சிந்து- [ஹரப்பா - மொகஞ்சதாரோ] முத்திரைகள்: சிந்து சமவெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட சின்னங்கள் எழுத்துமுறையா? அல்லது சிந்து- வர்த்தக முத்திரை, லேபிள் மற்றும் ஆடை வடிவமைப்பு அச்சு பதிவுகள் [டிசைன் முத்திரை] .? [Design stamp]: ஆடைகள் ஆண்/ பெண் தனியாக லேபிள் முத்திரைகள் சிறப்பம்சமாக இருந்திருக்கின்றன.
சிந்து சமவெளி நாகரிகம் என்பது பண்டைய சிந்து சமவெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட சின்னங்களின் தொகுப்பைக் குறிக்கின்றது, இது கிமு 2600-1900 ஆம் ஆண்டுகளில் தற்போதைய பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவில் செழித்து வளர்ந்த உலகின் ஆரம்பகால நகர்ப்புற நாகரிகங்களில் ஒன்றாகும். சிந்து சமவெளி எழுத்து இன்னும் புரிந்துகொள்ளப்படவில்லை, அதாவது அதன் சின்னங்கள் அவை வெளிப்படுத்தும் மொழியையோ அல்லது பொருளையோ புரிந்து கொள்ள திட்டவட்டமாக விளக்கப்படவில்லை.
அறிஞர்கள் பல தசாப்தங்களாக இந்த சின்னங்களைப் படித்து வருகின்றனர், ஆனால் இருமொழி உரை அல்லது ரொசெட்டா கல் போன்ற மொழிபெயர்ப்பு விசை இல்லாததால், சின்னங்களின் அர்த்தங்கள் மழுப்பலாகவே உள்ளன. முத்திரைகள், பலகைகள், மட்பாண்டங்கள் மற்றும் பிற பொருட்கள் போன்ற பல்வேறு கலைப்பொருட்களில் இந்த எழுத்து/முத்திரைகள் காணப்படுகின்றது.
இருமொழி கல்வெட்டு இல்லாதது: கல்வெட்டுகளின் சுருக்கம், பெரிய இருமொழி நூல்கள் இல்லாதது மற்றும் ஸ்கிரிப்ட்டின் மொழியியல் அல்லாத தன்மை போன்ற காரணிகளால் ஸ்கிரிப்டைப் புரிந்துகொள்வதற்கான முயற்சிகள் சவால்களை எதிர்கொண்டுள்ளன. ஸ்கிரிப்ட்டின் தன்மை குறித்து பல்வேறு கருதுகோள்கள் முன்மொழியப்பட்டுள்ளன, இதில் அது ஒரு மொழியையோ அல்லது ஒரு வகையான மூல-எழுத்தையோ குறிக்கின்றது என்பது தவறான புரிதலை எடுத்து செல்கின்றது.
இந்த முத்திரைகள் இன்றுவரையில் எந்த மொழிக்கும் சொந்தம் கிடையாது. அவைகள் லேபிள் /வர்த்தக முத்திரையாக இருக்கும் பட்சத்தில் பொதுவில் வைக்கப்படும்.
எதிர்காலத்தில் இந்த உலகத்தை ஆளப்போவது செயற்கை தொழில்நுட்பம் [Ai] இதனை பயன்படுத்தி இதற்கான விடையை கண்டிப்பாக கண்டறிய முடியும்.
நேர்த்தியான அளவீடுகள்: சிந்து சமவெளிப் பண்பாட்டின் சிறப்பு சாதனைகளில் ஒன்று அதன் சீரான,நேர்த்தியான அளவீடுகள் ஆகும், இது அனைத்து நகரங்களிலும் சமமாகப் பயன்படுத்தப்பட்டது மற்றும் வர்த்தகம் மிகவும் உச்சத்திலிருந்தது. இங்கு வாழ்ந்த மக்கள் உற்பத்தியாளர்களாக வாழ்ந்த சாதாரண மக்கள், இவர்களுக்கு தலமை இருந்ததா? என்றால் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இருந்திருந்தால் அவர்கள் யார், தெரியாது. வேதங்களை எழுதிய ஆரியர்களா....?
சிந்து சமவெளி நாகரிகத்தின் அரச இலை டிசைன் செய்யப்பட்ட பானை: சிந்து சமவெளி நாகரிகத்தின் சம்பா மாதிரி, மியோனின் நடனப் பெண்கள் என்று அழைக்கப்படுகின்ற.ஜோ தாரோ களிமண் மாதிரிகள். நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்ட ஆடை மற்றும் நெற்றிப்பட்டம், கைகட்டில் தாயத்து அணிந்த ஒரு தலைவன். இந்த எடுத்துக்காட்டுகள் ஒரு தலைவன்/முதலாளி இருப்பதற்கான ஆதாரங்களை காட்டுகின்றது.
சிந்து வர்த்தக முத்திரை/ லேபிள்கள்: உலகளாவிய வர்த்தகம் காரணமாக, இந்த சிந்து வர்த்தக முத்திரை லேபிள்கள் மெசபடோமியாவிலும், தமிழ் நாடு போன்ற பல இடங்களிலும் காணப்படுகின்றன. பிந்தைய காலத்தில் இதை போன்ற நகல்களை உருவாக்கி தங்களுடைய தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது இடப்பெயர்வு காரணமாக எடுத்து வரப்பட்டிருக்கலாம்.
அதே நேரத்தில், மெசபடோமியாவில் உள்ள பல்வேறு நகர-மாநிலங்கள் ஒன்றுக்கொன்று எண்ணற்ற போர்களை நடத்தி, அப்பகுதியில் மேலாதிக்கத்திற்காக தங்களுக்குள் சண்டையிட்டன. போர்கள் காரணமாக இடம் பெயர்ந்த மக்களாக கூட இவர்கள் இருக்கலாம்.
எண்கள்/அடைப்புக் குறிகள்; இன்று நாங்கள் பயன்படுத்தும் இலக்கங்கள் மற்றும் கூட்டல் பெருக்கல் அடைப்புகுறி அடையாளங்கள். எழுத்து முறையா அல்லது குறியீடா..? இவைகள் வெறும் குறியீடுகள் மட்டுமே எந்த மொழியில் வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம். சிந்து முத்திரைகள் குறியீடுகள் தயாரிப்பு நிறுவனங்களின் லோகோக்களை உருவாக்கியவர்கள் அதற்குள்ளே ஒரு சில காரணங்கள் அர்த்தங்களை வைத்து உருவாக்கி இருக்கிறார்கள்.
சிந்து, எச்சரிக்கை மற்றும் அறிவிப்பு பலகைகள்: அது ஒரு சில அர்த்தங்களை பேசுகிறது. எடுத்துக்காட்டாக: எச்சரிக்கை மற்றும் அறிவிப்பு பலகைகள் உணர்த்துவது இங்கு புலிகள் வாழும் காடு, மீன்கள், பறவைகள் வலை போட்டு பிடிக்கும் படங்கள் அதை உணர்த்த பேசுகிறது. இன்றும் கூட போக்குவரத்து விதிகள் குறியீடு படங்கள் மற்றும் பொருள்கள் இதையே பேசுகிறது.
மற்றும் வாணிக முத்திரைகள், அரசு இயந்திரங்கள் பயன்படுத்தும் முத்திரைகள், சில்லறை காசுகள் காகித பணம்களில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகள் சித்திரங்கள் இதேபோல் ஒரு சில காரணங்களை பேசுகிறது. [டாலர், யூரோ, ரூபாய் $ € ₹ ]இந்தக் குறியீடு படங்களை படித்தவன் படிக்காதவன் வேற்று மொழி பேசுகிறவர்கள் யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ள முடியும். அவைகள் பொதுவில் வைக்கப்பட்டு இருக்கிறது.
போர் குதிரையேற்ற நினைவு சின்னங்கள்: போர் குதிரையேற்ற நினைவு சின்னங்கள் குதிரையின் குழம்புகள் நிலத்தில் பட்டால் போரில் விழுந்த தலைவனை காட்டுகிறது. குதிரை இரண்டு கால்களையும் மேலே எழுப்பிய நினைவு சின்னங்கள் வெற்றி பெற்ற வீரனை காட்டுகிறது.
குதிரை சவாரியின் தோற்றம்: குதிரை சவாரியின் தோற்றம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. குதிரைகள் பாலுக்காகவே வளர்க்கப்பட்டதாக அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன,
இது கிமு 3500 முதல் 3000 வரை வளர்ப்பு முறையைக் குறிக்கிறது கிமு 2000 க்கு சற்று முன்னர் மெசொப்பொத்தேமிய ஊர் III காலத்தின் சித்தரிப்புகள், குதிரையின் மீது (முன்னோக்கி அமர்ந்திருக்கும் சவாரி, விழும் மேனி மற்றும் புதர் வால் முடி) சவாரி செய்வதற்கான ஆரம்பகால உருவக ஆதாரமாக இருக்கலாம்,
குதிரையேற்ற/ வளர்ப்பு சின்னங்கள்: சிந்து சமவெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட சின்னங்களில் பல குறியீடுகள் குதிரையேற்ற/ வளர்ப்பு மற்றும் கழுதை, காளை, நீர் எருமை, வளர்ப்பு சம்பந்தப்பட்ட குறியீடுகளாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். குதிரை, கழுதை வளர்த்ததற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த பண்டைய குறியீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் திறந்து இருப்பது தான் சரியானது.
இந்த பண்டைய முத்திரை, எழுத்துக்களின் ரகசியங்களை ஒரு நாள் வெளிக்கொணரும் நம்பிக்கையில், ஆராய்ச்சியாளர்கள் கணக்கீட்டு பகுப்பாய்வு, புள்ளிவிவர அணுகுமுறைகள் மற்றும் ஒப்பீட்டு மொழியியல் முறைகளைப் பயன்படுத்தி சிந்து சமவெளி எழுத்துக்களை தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.
சிந்து மகள்கள் கைத்தறி ஆடைகள் : சிந்து கலாச்சாரத்தின் விவசாயிகள் கோதுமை, பார்லி , பயறு , கொண்டைக்கடலை , பட்டாணி , தினை, பருத்தி, ஆளி விதை, எள் மற்றும் ஆளி செடி[கைத்தறி] ஆகியவற்றை பயிரிட்டனர்.
சிந்து மகள்கள் கைத்தறி ஆடைகள் மற்றும் மட்பாண்டங்கள் தயாரிப்பிலும் அதை வர்த்தகம் செய்வதிலும் சிறந்து விளங்கினார்கள் அதற்காக வணிக முத்திரைகள் மற்றும் ஆடை டிசைன் முத்திரைகளை உருவாக்கியிருக்கிறார்கள்.ஆடைகள் ஆண்/ பெண் தனியாக லேபிள் முத்திரைகள்
பருத்தியை பயிரிடுவது; பருத்தியை பயிரிட்டது, மேலும் அந்த நேரத்தில் நிலையான ஆடைகளாக இருந்த இடுப்புத் துணிகள் மற்றும் நீண்ட அங்கிகளை உற்பத்தி செய்தது. சில துணிகள் டிசைன் மற்றும் பிரகாசமான வண்ணங்களில் சாயமிடப்பட்டிருந்தன. குறிப்பாக சிவப்பு கருப்பு நிறங்கள்.
களிமண் மற்றும் கல் பாத்திரங்கள்: பல்வேறு வடிவங்களைக் கொண்ட பல்வேறு வகையான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இவற்றில் சில அன்றாட பயன்பாட்டிற்காக பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களாக இருந்தன, ஆனால் சில மிகவும் மதிப்புமிக்க தனிப்பட்ட துண்டுகளாகவும் இருந்தன.
சமையலறை பாத்திரங்கள்: அவர்கள் சமையலறை பாத்திரங்கள் (எ.கா. சமையல் பாத்திரங்கள், பரிமாறும் தட்டுகள், தண்ணீர் குடங்கள், பெரிய சேமிப்பு கொள்கலன்கள், சிறிய களிம்பு பானைகள்),
பொம்மைகள் உற்பத்தி: குழந்தைகளுக்கான பொம்மைகள் (விலங்கு சிலைகள்), எழுதும் பேனாக்கள், பகடை , பளிங்குக் கற்கள் , விளையாட்டுத் துண்டுகள் மற்றும் எலிப்பொறிகளை உற்பத்தி செய்தனர்.
கருவிகள் மற்றும் ஆயுதங்கள் : பொதுவாக விவசாயம், வீட்டு, தொழில் கருவிகள் உதாரணமாக, கத்திகள், சவரக்கத்திகள் , சுத்தியல்கள், கோடரிகள், பயிற்சிக் கருவிகள், கத்ரிகோல், கத்திகள், வாள்கள் மற்றும் அம்புக்குறிகள் தயாரிக்கப்பட்டன. பெரும்பாலான கனமான கருவிகள் கல், எலும்பு அல்லது மரத்தால் செய்யப்பட்டன, கத்திகள் மற்றும் ரேஸர்கள் கடின போலியான செம்பினால் செய்யப்பட்டன . தகரம் பற்றாக்குறை காரணமாக வெண்கலம் பற்றாக்குறையாக இருந்தது .
உலோகங்கள் பயன்பாடு; தாமிரம், வெண்கலம், வெள்ளி மற்றும் தங்கம் ஆகியவற்றின் உலோகவியல் உற்பத்தி/ உலோகவியல் பிரித்தெடுத்தல் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தி உலோகங்களைசெயலாக்குதல்மற்றும் வார்ப்பு, துரத்தல், சுத்தியல்/பட்டறை, ஃபோர்ஜிங் மற்றும் வேலைப்பாடு போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தி அவற்றை பதப்படுத்துதல் அறியப்பட்டது .
நகைகள்: நகைத் தொழில் பல்வேறு வகையான பொருட்களை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகித்தது. முக்கிய பொருட்கள் உலோகம், அரை விலைமதிப்பற்ற கற்கள் மற்றும், எல்லாவற்றிற்கும் மேலாக, குண்டுகள் . சில நேரங்களில் ஒரு சிறிய எழுத்துடன் கூடிய கல் வளையல்களும் மிகவும் பிரபலமாக இருந்தன. கண்டுபிடிக்கப்பட்ட நகைகளின் தரம் மிகவும் வளர்ந்த கைவினைத்திறனைக் குறிக்கிறது.
மொல்லஸ்க் ஓடுகளின் செயலாக்கம் : குறிப்பாக பிரபலமான மூலப்பொருள் நத்தை ஓடுகள் மற்றும் கடல் மொல்லஸ்க்குகளின் மஸ்ஸல் ஓடுகள் ஆகும் , அவற்றில் இருந்து ஏராளமான பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
வர்த்தகம்/நிறுவனங்கள்: தொழில்துறை ரீதியாகவும், இடஞ்சார்ந்த முறையிலும் மிக விரிவான உழைப்புப் பிரிவு இருந்தது . சிந்து நதிக்கு கிழக்கே தற்போது வறண்டு கிடக்கும் காக்ரா நதியில் நடத்தப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் , குடியேற்றங்கள் ஒவ்வொன்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உற்பத்தி நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்றிருந்தன என்பதைக் குறிக்கின்றன.
உதாரணமாக, சில நகரங்கள் உலோகத்தை பதப்படுத்த அதிக வாய்ப்புள்ளது, மற்றவை பருத்தியை உற்பத்தி செய்ய விரும்பினார்கள்.[பெருமளவிலான பருத்தி ஆடைகளை உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்தார்கள்]
இந்த உற்பத்தி பொருட்களுக்காக நிறுவன முத்திரைகள் அந்த பொருட்களை வகைப்படுத்த மாறுபட்ட குறியீடுகளை பயன்படுத்தியிருக்கின்றார்கள்.
சிந்துவெளி எழுத்துக்கள் ஒரு திராவிட மொழியையோ அல்லது பிராந்தியத்தின் மற்றொரு பண்டைய மொழியையோ குறிக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இருப்பினும், சிந்து எழுத்து முறையைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோலை வழங்கும் ரொசெட்டா கல் போன்ற கண்டுபிடிப்பு இல்லாமல், அதன் பொருள் மழுப்பலாகவே உள்ளது.
இந்த எழுத்து பொதுவாக வலமிருந்து இடமாக நேரியல் முறையில் எழுதப்படுகின்றது. இது களிமண் குறிச்சொற்கள் அல்லது மட்பாண்டங்களை முத்திரையிடப் பயன்படுத்தப்படும் சிறிய முத்திரை கற்கள் உட்பட பல்வேறு பொருட்களில் காணப்படுகின்றது.
திராவிட மொழிகள்/இந்திய மொழிகள் சிந்து சமவெளி எழுத்திலிருந்து உருவானதா? இந்த கேள்விக்கான பதிலை கண்டறிவது அவ்வளவு சுலபமாக இருக்காது. ஒரு மொழியின் எழுத்துருக்களை ஒரு எழுத்துருக்களின் படிநிலை குழுமத்திலிருந்து பெறமுடியாது அது பல மொழிகளின் தொடக்கமாக இருக்கலாம்.
ஒரு மொழியின் எழுத்துருக்கள் அந்த மக்களின் பேச்சு வடிவத்திற்கு பிறகு வருகின்றன இருப்பினும் பிற்காலத்தில் வடிவமைக்கப்பட்ட எழுத்துருக்கள் தான் அந்த மொழியின் பேச்சு வடிவத்திற்கு ஒரு அடையாளமாகவும், அந்த மொழியின் காலத்தை கணிக்கும் மூலமாகவும் இருக்கின்றது. இந்தியாவில் எந்த மொழிக்கும் அதன் சொந்த எழுத்து வடிவம் இல்லையே, அது பிராமியின் தொடக்கமாகவே இருக்கின்றன.
அசோகர் கல்வெட்டு,பினீசியர்கள் எழுத்துருக்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டது, காரணம் அவருக்கு சிந்துசமவெளி நாகரீகம் பற்றி தெரிந்திருக்க வாய்புகள் இல்லை. அசோகரின் தூண்கள் பெரும்பாலும் பிராகிருத மொழியில் பொறிக்கப்பட்டிருந்தன, மேலும் அவை பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டன. [பிராகிருதம் இந்தோ-ஆரிய மொழிகளுக்கான பெயர்.]
ஃபீனீசிய எழுத்துமுறை என்பது இடமிருந்து வலமாக எழுதப்பட்ட 22 எழுத்துக்களைக் கொண்ட மெய் எழுத்துக்களாகும், இதன் வரிசை அப்ஜத்திலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது மற்றும் இது கிமு 11 முதல் 5 ஆம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப்பட்டது.
அப்ஜத்; (அரபு: أبجد, ஹீப்ரு: אבגד), அப்காத் என்றும் அழைக்கப்படுகின்றது, இது மெய் எழுத்துக்கள் மட்டுமே குறிப்பிடப்படும் ஒரு எழுத்து முறையாகும், மேலும் உயிரெழுத்துக்களை வாசகர் கழிக்க வேண்டும். இது மெய் எழுத்துக்கள் மற்றும் உயிரெழுத்துக்கள் இரண்டிற்கும் கிராஃபீம்களை வழங்கும் எழுத்துக்களுக்கு முரணானது.
கிராஃபீம்கள் எந்த அர்த்தத்தைக் கொண்டிருக்கவில்லை சிந்து முத்திரைகள் மற்ற மொழிகளிலும் இது போன்றே இருக்கலாம். எ|கா; "A for Apple" இதில் ஆப்பிள் என்பதற்கு எந்த அர்த்தமும் கிடையாது, அதற்கு பதிலாக வேறு ஒரு பொருளை வைக்கமுடியும்.
பினீசியர்கள் இந்த உலகத்திற்கு, 22 எழுத்துருக்களை தந்தவர்கள் அவர்களின் வருகைக்கு பிறகு பிராமி, அதனுடைய தொடர்பானது இந்திய மொழிகளின் தொடக்கமாக கருதப்படுகின்றது.
எழுத்துருக்களின் விடையத்தில் ஒருவன் உருவாக்கின்றான் மற்றவர்கள் அதை பிரதி எடுக்கின்றனர்.பினீசியர்கள் எழுத்துருக்களை ஒருவன் தலைகீழாக படிக்கின்றான், மற்றவன் பக்கவாட்டில் படிக்கின்றனர், நேராக படிக்கப்பட்ட எழுத்துருக்கள்தான் இன்று ஐரோப்பிய ஆங்கில எழுத்துருக்களாக நிலைபெற்று நிற்கின்றன, மற்றவர்கள் வேறு எழுத்துருக்களை உருவாக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார்கள்.
சிந்துவெளி எழுத்துக்கள் பிராமி எழுத்துமுறையுடன் தொடர்புடையது, பிராமி தமிழீயின் புது வடிவம். அதற்காக பிராமி எழுத்துருக்கள் அங்கிருந்துதான் வந்தது என்று பொருள்படாது.
தமிழீ,பினீசியர்களின் எழுத்துருக்களின் புது வடிவம் பிராமி, பிராமி எழுத்துருக்களிலிருந்து கிரந்தம், தமிழ் எழுத்துருக்கள் உருவானது. சமஸ்கிருதம் ஒரு இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த, இந்தோ-ஆரியமொழி ஆகும். திராவிட மொழிகள் வேறு எந்த மொழிக்குடும்பத்துடன் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.
சிந்து சமவெளி நாகரிகம், தமிழர் நாகரிகம் என்பதற்கு இருக்கும் ஒரே ஒரு சான்று பொங்கல் பண்டிகையின் போது கொண்டாடப்படும் தமிழர் பாரம்பரிய நாகரிகம் ஜல்லிக்கட்டு விளையாட்டு மற்றும் அவர்களுடைய வழிபாட்டு தமிழ் கடவுள்களான சேயோன், மாயோன், வேந்தன் மற்றும் வருணன் ஆகியோர் முதல் இந்திய தெய்வங்களும் தான்.
சிந்துவெளி எழுத்துக்கள் ஒரு எழுத்து மொழியைப் பதிவு செய்கிறதா என்ற சந்தேகம் உள்ளது. சிந்துவெளி எழுத்துக்கள்/குறியீடுகளை பகுப்பாய்வு செய்த தமிழக அறிஞர்கள், தமிழ் எழுத்துக்கள் இதற்கான திறவுகோலை தருகின்றன என நம்புகின்றார்கள்.
எகிப்திய (கிமு 3000), சுமேரிய (கிமு 4000) போன்ற வெண்கல யுக நாகரிகங்களில், சிந்து சமவெளி (கிமு 3500) எழுத்து/குறியீடுகள் மட்டுமே இன்னும் புரிந்துகொள்ள முடியாததாகவே உள்ளது.
எகிப்தின் ராமேசஸ் மற்றும் சுமேரிய மன்னர்கள் மெஸ்கலாம்டக் மற்றும் கில்கமேஷ் போன்ற ஆட்சியாளர்கள் IVC இல் குறிப்பிடப்பட்டதைப் போல. சிந்து சமவெளி ஆட்சியாளர்கள் அல்லது ஆளுமைகள் போன்ற எந்தப் பெயர்களும் எஞ்சியிருக்கும் வரலாற்றுப் பதிவுகள் அல்லது புராணங்களில் சான்றளிக்கப்படவில்லை.
சிந்து சமவெளி நாகரிகம் வர்த்தகம் மூலம் ஈரானுடன், அதன் மூலம் எலாமியர்களுடன் நன்கு இணைக்கப்பட்டிருந்தார்கள்.
எலாமியர்கள்[ஏலம் என்பது மத்திய கிழக்கில் தெற்கு ஈரானில் உள்ள நவீன கால மாகாணங்களான இலம் மற்றும் குஜெஸ்தான் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு பகுதியாகும் (இதில் நவீன கால தெற்கு ஈராக்கின் சில பகுதிகளும் அடங்கும்), மேலும் அதன் நாகரிகம் கிமு 500 இல் இருந்து வளர்ந்தது. கி.மு., ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்தது] ஏலம், சுமேரிய நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் இடப்பெயர்வு காரணமாக இந்த எழுத்துருக்கள் இடம்மாறி இருக்கலாம். தொடரும்
அழிந்து வரும் மொழிகள்: இந்த உலகத்தில் எத்தனை மொழிகள் பேசப்பட்டு வந்தன சரியாக தெரியாது. அவை எண்ணில் அடங்கா, அந்த மொழிகள் அழிந்ததற்கான முக்கிய காரணம் அதற்கான சொந்த எழுத்து வடிவம் இல்லாதது மற்றும் சொற்களஞ்சியங்கள் அதற்கான இலக்கிய படைப்புகளும் இல்லாதது தான்.
தமிழ் மொழி அவ்வளவு சீக்கிரத்தில் அழிந்து போகாது அதற்கான எழுத்து வடிவங்களில் பல படைப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டன. ஒரு மொழி இருந்ததற்கான அடையாளமே அதனுடைய எழுத்து வடிவமே.
ஒரு மொழிக்கு எழுத்தின் படைப்புகள் அவசியமானது. திருக்குறளும் கம்பராமாயணமும் தேவாரங்களும், சங்க இலக்கியங்களும் இருக்கும் வரைக்கும் தமிழ் மொழி உயிர்ப்புடன் இருக்கும்.
இன்று எங்களுடைய சமகாலத்தில் பேசப்படும் மொழிகளில் நூற்றுக்கணக்கான மொழிகள் அழிந்து வரும் நிலையில் உள்ளன இந்த மொழிகளைப் சரளமாக பேசும்/எழுதும் எஞ்சிய உள்ள வயதானவர்கள் இருக்கும் வரையும் இந்த மொழிகள் உயிருடன் இருக்கும்.
எதிர்காலத்தில் ஆங்கிலம் தவிர அத்தனை மொழிகளும் அழிந்து விடும் அபாயத்தில் உள்ளது, பெரும்பாலான மொழிகள் தமிழ் மொழி உட்பட அதனுடைய எழுத்து வடிவத்தில் இருந்து விலகிய நிற்கின்றது.
முதலில் எழுத்து வடிவம் அழிந்து போகும் அதுக்கப்புறம் பேச்சு வழக்கும் காணாமல் போகும். தமிழ் மொழியை பேச தெரிந்தவர்கள் கூட தமிழ் மொழியில் எழுதுவதில்லை ஆங்கில தட்டச்சுகளை பயன்படுத்துகிறார்கள்.
தமிழ் மொழியை, தமிழ் பாடசாலைகள் கூட புறக்கணிக்கப்படுகின்றன. ஆங்கிலம் பேச, எழுதுவதற்கு அவர்களுக்கு இலகுவாக இருக்கின்றது. ஆங்கிலம் உலகமயமாக்கல், நவீன தொழில்நுட்பம் வேலை வாய்ப்பு செயற்கை தொழில் நுட்பங்கள் அறிவியல் பயன்பாட்டுக்கு ஆங்கிலம் மிக அவசியமாக இருக்கின்றது. எதிர்காலத்தில் ஆங்கிலம் நிலைத்து நிற்க இவைகள் தான் காரணம்.
சமீபத்தில் யூடியூப் இல் ஒரு பரப்புரையை கேட்டேன் தமிழில் தான் உரையாடினார்கள் இருப்பினும் அதில் 60 விழுக்காடு ஆங்கிலம் கலந்து பேசினார்கள் அதாவது ஆங்கில வார்த்தைகளை தமிழில் பேசினார். உங்களுக்கு ஆங்கில வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்தால் மட்டுமே அந்த உரையை முழுமையாக புரிந்து கொள்ள முடியும் ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாதவர்களால் அந்த உரையை புரிந்து கொள்ள முடியாது. தமிழ் இந்த நிலைமையில் தான் இருக்கின்றது.
ஜெர்மனி, பாரீஸ், இத்தாலி போன்ற நாடுகளில் வாழும் தமிழ் குழந்தைகள் தமிழ் பேசுகிறார்கள் அதில் பாதிக்கு மேல் அந்த நாட்டின் மொழிகளின் தாக்கங்கள் இருக்கின்றன. அந்த நாட்டின் மொழிகள் உங்களுக்கு தெரிந்தால் தான் இந்த குழந்தைகள் பேசுவது புரியும். இது தவறில்லை இது அவர்களுடைய வாழ்வியல் முறை.
ஒரு எடுத்துக்காட்டு: இன்று ஒரு டாக்டர் அப்பாயின்மென்ட் இருக்கிறது. பிளட் டெஸ்ட், ரொட்டீன் செக்கப் வேலை இருக்கிறது. பஸ் இன்னைக்கு லேட்டா வருகிறது டைம் வேற போகிறது ப்ரேக்பாஸ்ட் எடுக்கலாம் என்றால், மார்னிங் டிபன் எந்த ஃபுட்டும் எடுக்க கூடாது என்று சொல்லி இருக்கிறார்.
எழுத்து வடிவம் தமிழாக இருந்தாலும் உச்சரிப்பு பூராவும் ஆங்கிலத்துடன் சேர்கின்றது. பல தமிழ் சொற்கள் வேற்று மொழி பேசுகின்றவர்களிடம் உச்சரிப்பு வடிவத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக: கட்டுமரம், தரை செம்மண் [katamaran, terracotta]
மொழிகள் இப்படித்தான் காணாமல் போகின்றன. பழைய மொழிகள் எழுத படிக்க கடினமானவை இதன் நிமித்தம் புதிய மொழிகள் அதனை விழுங்கி விடுகின்றன.
ஸ்காட்லாந்தை பூர்விகமாக கொண்ட ஒரு மொழி அதை உயிர்ப்புடன் வைத்திருக்க அரசாங்கம் முயற்சி செய்த போதிலும் நிறைய பேர் அந்த மொழியை கற்றுக் கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை அது இப்போது நடைமுறையில் இல்லாமல் போய்விட்டது.
ஆதித்தமிழர்கள் தமிளை எப்படி உச்சரித்து பேசினார்கள் என்பது எவருக்கும் தெரியாது, எம்மா, காப்பா, உம்மா, வாப்பா, பழைய கிரேக்க, துருக்கி மக்கள் அப்பாவை வாப்பா என்றுதான் அழைக்கிறார்கள். [இந்த ஒலிகள் பசு ஒரு காளை கத்தும் "ம்மா" என்ற ஒலியை உள்ளடக்கியது]
இந்த பூமியில் மக்கள் ஒரு பொதுவான மொழியைத்தான் பேசி வந்திருக்கிறார்கள் எழுத்துருக்கள் வந்த பிற்பாடுதான் மொழிகள் பிரிந்து போயின.
சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இந்தோ ஐரோப்பிய மொழிகளாக [லத்தீன் குடும்பம்] இருந்தன எழுத்து வழக்கில் பிராமி குடும்பத்தில் சேர்ந்தன, தமிழை சுமேரியர்கள் சிந்துசமவெளி மக்கள் பேசி இருந்தாலும் அதற்கான மொழி வடிவம் பிராமியிலிருந்து தொடங்குகிறது. தமிழீ பண்டைய தமிழர்களின் எழுத்து வடிவம் பிராமி தமிழீயின் புது வடிவம்.
[பினீசியர்களின் எழுத்து வடிவமும் பிராமியில் உள்ளடக்கம்] [பிராக்கிருதம் என்பது ஒரு மொழி அல்ல பல மொழிக் குடும்பங்களை சேர்ந்த எழுத்துருக்களின் கோர்வை] அசோகரின் தூண்ணில் பொறிக்கப்பட்ட எழுத்துருக்கள் பல மொழிகளிலிருந்து எடுக்கப்பட்டவை.
யுனைஸ்கோ உலகம் மொழிகளில் ஐரோப்பாவில் 150 க்கும் மேற்பட்ட மொழிகள் ஆபத்தில் இருப்பதாக பட்டியலிட்டு இருக்கிறது. மற்றும் பல ஆசிய மொழிகள் அழியும் தருவாயில் உள்ளன.
தமிழ் மொழியின் தோற்றம் பற்றி ஆராய்வதை காட்டிலும் அதை காப்பாற்றுவது முக்கியமான வேலையாக இருக்கிறது.
2,450 மொழிகள் அழியும் அபாயத்தில் உள்ளன.
- கரீபியன் உட்பட வட மற்றும் தென் அமெரிக்கா 222 மொழிகள்.
-தென் அமெரிக்கா 226 மொழிகள்.
-ஐரோப்பா, ரஷ்யா காகசஸ் உட்பட 148 மொழிகள்.
-ஆப்பிரிக்க 428 மொழிகள்
-ஆசிய, இந்திய உட்பட்ட 693 மொழிகள்.
-ஆஸ்திரேலியாவில் [ஓசியானியா- தீவு வாசிகள் ] 733 மொழிகள்.
சிங்கம் [சீயம்] [சிகை -> சீயம் --> சிங்கம்] : சிங்கம் என்ற பெயர் சிகை என்ற வேர்ச்சொல்லில் இருந்து உருவான தமிழ் சொல் [சிகை என்பது சிங்கத்தின் பிடரி மயிரை குறிக்கும் ஒரு சொல்] இந்தியா பூராகவும் ஒரு ஒற்றுமை உச்சரிப்பு கொண்ட மொழியில் தான் பேசினார்கள். தமக்கென ஒரு எழுத்துருக்கள் வந்த பிற்பாடுதான் மொழிகள் பிரிந்து போயின என்பதற்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு : இதுபோன்று நிறைய வேர்ச்சொற்களை நீங்கள் ஆராய்ந்து பார்க்கலாம்.
இந்திய மொழிக் குடும்பம் [பிராமி/தமிழி]:
- சமஸ்கிருதம் [சிங்ககா]
- [வடசொல் சிம்மம்]
- மலையாளம் [சிங்கம்]
- தெலுங்கு [சிங்கம்]
- ஹிந்தி, உருது [ சீர்]
- சிங்களம் [சிங்கா]
- குஜராத்தி [சிங்]
- மலேசியா [சிங்கா]
- நேபாளம் [சிங்]
- பெங்காலி [சிங்கம்]
- இந்தோனேசியா [சிங்கா]
- அசாம் [சிங்கம்]
இந்த மொழிகளில் எழுதி வைத்தால் படிக்க முடியாது ஆனால் பேசும்போது புரிந்து கொள்ள முடியும் அது சிங்கம் தான் என்று.அவர்கள் தமிழில் தான் பேசுகிறார்கள் ஆனால் வேறு வேறு மொழிகளின் எழுத்துருக்களின் அடிப்படையில். ஆதியில் ஒரு மொழியில் ஒன்றாக பேசி திரிந்தவர்கள் எழுத்துருக்கள் வந்த பிற்பாடு பிரிந்து போனார்கள்.
ஐரோப்பிய மொழிக் குடும்பம்:
- ஆங்கிலம் [லயன்]
- ஜெர்மனி [லுவ]
- இத்தாலி [லியோன்]
- பிரெஞ்சு [லியோனா]
- இலத்தீன் [லையோ]
- கிரேக்கம் [லியோதாரி]
- ஸ்பெயின் [லியோன்]
- ஆப்பிரிக்கா [லீயு]
அரிமா --> சிங்கம் [சரியாக தெரியாது,,, ஆதாம் விலங்குகளுக்கு பெயர் வைத்ததாக வேதம் சொல்கின்றது அவன் சிங்கத்திற்கு அரிமா என்று பெயர் வைத்திருக்கலாம் அரபு மொழி குடும்பங்களும் இதே நிலமை தான். - அரபிக் [அல் அசடோ] - எபிரெயர் [ஆறியே/ அரிமா ]
அசோகர் எந்த மொழியை பேசினார்: [பூர்வீகம் மௌரியபேரரசு] மௌரியப் பேரரசின், அசோகர் கிமு 268 முதல் கிமு 232 வரை ஆட்சி செய்தார் அசோகர் கல்வெட்டில்/தூணில் மூன்று மொழிகள் பயன்படுத்தப்பட்டன: அசோகர் பிராகிருதம் அல்லது பிராமி [தமிழி] அசோகர் பிராகிருதம், கிரேக்கம் (அண்டை நாடான கிரேக்க-பாக்ட்ரிய இராச்சியம் மற்றும் அசோகரின் ஆட்சிப் பகுதியில் உள்ள கிரேக்க சமூகங்களின் மொழி) மற்றும் அராமைக் (முன்னாள் அச்செமனிட் பேரரசின் அதிகாரப்பூர்வ மொழி).
அதில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துருக்கள் பினீசியர்கள் மற்றும் தமிழிக்கு சொந்தமானது. பினீசியர்களின் எழுத்துருக்கள் கிரேக்க எழுத்துருக்கள் ஆனது.
ஃபீனீசியர்கள் எழுத்துருக்கள்: கிமு 1200 ஆம் ஆண்டில். கிமு 4 ஆம் நூற்றாண்டில், ஃபீனீசியர்கள் ஒரு எழுத்து முறையைப் பயன்படுத்தினர், அதில் அனைத்து மெய் எழுத்துக்களும் 22 எழுத்துக்களால் குறிக்கப்பட்டன. மத்தியதரைக் கடலோரப் பயணங்களின் போது, அவர்களின் அமைப்பு எல்லா இடங்களிலும் பரவி, இந்தியா உட்பட ஆசியா முழுவதும் மெதுவாக 1000 வருடம் பயன்பாட்டிலிருந்த கியூனிஃபார்ம் எழுத்தை மாற்றியது..
கியூனிஃபார்ம் எழுத்து சுமேரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது, பின்னர் அவர்களின் மீடியன் சந்ததியினர் மற்றும் பண்டைய மத்திய கிழக்கின் ஏராளமான மக்களால் பயன்படுத்தப்பட்டது. ஃபீனீசியர்கள் எழுத்துருக்கள் வந்த பிறகு கியூனிஃபார்ம் வழக்கிலிருந்து ஒதுக்கப்பட்டது.
ஃபீனீசியன் பேசின மொழிகள்: ஆஃப்ரோசியாடிக் மொழிகள் செமிடிக் மொழிகள் மேற்கு செமிடிக் மொழிகள் வடமேற்கு செமிடிக் மொழிகள் கானானைட் மொழிகள்.
ஃபீனீசியர்கள் யார்: ஃபீனீசியர்கள் இன்றைய லெபனான், சிரியா மற்றும் இஸ்ரேல் கடற்கரைகளில் தோன்றிய ஒரு பண்டைய மக்கள். செமிடி மக்கள் செமிடிக் மொழிகள் பேசியவர்கள் அரேபியர்கள்,எபிரேயர்கள், கானானியர்கள்,அமோரியர்கள், அம்மோனியர்கள், அக்காடியர்கள்/பாபிலோனியர்கள்/அசீரியர்கள்/அராமியர்கள்,ஃபீனீசியர்கள் மற்றும் சமாரியர்கள் ஆகியோர் அடங்குவர்-
கடந்த காலங்களில், எழுத்துருக்கள் எப்படியெல்லாம் ஒன்றிடம் இருந்து ஒன்று கடன் வாங்கி தழுவிக்கொண்டன என்பதின் அடையாளம் தான் இவைகள். அசோகர் கல்வெட்டில்/தூணில் உள்ள மூன்று மொழி எழுத்துருக்களை ஒரு முன்மாதிரியாக வைத்து உங்களுக்கான எழுத்துருக்களை உருவாக்கி கொள்ளுங்கள் என்ற அறிவுப்பாக அந்த தூணை நட்டுவைத்திருக்கலாம். காளை கத்தும் ஒலி முதல் வார்த்தை ம்ம --> அம்மா
லீனியர் எலாமைட்+தமிழி = சிந்து முத்திரைகள்,, தமிழர்களுக்கு தமிழி என்னும் எழுத்துருக்கள் இருக்கும் போது எதற்காக இரண்டாவதாக சிந்து எழுத்துருக்களை உருவாக்க வேண்டிய அவசியம். அவர்கள் சிந்து சமவெளி கலாச்சாரத்தில் தங்களுடைய தயாரிப்புக்கான வர்த்தக முத்திரைகளை உருவாக்கினார்கள். அந்த வர்த்தக முத்திரைகள் பெரும்பாலும் இரு மொழி கலப்பு கொண்டிருந்தது.
லீனியர் எலாமைட்+தமிழி = சிந்து முத்திரைகள். லீனியர் எலாமைட் என்பது பண்டைய பெர்சியாவிலிருந்து வந்த ஒரு எழுத்து முறையாகும், இது சிந்து எழுத்து குறியீடுகள் சமகாலத்ததாகவும், அதை வலுவாக ஒத்ததாகவும் இருந்தது.
லீனியர் எலாமைட் என்பது : 4,400 ஆண்டுகளுக்கு முன்பு [பண்டைய பெர்சியா] ஈரானில் பயன்படுத்தப்பட்ட ஒரு எழுத்து முறை, லீனியர் எலாமைட் வெண்கலக் காலத்தில் ஏலாமில் பயன்படுத்தப்பட்டது, இது முக்கியமாக சில நினைவுச்சின்ன கல்வெட்டுகளிலிருந்து அறியப்படுகின்றது. இது எலாமைட் கியூனிஃபார்முடன் சமகாலத்தில் பயன்படுத்தப்பட்டது மற்றும் எலாமைட் என்ற மொழியையும் அது பதிவு செய்கின்றது.
பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில், சிங்கத்தின் அட்டவணை என்று அழைக்கப்படும் ஒரு இருமொழி நினைவுச்சின்னம் இருந்தது, இது ஒரு அறியப்பட்ட எழுத்து முறையாகும், மேலும் லீனியர் எலாமைட்டில் அதே உரையுடன் இன்னும் சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நவீன திராவிடர்கள், இன்றைய தென்னிந்திய மக்கள் சிந்து சமவெளி நாகரிக மக்களுடன் மரபணு ரீதியாகவும் கலாச்சாரம் மற்றும் கடவுள் வழிபாட்டு ரீதியாகவும் தொடர்புடையவர்கள் என்றாலும், அவர்களின் மொழியியல் வம்சாவளி நமது பூமியில் தோன்றிய முதல் நாகரிகங்களில் ஒன்றான புரோட்டோ-எலாமியர்களிடம் இருந்து வருகின்றது என்பது உண்மையாக இருக்கின்றன.
காரணம் லீனியர் எலாமைட் [பண்டைய பெர்சியன்] எழுத்து முறையும் சிந்து எழுத்து குறியீடுகளும் 70விழுக்காடுகள்ஒத்ததாக இருக்கின்றன. அதாவது சிந்து எழுத்து குறியீடுகள் பண்டைய பெர்சியாவிலிருந்து வந்தவையா.. [பெர்சியா அதிகாரப்பூர்வமாக இன்று ஈரான் என்பது குறிப்பிடத்தக்கது]
பண்டைய பெர்சியா மக்கள், சிந்து மக்களுடைய வர்த்தக ரீதியாக மட்டுமல்ல அவர்களுடைய இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் அளவிற்கு நெருங்கிய கூட்டாளியாகவும் இருந்திருக்கிறார்கள்.
வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் உள்ள எழுத்துருக்கள் பிராமி கல்வெட்டுக்கு பிறகு ஏற்கனவே இரும்புக் காலத்தைச் சேர்ந்தவை என்றும், அவற்றைப் புரிந்துகொண்ட பிறகும், அவை வெண்கலக் கால சிந்து சமவெளி எழுத்து முறைகளுக்குப் பிந்தையவை என்றும் கண்டறியப்பட்டது.
சிந்து மக்கள் நவீன தென்னிந்தியர்கள் மரபணு ரீதியாக பழங்குடி மக்களிடமிருந்து அதிக பங்களிப்புகளைக் காட்டுகிறார்கள். என்றாலும், சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் தனியாக இல்லாமல் குறைந்த பட்சம் இரண்டு இன மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
அநேகமாக அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு மக்களின் வண்ணமயமான கலவையாக இருந்திருக்கலாம், அவர்கள் தங்கள் சொந்த மொழிகளையும் கலாச்சாரங்களையும் அவர்களுடன் கொண்டு வந்திருக்கலாம். அப்படியானால் சிந்து சமவெளிப் பண்பாடு பல வேறுபட்ட இனக்குழுக்களின் கலவையாக இருந்திருக்கும்.
சிந்து மக்களின் தொடர்பான மொழியின் வழித்தடம், அத்துனை இந்திய மொழிகளிலும் எழுத்துருக்களிலும் தொடர்கின்றன இதனால் தான் இந்திய மொழியான சமஸ்கிருதம் கலப்பு இல்லாத இந்திய மொழிகள் எதுவும் இல்லை.
லீனியர் எலாமைட் எழுத்து முறை சமஸ்கிருத பண்டைய எழுத்துருக்களாக இருப்பதற்கு தகுதியானதாக இருக்க வாய்ப்புள்ளதாக இருக்கின்றன...? ஜெர்மனியில் குறைந்தது 30 வேறுபட்ட மொழிகளை பேசும் 60 நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்கின்றார்கள், இவர்களுக்குள்ளே பொதுவான ஒரு மொழியாக இருப்பது ஜெர்மன் மற்றும் ஆங்கிலம் மட்டும்தான்.
சிந்து மக்கள், தமிழி மற்றும் லீனியர் எலாமைட் எழுத்து முறைகளையும் தமிழ் மற்றும் உருது, சமஸ்கிருதம் பேசும் மக்களாக ஏன் இருந்திருக்க கூடாது..? இந்த மொழிகள் இன்று வெவ்வேறு மொழிகளாக தெரிந்தாலும் அன்று அவர்களுக்குள்ளே ஒற்றை மொழியாக இருந்திருக்கலாம்.
இன்று, தமிழ் எழுத்துருக்களுக்குப் பொருந்தாத ஆங்கிலம்/லத்தீன் எழுத்துருக்களைப் பயன்படுத்தி நமது கையொப்பங்களையும் பெயர்களையும் முகவரிகளையும் எழுதுகிறோம். அது 2000 வருடம் புதைக்கப்பட்டு மீண்டும் தோன்றினாலும், அது நமக்கு சொந்தமில்லையே....?
புரோட்டோ சைனைட்டி எழுத்துருக்கள் மற்றும் ஃபீனீசியன், கிரேக்கம், தமிழீ எழுத்துருக்கள்: ப்ரோட்டோ-சினாய்டிக் எழுத்துருக்கள் 19 எழுத்துருக்களைக் கொண்டுள்ளன, இந்த எண் சந்திரனின் 19ம் ஆண்டு மெட்டோனிக் சுழற்சியைக் குறிக்கின்றது,
சந்திரனைப் பற்றிய புனைவுகள் பல உள்ளன அதில் இதுவும் ஒன்று. சந்திரன், மொழிகளில் எழுத்துருக்களுடன் தொடர்புடையவை, ஞானத்தின் கடவுளும் , சந்திரனின் கடவுளுமான தோத், எழுத்தையும் கண்டுபிடித்தவர் என்று எகிப்தியர்கள் நம்பினார்கள் .
சினாய் என்ற பெயர் அசீரியா மற்றும் பாபிலோனியாவின் மெசொப்பொத்தேமிய இறையியலில் சந்திரனின் கடவுளின் பெயரான சின் என்பதிலிருந்து பெறப்பட்டிருக்கலாம் . இஸ்லாமியத்திற்கு முந்தைய அரபியில் சின் என்பது சந்திரன் கடவுளின் பெயராகும்.
சினாய் என்ற பெயர் சந்திரனின் சுமேரியப் பெயரான சின் மற்றும் சந்திரனின் எகிப்தியப் பெயரான IAH(w) Joh [இயா-ஒரு பண்டைய எகிப்திய சந்திரக் கடவுள்.] ஆகியவற்றை இணைக்கிறது.
சினாய் மலையில், கடவுள் மோசேக்கு கடவுளின் விரலால் எழுதப்பட்ட பலகைகளைக் கொடுத்தார் என்று தோரா பதிவு செய்கின்றது. தோரா மோசேயின் ஐந்து புத்தகங்களைக் கொண்டுள்ளது மற்றும் எபிரேய பைபிளின் ஒரு பகுதியாகும். விலங்குகளின் தோலால் கையால் செய்யப்பட்ட காகிதத்தோலில் தோரா எபிரேய எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. தோரா சுருள் இரண்டு மரக் குச்சிகளில் சுற்றப்பட்டுள்ளது.
ஆதியில் ஒன்று இருந்தது அதை பூமியின் மக்கள் பின் தொடர்ந்தார்கள்: எழுத்துருக்களில் எது முதலில் வந்தது, எதிலிருந்து எது வந்தது என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இருப்பினும் ஒன்றைப் பின்பற்றி மற்றவர்கள் எழுதினார்கள் என்பது வெளிச்சமான உண்மை.
அராமைக் மற்றும் அம்ஹாரிக்:[Aramaic and Amharic]: இது பைபிள் போன்ற மத நூல்களிலும் நவீன அன்றாட பயன்பாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. அம்ஹாரிக்: எத்தியோப்பியாவின் அதிகாரப்பூர்வ மொழி மற்றும் எத்தியோப்பியன் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சில் ஒரு முக்கியமான வழிபாட்டு மொழி. அராமைக்: வரலாற்று ரீதியாக மத்திய கிழக்கில் ஒரு முக்கியமான மொழியாகவும், பண்டைய உலகில் ஒரு தொடர்பு மொழியாகவும் இருந்தது
அராமிக் மொழிகள் செமிடிக் மொழிகளின் மரபணு துணைக்குழுவை உருவாக்குகின்றன, அவை ஆப்ரோ-ஆசிய மொழியின் ஒரு கிளையாகும். அராமைக் மற்றும் கானானைட் [எ|கா எபிரேயம் மற்றும் ஃபீனீசியன் ஆகியவை அடங்கும்] வடமேற்கு செமிட்டிக் மொழியின் முக்கிய கிளைகளாகும்.
அம்ஹாரிக்: [ஏத்தோப்பியா- செமிடிக் மொழி] ዝምታ ወርቅነው இதற்கான ஒலி வடிவம் "மௌனம் பொன்னானது." இதிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று நினைக்கின்றேன் ஜெர்மனியில் இந்த மொழி பேசும் மக்கள் அதிகமாக புலம்பெயர்ந்திருக்கிறார்கள், வடமத்திய ஏத்தோப்பியாவில் உள்ள அம்ஹாரா மக்களால் சொந்த மொழியாக பேசப்படும் உலகளாவில் இரண்டாவது பெரிய அளவில் தாய்மொழி பேசும் மக்களாக இவர்கள் பார்க்கப்படுகிறார்கள்.
இவர்கள் இன்றும் பண்டைய செமிடிக் எழுத்துருக்களையே பயன்படுத்துகிறார்கள்.என்னுடைய கட்டுரைகளை செமிடிக் மொழியில் மொழிமாற்றம் செய்து படிக்கின்றனர் என்பது மகிழ்ச்சியான ஒரு செய்தி.
அம்ஹாரிக் என்பது சிலபரி என்று அழைக்கப்படுகின்றது. ஏழு உயிரெழுத்துக்களில் ஒன்று 28 மெய் எழுத்துக்களில் ஒவ்வொன்றிலும் சேர்க்கப்படுகின்றது, பின்னர் அவை ஒன்றாக ஒரு எழுத்தை உருவாக்குகின்றன. சில சிறப்பு கதாபாத்திரங்களுடன் சேர்ந்து, இது 276 எழுத்துருக்களை உருவாக்குகின்றது [எழுத்தும் மொழியும் ஒன்றானது, தமிழைப்போல்]
பொதுவாக மொழிகளின் தொடக்கம் வழிபாட்டு மொழிகளாக இருந்திருக்கின்றன,அதாவது தாங்கள் வழிபடும் கடவுளை பூசிப்பதற்காக மற்றும் அவருடன் பேச்சு தொடர்பு வைத்துக்கொள்வதற்காக ஒலி வடிவத்தில் பயன்பாட்டிலிருந்தது பிற்காலத்தில் எழுத்து வடிவம் பெற்றவை என்பது உறுதியாக இருக்கின்றன.
சுமேரிய, எகிப்திய கடவுள் வழிபாட்டிலிருந்து சீனம், யூதமத வழிபாடு,ரோம் வத்திக்கான், இந்துமத வழிபாடுகள் வரைக்கும் எபிரேய, லத்தீன், சமஸ்கிருத ஒலிவடிவத்தில் இன்றும் கடவுளை பூசிப்பதற்காக பயன்பாட்டிலிருக்கின்றன
அம்ஹாரிக் மொழியில் "መልካም አዲስ አመት 2025. " இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2025
சிந்து சமவெளியில் அநேகமாக பல இன மக்கள் ஒன்று சேர்ந்து வாழ்ந்தார்கள். அதில் அதிகமாக இருளர்கள் என்று அழைக்கப்படும் செமிடிக் மக்கள் தொழில் நுட்ப வல்லுனர்களாக, கம்மாளர் வேளாண்மை மற்றும் தொழிலாளர்களாக இருந்தார்கள். இவர்கள் பிற்காலத்தில் காலநிலை, குளிர்காரணமாக பாய்மரக் கப்பல்கள் மூலம் இன்று உள்ள வெப்ப மண்டல பகுதியான தென்னகத்தை/தமிழ்நாடு(இந்தியா) வந்தடைந்தார்கள்.( அங்கும் மக்கள் வாழ்ந்தார்கள். )
இவர்கள் பிற்காலத்தில் சிவனுக்காக ஆலயங்களை அமைத்தார்கள். சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களான செமஸ்டிக் மக்கள் இல்லாத காரணத்தினால் சிந்துவெளி நாகரிகம் சரியத்தொடங்கியது. அதில் வாழ்ந்த எஞ்சியுள்ள மக்கள் தங்களுக்காக ஒரு அரசை உருவாக்கினார்கள் இந்த காலகட்டத்தில் புத்த சமண மதங்கள் உருவாக்கப்பட்டது,
கைவிடப்பட்ட சிவ வழிபாடு தளங்கள். அரசமரம், புத்த சமணர்கள் ஆக்கிரமித்தார்கள். சிந்து சமவெளி நாகரிகத்துக்கு பின்பு இன்னும் அறியப்படாத ஒரு ராஜ்யத்தில் இருந்தது (ரிக் வேத காலம்..?)
மௌரிய பேரரசு( சந்திரகுப்த) இந்தியாவின் மறுமலர்ச்சி காலம். இதற்குப் பின்னால் மக்கள் நகர்ந்து மௌரிய பேரரசு உருவாகின்றது.சிந்து மக்களின் நகர்வுகள்: இந்திய மக்கள் புதியவர்கள் அல்ல, மாறாக சிந்து மக்கள் வெவ்வேறு குழுக்களாக குறுகிய மற்றும் நீண்ட தூரத்திற்கு இடம்பெயர்ந்தனர். மௌரி சின்னங்கள் முத்திரைகளை பயன்படுத்தி இன்றைக்கும் மௌரிய வம்சாவளியை சேர்ந்தவர்கள் தான் இந்தியாவை ஆளுகின்றன.
செமிடிக் மக்கள் யார்: எந்த மொழி பேசினார்கள். செமிடிக் மொழிகள் இன்று குறிப்பாக அரேபியர்கள், இஸ்ரேலியர்கள், அராமியர்கள், மால்டிஸ் மற்றும் எத்தியோப்பியா மற்றும் எரித்திரியாவில் உள்ள பல மொழி குழுக்களால் பேசப்படுகின்றன.
முதல் முதலாளித்துவ உயர் கலாச்சாரம்: சிந்துசமவெளியில் கையாண்டது உலகின் முதல் நகர்ப்புற முதலாளித்துவ கலாச்சாரத்தை பற்றியது என்பது உறுதியானது.
விவசாயம் மற்றும் மீன்பிடித்தல்,நெசவு, மற்பாண்டம் தயாரிப்பு : விவசாயத்தில் செயற்கை நீர்ப்பாசனம் ஏற்கனவேஅறியப்பட்டிருந்தது . விவசாயிகள் சுற்றியுள்ள சிறிய குடியிருப்புகளில் வசித்து வந்தனர். சிந்து சமவெளி ஒரு ஏற்றுமதி நகரம்,
அவர்களின்தயாரிப்புகள்:கைவினைப்பொருள்,ஆடைஆபரணங்கள்,விளையாட்டுபொருள்கள்,தொழில்நுட்ப கருவிகள்,கட்டிட பொருட்கள், மற்பாண்டம் சமையல் உபகரணங்கள், இறைச்சி, கருவாடு கோதுமை, அரிசி, பருத்தி. ஏற்றுமதி வர்த்தகமுத்திரைகள் பொருளாதாரம் மற்றும் செழிப்பான வர்த்தகம் தழைத்தோங்கி இருந்தது.
மொஹென்ஜோ-டாரோவில், காடழிப்பு மற்றும் பிற கடினமான வேலைகளுக்குத் தேவையான வளர்ப்பு யானைகளின் புடைப்புச் சிற்பங்கள் காணப்பட்டன . இந்த விலங்குகள் கிமு 3500 ஆம் ஆண்டிலேயே இருந்ததாகக் கருதலாம் . கி.பி.யில் அடக்கப்பட்டன .
குடியிருப்பாளர்களுக்கு மற்றொரு வருமான இவைகளுக்கானஆதாரம் மீன்பிடித்தல் ஆகும் . அகழ்வாராய்ச்சிகளின் போது, செம்பு மீன் கொக்கிகள், அம்புக்குறிகள் மற்றும் ஈட்டி முனைகள் அத்துடன் கிட்டத்தட்ட 5,000 ஆண்டுகள் பழமையான மீன்பிடி வலையின் எச்சங்கள். மீன்கள் உப்பு போட்டு[கருவாடு] உலர்த்துவதன் மூலம் பாதுகாக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன.
"சந்தம்"-ஒலி (சமஸ்கிருதத்தின்) ஆரம்ப வடிவத்தைப் பேசத் தொடங்கினர். திராவிடர்கள் மிகவும் வளர்ந்த பட எழுத்து முறையையும் கொண்டிருந்தனர் . இதுவரை, சுமார் 250 வெவ்வேறு கதாபாத்திரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பண்டைய மரபுகளில் ரகசியங்கள், மறைக்கப்பட்ட ஞானங்கள் பொதுவாக எல்லா இடங்களிலும் இருந்தது. அது ஒரு தனி மனித குழுமத்திற்கு சொந்தமாக ஒருபோதும் இருந்திருக்காது. அது அதிகார போர், அடக்குமுறை,திருட்டு காரணங்களினால் ஒரு சில குழு மக்களுக்காக உருவானதாக மாறியது.4,000 வருடங்களுக்கு முன்னர் தமிழ், பேச்சாக "சந்தம்"-ஒலி சார்ந்ததாகவும் பிற்காலத்தில் எழுத்துருவில் தமிழி(கிரேக்கத்தைச்) சார்ந்ததாகவும் இருக்கின்றது.
சிந்து சமவெளி மக்கள் தனியாக வாழவில்லை, அவர்களுடைய சமகாலத்திலும் பூமியின் மற்றய பகுதிகளிலும் இதற்கு சமமான நாகரீகம் பண்பாடுகள் தழைத்தோங்கியிருந்தது. சிந்து சமவெளி நாகரிகம் மட்டும் தனியாக இருந்திருந்தால் அவர்களால் வர்த்தகம் செய்திருக்க முடியாது.
பண்டைய எகிப்து ஈரான் மற்றும் தென்னிந்திய மக்களுடன் தரை மற்றும் கடல் மார்க்கமாக இறக்குமதி ஏற்றுமதி செய்து இருக்கிறார்கள். குறிப்பாக தென்னிந்திய மக்களிடமிருந்து தங்கத்தையும் இலங்கையில் இருந்து கருங்காலி மரங்களையும் வரவழைத்து இருக்கிறார்கள்.
இந்த உலகத்தில் இருக்கும் பெரும்பாலான தத்துவங்கள் மொழியின் மரபுகள் எழுத்துருக்கள் கிரேக்க தத்துவஞானிகளால் உருவாக்கப்பட்டது. பண்டைய எகிப்து, கிரேக்கம், இந்திய மற்றும் இஸ்ரேல் மக்களால் பல தெய்வ வழிபாடுகள் தழைத்தோங்கியிருந்தது.
கிரேக்க தத்துவஞானிகள் பல தெய்வ வழிபாடு கொள்கையை மாற்றி அமைக்க, ஒற்றைத் தெய்வ வழிபாட்டை உருவாக்கும் நோக்கில் மதங்களை உருவாக்கினார். இதற்காக மாறுபட்ட எழுத்துருக்களை [உருவாக்கி...*] பயன்படுத்தி பல புராண, தத்துவ, தொல் /பழங்கால காப்பியங்களையும் வேத நூல்களையும் எழுதினார்கள். அதில் பைபிளும் ஒன்று. மற்றும் சமணர்கள் இவர்களின் வழித்தோன்றலில் வந்தவர்கள்.
இதுவொரு ஆய்வுக் கட்டுரை என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் முடிந்த முடிவு என்று இல்லாமல் இது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும்...
என்னுடைய பழைய இடுகைகள்
https://mahesva.blogspot.com/2022/11/king-tutankhamun-tutankhamun-was.html?view=magazine
https://mahesva.blogspot.com/2022/12/what-was-first-language-spoken-in-this.html?view=magazine
https://mahesva.blogspot.com/2022/12/corona-covid-19-is-not-going-to-be-big.html?view=magazine
https://mahesva.blogspot.com/?view=magazine
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்