வெள்ளி, 29 ஏப்ரல், 2022

allergic histamine intolerance

அலர்ஜி/ஒவ்வாமை: எந்த மகரந்த ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வசந்தகாலத்தில் துன்புறுகின்றார்கள். கொரோனா,கோவிட்-19 நோய்குறிகளை தவிர்த்து மகரந்த ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை எப்படி கண்டறிவது, அதிலிருந்து எப்படி ஒரு பருவகால ஒவ்வாமை நோயாளி தன்னை பாதுகாப்பது. அதிக தும்மல், கண் எரிச்சல் இதை வேறுபடுத்தி காட்டுகின்றது.

செழித்து வளரும் மரங்கள் பூச்செடிகளின் அழகு பற்றி ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு கடினமான நேரம். கண்களில் நீர் வடிதல், மூக்கு ஒழுகுதல் மற்றும் தொண்டை அரிப்பு ஆகியவற்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றை விடுத்து, மரங்களின் மகரந்தமும் ஒரு காரணமாகும். + இதனுடன்  சுற்றுப்புற மாசு (N02) இணைந்து தொல்லை கொடுக்கும்

உங்கள் மொபைல்போன் காலநிலை அறிவிப்பு மற்றும் மகரந்த தகவல் சேவையானது எந்த மகரந்தம் எந்த செறிவில் பறக்கின்றது என்பதை துல்லியமாக கண்காணித்து சொல்லுகின்றது. மேலும் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்யலாம் என்பதற்கான உதவிக்குறிப்புகளையும் அந்த சேவை வழங்குகின்றது.

இந்த சேவையின் அறிவிப்பை பார்த்து ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்கள் உங்கள் அலர்ஜியை தூண்டும் மகரந்தத்தை அறிந்து அதிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

அடிக்கடி இருமல், மூக்கு ஒழுகுதல் மற்றும் கண்களில் அரிப்பு. தூக்கமின்மை, தலைவலி மற்றும் மூச்சுத் திணறல் ஆகிய அறிகுறிகளுக்கு. தாவரங்களின் மகரந்த மணிகள் காரணமாகும், இது ஒவ்வாமை நோயாளிகளில் ஒரு ஆன்டிபாடி எதிர்வினைக்கு வழிவகுக்கின்றது, இது ஒவ்வாமை அறிகுறிகளைத் தூண்டுகின்றது அதாவது உடலில் ஹிஸ்டமின் சகிப்பின்மையை ஏற்படுத்துகின்றது.

இது நபருக்கு நபர் மாறுபடும் மகரந்த ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்கள் அனைத்து மகரந்தங்களுக்கும் ஒரே மாதிரியாக செயல்படுவதில்லை, சில வகையான மகரந்தங்களுக்கு மட்டுமே ஒரு சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துகின்றது.

ஒவ்வாமை நோய் உள்ளவர் எந்த மகரந்தத்திற்கு எதிர்வினையாற்றுகிறார் என்பதை மருத்துவ பரிசோதனை மூலம் அறிவது முக்கியம். அல்லது எந்த காலத்தில் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுகின்றது அந்த காலத்தில் எந்த மரம் பூத்திருக்கின்றது என்பதை வைத்தும் கூட அறிந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக: நவம்பர் மாதம் ஆரம்பித்து ஜனவரி இறுதி வரை மாமரங்கள் பூத்திருக்கும் இந்த காலத்தில் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் அதுனுடைய மகரந்த மணிகள்தான் காரணம்,

ஐரோப்பாவில் வசந்தகாலத்தில் பெரும்பான்மையான மரங்கள் ஒரே நேரத்தில் பூக்கும் காரணத்தினால் எந்த மரம் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த காலத்தில் முகக்கவசம்(மாஸ்க்) அணிதல், உப்புநீர் கரைசல் கொண்டு நாசி கழுவுதல் மூக்கிலிருந்து மகரந்தத்தை கழுவுவதற்கு நிவாரணம் அளிக்கின்றது. மேலும் தினமும் சுத்தமான ஆடைகள் அணிதல், தலை கழுவுதல், வெளிப்பயணங்களை குறைத்துக்கொள்ளுதல்,

வீட்டு ஜன்னல்களில் மகரந்தத் வடிகட்டி திரைகளை பொருத்துதல், காற்று சுத்திகரிப்பு சாதனங்கள் உட்புற மகரந்த அளவைக் குறைக்க உதவுகின்றது உங்கள் காரில் உள்ள தூசி/மகரந்த வடிகட்டியை தவறாமல் அடிக்கடி மாற்ற வேண்டும் இந்த நடவடிக்கைகள் ஒரு மருத்துவரின் உதவியின்றி உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ள உதவுகின்றது.

ஒவ்வாமை உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும். உங்களுக்கு எந்த மகரந்தம் ஒவ்வாமை எதிர்வினையை ஏற்படுத்துகின்றது என்பதை மருத்துவ பரிசோதனைகள் சந்தேகத்திற்கு இடமின்றி துல்லியமாக தீர்மானித்து சொல்ல முடியும். மேலும் ஆன்டிஹிஸ்டமின்கள் போன்ற மருந்துகளையும் மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைக்கலாம்.

சாதாரண தும்மல்தானே என்று இருந்துவிடாதீர்கள், பல ஆண்டுகளாக சிகிச்சை அளிக்கப்படாத மூன்றில் இருவருக்கு ஒவ்வாமை ஆஸ்துமாவாக மாறும் ஆபத்துள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதனுடைய ஒரு தொடர்ச்சியாக உணவு ஒவ்வாமைக்கும் வழிவகை தேடித்தரும். (நண்டு, இறால், ஆப்பிள், கத்திரிக்க்காய் புரத ஒவ்வாமை)

உணவு ஒவ்வாமை ஹிஸ்டமைன் சகிப்புத்தன்மை என்பது: உணவுடன் உட்கொள்ளும் ஹிஸ்டமைனுக்கு சகிப்புத்தன்மையின்மை  என்பதை காட்டுகின்றது.  இதற்கு காரணம் உடலில் சுரக்கும் ஹிஸ்டமைனை சிதைக்கும் நொதியம் டைமைன் ஒக்சிடேஸ் (DAO)  குறைபாடு அல்லது ஹிஸ்டமைன் மற்றும் DAO க்கு இடையிலான ஏற்றத்தாழ்வு. ஹிஸ்டமைனை சிதைக்கும் நொதியம் "டைமைன் ஒக்சிடேஸ்"  மாத்திரை வடிவிலும் கிடைக்கின்றது.

ஒரு முறை நோய் எதிர்ப்பு சக்தி மகரந்தங்களுக்கு எதிராக தன்னுடைய சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் அது உங்கள் உடலில் இருக்கும். உங்களுக்கு எதிரான மகரந்தங்கள் காற்றில் பறக்கும் போது திரும்பவும் தலைதூக்கும். இதன் பொருள் அலர்ஜி/ஒவ்வாமையை எந்த மருத்துவத்தினாலும் குணப்படுத்த முடியாது.

மருத்துவத்தில் ஒவ்வாமைக்கு நோயெதிர்ப்பு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. „ஹைபோசென்சிட்டிசேஷன்“ ஒவ்வாமை ஏற்படுத்தும் மகரந்தமணிகளுடனான ஒரு சமாதான ஒப்பந்தம் இந்த மகரந்த மணிகள் வந்தால் அதை சும்மாவிட்டுவிடு அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

இப்படித்தான் உங்கள் உடலை வித்தியாசமாக செயல்பட கற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றது இந்த சிகிச்சை முறை. இது உங்கள் சொந்த ஒவ்வாமைக்கு எதிராக மகரந்த சாறுகளை ஊசி அல்லது மாத்திரைகள்/சொட்டுகளாக எடுத்துக் கொள்ளலாம். (சிகிச்யைகாலம் இரண்டு,மூன்று வருடங்கள்)

இந்த சிகிச்சை சிறு பிராயத்தில் மேற்கொண்டால் ஒரு சில குழந்தைகளுக்கு சாத்தியப்படுகின்றது, வளர்ந்தவர்களுக்கு அவ்வளவாக பலன் அளிப்பதில்லை. குழந்தைகளை அவ்வளவு சுத்தமாகவும் அதை தொடாதே இதை செய்யாதே என்று பொத்திப்பொத்தி வளர்காதீர்கள்.

அவர்களை தெருவிலும் மணலிலும் விளையாட அனுமதியுங்கள் இந்த உலகத்தினினுடான ஒரு தொடர்பினை ஏற்படுத்தி கற்றுக்கொள்ளட்டும் நோய்எதிர்ப்புசக்தி எதையெல்லாம் மழலை பருவத்திலிருந்து அறிந்து வருகின்றதோ அதையே வளர்ந்துவரும் காலத்திலும் அனுசரித்து போகின்றது. சிறுவயதில் மாமரத்தின் பூக்களுடனான ஒரு தொடர்பு பிற்காலத்தில் அதை சகித்திக் கொள்கின்றது.

நகரத்தில் வளர்ந்த ஒரு பிள்ளை கிராமத்திற்கு செல்லும்போது புதிதாக மாமரத்தின் மகரந்தங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதை ஒரு அந்நியப்பொருளாக நினைத்து எதிர்க்கின்றது.

இதற்கு காரணம் பெரும்பான்மையான மகரந்த மணிகள் வைரஸ், ஒட்டுண்ணிகளின் வடிவங்கள் போன்றது. இந்த வடிவத்தை பார்த்து நோய் எதிர்ப்பு தவறாக புரிந்துகொள்கின்றது. இந்த தவறான புரிதல் ஒவ்வாமையின் வெளிப்பாடு. இது போன்ற நடவடிக்கைகள் ஒவ்வாமை குறைபாட்டினை முன்கூட்டியே வராமல் தடுக்கலாம். மற்றும் மருந்து மாத்திரைகள் மூலம் அதனுடைய வேகத்தை தணித்துக் கொள்ளமுடியும்.

மருத்துவ சந்தையில் கிடைக்கும் ஆன்டிஹிஸ்டமின்கள் போன்ற மருந்துகள் ஒவ்வாமை அறிகுறிகளின் தீவிரத்தை கணிசமாகக் குறைக்க உதவுகின்றன. நன்றி





புதன், 27 ஏப்ரல், 2022

 நான்காவது பூஸ்டர்: கொரோனாவுக்கு எதிரான நான்காவது தடுப்பூசி எதற்காக போட வேண்டும்? ஒவ்வொரு முறையும் நினைவக செல்கள் கொரோனா வைரஸுடன் மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ளும்போது, அவை வெளிப்படையாக சிறப்பாக கற்றுக்கொண்டு சிறந்த பாதுகாப்பை உங்களுக்கு வழங்குகின்றன.

எந்த நோய்க்கிருமிகள் அடிக்கடி வந்து தொந்தரவு செய்கின்றதோ அந்த கிருமிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்புசக்தி அதி சிறந்த பாதுகாப்பு கண்காணிப்பை திறம்பட மேற்கொள்கின்றது.

நோய் எதிர்ப்பு சக்தி எல்லோருக்கும் எல்லா காலத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை, ஒரு சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி, மந்தமாக அல்லது காலதாமதமாக நோய்க்குறிகளை வெளிப்படுத்தும் புதிய வகை கொரோனா வைரஸ்களை கண்டும் காணாமலும் இருந்து விடும் அல்லது அவைகளை எதிர்த்து மந்தமாக செயல்படுகின்றது மேலும் மற்றைய நோய்களுக்காக எடுக்கப்படும் மருந்து மாத்திரைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அடக்கிவிடுகின்றது. இந்த காலகட்டத்தில் தொற்று நோய்கள் தலைவிரித்தாடும்.


பிரத்தியோகமாக ஒரு செய்தியை நோய்எதிர்ப்பு சக்திக்கு எடுத்து சொல்ல வேண்டிய ஒரு சூழலுக்கு நீங்கள் தள்ளப்படுகின்றீர்கள். “இப்படிக்கு ஒரு மெசேன்சர்” கொரோனா வைரஸ் மாறுபாடு ஓமிக்ரான் BA.2என்ற ஒருவன் வருவான் அவனை வழிமறித்து தாக்கு அவனுடைய அடையாளம் இது.


காளையை வளர்த்தால் மட்டும்போதாது அதை ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தயார்படுத்த வேண்டும். நோய் எதிர்ப்புசக்தியை உயர்த்தினால் மட்டும் போதாது அதை பயிற்றுவிக்க வேண்டும். இந்த வேலையை தடுப்பூசிகள் மிக சிறப்பாக செய்கின்றன


நீங்கள் மீண்டும் கொரோனா வைரஸுடன் தொடர்பு கொண்டால், புதிய ஆன்டிபாடிகள் உடலில் உடனடியாக உருவாகின்றன அதிகளவு ஆன்டிஉடல்கள் உருவாகியிருந்தால் அவைகள் திறம்பட உடலை பாதுகாக்கின்றது. உங்கள் நினைவக செல்களில்(B-செல்கள்) வைரஸ்களை நினைவில் வைத்திருக்கின்றது என்பதை இவை உறுதி செய்கின்றன


நீங்கள் இப்போது வெளி நடவடிக்கைகளில் தொற்றுநோய்க்கு எதிராக ஒரு பாதுகாப்பாக இல்லாவிட்டாலும் இது (கோவிட்-19) Sars Cov-2 குழும வைரஸ்களின் கடுமையான போக்கைத் தடுக்கின்றது.


நான்காவது பூஸ்டர் அல்லது நோய்த்தொற்றுக்குப் பிறகு நினைவக செல்கள் வாழ்நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். 2002/03 இல் Sars Cov-1 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 17 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்த வைரஸ் வகைக்கு எதிராக T செல்கள் விரைந்து செயல்படுவது ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கின்றது.


எனவே கொரோனா. தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களும் மற்றும் இரண்டு/மூன்று முறை தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் நான்காவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது அவசரமாக பரிந்துரைக்கப்படுகின்றது.


Novavax-புரத தடுப்பூசி மற்றய COVID-19 கொரோனா தடுப்பூசிகளைப் போலவே, Nuvaxovide தடுப்பூசியும் கொரோனா வைரஸுடனான தொற்றுநோயை எதிர்த்துப் போராட உடலைத் தயார்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியில் ஸ்பைக் புரதங்கள் என்று அழைக்கப்படும் S-முனைப்புரதம்


ஆய்வகத்தில் செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் கொரோனா வைரஸின் சிறிய போலி துகள்கள் உள்ளன. தடுப்பூசியின் மூலம் இவை உடலுக்குள் சென்றால், அவை அந்நியமாக அங்கீகரிக்கப்பட்டு, ஆன்டிபாடிகளை உருவாக்க நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகின்றன. இது ஒரு பாதுகாப்பு நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் உருவாக்குகின்றது.


ஸ்பைக் புரதத்தின் தீங்கு விளைவிக்காத நகல்களை உருவாக்க உடலை ஊக்குவிக்கும் mRNA மற்றும் வெக்டர் தடுப்பூசிகளைப் போலன்றி, Novavax வைரஸ் புரதத்தின் உறையின் செல்-பண்படுத்தப்பட்ட பகுதிகளுடன் நேரடியாக செலுத்தப்படுகின்றது. நோயெதிர்ப்பு எதிர்வினையை வலுப்படுத்த, புரோட்டீனிம்பிஸ்டோல்ட்டில் துணை (பொட்டென்டியேட்டர்) என்று அழைக்கப்படும் பொருள் உள்ளது. அதாவது வலுச்சண்டைக்கு வலுச்சேர்க்கும் பொருள், இது நோய்எதிர்ப்பு சக்தியை கொம்பு சீவிவிடுகின்றது.


Nuvaxovid போன்ற புரோட்டீன் அடிப்படையிலான தடுப்பூசிகளில் எந்த வகை அசல் நோய்க்கிருமிகளின், நோய்க்கிருமி கூறுகள் எதுவும் இல்லை, அவை தங்களைப் பெருக்கி நோயை உண்டாக்கும் என்று பயம் கொள்ளத்தேவையில்லை அவை வெறும் போலித்துகள்கள்.


காய்ச்சல் தடுப்பூசிகளும் இந்த அடிப்படையில் தான் செயல்படுகின்றன mRNA (மெசேன்சர்) மற்றும் வெக்டார் தடுப்பூசிகளில் எந்த மறுஉருவாக்கம் செய்யக்கூடிய வைரஸ்களும் இல்லை, தடுப்பூசியின் புரதத் துகள்கள் நோயெதிர்ப்பு எதிர்வினையைத் தூண்டுகின்ற பின்னணியை மட்டுமே கொண்டுள்ளது.


நவீனமயப்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை குறித்து அதிகம் பயம் கொள்ளத்தேவையில்லை. அவை உங்களுக்கு 90 விழுக்காடுகள் கொரோனா குழும வைரஸ்களுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றது. நன்றி.





ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

 ஒட்சிசனேற்ற அழுத்தம் எதனால் ஏற்படுகின்றது. அந்நிய ஊருடுவல், ஒருவர் தன்னுடைய உடலை தீவிரவாத செயல்களிலில் ஈடுபடுத்தும் போது ஒட்சிசனேற்றங்களின் ஏற்றத்தாழ்வு ஏற்படுகின்றது. அதிகப்படியான அளவு இந்த ஏற்றத்தாழ்வுகள் பின்னர் செல்கள் சேதமடைய வழிவகுக்கும்.


ஒட்சிசனேற்ற அழுத்தம் பல காரணங்களைக் கொண்டிருக்கலாம். சுற்றுச்சூழல் தாக்கங்கள், வலுவான சூரிய ஒளி, மிகக் குறைவான தூக்கம் அல்லது உணர்ச்சி மன அழுத்தம் ஆகியவையும் இதில் அடங்கும். இந்த வழியில் பார்க்கும்போது,  ஒட்சிசனேற்ற அழுத்தத்தின் வளர்ச்சியை முற்றிலுமாக தடுப்பது கடினம்.


இருப்பினும் உங்கள் உடலின் ஒட்சிசனேற்ற சமநிலையில் எந்த செயல்முறைகள் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடும் என்ற உணர்வை நீங்கள் வளர்த்துக் கொண்டால், சிக்கலை மிகவும் இலகுவான முறையில் எளிதாகச் சமாளிக்கலாம். ஒட்சிசனேற்ற அழுத்தத்தின் மிகவும் நன்கு அறியப்பட்ட காரணங்கள் பின்வரும் காரணிகளை உள்ளடக்கியது.

 

- புகைபிடித்தல், மது மற்றும் போதைப்பொருட்க்கள்.

- மோசமான உணவு, பெரும்தீனி.

- அதிகப்படியான சர்க்கரை நுகர்வு.

- உடல் மற்றும் மன அழுத்தம்.

- உளவியல் மன அழுத்தம்.

- தூக்கமின்மை, தீராத நோய்கள்.

- பல அன்றாட சுற்றுச்சூழல் காரணிகள்.

- அன்றாட தவறுகள், பழிச்செயல்கள்.

கொழுப்பு, சர்க்கரை உணவின் மூலம் நுகர்வதை கூடுமானவரை நீங்கள் தவிர்க்கலாம் அல்லது குறைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் தேவையான அளவு இந்த இரண்டையும் உடல் சுயமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.


கூடுதலாக கவனத்தில் ஈர்க்கப்படாமல் புறக்கணிக்கப்படும் புற ஊதா கதிர்வீச்சு, வெளியேற்ற வாயுக்கள் மற்றும் நுண்ணிய தூசி, சுற்றுச்சூழல் நச்சுக்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள், ஆக்கிரமிப்பு கரைப்பான்கள் அல்லது கன உலோகங்கள், செயலற்ற புகைத்தல், ஓசோன் போன்ற இரசாயனங்கள்.


உங்கள் செல்லுலார் வளர்சிதை திறன் (மெட்டபாலிசத்தில்) உள்ள அந்நிய ஊடுருவல்களை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், உங்கள் உடலைப் பாதுகாக்க நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், அதே நேரத்தில், உங்கள் உயிரணுக்களில் ஒட்சிசனேற்ற சமநிலையை மீட்டெடுப்பதற்காக உங்கள் உணவில் நீங்கள் குறிப்பாக சேர்க்கக்கூடிய ஒட்சிசனேற்ற தடுப்பு  பொருட்கள் இயற்கையில் தாராளமாக உள்ளன.


( அந்நிய ஊடுருவல்கள் என்பது  கன உலோகங்கள், மாசுபட்ட சுற்றுப்புற நச்சுக்கள் மற்றும் வைரஸ்கள், இரசாயனங்கள். கதிர்வீச்சு, புற ஊதா கதிர்கள், அதிக வெப்பம், பூச்சிக்கொல்லி போன்ற அந்நிய பொருட்களை குறிப்பதற்காக  நான் பயன்படுத்தும் ஒற்றை வார்த்தை அது) 


ஒட்சிசனேற்றம் மற்றும் ஒட்சிசன் ஏற்ற தடுப்பு [ஆன்டிஒக்சிடன்] என்றால் என்ன? சுருக்கமாக இரும்பு துருப்பிடித்தல், அதை தடுக்கும் நடவடிக்கைதான்  ஒட்சிசன் ஏற்ற தடுப்பு [ஆன்டிஒக்சிடன்] ஒரு ஆப்பிளை வெட்டி வைத்தால் சில நிமிடங்களில் அதனுடைய நிறம் மாறும் அதை தடுப்பதற்கு சிறிதளவு எலுமிச்சை சாற்றை பிளிந்துவிட்டால் அது நிறம் மாறுவதை தடுக்கமுடியும்.


ஒட்சிசன் ஏற்ற தடுப்பு [ஆன்டிஒக்சிடன்] உடல் உயிரணுக்களுக்கான பாதுகாப்புப் பொருட்களாகும், அவை குறிப்பாக அந்நிய ஆக்கிரமிப்பு இரசாயன கலவைகளை நடுநிலையாக்குவதன் மூலம் உயிரணு கட்டமைப்புகளின் ஒட்சிசனேற்றம் சேதப்படுத்துவதைத் தடுக்கலாம்.


ஒட்சிசனேற்ற செயல்முறைகளைத் தடுக்கும் அல்லது தாமதப்படுத்தும் பொருட்கள் விற்றமின்களும், கனிமச்சத்துக்கள் மற்றும் தாவரங்களின் இரண்டாம்நிலை ஆற்றல் பொருள்களும்  அதில் மிக முக்கியமானது விற்றமின்- சி, ஃபிளாவனாய்டுகள், கரோட்டினாய்டுகள் போன்றவை.

புற்றுநோய் விழிப்புணர்வு: ஒட்சிசன் ஏற்ற தடுப்பு [ஆன்டிஒக்சிடன்] விற்றமின்களில் விற்றமின் C+E மிகவும் முக்கியமானது. இதனுடன் விற்றமின் A , துத்தநாகம் மற்றும்  செலினியம் இணைந்து உடலை கதிரியக்கம், புற ஊதாக்கதிர்கள் மற்றும் மாசுபடிந்த சுற்றுச்சூழல் நச்சுக்கள் போன்ற பிற தீவிரங்களிலிருந்து உடலை காப்பாற்றுகின்றது.


இது போன்ற பிற தீவிரங்களின் தாக்கங்களினால் உடல் திசுக்கள் அல்லது அணுக்களிலுள்ள எலக்ட்ரான் ஒன்றை இந்த தீவிரங்கள் திருடிவிடுகின்றது அல்லது தள்ளிவிடுகின்றது. ஒரு எலக்ட்ரானை இழந்த திசுக்கள் நடைமுறை இயக்கத்திலிருந்து ஒதுக்கப்பட்டு, புற்றுநோய் செல்களாக பரிணாமிக்கின்றது. இது இன்று பிற தீவிரங்களினால் ஏற்படும் புற்று நோய் காரணியாக அறியப்படுகின்றது.


அந்நிய தீவிரங்கள் நல்ல திசுக்களிலுள்ள ஒரு எலக்ட்ரானை திருடி ஆக்கிரமிப்பு செய்கின்றது பொதுவாக மூலக்கூறுகளில், ஒவ்வொரு எலக்ட்ரானுக்கும்  ஒரு புரோட்டான் உள்ளது, அதாவது ஒரு வகையான சம நிலை பங்குதாரர். இருப்பினும், இயற்கையில் ஒற்றை இணைக்கப்படாத எலக்ட்ரான்களைக் கொண்ட பல மூலக்கூறுகளும் உள்ளன. இவை அந்நிய ஆக்கிரமிப்பு பொருள்கள் (ஃப்ரீ ரேடிக்கல்கள்) என்று அழைக்கப்படுகின்றன.


தனிமையான எலக்ட்ரான்கள் ஒரு இணைப்பை தேடுவதால், இந்த அந்நிய ஊடுருவல்கள் மிகவும் வினைத்திறன் கொண்டவை, அதாவது நல்ல திசுக்களிலுள்ள ஒரு எலக்ட்ரானை திருடி ஆக்கிரமிப்பு செய்கின்றது.


இது எப்போதும் மனிதர்களுக்கு நல்லதல்ல. வேதியியல் ரீதியாக ஆக்கிரமிப்பு மூலக்கூறுகள் உயிரினத்தில் கணிசமான சேதத்தை ஏற்படுத்தும் என்பதால் அவை பாதுகாப்பு உயிரணு சவ்வுகள் மற்றும் முக்கிய லிப்பிடுகள் மற்றும் புரதங்கள் இரண்டையும் தாக்கி மரபணுவை (டிஎன்ஏ) சேதப்படுத்துகின்றன.


அந்நிய ஊடுருவல் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும் வெளிப்புற காரணிகளின் எங்களுடைய சுற்றுச்சூழலில் அதிகமாக உள்ளது எடுத்துக்காட்டாக: புற ஊதா கதிர்கள், ஓசோன் போன்ற எதிர்வினை பொருட்கள் சிகரெட் புகையில் உள்ள நைட்ரஜன் ஒக்சைடுகள், உணவில் உள்ள கன உலோகங்கள்.


மேலும் பெரும்பாலான ஒட்சிசனேற்ற ஆக்கிரமிப்பு உடலின் சொந்த வளர்சிதை மாற்றத்தில், ஒரு வகையான துணை தயாரிப்பாக மிகவும் சீராக உருவாகின்றன.


முக்கிய தோற்றம் உடலின் உற்பத்தி நிலையங்களான  (மைட்டோகாண்ட்ரியா) இழைமணி கலத்தின் மின் ஆற்றல் உற்பத்தியின்  போது மாற்றப்படும் ஒட்சிசன் மூன்று முதல் பத்து சதவிகிதம் முழுமையாக நீராக மாற்றப்படுவதில்லை. அதற்கு பதிலாக, ஒட்சிசனேற்ற  ரேடிக்கல்கள் (ஆக்கிரமிப்பு மூலக்கூறுகள்) உருவாகின்றன, அவற்றில் பெரும்பாலானவை உடனடியாக நொதிகளால் இடைமறிக்கப்படுகின்றன. ஆனால் மீதமுள்ளவை செல்லுக்குள் நுழைந்து புதிய தீவிரவாதிகளை உருவாக்கலாம். அதாவது நல்ல திசுக்களும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி ஒட்சிசனேற்ற அழுத்தம் ஏற்படுகின்றது.


எப்படி ஒரு அணுமின்நிலையத்தில் அணுக்கழிவுகள் ஏற்படுவதுபோல் உடலின் மின் உற்பத்தி நிலையங்களான  (மைட்டோகாண்ட்ரியா) இழைமணி கலத்தின் மின் ஆற்றல் உற்பத்தியின் போது கழிவுகள் ஏற்படுகின்றன இந்த கழிவுகள்  உடல் திசுக்களை ஆக்கரமிப்பு செய்கின்றது.


ஒட்சிசனேற்ற தடுப்பு பொருட்கள் உள்ள உணவுகள்: பொதுவாக விற்றமின்-C நிறைந்த உணவுகள் நெல்லிக்காய், ஆப்பிள் அவுரிநெல்லிகள், திராட்சை, ப்ரோக்கோலி. உருளைக்கிழங்கு,கேரட் உள்ளி/பூண்டு மற்றும் விற்றமின்-E மற்றும் துத்தநாகம் போன்ற கனிம சத்துக்கள், செப்பு, செலினியம் போன்ற சுவடு கனிமங்கள்  நிறைந்த உணவுகள் கடலை, விதைகள், பருப்பு, தினை மேலும் தாவரத்தின் இரண்டாம் நிலை ஆற்றல் பொருட்கள்: நிறப்பொருட்கள், வாசனை மற்றும் சுவைகள் ( ஃபிளாவனாய்டுகள், கரோட்டினாய்டுகள், பைட்டோஸ்டெரால், சபோனின்கள்)


விற்றமின்கள், உடல் செல்கள் அந்நிய ஆக்கிரமிப்பால் இழந்த ஒரு எலக்ட்ரானை கொடுத்து அதை புதுப்பிக்கின்றது. வாரத்தில் ஒரு நாள் தலைக்கு உடலுக்கு எண்ணை தேய்த்து குளிப்பது மிகச்சிறந்த ஒட்சிசனேற்ற தடுப்பு நடவடிக்கையாகும். இதை கடைப்பிடித்தாலே போதும் இந்த நூற்றாண்டிலியே புற்றுநோய் என்ற வார்த்தை சொல் அகராதியிலிருந்து இல்லாது அழித்திடலாம்.


தாவரத்தின் இரண்டாம் நிலை  பொருட்கள் : தாவரத்தின் இரண்டாம் நிலை ஆற்றல் பொருட்கள் என்பது:   பழங்கள், காய்கறிகள் இலை, தழைகளிலுள்ள  நிறப்பொருட்கள், வாசனை மற்றும் சுவைகளை குறிக்கும். எடுத்துக்காட்டாக : வாழைப்பூ, பாவற்காயிலுள்ள கசப்பு, துவர்ப்பு, உப்பு 


நெல்லிக்காயிலுள்ள புளிப்பு, பூண்டு, வெங்காயம், கறுவா, ஏலக்காய், துளசியிலுள்ள வாசனை, மிளகாய், மிளகு கடுகில் உள்ள உறைப்பு, மற்றும் இவைகளுக்கு உரித்தான சுவைகளையும் குறிக்கும். (மாம்பழம், பலாப்பழம், கொய்யாப்பழ சுவைகள்) மேலும்  தாவரங்கள்  மகரந்த சேர்க்கையின் போது உமிழும் தாவர ஹார்மோன்கள் மற்றும் பூச்சிக்கடி, நோய்க்கிருமிகள், தழைஉண்ணிகளுக்கு எதிராக பாதுகாப்பு நச்சுக்கள், நுரைகள், பிசின் போன்றவைகளும் அடங்கும்.


கரோட்டினாய்டுகள்: சாயங்கள் (மஞ்சள், ஆரஞ்சு சிவப்பு)

ஃபிளாவனாய்டுகள்: சாயங்கள் (சிவப்பு, வெளிர் மஞ்சள், நீலம், ஊதா)

பைட்டோஸ்டெரால்: சவ்வு கட்டுமான பொருள், தாவர ஹார்மோன்கள்,

கொலஸ்ட்ரால்  எண்ணெய் பொருட்கள்

சபோனின்கள்: கசப்பான பொருட்கள்.

குளுக்கோசினோலேட்டுகள்:பூச்சிக்கடி, நோய்க்கிருமிகள், தழைஉண்ணிகளுக்கு எதிராக பாதுகாப்பு நச்சுக்கள், நுரைகள், பிசின்.

புரோட்டீஸ் தடுப்பான்கள்: தாவரத்தின் புரதச் சிதைவைத் தடுக்கின்றது.

மோனோடர்பீன்ஸ்: புதினா, இஞ்சி, சிட்ரஸ் பழங்கள், மசாலா போன்ற மூலிகைகள்

கருவேப்பிலை, விதைகளிலுள்ள வாசனை மற்றும் சுவைகள்.

சல்பைடுகள்: வெங்காயம், பூண்டு/உள்ளியிலுள்ள வாசனை  மற்றும் சுவைகள்.


மனிதர்களில் இந்த ஆற்றல் பொருட்கள் உடல் செல்களின் ஒட்சிசனேற்றத்தை தடுக்கும் ஆற்றலுள்ளவை மற்றும் புற்றுநோய், இருதய நோய், இரத்த அழுத்த நோய்கள் எற்படாமல் பாதுகாக்கின்றது.


குர்செடின்: என்பது தாவரங்களின் இரண்டாம் நிலை ஆற்றல் பொருளை குறிக்க பயன்படும் ஒரு சில தாவரங்களுக்கு வண்ணம் தரும் ஒரு தாவர சாயம். குர்செடின் (குவெர்செட்டோல் அல்லது விற்றமின்-P என்றும் அழைக்கப்படுகின்றது) எங்களது உணவு சங்கிலியில் அதிகமாக  அறியப்படவில்லை, இருப்பினும் நம் உணவின் ஒரு முக்கிய அங்கம்.


இது ஃபிளாவனாய்டுகளின் குடும்பத்திற்கு சொந்தமானது, இந்த நிறமிகள் பூக்கள், பழம் மற்றும் காய்கறிகளை அவற்றின் நிறத்தை கொடுக்கும்.  ஃபிளாவனாய்டுகளில், குவெர்செடின் மிகவும் துல்லியமாக ஃபிளாவனோலில் ஒன்றாகும், அவற்றின் பிரகாசமான மஞ்சள் நிறத்தால் அடையாளம் காணப்படுகின்றது. மற்றும் இந்த மூலக்கூறு அதன் கசப்பான சுவையாலும் வகைப்படுத்தப்படுகின்றது.


பொதுவாக மருத்துவ பயன்பாட்டிற்கு உதவும் மூலிகை தாவரங்களில் செயலில் உள்ள கூறுகளாக குர்சிடின், ஃபிளாவனாய்டாக கருதப்படுகின்றது.


இந்த செயலில் உள்ள மூலப்பொருள் பல உணவுகளிலும், குறிப்பாக  மஞ்சள் நிற காய்கறிகள் மஞ்சள் குடைமிளகாயில் அதிகளவில்  காணப்படுகின்றது. மற்றும் ஆப்பிள், சின்னவெங்காயம்,(பச்சையாக சாப்பிடவேண்டும், அவுரிநெல்லிகள், பச்சை தேயிலை (தேநீர்) நாவற்பழம் மற்றும் விதைகள். குவெர்செடின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கவும், கணைய புற்றுநோய்க்கு எதிராகவும் மேலும்  இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றது.




வெள்ளி, 22 ஏப்ரல், 2022

 மாபெரும் நுண்ணுயிர் புரட்சி : 1908 இல் நோபல் பரிசை வென்ற ஒரு ரஷ்ய நோயெதிர்ப்பு நிபுணரின் மாபெரும் கண்டுபிடிப்பு, பெரும்பாலான ஐரோப்பா மக்கள் தங்கள் சருமத்தை மேம்படுத்தவும், அவர்களின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மற்றும் மனநிலையையும் கவனத்தையும் அதிகரிக்க உதவுகின்றது என்று குடல்-வாழ்-நல்ல-பாக்டீரியாக்களை (புரோபயாடிக்-பல்கேரிகஸ் பாக்டீரியா) தங்கள் அன்றாட உணவில் பயன்படுத்துகின்றார்கள்..


இந்த நுண்ணுயிரிகள் ஏகப்பட்ட, பொதுவான நோய்களைத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் முடியும் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அதனது ஆய்வுகளையும் வெளியிட்டிருக்கின்றார்கள். 1908 ஆம் ஆண்டில், ரஷ்ய நோயெதிர்ப்பு நிபுணர் இலியா மெட்ச்னிகோஃப் நோயெதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய உயிரணுவான பாகோசைட்டுகளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசைப் பெற்றார்.


ஆனால் இன்று அவர் நினைவுகூரப்படுவதற்கு அதுவல்ல காரணம். இந்த கட்டுரையின் நோக்கமும் அதுவல்ல, அவர் எதை கண்டுபிடித்தார் அதனுடைய பயன்பாடு என்ன அதை குறித்த ஒரு இலக்குதான் இந்த கட்டுரை. அந்த நேரத்தில் மருத்துவ அறிவியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது அவரின் இந்த கண்டுபிடிப்பு.


பல்கேரியாவில் உள்ள பல கிராமங்களின் வாழ்கின்ற மக்கள் மற்ற நாடுகளில் உள்ள மக்களை விட நீண்ட காலம் நோய்நொடியின்றி நூறு வயதையும் தாண்டி வாழ்ந்தனர். குறிப்பாக புற்றுநோய், சர்க்கரைநோய், ஒவ்வாமை, ஆஸ்துமா நோய்கள் ஏதுவுமின்றி வாழ்ந்தார்கள்.


இன்னும் நீண்ட காலம் கடந்த ஆய்வின் உண்மையில், பல விஞ்ஞானிகள் பல்கேரிய கிராமப்புற மக்களின் நீண்ட ஆயுளின் ரகசியத்தைக் கண்டுபிடிக்கத் தொடங்கினார்கள். இந்த ரஷ்ய விஞ்ஞானி கண்டுபிடித்தது, மக்கள் இன்னும் நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு திறவுகோலாக இருக்கலாம்.


1907 ஆம் ஆண்டில், Metchnikoff இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய வகை பாக்டீரியா, பல்கேரிய கிராமப்புற மக்களின் நம்பமுடியாத நீண்ட ஆயுளுக்கு திறவுகோலாக இருந்தது என்ற கருத்தை ஊக்குவிக்கும் ஒரு ஆய்வை வெளியிட்டது. பாசிலஸ் பல்கேரிகஸ் எனப்படும் இந்த லாக்டிக் அமில பாக்டீரியம், பாலை தயிராக மாற்றுவதற்கு காரணமாகும்.


அனைத்து பாக்டீரியாக்களும் தீங்கு விளைவிப்பதில்லை என்ற கருத்தை முன்வைத்த முதல் விஞ்ஞானி மெட்ச்னிகாஃப் ஆவார். அவரைப் பொறுத்தவரை கெட்ட பாக்டீரியாக்கள் பரவுவதைத் தடுக்கக்கூடிய நல்ல பாக்டீரியாக்களும் எங்களுடைய உணவு சங்கிலியில் இருக்கின்றது.


பல்கேரிய நாட்டு புளித்த தயிருக்கு இவ்வளவு சக்தியா? அப்போதிருந்து, பல்கேரிய தயிரின் சக்தியைப் பற்றி பரப்புவது மெட்ச்னிகாப்பின் பணியாக மாறியது. அவர் பொது விரிவுரைகளை வழங்கத் தொடங்கினார் மற்றும் பல்கேரிய தயிர் இந்த தனித்துவமான பாக்டீரியத்தால் வயதான செயல்முறையை தாமதப்படுத்தும் என்று தனது நம்பிக்கையை பரப்பினார். ஒரு சிறிய, ஆர்வமுள்ள மக்களே புளித்த தயிரை வாங்கத் தொடங்கினார்கள். (உங்களுக்கு தேவை என்றால் இணையத்தில் பல்கேரிய தயிர் வாங்கமுடியும்)


இந்த பண்டைய சுகாதார ரகசியத்தை நவீன விஞ்ஞானம் இவ்வாறு மீண்டும் கண்டுபிடித்து மக்களுக்கு அறிமுகம் செய்து வருகின்றது. அறிவியல் மீண்டும் ஒருமுறை உடல்நலம் மற்றும் நோய்களில் மனித நுண்ணுயிரிகளின் பங்கைப் பார்க்க. 2007 இல், மனித நுண்ணுயிர் திட்டம் தொடங்கியது. நமது குடலில் உள்ள நுண்ணுயிரிகளை வகைப்படுத்துவதற்கான ஐந்தாண்டு சர்வதேச முயற்சியும் ஆரப்பிக்கப்பட்டது.


மனித நுண்ணுயிர் 1,000 வெவ்வேறு வகையான நுண்ணுயிரிகளைக் கொண்டிருக்கலாம். சில சமீபத்திய மதிப்பீடுகளின்படி, குடலில் 100 டிரில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளன - அதாவது உங்கள் முழு உடலிலும் உள்ள செல்களை விட உங்கள் குடலில் அதிக பாக்டீரியாக்கள் உள்ளன (சுமார் இரண்டு கிலோ எடை)


குடலில் உள்ள சில நல்ல பாக்டீரியாக்கள் உணவு நார்ச்சத்து குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களாக நொதிக்கப்படுவதற்கு காரணம் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இவை நேரடியாக உறிஞ்சப்பட்டு முக்கியமான வளர்சிதை மாற்ற நன்மைகளை அளிக்கின்றன என்பதையும் கண்டறிந்தனர். குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்கள் பல நோய்களுக்கு அருமருந்தாகும்.


குடல்-வாழ்-நல்ல-பாக்டீரியாக்கள் விற்றமின்களை செயல்படுத்தவும் உடைக்கவும் பயன்படுகின்றது. விற்றமின்-பி மற்றும் விற்றமின்-கே ஆகியவற்றின் தொகுப்பில் இந்த குடல்-வாழ்-நல்ல-பாக்டீரியாக்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்கள் ஹார்மோன்கள் மற்றும் நரம்பியக்கடத்திகளின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை அவர்கள் அடையாளம் கண்டனர்.


மிக முக்கியமாக, குடல் மைக்ரோபயோட்டா இடையூறு மற்றும் பல்வேறு அழற்சி மற்றும் சுய-உடல்-தாக்கி-நோய்களுக்கு இடையே தெளிவான தொடர்புகள் கண்டறியப்பட்டுள்ளன. சுருக்கமாக சொன்னால் இந்த குடல்-வாழ்-நல்ல-பாக்டீரியாக்கள் இல்லாமல் ஒரு பருப்புக்கூட வேகாது எங்கள் குடலில் அவ்வளவு முக்கியமானவை இந்த நுண்ணுயிரிகள். பழைய சோறும் புளித்த மோரும், கெட்டித் தயிரும் தமிழர் பண்பாடு அதை துலைத்து விட்டு, விரட்டும் நோய்களுக்காக மருந்துகள் தேடி அலைகின்றோம்.


பல நோய்களுக்கு காரணியாக இருப்பது, குடல்-வாழ்-நல்ல-பாக்டீரியாக்களின் அழிவு, அதற்கு காரணம் ஆண்டிபயாடிக் கலப்பு உணவுகள். அதிகளவு ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுப்பது ஆபத்தான ஒன்று மருத்துவரின் ஆலோசணை இல்லாமல் நுண்ணுயிரிக்கொல்லி மருந்துகளை எடுப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.


அதற்கு பதிலாக கறிமஞ்சளை பயன்படுத்தலாம் கறிமஞ்சள் நல்ல பாக்டீரியாக்களை ஒருபோதும் அழிக்காது அதை கட்டுக்குள்ளே வைத்திருக்க உதவும். லாக்டிக் அமில பாக்டீரியாக்கள் நிறைந்த தயிர் சாப்பிடுவதின் மூலம் திரும்பவும் இழந்த குடல்-வாழ்-நல்ல-பாக்டீரியாக்களை மீளுருவாக்கம் செய்யமுடியும் இதன்நிமித்தம் உங்களை பீடித்த தீராத நோய்களுக்கு விடைகொடுக்கலாம் 


தயிர் கண்டுபிடிப்பு. பல்கேரியர்கள் தங்கள் தயிரைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறார்கள், மேலும் அதன் தோற்றம் பழங்காலத்திற்கு முந்தையது என்று எங்களுக்குச் சொல்வார்கள், இந்த பகுதியைச் சேர்ந்த மூன்று ட்ரேசியா தயிரைக் கண்டுபிடித்தவர்கள், அவர்கள் தற்செயலாக அதைச் செய்திருந்தாலும்.


திரேசியன் பழங்குடியினர் தங்கள் ஆரம்ப நாட்களில் நாடோடிகளாக இருந்ததால், அவர்கள் பாலை விலங்குகளின் தோல் பைகளில் கொண்டு செல்ல வேண்டியிருந்தது, இது அவர்கள் இனப்பெருக்கம் செய்யும் போது தயிர் உற்பத்தி செய்யும் சில பாக்டீரியாக்களுக்கு ஏற்ற சுற்றுப்புறத்தை உருவாக்கி கொடுத்தது அந்த வாய்ப்பிலிருந்து திரேசியர்கள் தயிர் தயாரிக்கக் கற்றுக்கொண்டனர். இந்த தயிர் கண்டுபிடிப்பு 4000 ஆண்டுகளுக்கும் மேலானது என்று நம்பப்படுகின்றது.


புரோபயாடிக்-பாக்டீரியாக்கள்:

- லாக்டோபாசில்லஸ் (LACTOBACILLUS)

- லாக்டோகாக்கஸ் (LACTOCOCCUS)-

- புரோபியோனிபாக்டீரியம் (PROPIONIBACTERIUM)

-ஸ்ட்ரெப்டோகாக்கஸ்-தெர்மோபிலஸ் (STREPTOCOCCUSTHERMOPHILUS))

- பிஃபிடோபாக்டீரியம் (BIFIDOBACTERIUM)

- பல்கேரிகஸ் (BULGARICUS)


ஸ்பெர்மிடின் ஒவ்வொரு ஆரோக்கியமான உடலுக்கும் அடிப்படை, ஆரோக்கியமான மற்றும் சீரான உணவுகள். உணவுகளில் காணப்படுகின்ற ஸ்பெர்மிடின் அல்லது ரெஸ்வெராட்ரோல் போன்ற பொருட்களும் தன்னியக்கத்தைத் தூண்டுகின்றது.


பின்வரும் பட்டியல் ஸ்பெர்மிடின் மற்றும் ரெஸ்வெராட்ரோல் அதிகளவிலுள்ளது:. ஸ்பெர்மிடின் கொண்ட உணவுகள்: கடும் பச்சை நிற காய்கறிகள்; ப்ரோக்கோலி, சோயாபீன்ஸ், கீரை, பச்சை பட்டாணி, பூசணி விதைகள், பிரஸ்ஸல்ஸ் முளைகள். காலே, ரெஸ்வெராட்ரோல் கொண்ட உணவுகள்: கடும் நீல நிற சிவப்பு பழங்கள்; ஒயின், திராட்சை சாறு, அவுரிநெல்லிகள், கிரான்பெர்ரி


ஸ்பெர்மிடின்: முதுமையை எதிர்கின்றது, ஸ்பெர்மிடின் முடி உதிர்வைக் குறைத்து  எங்களை இளமையுடன் வைத்திருக்க உதவுகின்றது.இதயத்தைப் பாதுகாக்கின்றது. கார்டியோ-பாதுகாப்பு விளைவு மற்றும் டெலோமியர் சிதைவை எதிர்க்கின்றது. டெலோமியர்ஸ் என்பது குரோமோசோம்களின் பாதுகாப்பு தொப்பிகள் இவைகள் சிதைந்து போவதினால் முதுமை ஏற்படுகின்றது.


நம் வாழ்வின் தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு நாளும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக வயதாகி விடுகிறோம். இந்த உயிரியல் செயல்முறை மீளமுடியாதது மற்றும் பல்வேறு நோய்களின் மாற்றங்களுடன் ஆயுட்காலம் அதிகரிப்பதோடு தொடர்புடையது, இது இதய செயலிழப்பு (மாரடைப்பு), நரம்பு செல்கள் இழப்பு (நரம்பியக்கடத்தல்) அல்லது வளர்சிதை மாற்ற செயல்பாடு குறைவதற்கு வழிவகுக்கும்.


வயது தொடர்பான மாற்றங்களில் ஒரு காரணி என்னவென்றால், சில செல்லுலார் சுத்திகரிப்பு செயல்முறைகள் இனி நன்றாக செயல்படாது. தன்னியக்கவியல் என்று அழைக்கப்படுவது, ஒரு வகையான மறுசுழற்சி அமைப்பாகும்.


இது கலத்தின் மிதமிஞ்சிய அல்லது சேதமடைந்த கூறுகளை உடைத்து மறுசுழற்சி செய்கின்றது. இந்த மூலக்கூறு ஒழுங்குபடுத்தும் பொறிமுறையானது செல்களை பொருத்தமாக வைத்திருக்கின்றது மற்றும் பல நோய்களிலிருந்தும்  பாதுகாக்கின்றது. வயதாக ஆக தன்னியக்கம் தடுமாறுகின்றது இது இயல்பானது. இருப்பினும், உடலின் சொந்தப் பொருளான ஸ்பெர்மிடின் மூலம் அதை மீண்டும் தூண்டிவிடலாம்.


ஸ்பெர்மிடின் என்பது ஒவ்வொரு உயிரணுக்களிலும் காணப்படும் ஒரு இயற்கையான உள்ளுறுப்பு பொருளாகும். பெயர் குறிப்பிடுவது போல, பாலிமைன்-ஸ்பெர்மிடின் ஆண் விந்தணுவில் காணப்படுகின்ற ஒரு வளர்சிதை ஊக்க பொருள்  முதலில் விந்தணுவில் . பாலிமைன் 1870 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால்தான் அதன் முதல் எழுத்தை தழுவிவருகின்றது ஸ்பெர்மிடின் அனைத்து உயிரினங்களிலும் மற்றும் அனைத்து உடல் செல்களிலும் உள்ளது இது உயிரணு வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையது.


மெயின்ஸ் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் உள்ள மருத்துவ நுண்ணுயிரியல் மற்றும் சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பாலிமைன்-ஸ்பெர்மிடின் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது, இதனால் மேம்பட்ட நோய் எதிர்ப்பு சக்திக்கு பங்களிக்கின்றது என்பதைக் கண்டறிந்துள்ளனர். இது மனித உயிரணுக்களில் மீளுருவாக்கம் மற்றும் சுய-சுத்தப்படுத்தும் செயல்முறையான தன்னியக்கத்திலும் (அவுடோபாஜீ) ஈடுபடுகின்றது சேதமடைந்த அல்லது தவறான செல் கூறுகள் உடைக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகின்றன.


அனைத்து உடல் உயிரணுக்களிலும் ஸ்பெர்மிடின் உள்ளது மற்றும் சில குடல் பாக்டீரியாக்கள் இந்த பொருளை உருவாக்க முடியும் என்பது இப்போது அறியப்படுகின்றது. இருப்பினும், பெரும்பாலானவை உணவு மூலம் உட்கொள்ள வேண்டும். கோதுமை முளை, பாலாடைக்கட்டி, சோயா பொருட்கள் மற்றும் பருப்பு வகைகளில் அதிக அளவு ஸ்பெர்மிடின் காணப்படுகின்றது. நமது உயிரணுக்களில், பொருள் தன்னியக்கத்தை செயல்படுத்துகிறது. இந்த வழியில், ஊடுருவும் நோய்க்கிருமிகள், தவறான புரதங்கள் அல்லது இனி செயல்படாத செல் கூறுகள் உடைக்கப்படுகின்றன.


- கோதுமை/சோயா முளை  (243 mg/kg)

- பாலாடைக்கட்டிகள்.(199 mg/kg)

- காளான்கள் (80 mg/kgக்கு மேல்).

- சமைத்த பட்டாணி (65 மி.கி./கிலோ)

- கொண்டைக்கடலை (28 மி.கி./கி.கி).

- அரிசி தவிடு (51 mg/kg).

- கோழி கல்லீரல் (48 மி.கி/கி.கி) மற்றும்

- மாட்டிறைச்சி (71 மி.கி/கி.கி).

- சோளம் (20 முதல் 40 மி.கி./கி.கி.)

- காலிஃபிளவர் (25 முதல் 30 மி.கி./கி.கி.)

- ப்ரோக்கோலி (30 முதல் 40 மி.கி./கி.கி).

- கடுகு (34 mg/kg).

- மாம்பழம் (30 mg/kg).




செவ்வாய், 19 ஏப்ரல், 2022

 கியூரி ஆய்வகம்,

கியூரி ஆய்வகம், இயற்பியல் மற்றும் வேதியல் இடையிலான ஒரு ஆய்வகம் போர்களுக்கு இடையில், மேரி கியூரி தலைமையிலான கியூரி ஆய்வகம் கதிரியக்கத்தின் ஆய்வில் நிபுணத்துவம் பெற்று, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆராய்ச்சி மையமாக அன்று விளங்கியது, இது இயற்பியலுக்கும் வேதியிலுக்கும் இடையிலான எல்லையில் ஒரு புதிய அறிவியலாகும். ஐரீன் மற்றும் ஃபிரடெரிக் ஜோலியட்-கியூரி 1934 இல் செயற்கை கதிரியக்கத்தை கண்டுபிடித்தனர், அடுத்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அவர்களுக்கு வழங்கப்பட்டது.


ஐந்து நோபல் பரிசுகளுடன் ஒரு குடும்பம்: Pierre Curie (1859-1906), Marie Curie-Sklodowska (1867-1934), அவர்களது மூத்த மகள் Irène Curie (1897 1956) மற்றும் அவரது கணவர் Frédéric Joliot (1900-1958) ஆகிய மூவருக்கும் ரேடியோ கதிரியக்க ஆய்விற்காக குறைந்தபட்சம் ஒரு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த இரண்டு தலைமுறை விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் பொருளின் அமைப்பு மற்றும் அணுவைப் பற்றிய மேம்பட்ட புரிதல் மற்றும் அதன் பசிபிக் பயன்பாடுகள்,(பரந்த பயன்பாடுகள்) குறிப்பாக மருத்துவத் துறையில் கதிரியக்க புற்றநோய்க்கான காரணிகள் மற்றும் போர்வீர்ர்களின் குண்டடிபட்ட இடங்களை கண்டறிய பயன்பட்டிருக்கின்றது..


மேரி க்யூரி Marie Salomea Skłodowska-Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934 புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார்.


இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903, 1911 ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு தனிமத்தை கண்டுபிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.


மேரி, பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக பாரிஸ் பல்கலைக்கழகம் நுழைந்தவர் கியூரி என்ற இளைஞனை சந்திக்க வைத்து அவரின் வாழ்க்கையை புரட்டிப்போட வைத்தது. கியூரியின், யுரோனிய தனிமத்தின் ஆய்வுகள் மேரியை ஈர்க்க இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். எந்த கதிர்வீச்சை கண்டுபிடித்தாரோ அந்த கதிர்வீச்சே அவரின் மரணத்திற்கும் காரணியாக அமைந்தது. கதிர்வீச்சு தாக்கி இரத்த புற்றுநோய் ஏற்பட்டு இறந்தார்.


ரேடியம் பற்றிய கட்டுக்கதைக்கும் உண்மைக்கும் இடையில் இயற்பியல் மற்றும் வேதியல் இடையே ரேடியம் மற்றும் அதன் பண்புகள் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பொதுமக்களை கவர்ந்தன. அவரின் கண்டுபிடிப்பு அசாதாரண மாயாஜாலமாகவும் அன்று பார்க்கப்பட்டனர். ஏதோ ஒரு கல்லை வைத்து வித்தை காட்டுகின்றார்கள் என்று நினைத்தார்கள்.


1898 ஆம் ஆண்டில் பியர் மற்றும் மேரி கியூரி ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரசாயன கதிரியக்க பொருள் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் உற்பத்தியாளர்களையும் ஊக்கப்படுத்தியது, அவர்கள் கதிரியக்கமான அழகு மற்றும் சுகாதார பொருட்களை சந்தைப்படுத்தினர் அன்று ரேடியத்தின் மீதான இந்த மோகத்திற்கு அந்தக் காலத்தின் படங்களும் பொருட்களும் ஒளிரும் கைக்கடிகாரங்களும் சாட்சியாக இன்றும் இருக்கின்றன.


மேரி கியூரி கிட்டத்தட்ட 120 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ரேடியம் இன்றும் ஆராய்ச்சி மற்றும் புற்று நோயை குணப்படுத்த உதவுகின்றது. கியூரி ஆய்வகம் கதிர்வீச்சு என்றால் என்ன அதை எப்படி அளவிடலாம் அதற்கான கெய்கர் கவுண்டர் (கதிர்வீச்சு அளவு மீட்டர்) கண்டுபிடிப்பு என்று அணு ஆராய்ச்சியின் முன்னோடியாக இன்றும் இருக்கின்றது.


மேரி, முனைவர் பட்ட ஆய்வறிக்கை எழுதுவதற்காக அவரது கணவர் கியூரி ஆய்வு செய்த யுரோனியம் கல்லை வைத்து தொடர்ந்து ஆய்வு செய்யும் போதுதான் நூறு மடங்கு கதிரியக்கத்தை வெளியேற்றும் ரேடியத்தை கண்டுபிடித்தார். இந்த கல் பின்னால் தனிம அட்டவணையில் அவரின் தாய்நாடு போலந்து நாட்டின் பெயரை தாங்கி இந்த புது தனிமங்கள் பொலோனியம்-84 மற்றும் ரேடியம்-88 என்று அறியப்படுகின்றது (யுரேனியம், பொலோனியம், ரேடியம்) *ரேடியம் என்றால் கதிர்வீச்சு என்று பொருள்படும். ரேடியம், லத்தீன் வார்த்தையான "ரேடியஸ்" = "ரே" என்பதிலிருந்து பெறப்பட்டது


மேரி கியூரி ரேடியம்  ரேடியம்-88 மற்றும் பொலோனியம்-84 : ஜூலை 1898 இல் அவர்கள் இறுதியாக கதிரியக்க தனிமமான பொலோனியத்தையும்  சில வாரங்களுக்குப் பிறகு ரேடியம் "ரேடியன்ட் எண்ட்" குறிப்பாக வலுவான கதிர்வீச்சு தனிமமாக தனிமைப்படுத்தப்பட்டது. அறிவியலுக்கு கதிரியக்கம் என்ற சொல்லையும் ரேடியம்-88 என்ற புதிய தனிமத்தையும் அறிமுகப்படுத்தினார்கள்.


ஆய்வகத்தில் செய்யப்பட்ட விஞ்ஞானப் பணிகளைத் தூண்டும் ஏராளமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன அறிவியல் கருவிகள், ஃபோ டோகிராஃப்கள், புத்தகங்கள் மற்றும் காப்பகங்களிலிருந்து ஆவணங்கள் மேரி கியூரி பயன்படுத்திய மேசை மற்றும் வேதியியல் ஆய்வகம் பாதுகாக்கப்பட்டு நிரந்தர கண்காட்சியின் மையமாக இந்த இடமுள்ளது. மேரியின் நோட்புக், ஆய்வு குறிப்பேடுகள் அவர் பயன்படுத்திய மேசை நாற்காலிகள் அறை கதவு கைப்பிடிகள் இன்றும் கூட கதிர்வீச்சினால் மாசுபட்டுள்ளது.


உலக புகழ் பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளின் நடுவில் ஒரு பெண்ணாக நின்று சாதித்திருக்கின்றார். இப்படிப்பட்ட மேதைகள் வாழ்ந்த இடங்களை ஒரு முறையாவது நேரில் சென்று பார்வையிட வேண்டும். (CurieMuseum 1 Rue Pierre et MarieCurie 75005 Paris,Frankreich) நுழைவு கட்டணம் இலவசம் திறந்திருக்கும் நேரம் மதியம் 1300 1700 மணி) *நான் இரண்டு தடவைகள் நேரில் சென்று பார்த்த ஒரு பதிவுதான் இது என்பது குறிப்பிடதக்கது.


மேரி கியூரி, சுயசரிதை புத்தகத்திலிருந்து மேரி கியூரியை பற்றிய மேலும் சில சிறப்புகள்: மேரி கியூரி (1867-1934) அவரது காலத்திற்கு ஒரு விதிவிலக்கான பெண்: ஆண்களின் ஆதிக்கம் பெண்கள் கல்வி கற்க விரும்பாத ஒரு காலம், 15 வயதில் அவர் தனது வகுப்பில் சிறந்தவராக, சிறந்த உயர்நிலைப் பள்ளி டிப்ளமோ தேர்ச்சி பெற்றார். இருப்பினும், ஒரு பெண்ணாக, அவர் தனது சொந்த ஊரான வார்சாவில் பட்டம் பெற மறுக்கப்பட்டார்,


எனவே மேரி தனது நிதி சேமிப்புக்காக, பாரிஸுக்குச் செல்லும் வரை சில ஆண்டுகளுக்கு ஒரு தனியார் ஆசிரியராக பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கு அவர் இயற்பியல் மற்றும் கணிதம் படிக்க ஆண்களின் ஆதிக்கம் செலுத்தும் சோர்போனில் சேர்ந்தார். அவர் தனது படிப்பை 1893/94 இல் கௌரவத்துடன் முடித்தார், பின்னர் ஹென்றி பெக்கரலின் உதவியாளரானார்.


அவர் பியர் கியூரியை அவரது ஆய்வகத்தில் சந்தித்து காதலித்தார் மற்றும் 1895 இல் அவரை மணந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்: ஐரீன், *1897; † 1956 (வேதியியல் நோபல் பரிசு வென்றவர் 1935) மற்றும் ஏவ், *1904; † 2007 (பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர்)


அவர் கணவர் பியர் மற்றும் ஹென்றி பெக்கரெல் ஆகியோருடன் 1903 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற வரலாற்றில் முதல் பெண்மணி ஆனார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, வேதியியலுக்கான நோபல் பரிசு சேர்க்கப்பட்டது. இன்றுவரை இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற ஒரே பெண்மணியும் இவரே! 1906 ஆம் ஆண்டில், அவர் ஒரு வண்டி விபத்தில் தனது கணவரையும் நெருங்கிய விஞ்ஞான தோழரையும் சோகமாக இழந்தார், பின்னர் சோர்போனில் அவரது விரிவுரைகளை ஏற்றுக்கொண்டார்கள்.


இந்தப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரியரானார். முதல் உலகப் போரின் போது, ​​அவர் ஒரு மொபைல் எக்ஸ்ரே இயந்திரத்தை உருவாக்கி, காயம்பட்ட வீரர்களை முன்பக்கத்தில் நேரடியாகப் பரிசோதிக்கப் பயன்படுத்தினார். எக்ஸ்ரே இயந்திரத்தை பயன்படுத்தி குண்டடி பட்ட இடங்களை கண்டறிந்து பல போர்வீர்ர்களை மரணத்தின் வாயிலிருந்து காப்பாற்றினார். பெண்களுக்கு எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் பயிற்சி அளித்தார்.


1920 களில் அவர் அமெரிக்காவிற்கு விரிவுரை சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார், மேலும் அவரது மேலதிக ஆராய்ச்சிக்கு நிதியளித்தார்கள்.


கதிரியக்கத்தின் கண்டுபிடிப்பு இன்னும் அவரது மிகப்பெரிய அறிவியல் வெற்றியாக கருதப்படுகின்றது. 1898 ஆம் ஆண்டில், இந்த தம்பதியினர் இரண்டு புதிய கதிரியக்க கூறுகளை கனிம பிட்ச்ப்ளெண்டிலிருந்து (யுரேனைனைட்) கண்டறிய முடிந்தது.


ரேடியம் மூலம், புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்தைக் கண்டுபிடித்ததை மேரி விரைவில் உணர்ந்தார். புதிய சிகிச்சைமுறையின்படி செயல்படும் நிறுவனங்கள் நிறுவப்பட்டன. “மனிதனின் துன்பங்களைத் தணிக்க முடியும் என்று நான் நம்புவதில் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவன் என்பதை எளிதாகப் பார்க்க முடிகிறது. ஆனால், கதிரியக்கப் பொருட்கள் தவறான கைகளுக்குச் சென்றால், அவை பெரும் சேதத்தை ஏற்படுத்தும்” என்ற பியரின் எச்சரிப்பு, அவள் மனதில் எப்போதும் பதிந்திருந்தது. மனித குலத்திற்கு கதிரியக்கத்தை அமைதியான முறையில் பயன்படுத்துவது குறித்த மருத்துவ, உயிரியல் மற்றும் வணிக ஆராய்ச்சியில் அவர் குறிப்பாக உறுதிபூண்டார்.


மேரி கியூரி 1602 ஆண்டுகள் அரை ஆயுள் கொண்ட ரேடியம்-226 தனிமத்தைக் கண்டுபிடித்தார். அந்த நேரத்தில் க்யூரியின் ரேடியம்-226 புற்றுநோய் எதிர்ப்பு ஆயுதமாக கருதப்பட்டாலும், வரலாற்று ரீதியாக அதன் நீண்ட அரை-வாழ்க்கையில் இருந்து பாதுகாப்பு கவலைகள் எழுந்துள்ளன. எடுத்துக்காட்டாக, மேரியின் நோட்புக் 1984 இல் மிக உயர்ந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கையின் கீழ் ஏலம் விடப்பட்டது, ஏனெனில் புத்தகம் இன்னும் மோசமாக கதிர்வீச்சினால் மாசுபட்டுள்ளது, அது படிக்க முடியாததாகக் இன்றும் கருதப்படுகின்றது.


ஆனால் அயராத ஆராய்ச்சியாளர் தனது விஞ்ஞான வெற்றிகளுக்கு அதிக விலை கொடுத்தார் என்று சொன்னால் மிகையாகாது. அவர் 1934 இல் சான்செல்மோஸில் (சவோய் / பிரான்ஸ்) ஒரு சுகாதார நிலையத்தில் இறந்தார். ரேடியம் கதிர்வீச்சுக்கு பல வருடங்களாக வெளிப்பட்டதால் ஏற்பட்ட ரத்தப் புற்றுநோயால்(லுக்கேமியா) அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம்.


ஆனால் மற்ற விஞ்ஞானிகள் கியூரியின் ஆராய்ச்சியை உருவாக்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாக ரேடியம்-223 ஐ உருவாக்கினர், அதன் அரை ஆயுள் வெறும் 11.4 நாட்கள். இன்றைய பார்வையில், புற்றுநோயைக் குணப்படுத்தவும் இது பயன்படுத்தப்படலாம். இருப்பினும் இது இன்று புற்றுநோய் மருத்துவத்திற்காக பயன்படுத்த தடை செய்யப்பட்ட ஒன்று.


அணுவாயுதம்: அணுக்குண்டை கண்டுபிடித்தவர் ராபர்ட் ஓப்பன்ஹைமர். அணுகுண்டு முதன்முதலில் அமெரிக்காவால் மன்ஹாட்டன் திட்டத்தில் உருவாக்கப்பட்டது. டிரினிட்டி என்ற திட்டத்தின் கீழ் அணு ஆயுத வெடிப்புடன் முதல் அணு ஆயுத சோதனை ஜூலை 16, 1945 அன்று, நியூ மெக்ஸிகோ பாலைவனத்தில் புளூட்டோனியம்-94(244) நிரப்பப்பட்ட முதல் அணுகுண்டு வெற்றிகரமாக வெடிக்க வைக்கப்பட்டது.


இதற்கு முன்னால்( பிளாஷ்பேக்) அணுவாயுதத்தின் தொடக்கமும் மேரிகியூரி ஆய்வகம் தான்.


ஓட்டோ ஹான் ஒரு ஜெர்மன் வேதியியலாளர் மற்றும் அணு ஆராய்ச்சி கதிரியக்க வேதியியலின் முன்னோடி, அவர் யுரேனியத்தின் பிளவு கண்டுபிடிப்பதற்காக 1944 இல் வேதியியலில் நோபல் பரிசைப் பெற்றார். அணுவை முதல்முதலில் பிளந்தவர் என்ற பெருமை இவரையே சேரும்.


1905-1921 க்கு இடையில் அவர் ஏராளமான, ஓரிடமூலகம் (ஐசோடோப்புகள்) 1909 இல் கதிரியக்க தனிமங்களை கண்டுபிடித்தவர். அடால்ஃப் ஹிட்லரின் வீழ்ச்சி அமெரிக்கப்படைகளினால் சிறைபிடிக்கப்பட்ட பல விஞ்ஞானிகளில் ஓட்டோ ஹானும் ஒருவர் இவர் ரூதர்போர்ட் மற்றும் பிரடெரிக் ஸோடியின் மாணவர்/யுரேனிய ஆய்வுகளில் பங்கெடுத்தவர்.


அணுவாயுதம் எப்படி ரஷ்யாக்கு கிடைத்தது: கிளாஸ்ஃபுக்ஸ்(1911, கிழக்கு பெர்லின்) என்ற ரஷ்ய உளவாளி ஜெர்மனியை விட்டு வெளியேறி, கிரேட் பிரிட்டனில் இயற்பியல் படிப்பை முடித்த அவர், பின்னர் அமெரிக்க-பிரிட்டிஷ் மன்ஹாட்டன் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். தனது ஆராய்ச்சிப் பணிக்கு இணையாக, சோவியத் யூனியனுக்கு சொந்தமான ஒரு அணுகுண்டை உருவாக்க உளவாளியாக உதவினார். ஆகஸ்ட் 1949 முதல் சோவியத் யூனியன் தன்னை அணுக்குண்டு தயாரிக்கும் ஒரு நாடாக அறிவித்தது.


அணுவாயுதத்தை அவ்வளவு சுலபத்தில் எல்லா நாடுகளினாலும் செய்துவிடமுடியாது, அதற்கு காரணம் யுரேனியத்தை பிரித்தெடுப்பதுதான். யுரேனியம் 235 அணுவைத்தான் பிளக்கமுடியும். இயற்கையில் 99.3 விழுக்காடுகள் யுரேனியம் 238 தான் காணப்படுகின்றது.


இதிலிருந்து U 235 பிரித்தெடுக்கவேண்டும். அணுக்குண்டு தயாரிப்பதற்கு யுரேனியம் செறிவூட்டல் அவசியமானது அதற்கு அதிவேகமாக சுழலும் மையவிலக்கு விசையாழிகள் தேவை. விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில நாடுகள்தான் இந்த விசையாழியை வைத்திருக்கின்றன.


கன உலோகம் யுரேனியம் பல்வேறு வகையான அணுக்களில் ஓரிடமூலகம் இயற்கையாகவே நிகழ்கின்றது 99.3 சதவீதம் U 238. இந்த வகை அணுக்கருவில் 92 புரோட்டான்கள் மற்றும் 146 நியூட்ரான்களைக் கொண்டுள்ளது, இது 238 அணுக்கரு கட்டுமானத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. மறுபுறம், உலோகத்தில் 0.7 சதவிகிதம் மட்டுமே நியூட்ரானை ஏவி குலைக்கக்கூடிய நிலையற்ற தன்மை உள்ள U 235 சங்கிலி எதிர்வினை கொண்டது. தொடர்ந்து படிக்க இதில் அழுத்தவும் தட்டம்மை - இந்த கலியுகத்தில் 11.04.2019 — http://mahesva.blogspot.com/2019/04/blog-post.html