வெள்ளி, 5 ஜூன், 2020

இரத்த சுற்று
விற்றமின் கே மற்றும் ஹெப்பரின்
விற்றமின் கே விற்றமின்  குழுமத்தை சார்ந்தது, ஹெப்பரின்  ஒரு நொதியம்  விற்றமின்,K கல்லீரலில் உற்பத்தியாகின்றது  ஹெப்பரின் இரைப்பை குடல்திசுக்களினால் உற்பத்திசெய்யப்படுகின்றது.

இரண்டு என்சைம்களும்  ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமானது  விற்றமின்-K இரத்த உறைதலை ஏற்படுத்துவது ஹெப்பரின் இரத்த உறைதலை உடைக்க கூடியது  இந்த இரண்டும் ஆரோக்கியமான இரத்த சுற்றுக்கு அவசியமானது. விற்றமின்-கே, பற்றி புரிந்து கொண்டால்தான் ஹெப்பரின் அவசியம் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

விற்றமின் -K ஃபில்லோகுவினோன்-Phyllochinon
கொழுப்பில் கரையக்கூடிய, ஃபில்லோகுவினோன் என்று அழைக்கப்படும்  விற்றமின்,K குருதி உறைதலுக்கு பெரும் பங்கு வகிக்கின்றது இந்த விற்றமின் குறைபாடு உள்ளவர்கள் நிறையப்பேர் இருக்கின்றார்கள் குறிப்பாக முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள், குடல்நோய், கல்லீரல்நோய் உள்ளவர்கள்

மற்றும்  குடி குடியென்று குடித்து கல்லீரல் செத்த, ஒயின் மற்றும் மதுப்பிரியர்கள் மேலும் புதிதாகப் பிறந்த மழலைகளுக்கு ஓரிரு நாட்கள் வரை இந்த விற்றமின்   குறைபாடு இருக்கும் தாய்ப்பாலில் விற்றமின் -K அதிகம் காணப்படுவதினால்.

குழந்தைக்கு பால் கொடுப்பது மிகவும் அவசியம் பால்-சுரப்பு இல்லாதவர்கள் விற்றமின் -கே சொட்டு மருந்துகள் மூலம் இந்த குறைபாட்டினை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.

நாள்பட்ட  குறைபாடு மழலையின் மூளையில் இரத்தப்போக்கினை உண்டாக்கும் ஆபத்து நிறைந்த காரணியாக மாறக்கூடும்     

இரத்தம் உறையும் திறன்  உடலுக்கு மிகவும் அவசியம், இல்லையென்றால் உடலில் ஏற்படும்  சிறு காயங்களின் இரத்தக்கசிவை  கூட நிறுத்த முடியாமல் மரணத்தில் கொண்டு போய் விடும்.

கல்லீரலின் சாவித்-தொகுப்பு-வாங்கிகள் மூலம் உற்பத்தியாகும் விற்றமின் -K யிலும் பலவகைகள் உண்டு K1,K2,K3 K4 , இதில் விற்றமின்-K1,K2 இயற்கையில் இருந்தும், குடல் வாழ் நல்ல-பாக்டீரியாக்கள் மூலம் கிடைக்கக்கூடிய  இந்த விற்றமின்   சிலவகை புரதங்களுடன்  சேர்ந்து   குருதி உறைதலுக்கு உதவி செய்கின்றது.

விற்றமின் -K நிறைந்துள்ள உணவுகள் கொழுப்பில் கரையக்கூடிய இந்த விற்றமின்  சீன முட்டைக்கோஸ், கீரை மற்றும் முட்டைக்கோசு போன்ற பச்சை இலை காய்கறிகள் மற்றும் சாலட்-இலைகள், மூலிகைகள் போன்ற பச்சை தாவரங்களின் இலைகளிலும் அதிகம் காணப்படுகின்றது 

விற்றமின் -K பற்றாக்குறையினால்  ஏற்படும் நோய்களின் அறிகுறிகள்
வெட்டுக்காயங்கள், அறுவைசிகிச்சை-பிரசவம் மற்றும் அறுவைசிகிச்சை காயங்களிலிருந்து தன்னிச்சையாக இரத்தப்போக்கு ஏற்படலாம் கல்லீரல்-நோய்கள், இரத்த உறைதலை தடுக்கின்ற குமாரின், அஸ்பிரின்-ASS-100, மார்குமா மாத்திரைகள் கல்லீரல்-வாங்கிகளை தடுத்து விடுவதினால்  விற்றமின் -K குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் 

அளவுக்கு அதிகமான  விற்றமின் -K மாத்திரைகளை  உட்கொள்ளும் போது ஏற்படும் சாதகமற்ற-விளைவுகள்  தற்போதைய ஆய்வுகளின் படி விற்றமின் -K அளவுக்கு அதிகமானால் ஆரோக்கியமானவர்களுக்கு எந்த விதமான தீங்குகளும் இல்லை என்று ஆய்வுகள் சொல்கின்றது மேலும் குழந்தைகளுக்கு அதிக அளவில் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்து  இரத்த சுற்று சம நிலையை குலைத்து விடுகின்றது.

மற்றும் இதய-நோயுள்ளவர்களுக்கு தேவை இல்லாமல்  இரத்த உறைதலை ஏற்படுத்தி, குருதி சுற்றில் நெரிசலை உண்டு பண்ணி 30 சதவீதம் பக்கவாதம்மாரடைப்பு  போன்ற இதய நோயை ஊக்குவிக்கும் காரணிகளாக இருக்கின்றன

ஹெப்பரின் ஹெப்பரின். நான்கு சேர்க்கை சர்க்கரையை சேர்ந்தது, (பாலிசாக்கரைடு) செயலில் உள்ள மூலப்பொருள் ஹெபரின் உடலில் இரத்தம் உறைவதைத் தடுக்கின்றது. இது இயற்கையாக உடலால் உருவாகின்றது, இருப்பினும்  அறுவை சிகிச்சை நோக்கங்களுக்காக செயற்கையாக  மருத்துவ பயன்பாட்டில் இருக்கின்றது.

தமனிகளின்  இரத்த உறைவு மற்றும் பக்கவாதம்மாரடைப்பு மற்றும் கொரோனா வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட  நுரையீரல்  நாளங்களில் குருதி உறைதல்  போன்ற மறைமுக நோய்களைத் தடுக்கவும், அறுவை சிகிச்சை நோயாளியின்  இரத்த உறைவுக்கு  சிகிச்சையளிக்கவும் ஹெப்பரின் பயன்படுத்தப்படுகின்றது.

எந்த உணவு  கொரோனா வைரஸ்  தொற்றியவர்களுக்கு ஏற்றது  எதை தவிர்க்க வேண்டும் என்பதை  இதன் மூலம்  நீங்களாகவே நிர்வகித்துக் கொள்ளுங்கள்.

ஆரோக்கிய கேடு என்று  ஒதிக்கி விட்ட கொழுப்பை விட, சில சமயம் ஆரோக்கியமான உணவுகள் கூட பக்கவாதம், மாரடைப்பை ஏற்படுத்துகின்ற ஆபத்தான காரணியாக மாறிவிடுகின்றது. 

கொரோனா வைரஸ்  ஆபத்தான ஒரு தொற்று நோய்தான் அதற்காக அதன் மேல் எல்லா பழியையும் போடக்கூடாது ஒரு தொற்று நோயை எதிர் கொள்ளும் வகையில் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் மேன்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

ஹெபரின் ,ஹெப்பர் என்றால் 'கல்லீரல் என்று  மருத்துவத்தில் பொருள்படும்  உடலின் சொந்த  நான்கு சர்க்கரைகள்  (பாலிசாக்கரைடுகள்) ஆகும், வேதியியல் ரீதியாகப் பார்த்தால், இந்த பாலிஎலக்ட்ரோலைட்டுகள் இரத்த உறைதலுக்கு எதிராக பயன்படுகின்றது.

பாலிசாக்கரைடுகள் உள்ள உணவுகள்: தாவர உணவுகள் மற்றும் சிறு முழு தானிய பொருட்கள் (முழு தானிய ரொட்டி, பாண், டீக்கடை பால் பன், கிழங்கு, காய்கறிகள்.சோள மாவு, உருளைக்கிழங்கு மற்றும் கோதுமை பண்டங்கள், மா சத்து  உணவுகள்.
சர்க்கரை என்றால் என்ன,  உண்மையில் சர்க்கரையில் எத்தனை வகைகள் இருக்கின்றது எந்த வகையான சர்க்கரை  உடலுக்கு சக்தி வழங்குகின்றது. சர்க்கரை என்பது ஒன்றல்ல இதில் பல வகையான சர்க்கரைகள் உள்ளன இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்  எந்த சர்க்கரை உடலுக்கு சக்தி வழங்குகின்ற பணியை செய்கின்றது.

கார்போஹைட்ரேட்டுகள்:  ஒற்றை சர்க்கரை, இரட்டை சர்க்கரை, நான்கு சர்க்கரைகள் (பாலிசாக்கரைடுகள்) , பல சர்க்கரைகள். இந்த சர்க்கரைகளுடன் ஒட்டியிருக்கும் குளுக்கோசு பிளக்கப்பட்டு  உடலுக்கு சக்தி வழங்கப்படுகின்றது. குளுக்கோசு (C₆H₁₂O₆ ) இந்த சர்க்கரைதான் இன்சுலினுடன் இணைந்து வேலை செய்கின்றது

எளிய சர்க்கரை (மோனோசாக்கரைடுகள்): இவற்றில் டெக்ஸ்ட்ரோஸ் /பழச்சர்க்கரை (குளுக்கோஸ்),  வீட்டுச்சர்க்கரை (சுக்ரோஸ்) மற்றும் மெல்லிய சர்க்கரை (கேலக்டோஸ்) ஆகியவை அடங்கும். இவை ஒற்றை சர்க்கரை மூலக்கூறைக் கொண்டிருக்கின்றது.

இரட்டை சர்க்கரை என்பது (டிசாக்கரைடுகள்): பால் சர்க்கரை (லாக்டோஸ்), கரும்பு அல்லது கிழங்கு சர்க்கரை (சுக்ரோஸ்) மற்றும் மால்ட் சர்க்கரை (மால்டோஸ்) ஆகும்.  ஒற்றை சர்க்கரையைப் போலவே, இரட்டை சர்க்கரையும் முக்கியமாக இனிப்புகளில் காணப்படுகின்றது. இந்த சர்க்கரையை வெற்று ஆற்றல் மூலங்கள் என்று அழைக்கப்படுகின்றது. இவை இரண்டு சர்க்கரை மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன.

பல சர்க்கரை (பாலிசாக்கரைடுகள்): இவை நான்கு சர்க்கரைக்கு மேல் குறைந்தது பத்து சர்க்கரை மூலக்கூறுகளைக் கொண்டிருக்கின்றன. தானியங்கள், முழு தானியங்கள், ஓட்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றில் அதிகம் காணப்படும் கார்போஹைட்ரேட்டு பல சர்க்கரைகள்.

பல சர்க்கரை உள்ள உணவுகளில் பொதுவாக பல  வகை தாதுக்கள்,  அமினோ அமிலங்கள் மற்றும் விற்றமின்கள் மற்றும் தாவரங்களின் இரண்டாம் நிலை ஆற்றல் பொருட்கள், ஃபைபர் (நார்ச்சத்து) ஆகியவை நிறைந்து உள்ளன.

ஒற்றை மற்றும் இரட்டை சர்க்கரைகள், முக்கியமாக, தேன், சாக்லேட் மற்றும் ஜாம் போன்ற மிக இனிமையான ருசியான உணவுகளில் காணப்படுகின்றன. இவைகள் பெரும்பாலும் அதிக ஆற்றல் கொண்ட சர்க்கரைகள்

இருப்பினும் இந்த சர்க்கரை உணவுகளில் விற்றமின்கள்  மற்றும் தாதுக்கள் குறைவாகவே அல்லது அறவே இல்லை எனவே இவை காப்பிடப்பட்ட வெற்று கலோரிகள் ஆகும். பழங்கள், காய்கறிகள் விதிவிலக்குடன் பார்க்கப்பட வேண்டும்.
எங்கள் இதயம் வலது பக்கம் சற்று தலை சாய்ந்து இருக்கின்றது. அதற்கு இசைவாக இடது நுரையீரலில் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருக்கின்றது.

மத்திய நாடி, நாளம் எங்கள் கட்டை விரல் விட்டம்  கொண்டது. தமனிகள் நாடி, நாளம் மற்றும் நுண்குழாய்கள் என்று மூன்று பிரிவாக உள்ளது. கால்களிலுள்ள நாளங்களில் மட்டும்  இதயத்திற்கு உதவியாக 12, தடுப்பு சிரை வால்வுகள் உண்டு. மொத்தம் 20. அன் அளவாக  இதயம்: பெண் 300 - ஆண் 350 கிராம் நிறையுள்ளது. ( கையை பொத்தி வைத்தால் போலிருக்கும்)

உடலில் 5-6 லீட்டர்  இரத்தம்  உள்ளது.உடலிலுள்ள இரத்த நரம்பை விரித்து வைத்தால் இரண்டு தடவைக்கு மேல் பூமியை சுற்றிவரும் நீளம் கொண்டது.

இதயம் ஒரு நாளில்  எவ்வளவு இரத்தம் உந்துகின்றது, இதயம் சீராகவும், இடைவெளி மற்றும் ஓய்வு இல்லாமலும்  ஒரு நாளைக்கு சுமார் 100,000 முறை இதய தசை துடிக்கின்றதுஇதயம் ஒவ்வொரு நாளும் 10,000 லிட்டர் இரத்தத்தை இரத்த நாடி, நாளங்கள் வழியாக செலுத்துகின்றது. எந்த உறுப்பு அல்லது திசு உடலில் எவ்வளவு இரத்தத்தை பெறுகின்றதை பொறுத்து துல்லியமாக கட்டுப்படுத்தி பாச்சுகின்ற அற்புத திறன் கொண்டது.

இன்சுலின் Vs குளுகோகான் இன்சுலின் மற்றும் குளுகோகான் உருவாக்கம்: இந்த இரண்டு ஹார்மோன்களும் கணையத் திசுக்களில் சிதறியுள்ள லாங்கர்ஹான்ஸ் தீவு கூட்டத்தில் உற்பத்தியாகி நேரடியாக இரத்தத்தில் கலந்து விடப்படுகின்றது.

இன்சுலின் மற்றும் குளுகோகான் வெவ்வேறு தீவு செல் வகைகளால் உருவாகின்றன◼ β பீட்டா  தீவு செல்கள் 70%  இன்சுலினை உருவாக்குகின்றன. α  ஆல்பா தீவு செல்கள் 20% குளுகோகனை உருவாக்குகின்றன.

இன்சுலின்: இரத்த சர்க்கரையை குறைக்க பயன்படுத்தப்படும் மிக முக்கிய ஹார்மோன் ஆகும். இது குறிப்பாக சாப்பிடும் போது, அதற்கு பிறகு இரத்த சர்க்கரை அளவு மிக உயர்ந்த நிலையில் இருந்தால் மட்டும் கணையத்  திசுக்களினால் வெளியிடப்படுகின்றது.

இரத்தத்திலிருந்து வரும் குளுக்கோஸ் பொட்டாசியத்துடன் சேர்ந்து விரைவாக தசை மற்றும் கொழுப்பு செல்களில் உறிஞ்சப்படுவதை இன்சுலின் உறுதி செய்கின்றது இதுவே தலைகீழாக மாறி பசி பட்டினி அல்லது விரதம் இருக்கும்போது இரத்த சர்க்கரை அளவு குறைந்து வரும் நிலையில்  கணையத் திசுக்களில் இன்சுலின் வெளியீட்டைத் தடுக்கின்றது.

மனித உடல் புத்திசாலித்தனமாக படைக்கப்பட்டிருக்கின்றது இது போன்ற நெருக்கடியான லொக் டவுன் காலத்தில்  பயன்படும் படியாக உணவை சேமித்து வைத்திருக்கின்றது. உடனடியாக சர்க்கரையை  தேடும் பணி முடுக்கி விடப்படுகின்றது

சிறுநீரக மேற்பட்டை அட்ரீனல் ஹார்மோன் தூண்டுகின்றது இதனுடைய பக்கவிளைவுகள் கை கால் மற்றும் உடல் நடுக்கம் பதட்டம். இந்த நிலையில் கொஞ்சம் சர்க்கரையை அள்ளி வாயில் போட்டு முழுங்க வேண்டும் இல்லையென்றால் பசிமயக்கம் ஏற்படும்.

வளர்சிதை மாற்ற கோளாறு இல்லாதவர்களுக்கு (சர்க்கரை நோய்) இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும்போது, ​​குளுகோகன் வெளியீடு ஏற்படுகின்றது, α செல்கள் கல்லீரலில் இருந்து குளுக்கோசின் சேமிப்பு வடிவம் கிளைகோசு குளுக்கோஸை வெளியிடுகின்றன.

இரத்தத்தில் சர்க்கரை அளவு மீண்டும் உயர்கின்றது. (உணவு எதுவும் சாப்பிடாமல்) அதிகரித்த இரத்த சர்க்கரையுடன், β செல்கள் வெளியிடும் இன்சுலின்  கொழுப்பு மற்றும் தசை செல்களில் குளுக்கோஸ் அதிகரிப்பு. சக்தி வெளிப்பாடு  இரத்தத்தில் சர்க்கரை அளவு மீண்டும்  குறைகின்றது. இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, சுழற்சி  உண்மையில் இங்கே எளிமைப்படுத்தப்பட்டுள்ளது,

சர்க்கரை நோயை பொதுவாக வகை ஒன்று இரண்டு என்று சொல்லிவிட்டு போக முடியாது அதனுடைய வளர்சிதை மாற்ற கோளாறு  எது என்று பார்க்க வேண்டும். சர்க்கரை நோய்க்கு இன்சுலின் மட்டும் காரணி கிடையாது  குளுகோகான் ஹார்மோனின் வெளியீட்டைத் தடுக்கின்ற செயல்பாடு,

மேலதிக சர்க்கரையை மறுசுழற்சி மற்றும் சேமிக்கத் தெரியாத  கல்லீரல் குறைபாடு மற்றும் நோய், மதுபோதையும் காரணியாகின்றது. இந்த இயல்பான திறன் இழந்ததினால் தான் ஒரு சில சர்க்கரை நோயாளிகள்  மெலிந்தும் மற்றும்  சிலர் தொப்பை உடன் காணப்படுகின்றார்கள்.

அதிகரிக்கும் இன்சுலின் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கின்றது: இது கொழுப்பு அமிலங்களை அவற்றின் சேமிப்பு வடிவமான ட்ரைகிளிசரைட்களாக மாற்றுவதை ஊக்குவிக்கின்றது 

மற்றும் ட்ரைகிளிசரைடு முறிவைத் தடுக்கின்றது. இது புதிய கொழுப்பு அமிலங்களின் உருவாக்கத்தையும் அதிகரிக்கசெய்கின்றது. இதன் நிமித்தம் தொப்பை மற்றும் வயதானவர்களிடமும் இன்சுலின் உற்பத்தி நின்றுவிடுகின்றது 

இரத்த சர்க்கரை அளவு பொதுவாக ஆரோக்கியமானவர்களுடன் இருக்கும் விளைவுகள் இல்லாமல் குறைந்து போகின்றது இருப்பினும், கணையத்தில் இன்சுலின் தொகுப்பு சிறிது நேரம் எடுக்கும் அல்லது நடவடிக்கை தொடங்குவது சற்று தாமதமாகும்.

குளுகோகான்: உண்மையை சொன்னால்  குளுகோகான் இன்சுலினின் எதிரி, இரத்த சர்க்கரையின் உயர்வுக்கு காரணியானது மற்றும் உணவு  உட்கொள்ளும் இடையில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும் போது  சுரக்கின்றது. ஒவ்வொரு நாளும் அதிகாலையில் (3-4 மணி) சேமித்து வைத்திருந்த சர்க்கரையை மறுசுழற்சி செய்வதற்கு கணையத்தினால்  குளுகோகான் உந்தப்படுகின்றது.

குளுகோகான் முதன்மையாக கல்லீரலில் வேலை செய்கின்றது. அங்கு கிளைகோஜனின் முறிவு புதிய சர்க்கரையின் உருவாக்கத்தை இது ஊக்குவிக்கின்றது. அதே நேரத்தில், குளுகோகான் சர்க்கரை முறிவை (கிளைகோலிசிஸ்) தடுக்கின்றது.

இதன் விளைவாக, இது புதிதாக உருவாகும் குளுக்கோஸை  நேரடியாக கல்லீரல் உயிரணுக்களில் மீண்டும் உட்கொள்ளப்படுகின்ற சேமிப்பு வடிவத்தை ஏற்படுத்தாது. அதற்கு பதிலாக இரத்தத்தில் கலந்து வெளியிடப்படுகின்றது.

அதே நேரத்தில் இரத்தத்தில் அதிக அளவு குளுக்கோஸ் குளுகோகான் வெளியீட்டைத் தடுக்கின்றது. குளுகோகான் மற்றும் இன்சுலின் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமாக வேலை செய்கின்றது.
குற்றவாளிகளின் மரபணு சோதனை: மனித மரபணுக்கள் 99 விழுக்காடுகள் சகலருக்கும் பொத்தான் பொதுவாகத்தான் இருக்கின்றது ஒரு சதவீதம் மட்டும்தான் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படும் தனித்தன்மையை சுட்டிக்காட்டும் மரபணுவை கொண்டிருக்கின்றது.

அகரோஸ் ஜெல் எலக்ட்ரோபோரேசிஸ்: இந்த ஒரு சதவீத வித்தியாசங்களை வைத்துத்தான் குற்றப் புலனாய்வு பிரிவு ஆய்வுகள் குற்றவாளிகளின் மயிர், தோல் மற்றும் கண்களின் நிறம் வயது ஆண் பெண் மற்றும் மரபணு கலப்பு சந்ததி வித்தியாசங்களை அடையாளப்படுத்தப்படுகின்றார்கள்.

முதலில் குற்றம் நடந்த இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மயிர். சரும உதிர்வுகளை பாலிமரேஸ் வெப்ப சுழற்சி, பி. சி.ஆர் கருவிமூலம் பல கோடி பிரதிகள் எடுக்கப்பட்டு, அகரோஸ் ஜெல் மீது வைத்து மின்பகுப்புக்கு உட்படுத்தப்படுகின்றது

அதாவது எதிர்மின்னேற்றத்திலிருந்து நேர்மின்னேற்றத்திற்கு ஈர்க்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டு புற ஊதா மின்னொளியில்  வைத்து மரபணு தொகுதியின்  நீளம்  தடிப்பு வித்தியாசங்கள் படிக்கப்படுகின்றது.

💚 தந்தை வழி ஹாப்லோ குழு: Y-மரபணு ( டிஎன்ஏஎந்த பழங்குடி, டி.என். குழு மேலோங்கி இருக்கின்றதோ, அதற்குரிய முடி  மேலும் வாசிக்க இதில் கிளிக் செய்யவும்.
🙏பரப்பிரமத்தின்  ஆட்சி மலரட்டும்.   …

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக