ஞாயிறு, 13 நவம்பர், 2022

Long covid complaints

தன்னியக்க ஆன்டிபாடிகள்: [மிகைப்படைந்த நோய் எதிர்ப்பு] SARS-CoV-2 இன் கடுமையான நீண்டகால விளைவுகள் 2022ல் அதிகமாக தலை தூக்க தொடங்கி இருக்கின்றன. இதன் நிமித்தம் திரும்பவும் கோவிட் 19 பற்றி ஆய்வு செய்ய வேண்டிய ஒரு சூழலுக்குள்ளே நாம் எல்லோருமே வந்திருக்கின்றோம்.

கோவிட் 19 வைரஸ்களின் நீண்டகால விளைவுகளினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் பல புகார்கள் மருத்துவமனை செய்தியாக வந்து கொண்டிருக்கின்றது. அவர்களின் புகார்கள் தாங்கள் இனம் புரியாத ஒரு சோர்வு அடைந்திருப்பதாகவும்,

சுறுசுறுப்பை இழந்தவர்களாக காணப்படுவதாகவும் கூறுகின்றார்கள். மற்றும் சிலர் தங்களுடைய புத்திக் கூர்மை ஞாபக சத்தி இழப்பு, கண் அரிப்புனாலும் அவதிப்படுவதாக புகார்கள் சொல்லுகின்றார்கள். மருத்துவ ஆய்வுகளில் இவர்களின் இரத்தத்தில் தன்னியக்க ஆன்டிபாடிகள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது.

தன்னியக்க ஆன்டிபாடிகள் என்றால் என்ன? ஆட்டோஆன்டிபாடிகள் என்பது ஆன்டிபாடிகள் (இம்யூனோகுளோபுலின்கள்) நோயெதிர்ப்பு மண்டலத்தால் உருவாகின்றன மற்றும் உடலின் சொந்த ஆரோக்கியமான திசுக்களுக்கு எதிராக இயக்கப்படுகின்றன இதன் விளைவாக,

பல்வேறு வகையான சுய-உடல்-தாக்கி நோய்கள்  [ஆட்டோ இம்யூன் நோய்கள்] உருவாகலாம். மிகைப்படைந்த நோய் எதிர்ப்பு மண்டலம், உள்ளுறுப்புகளில் பல பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. தீராத அலர்ஜி‌, சர்க்கரை நோய் வகை1,

ஹாஷிமோடோ-தைராய்டிடிஸ், நீண்டகாலமாக வீக்கமடைந்த காரணமாக சுரப்பி இனி போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்யாது, தமனிகள்  நரம்பு மண்டல பாதிப்பு, இரத்த நாளங்கள் வீக்கமடைதல், வழக்கமான சுவாச கோளாறுகள், இரத்த நுண்சுழற்சி தடைப்படுதல்,

செரிமான தசை இறுக்கம் சிறுநீர் பாதை சுருக்கம் அதாவது மலசலம் கழிப்பதில் சிரமம் மற்றும் கர்ப்பத்தில் ஆட்டோஆன்டிபாடிகள் குழந்தையின் நடத்தை சீர்குலைவுக்கும், உடல் மற்றும் மன ஊனமுற்ற பிள்ளைகள் பிறப்பதற்கு காரணியாகும்.

தானியக்க ஆன்டி உடல்களின் வெளிப்பாடுகளுக்கு  காரணியாக இருப்பது  இன்று வரையும் புரியாத புதிராக இருக்கும் கொரோனா வைரஸும் அதனுடைய நீண்ட கால பக்க விளைவுகளும்.

கோவிட்-19, தன்னியக்க ஆன்டிபாடிகள் நீண்ட காலத்திற்கு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்: பாலோ ஆல்டோ, கலிபோர்னியா, கோவிட்-19 க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பல நோயாளிகளின் இரத்தத்தில் தன்னியக்க ஆன்டிபாடிகள் கண்டறியப்பட்டிருக்கின்றது.

இது நோயாளிகளுக்கு கோவிட் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சி குழு கவலை தெரிவித்துள்ளது. அதாவது சுய-உடல்-தாக்கி நோய்களுக்கு [ஆட்டோ இம்யூன் நோய்கள்] வழியை திறந்துவிடுகின்றது

கோவிட்-19 இன் சில அறிகுறிகளான மூட்டு வலி, முட்டி முழங்கால் தோள்பட்டைவலி [ஆர்த்ரால்ஜியா] தசைவலி, குறிப்பிட்ட அல்லது பரவலான தசைவலி [மயால்ஜியா], சோர்வு, வறண்ட கண்கள் மற்றும் தோல் வெடிப்புகள் போன்றவை சுய-உடல்-தாக்கி நோய்களின் [ஆட்டோ இம்யூன் நோய்களின்] பொதுவான அடையாளங்களாகும். 

இது இதய தசை அழற்சி [மயோகார்டிடிஸ்] கவனிக்கப்படாமல் இருந்தால் இதயத்தை சேதப்படுத்தலாம். கீல்வாதம் [ஆர்த்ரிடிஸ்] என்பது ஒரு மூட்டின் வீக்கமாகும், இதன் மூலம் உடலில் உள்ள எந்த மூட்டும் தாடையிலிருந்து கால் விரல்கள் வரை பாதிக்கப்படலாம். இது வழக்கமாக வலி, அதிக வெப்பம், சிவத்தல் மற்றும் வீக்கம் ஆகியவற்றால் கைகோர்த்து நிற்கின்றது.

முழு மூளை திசுக்களின் வீக்கம் [என்செபாலிடிஸ்] அடிக்கடி ஏற்படும் காரணிகள் வைரஸ்கள். முழு மூளை மற்றும் முதுகெலும்பையும் இது மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நாள்பட்ட அழற்சி [மல்டிபிள் ஸ்களீரோசிஸ்-MS] ஆகும்.

நரம்பு உற்சாகம் குறைவு, செயல்பாட்டு கோளாறுகள், உணர்ச்சிகள், பக்கவாதம் போன்ற நரம்புகளை பாதிக்கும் நாள்பட்ட அழற்சி [என்செபலோமைலிடிஸ் டிஸ்ப்ளெமினாட்டா] மற்றும் இரத்த நாளங்களின் வீக்கம் [வாஸ்குலிடிஸ்] அதாவது உடலில் உள்ள நரம்புகள் மற்றும் தமனிகள் வீக்கமடைந்து இரத்த சுற்று தடைப்படுதல், இது மூளை இறப்பு மாரடைப்பு வரை இட்டுச்செல்லும்.

வைரஸின் சில ஆன்டிஜென்கள் உடலின் சொந்த ஆன்டிஜென்களுடன் ஒத்திருக்கின்றது, இது ஆபத்தானது வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் உடலின் சொந்த திசுக்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பை திருப்பிவிடுவது.

வைரஸுக்கு எதிராக ஆரம்பத்தில் உருவான ஆன்டிபாடிகள் பின்னர் உடலின் சொந்த செல்களைத் தாக்கும். வைரஸ்களை எதிர்த்துப் போராடப் பயன்படுத்தப்படும் ஆன்டிபாடிகள், அதே நேரத்தில் 

ஆட்டோஆன்டிபாடிகளாக மாறுகின்றது. SARS-CoV-2 க்கு எதிராக பரந்த நோயெதிர்ப்பு எதிர்வினை கொண்ட நோயாளிகள் அடிக்கடி தன்னியக்க ஆன்டிபாடிகளை உருவாக்கினர்கள்.

இப்போது மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், நோய் முடிந்த பிறகு, தன்னியக்க ஆன்டிபாடிகள் மீண்டும் இரத்தத்தில் இருந்து மறைந்துவிடுகின்றனவா அல்லது அவை வாழ்நாள் முழுவதும் நோயாளிகளை தொடர்கின்றனவா?

பொதுவாக நோய் எதிர்ப்பு சண்டை முடிந்தவுடன் படைகள் வீடு திரும்பும் [ஆன்டிஉடல்கள் நிலையத்திற்கு திரும்பும்] கொரோனா வைரஸ் சண்டை இராணுவ ஆட்சி மாதிரி, பிடித்து வைத்து ஆட்டிப்படைக்கின்றது, எவ்வளவு காலத்திற்கு என்ற கேள்வியும் எழுகின்றது.

கொரோனா வைரஸ் எங்களை வைச்சு காமெடி பண்ணவில்லை, நல்லாவைச்சு செய்திருக்கின்றது. எதிர்காலத்தில் மனிதன் தன்னியக்க ஆன்டிபாடிகளினால் ஏற்படும் பாதிப்புக்களுக்கு மருந்துகள் தேடி அலையப்போகின்றான்.

நீண்ட கோவிட் புகார்கள்: இதுவரை அறியப்பட்ட முக்கிய காரணங்கள் இரத்த நாளங்களில் வீக்கம், தலைச்சுற்றல், களைப்பாக இருப்பது. பலவீனம், சோர்வு, தசை வீக்கம் உடல் வலி, இரத்த நுண்சுழற்சி தடைப்படுதல்

குறிப்பாக கண் விழித்திரை [ரெட்டினா] இழைமணி [மைட்டோகாண்ட்ரியம்] சிதைவு இதன் நிமித்தம் சக்தி வழங்கல் தடைப்படுதல் மூளை, இதய பாதிப்பு [ஒட்டுமொத்த வளர்சிதைமாற்றமும் முடங்கிவிடுகின்றது]

மற்றும் உங்கள் சொந்த திசுக்களைத் தாக்கும் தவறான ஆன்டிபாடிகள் சுய-உடல்-தாக்கி நோய்கள் [ஆட்டோஆன்டிபாடிகள்] முறிந்த ஆன்டிபாடிகள், கொரோனா வைரஸின் எச்சங்கள் உங்கள் இரத்த பிளாஸ்மாவில் காணப்படுவது.

ஒவ்வொரு பத்தாவது கொரோனா நோய்த்தொற்றும் நீண்ட கோவிட்க்கு வழிவகுக்கும். நீண்ட கால கோவிட் நோய்க்கான ஒரு சர்ச்சைக்குரிய சிகிச்சையாக இரத்தம் கழுவுதல் பரிந்துரைக்கப்படுகின்றது மற்றும் அற்புதமான வெற்றியுடன் குணமாக்கும் BC007 மருந்துகள் கோவிட் நோயாளிகளுக்கு சிறந்த நம்பிக்கையாக இருக்கும்.

இதற்கான செலவுகள் அதிகம், உங்கள் பணப்பைதான் காலியாகும். வசதி இல்லாதவர்கள் என்ன செய்வார்கள். நீண்ட கால கோவிட் நோய்க்கான விளைவுகளுடன் வாழ வேண்டியதுதான்.

நுரையீரல் [ஃபைப்ரோஸ்] என்பது நாள்பட்ட ஒரு நோய், நுரையீரலில் உள்ள திசுக்கள் மறுவடிவமைக்கப்படுகின்றது. இதன் நிமித்தம் திசுக்கள் சுவாச பயன்பாட்டிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகின்றது [நுரையீரல் செயல்பாட்டின் இழப்புகள் அதிகரிக்கின்றது]

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பது உங்களுக்கான சொந்த பொறுப்பாகும். அதில் யாரும் தலையிடப்போவதில்லை

அரசுகளின் தடுப்பு நடவடிக்கையினால் கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது மற்றும் மக்கள்தொகையில் அடிப்படை நோய் எதிர்ப்பு சக்தி 90 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதன் அடிப்படையில், ஜெர்மனியில் நான்கு கூட்டாட்சி மாநிலங்கள் [பேடன்-வூர்ட்டம்பேர்க், பவேரியா, ஹெஸ்ஸி மற்றும் ஷெல்ஸ்விக்-ஹோல்ஸ்டீன், ஸ்டட்கார்ட்டில் உள்ள பேடன்-வூர்ட்டம்பேர்க்] இப்போது நடப்பில் இருக்கும் தனிமைப்படுத்தல் தேவையை நீக்குகின்றன.

இருப்பினும், நோய்வாய்ப்பட்ட எவருக்கும் பரிந்துரைகளுக்கு உட்பட்டே உள்ளனர்கள். நவம்பர் 16ஆம் தேதியன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் கடமையை ரத்து செய்ய நான்கு கூட்டாட்சி மாநிலங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.

இயற்கை அறிவியலில்: சவ்வூடுபரவல் அழுத்தம்  சவ்வூடுபரவல் அழுத்தம் என்பது. வெவ்வேறு செறிவுகளைக் கொண்டிருக்கும் இரண்டு திரவங்கள் அரை ஊடுருவக்கூடிய சவ்வு மூலம் பிரிக்கப்படும் போது இடையே நிலவும் அழுத்தம் ஆகும்.

சவ்வூடுபரவல் என்பது: ஒரு பிரிக்கும் அடுக்கு வழியாக மூலக்கூறுகளின் ஓட்டம் ஆகும், இது சில பொருட்களுக்கு மட்டுமே ஊடுருவக்கூடியது. பெரும்பாலும் தண்ணீராக இருக்கும் கரைப்பான், பொதுவாக பிரிக்கும் அடுக்கு வழியாக செல்லலாம் ஆனால் அதில் கரைந்த பொருட்கள் அதன் ஊடாக செல்லாது.

இதற்கான ஒரு செய்முறை விளக்கம்: ஒரு நாற்சதுர கண்ணாடி பாத்திரத்தில் அரை-ஊடுருவக்கூடிய படலத்தால் நடுவில் பிரிக்கப்பட்ட, இரண்டு பகுதிகளிலும் சம அளவு திரவங்கள் நிரப்பப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் கரைந்த துகள்கள் கொண்ட  செறிவுள்ள கரைப்பான் [உப்பு கரைசல்] உள்ளது.

மறு பகுதியில் குறைவான செறிவுள்ள நல்ல தண்ணீரால் நிரப்பப்பட்டுள்ளது. நல்ல தண்ணீர் [குறைந்த துகள்களின்] பகுதியின் கரைப்பான் அழுத்தம் அதிலுள்ள நீர் அதிக செறிவுடன் உள்ள பக்கத்திற்கு பாய்கின்றது. இது கூடிய செறிவுள்ள கரைப்பானை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகின்றது.

இதனுடைய சாராம்சம்: செறிவு வேறுபாடுகள், குறைந்த துகள் செறிவுள்ள பக்கத்தில் சவ்வூடுபரவல் அழுத்தத்தை உருவாக்குகின்றது. இதன் விளைவாக, கரைப்பான் [நீர்] குறைந்த பக்கத்திலிருந்து அதிக துகள் செறிவின் பக்கத்திற்கு நகர்கின்றது.

குறைவான செறிவுள்ள கரைப்பான் துகள் அரை-ஊடுருவக்கூடிய படலத்தால் தடுக்கப்பட்டு நீர் மட்டும் பக்கத்திற்கு நகர்கின்றது. இது வேகமான ஒரு நீர் ஓட்டத்தை உருவாக்கின்றது. இந்த நீர் ஓட்டத்தை பயன்படுத்தி மின்சாரத்தை தயாரிக்க முடியும்

காய்ச்சி வடிகட்டிய தண்ணீர் ஆபத்தானது: அதிகமாக வெறும் தண்ணீர், மழைநீர் மற்றும் காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? இரத்த சிவப்பணுக்கள் வெடித்துவிடும்.

தாவரங்கள் பலமான செல் சுவர்களை கொண்டுள்ளதினால், அதிகளவு மழைநீரை உள்வாங்கினாலும் அதிகமாக பாதிக்கப்படுவதில்லை,

இருப்பினும் மரத்தில் காய்த்திருக்கும் பழங்கள் காய் கறிகள் அதிக மழைநீரினால் வெடித்துவிடும். இதன் காரணமாகத்தான் மழை காலத்தில் கார் டயர் வெடிப்பது. [டயர் பஞ்சர்]

மனித செல்கள் மெல்லிய செல் சவ்வுகளை கொண்டிருப்பதினால் அதிகமாக சவ்வூடு பரவல் அழுத்தத்திற்கு உட்படுகின்றது. இதில் முதலில் பாதிக்கப்படுவது இரத்த சிவப்பணுக்கள். நீண்ட நேரம் மழையில் நனைவது, அதிக நேரம் தண்ணீரில் நீச்சல் அடிப்பது, குளிப்பது, உடலில் ஈரம் உறுஞ்சி காய்ச்சல் ஏற்படும்.  

அதிக உழைப்புடன், அதிகப்படியான காய்ச்சி வடிகட்டிய நீர் உண்மையில் ஆபத்தானது, ஏனெனில் அதில் தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் எதுவும் இல்லை, இதன் நிமித்தம் இரத்தத்தை மெல்லியதாக மாற்றி,

இரத்த சிவப்பணுக்களை உப்ப வைத்து வெடிக்க வைக்கின்றது. இது தலைச்சுற்றல், குமட்டல், மூச்சுத்திணறல் என்று  உடலை எப்பவும் ஆபத்தான ஒரு தீய வட்டத்தில் வைத்திருக்கும், நாளடைவில் மரணம் வரை இட்டுச்செல்லும்.

ஐசோடோனிக் பானங்கள் என்பது :  மனித இரத்தத்தில் இருப்பது போல் அதே செறிவு தாதுக்கள் கொண்ட பானங்கள் [மினரல் வாட்டர்] வெறும் தண்ணீரைக் காட்டிலும் தாதுக்கள் நிறைந்த பானங்களை குடிப்பது மிகச்சிறந்தது. [ இளநீர், மோர், உப்பு கஞ்சி, சர்க்கரை பானம், ஆரஞ்சு ஜூஸ், மெக்னீசியம் தாதுக்கள் நிறைந்த மினரல் வாட்டர்கள்]

சவ்வூடுபரவல் மின்சாரம் என்பது : அதிக அளவு நன்னீர், அதிக அளவு உப்பு நீரைச் சந்திக்க வைக்கும் இடங்களில், சவ்வூடுபரவல் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை தயாரிப்பது.

சவ்வூடுபரவல் அழுத்தம் மூலம் மின்சாரத்தை தயாரிக்க இரண்டு நிறுவனங்கள் தங்களுடைய லட்சிய திட்டங்களை நிரூபிக்க தற்போது தொழில்நுட்ப முன்னணிக்காக போட்டியிடுகின்றன.

இரண்டு ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழுக்கள் டச்சு நிறுவனமான வெட்ஸஸ் மற்றும் நார்வேயைச் சேர்ந்த ஸ்டேட்கிராஃப்ட் நிறுவனம், இப்போது இந்த மூலக்கூறுகளின் ஓட்டத்தை லாபகரமாக பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க விரும்புகின்றன.

சவ்வூடுபரவலின் சக்தியைப் பயன்படுத்தி புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்க முடியும். உப்பும் நன்னீரும் சந்திக்கும் போது ஏற்படும் இரசாயன வேறுபாட்டில் இருந்து மின்சார உற்பத்தியை சவ்வூடுபரவல் மின்சாரம் என்று அழைக்கப்படுகின்றது. இதற்கான செய்முறை விளக்கத்தை படத்தில் பார்க்கவும்.

கைரேகை:  ஒவ்வொரு கைரேகையும் தனித்துவமானது. கைரேகை, கைநாட்டு வைக்கும் வழக்கம் இந்தியாவில் காலனித்துவ ஆட்சியில் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டது.

கைரேகை பதிக்கும் வழக்கம் படித்தவர்கள் மத்தியிலிருந்துதான் வந்தது. கையெழுத்து வைக்க தெரிந்தவர்கள் செய்த கையெழுத்து மோசடி, நம்பிக்கை இல்லாத காரணமாக கைரேகை பதிக்கும் ஒரு வழக்கத்தை அவர்கள் உருவாக்கி கொண்டார்கள்.

காலனித்துவ அதிகாரிகள், சிறைக்கைதிகள் ஒப்பந்தக்கார்கள் மேல் நம்பிக்கை யில்லாத ஒரு காரணத்தினால் கையெழுத்தும் + கைரேகையையும் எடுத்துக்கொண்டார்கள். அதற்காக கார்பன் கரி பவுடர் பயன்படுத்தப்பட்டது.

அதாவது நன்கு எழுதப் படிக்க தெரிந்தவர்கள் தான் கைரேகை வைக்கும் வழக்கம் உருவாக காரணமானார்கள். பின்னால் இடது கட்டை விரல் பதிக்கும் கைநாட்டு [கைரேகை] வைக்கும் வழக்கம் எழுதப்படிக்கத் தெரியாதவர்களின் மரபாக மாறியது.       

வில்லியம் ஹெர்ஷல் (1831-1907) இந்தியாவில் வங்காள மாகாணத்தில் பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரியாக பணியாற்றினார். ஓய்வூதியம் பெறுபவர்களாக இருந்தாலும் சரி, குற்றவாளிகளாக இருந்தாலும் சரி, அவரது முறை குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவியது.

ஜேம்ஸ் ஹெர்ஷல் 1858 ஆம் ஆண்டில் கைரேகைகள் ஒவ்வொரு நபரையும் சந்தேகத்திற்கு இடமின்றி அடையாளம் காணும் என்பதை முதலில் அங்கீகரித்தார். இருப்பினும், அவரது யோசனை பிடிப்பதற்கு சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு மேலானது.

ஒரு நபரின் கையெழுத்து பல்வேறு பகுதிகளில் கள்ளத்தனமாக இருந்தது என்ற உண்மையை கண்டுபிடிப்பதற்காக அவர் கைரேகையை பயன்படுத்தினார். ஒருபுறம், அவர் தனது மாவட்டத்தின் சிறையில் இருந்த கைதிகளின் கைரேகைகளை எடுத்துக் கொண்டார். கைதிகள் தப்பி ஓடிவிட்டால் அவர்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டால், அவர் கைரேகைகளைப் பயன்படுத்தி அவர்களை அடையாளம் காணமுடிந்தது.

மறுபுறம், ஒப்பந்த முடிவுகளின் விஷயத்தில் ஹெர்ஷல் கைரேகையைப் பயன்படுத்தினார். மாநில ஓய்வூதியத்தை செலுத்தும் போது அவர்களின் கைரேகைகள் எடுக்கப்பட்டது.

ஒருவரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டால், அவர் விரலால் ஒப்புக் கொள்ளப்பட்டது. எனவே ஓய்வூதியத்திற்கு சட்டவிரோத உரிமைகோரலை யாரும் தவறான பெயருடன் எடுக்கமுடியாது என்பதை அவர் உறுதி செய்வதற்கு கைரேகையை நம்பினார்.

ஏற்கனவே இறந்தவர்களிடமிருந்து பணத்தை எடுக்க முயலும் மூன்றாம் தரப்பினரைத் தவிர்க்க அவர் விரும்பி, கைரேகை பதிவின் மூலம் பணமோசடியையும் தவிர்த்துக்கொண்டார்.

ஒரு நபரின் கைரேகைகள் காலப்போக்கில் பிறப்பிலிருந்து இறப்பு வரை மாறாமல் இருப்பதையும் அவரால் காட்ட முடிந்தது. பின்னர் அவர் வங்காளத்தின் பிரிட்டிஷ் ஆளுநரிடம், எந்தவொரு அடையாளத் திருட்டு மற்றும் ஒப்பந்த சவால்களைத் தடுக்க சட்ட ஆவணங்களில் கைரேகைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

வில்லியம் ஹெர்ஷல் தனது தொழில்நுட்பத்தை பிரிட்டிஷ் பேரரசு முழுவதும் பயன்படுத்த முன்மொழிந்தார். அந்த நேரத்தில் அவரின் முன்மொழிவு சிறிது காலம் நிராகரிக்கப்பட்டிருந்தது.

1858 இல் தடயவியல் ஆய்வுகள், நிலப்பத்திர பதிவு போன்ற மிக முக்கியமான சட்ட ஆவணங்களில் கைரேகை[கைநாட்டு] வைக்கும் வழக்கம் கட்டாயம் ஆனது. ஐரோப்பாவில் முதல்முதலில் 28. ஜூலை 1858 இல் கைரேகை பயன்படுத்தப்பட்டது. இன்று பிங்கர் பிரிண்ட் எடுக்கும் வழக்கம் நம் எல்லோருக்கும் பொதுவானதொரு சடங்காக மாறியிருக்கின்றது.


👐கைரேகை வித்தியாசம் பெரும்பாலும் ஆள்க்காட்டி விரல் ரேகை ஒவ்வொரு தேசியத்திலும் ஆண் பெண் இருபால் மக்களுக்கு, மூன்று விதமான மாதிரி வடிவங்களில் அதற்குள்ளே எண்ணில் அடங்காத சூட்சமங்கள் உள்ளடக்கப்பட்டு அமையப்பெற்றிருக்கும், அதில் ஏதாவது ஒன்று தான் என்னுடைய / உங்களுடைய கைரேகையாக இருக்கும்.

டிஎன்ஏ போல், ஒவ்வொரு கைரேகையும்  நூறு விழுக்காடு தனித்துவமானது, இது ஆண் அல்லது பெண்ணினுடைய கைரேகை என்று உடனடியாக சொல்லி விட முடியும், ஆணின் கைரேகை பதிவுகள் சற்று பெரியதாகவும் அதிலுள்ள பாப்பில்லரி வரிகள் என்று அழைக்கப்படும் ரேகைகள் அதிகமாகவும் விரிசலடைந்தும் காணப்படும்.

உங்களுடைய சொந்த குடும்பத்திலுள்ள கைரேகை அத்துனையும் ஒரு ஒழுங்கான மரபுரிமை பெற்றிருக்கும், உதாரணத்திற்கு வீட்டுக்குள்ளே நுழைந்த திருடனின் கைரேகையுடன்  ஒப்பீடு செய்து பார்க்கையில்   திருடனின் கைரேகை  தனித்திருப்பது தெரிய வரும்.

கைரேகையின்  அடிப்படையில் ஒரு தேசிய இனத்தின் தோற்றத்தை சுட்டிக்காட்டி சொல்லி விட முடியும் ஏனென்றால், உலக மக்கள் சுழல்கள் மற்றும் சுருள்/அரை நான், வில் /வளைவு வடிவ அடிப்படை வடிவங்களாக பிரிக்கப்பட்டுள்ளார்கள்.

ஒரு கைரேகையில் அடிப்படை  புள்ளிகள் 12 💙💚💗♥♫ ♪♥
கைரேகை என்பது,  வெறுமன கருவறையில் ஏற்பட்ட சுருக்கம் மட்டும் கிடையாது மாறாக அது திட்டமிட்டு உருவாக்கப்பட்டு,   அதற்குள்ளே எண்ணற்ற தகவல்கள் பொறிக்கப்பட்ட பரம்பரை வடுக்கள்.

💜சுழல்கள் பெரும்பாலான ஐரோப்பியர்கள் மத்தியில் இந்த சுழல் மாதிரியை காணமுடியும். இத்தகைய மக்களின் குணாம்சத்தின் அடிப்படையில் பார்வையிடுகையில் ஒரு அமைதியான, சமச்சீர் தன்மை பேசுகின்றவர்களாகவும், திறந்த மனப்பான்மை உடையவர்களாகவும் எளிதில் மற்றவர்களுக்கு உதவக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

💚வில் வடிவம் பெரும்பாலான கலப்பின மக்கள் மத்தியில் இந்த சுருள் மாதிரியை காணமுடியும். ஒரு முறை ஒரு முடிவை எடுத்து விட்டால் அதை இறுதி வரைக்கும் எடுத்துச் செல்லும் மனப்பாங்குள்ளவர்கள், மற்றும் புத்திக் கூர்மை தன்நம்பிக்கை, முடிவுகளை மாற்றி அமைக்கும் தன்மை, தனக்கு சரி என பட்ட ஒரு விடையத்தை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுப்பது மேலும் கடினமான தருணங்களில் எதையாவது  செய்து சமாளிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.

💛சுருள் வடிவம் பெரும்பாலான ஆசியா மக்கள் மத்தியில் இந்த சுருள் மாதிரியை காணமுடியும். அறிவு ஆற்றல், இசை கலை மொழி வேளாண்மை என பல பழைமையான விடையங்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள் மற்றும் நீதித்துறை, விஞ்ஞான நடவடிக்கைகளில் நல்ல நிருவாகத் திறமை இருக்கும் மேலும்  நல்ல சிந்தனையாளர் ஆவார்.

முன்னத்தே சொல்லப்பட்ட தகவல்கள் அத்துனையும்  பொது விதிக்கு உட்பட்டு எழுதப்பட்டதே தவிர இந்த கைரேகை உள்ளவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் அல்லது இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை, இவர்களின் குணாம்சம் , தனித்தன்மைகள் மாறுபட்டுக் கூட காணப்படலாம் என்பது குறிப்பிட தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக