வெள்ளி, 2 செப்டம்பர், 2022

Cosmic energy [quadra] consists of gravitational force[G]

 அண்டவெளி ஆற்றல் [நான்கு பிரம்மம்] புவியீர்ப்பு விசை[G] நிறை ஆற்றல்[C] புரோட்டான் ஆற்றல்[h] மற்றும் எலக்ட்ரான் ஆற்றல்களை கொண்டது. இதில் எலக்ட்ரான் ஆற்றல் [e]: மின்சாரம், வேதியியல். மின்காந்தவியல் விதிகளுக்கு உட்பட்டது.

ஒரு மூலகம் அல்லது தனிமம் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் மற்றும் குவார்க் அடிப்படையை கொண்டு கட்டமைக்கப்பட்டது. இவை அத்துனையும் சேர்ந்ததுதான் நிறை. நிறை ஈர்ப்பு ஆற்றலாக வெளிப்படுகின்றது. இந்த நான்கு விதமான ஆற்றலை கொண்டுதான் இந்த பிரபஞ்சம் இயங்குகின்றது. இந்த நான்கு ஆற்றல்களின் ஒரு புள்ளிதான் எங்களுடைய பூமி.

அண்டவெளியில் அங்கும் இங்கும் பாய்ந்து செல்லும் பிரபஞ்ச இயக்க சக்தியாக எலக்ட்ரான் ஆற்றல் [e] செயல்படுகின்றது. இந்த எலக்ட்ரான் ஆற்றல் மின்சாரம், வேதியியல். மின்காந்தவியல் என்று எங்கள் பூமிக்கு உயிர் ஆற்றலை வழங்குகின்றது.

எலக்ட்ரான்களின் ஓட்டம் இல்லாமல் மின்சாரம் இல்லை, மின்சாரம் இல்லாமல் எதுவுமே இல்லை. எலக்ட்ரான்களின் பகிர்வு இல்லாமல் எந்த வேதியியல் மூலக்கூறுகளும் கட்டமைக்கப்படுவதில்லை,

[மூலக்கூறுகள் எடுத்துக்காட்டாக: சர்க்கரை, உப்பு, நிலம், நீர், காற்று] இந்த மூலக்கூறுகளின் கட்டமைப்பு இல்லாமல் நாங்களும் இல்லை. [எலக்ட்ரான் ஆற்றல், மின்சாரம், வேதியியல் பற்றி நிறைய எழுதியிருக்கின்றேன் தேடிப்படிக்கவும்.] https://mahesva.blogspot.com/?view=magazine

இயற்பியலாளர்கள் இந்த ஈர்ப்பு ஆற்றலை பற்றித்தான் அதிகமாக பேசுகின்றார்கள். நானும் அதைப்பற்றித்தான் பேசப்போகின்றேன். ஆனால் அண்டவெளி ஈர்ப்பு பற்றியதல்ல எங்களுடைய பூமியின் ஈர்ப்பு விசை பற்றியது.

எதற்காக பரப்பிரம்மம் எங்களுடைய பூமிக்கு தனித்துவமான ஒரு ஈர்ப்பு ஆற்றலை வைத்து கட்டமைத்தது. இந்த ஈர்ப்பு ஆற்றல் இல்லாதிருந்தால் எங்களுடைய பூமி எப்படியிருக்கும்.

ஈர்ப்பு ஆற்றல் இல்லை என்றால் எங்களுடைய பூமி நிலையாக ஓரிடத்திலிருக்காது. இந்த ஈர்ப்பு ஆற்றலுக்கு நிறை எவ்வளவு முக்கியம். யார் துல்லியமாக கணித்து, பூமியை சரியாக எடை போட்டு கட்டமைத்தது.

ஒரு கற்பனைக்காக; தலா 50 கிலோ எடையில் கால்களை வைத்து 300 கிலோ எடையில் அரை மீட்டர் உயரத்தில் அல்லது ஈக்குகுச்சி மாதிரி கால்களை வைத்து ஐந்து மீட்டர் உயரத்தில் ஒரு 30 கிலோ எடையில் ஒரு மனிதனை உருவாக்கியிருந்தால் எப்படியிருக்கும்.

அவனால் நடக்கவோ எழுந்திருக்கவோ முடியாது. எழுந்தால் உடைந்து போவான். சரியான நிறை, அளவான உயரம், நடப்பதற்கு பாரமில்லாத கால்கள் எழுதுவதற்கு இசைவான விரல்களை வைத்தது யார் ?

[எங்களுடைய எலும்பு கட்டுமானத்தை பார்த்தால் தெரியும் வலுவாகவும் அதே நேரத்தில் பாரமில்லாமலும் இருப்பதற்கு மூங்கில் போல் நடுவில் துளை மற்றும் காற்றிடை உள்ளதாகவும் கட்டமைத்திருக்கின்றது]

மண்ணில் உயிர்கள் வாழ்வதற்கு இந்த ஈர்ப்பு ஆற்றல் எவ்வளவு முக்கியமானது. இந்த ஈர்ப்பு இல்லை என்றால் நாங்கள் காற்றில் மிதப்போம், சக உயிரினங்களும் எமக்கு அருகாமையில் மிதந்து செல்லும்.

நாங்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்கள் எல்லாம் இடம்மாறி, மூலை முடுக்கெங்கும் செருகி இருக்கும். நிறுத்தி வைத்த வாகனம் மூன்றாவது தெருவில் பறந்து முட்டிமோதும். எங்கள் பொருட்களை தேடிப்பிடிப்பதற்கே, எங்கள் வாழ்க்கை கரைந்திருக்கும்.

எங்கள் பூமியின் ஈர்ப்பு விசை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் ஒரு கற்பனைதான் இருப்பினும் இதனுடைய உண்மைத்தன்மை செவ்வாய் கிரகத்தில் வாழும் போதுதான் தெரியும் எங்களுடைய பூமி எவ்வளவு நடைமுறையானது என்று.

புவியீர்ப்பு விசை[ கோட்பாட்டில் விளங்கமுடியாத புதிராக இருப்பது. எல்லா நிறைக்கும் ஒரேமாதிரியான ஈர்ப்பு இருப்பது. எடுத்துக்காட்டாக: ஒரு உயரமான இடத்திலிருந்து, சமதூரத்தில் 100கிலோ மற்றும் 100கிராம் எடை கொண்ட இரண்டு பொருளையும் ஒரே நேரத்தில் கீழே போட்டால் அந்த இரண்டு பொருட்களும் சம நேரத்தில் ஒன்றாக நிலத்தில் விழும்.

இது விளங்கமுடியாத அல்லது விளக்கமுடியாத புதிராக இருக்கின்றது. இந்த இடத்தில் எல்லா ஈர்ப்பு விசை கோட்பாடுகளும் தோற்றுப்போகின்றது இதற்கு கடவுளின் துகள்கள் H (ஹிக்ஸ்), வெற்றிடம் ஒரு காரணமாக இருக்கலாம்.

[நீங்கள் இதை செயல்விளக்கமாக பரிசோதனை செய்து பார்க்கலாம் உங்கள் கையிலுள்ள கூடைப்பந்து, டென்னிஸ் பந்து  வைத்து இந்த சோதனையை செய்யலாம் ]

ஒரு கற்பனைக்காக: புவியீர்ப்பு விசை சிறியதாக இருந்தால் எப்படி இருந்திருக்கும் எங்களுடைய பூமி. மரத்திலிருந்து ஆப்பிள் பழம் மெதுவாக கீழே விழும், மெதுவியக்கம் (ஸ்லோ மோஷன்). உயிரினங்கள் உயரமாக வளர்ந்திருக்கும். (நெட்டை மனிதர்கள்) பூமி மற்றும் பொருள் உயிரினத்தின் நிறை சரிபாதியாக குறைந்திருந்திருக்கும். நிலவில் நடந்தமாதிரி குதித்து குதித்து மிதந்து நடக்கவேண்டும்.

பூமி<->சந்திரன்<->சூரியன் இடையிலான தூரம் அதிகரிக்கும். பூமி சூரியனை சுற்றும் காலம் இரட்டிப்பாகும் (365(1/2) x 2= 731 நாட்கள்). எங்களுடைய பூமி வெப்பமின்றி உயிர்கள் வாழமுடியாத பனிக்கிரகமாக மாறியிருக்கும்.

புவியீர்ப்பு விசை பெரியதாக இருந்தால் எப்படி இருந்திருக்கும் எங்களுடைய பூமி. துப்பாக்கி குண்டு பாய்வது போல் மரத்திலிருந்து ஆப்பிள் பழம் வேகமாக கீழே விழும், உயிரினங்கள் குள்ளமாக வளர்ந்திருக்கும்(குள்ள மனிதர்கள்) பூமி மற்றும் பொருள் உயிரினத்தின் நிறை இரட்டிப்பாக கூடியிருக்கும். நடக்கவே முடியாதவாறு கால்கள் நிலத்துடன் ஒட்டியிருக்கும், பாரமான உடலை அசைக்க முடியாதவாறு அரக்கி அரக்கி நடக்கவேண்டியிருக்கும்

பூமி><சந்திரன்><சூரியன் இடையிலான தூரம் நெருக்கமாகும். பூமி சூரியனை சுற்றும் காலம் சரிபாதியாக குறையும் (182 நாட்கள்) எங்களுடைய பூமி அதிக வெப்பத்தினால் உயிர்கள் வாழமுடியாத அனல் கிரகமாக மாறியிருக்கும்.

எங்களுடைய பூமியின் புவியீர்ப்பு விசை, ஒரு அங்குலம் கூட விலகாமல் திட்டமிட்டு சரியாக அளந்து கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. அது என்றைக்குமே மாறாதது.

நீங்கள் யாரை கடவுள் என்று தேடுகின்றீர்கள். இந்த மண்ணில் உயிர்களை தோற்றுவித்தவரை, மனிதனை, என்னை உருவாக்கியவரை நான் கடவுள் என்று போற்றுகின்றேன். பல ஆதிமூலங்கள் பரப்பிரமத்தில் இருந்தாலும் என்னை படைத்தவன், எனக்குள் அறிவை வைத்தவன், எனக்கு உணவளித்தவர், என்னை மகிழ்ச்சியுடன் இந்த பூமியில் வாழவைத்தவர் எனக்கான கடவுள் அவரை நான் வழிபடுகின்றேன்.

இந்த பூமி உருவாக பாடுபட்டவர்கள், உழைத்தவர்கள் மனிதனைவிட பல மில்லியன் மடங்கு அறிவிலும் புத்தி கூர்மையிலும் முன்னேறியிருக்கும் “பரப்பிரமவாசிகள்” (அடைமொழி ஏலியன்கள்) வேற்றுகிரகத்தில் வாழ்கின்றார்கள். நன்றி.

பிள்ளைகளின் கவனத்திற்கு: நம்ம நாட்டுத் தமிழ்ஈழத்தமிழ் கலந்து சுருக்கமாக எழுதுவதால் என்னுடைய எழுத்துக்கள் ராஜதந்திர முறையாக இருக்கும் குறைந்தது ஒரு பத்து விழுக்காடுகள் இயற்பியல் அறிவு இருந்தால் போதும் முழுமையாக விளங்கிக்கொள்ளமுடியும். விளங்காவிட்டால் உங்கள் அப்பா அம்மாவிடம் கேட்டு விளங்கிகொள்ளுங்கள்.

மொழிபெயர்ப்பு வாசிப்பு என்று, கூகிள் பல வசதிகளை உங்களுக்கு செய்து தந்திருக்கின்றது. பயன்படுத்திக்கொள்ளுங்கள்.. 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக