சனி, 4 மார்ச், 2023

The strange faces of the corona virus.

கொரோனா வைரஸின் கோர முகங்கள்.; பொதுவில் வைரஸ்கள் வெளியில் சிவனே என்று சும்மாதான் இருக்கும் அது உடல் திசுக்களில் இறங்கி விட்டால் அதனுடைய விசுவரூபம் அதி பயங்கரமானது. எங்களால் பார்த்திருக்க முடியாத, அல்லது இதுவரை காலமும் பார்த்திராத கொரோனா வைரஸின் கொடூர முகம் இது.

அரிதான பல நோய்களை உங்களுக்கு குறுகிய காலத்தில் அறிமுகம் செய்திருக்கின்றன. IgG4 தொடர்புடைய நோய்களான கல்லீரல், பித்த நாளங்கள், இரத்த நாளங்கள், தோல், கண்கள் மற்றும் மத்திய நரம்பு மண்டலம்  கணைய பாதிப்புக்களை உடலில் இழுத்து விட்டிருக்கின்றது.

இரத்தத்தில் உள்ள ஆன்டிபாடி இம்யூனோகுளோபுலின் G4 [IgG4] இன் அதிகரித்த அளவுடன் தொடர்புடைய உடலின் ஒவ்வொரு உறுப்பு அமைப்பிலும் அழற்சி எதிர்வினைகள் ஏற்படலாம்.

IgG4-தொடர்புடைய நோய்கள் என அழைக்கப்படுபவை நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயலிழப்பை அடிப்படையாகக் கொண்டவை. இம்யூனோகுளோபுலின் G4-தொடர்புடைய நோய்கள் இது இணைப்பு திசு மற்றும் பல்வேறு உறுப்புகளின் வீக்கத்தை ஏற்படுத்தும், இதனைத் தொடர்ந்து உடல் முழுவதும் வீக்கம் பரவும்.

இந்த வீக்கம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகள் அல்லது சுற்றியுள்ள இணைப்பு திசுக்களை பாதிக்கலாம் சிறுநீரகம் , கல்லீரல், நுரையீரல், இதயம், தோல் மற்றும் இரத்த நாளங்கள் வரை கிட்டத்தட்ட எந்த உறுப்புகளிலும் ஏற்படலாம்.

பொதுவாக இந்த நோய்கள்  ஒரே இரவில் தோன்றாது, அது மெல்ல மெல்லமாக  மோசமாகிக்கொண்டே இருக்கும். நோயறிதலுக்கு பல ஆண்டுகள் ஆகும். பல சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே மீளமுடியாத உறுப்பு சேதத்தை சந்தித்திருக்கலாம்.

மற்றும் அங்கு ஃபைப்ரோஸிஸ் ஏற்படலாம், இதில் உறுப்பு படிப்படியாக அதன் குறிப்பிட்ட செயல்பாட்டை இழந்து இறுதியாக முற்றிலும் வடு இணைப்பு திசுக்களாக மாற்றப்படுகின்றது. IgG4-தொடர்புடைய அழற்சியில், இந்த ஃபைப்ரோஸ்கள் நுண்ணிய திசு அமைப்பைக் கொண்டுள்ளன.

நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் என்றால் என்ன?:  நுரையீரல் ஃபைப்ரோஸிஸில், அதிகப்படியான இணைப்பு திசு நுரையீரலில் உருவாகின்றது. இது அல்வியோலிக்கு இடையில் மற்றும் இரத்த நாளங்களைச் சுற்றிஇந்த மாற்றங்கள் நுரையீரலில் வாயு பரிமாற்றம் மற்றும் சுழற்சியை பாதிக்கின்றன.

நுரையீரல் ஃபைப்ரோஸிஸை குணப்படுத்த முடியாது, ஏனெனில் நுரையீரல் திசுக்களில் ஏற்படும் வடு மாற்றங்களை இனி மாற்ற முடியாது. அது ஏற்பட்டது ஏற்பட்டது தான் அதை குணப்படுத்தும்  மருத்துவம் இன்று வரைக்கும் இல்லை.

நுரையீரல் ஃபைப்ரோஸிஸ். புற்றுநோயை விட கொடூரமான. ​​திசு கடினமாகவும் வடுவாகவும் மாறும் . அல்வியோலியின் சுவர்களும் பாதிக்கப்படுகின்றன . இங்குதான் ஒட்சிசன் மற்றும் கார்பன் டை ஒக்சைடு பரிமாற்றம் பொதுவாக நடைபெறுகின்றது.

இந்த வாயு பரிமாற்றம் வடு நுரையீரல்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது மற்றும் இரத்தத்தில் ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்பட்டுகூடுதலாக நுரையீரல் நெகிழ்ச்சித்தன்மையை இழக்கின்றது. அதாவது நுரையீரல் சுருங்கி விரியும் தன்மையை இழந்து மரத்துப்போதல்.

கணையம் பாதிக்கப்படும் போது சர்க்கரை நோய் அறிகுறிகள் ஏற்படுகின்றன. இது மெல்ல கொல்லும் நோயாகும். IgG4 தொடர்புடைய நோய்கள் மிகவும் கடுமையான நோயாகும், இது பல சந்தர்ப்பங்களில் மரணத்திற்கு வழிவகுக்கின்றதுமறுபுறம், நோயின் முன்னேற்றத்தை குறைந்தபட்சம் மருத்துவ சிகிச்சைகள் மூலம் தாமதமாக்கலாமே தவிர குணப்படுத்த முடியாது.

நீண்டகால ஒட்சிசன்-O2 பற்றாக்குறையால் நோயாளியின் கைகளில் ஏற்படும் மாற்றங்கள் கண்ணாடி நகங்கள் மற்றும் முருங்கை விரல்களைப் பார்க்கமுடியும்.

இம்யூனோகுளோபுலின் G 4 என்பது; இம்யூனோகுளோபுலின் G [IgG4 ] இன் துணைப்பிரிவாகும் , இது இம்யூனோகுளோபுலின்களில் மிகச் சிறியது . இவை நோயெதிர்ப்பு மண்டலத்தின் பிளாஸ்மா செல்களால் உருவாகின்றன.

பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதற்கு IgG பொதுவாக பொறுப்பாக இருக்கின்றது இருப்பினும், குறிப்பாக IgG4 - மற்ற செல்களுடன் தொடர்புகொள்வதில் இது உங்கள் சொந்த உடலையும் குறிவைக்க முடியும்.

அதாவது சுய-உடல்-தாக்கி-நோய் ஏற்படுகின்றது. [ ஆட்டோ இம்யூன் நோய்கள்சுய-குணப்படுத்தும் சக்திகள் இனி கட்டுப்பாட்டில் இல்லாததினால் உடலில் வீக்கம் ஏற்படும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, உடல் முழுவதும் பல்வேறு வகையான அழற்சிகளில் IgG4 அதிகப்படியான அழுத்தத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர் . IgG4-தொடர்புடைய நோய்கள் என்ற சொல் இப்போது அதிக எண்ணிக்கையிலான நோய்களை உள்ளடக்கியது,

அவற்றில் சில அரிதானவை, அதாவது கட்டி மற்றும் [தைராய்டிடிஸ்ஸ்க்லரோசிங் வீக்கம் போன்றவை இதில் IgG4 அதிகமாக அழுத்தப்படுகின்றது.

ஆன்டி உடல்கள் - IgG-4 தனியாக  இதை மட்டுமே போக்கஸ் பண்ணியிருக்கின்றேன். அதற்கான காரணத்தை நீங்கள் தொடர்ந்து படிக்கும் போது  புரிந்து கொள்வீர்கள்

ஆன்டிபாடிகள் மற்றும் அவைகளின் முக்கிய பணிகள்:  IgG குழுமம் இம்யூனோகுளோபுலின்களின் மிகவும் பொதுவான ஆன்டிபாடிகள், முக்கியமாக நிணநீர் மற்றும் இடைநிலை திரவத்தில் காணப்படுகின்றன. இது பாக்டீரியா, வைரஸ்களுக்கு எதிரான பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றது 

இவைகளில் நாலு அதிரடி பிரிவுகள் உண்டு  [ IgG-1, IgG-4, IgG-2, IgG-3] இவைகளை நீங்கள்  அதிரடி இராணுவ பிரிவாக கற்பனை செய்து கொள்ளலாம். வைரஸ் தொற்றுக்குப் பிறகு சற்றுத் தாமதமாகத்தான் உடலில் உற்பத்தியாகின்றன மற்றும் இவைகள் நீண்ட காலத்துக்கு இரத்தத்தில் காணப்படும். குறைந்தது 3-4 மாதங்கள். இவை இரண்டாம் நிலை ஆன்டிபாடிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

அதாவது ஒரு குறிப்பிட்ட நோய்க்கிருமியுடன் முதல் முறையாக தொடர்பு கொள்ளும்போது உடல் IgM ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றது. அதே நோய்க்கிருமியுடன் மீண்டும் மீண்டும் தொற்று ஏற்பட்டால், உடல் இறுதியாக IgG ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றது. இது இரண்டாம் நிலை நோயெதிர்ப்பு பதில் அல்லது நோயெதிர்ப்பு நினைவகம் என்று அழைக்கப்படுகின்றது

புதிதாக பிறந்த குழந்தைகளால் IgG யை  உற்பத்தி செய்ய முடிவதில்லை இதன் நிமித்தம் தாயின் ஆன்டிபாடிகளை சார்ந்திருக்கின்றன. ஒரு சில போக்குவரத்து ஏற்பிகளின் உதவியுடன்  IgG ஆன்டிபாடிகள் [அமுதசுரம்] நச்சுக்கொடியையும் கடந்து வரக்கூடியது.

IgG வகையின் ஆன்டிபாடிகள் நஞ்சுக்கொடி தடையையும் கடந்து தாயின் இரத்தத்தில் இருந்து தொப்புள் கொடி வழியாக பிறக்காத குழந்தையின் இரத்த ஓட்டத்தில் செல்ல முடியும்அதிரடி ராணுவம் போல் எல்லா இடத்திலும் நுழையும் அதிகாரம் பெற்றது.

ஆன்டிபாடிகள் மிகவும் குறிப்பிட்ட வெள்ளை இரத்த அணுக்களால் உருவாகின்றன. லிம்போசைட்டுகளின் [பி லிம்போசைட்டுகள்] துணைக்குழு இவைகள் பிளாஸ்மா செல்கள் என்று அழைக்கப்படுகின்றன. IgM சுமார் 10% இம்யூனோகுளோபின்கள், அவை இரத்த ஓட்டத்தில் நுண்ணுயிரிகளுக்கு எதிராக முதல் தாக்குதலை நடத்துகின்றன.

IgD, IgE, IgA ஆன்டிபாடிகள்:   IgA, சுமார் 15% இம்யூனோகுளோபுலின்கள், முக்கியமாக சளி சவ்வுகள் மற்றும் குடல் சுவரில் காணப்படுகின்றன மற்றும் சளி சவ்வுகளைப் பாதுகாக்கின்றன.

IgA ஆன்டிபாடிகள் உடல் சுரப்புகளில் [உமிழ்நீர், கண்ணீர், செரிமான சாறுகள், நாசி சளி, நுரையீரல் சுரப்பு, தாய்ப்பால் போன்றவை ] பாக்டீரியாக்களுக்கு எதிரான பாதுகாப்பில் ஈடுபடுகின்றது. மிகவும் விரைவாக உருவாகும் அதே நேரத்தில்  பணி முடிந்ததும் விரைவாக மறைந்துவிடும்.

IgD இம்யூனோகுளோபுலின்களில் 1% க்கும் குறைவான IgD, அவை லிம்போசைட்டுகளை பாதிக்கின்றன இம்யூனோகுளோபுலின்களில் 1% க்கும் குறைவானது.

IgE ஒட்டுண்ணி புழுக்களுக்கு  பொறுப்பு இவைகளின் தவறான புரிதல்  ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு, அவை மாஸ்ட் செல்களுடன் பிணைக்கப்பட்டு நோயெதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்துகின்றன வீக்கம் மற்றும் அரிப்புக்கு காரணியானது.

இரத்தத்தில் உள்ள ஆன்டிபாடிகளின் ஒட்டுமொத்த அதிகரிப்பு  இது பெரும்பாலும்  எதிர்வினை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டவை. ஒரு குறிப்பிட்ட வகை இம்யூனோகுளோபுலின் இரத்தத்தில் அதிகரிப்பு.

இது ஒரு வீரியம் மிக்க நோயின் [ஒரு வீரியம் மிக்க லிம்போமா ] அறிகுறியாக இருக்கலாம்.   [சுய-உடல்-தாக்கி நோய்] பிறவி அல்லது பரம்பரை காரணிகளால் ஒட்டுமொத்த ஆன்டிபாடிகளில் குறைவும்  ஏற்படலாம்.

லிம்போமாக்கள் என்பது: நிணநீர் மண்டலத்தின் வீரியம் மிக்க நோய்களாகும், இதன் முக்கிய அம்சம் நிணநீர் கணுக்களின் [லிம்போமா வீக்கம்/கட்டிகள், கழளைகள்.]

மேக்ரோபேஜ்கள்: வெள்ளை இரத்த அணுக்கள் [லுகோசைட்டுகள்] மற்றும் மற்ற லுகோசைட்டுகளைப் போலவே நமது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. நோயெதிர்ப்பு மண்டலத்திற்குள், மேக்ரோபேஜ்களை உள்ளார்ந்த நோயெதிர்ப்பு மறுமொழிக்கு ஒதுக்கலாம், எடுத்துக்காட்டாக, கிரானுலோசைட்டுகளும் இதில் அடங்கும்.

இரத்த சீரமில் உள்ள அத்தனை அந்நிய ஊடுருவல்களையும் உடனடியாக விழுங்கி சுத்தம்  செய்வதே இதனுடைய பிரதான பணி அதனால்த்தான் மேக்ரோ பேஜ், விழுங்கி செல்  என்ற காரணப்பெயரில் அழைக்கப்படுகின்றது. இதிலும் நாலு வகைகள் உண்டு இதனுடைய  குறைபாடு, இரத்தத்தில் சாக்கடைகள் மிதக்கும்.

இம்யூனோகுளோபுலின்களின் கூட்டுப்பணி: உடலில் வைரஸ்களின் ஊடுருவல்  உடனடியாக விழுங்கிச் செல்கள் [மேக்ரோ பேஜ் ] அந்த இடத்துக்கு விரைந்து வருகின்றன அந்நிய ஊடுருவல்களை  உடனடியாக விழுங்கி சுத்தம் செய்கின்றது.

குறைந்த அந்நிய  ஊடுருவல்களை விழுங்கி செல்கள் தனியாக சமாளித்துக் கொள்ளும் வைரஸ்களின் பெருக்கம் அதிகமாகும் போது உதவிக்காக T-உதவிச் செல்களை அழைக்கின்றது.

விழுங்கி செல்கள் தாங்கள் விழுங்கிய வைரஸ்களின் தகவல்களை உதவிக்கு வந்த T- உதவி செல்களுக்கு தெரிவிக்கின்றன T-உதவி செல்கள் பிளாஸ்மா செல்களுக்கு கிடைத்த தகவல்களை பரிமாற்றம் செய்கின்றது பிளாஸ்மா செல்கள் பொருத்தமான ஆன்டிபடைகளை உற்பத்தி செய்கின்றது.

உருவான ஆன்டிபாடிகள் வைரஸ்களை அசைய விடாமல் சுத்தி வளைத்து பிடித்து வைத்திருக்கின்றது இப்போது விழுங்கி, ஒழுங்கு செல்கள் அந்த வைரஸ்களை சுலபமாக விழுங்கி அழிக்கின்றது.

இந்தத் தகவல்கள் நினைவக  B செல்களில் பதிவு செய்யப்படுகின்றது. இந்த தகவல் பதிவு தடுப்பூசி போட்டவர்களுக்கு பி. நினைவகச் செல்கள் பொருத்தமான ஆன்டிஉடல்களை உற்பத்தி செய்வதற்கு உதவுகின்றது.

நினைவக செல்களில் பதியப்படாத கொடூரமான வைரஸ்கள் உடலில் பெருக்கம் அடைந்து கட்டுப்பாடற்ற  நிலையை அடையும் போது அதிரடியாக T கொலயாளி செல்கள் அந்த இடத்துக்கு வரவழைக்கப்படுகின்றன.

T-கொலையாளி செல்கள் நிலைமைகளை சரி செய்வதற்காக உடற் திசுக்களில் மறைந்திருக்கும் வைரஸ்களை அழிப்பதற்காக உடலின் சொந்த திசுக்களையும் சேர்த்து அழிக்கின்றது.

T- கொலையாளி செல்  அதிரடி பிரிவில் தற்கொலைப் படை பிரிவும்  இருக்கின்றது தேவை ஏற்பட்டால் அவைகள் கூட பணியில் இறங்கி வேலை செய்கின்றது. இந்த அதிரடி நடவடிக்கையில்  பெரும் பகுதி வைரஸ்கள் மறைந்திருந்த உடலில் சொந்த திசுக்கள் அழிக்கப்படுகின்றன.

இம்யூனோகுளோபுலின்ஸ் [Immunoglobulins] Ig = y ஆன்டி உடல் இதுவொரு புரதம்இது பாரமான மற்றும் இலகுவான சங்கிலிகளினால் ஆனது அதனது பிணைப்பு தளத்தில் ஒரு மில்லியன் சாத்தியங்களை உருவாக்க கூடியது. அதாவது அந்நிய ஊடுருவல்கள் [ ஆன்டிஜென்கள்கூறுகளை பிடிக்கும் பொருத்தமான சாவிகளை உருவாக்கும் திறன் கொண்டது.

அப்ப எதற்காக தடுப்பூசி என்றால் பொருத்தமான சாவிகளை உருவாக்கும் அந்த கால இடைவெளியை தடுப்பூசிகள் சுருக்கி  கொடுக்கின்றன அவ்வளவுதான் தடுப்பூசியின் வேலை. இவைகளின் குறைபாடும் மிகைப்பாடும் ஆபத்தானவை.

IgE  உணர்திறன் மிகைப்பு - ஒவ்வாமை/அலர்ஜி.

IgG/ IgM  உணர்திறன் மிகைப்பு - திசு சேதம்  மற்றும் அழற்சிதாய்மை மற்றும் கருச்சிதைவு.

ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு  மத்தியஸ்தம் வளாகத்தில் ஏற்படும் உணர்திறன் மிகைப்பு   40க்கும் மேற்பட்ட சுய உடல் தாக்கி நோய்களுக்கு வழிவகை செய்யும்.

சுய உடல் தாக்கி நோய்கள் [ஆட்டோ இம்யூன் நோய்கள்] என்பது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயலிழப்பு என்று புரிந்து கொள்ளப்படுகின்றது, இதில் உடலின் சொந்த கட்டமைப்புகள், செல்கள் மற்றும் உறுப்புகள் தாக்கப்படுகின்றன

இது வகை 1 சர்க்கரை நோய் மற்றும் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் முதல் தடிப்புத் தோல் அழற்சி, கீல்வாதம், மூட்டு வலி , ஹாஷிமோட்டோவின் தைராய்டு டிஸ், நரம்பு மண்டல பாதிப்பு. மற்றும் முடக்கு வாதம் வரை பல்வேறு வகையான அறிகுறிகளை ஏற்படுத்துகின்றது.

மாசுபட்ட சுற்றுச்சூழல்நச்சுக்கள்மைக்ரோ பிளாஸ்டிக், கெமிக்கல்  கதிர் வீச்சு மற்றும் சில அறியப்படாத காரணிகளால்  நோய் எதிர்ப்பு மண்டலம் தன்னுடைய பொறுமையை இழந்து போனால் அதை சாந்தப்படுத்துவது கடினம்.

மேற்கோளாக:  நுரையீரல் திசுக்கள் அதிகமாக புகைத்தல் போன்ற கழிவு நச்சுக்களால் பாதிக்கப்படும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதனுடைய அதிரடி நடவடிக்கையாக தற்கொலை படை அமைப்பின் மூலம் நச்சு குண்டுகளை வீசி அந்த செல்களை அழிக்கின்றது. இதன் நிமித்தம் உடல் திசுக்கள் நச்சுத்தன்மை அடைந்து செயல் இழக்கின்றது.

மிகைப்படைந்த நோய் எதிர்ப்பு சக்தியை  மீண்டும் பழைய நிலைக்கு திருப்புவதற்கு இன்று வரைக்கும் எந்த மருத்துவமும் இல்லை என்பது வருத்தமான உண்மை.

இதற்குள்ளே அகப்பட்ட நோய்களை மருந்து மாத்திரைகளை கொண்டு தாமதப்படுத்தலாமே தவிர குணப்படுத்த முடியாது. மனித உடல் சுய அழிவு திட்டத்திற்கு உட்பட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது. புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும் http://mahesva.blogspot.com/?view=magazine



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக