் பொருள் பொதுவாக ஆண்கள் வேட்டையில் ஈடுபட்டார்கள்,


பெண்கள் தங்கள் குழுக்களை விட்டு வெளியேறி மற்ற குலங்களில் சேர்ந்தார்கள். இதன் கூற்றுப்படி  குடும்ப சச்சரவுகள் கூட இவர்களுக்குள்ளே இருந்திருக்கலாம், அப்படி இருந்திருந்தால் அவர்கள் எந்த மொழியில் சண்டை பிடித்திருப்பார்கள், பண்டைய ஆண்கள் இதை எப்படி எடுத்துக்கொண்டார்கள். இது அவர்களுக்குள்ளே சகசமான ஒன்றாக கூட இருந்திருக்கலாம். [ அடுத்தவன் மனைவியை தூக்கிச்செல்வது இவர்களுக்குள்ளே நடந்திருக்கின்றது.]


நியண்டர்டால்கள் மூலம் தான், இந்த பூமியில் வெள்ளை/சிகப்பு நிற சமூகம் உருவானது, மற்றும் இவர்கள் வேற்று கிரகவாசிகளின் சந்ததியினராக கூட இருக்கலாம். முதல் மொழி வளர்ச்சி உள்ள சமூகமும்  இவர்களாகத்தான் இருந்திருக்கமுடியும்இருப்பினும் இவர்கள் எந்த மொழியை சரளமாக பேசியிருப்பார்கள், இன்று வரைக்கும் சரியாக தெரியாது.


வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக ஏதோ ஒரு மொழியை சரளமாக பேசியிருப்பார்கள் அந்த மொழியை இவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கலாம் அல்லது அதற்கு இணையான ஒரு உள்ளூர், லோக்கல் மொழியை உருவாக்கி கற்றுக் கொடுத்திருக்கலாம் அப்படி அவர்கள் கற்றுக்கொடுத்திருந்தால் கண்டிப்பாக பூமியில் பேசப்படும் ஏதோ ஒரு மொழி வேற்றுக்கிரகத்திலும் பேசப்படுகின்றது அது எந்த மொழியாக இருக்கும் ? கடவுளின் தடயங்களை தேடி…

அலை செயல்பாடு: இந்த பிரபஞ்சமும் நாங்கள் வாழும் உலகமும்  இப்படித்தான் வந்திருக்கும் என்று விஞ்ஞானத்தினால் விளக்கமுடியுமே தவிர, எதிலிருந்து எப்படி உருவானது என்று நிச்சயமாக சொல்லமுடியாது.


நாங்கள் காணும் அத்துனை பொருள்களும் குவாண்டம், இந்த பொருள்கள்  நிச்சியமற்ற தன்மையிலிருந்து உருவானது, அதாவது சூப்பர் நிலையிலிருந்து உருவானது.


குவாண்டம் இயக்கவியலில், அலைச் செயல்பாடு ஒரு அடிப்படைத் துகளின் குவாண்டம் மெக்கானிக்கல் நிலை அல்லது இடஞ்சார்ந்த இடத்தில் உள்ள அடிப்படைத் துகள்களின் அமைப்பை விவரிக்கின்றது மற்றும் அதன் இருப்பு நிகழ்தகவையும் தீர்மானிக்கின்றது. இந்த உலகத்தில் எதை எடுத்தாலும் இரண்டு பக்கங்களை கொண்டு, இரண்டு செயல்பாடு உள்ளவையாகத்தான் இருக்கும், ஒன்று நிலையானது மற்றது நிலையில்லாதது.


குவாண்டம் இயக்கவியலில்: [Q-பிட்(0+1)] சூப்பர் நிலையில் சிக்கியுள்ள துகள்கள்[குவாண்டம் என்டாங்கிள்மென்ட் துகள்கள்] இதில் ஒன்றை யாழ்ப்பாணத்திலும்  மற்றொன்றை ஜெர்மனி, அமெரிக்காவில் வைத்தாலும் அவைகளுக்குள்ளே  ஒரு அலை செயல்பாடு, ஒரு தொடர்பு உள்ளது.


மேற்கோளாக: நீங்களும் உங்கள் அயல்நாட்டு நண்பர்களும் குவாண்டம் துகள் என்று வைத்துக்கொண்டால், யாழ்ப்பாணத்தில் நீங்கள் ஒரு பகடை காயை உருட்டுகின்றீர்கள் அது உங்களுக்கு ஒன்று என்று காட்டுகின்றது. அதே நேரத்தில் ஜெர்மனி, அமெரிக்காவில் வசிக்கும் உங்கள் நன்பர்களும் பகடையை உருட்டுகின்றார்கள் அவர்களுக்கும் ஒன்று என்று காட்டுகின்றது. 


இன்னும் சுருக்கமாக விளக்கம் சொன்னால் பிள்ளை பசித்து அழுதால் தாயின் மடிகளில் பால்சுரக்கும் இதைத்தான் குவாண்டம் என்டாங்கிள்மென்ட் என்கின்றது இயற்பியல். இதுவெல்லாம் இயல்பாகவே எங்களுக்குள்ளே நடந்து கொண்டுதான் இருக்கின்றது.


குவாண்டம் பற்றிய ஆழமான நுண்ணறிவு, குவாண்டம் ஹீலிங் அல்லது மேட்ரிக்ஸ் எனர்ஜிடிக்ஸ் என்றும் அழைக்கப்படும் குவாண்டம் மாற்றத்தின் வரம்பற்ற சாத்தியக்கூறுகள் ஆற்றல் ஏற்றத்தாழ்வுகளை ஈடுசெய்யவும், உடல்-ஆன்மீகத் தகவல் புலத்தை மீண்டும் சமநிலைக்குக் கொண்டுவரவும் உதவும்.


ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கும் இடையிலுள்ள முப்பரிமாண இடைவெளியை காட்டாமல் உடனடி போக்குவரத்துடெலிபோர்ட்டேஷன்” செய்ய முடியும் என்று குவாண்டம் இயற்பியல் சொல்லுகின்றது. இதை இன்னும் விளக்கமாக சொன்னால் திடீர் திடீர் என்று மாறுபட்ட இடங்களில் தோன்றி மறைவதுஇன்னும் விளக்கமாக எங்களுடைய பாணியில் சொன்னால் ஆவியாக அல்லது பேயாக உலவுதல்.


நாங்கள் காணும் அத்துனை பொருட்களும் மரம் செடி நிலம் நீர் அண்டவெளி பரப்பொருள்கள் வரைக்கும் குவாண்டம் இயக்கவியலில் ஒரு சூப்பர் நிலையிலிருந்து இயங்குகின்றது,


மேற்கோளாக: குவாண்டம் பொருள் எலக்ட்ரான், புரோட்டான் மற்றும் அயனிகள் ஒரு சூப்பர் நிலையில் உள்ளவைகள். எலக்ட்ரான் அல்லது ஒளி [ஃபோட்டான்கள்சூப்பர் நிலையில் இருக்கும் இரண்டு பக்கங்களை கொண்டது. ஒரு பக்கம் துகள் மறு பக்கம் அலை செயல்பாடுள்ளது. அலை செயல்பாடு என்பது துகள்கள்  செல்லும் வழியை குறிக்கின்றது அவைகள் இடையில் முறிந்து போனாலும் திரும்பவும் இணைந்து கொள்கின்றது.


ஃபோட்டான் துகள்கள் வெவ்வேறு வழிகளில் சென்றாலும் அவைகள் அலை வடிவில் தொடர்பினை வைத்திருக்கின்றது. இதை இரட்டை பிளவு சோதனை உங்களுக்கு எளிமையாக விளக்குகின்றது [அலை=மின்காந்த அலைகள், அலைகளின் செயல்பாடு வெப்பநிலை மாற்றங்களுக்கு ஏற்றாப்போல் மாறக்கூடியவை. அதாவது ஒரு எலக்ட்ரான் வெப்பநிலை கூடிய இடங்களை கடற்கும் போது இயக்கமில்லாமல் நிலைத்துப்போகின்றது.


தியானத்தில் சூப்பர் நிலையில் இருக்கும் ஒருவரை நீங்கள் கிள்ளி வைத்தால் அது உங்களுக்கும் வலிக்கும். குவாண்டம் இயக்கவியலில் எல்லாமே சாத்தியம் உடனடி போக்குவரத்து [டெலிபோர்ட்டேஷன்] கால பயணம்[டைம் டிராவல்] ஒரு இடத்திலிருந்து கொண்டு பல இடங்களில் பிரதிபலிப்பது,


கூடுவிட்டு கூடுபாய்வது, மற்றவர்களின் எண்ணங்களில் பிரதிபலிப்பு, ஏவல் செய்வது, மற்றவர் நடவடிக்கயை மாற்றுவது, மூளைச்சலவை செய்வது, திடீரென ஒரு இடத்தில் தோன்றி மறைவது, நினைத்த இடத்தில் ஒரு பொருளை உருவாக்குதல், டெலிபதி,


அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரத்தை உருவாக்குதல், கல்வி அறிவு ஞானம் என்ற பிரபஞ்ச ஆற்றலை பெறுதல் போன்ற அரிய பல ஆற்றல்களை குவாண்டம் இயக்கவியலை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளமுடியும்.


இதை எல்லாம் புராணக்கதைகளிலும் சித்து விளையாட்டாகவும் கேள்விப்பட்டிருக்கின்றோம், திரைப்படங்களும் இந்த கதைகளை படமாக்கியும் இருக்கின்றது. குவாண்டம் இயக்கவியலில் இதுவெல்லாமே சாத்தியம் என்று அறிவியல் இன்று கொஞ்சம் கொஞ்சமாக நம்ப தொடங்கியிருக்கின்றதுகடவுளின் தடயங்களை தேடி…




 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக