பிரான்சிஸுக்குப் பிறகு யார் அடுத்த போப்பாண்டவர்: ஈஸ்டர் திங்கள் கிழமை காலை 7:35 மணி [21,4.25] கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் தனது 88வது வயதில் கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு காலமானார். அவர் தன்னை மிக எளிமையான முறையில் அடக்கம் செய்யுங்கள் என வேண்டிக்கொண்டார்
பிரான்சிஸ் நிமோனியாவிலிருந்து அரிதாகவே தப்பினார்.ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை, வத்திக்கானில் நடந்த ஈஸ்டர் திருப்பலியில் பிரான்சிஸ் பகிரங்கமாக பங்கேற்றார். நடுங்கும் குரலில் அவர் "உர்பி எட் ஓர்பி" என்று ஆசீர்வதித்தார்.
உர்பி எட் ஓர்பி (லத்தீன் 'நகரம் (ரோம்) மற்றும் உலகிற்கு') அல்லது பெனடிக்டியோ கோரம் பாப்புலோ (லத்தீன் 'மக்கள் முன் ஆசீர்வாதம்') என்பது போப்பின் அப்போஸ்தலிக்க ஆசீர்வாதத்தைக் குறிக்கின்றது,
திறந்த சவப்பெட்டியில், போப் பிரான்சிஸின் உடல், சனிக்கிழமை ரோமில் நடைபெறும் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில்,காலை 11 மணி முதல், விரும்பும் எவரும் போப் பிரான்சிஸ் அவர்கள் இருக்கும் புனித பீட்டர் பசிலிக்காவில் அவருக்கு விடைபெறலாம். காலை நேரத்திலிருந்தே நூற்றுக்கணக்கான விசுவாசிகள் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடிவருகிறார்கள்.
உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்கள் மறைந்த போப் பிரான்சிஸுக்கு இரங்கல் தெரிவிக்கின்றனர்.லத்தீன் அமெரிக்காவிலிருந்து [அர்ஜென்டினா; † ஏப்ரல் 21, 2025] இல் வந்த முதல் போப்பாண்டவருக்குப் பிறகு யார் அடுத்த போப்பாண்டவர்.
செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் வாரிசுரிமைக்கு விருப்பமான ஆறு பேர்கள் பரிந்துரை செய்துள்ளது.வாக்களிக்கத் தகுதியுள்ள கார்டினல்கள், போப் இறந்த 15வது நாளுக்கு முன்னும், 20வது நாளுக்குப் பின்னும் வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கூடுவார்கள். எனவே வரவிருக்கும் போப்பாண்டவர் தேர்தல் மே 6 முதல் மே 11 வரை தொடங்கும்.
எண்ணப்பட்ட வாக்கு சீட்டுகள் வைக்கோல் கொண்டு எரிக்கப்படும் இந்த அடுப்பு 1939 ஆண்டிலிருந்து பயன்பாட்டிலுள்ளது. இதுவொரு பாரம்பரியம் புகைபோக்கி , புகை வெண்மையாக மாறும் வரை வாக்களியுங்கள் கார்டினல்கள் இப்படித்தான் முடிவு செய்கிறார்கள்.
மே 5 முதல் 10 வரை தொடங்கும் புதிய போப்பின் தேர்தல், வெளிப்படையானதாகவும் கணிக்க முடியாததாகவும் கருதப்படுகின்றது. இதுவொரு ரகசிய தேர்வு முடிவுகள். காத்திருங்கள் யார் அடுத்த போப்பாண்டவர்.
இந்த பூமியில் வந்திறங்கிய மெசியாக்கள். உங்கள் பாவங்களுக்காக பாவ மன்னிப்பு வழங்கும் புனிதர்கள். உங்களுக்காக உங்கள் சந்ததிக்காக நீங்கள் அறியாமல் செய்த பாவங்களை சுமக்கும் புனித ஆன்மாக்கள், துரதிர்ஷ்டவசமாக பெரும் நோய்வாய்ப்பட்டு இறந்து போவார்கள். காரணம் உங்கள் பாவங்களை அவர்கள் சுமப்பதால். இயேசு கிறிஸ்து மிருகவதை மிருகங்களை பலியிடுவதை கண்டு மனம் வருந்தி உங்கள் பாவங்களை சுமக்கும் பலியாடாக நானே இருக்கிறேன். அதை நீங்கள் விட்டு விடுங்கள். அவரை மிருகங்கள் போல் கொடூரமாக கொலை செய்தார்கள். இதுதான் "நித்திய தர்மம் நன்றி,,,,,...
https://mahesva.blogspot.com/?view=magazine
புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக