திங்கள், 26 செப்டம்பர், 2022

The world of dinosaurs is a fascinating world

கடவுளும் கணிதமும் கடவுள் மிகச்சிறந்த ஒரு கணிதவியலாளர், அவருக்கு கூட்டல் பெருக்கல் வாய்ப்பாடு அவ்வளவு சிறப்பாக வரும். மற்றும் கழித்தலும் அழித்தலும் நன்றாக தெரியும்.

ஒரு வட்டாரி(Circle) வட்டம் வரையும் கருவியை வைத்து இந்த உலகத்தை வரைந்து தள்ளியிருக்கின்றார். [பிரீமேசன் சின்னம்: ஒரு வட்டாரி+கோண அளவி (Circle+Protractor)

ஃபைபோனச்சி-எண்கள்: கணிதம்,தத்துவம் மற்றும் இயற்கை விதி [உலக சூத்திரம்]. “சூப்பர் குறியீடு[1,618]” 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55 ———> 1,618 என்றெல்லாம் கடவுளின் கையெழுத்துப்பிரதி செல்லமாக அழைக்கப்படுகின்றது.

இந்த எண்கணக்கு எப்படி கட்டமைகின்றது. மேற்கோளாக: 0+(1=1,)-> 1+1=2, 1+(2=3,)—> 2+3=5, 3+5=8, 5+8=13,8+13=21 ——-> முடிவிலியாக தொடர்கின்றது. இதில் உள்ள எண்கள் ஃபைபோனச்சி எண்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இது 1202 இல் இருந்து பயன்படுத்தப்படுகின்றது.

லியோனார்டோ ஃபைபோனச்சியின் என்று அவரின் பெயரால் இந்த எண்கள் அழைக்கப்படுகின்றது. இவர் இத்தாலியின் பிசாவில் ஒரு கணிதவியலாளர் ஆவார் இவருக்கு முன்னால் கிரேக்க, இந்திய தத்துவ ஞானிகளுக்கு இந்த எண்கள் சொந்தமானது.

இந்த உலகத்தில் எதை எடுத்தாலும் மனிதன் உட்பட இந்த எண்களுக்குள்ளே தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. மனிதனின் கண், உதடு, மூக்கு முகத்தின் அளவு மற்றும் குடகு நத்தை(நாட்டிலஸ்) மற்றும் அம்மோனைட் படிமங்கள்

நத்தைவீடு, சூரியகாந்தி, பூக்களின் இதழ்களின் வரிசை, அளவு என்று அத்துனை தாவர, உயிரினத்தின் கட்டுமானங்களும் இந்த சூப்பர் குறியீடுக்குள்ளே அடங்கும் அதனால்தான் இதை உலக சூத்திரம் என்றும் அழைக்கப்படுகின்றது.

பூமியில் உயிரினங்கள் தோன்றியது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல, என்பதை இந்த எண்கள் நிரூபிக்கின்றது. ஒரு திட்டமிட்ட ஒரு வடிவத்திற்குள்ளே எல்லா உயிரினங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

பை [π ] எண்கணிதம் ; பை(Pi) என்பது வட்ட எண். எகிப்தியர்கள் தானியங்களை சேகரித்து வைப்பதற்காக இந்த எண்கணக்கை உருவாக்கினார்கள் ,வட்ட உருளை வடிவ சேமிப்பு கிடங்கின் தானிய கொள்திறனை  அளப்பதற்கு இந்த  பை, வட்ட எண் அவர்களுக்கு அன்றுஎகிப்திய பார்வோனின் காலத்தில் உதவியது.

Ø விட்டம் d என்பது வட்டத்தின் இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள மிக நீளமான இணைப்பாகும். ஆரம் r என்பது மைய M இலிருந்து வட்டத்தின் ஒரு புள்ளிக்கு  வட்டக் கோட்டில் உள்ள தூரம் ஆகும். எனவே விட்டம் ஆரத்தை விட இரண்டு மடங்கு நீளமானது[d = 2 • r]  எடுத்துக்காட்டாக: [r] ஆரம்  4 செ.மீ. Ø விட்டம் d =  2 • r = 8 செ.மீ.

[M]மத்திய புள்ளியிலிருந்து, [r]  ஆரம் ஒரு வட்டத்தை  வரைய உதவுகின்றது. இரண்டு ஆரம் ஒரு  விட்டம். Ø மூன்று விட்டங்கள்[d] சேர்ந்தது ஒரு பை [π = 3.14 நிலையானது

எடுத்துக்காட்டாக: Ø விட்டம் d =  2 • r = 8 செ.மீ. • π [3.14]  வட்டத்தின் [C] சுற்றளவைக் கணக்கிட எடுத்துக்காட்டாக: C= 2 • r • π  அல்லது d • π = [C]சுற்றளவு [பரப்பளவு/கொள்திறன்].

கூகுள், கணக்கலகு[கால்குலேட்டர்] பயன்படுத்தி  வெகுசுலபமாக பை π [3.14]  வட்டத்தின் சுற்றளவு மற்றும் மேற்பரப்பு அளவினை கணித்துக்கொள்ளமுடியும். அதற்கான சூத்திரம் :  π • r² = மேற்பரப்பு எடுத்துக்காட்டாக: எங்களுடைய வட்டத்தின் ஆரம் r 4 செ.மீ.[ மேற்பரப்பு =  π • r²(4)²  = 50, 265480]

முடிவிலி [∞]  - முடிவிலி [∞]  = பை [π ] வட்ட  எண்ணில் முடிகின்றது. பரப்பிரமம் அண்ட வெளி நட்சத்திரங்களை கணக்கிடுவதற்கு இந்த  பை [π ] வட்ட எண்கணக்கை  பயன்படுத்தியிருக்கலாம். எனவே அண்ட வெளி ஒரு உருளை வடிவத்தை கொண்டது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகின்றது.  

இது போன்று இன்னும் நிறைய இடங்களில் கடவுளின் தடயங்கள் உண்டு, அதையெல்லாம் ஒவ்வொன்றாக திரட்டனும். கடவுளின் தடயங்களை தேடி…

டி.என்.ஏவில், [DNA] நான்கு தளங்கள் அடினின் (A), குவானின் (G), சைட்டோசின் (C) மற்றும் தைமின் (T) இவை டி.என்.ஏ தளங்கள் என்றும். ஆர்.என்.ஏவில்,[RNA] யுரேசில் (U) உயிரியலில், பிரதி அல்லது மறுபிரதி நியூக்ளிக் அமில மூலக்கூறுகளின் நகலை ஒரு செல் அல்லது வைரஸின் மரபணு தகவல்களின் கேரியராக விவரிக்கின்றது.

இந்த நான்கு மரபணுவும் ஆயிரம் தடவைகள் பின்னிப்பிணைந்து பிரதி, மறுபிரதி எடுத்து கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸை உருவாக்கின்றது. [4x1,000 பிரதிச்செய்கை செய்கின்றது] மனிதனை உருவாக்க மில்லியன் கணக்கில் மறுபிரதி எடுத்து ஒரு மனித உடலை வடிவமைக்கின்றது.

நாங்கள் ஒரு அசல் கிடையாது ஒரு மூலப்பிரதியின் ஒரு கொப்பி, இந்த பூமியில் வாழும் அத்துனை உயிரினங்களும் ஒரு தாய் தந்தையினரின் மூலத்தின் பிரதியிலிருந்து வந்தவர்கள். அந்த மூலப்பிரதி கடவுளின் கையெழுத்துப்பிரதியாக இருக்கின்றது.

பரிணாம வளர்ச்சி மாற்றத்தை செய்வதற்கு இயற்கையில், மண்ணில் உயிர்களில், மனித உடலில் புதிதாக எதுவும் நடக்கவில்லை, மாறாக அவை மனித தோற்றத்திலிருந்து ஒவ்வொரு செல்லையும் மறுபிரதி/கொப்பிதான் எடுத்துக்கொண்டிருக்கின்றது.

அதாவது பரப்பிரம்மம் ஒரு மூலத்தை உருவாக்கி கொடுத்திருக்கின்றது அதை இந்த பூமி மறுபிரதி/கொப்பி எடுத்துக்கொண்டிருக்கின்றது. இன்னும் சுருக்கமாக சொன்னால் எங்களுடைய பூமி பிரதி/கொப்பி அடிக்கும் ஒரு இயந்திரம்.

இந்த பூமியில் உயிரினங்கள் மனிதர்கள் உருவாக்கப்பட்டு, அவைகளுடைய மரபணு கோட்/குறியீடு மூடப்பட்டுவிட்டது. அதாவது இலக்கிடப்பட்டுவிட்டது அதை எவராலும் திறக்கமுடியாது அதனுடைய திறவுகோல் கடவுளிடம் இருக்கின்றது.

மனிதன் எந்த காலத்திலும் குரங்காக இருந்ததுமில்லை இனிமேலும் குரங்காக மாறப்போவதும் இல்லை. இன்னும் 50 மில்லியன் வருடங்கள் கடந்தாலும் மனிதன் மனிதனாகத்தான் இருக்கப்போகின்றான்.

ஒரு கட்டிடத்தை கட்டுவதற்கு கட்டட வடிவமைப்பாளர் ஒரு வரைபடத்தை வரைந்து அதன்படிதான் அந்த கட்டிடத்தை கட்டியிருப்பார். கட்டிடம் கட்டிய பிற்பாடு வரைபடம் வந்ததா அல்லது வரைபடம் வந்த பிற்பாடு கட்டிடம் வந்ததா எது முதலில் வந்தது.

மண்ணில் உயிர்களை தோற்றுவிக்க, இயற்கை அல்லது எண்கணிதம் இதில் ஏதாவது ஒன்று முதலில் வந்திருக்க வேண்டும். அது எது..? கடவுளின் தடயங்களை தேடி

இந்த பூமியில் நீர் எப்படி தோன்றியது அல்லது எப்படி தோற்றுவிக்கப்பட்டது தெரியுமா ?. நீர் முதலில் பூமியை சுத்தம் செய்வதற்காக உருவாக்கப்பட்டது.

அண்டத்தில் தனிமையாக இருந்த ஹைட்ரஜனையும்[H] ஒட்சிசனையும்[O] 104,45⁰ பாகை கோணத்தில் இணைத்து அதற்கு வடதுருவம் தென்துருவம் என்று இரண்டு துருவங்களை வைத்து. ஆகாய கங்கையாக பூமியில் கொட்டப்பட்டது.

சாம்பல், எரி புகையால் அழுக்கு நிறைந்த பூமியை சுத்தம் செய்வதற்காக கொட்டப்பட்ட நீர் கடலாகவும், திரும்பவும் அழுக்கு நீங்கலான மழையாக தண்ணீராக பூமியில் விழ்ந்தது. பூமி குளிர்ந்து இதமான காலநிலை வரும் வரைக்கும். இது பல மில்லியன்கள் வருடங்களாக நடந்தேறியது.

இந்த பூமியிலுள்ள எந்த மூலக்கூறுகளுக்கும் துருவங்கள் கிடையாது நீருக்கு மட்டும்தான் துருவங்கள் உண்டு. அதை யார் எதற்காக வைத்தார்கள்.

இன்னும் சரியாக துலக்கப்படாத ஒரு கை,[கடவுளின் கைகள்] நீரை 104,45o பாகை கும்பகோணத்தில் மடக்கவில்லை என்றால் எங்களுடைய பூமியும் வியாழக்கிரகம் போல் வாயுக்களினால் மட்டுமே நிரம்பியிருக்கும். உயிர்களும் தோன்றியிருக்காது. பூமிக்கு தண்ணீர் திட்டமிட்டு வரையறுக்கப்பட்டு தோற்றுவிக்கப்பட்டது.

டைனோசர்கள் சுமார் 245 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் குடித்த, சகதியில் புரண்டு குளியல் செய்த நீரைத்தான் நாங்கள் இன்று குடிக்கின்றோம்.

டைனோசர்களை அன்னியமாக பார்க்காதீர்கள். இந்த பூமியல் உயிர்கள் உணவு[சர்க்கரை+நீர்+சுவாசம்] கழிவு[சாணம்+சிறுநீர்] இரை[இறப்பு] இனப்பெருக்கம்[பிறப்பு] இந்த விதிகளுக்குள்ளே உட்பட்டுத்தான் வாழ்கின்றன,

டைனோசர்கள் காலத்திற்கு முன்னாலும் உயிர்கள் வாழ்ந்திருந்தாலும் இந்த விதிகளின்படிதான் வாழ்ந்திருக்கமுடியும். இதை தாண்டி எந்த வாழ்க்கை முறையும் இந்த பூமிக்கு பொருத்தமாக இருந்திருக்காது.

கர்ப்பம், கருத்தரித்தல் பாலூட்டல், இரையூட்டல் என்ற விடையங்கள் மட்டும் அவைகளிடத்தில் இருந்ததில்லை. முட்டை இடுதல் இன்றுள்ள கோழியைப்போல் முட்டையை விட்டு வெளிவந்தவுடன் தாங்களாக இரை தேடவேண்டியதுதான்.

முட்டை இடுதல் என்ற விதியிலிருந்து கருவுறுதல் என்ற விதிக்கி மாறியதற்கான காரணம். காடுகள் அழிப்பு, பாதுகாப்பு இல்லாத கூடு கட்டும் மறைவிடங்கள், முட்டைத் திருட்டு, இன அழிப்பு, மாமிச உண்ணிகளினால் முட்டைகள் இரையாக்கப்படுவதினால்

பரப்பிரம்மம் [இயற்கை] தங்களின் அடுத்த தலைமுறையை பையோடு எடுத்துச்செல்லுதல், அடுத்து வரும் உயிரினங்களின் கருவுறுதல் +பாலூட்டல்+இரையூட்டல் என்ற விதிக்கு மாற்றியமைத்தது.

டைனோசர்கள் பரீட்சார்த்தமாக உருவாக்கப்பட்ட ஒரு உயிரினம், அவைகள் திட்டமிட்டே அழிக்கப்பட்டது. ஒரு டைனோசர் நாள் ஒன்றுக்கு பெரிய நான்கு மரங்களை தின்று தீர்க்குமாம் காடுகள் அழிப்பு, உணவு தட்டுப்பாடு இயற்கை[மரங்கள்] வானத்திலிருந்து கற்களை வரவழைத்து டைனோசர்களை அழித்துவிட்டது.

மண்ணில் உயிர்களை படைப்பதற்கு எல்லாம்வல்ல கடவுளுக்கும் கூட ஒரு முன்னோட்டம் தேவைப்பட்டிருக்கின்றது.

மரங்கள் தன்னை அழிப்பவனை அழிக்கும் வரம் பெற்றது. மரங்களை வெட்டினால் அது உயிரினத்தை அழிக்கும். பெரிய விருட்சங்கள் மனிதகுலத்தை வாழ வைக்கும்.

டைனோசர்கள் காலத்து விலங்குகளும் தாவரங்களும் இன்றுள்ள தாவரங்களை போலத்தான் நீரை பயன்படுத்தி, ஒளிச்சேர்க்கை மூலம் சர்க்கரை தயாரிப்பு, மரத்தின் இலை, தழை, கனிகளை உணவாக உட்கொண்டு டைனோசர்களும் உயிர் வாழ்தன,

மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்களின் உதவி தேவை என்ற காரணத்தினால் டைனோசர்கள் காலத்திலும் தேனீக்கள் கண்டிப்பாக இருந்திருக்கும். என்ன கொஞ்சம் பெரியதாக இருந்திருக்கும்.

டைனோசர் காலத்து தேனீக்களும் இன்றுள்ள தேனீக்கள் கூடு கட்டுவதுபோலத்தான் அன்றும் கட்டியிருக்கும் அவைகளுக்கு வேறு வடிவம் தெரியாது. அத்துனை தாவர, உயிரினத்தின் கட்டுமானங்களும் இந்த சூப்பர் குறியீடுக்குள்ளே அடங்கும்.

சூரியகாந்தி இருந்திருந்தாலும் இன்றுள்ள சூரியகாந்தி பூவைப்போலத்தான் இருந்திருக்கும் இந்த உலகம் ஃபைபோனச்சியின் எண்களுக்குள்ளே கட்டுப்பட்டது.

நீங்கள் டைனோசர்கள் காலத்து மரங்கள் பூக்கள் காய் கனிகளை வரைய நினைத்தால் இன்றுள்ள மரங்களைப்போல் கொஞ்சம் உயரம் அகலம் வைத்து வரையுங்கள். இலைகளின் அடுக்கு, பச்சை நிறம் காய் கனிகள் பெரும்பாலும் உருண்டையாக இருந்திருக்கும். கனிகள் சதுரமாகவோ அல்லது முக்கோணமாகவோ இருந்திருக்க வாய்ப்பே இல்லை.

அவைகளின் செரிமான கருவிகளும் இன்றுள்ள விலங்குகள் போலத்தான் கணையம் இன்சுலின் செரிமான நொதிகள் என்று, இன்றுள்ள விலங்குகளின் அத்துனை உள்ளுறுப்புகளும் அவைகளிலும் காணப்பட்டது.

மேச்சல் விலங்கு டைனோசர்களும் இரைமீட்டல் என்ற செரிமான உறுப்புக் கூட இருந்திருக்கலாம். உடல் சார்ந்த நோய்கள், வைரஸ் பாக்டீரியா தொற்று. எலும்பு முறிவு, எலும்பு தேய்மானம் மூட்டுவலி, வெட்டுக்காயம். டைனோசர்களுக்கும் சர்க்கரை நோய் கூட இருந்திருக்கலாம்.

சூப்பர் குறியீடு இப்படித்தான் பரிந்துரை செய்திருக்கின்றது. அதிலிருந்து இயற்கை எந்த காலத்திலும் மீறியது கிடையாது இனிமேலும் மீறப்போவதும் இல்லை.

மனிதன் தோன்றுவதற்கு 245 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் இருந்தே எலும்பு தசை இரத்தம் மூளை, இதயம் நாடி நரம்பு நோய் எதிர்ப்பு அமைப்பு என்று இன்றுள்ள லென்ஸ் வைத்த கண்கள் வரைக்கும் தோன்றிவிட்டது.

2,000 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த, கொள்ளு கொள்ளுத்தாத்தா கொள்ளுத்தாத்தாக்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்னைப்போல் என் அப்பா தாத்தாவைப்போல் இருந்திருப்பார்கள். டைனோசர்களும் இன்றுள்ள ஊர்வனத்தை போல, உருவத்தில் பெரியதாக இருந்திருக்கின்றது.

டைனோசர்களின் கண்களைப் பற்றி பேசுகின்ற போது, அவைகளுக்கு எந்த அமைப்பு கண்கள் இருந்திருக்கும் அவை எப்படி இந்த உலகத்தை பார்த்திருக்கும் என்பது சரியாக தெரியாது.

இருப்பினும் டைனோசர்கள் இன்றுள்ள ஊர்வனத்தின் முன்னோடிகள் என்ற காரணத்தால், முதலை, பல்லி, ஓணான், பாம்புகளுடைய கண்களை போலத்தான் அவைகளுக்கும் இருந்திருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மற்றும் கருவிழி சுருங்கி விரிதல் நீளமாகவும் மனித கண்களைப்போல் வட்டமாகவும் இருந்திருக்கலாம்.

காரணம் விலங்குகள் உலகத்தில் அன்று தொட்டு இன்று வரைக்கும் உருமறைப்பு என்ற ஒரு விடையம் இருக்கின்றது. எதிரிகளின் தாக்குதலிலிருந்து தங்களை பாதுகாப்பதற்கு மரப்பட்டை, இலை தண்டுகளின் நிறங்களை போல் தங்களை மாற்றியமைக்கின்றது இதற்கு நிறங்களும். அதை பார்ப்பதற்கு நிறம் உறிஞ்சும் கண்களும் அவசியமானது.

கண்டிப்பாக அவைகளின் தோலில் நிறங்கள் இருந்திருக்கலாம் ஒரு சில நிறங்களை அவை உணரக்கூடிய கண்களை கொண்டவையாகவும் இருந்திருக்கவேண்டும்.

டைனோசர்கள் உலகம் அற்புதமான ஒரு வசீகர உலகம். டைனோசர்களிலும் இன்றுள்ள விலங்குகள் உலகம் போல்,  சரிக்கு சரிபாதி வேட்டை விலங்கு மாமிச உண்ணிகளும். இலை தழை மேச்சல் விலங்குகளும் உண்டு. கடவுளின் தடயங்களை தேடி…

தூய நீர் வெளிப்படையானது அதற்கு நிறம் மற்றும்சுவையும்  மணமும் இல்லை. வேதியியலில், நீர் என்பது ஒரு கூட்டு முயற்ச்சி ஒட்சிசன்[O] மற்றும் ஹைட்ரஜனின்[H] கலவையாகும்.[H₂O]

அண்டத்தில் தனிமையாக இருந்த ஹைட்ரஜனையும்[H] ஒட்சிசனையும்[O] 104,45⁰ பாகை கோணத்தில் இணைத்து அதற்கு வடதுருவம் தென்துருவம் என்று இரண்டு துருவங்களை வைத்து. ஆகாய கங்கையாக பூமியில் கொட்டப்பட்டது.

தண்ணீரை உருவாக்கும் அணுக்கள் பூமியை விட பழமையானவை, ஐந்து முதல் பத்து பில்லியன் ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அது நட்சத்திரங்களில்சுப்பர் நோவா வெடிப்பின் போது உருவானது

சுத்திகரிக்கப்பட்ட வானம்,,பூமி குளிர்ந்தவுடன்  திரவ நீர் உருவானது. சுமார் நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் முதல் ஆதிக்கடல் உருவானது. இதற்கு பிறகு  திரவம், திண்மம்  நீராவி என்ற மூன்று நிலைகளில் மாறுகின்றன.

இதனுடைய வேதியியல் வினைத்திறன் நெருப்பு, விளைபொருள் நீராவிநீரின் இரண்டு மூலங்களையும் பிரித்து மீண்டும் ஒன்றாக சேர்க்கும் போது பெரும் ஆற்றல் சக்தியாக மாறுகின்றது. [ராக்கெட் எரிபொருள் ]

தண்ணீரில் பல வகை உண்டு, உவர்ப்பு நீர், துவர்ப்பு  நீர். வடிநீர், மழைநீர், மினரல் வாட்டர், சாதாரண குடிநீர்ஊற்று நீர், கிணற்று நீர், அருவி-ஆற்று நீர்,

நல்ல தண்ணீருக்கு சில வரம்புகள் தனித்தன்மைகள் உண்டு செப்பு/தாமிரம், மெக்னீசியம், துத்தநாகம், போன்ற உலோகசத்துக்களும், தாது உப்புகளும் இருக்க வேண்டும்

குடிநீரில் மற்றும் கனிம-தாது உப்புக்களின் அளவு இடத்துக்கு இடம் வேறுபட்டாலும்  pH 6,0>7<7,2 மதிப்பும் இருக்க வேண்டும் என்பது குடிநீரின் வரம்பாக இருக்கின்றது. [சாதாரண குடிநீர் pH 7,0 காரமும் அமிலமும் இல்லாது நடுநிலையானதுதவறான குடிநீர் பல நோய்களுக்கு காரணியாகவும்  நல்ல குடிநீர் நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் இருக்கின்றது.

நோய்களை குணப்படுத்தும் தண்ணீரிலுள்ள தாது-உப்புகளின் அளவுகள்

மெக்னீசியம் கார்பனேட் (MgCO3)  > 100 மிகி / l

கால்சியம் (Ca²+) > 250 மிகி / l

ஃபுளோரைடு (F-) > 1.0 மிகி / l

சல்பேட் (SO₄ ²-) > 1200 மிகி / l

ஹைட்ரஜன் கார்பனேற்று (HCO 3-) > 1,300 மிகி / l