வெள்ளி, 5 ஜூன், 2020

எதற்காக நாங்கள் முதுமையடைகின்றோம்.
எங்களுடைய பூமியில் மட்டுமின்றி எங்கள் அண்டத்தில் உதயமாகியிருக்கின்ற அத்துனை நட்சத்திர, சூரியங்களும் ஒரு நாள் முதிர்ந்து உதிர்ந்து போகும். இவைகளின் காலச்சக்கரம் அந்த பரப்பிரமத்தின் கைகளில் இருக்கின்றது. எங்கள் பூமியில் வாழ்கின்ற உயிர்களின் செல் கருவுக்குள்ளே இருக்கின்ற குரோமோசோம் மற்றும் மரபணு தகவல், DNA  சிதைவு முதுமைக்கும் இறப்பிற்கும் காரணியாக இருக்கின்றது.

டெலோமர் என்பது குரோமோசோம்  முனையில் இருக்கும்  நான்கு  தலைகள் இது வயது முதிரும் போது மெதுவாக கரைந்து குட்டையாகின்றது இது இயல்பானதொரு பரிணாமம்தான்

ஆனால் மரபணு தகவல், DNA சிதைவுக்கு ஏகப்பட்ட வெளிக்காரணிகள் இருக்கின்றது. எடுத்துக்காட்டாக உணவு மதுபானம்ஊட்டச்சத்தின்மை, நோய்களுக்காக எடுக்கப்படும்  கூடுதல் மருந்துகள் மற்றும் மாசுபட்ட உலகத்தின் நச்சு, அணுக்கதிர்வீச்சு, புற ஊதா கதிர்வீச்சு(UV) வைரஸ் தொற்று மற்றும் எங்களுடைய வாழ்வியல் முறைகள் கவலை, துக்கம், நெருக்கடிகள்.  

இளவயதில் இது போன்ற காரணி இழப்புகளை உடல் திருத்தி அமைத்துக்கொள்கின்றது வயது முதிர்ந்தவர்களின் குட்டையான டெலோமர்  இழப்புகளை திருத்தாமல் அப்படியே விட்டுவிடுகின்றது மேலும் மாசுபட்ட உலகத்தின் நச்சுக்களினால் மரபணு தகவல், DNA🧬 சிதைவுற்று இளமையில் முதுமையான தோற்றம், புற்றுநோய்களுக்கு ஆளாகின்றார்கள்.

செல்களில் குறைவான இழைமணிகள், குட்டையான டெலோமர், சிதைவுற்ற மரபணு தகவல், DNA🧬 இந்த மூன்றும் இணைந்துதான் முதுமை ஏற்படுகின்றது. இருப்பினும் செக்ஸ், பாலியல் ஹார்மோன் உற்பத்தி உடலில் குறையாமல் இருக்கும் பட்சத்தில்  டெலோமியர் தலைகளை மீண்டும் ஸ்டெம் செல்களில் உதவியுடன் வளர வைக்கின்றது.

மேலும் இளம்பருவத்தில் இயற்கையாக சருமத்தின் பகுதியில் உற்பத்தியாகும் ஹைலூரோனிக் அமிலம் இணைப்பு திசுக்களின் நெகிழ்ச்சி மற்றும் சுருக்கமில்லாத உறுதியான கட்டான மொழு மொழு மினுமினுப்பு சருமத்தை உறுதி செய்கின்றது. இந்த அமிலம் வயதானவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இதற்காக கவலைப்பட வேண்டியதில்லை எதிர்ப்பு சுருக்க கிரீம் வடிவத்தில் இந்த ஹைலூரோனிக் அமிலம்  ஒப்பனை பொருட்  மார்கெட் /சந்தையில் கிடைக்கின்றது வாங்கி பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

காய்கறி, பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் சிறு முழு தானியங்கள் போன்ற நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல். தொழில்துறை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் விலங்கு தயாரிப்புகள் மதுபானம் மற்றும் புகைத்தலை கூடுமானவரை தவிர்த்தல், கவலை, பதட்டம்  நெருக்கடியான வாழ்க்கையை விட்டுவிடுதல், மருந்துகளின் பாவனைகளை குறைத்துக் கொண்டு, பண்டிகை கொண்டாட்டம், திருவிழாக்கள் என்று   எப்பொழுதும் மகிழ்ச்சி  பொங்க வாழ்ந்தால்  நீண்டகாலத்திற்கு இளமையுடன் இருக்கலாம்.

முழுமை பெற்ற குரோமோசோம் தேய்ந்து குட்டையான முனைப்பு வர்ணம் (டெலோமியர்) A அடினைன் G குவானைன் T தைமைன் C சைட்டோசின்

மனித மரபணுவிற்கு ஏதுவான நான்கு வர்ணங்கள். ஓவ்வொரு வர்ணங்களுக்கும் ஒவ்வொரு கதை இருக்கின்றது மனிதன் ஒரு கலப்பட பிண்டம் அவன் ஒரு உயிரினத்திலிருந்து தோன்றியவன் கிடையாது மாறுபட்ட உயிரினங்களின் ஒரு கோர்வைதான் இன்றுள்ள மனிதன். கொரோனா வைரஸ்  இன்று பேச்சுப் பொருளாக இருப்பதினால்  அதைப்பற்றியே சுற்றிச்சுற்றி தொடர்ந்து சொல்ல வேண்டியிருக்கின்றது. ஒற்றைக்கால் வைரஸ் RNA மற்றும் DNA  மரபணுவிற்கும் இடையிலிருக்கும் வித்தியாசம்

AGCU RNA வைரஸ்களின் நான்கு வர்ணம் இதில் U-(யுரேசில்)RNA வைரஸ்களில் மட்டும் காணப்படுகின்றது. ATGC DNA வைரஸ்களின் நான்கு வர்ணம் இதில் T-(தைமைன்) DNA வைரஸ் மற்றும் மனிதன், சக உயிரினங்களில் மட்டும் காணப்படுகின்றது.

RNA வைரஸ்கள் மனித மரபணு சங்கிலியில் பொருந்தாத U-வர்ணத்தை மனித செல்களில் திணிக்கின்றது எடுத்துக்காட்டாக: AUG CGC AAU என்ற இயல்பு நிலையை AUG UGU AUU என்று மாற்றிவிடுகின்றது . இது போலத்தான் வைரஸ்கள் மனித மரபணுவை உடைக்கின்றது. இதனால்தான்  வைரஸ்கள் மனிதனுக்கு ஆபத்தானதாக இருக்கின்றது.
மிகைப்படையும் நோய்எதிர்ப்பு சக்தி.
எதற்காக தடுப்பூசி தயாரிப்பதில் காலதாமதம் தேவைப்படுகின்றது. தடுப்பூசி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் வைரஸ் துகள்கள் பெரும்பாலான நேரங்களின்   நோய்எதிர்ப்பு சக்தியை மிகைப்படைய செய்கின்றது இது வைரஸ்கள் ஏற்படுத்தும் பாதிப்பை காட்டிலும் 60 மடங்கு ஆபத்தானது.

வைரஸ் துகள்களுக்கு எதிராக கிளர்ச்சி பெறும் ஆன்ரி உடல்கள் (கொலையாளிகள்) கல்லீரல், நுரையீரல் மற்றும் தமனிகள் நரம்பு மண்டலங்களையெல்லாம் சல்லடை போட்டு அறுத்துவிட்டுப்போகும் பக்கவிளைவுகளை உசுப்பி விடுகின்றது. இதன் நிமித்தம் தடுப்பூசி, வைரஸ் தடுப்பு மருந்துகள் நீண்டகாலம்  ஆய்வுகள், சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது.

தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் காரணங்களில் இதுவும் ஒன்று மேலும்  தடுப்பூசி மருந்தில் கலந்திருக்கும் மேலதிக சேர்க்கை பொருட்கள் மற்றும் வடிகட்டப்படாமல் தேங்கியிருக்கும் மாசுப்பொருட்களினால் ஏற்படும் நீண்டகால பக்கவிளைவுகளும் முன்வைக்கப்படுகின்றது.

தடுப்பூசி மருந்தில் கலந்திருக்கும் மேலதிக சேர்க்கை பொருட்கள் இல்லாமல் தனித்து தடுப்பூசிகள் பலன்தராது. இந்த மேலதிக சேர்க்கை பொருட்கள் தான் நோய் எதிர்ப்பு சக்திக்கு கொம்பு சீவிவிட்டு வம்புச்சண்டைக்கு வலுச்சேர்ப்பது. வம்புச்சண்டை சிலசமயங்களில்  வினையாகக் கூட மாறலாம்

இருப்பினும் தடுப்பூசிகள் பெரியம்மை, போலியோ போன்ற மிக கொடுமையான வைரஸ் நோய்களை எங்கள் சமூகத்திலிருந்து இல்லாது ஒழித்திருக்கின்றது. இந்த வைரஸ்கள் இன்று நம்மிடையே இல்லை என்கின்ற ஒரு நம்பிக்கையில்தான் பலர் தடுப்பூசிகள் போடாமல் வாழமுடியும் என்று சொல்கின்றார்கள். பெரியம்மை, போலியோ வைரஸ்கள் மீண்டும் தலைதூக்கினால் தெரியும் தடுப்பூசி போடாமல் இருப்பவர்களுக்கு.

பெரியம்மை வைரஸ்கள் இன்று நம்மிடையே இல்லாமல் இருப்பதற்கு காரணம் உலகளாவிய தடுப்பூசியின் பயன்பாடுதான். எய்ட்ஸ் வைரஸ்களை இன்னும் சமூகத்தை விட்டு ஒழிக்க முடியாமல் இருப்பதற்கான  காரணம் அதற்கு இன்னும் சரியான தடுப்பூசி இல்லை என்பதுதான். தடுப்பூசிகள் வெறும் இன்றைக்கான ஒரு தீர்வுமட்டும் கிடையாது அது நாளைய சமூகத்தின் நோய்க்காப்பையும் தீர்மானிக்கின்றது.

எப்படியோ கொரோனா வைரஸ்கள் நம்மிடையே பரவியிருக்கின்றது இதை மறுபடியும் நாட்டை விட்டு காட்டிற்கு துரத்தவேண்டும் இதற்கு இருக்கும் ஒரேஒரு வழி உலகளாவில் போடப்படும் தடுப்பூசி மட்டும்தான். இன்று சார்ஸ்-கோவி-2019 கொரோனா வைரஸ் தொற்றை பெரியம்மை வைரஸ்கள் போல் இல்லாது ஒழித்திருந்தால் மட்டும்தான் நாளைய தலைமுறையினர்கள் வேண்டுமென்றால் தடுப்பூசி போடாமல் கூட வாழமுடியும்.
எதற்காக வெவ்வேறு இரத்த வகைகள் மனிதனிடம் காணப்படுகின்றது, இரத்த வகையின் ஆரம்பம் எங்கிருந்து தொடங்கியது, மனித இரத்தப் பிரிவுகள் எங்களுக்கு எதை சொல்கின்றது. இந்த கேள்விகளுக்கு பலமான ஒரு பதிலை அவ்வளவு எளிதில் சொல்லிவிடமுடியாது இருப்பினும் மனிதனுடைய பரிணாம வளர்ச்சி இதற்கான பதிலை பறைசாத்தி நிற்கின்றது. மனிதனின் இரத்தப் பிரிவு தோன்றியதற்கு அடிப்படையாக இருந்த காரணங்களில் மிக முக்கியமானது உணவு, உணவின் தேவை

மற்றும் ஒவ்வாமை, அருவருப்பு  வாந்தி ஏற்படாமல் உண்ணுகின்ற  உணவை சகித்துக் கொள்ளும் உணவுப்பழக்கத்தின் அடிப்படையில்தான் இரத்த வகைகள் உருவாகியிருக்கின்றதுஇந்த பூமியில் வாழ்வதற்கு  இந்த உணவுதான் உனக்கு என்று வகுத்து வைத்து உணவுத்தேவையை பகிர்ந்தளித்தது இயற்கைஇதைவிடுத்து எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒரு உணவை வைத்திருந்தால் என்னவாகி இருந்திருக்கும் எங்கள் பூமி....

ஆதியில் வேட்டை சமூகமாக இருந்த மனிதன் இறைச்சி பிரதான உணவாக இருந்ததினால் பரிணாம வளர்ச்சியில் A வகை மற்றும் 0 வகை இரத்தப் பிரிவு மட்டுமே அன்று வாழ்ந்த மனிதர்களிடையே இருந்திருக்கின்றது

பிற்காலத்தில் வேட்டை சமூகம் வேளாண்மை சமூகமாக மாறுகின்றபோது காய்கறிகள்கிழங்கு பழங்கள் மற்றும் வேகவைத்த தானியங்கள் பிரதான உணவாக மாறியபோது B வகை இரத்தப் பிரிவு தோன்றியிருக்கின்றது.

இதற்கு பின்னால் நவீன கால தொடக்கத்தில், சுருக்கமாக சொன்னால்  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய AB வகை, உலக மக்கள் தொகையில் வெறும் 3 விழுக்காடுகள் கொண்ட மக்கள்தான் வாழ்கின்றார்கள்AB வகை இரத்தப் பிரிவுள்ள மக்கள் மிகவும் அரிதாகவும், உலகம் பூராக அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்னும் நட்சத்திரங்கள் போலத்தான்  காணப்படுகின்றார்கள். அசைவமும்  சைவமும் இணைந்து, கடலுணவு உண்கின்ற காலப்பகுதியில்தான் AB வகை தோன்றியிருக்கின்றது

இவர்கள் சகலதும் உண்ணும் பழக்கமும் விருப்பமும் இவர்களுக்குள்ளே இருக்கும். ஏன் இவ்வளவு உறுதியாக சொல்கின்றேன் என்றால் என்னுடைய இரத்த வகையும் AB பிரிவை சேர்ந்தது, இம்.... சொல்லக் கூடாது இருப்பினும் இரத்தப் பிரிவுகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்பவர்களுக்கு ஒரு தகவலாக சேரட்டும் என்பதற்காக சொல்லியிருக்கின்றேன்.

A வகை மற்றும் O வகை மனிதர்களின் உணவு விருப்பங்களை பார்த்தால் இந்த வகை மனிதர்களுக்கு இறைச்சி உணவு விருப்பமாகவும் பொருத்தமாகவும் இருக்கின்றது இந்த வகை இரத்தப் பிரிவுகள் ஐரோப்பா மக்களிடையே பரவலாக காணப்படுகின்றது.

மேலும் B வகை இரத்தப் பிரிவு பரவலாக ஆசியா மக்களிடையே அதிகமாக  காணப்படுகின்றது குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில்  காய்கறி சைவ உணவுகள் இவர்களுக்கு விருப்பமாகவும் பொருத்தமாகவும் இருக்கின்றது.

அதுசரி இன்று எவ்வளவோ உணவுப்பண்டங்கள்  புதிது புதிதாக  நம்மிடையே புழக்கத்திலிருக்கின்றது உணவின் அடிப்படையில் இரத்த வகைகள் தோன்றியிருந்தால் இன்றும் ஏதாவது புது இரத்த வகை தோன்றியிருக்குமல்லவா, உங்கள் கேள்வி நாயமானது.

இன்று நம்மிடையே புதிது புதிதாக ஏகப்பட்ட உணவுகள் இருந்தாலும் எங்களுடைய உணவு விலங்கு மற்றும் தாவர புரதம், கொழுப்பு சர்க்கரை என்று இந்த கட்டமைப்புக் உள்ளேதான் இன்னும் இருக்கின்றது. இந்த நான்கு சட்டகத்தில் ஏதாவது ஒன்று  உடைந்து பிளாஸ்டிக் உணவுகளை உண்ணும் போது அதை சகித்துக்கொள்ள கண்டிப்பாக புது வகை இரத்தம் தோன்றும்.

சரி இருக்கட்டும்  இதற்கான உயிரியல் காரணங்கள்: மனிதர்களில் இரத்த சிவப்பணுக்களின் மேற்பரப்பில் உள்ள அம்சங்களால் இரத்தம் நபருக்கு நபர் வேறுபடுகின்றது. நோயெதிர்ப்பு அமைப்பு இந்த அம்சங்களை, எதிரியாக்கி குறியீடுகளை அடையாளம் கண்டு, அந்த அம்சங்களுக்கு பொருந்தாத ஆன்டிபாடிகளை உருவாக்க முடியும் இந்த அம்சங்களுடன் பொருந்தும் ஆன்டி உடல்கள் சந்திக்க நேரிட்டால் இரத்த சிவப்பணுக்களுடன் மோதி அழிக்கின்றது. (விளக்கப்படம் பார்க்கவும்)
நீங்களும் உங்கள் இரத்த வகையை அறிந்து கொள்ள ஆவலாக இருந்தால் உங்கள் குடும்ப வைத்தியர் அல்லது இரத்தம் சோதிக்கும் அட்டையை  மருந்தகங்களில் வாங்கி சோதித்து அறிந்து கொள்ளமுடியும். குழந்தை கிடைத்த அன்னையர்களுக்கு  பிரசவத்திற்கு முன்பாகவே இரத்த வகை அறியப்பட்டு அவர்களின் மகப்பேறு அட்டையில் எழுதியிருக்கும் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

மேலும் இதயநோய், சிறுநீரகநோய் போன்ற தீராத நோய்களினால் பீடிக்கப்பட்டு மருத்துவம் பார்ப்பவர்கள் மற்றும் அறுவைச்சிகிச்சை செய்தவர்கள், இரத்த தானம் செய்தவர்களின் மருத்துவ புகார் அட்டையில் எழுதப்பட்டிருக்கும் பார்த்து அறிந்து கொள்ளமுடியும்.  இரத்தம் சோதிக்கும் அட்டையை பயன்படுத்தும் முறை அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
மூன்றாம் பாலினர்💚💙🧡💛
இயற்கை இரண்டு புலமைபாடுகளை வைத்திருக்கின்றது ஆண் அல்லது பெண் இதில் ஏதாவது ஒரு அடையாளத்தை வெளியீடு செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் உடல் இருக்கின்றது,

காரணம் இதுதான் ஆண் பெண் அடையாளங்கள் வெறும் இனவிருத்திக்கு மட்டுமின்றி உடலின் கழிவுப்பாதை, சிறுநீர்கழிக்கும் தேவையும் இருக்கின்றது. உடலுக்கு இந்த இரண்டு பாதைகளையும் அடைக்கும் அதிகாரம் இல்லை இதன் நிமித்தம் ஏதாவது ஒரு அடையாளத்தை உடல் வெளியீடு செய்கின்றது.

மூன்றாம் பாலினரின் பிறப்புக்கு காரணமாக இருப்பது கருவில் ஆண் பெண் ஹார்மோன்கள் தகுந்த நேரத்தில் எதிர்ப்பு அடைந்து போவது அல்லது தட்டுப்பாடு ஏற்படுவது இதற்கு கற்பகாலத்தில் ஏற்படும் ஆயிரம் குறைகள், காரணங்களை முன்வைக்கலாம்

வெளியிலிருந்து நுகரப்படும் ஹார்மோன் தாங்கல்கள் மற்றும் தாயினுடைய ஆண்மைத் தன்மை, பளுவான வேலைகள் ஆண்களை போல் சகலத்துறையார்களாக இருப்பது ஆண் ஹார்மோன்களின் தலையீடு, மற்றும் உணவு,போதை புகைத்தல் மாசுபடிந்த சுற்றுச்சூழல் நச்சுக்கள் காரணியாகின்றது. இதை விடுத்து  இன்னும் அறியப்படாத காரணங்களும் இருக்கின்றது.

சொகுசாக  நல்ல சூழலில் வளர்ந்த  பெண்கள் சமூகத்தில் மூன்றாம் பாலினர்கள் பிறப்பது அரிது அல்லது அறவே இல்லை என்று கூட சொல்லலாம் கடினமாக உழைக்கும் சமூகத்தில் மூன்றாம் பாலினர்களின் பிறப்பு அதிகமாக இருக்கின்றது

ஆரம்பத்தில் கருவில் இருக்கும் ஒரு சிசு ஆணுமல்ல பெண்ணுமல்ல  அந்த பிண்டம் அர்த்தநாதீஸ்வரர் போலத்தான் இருக்கின்றது. இதை மாற்றுவதற்கு ஆண் பெண் ஹார்மோன்களை சுரக்க வைக்கும் பொதுவான ஒரு உறுப்பு தொப்புளுக்கு கீழ் உதயமாகின்றது 

இந்த பொது உறுப்பு உற்பத்தி செய்யும் ஹார்மோனை பொறுத்து ஆண் அல்லது பெண் அடையாளங்களில் ஒன்றை பிறப்பிக்கின்றது. இந்த ஹார்மோன்களின் தடை  அல்லது எதிர்ப்படைந்து போவது மூன்றாம் பாலினர்கள் பிறப்பிற்கு 50 விழுக்காடுகள் காரணமாகின்றது. இயல்பாக ஆண் பெண் பிறப்பிற்கு காரணமாக இருப்பது XY குரோமோசோம்கள்.

ஒரு உயிரில் 23 சோடி குரோமோசோம்கள் இருக்கின்றது அதாவது 46 இதில் 23 தாயின் முட்டையிலிருந்தும் மறுபாதி தந்தையின் உயிரணுக்களிலிருந்தும் வருகின்றது. இதிலும் 44 குரோமோசோம்கள் உடல் கட்டுமானத்திற்கு காரணியாகின்றது. மிகிதமுள்ள இரண்டும் X மற்றும் Y குரோமோசோம்கள் ஆண் பெண் அடையாளங்களுக்கு காரணியாகின்றது.

தாயின் கருமுட்டையில் XX குரோமோசோம்கள் மட்டும் தான் காணப்படுகின்றது. தந்தையின் உயிரணுவில் X மற்றும் Y குரோமோசோம்கள் இரண்டும் இருக்கின்றது இதில் எது முந்தியடித்துக் கொண்டு இணைகின்றதை பொறுத்து ஆண் அல்லது பெண் பிள்ளைகள் பிறக்கின்றார்கள்.

ஆண் பெண் பிறப்புக்கு தந்தைதான் காரணமாகின்றான்தந்தையின் உயிரணுக்களில் X குரோமோசோம்கள் அதிகமாக இருந்தால் பெண்பிள்ளையாக பிறக்கும் இதுவே மாறிகுரோமோசோம்கள் தந்தையின் உயிரணுக்களில் அதிகமாக காணப்பட்டால் ஆண்பிள்ளைகளாகவே பிறக்கின்றது.

இயல்பாக X குரோமோசோம் நீண்ட நேரம் உயிர் துடிப்புடன் இருக்கும் தன்மை கொண்டது. Y    குரோமோசோம் குறுகிய காலம் கொண்டது இதன் நிமித்தம் ஆண் உயிரணுக்களில் இயல்பாகவே Y குரோமோசோம் நிறைந்து காணப்படுகின்றது.

மூன்றாம் பாலினர்களின் பிறப்பிற்கு இந்த இயற்கையான நிலைப்பாடு தடைப்படுகின்றது அல்லது சிதைவுற்று ஒரு குரோமோசோம் குறைவுபடுகின்றது.

இதற்கான காரணிகளும் முன் சொன்னது போல் எங்கள் வாழ்வியல் முறையில் நெருப்பு சிதலங்களாக கிடக்கின்ற உணவுப்பழக்கம் மற்றும் மாசுபட்ட சுற்றுச்சூழல், நச்சு, ஹார்மோன்களின்  தாக்கமுள்ள உணவுகள் மேலும் கதிரியக்கம், வைரஸ் நோய்கள். வைரஸ்களை வெறும் தொற்றுநோயாக மட்டும் பார்க்காமல் அது மரபணுக்களை வெட்டிவிடும் வேலைகளையும் செய்யும்.

ஒரு ஆணினுடைய உயிரணுக்களின் எண்ணிக்கை, தரத்தை வைத்து அவனின் ஆயுள், அவனை பீடித்துள்ள நோய்களை கூட அறிந்து கொள்ளமுடியும். இன்றைய தலைமுறையினரின் உயிரணுக்கள் வெறும் 50 விழுக்காடுகள்தான் உயிரோட்ட முள்ளது, தாய் தந்தையினர்கள் இது போன்ற சுற்றுச்சூழல் அழுக்குகளையெல்லாம் உருட்டி திரட்டி கருவுற்றால் ஆரோக்கியமான வாரிசுகள் கிடைக்குமா என்ன.?  

◼️ தரமுள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை 39,000,000 ▶️- குறைவான எண்ணிக்கை.
▶️- வால் இல்லாத குட்டையான உயிரணுக்கள். ▶️- பெரிய தலையுடனான உயிரணுக்கள். ▶️- மடிந்த வாலுள்ள உயிரணுக்கள்.▶️- துடிப்பில்லாத நோஞ்சான் உயிரணுக்கள்▶️- இரட்டைத் தலை, இரட்டை வால்.▶️- குட்டை, நெட்டை , சொத்தி.

◼️ மூன்றாம் பாலினர் பிறப்பிற்கு  தந்தையிடமிருந்து  ஒரு குரோமோசோம் குறைவுபடுகின்றது.

◼️ இந்த வெளிக்காரணிகள், அழுக்குகள்  கருவில் இருக்கும் போதே குடும்பக் கட்டுப்பாடு செய்து விடுகின்றது. அதாவது கருவுறும் உயிரணுக்களை  உருவாக்கும் தாய் செல்கள்/ஸ்டம்செல்களை சிதைத்து விடுகின்றது.
வைரஸ்கள் வெளியில் மட்டும்தான் சும்மா சிவனே என்று கிடக்கும் ஒரு உயிருக்குள்ளே சக்தியுடன் இணைந்து விட்டால் போதும் அது உயிரோட்டமுள்ளதாக மாறிவிடுகின்றது. வைரஸ்கள் மனித திசுக்களை ஒரு பிரதி எடுக்கும் இயந்திரமாகத்தான் பயன்படுத்துகின்றது.

தன்னிடம் எதுவெல்லாம் இல்லையோ அதையெல்லாம் மனித செல்களிடமிருந்து பெற்று தன்னை ஈயடிச்சான் கொப்பி போல் பெருக்கி கொள்கின்றது. சில சமயங்களில் தவறான பிரதி கூட அடிக்கப்படுகின்றது.

இயற்கையாக அமைந்த இந்த ஒழுங்கு முறை மரபணு சங்கிலியை யாராவது செயற்கையாக வேறொன்றிலிருந்து எடுத்து வெட்டி ஒட்டினால் கண்டிப்பாக பகுப்பாய்வில் தெரியவரும்கொரோனா, சார்ஸ்-கோவி-2 வைரஸ் மரபணுச் சங்கிலியில் யாராவது இடைச்செருகலாக ஏதாவது ஒரு வர்ண சங்கிலியை செருகி வைத்திருந்தால் கண்டிப்பாக ஆய்வுகளில் தெரியவந்திருக்கும்.

வௌவால்களிலுள்ள கொரோனா வைரஸ்கள் பற்றிய ஆய்வுகளில் மனிதர்களுக்கு ஆபத்தான சார்ஸ்-கோவி-2 வைரஸ் இயற்கையான மரபணு பிறழ்வுக்கு உள்ளாகியிருந்த ஒரு வைரஸ் இதை யாரும் செயற்கையாக உருவாக்கிஉயிரியல் ஆயுதமாக பயன்படுத்தவில்லை இதுவொரு விபத்து என்று எடுத்துக்கொள்ளலாம்.

இருப்பினும் வுஹான் ஆய்வகத்தில் கண்டறியப்பட்ட சார்ஸ்-கோவி-2 வைரஸ் எப்படி வெளியில் வந்தது தற்செயலாக பரவியதா அல்லது வேண்டும் என்றே பரப்பப்பட்டதா என்பதுதான் ஆய்வு செய்ய வேண்டிய ஒன்று.

சார்ஸ்-கோவி-2 வைரஸ் தொற்றுக்கு எதிராக 80 க்கு மேற்பட்ட மருந்துகள் ஆய்வுகள் செய்யப்பட்டுவருகின்றது இதில் பாதிக்கு மேற்பட்ட மருந்துகள் எபோலா வைரஸ் உட்பட, MERS, SARS நிபா மற்றும் மலேரியா நோய்களுக்காக தயாரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட மருந்துகள் மற்றும் இன்று வரைக்கும் அனுமதிக்கப்படாத மருந்துகளும் திரும்பவும் சார்ஸ்-கோவி-2 வைரஸ்களுக்கு எதிராக தூசி தட்டி ஆய்வுகள் செய்யப்படுகின்றது.

இந்த மருந்துகள்  எப்படி மனித செல்களில் வேலை செய்கின்றது இதனுடைய பக்கவிளைவுகள்  என்ன. பக்கவிளைவுகள் இல்லாமல் ஒரு மருந்து கூட இல்லை எல்லா மருந்துகளும் ஏதோ ஒரு  பக்கவிளைவின் அடிப்படையில் தான்  செயல்படுகின்றதுஎந்த மருந்தாக இருந்தாலும்  உடல் திசுக்களை அழிக்காமல்  வைரஸ்களை அழிக்கமுடியாது என்பதுதான் உண்மை.

மலேரியா மருந்து
குளோரோகுயின் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் குளோரோகுயின் மருந்து வைரஸ்கள் உள்ளே நுழைவதை தடுக்கின்றது. ( இந்த வேலையை பலம் பொருந்திய எங்களுடைய  நோய் எதிர்ப்பு சக்தி செய்கின்றது)

எச்..வி. மருந்து லோபினாவிர் + ரிடோனாவி ரிடோனாவி மருந்து வைரஸ்கள் மரபணு சங்கிலியை பிரதி எடுப்பதை தடுக்கின்றது.

🙏பரப்பிரமத்தின்  ஆட்சி மலரட்டும்.   …

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக