செவ்வாய், 18 ஏப்ரல், 2023

Clues to coronavirus are lessons we've learned from previous coronavirus infections.

கொரோனா   வைரஸின்  தடயங்கள்:  முந்தைய கொரோனா வைரஸின் தொற்றுகளில் இருந்து நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள். கொரோனா தடுப்பூசிகள் ஐரோப்பாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை காப்பாற்றியுள்ளன  இது நேர்மறையான செய்தி, மறுபுறம் கொரோனா தடுப்பூசி சேதம் பற்றிய கவலைகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது எதிர்மறையான ஒரு செய்தி இருப்பினும், பத்தாயிரம் மக்களில் ஒருத்தருக்கு இது போன்ற சேதங்கள் ஏற்படலாம்.

 

தடுப்பூசி சேதம் பற்றி இதுவரை அறியப்படாத காரணங்களில் ஒன்று. இதற்கு எந்த மருத்துவ ஆதாரங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  மத்திய நரம்பு மண்டலத்தின் பாதிப்பு [மல்டிபிள் ஸ்களீரோசிஸின் ] சுருக்கமாக MS என்று அழைக்கப்படுகின்றது.

 

இது பல்வேறு அறிகுறிகளில் தன்னை வெளிப்படுத்துகின்றது மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வேறுபட்டது. எவ்வாறாயினும், இது ஆயிரம் முகங்களைக் கொண்ட நாள்பட்ட நோய்க்குப் பின்னால் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஒரு செயலிழப்பு/மிகைப்பு உள்ளது.

 

இதற்கான சரியான காரணங்கள் எதுவும் இன்னும் அறியப்படவில்லை இருப்பினும், அது 99 விழுக்காடுகள்  சுய-உடல்-தாக்கி நோய் [ ஆட்டோ இம்யூன் நோய்] என்று அழைக்கப்படுவது இப்போது தெளிவாகின்றது. இதற்கு பின்னால் இயற்கையான குடல்-வாழ் நல்ல பாக்டீரியாக்கள், கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் மற்றய நோய்க்கிருமிகள், வைரஸ்களின் தொற்றுக்கள், கொரோனா வைரஸ் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை கொம்பு சீவி விடும் தடுப்பூசியின் சேர்மங்கள்  ஒரு காரணியாகவும் இருக்கலாம்.

 

இருப்பினும்  MS, நரம்பு மண்டலத்தின் பாதிப்பு ஒரு தொற்றுநோய் கிடையாது. இது நோய்க்கிருமிகளால் தூண்டப்படுவதில்லை, ஆனால் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தால் தூண்டப்படுகின்றது . வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அது திடீரென்று ஆரோக்கியமான, உட்புற திசுக்களைத் தாக்குகின்றது.

 

MS இன் விஷயத்தில், இவை மெய்லின் உறைகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை நரம்பு செயல்முறைகளை ஒரு இன்சுலேடிங் லேயர் போலச் சூழ்ந்து, இதனால் உணர்ச்சித் தூண்டுதல்களின் சீரான பரிமாற்றத்தை உறுதி செய்கின்றன மத்திய நரம்பு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவும் இது அழற்சியை விவரிக்கின்றது.

 

மூளையின் வெவ்வேறு பகுதிகள், முதுகுத் தண்டு மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கு இடையில்  செய்திகள்  அனுப்பப்படாது, மேலும் பாதிக்கப்பட்ட நரம்பு செல்கள் இறக்கின்றன. இதன் நிமித்தம் பாதிக்கப்பட்டவர் வாழ்நாள்  பூராகவும் சக்கர நாற்காலியில் உட்கார வேண்டிவரும். இதை குணப்படுத்த முடியாது என்பது வருத்தமான உண்மை. உங்கள் கவலைகள், பணத்தை  மீதப்படுத்த ஒரு தகவல் இது.

 

 கொரோனா  வைரஸின்   தடயங்களை  தேடி....  உங்களை நான் சுமார் 21 வருட ஒரு காலப் பயணத்திற்கு அழைத்து செல்கின்றேன். 

 

நவம்பர் 2002 இல் சீனாவின் ஹெயுவானில் உள்ள மருத்துவமனைக்கு 33 வயதான சமையல்காரர் ஒருவர் [ வௌவால் சூப் சமைத்தவர்] வறட்டு இருமல் மற்றும் அதிக காய்ச்சலுடன் அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​அவருடைய நோயின் தீவிரத்தை யாரும் சந்தேகிக்கவில்லை அது ஒரு உலகளாவிய தொற்றாக மாறும் என்று. மார்ச் 4, 2003 முதல் SARS நோயாளி கொரோனா வைரஸால் இறந்தார்

 

SARS எனப்படும் புதிய வகை நோய் மருத்துவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

நகர மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது, ​​​​அந்த நபர் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் எட்டு கிளினிக் ஊழியர்களுக்கு  அவர் மூலம் தொற்று ஏற்பட்டது. அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதால் மருத்துவர்கள் கவலையடைந்துள்ளனர். மருத்துவர்களின் மதிப்பீடு நாங்கள் முற்றிலும் புதிய மற்றும் ஆபத்தான நோயைக் கையாளுகிறோம்.

 

இந்த புதிய நோயை ஆராய்வதில் ஈடுபட்டுள்ள கிறிஸ்டியன் ட்ரோஸ்டன், ஒரு ஜெர்மன் வைராலஜிஸ்ட் ஆவார். 2007 முதல் 2017 வரை  பான் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார் அவர் புதிய வைரஸ் ஒரு ஜூனோசிஸ், அதாவது விலங்கு இராச்சியத்தில் உள்ள நோய்க்கிருமி உண்மையில் மனிதர்களுக்கு மட்டுமே மாறிய ஒரு நோய் என்று ஆரம்பத்திலேயே உறுதியாக இருந்தார். [ வௌவால்களிலிருந்து  மனிதர்களுக்கு பரவியது]

 

SARS எனப்படும் புதிய வகை நோய் கொரோனா வைரஸிலிருந்து புதிய பிறழ்வு SARS-CoV-2 பரவத் துவங்கியது. 2019-nCoV அதிகாரப்பூர்வமாக SARS-CoV-2 என்றும் இந்த நோய்க்கு COVID-19 என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு கடந்த கால நிகழ்வுகள்.

 

கோவிட் 19 க்கு ஒரு தொடக்க புள்ளி இருக்கும் போது, அதை திசை திருப்ப இன்று அது வேறு விதமாக பார்க்கப்படுகின்றது. கோவிட் 19 சீனாவின் ஹெயுவானிலிருந்து   தொடங்கியதாக அறியப்பட்டாலும் கொரோனா வைரஸ் அது ஒரு ஜூனோசிஸ்,  வௌவால்களில் இருந்து மனித இனத்திற்கு தாவியது என்பது 75 விழுக்காடுகள் உறுதியானது.

 

சர்வதேசபரவல், கொரோனா வைரஸை ஆய்வு செய்த ஆய்வகங்களே இதற்கான [கோவிட் 19] முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அங்கிருந்து தான் இது பரவத் தொடங்கியது  அது விபத்தா அல்லது திட்டமிட்டு பரப்பப்பட்டதா?  ஆய்வு செய்ய வேண்டிய ஒன்று. உண்மையான ஆய்வுகளுக்கு சீனா ஒத்துழைக்குமா... இது எவ்வளவு தூரம் சாத்தியப்படும், பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

 




 

வியாழன், 13 ஏப்ரல், 2023

Does dialysis help improve kidney disease, no. Dialysis is essential for life unless a successful kidney transplant is possible.

மருந்தும் மனிதனும்;  உயிர்நிலை என்பது நூறு வருடங்கள் வறண்ட நிலத்தில் ஒரு விதை இருந்தாலும் அந்த விதை மழையில்  நனைந்தவுடன் விருச்சமாக வளர்ந்து விடும். விதைகளின் உயிர் நிலைகள் அழியா வரம் பெற்றவை.

மனித உடலும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் போது இந்த உயிர்நிலைகள் உயிருடன் இருக்கும். 50-60 வயது தாண்டியவுடன் இந்த உயிர் நிலைகள் தங்களுடைய துடிப்பை இழந்து விடுகின்றன. மனித உடலில் சுமார் 60 மில்லியன் உயிர் நிலைகள் உள்ளது இதில்  பாதிக்கு மேல் இழக்கும் போது ஒரு மனிதன் நோய் வாய்ப்படுகின்றான்.

அதை மீண்டும் இயங்க வைப்பதற்கு மருத்துவம் உதவுகின்றது ஒரு காலகட்டத்தில் அந்த உயிர் நிலைகளை முழுவதையும் மருத்துவம் தன்னகப் படுத்தி வைத்திருக்கின்றது.

மருத்துவம் தன்னை நிறுத்திக் கொள்ளும் போது அவன் மரணத்தை தழுவிக் கொள்கின்றான். 60 வயது தாண்டிய 70% மக்கள் மருத்துவத்தில் தான் உயிர் வாழ்கின்றார்கள்அந்த மருத்துவமும் மருந்தும்  அவனை கைவிடும் பட்சத்தில்   நடைப்பிணமாகி மண்ணுக்கு திரும்புகின்றான். அதில் ஒரு மருத்துவத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

இரத்தம் கழுவுதல் [டயாலிசிஸ்];  தவறான வாழ்வியல், பெரும் தீனி, முறையான மருத்துவம் இல்லாத சர்க்கரைநோய்தவறான மருத்துவம் மருந்துகளின் பாவனை  மற்றும் இயற்கையான முதுமைக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளினால்மேற்கோளாக: உடல் பருமனுக்காக எடுக்கப்படும் மருந்துகளினால்  இரண்டு சிறுநீரகங்களையும் இழந்து அல்லல் படும் மக்களை விரல் விட்டு எண்ணக்கூடிய  அளவிற்கு அதிகமாகி கொண்டே வருகின்றது.

மருத்துவத்தில், டயாலிசிஸ் என்பது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாதபோது அவற்றின் செயல்பாட்டை மாற்றும் ஒரு செயல்முறையைக் குறிக்கின்றது.  எனவே இது சிறுநீரக மாற்று சிகிச்சை செயல்முறை என்றும் குறிப்பிடப்படுகின்றது. இரத்தத்தில் இருந்து அதிகப்படியான நீர், கழிவுகள் மற்றும் வெளியேற்றும் பொருட்களை அகற்ற டயாலிசிஸ் பயன்படுத்தப்படுகின்றது,[டயாலிசிஸ் கழிவு பொருட்கள்: உடலில் இருந்து நச்சுகள், அதிகப்படியான உப்பு  யூரியா அல்லது கிரியேட்டினின் போன்ற வளர்சிதை மாற்ற இறுதி பொருட்களை நீக்குதல்]

டயாலிசிஸ், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அன்றாட வாழ்வில் மாற்றம், சிகிச்சைகள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறும். இருப்பினும், கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வாழ்க்கைத் தரம் மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றை அதிகரிக்க அவை குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்கின்றன.

சிறுநீரக நோயாளிகளின் வாழ்க்கை உயிர் இந்த டயாலிசிஸ் இயந்திரத்திற்கு உள்ளே தான் முடக்கி வைக்கப்பட்டு இருக்கின்றது. ஒரு தரம் டயாலிசிஸ் செய்வதை மறந்தால் போதும் அது உயிர் ஆபத்தை ஏற்படுத்த கூடும். டயாலிசிஸ் உடலுக்கு மிகவும் அழுத்தமாக இருப்பதால், சிகிச்சையானது இரத்த அழுத்தம் குறைவதற்கும் வழிவகுக்கும்.  தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் ஆகியவை பக்க விளைவுகளாகும், அவை அவசியம் ஏற்பட வேண்டிய அவசியமில்லை, ஆனால் ஏற்படலாம். 

சிறுநீரக நோயை மேம்படுத்த டயாலிசிஸ் உதவுமா, இல்லை. வெற்றிகரமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமில்லாத வரையில் டயாலிசிஸ் வாழ்க்கைக்கு அவசியம்..

சிறுநீரக செயலிழப்பு, மிக முக்கியமான இரண்டு சிகிச்சை முறைகள்.

ஹீமோடயாலிசிஸ்- HHD [Hemodialysis] என்றால் என்ன?

டயாலிசிஸ் மையங்களில்த்தான் இதற்கான வசதிகள் அத்துனையும் உண்டு, பெரும்பாலும் அங்குதான்  செய்யப்படுகின்றது, சிறுநீரகங்கள் செய்யும் வேலையை இயந்திரங்கள் [செயற்கை சிறுநீரகங்கள்] மூலம் கைகளிலுள்ள இரத்தக்குழாய்கள் வழியே இரத்தத்தை வெளியில் இருந்து சுத்திகரிப்பு செய்யும் முறை 5-6 மணித்தியாலங்கள் வரை சிகிச்சைக்கான நேரம்  எடுக்கும் 

இதை வாரம் 3-4 முறை செய்ய வேண்டும் டயாலிசிஸ் செய்து கொண்டிருப்பவர்கள் தங்கள் இரத்தத்தில் பொஸ்பேட் சத்தை சரியான அளவு கட்டுப்படுத்தி வைத்திருப்பது அவசியம் பொட்டாசியம் மிக அதிகம் உள்ள உணவுப்பொருட்களை அறவே தவிர்க்கவும் மருத்துவர்களின் ஆலோசனையின் படிதான் தண்ணீர், உணவுகளை எடுக்க வேண்டும்.

பெரிடோனியல் டயாலிசிஸ் - CAPD [Peritoneal dialysis] அறுவை சிகிச்சையின் மூலம் துளையிட்டு ஏற்க்கனவே நோயாளியின் வயிற்றினுள் ஒரு குழாய் பொருத்தப்பட்டிருக்கும் இதன் மூலம் சுத்தீகரிப்பு திரவத்தை வயிற்றுக்குள் செலுத்தி சில மணிநேரம் கழித்து

திரும்பவும் வெளியே இந்த திரவத்தை எடுக்கும் முறை,  இதை தினம் 4-5 முறை செய்ய வேண்டும். இதனை வீட்டிலேயே செய்து கொள்ளலாம். மிக சுத்தமாக இதை செய்ய வேண்டும். அப்படி வெளியேறிய திரவத்தில் சிறுநீரகத்தின் மூலம் வெளியேற வேண்டிய கழிவுப் பொருக்கள் இதில் அடங்கி இருக்கும் இவர்கள் டயாலிசிஸ் மையம் சென்று எட்டு-பன்னிரண்டு வாரங்களில் ஒரு முறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்

உடலில் விற்றமின்கள் மற்றும் புரதம், சர்க்கரை இழப்புக்களை சமநிலைப்படுத்த உணவில் கவனம் செலுத்த வேண்டும். மற்றும் படி டயாலிசிஸ் மையம் மருத்துவர்களின் ஆலோசனையின் படிதான் தண்ணீர், உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் மற்றவர்களின் ஆலோசனை எதையும் நீங்கள் கேட்கக் கூடாது உங்கள் மருத்துவர் பரிந்துரை செய்ததையே நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

கிரியேட்டினின், GFR, யூரியா. சிறுநீரக ஆய்வக மதிப்புகள். சாதாரண GFR 90 - 120 ml/min  உள்ளது

GFR என்பது ஒரு ஆய்வக மதிப்பாகும், இது சாதாரணமாக செயல்படும் சிறுநீரகங்களுக்கு நிமிடத்திற்கு 90-130 மில்லிலிட்டர்கள் ஆகும். இதன் பொருள் ஆரோக்கியமான சிறுநீரகம் நிமிடத்திற்கு 90 மில்லி லிட்டர் இரத்தத்தை சுதந்திரமாக வடிகட்டக்கூடிய பொருட்களிலிருந்து சுத்தம் செய்து சிறுநீரில் வெளியேற்றுகிறது.

 

நிலை விளக்கம் GFR [ml/(min*1.73 m²)]

1 GFR மிக அதிகமாக உள்ளது அல்லது இயல்பானது ≥90

2 லேசான சிறுநீரக பாதிப்பு - சற்று GFR மிகக் குறைவு 60 - 89

3 மிதமான சிறுநீரக பாதிப்பு - மிதமான GFR மிகக் குறைவு 30 - 59

4 கடுமையான சிறுநீரக பாதிப்பு - கடுமையான GFR மிகக் குறைவு 15 - 29

5 சிறுநீரக செயலிழப்பு <15 (அல்லது டயாலிசிஸ்)

 

கிரியேட்டினின்: அளவீட்டு முறை மற்றும் வயதைப் பொறுத்து,

பெண்களில் 0.4–1.12 mg/dl [35–99 மைக்ரோமோல்கள்/லிட்டர்], ஆண்களில் 0.57–1.3 mg/dl [50–115 மைக்ரோமோல்கள்/லிட்டர்]

 

GFR: ஆரோக்கியமான சிறுநீரகங்களைக் கொண்ட இளைஞர்களில், 90-130 மிலி/நிமிடம். 60 மிலி/நிமிடத்திலிருந்து ஒருவர் நாள்பட்ட சிறுநீரக பலவீனத்தைப் பற்றி பேசுகிறார், சுமார் 10 முதல் 15 மிலி/நிமிடத்திற்குக் கீழே டயாலிசிஸ் [இரத்தக் கழுவுதல்] பொதுவாக எதிர்காலத்தில் அவசியமாக இருக்கும்.

 

சிறுநீரில் அல்புமின்: 30 மி.கி/24 மணி நேரத்திற்கும் குறைவாக

யூரியா: 17-43 mg/dl [2.8-7.2 mmol/லிட்டர்]

யூரிக் அமிலம்: பெண்கள் 2.3-6.1 mg/dl [137-363 மைக்ரோமோல்கள்/லிட்டர் இரத்த சீரம்]

ஆண்கள் 3.6-8.2 mg/dl [214-488 மைக்ரோமோல்கள்/லிட்டர்]

 

பொட்டாசியம்: 3.7-5.1 மிமீல்/லிட்டர்

கால்சியம்: 8.6-10.3 mg/dl [2.15-2.58 mmol/லிட்டர்]

பாஸ்பேட்: 2.6-4.5 mg/dl [0.84-1.45 mmol/லிட்டர்]

அல்புமின் ஒரு புரதம். இது இரத்த சீரத்தில் உள்ள மொத்த புரதத்தில் 60 சதவிகிதம் ஆகும். இது முதன்மையாக கல்லீரல் செல்களில் [ஹெபடோசைட்டுகள்]


சிறுநீரக செயலிழப்பிற்கு  மிக முக்கிய காரணிகளில் ஒன்று; இரத்த சுற்றோட்ட கோளாறுகள். மிக முக்கியமான இருதய நோய்களில் உயர் இரத்த அழுத்தம் [உயர் இரத்த அழுத்தம்] ஆஞ்சினா பெக்டோரிஸ், மாரடைப்பு, இதய செயலிழப்பு, கார்டியாக் அரித்மியா மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் ஆகியவை அடங்கும்.


இரத்த சோகை: பொதுவாக  இரத்த சோகை அல்லது இரத்தக் குறைபாடு என்றும் அழைக்கப்படுகின்றது [ இரும்புச்சத்து குறைபாடு: சிவப்பு இரத்த நிறமியின்  [ஹீமோகுளோபின்] விகிதம்  மிகவும் குறைவாக உள்ளது  அல்லது இரத்தத்தில் மிகக் குறைவான சிவப்பு இரத்த அணுக்கள்[எரித்ரோசைட்டுகள்]  உள்ளன சிவப்பு இரத்த அணுக்களின் குறைபாட்டிற்கு வேறு சில அரிதான காரணிகளும் உண்டு அது இங்கு தேவைப்படவில்லை.


நோயறிதலுக்கு பல்வேறு அளவுகோல்கள் தீர்க்கமானவை அது இரத்த பரிசோதனை மூலம் அளவிடப்படுகின்றது; சிவப்பு இரத்த நிறமியின்  [ஹீமோகுளோபின்] விகிதம்  மிகவும் குறைவாக உள்ளது  அல்லது இரத்தத்தில் மிகக் குறைவான சிவப்பு இரத்த அணுக்கள் [எரித்ரோசைட்டுகள்]  உள்ளன . உங்களுக்கு இரத்த சோகை இருக்கிறதா என்பதைக் கண்டறிய இரத்தப்  பரிசோதனை அவசியம்.


இதைச் செய்ய, மருத்துவர் முதலில் நோயாளியிடமிருந்து இரத்தத்தை எடுத்துக்கொள்கிறார். ஆய்வக ஊழியர்கள் பின்னர் ஹீமோகுளோபின் மற்றும் எரித்ரோசைட்டுகளின் அளவை தீர்மானிக்கிறார்கள். ஆண்களில், ஒரு டெசிலிட்டருக்கு 13 கிராமுக்கும் குறைவான ஹீமோகுளோபின் செறிவு  [Hb மதிப்பு]


இருந்தால்  அவருக்கு  இரத்த சோகை இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். பெண்களுக்கு ஒரு டெசிலிட்டருக்கு 12 கிராமுக்கு குறைவானதாக இருந்தால் அவர் இரத்தப் பற்றாக்குறை உள்ளவர் என்று அறியப்படுகின்றார். பெண்களுக்கு இரத்தப் பற்றாக்குறை, இரும்பு சத்து குறைபாட்டிற்கு மாறுபட்ட காரணங்கள் உண்டு, மாத சுழற்சி, மகப்பேறு, சிசேரியன்.


சிவப்பு  இரத்த அணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின்; இரத்த பிளாஸ்மா [தெளிவான, மஞ்சள் நிற திரவம்] கூடுதலாக , இரத்தத்தில்   பல்வேறு இரத்த அணுக்கள் உள்ளன:  இரத்த தட்டுக்கள்  [த்ரோம்போசைட்டுகள்] வெள்ளை   [லுகோசைட்டுகள்] மற்றும்  சிவப்பு இரத்த அணுக்கள்  [எரித்ரோசைட்டுகள்]பிந்தைய ஒரு முக்கிய கூறு  சிவப்பு இரத்த நிறமி  [ஹீமோகுளோபின்]ஆகும். இதில் அதிக  இரும்புச் சத்து இருப்பதால்  ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிக்கின்றது.


இருப்பினும், ஹீமோகுளோபினின் மிக முக்கியமான பணி  ஒட்சிசனை[O₂] பிணைப்பதாகும் .  இரத்த ஓட்டத்தின் மூலம் ஒட்சிசனை உடலின் செல்களுக்கு கொண்டு செல்வதற்கும் ,  செல்களில் இருந்து  வெளியேறும்  கார்பன் டை ஆக்சைடை [CO₂]  வெளியேற்றுவதற்கும்   சிவப்பு இரத்த அணுக்கள் பொறுப்பு .


இரத்த சோகை இருப்பதற்கு  மிகவும் பொதுவான அறிகுறிகள்: தலைச்சுற்றல், பலவீனம், செயல்திறன் குறைதல், படபடப்பு, இறுக்கம் மற்றும் மார்பு வலி.சோர்வு மற்றும் சோம்பல் கொட்டாவி சோர்வு இரத்த சோகையைக் குறிக்கும். ஒருவருடைய சோர்வு, போதுமான தூக்கம் இல்லாது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தால், அது இரத்த சோகை காரணமாக இருக்கலாம். இந்த காரணிகள் சிறுநீரக செயலிழப்பிற்கு இரத்த சோகையின் சாத்தியமான குறிகாட்டிகளாகும்.


உங்கள் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட காரணியை மீள் ஆய்வு செய்வதற்கு கீழே உள்ள இந்த கட்டுரை உதவும். சிறுநீரக-நோய்-Kidney Disease




புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine