சனி, 11 பிப்ரவரி, 2023

Let's leave a healthy new world to the next generation.

ஆரோக்கியமான புதியதொர் உலகத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வோம்; மனிதனுடன் இயற்கை தொடுத்த யுத்தத்தில் இயற்கை ஒரு நாள் வெல்லும். அதுவொரு கணக்கு வைத்திருக்கின்றது இவ்வளவு சுமையைத்தான் தன்னால் சுமக்க முடியுமென்று, அந்த கணக்கு வர அதுவாக நிறுத்திக் கொள்ளும்

இந்த உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை எவராலும் சொல்லிவிட முடியாது ஆனால் உனக்கான காலம் குறுகியது. அதிலிருந்து தப்பிப்பிழைப்பது உன் வலிமையை பொறுத்தது.

புதிய கொரோனா  நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தற்போது ஒப்பீட்டளவில் குறைவாகவும், அதனுடைய நோய் குறிகள் லேசானதாக இருந்தாலும் ஒரு நோயின் விளைவுகள், நீண்ட மற்றும் பிந்தைய கோவிட்   விளைவுகள் ஒருபோதும்  எங்களை விட்டு நீங்காது. கொரோனா வைரஸ்களை சாதாரணமாக நினைக்காதீர்கள் திரும்பத் திரும்ப உங்களை வந்து அது தாக்கும்.

அதற்கு எதிராக உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள ஒரே ஆயுதமாக இருப்பது கொரோனா தடுப்பூசிகள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நான் சொல்ல வந்த தலைப்புக்கு திரும்ப வருகிறேன். "பத்து முட்டை தின்றவன்  பயில்வானும் கிடையாது தயிர்சாதம் உண்டவன் நோஞ்சானும் இல்லைபலமும் பலவீனமும்  உணவை சார்ந்ததல்ல, அது மரபணுவை சார்ந்தது.

உணவு உனக்கான உரிமை அதில் யாரும் தலையிட போவதில்லை. பழுதுபட்ட பூமி உன்னிடத்தில் ஒரு வேண்டுகோளை வைக்கின்றது. இறைச்சி சாப்பிடாமல் இருப்பதன் மூலம் அல்லது குறைப்பதன்  மூலம்  நாம், எங்களுடைய பூமிக்கு  எவ்வளவு உதவ முடியும்?

இறைச்சி ஒரு நல்ல உணவு தான் இருப்பினும் இறைச்சி உற்பத்தி  காலநிலைக்கு மிகவும் தீங்கு விளைவிக்கின்றது. சைவத்திற்கான பொதுவான வாதம் அது காலநிலை பாதுகாப்பிற்கு பங்களிக்கின்றதுநம் முன்னோர்கள் சைவ உணவுகளை முதன்மைப்படுத்தியதற்கான   காரணம் அது இயற்கையை பாதுகாக்கின்றது.

இந்த எண்ணம் எங்கிருந்து வருகின்றது, அதன் பின்னால் எவ்வளவு உண்மை இருக்கின்றது?

கார்பன் டை ஒக்சைடு [CO₂]. போன்ற  கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றங்களில் பெரும்பாலானவை இறைச்சி, முட்டை மற்றும் பால் பொருட்கள் போன்ற விலங்கு பொருட்களின் தயாரிப்பால் ஏற்படுகின்றன. ஏனெனில் இவை தாவர அடிப்படையிலான உணவுகளை விட உற்பத்தியின் போது அதிக தீங்கு விளைவிக்கும் பசுமை இல்லா வாயுக்களை ஏற்படுத்துகின்றன.

இறைச்சி உற்பத்தி சுற்றுச்சூழலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இது நிரூபிக்கப்பட்ட ஒன்று. கால்நடைகள் போன்ற[ ருமினண்ட்] அசைபோடும் விலங்குகளினால்  வெளியிடப்படும் மீத்தேன் வாயு [CH₄] இது CO₂ விட வலுவான கிரீன்ஹவுஸ் விளைவைக் கொண்டுள்ளதுஎனவே இது சுற்றுச்சூழலுக்கு ஒரு பெரிய பிரச்சனையாகும்.

இறைச்சி உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய நிலங்கள் இது உலகின் 77 சதவீத விவசாய நிலங்களைக் கொண்டுள்ளது. இந்த பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு மேய்ச்சல் நிலமாகவும், மீதமுள்ள மூன்றில் விலங்குகளுக்கு தீவனம் பயிரிடவும் பயன்படுத்தப்படுகின்றது.

இந்த பகுதிகளை மக்களின் தாவர உணவு அடிப்படையிலான தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான சாகுபடி நிலங்களாக  உணவுக்கு பங்களிக்க பயன்படுத்தலாம். இதன் பொருள் இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஆடு மாடுகளை வளர்ப்பதை குறைத்து, அதை காய்கறி பழங்கள் சாகுபடி நிலங்களாக பயன்படுத்தலாம்.

இதன் நிமித்தம், கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றம் சுமார் பன்னிரெண்டு சதவீதம் குறையும். நாம் அனைவரும் சைவ உணவு உண்பவர்களாக இருந்தால், அது 30-50 சதவீதம் கூட இருக்கலாம். மேலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கைக்கு இறைச்சி சாப்பிடாமல் இருப்பதை விட இன்னும் நிறைய வழிகள் இருக்கின்றது  புவி வெப்பமடைதலை  தடுப்பதற்கு,

மேற்கோளாக: போக்குவரத்து வழிகளைக் குறைக்கவும் ஆற்றலைச் சிக்கனமாக பயன்படுத்துவது மற்றும் இறக்குமதியாகும் உணவைத் தள்ளி வைத்துவிட்டுபிராந்திய ரீதியாக சாகுபடி செய்யப்பட்ட காய்கறி பழங்களை வாங்கப்பட வேண்டும்.

இலங்கை இந்தியாவிலிருந்து காய்கறிகள் மீன் வகைகள் வருவதற்கு ஏகப்பட்ட கார்பன் டை ஒக்சைடு [CO₂] உமிழப்படுகின்றது.

சைவ உணவுகளை எடுப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்நீங்கள் எடுக்கும் சைவ உணவுகளில் நல்ல இரும்பு சத்து இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முக்கிய புரதம் மற்றும் விற்றமின் பி-12 விநியோகம் இறைச்சியை விட்டு விடுவதன் காரணமாக   இழக்கப்படுகின்றன

இறைச்சிக்கு பதிலாக பச்சை காய்கறிகள் கீரை வகைகள் மற்றும் சிறு முழு தானியங்கள்  கூடுதலாக, பால் பொருட்கள் மற்றும் முட்டைகள், சோயா, பீன்ஸ் மற்றும் பட்டாணி போன்ற பருப்பு வகைகள் மூலம் இந்த இழப்பை ஈடுசெய்யலாம். தேவைப்பட்டால் விற்றமின் மாத்திரைகள் கூட எடுத்துக்கொள்ளலாம்.

சொல்வது எளிது, கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. முயற்சித்து பாருங்கள் முயற்சி திருவினையாக்கும். 


அறிவாளிகளிடமிருந்து முட்டாள்களை வேறுபடுத்தும் 5  பழக்கவழக்கங்கள்.

1) முட்டாள்கள் தங்கள் தவறுக்கு மற்றவரை குற்றம் சாட்டுகிறார்கள்.

புத்திசாலிகள் மற்றவர்களை ஊக்குவிக்கவும் உதவவும் முயற்சி செய்கிறார்கள்.


2) முட்டாள்கள் மற்றவர்களின் தேவைகளையும் உணர்வுகளையும் புறக்கணிக்கிறார்கள்.புத்திசாலிகள் எப்போதும் தானாகவே மற்றவருடன் உடன்படுகிறார்கள்.


3) முட்டாள்கள் மற்றவர்களைவிட தாங்களே சிறந்தவர்கள் என்று நினைக்கின்றார்கள்.

புத்திசாலிகள் மற்றவரின் புதிய  தகவல்கள் கருத்துகளுக்கு தங்கள் மனதை திறக்கிறார்கள்.


4) முட்டாள்கள் தனக்குத் தெரியாத விஷயங்களில் மூக்கை நுழைக்கின்றார்கள்.

புத்திசாலிகள் தங்களுக்கு தெரிந்த விஷயங்களை மட்டுமே பேசுகின்றார்கள்.


5)  முட்டாள்கள் தங்களுடைய பாதையை மாற்றிக் கொள்வதில்லை. அறிவாளிகள் தங்களுடைய தவறான பாதைகளை திருத்திக் கொள்கின்றார்கள்.


"விழுந்துவிட்டேன் என்று கவலைப்படுவதை காட்டிலும் எப்படி எழுந்திருப்பது என்று சிந்திப்பவன் புத்திசாலி"

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine


"மேன்மைகொள் சைவம் தளுவு அது இந்த உலகை மலர்ந்திடசெய்யும்".



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக