திங்கள், 7 நவம்பர், 2022

What is cold plasma?

காந்தவியல் பிளாஸ்மா இயற்பியல்: வெகுவிரைவில் புதைபடிவ ஆற்றலுக்கு முற்றுமுழுதாக முற்றுப்புள்ளி வைக்கப்படும், அதாவது பெட்ரோல், டீசல் கெரோசின்[மண்ணெண்ணெய்] நிலக்கரி பாவனைக்கு முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இதுவரை காலமும் வாழ்ந்த அழுக்கான ஒரு சமூக வாழ்க்கையை ஓரம் கட்டிவிட்டு, சுத்தமான ஒரு புதிய காலத்தை நோக்கி எங்களுடைய பயணம் தொடங்கியிருக்கின்றது.

உலகின் எரிசக்தித் தேவைகளில் தொண்ணூறு சதவீதத்திற்கும் அதிகமானவை புதைபடிவ ஆற்றல் மூலங்களால் நிரப்பப்படுகின்றன. 

இருப்பினும், நீண்ட காலத்திற்கு இந்த எரிபொருள்களின் பாவனை காலநிலை மாற்றம் புவி மாசுபடுதல் மற்றும் வெப்பமடைதலினால் மட்டுப்படுத்தப்பட்ட விநியோகம் மற்றும் அரசியலின் உறுதியற்ற தன்மை ஆகியவற்றிற்கு பதிலளிக்கும் விதமாகவும்,

நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு பாவனையிலிருந்து விடுதலை பெறுவதற்கு அல்லது மட்டுப்படுத்தப்பட்ட பாவனைக்கு, மாற்றீடாக எங்களுக்கு புதிய ஆற்றல் அமைப்பு ஒன்று தேவைப்படுகின்றது. 

நிலக்கரி பாவனையைக் காட்டிலும் அணுக்கரு பிளவு[அணுவுலை மின்சாரம்] CO2 உமிழ்தல் இல்லாத சுத்தமான ஒரு மின்சார விநியோகம் தான் இருப்பினும் காலத்தால் அழியாத ஆபத்தான அணுவுலை கதிரியக்க கழிவுகளை உற்பத்தி செய்கின்றது. அதை எங்கு குழி தோண்டி புதைப்பது,

அணுவுலை கழிவுகளை நிரந்தரமாக புதைப்பதற்கு ஒரு இடத்தை தேடிக் கொண்டிருக்கின்றன அரசுகள்.

இந்த இரண்டிற்கும் மாற்றீடாக அணு இணைவு மட்டுமே வேற்று வழி மின்சாரத்தை வழங்க முடியும்.  விஞ்ஞானிகள் 1950 களிலிருந்து அணுக்கரு இணைவை முயற்சித்து வருகின்றனர்.

ஜெர்மனி Max Planck Institute for Plasma Physics (IPP) 19 ஆண்டுகளாக Wendelstein 7-X என்ற சோனரஸ் பெயருடன் இணைவு உலையில் வேலை செய்து வருகின்றது.

Wendelstein 7-X என்பது ஸ்டெல்லரேட்டர் வகையின் உலகின் மிகப்பெரிய இணைவு சாதனமாகும். இந்த வகை கட்டுமானத்தின் மின்நிலைய பொருத்தத்தை ஆராய்வதற்காக, இது 50 சிறப்பு வடிவ, சூப்பர் கண்டக்டிங் காந்த சுருள்களின் அமைப்பால் உருவாக்கப்பட்டு,

பிளாஸ்மா ஜோதியை கட்டுப்படுத்துவதற்கான உகந்த காந்தப்புலம் இங்கு சோதிக்கப்படுகின்றது.இந்த தொழில்நுட்பம் டோகாமா இணைவு உலையின் இதயமாக பார்க்கப்படுகின்றது.

பிளாஸ்மா ஜோதியை சமநிலை மற்றும் ஒழுங்கான ஓடுபாதையில் ஓடவைப்பதற்கும், டோகாமாக் பிளாஸ்மாவில் பாயும் மின்னோட்டத்தின் தீமைகள் தவிர்க்கப்படுவதற்கு இந்த தொழில்நுட்பம் அவசியமானது.

எதற்காக காந்தப்புலம் அவசியம் என்றால் சூரியனின் வெப்பத்தை  விட பல மடங்கு வெப்பநிலை கொண்ட பிளாஸ்மா ஜோதியை சமநிலைபடுத்துவதற்கு, இல்லாது போனால் டோகாமாக் தொழில்நுட்பத்தின் உதிரிப்பாகங்கள் எல்லாம் பிளாஸ்மா ஜோதிக்கு இரையாகிவிடும்.

தொழில்நுட்ப ரீதியாக அணுக்கருக்கள் இணைவதற்கு 100 மில்லியன் டிகிரி வெப்பநிலை அவசியம். அணுஉலையின் வெளிப்புறச் சுவர்கள் வாயுவை உடனடியாக குளிர்விக்கும் என்பதால், விஞ்ஞானிகள் அதை டோனட் போன்ற வளைய வடிவ அணுஉலையில் புழக்கத்தில் விட முயற்சிக்கின்றனர்.

இதையொட்டி மைனஸ் 270 டிகிரி செல்சியஸ் வரை குளிரூட்டப்பட வேண்டிய காந்தங்கள் தேவைப்படுகின்றன.

சூரியனின் சக்தி  : சூரியனின் மேற்பரப்பில் சுமார் 6,000 டிகிரி செல்சியஸ், மற்றும் அதன் உட்புறம் 15 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்டது.

எளிமையாகச் சொன்னால், ஒரு இணைவு உலை சூரியனின் உட்புறத்தைப் பிரதிபலிக்கின்றது. ஹைட்ரஜன் அணுக்கள் அவற்றின் தனித்தனி கூறுகளாக பிரிக்கப்படும் நிலைமைகள் அங்கு நிலவுகின்றன, அணுக்கருக்கள் மற்றும் எலக்ட்ரான்கள். இந்த நிலையை பிளாஸ்மா என்று அழைக்கப்படுகின்றது.

அணுக்கரு உருகி அதிக அளவு ஆற்றலை வெளியிடுகின்றது. ஆனால் இந்த நிகழ்தகவு மிக அதிகமாக இல்லை. கடந்த 4.5 பில்லியன் ஆண்டுகளில் சூரியனின் ஹைட்ரஜனில் 6% மட்டுமே அணுக்கரு இணைவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் எவ்வளவு பில்லியன் ஆண்டுகள் இருக்கின்றது எங்களுடைய சூரியன் அதனது பணியிலிருந்து ஓய்ந்து போவதற்கு. இது போன்ற ஒரு செயற்கை இணைவு உலை ஒன்றை உருவாக்கினால் எவ்வளவு நன்மை தரும்.

இணைவு மின்நிலையம்:  இணைவு மின் நிலையத்தில் 4-ஹீலியம் a = 2புரோட்டான் + 2நியூட்ரான் = 4,0318u சுமார் 40K  மில்லியன்(406) [40,000,000] கெல்வின் வெப்பம் கிடைக்கும். இந்த வெப்பத்தை நீராவி விசையாழியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.  

1950 களில் இருந்து இந்த ஆற்றலைப் பெற ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். ஒரு கிராம் அணு இணைவு எரிபொருள் 11 டன் நிலக்கரியை வெளியிடும் சக்தியை வெளியிடுகின்றது.

சுமார் 1000 மெகாவாட் மின் உற்பத்தியை ஒரு இணைவு மின் நிலையம் மூலம் உற்பத்தி செய்யமுடியும். அடிப்படை பொருட்கள், ஹைட்ரஜனின் மாற்றங்கள்[ஓரிடமூலகம்- 1H (புரோட்டியம்), 2H (டியூட்டீரியம்) மற்றும் 3H (ட்ரிடியம்) ]  மற்றும் லித்தியம்(Li)3 கிட்டத்தட்ட விவரிக்க முடியாத அளவுகளில் எங்களுடைய பூமியில் கிடைக்கின்றது[கடல்நீரில் தேவையான அளவு கொட்டிக்கிடக்கின்றது]

பிளாஸ்மா ஜோதி: [2H (டியூட்டீரியம்+ 3H (ட்ரிடியம்) ] இணைவு —> (He)4 ஹீலியம்+ நியூட்ரான் —-> லித்தியம்(Li)3 இணைவு பிளாஸ்மா ஜோதி [(He)4 ஹீலியம்] விளைபொருள் 3H (ட்ரிடியம்)  இது திரும்பவும் எரிபொருளாக மறுசுழற்சி செய்யப்படுகின்றது.

கிட்டத்தட்ட சூரியனின் சுழற்ச்சி போல், இருப்பினும் சூரியனுக்கு எரிபொருள் நிரப்பவேண்டிய தேவையில்லை எங்களுடைய செயற்கை சூரியன் டோகாமாக் பிளாஸ்மா தொழில்நுட்பத்திற்கு அடிக்கடி எரிபொருள்  நிரப்புதல் மற்றும் வெப்பமூட்டுதலும் தேவைப்படுகின்றது,

இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பாதிக்குமேல் டோகாமாக் தொழில்நுட்பத்திற்கே தேவைப்படுவதினால், இதில் தொடர்ந்து கவனம் செலுத்துவது பற்றி விஞ்ஞானிகளை யோசிக்க வைக்கின்றது.

செயற்கை பிளாஸ்மா : பிளாஸ்மா ஜோதி மந்திரமானது இந்த பிரபஞ்சத்தில், காணக்கூடிய பொருட்களில் 99 விழுக்காடுகள் பிளாஸ்மா ஜோதியினால் நிரப்பப்பட்டது. பூமியில் தோன்றும் மின்னல் முதற்கொண்டு எங்களுடைய சூரியன் நாங்கள் பார்க்கும் நட்சத்திரம் வரைக்கும் அத்துனையும் பிளாஸ்மா ஜோதியில் ஒளிர்கின்றது.

எங்களுடைய பூமி பஞ்சபூதங்களினால் ஆனது இதில் நெருப்பின் உன்னதமான ஒரு நிலைதான் பிளாஸ்மா. நெருப்பு ஒரு தனிமம் கிடையாது அது பல தனிமங்களினாலான ஒரு கூட்டுமுயற்சி.

ஒரு எரிபொருள் திட->திரவ->வாயு என்ற மூன்று திரட்டும் நிலை கொண்டது. ஒரு திடப்பொருளை வெப்பம் ஏற்றினால் அது திரவ நிலையை அடைகின்றது, திரவ நிலை அடைந்ததை மீண்டும் சூடு ஏற்றினால் அது வாயுவாக வடிவம் எடுக்கின்றது. இந்த வாயுவை மேலும் சூடு ஏற்றினால் அது பிளாஸ்மா ஜோதியாக ஒளிர்கின்றது.

வாயுக்கள் அதனது துகள்கள் மற்றும் எலக்ட்ரான்(-) புரோட்டான்(+) பிளாஸ்மாவில் வழங்கப்பட்டதினால் பிளாஸ்மா ஒரு கலவை அதில் வாயுவின் துகள்கள் மற்றும் எதிர் மின்னணு சார்ஜ் செய்யப்பட்ட எலக்ட்ரான், புரோட்டான் போன்றவையால் ஆனது.

எவ்வளவு பெரிய பிளாஸ்மா ஜோதியாக இருந்தாலும் அது காந்த புலன்களுக்கு கட்டுப்படுவது அதனுடைய ஒரு சிறப்பம்சம். இதை வைத்துக்கொண்டு கட்டமைக்கப்பட்டதுதான் டோகாமாக் பிளாஸ்மா  தொழில்நுட்பம்.

செயற்கை பிளாஸ்மாவை உருவாக்குவதற்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகின்றது. இந்த ஆற்றல்கள் மாறுபட்ட மூலங்களிலிருந்து நிரப்பப்படுகின்றது குறிப்பாக உயர் மின்னழுத்தம், கதிர்வீச்சு மற்றும் வெப்ப ஆற்றல்கள்

செயற்கை பிளாஸ்மா, கிட்டத்தட்ட, டியூப் லைட் மாதிரி வாயுக்களினால் நிறப்பப்பட்ட ஒரு குழாயில் இருமுனையிலும் மின்சாரத்தை செலுத்தி எரியவைப்பது.

பிளாஸ்மாக்களை வெவ்வேறு வழிகளில் வகைப்படுத்தலாம். பிரதான குழுக்களான குளிர் பிளாஸ்மா மற்றும் சூடான பிளாஸ்மா.

பிளாஸ்மாவில் உள்ள அழுத்தத்தின் படி, உயர் அழுத்த பிளாஸ்மாக்கள் மற்றும் குறைந்த அழுத்த பிளாஸ்மாக்கள், சாதாரண வளிமண்டல அழுத்த பிளாஸ்மாக்கள் எலக்ட்ரான்களின் செறிவைப் பொறுத்து, மெல்லிய பிளாஸ்மாக்கள் மற்றும் அடர்த்தியான பிளாஸ்மாக்கள் என வகைப்படுத்தலாம்.

குளிர் பிளாஸ்மா என்றால் என்ன?: குளிர் பிளாஸ்மா என்பது அயனியாக்கம் செய்யப்பட்ட மூலக்கூறுகள், எலக்ட்ரான்கள் மற்றும் குறைந்த ஆற்றல் கொண்ட தூசித் துகள்களாலான வாயு ஆகும். குளிர் பிளாஸ்மாக்கள் பல வழிகளில் நம்முடைய வாழ்வில் அனுகூலமான   பாவனைக்கு உபயோகப்படுத்தப்படுகின்றது.

குளிர் பிளாஸ்மா ஒரு அதிசயப்பொருள், இது பல நன்மை பயக்கும் பண்புகளை கொண்டது, இன்றைய மருத்துவத்தில் இன்றியமையாத ஒன்றாக இதுவும் பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக காயங்களை குணப்படுத்துவதை இது மேம்படுத்துகின்றன, அயனியாக்கம் செய்யப்பட்ட வாயுக்கள் நாள்பட்ட புண்களை விரைவாக மூடுகின்றது. இதன் மூலம் நீண்டகாலமாக ஆறாத சர்க்கரைநோய் புண்களை ஆற்றமுடியும்.

ஆறாத தோல் நோய்கள், சொறி அழற்சி மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்களான மைக்கோபாக்டீரியம் லீப்பரா[மேக நோய்] மற்றும் சிபிலிஸ் நோய் [தொழுநோய்] சிபிலிஸ் என்பது ட்ரெபோனேமா பாலிடம் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு நோய். இந்த நோய்களை குளிர் பிளாஸ்மா சிகிச்சை மூலம் முற்றிலுமாக குணப்படுத்திக் கொள்ளமுடியும்.

இதற்கான குளிர் பிளாஸ்மா சாதனங்கள் மருத்துவ சந்தையில் கிடைக்கின்றது. வசதி இல்லாதவர்களுக்கு இலவசமாக வெட்ட வெளியில், அல்லது வயல் வெளிகளில், இரவு நேரத்தில் நிலா வெளிச்சத்தில் குளிர் பிளாஸ்மாவை பெற்றுக்கொள்ள முடியும்.

பரந்த வெளியில் உலாவித் திரிந்த மனிதனை  வீடுகளிலும் கட்டிடக் கூரையின் கீழ் படுக்கவிட்டால் அவனை நோய்கள் தீவிரப் படுத்துகின்றன.

மேலும் கருத்தடை சிகிச்சை மற்றும் இன்று பெரும் ஆபத்தாக மாறியுள்ள மருத்துவமனைகளில் மல்டி-ரெசிஸ்டண்ட் கிருமிகள் [MRSA] தொற்று நோய்க்கான இந்த பயங்கரமான பாக்டீரியாவை 30 வினாடிகளுக்குள்ளே குளிர் பிளாஸ்மா அயனியாக்கம் செய்யப்பட்ட வாயுவால் கொல்லலாம். 

ஆரோக்கியமான செல்களைத் தாக்காமல் அனைத்து வகையான கிருமிகள் மற்றும் நோய்க்கிருமிகளுக்கு எதிராக குளிர் பிளாஸ்மா பயனுள்ளதாக இருக்கின்றது. குறிப்பாக இது மின்புலத்தால் நுண்சுழற்சியை அதிகரிக்க செய்கின்றது.

இதன் நிமித்தம், செல்கள் மற்றும் திசுக்களுக்கு அதிக ஒட்சிசன், விற்றமின்கள், தாதுக்கள், என்சைம்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை உடல் திசுக்களுக்கு தாராளமாக வழங்குவதற்கு உதவுகின்றது.

பிரபஞ்சத்தில் எல்லா நட்ச்சத்திரங்களும் எங்களுடைய சூரியனைப்போல் வெப்ப பிளாஸ்மாவாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம், அதில் குளிர் பிளாஸ்மா நட்ச்சத்திரங்கள் கூட இருக்கலாம் ஏனென்றால் முழு பிரபஞ்சமும் குளிர் பிளாஸ்மாவினால் நிறைந்தது.

பூமியில் பாக்டீரியா, காளான், பூஞ்சைகளின் மிகைப்படைந்த பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் மற்றும் தாவர வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், பரப்பிரமவாசிகள்(ஏலியன்கள்) மற்றும் மனிதர்களின் விண்கலங்களை இயக்குவதற்கும் குளிர் பிளாஸ்மா இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது.

பூமியின் காந்தப்புலத்தின் புலக் கோடுகள் இயங்கும் துருவப் பகுதிகளில் குறிப்பாக ஸ்காண்டிநேவிய நாடுகளான நார்வே மற்றும் ஸ்வீடன் மற்றும் வடமேற்கு பின்லாந்து நாடுகளில் சூரிய புயலினால் ஏற்படும் துருவ ஒளி [polar light] இது சூரியனின் மின்சாரம் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள்

அதாவது குளிர் பிளாஸ்மா ஜோதி, அதை உடலில் உள்வாங்கினால் உங்களை பீடித்த புற்றுநோய்கள் உட்பட அத்துனை நோய்களுக்குமான ஒரு அருமருந்து. இதன் மூலம் பரப்பிரம இயற்கை விலங்குகளுக்கு ஏற்பட்ட காயங்களை குணப்படுத்துகின்றது. கடவுளின் தடயங்களை தேடி…

சூடான பிளாஸ்மா என்றால் என்ன?: எங்களுடைய சூரியப் பொருள் அல்லது இணைவு உலையில் உள்ள பிளாஸ்மா போன்ற சூடான பிளாஸ்மாக்கள் முற்றிலும் அயனியாக்கம் செய்யப்படுகின்றன.

எரிவாயு குழாய்கள் அல்லது பிற தொழில்நுட்ப பயன்பாடுகளில் உள்ள பிளாஸ்மா, பொதுவாக ஒரு சில சதவீத அயனியாக்கம் அளவைக் கொண்டுள்ளது. வெல்டிங் மற்றும் பிளாஸ்மா கட்டர் இதன் மூலம் எஃகு, தாமிரம், அலுமினியம் போன்ற உலோகங்களை ஒட்ட, வெட்ட முடியும்.

டோகாமாக் பிளாஸ்மா  தொழில்நுட்பம் நீண்ட காலத்திற்கு பரீட்சார்த்தமாக இயங்கும் 2025-2030 ஆண்டுகளில் அதனது  முதல் மின் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மனிதனின் இந்த புதிய முயற்சியை, நிலவில் மனிதன் முதன்முதலில் கால் பதித்த போது உலகமே கொண்டாடினது போல், இதையும் வெகு சிறப்பாக உலகம் கொண்டாடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த தொழில்நுட்பம் வெற்றியளிக்குமாயின், அடுத்த தலைமுறையினர்கள் சுத்தமான காற்றை சுவாசிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை, புவி மாசுபடுதல்/வெப்பமடைதல் என்று யாரும் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

இன்று புழக்கத்திலிருக்கும் வாகனங்கள் பாவனையிலிருந்து ஒதிக்கி வைக்கப்பட்டு, பேட்டரியில் இயங்கும் [E-கார்] மின்சார வாகனங்கள் மட்டுமே தெருக்களில் ஓட அனுமதிக்கப்படும்.

இது ஐரோப்பாவில் மட்டுமின்றி உலகம் பூராகவும் அமல்படுத்தப்படும். அதற்காக இன்றிலிருந்தே உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

எதிர்வரும் காலத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் ஓட்டுவதை தவிருங்கள் அல்லது மட்டுப்படுத்துங்கள் இல்லாது போனால் உங்கள் வாகனங்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களினால் இடைமறித்து விமர்சிக்கப்படலாம்.   

இன்றுள்ள டாப் 10 எலக்ட்ரிக் கார்களில் நீண்ட தூரம் பயணம் சுமார்-Ø 523-750 கிலோமீட்டர் வரம்பை அடையக்கூடிய மிகச்சிறந்த கார்கள் இன்று விற்பனையில் உள்ளது.

இலங்கையின் பரப்பளவு வடக்கு- தெற்காக 445 கிலோமீட்டர்கள் மற்றும் கிழக்கு மேற்காக 225 கிலோமீட்டர்கள் சுற்றளவு கொண்ட ஒரு தீவு. சுமார் ஒரு சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி 700கிலோமீட்டர் பயணிக்கும் வாகனங்களை தாராளமாக பயன்படுத்தலாம்.

இலங்கைத்தீவில் எவ்வளவு தீவுகள் பிரயோஐனமின்றி கிடக்கின்றது மின்சார தேவைக்கு காற்றலை சக்தி மற்றும் சோலார் தகடுகளை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.

மின்சார வாகனங்களின் வருகை கச்சா எண்ணைய் விற்பனை நாடுகளின் வருமானத்தில் இடி விழும், தன்னலக்குழுக்களின் சொகுசு வாழ்க்கை ஆட்டங்காண தொடங்கும் இருப்பினும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் எல்லோருமே இருக்கின்றோம்.

ஹைட்ரஜன் பெராக்சைடு [H2O2]என்பது ஹைட்ரஜன் மற்றும் ஒட்சிசனின் திரவ கலவை ஆகும். இது அற்புதமான ஒரு கிருமிநாசினி.

ஹைட்ரஜன் பெராக்சைடு, ஹைட்ரஜன் [H₂]மற்றும் ஒட்சிசனின்[O₂] நச்சுத்தன்மையற்ற கலவை ஆகும் .இது 1818 இல் பிரெஞ்சு வேதியியலாளர் லூயிஸ் ஜாக் தேனார்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது காற்றிலும் மழைநீரிலும் குறைந்த செறிவுகளில் உள்ளது. வளர்சிதை மாற்ற செயல்முறைகளின் போது நம் உடலில் ஹைட்ரஜன் பெராக்சைடு உற்பத்தி செய்யப்படுகின்றது.

பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுவதில் இது முக்கிய பங்கு வகிக்கின்றது .H ₂ O ₂ ஒரு மணமற்ற திரவமாகும். நீர்த்த நீலம், நீர்த்த அது நிறமற்றதாக மாறும். சுவை சற்று கசப்பாக இருக்கும். 3 % கரைசலின் pH 6 ஆகும், இது ஒரு லேசான அமிலமாகும் . தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பாதிப்பில்லாத - 3% தீர்வை பரிந்துரைக்கிறோம்.

ஹைட்ரஜன் பெராக்சைடு செயற்கையாகவும் தயாரிக்கலாம். இந்த கலவை இயற்கையில் மழைநீர் மற்றும் பனியில் காணப்படுகின்றது, ஏனெனில் இது வளிமண்டல ஓசோனில்[O3] காற்றில் இருந்து உருவாகின்றது.

இந்த கலவை உடலிலும் இயல்பாக நோய் மண்டல, வெள்ளை இரத்த அணுக்களினாலும் உருவாக்கப்படுகின்றது. இதை இரசாயன ஆயுதமாக, தொற்று நோய்களுக்கு எதிராக உடல் பயன்படுத்துகின்றது.

நீண்டகாலமாக ஒருவர் தொற்றுநோய்களினால் பீடிக்கப்பட்டிருந்தால், சீக்கிரமாகவே அவரின் தலைமுடி நரைத்துப் போவதற்கு காரணம் ஹைட்ரஜன் பெராக்சைடு அதிகளவில் இரத்தத்தில் கலந்திருப்பதுதான்.

இது மெலனின் என்ற தோல் நிறமியை தடுத்து முடியை வெண்மையாக்கின்றது [இளநரை காரணி]     ஹைட்ரஜன் பெராக்சைட்டின் பல சாத்தியமான பயன்பாடுகள் அணு ஒட்சிசனை[O]வழங்குவதை அடிப்படையாகக் கொண்டவை

ஹைட்ரஜன் பெராக்சைடு மிகச்சிறந்த கிருமிநாசினி. பாக்டீரியா எதிர்ப்பு, ஒக்ஸிஜனேற்றம், ப்ளீச்சிங் விளைவு[தலைமுடியை வெண்மையாக்கும்] இதுவொரு நிறம் மாற்றி, பளுப்பு நிற பல், நகங்களை ஒளிரச் செய்கின்றது மற்றும் வாய்த்துர்நாற்றத்தை நீக்கும் விளைவைக் கொண்டுள்ளது.

ஹைட்ரஜன் பெராக்சைடு வழக்கமான பயன்பாட்டின் மூலம் உங்கள் பற்களை வெண்மையாக்குகின்றது. எச்சரிக்கை இந்த திரவத்தை  அதிகமாக விழுங்க வேண்டாம்!

கால்களில் பரவும் ஆணி பூஞ்சைக்கு எதிராக ஹைட்ரஜன் பெராக்சைடு, தொற்று பரவுவதை நிறுத்த உதவுகின்றது. இதுவொரு தொற்றுநீக்கி விளைவை கொண்டதினால் காயங்கள், நாள்பட்ட புண்கள், சர்க்கரை நோய் புண்கள், பல் சொத்தை, பல் ஈறுகளில் இரத்த கசிவு ஆறுவதை மேன்படுத்துகின்றது.

சைனஸ் நோய்த்தொற்றுகளுக்கும் மற்றும் கடுமையான மூக்கு ஒழுகுதலை குணப்படுத்துவதற்கு நீங்கள் 10 பங்கு தண்ணீர் மற்றும் 1 பகுதி ஹைட்ரஜன் பெராக்சைடு மூலம் கிருமிநாசினி நாசி ஸ்ப்ரேயை தயார் செய்து,

இந்த கரைசலை நாசித்துவாரங்களை கழுவுதலுக்கு பயன்படுத்தலாம். இது உங்கள் சைனஸ்களை சுத்தம் செய்து, வெளியான சளியை வெளியேற்ற அனுமதிக்கும். வழக்கமான மவுத்வாஷ் தீர்வுகளுக்கு மாற்றாக இந்த கலவையை தினமும் பயன்படுத்தலாம்.

சளி புண்களுக்கு பருத்தி துணியை ஹைட்ரஜன் பெராக்சைடுடன் ஈரப்படுத்தி, குளிர்ந்த புண் மீது தேய்க்கவும். இது அவற்றை உலர்த்தும் மற்றும் அரிப்புகளை நீக்கும் இதன் மூலம் குணப்படுத்தும் செயல்முறை துரிதப்படுத்தப்படுகின்றது.

ஹைட்ரஜன் பெராக்சைட்டு, தொற்று நீக்கி மட்டுமல்ல அது தோலை அரிக்கும் தன்மையும் கொண்டது எனவே இது அனைத்து வகையான காயங்களுக்கும் நீண்டகால பாவனைக்கும் ஏற்றதல்ல. எனவே, மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கலந்தாலோசித்த பின்னரே ஹைட்ரஜன் பெராக்சைடைப் பயன்படுத்தவும்.

இறுதியாக, ஹைட்ரஜன் பெராக்சைட்டு, மாறுபட்ட வீட்டு பயன்பாட்டிற்கு உகந்தது மேற்கோளாக: உங்கள் வெள்ளை சட்டையில் கறைபடிந்திருந்தால் அதை நீக்கும். பொதுவாக ஆடைகளை துவைக்கும் போது, குறிப்பாக சிறுவர்கள், நோயாளிகளின் ஆடைகளை துவைக்கும் போது தொற்றுநீக்கியாக இந்த திரவத்தை பயன்படுத்தலாம்.

மற்றும் வீட்டில் மீன் வளர்க்கும் தொட்டியில் தாவரங்கள் கண்ணாடியில் பாசி மற்றும் பிற அழுக்குகள் படிந்திருந்தால், அதை நீக்கி தண்ணீரை சுத்தம் செய்து மீன் தொட்டியை ப்ளீச் என்று வைத்திருக்கும்.

இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் காய் கறிகளில் பாக்டீரியா பூஞ்சை மற்றும் காளான்களின் ஆதிக்கம் பரவலாக காணப்படும். 

நீங்கள் சந்தையில் வாங்கிய காய்கறிகள் பழங்கள் சுத்தம் இல்லை என சந்தேகம் இருந்தால், தண்ணீரில் ஒரு துளி ஹைட்ரஜன் பெராக்சைட்டை கலந்து அலசிக்கழுவினால் பாக்டீரியா, பூஞ்சை, காளான், ஒட்டுண்ணிகள் மற்றும் வைரஸ் வரைக்கும் அது உடனடியாக கிருமி நீக்கம் செய்துவிடும்.

சமைத்த அல்லது உடன்  உணவுப்பொருட்களை  கழுவி சுத்தம் செய்யக் கூடியது உங்கள் பயணத்தின் போது கையேந்தி பவன்களில்   சாப்பிடவேண்டிய ஒரு நிலை ஏற்பட்டால் ஓரிரு துளிகள் ஹைட்ரஜன் பெராக்சைடு தண்ணீரை தெளித்து சாப்பிட்டால்  உணவு நச்சு [ஃபுட் பாய்சன்] விளைவிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள்.

ஹைட்ரஜன் பெராக்சைடு ராக்கெட் எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது. 90 விழுக்காடுகளில் அல்லது அதற்கு மேற்பட்ட செறிவுகளில்,

இது ஒட்சிசனாக[O2] சிதைகின்றது. மற்றும் ஹைட்ரஜன் போன்ற பிற எரிபொருட்களுக்கு ஒக்சிஜனேற்றமாகவும் செயல்படுகின்றது.

ராக்கெட் உந்துசக்திகளில் பெரும்பாலான திரவ ஒட்சிசன் பயன்படுத்தப்பட்டாலும், சில செயற்கைக்கோள்களில் இன்னும் ஹைட்ரஜன் பெராக்சைடு உந்துவிசையாக பயன்படுத்தப்படுகின்றது..

ஹைட்ரஜன் பெராக்சைட்டின் பக்க விளைவுகள்:  ஹைட்ரஜன் பெராக்சைடு அதிக செறிவில் இருக்கும்போது ஆபத்தானது. நீங்கள் அதிக அளவு H₂O₂ கரைசலைப் பயன்படுத்தினால், மோசமான நிலையில், சுவாசக் குழாயில் இரசாயன தீக்காயங்கள், சளி சவ்வுகளின் வீக்கம் அல்லது நுரையீரல் வீக்கம் ஏற்படலாம்.

அதிக செறிவூட்டப்பட்ட H₂O₂ சருமத்தின் மூலமாகவோ அல்லது உட்கொள்வதன் மூலமாகவோ உடலுக்குள் சென்றால், அது வயிற்றுப்போக்கு, இரத்த ஓட்டப் பிரச்சனைகள், தலைவலி, வாந்தி மற்றும் தலைச்சுற்றலை ஏற்படுத்தும்.

மிகவும் நீர்த்த தீர்வுகளுடன் மூன்று சதவீதத்திற்கும் குறைவான கரைசலை பயன்படுத்தினால் நீங்கள் பாதுகாப்பான பக்கத்தில் இருக்கிறீர்கள்.

இன்னும்  பொறுப்புடன்  மருந்தகங்கள் தயாரித்த ஹைட்ரஜன் பெராக்சைட்டின் தயாரிப்பைப் பயன்படுத்துங்கள். மேலும், பயன்பாட்டிற்குப் பிறகு உடனடியாக கரைசலை நன்கு அலசி கொப்பளித்து  கழுவவும். மேற்கோளாக: நீண்டகால பாவனை அதிக நீர்த்த H₂O₂   கூட சரும நிறத்தை வெளுத்து போக செய்து விடும்.

http://mahesva.blogspot.com/?view=magazine

 

எழுந்து ஓடு நின்றால் சாக்கடையவாய்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக