ஞாயிறு, 19 அக்டோபர், 2025

Arginine is: A semi-essential amino acid that plays a key role in the body's production of nitric oxide (NO). N

பீட்ரூட்: பீட்ரூட்டில் நைட்ரேட் இருப்பதால் இது ஆரோக்கியமானது, இது இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றது. இதில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு முகவரான பெட்டானின் உள்ளது. இது ஃபோலிக் அமிலம், இரும்பு மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றிலும் நிறைந்துள்ளது, இது இரத்த உருவாக்கம், நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் செரிமானத்தை ஆதரிக்கின்றது. இந்த பொருட்கள் தசைகளுக்குள் ஒட்சிசன் [O2] உறிஞ்சுதலை ஊக்குவிக்கின்றன, உடல் மற்றும் அறிவாற்றல் செயல்திறனை அதிகரிக்கின்றன, மேலும் இருதய நோய்களைத் தடுப்பதில் பங்களிக்கக்கூடும்.

* பீட்ரூட்டில் உள்ள மிக முக்கியமான இரண்டாம் நிலை தாவரப் பொருட்கள் பீட்டானின் (சிவப்பு நிறமி மற்றும் ஒரு ஆக்ஸிஜனேற்றி) மற்றும் நைட்ரேட் ஆகும், இது உடலில் வாசோடைலேட்டிங் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றப்படுகிறது. பீட்ரூட்டின் இந்த பொருட்கள்  ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விளைவுகளுக்கு பங்களிக்கின்றன, எடுத்துக்காட்டாக, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துதல், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவைக் கொண்டுள்ளன.

*பீட்டானின் சிவப்பு நிறமி: இதுவொரு ஆக்ஸிஜனேற்றி மற்றும் நைட்ரேட் ஆகும், இது வாசோடைலேட்டிங் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றப்படுகிறது. நைட்ரிக் ஆக்சைடு (NO) எல்-அர்ஜினைன் போன்ற அமினோ அமிலங்களிலிருந்து உருவாகிறது மற்றும் வாசோடைலேட்டரி விளைவைக் கொண்டிருக்கிறது, இதனால் இரத்த நாளங்கள் தளர்வடைகின்றன. இந்த விளைவு இருதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானது மற்றும் சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுகிறது, எடுத்துக்காட்டாக, இருதய நோய் மற்றும் விறைப்புத்தன்மை குறைபாடு சிகிச்சையில்.

அர்ஜினைன் என்பது: உடலின் நைட்ரிக் ஆக்சைடு (NO) உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அரை-அத்தியாவசிய அமினோ அமிலமாகும். நைட்ரிக் ஆக்சைடு இரத்த நாளங்களின் தளர்வு மற்றும் விரிவாக்கத்திற்கு பங்களிக்கிறது, இதனால் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது.

அர்ஜினைன் குறைபாடு: அர்ஜினைன் குறைபாடு வாஸ்குலர் செயல்பாட்டை பாதிக்கிறது. இதன் விளைவாக நாளங்கள் சுருக்கப்பட்டு இரத்த ஓட்டம் குறையும் படிவுகள் ஏற்படுகின்றன.

அர்ஜினைன் குறைபாடு இல்லை: அர்ஜினைன் தேவை பூர்த்தி செய்யப்பட்டால், நாளங்கள் ஆரோக்கியமாகவும் மீள்தன்மையுடனும் இருக்கும். படிவுகள் உருவாகாது, இதனால் இரத்த ஓட்டம் மேம்படும்.

நைட்ரிக் ஆக்சைடு, அல்லது சுருக்கமாக NO, மனித உடலில் மிகவும் பரவலாக விநியோகிக்கப்படும் சமிக்ஞை மூலக்கூறு ஆகும். நரம்பு சமிக்ஞை, நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் இரத்த நாளங்களின் விரிவாக்கம் உள்ளிட்ட பல செயல்முறைகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. உறுப்புகளுக்கு இரத்த விநியோகத்தில் NO இன் முக்கியத்துவத்தையும், ஒரு தூதுப் பொருளாக செயல்படுகின்றது

உடலில் நைட்ரிக் ஆக்சைடின் (NO) செயல்பாடுகள் NO இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது செல்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை மிகவும் திறமையாக வழங்க வழிவகுக்கிறது. இது தமனி தடிப்புத் தோல் அழற்சியைத் தடுப்பதற்கும் பங்களிக்கிறது. எனவே நைட்ரிக் ஆக்சைடு (NO) ஒரு முக்கியமான நரம்பியக்கடத்தி மட்டுமல்ல, மனித உடலில் மிகவும் பரவலாக விநியோகிக்கப்படும் சமிக்ஞை மூலக்கூறு ஆகும்.

 பீட்ரூட்: மிக முக்கியமான 10 சுகாதார நன்மைகள்.

- புற்றுநோயைத் தடுக்கின்றது.

- மூளை செயல்பாட்டை மேம்படுத்துகின்றது.

- எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றது.

- நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றது.

- இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகின்றது.

- கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்லது.

- குறைந்த கொழுப்புச் சத்து.

- உடல் சோர்வை நீக்குகின்றது.

-இரத்த சோகையை நிர்வகிக்கிறது.

- பாலியல் ஆரோக்கியத்தையும் உடல்

சகிப்பின்மையையும் மேம்படுத்துகின்றது.

 

ஃபோலிக் அமிலம் - 34%

மாங்கனீசு - 28%

நார்ச்சத்து- 14%

காப்பர்- 14%

பொட்டாசியம்-15%

 

 https://mahesva.blogspot.com/?view=magazine

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்





சனி, 18 அக்டோபர், 2025

How to live beyond 100 years? We can easily receive blessings from others saying, "Live for many years! Live healthy!" But

100 வயதுக்கு மேல் வாழ்வது எப்படி?பல்லாண்டு காலம் வாழ்க! ஆரோக்கியமாக வாழ்க! என்று சுலபமாக மற்றவர்களிடம் இருந்து ஆசிகளை பெற்று விடலாம் ஆனால் அப்படி வாழ்வது என்பது அவ்வளவு சுலபம் கிடையாது அதற்க்காக நாங்கள் நிறைய உழைக்க வேண்டும் எங்களுடைய உணவுப்பழக்கம், உடல் பயிர்ச்சி என்று வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் அப்படி செய்தாலும் கூட எங்களுடைய பரம்பரை அலகுகள் - Genetics வந்து இடைமறித்து இதற்க்கு மேலே உன்னை வாழ விடமாட்டேன் என்று சொல்லி வாழ்வை பறிச்சுபோடுது எங்களை பொறுத்த மட்டில்100 வயது வரை வாழ்வது என்பது கேள்விக்குறிதான்

ஆனால் தென் அமெரிக்காவிலுள்ள எக்குவடோர் (Ecuador) என்னும் நாட்டில் வாழும் குள்ள மனிதர்கள் - Dwarf People நீண்டகாலம் வரை வாழ்வதாக கேள்விப்பட்டு அங்கு முகாம் இட்டு அவர்களை மரபணு பகுப்பாய்வு - DNA analysis, இரத்த பரிசோதனை செய்து அவர்களை பற்றிய தகவல்களை சேகரித்த போது மருத்துவ ஆராச்சிக்காக சென்றவர்களுக்கு இன்னும் ஒரு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது.

அவர்களுக்கு எந்த நோய்களும் வந்தது இல்லையாம் குறிப்பாக சர்க்கரைநோய், புற்று நோய், ஆல்சைமர் நோய் - Alzheimer disease இவர்களில் ஒருவருக்குக் கூட வந்ததே இல்லையாம் முதுமையிலும் கூட அவர்களுடைய நினைவாற்றல் பிரமிக்கத்தக்க வகையில் அமைந்திருப்பது அவர்களை மேலும் ஆச்சரியப்பட வைத்திருக்கின்றது இவர்களுக்கு புற்று நோய் வராமல் இருப்பதற்க்கான காரணத்தை கண்டறிவதற்க்காக அவர்களுடைய உடலின் செல்களை எடுத்து செயற்க்கையாக புற்று நோயை உருவாக்கி ஆய்வுக்கு உள்படுத்திய போது மேலும் மேலும் ஆச்சரியத்தை கொடுத்தது.

அவர்களுடைய உடலின் செல்கள் இரண்டடுக்கு பாதுகாப்பு கொண்டதாகவும் புற்று நோயை உருவாக்கும் ஹைட்ரஜன் பெராக்சைடு திரவத்தினால் - hydrogen peroxide தாக்கப்படும் போது அந்த செல்கள் தங்களைத்தானே அழித்து விடுவதும் இந்த ஆய்வின் போது தெரியவந்தது, ஏன் இவர்களுக்கு மட்டும் இப்படி நடக்கின்றது என்பது அவர்களை ஆராச்சி செய்தவர்களுக்கு ஒரு புரியாத புதிராகவே இருந்தது புற்று நோயை உண்டாக்கும் கதிரியக்கத்திற்க்கு எதிராக இவர்களுடைய உடல் அமையப் பெற்றதினால் எதிர் காலத்தில் இந்த குள்ள மனிதர்களை அணுமின் நிலையங்களில் வேலை செய்ய அனுமதிக்கப்படலாம் என்பது ஒரு நல்ல செய்திதான்.

இந்த மக்கள் வயதாகி எந்த நோய்களும் இல்லாமல் சாதாரணமாகத்தான் இறக்கின்றார்கள் என்று ஆராச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன இதை பற்றி அவர்களிடம் விசாரித்த போது தங்களுடைய இந்த குள்ளமான உருவத்துக்கு காரணம் எங்களுடைய மூதாதையர்கள் செய்த பாவம் தான் என்றும் அதற்க்கு பரிகாரமாகத்தான் எங்களை எந்த நோய்களும் தாக்குவதில்லை என்று கூறினார்கள் இது அவர்களுடைய செவிவழி கதையாக இன்றும் கூட கூறப்பட்டு வந்தாலும் மற்றவர்களும் நம்பக்கூடிய விஞ்ஞான காரணங்களை பார்ப்போம்.

லறோன் நோய் - Laron syndrome என்றால் என்ன? Prof. ZVI Laron - Children's Medical Canter, Israel இவர்தான் இந்த நோயை ஆரம்பத்தில் கண்டறிந்தவர் அவரின் பெயரால் இந்த நோய் இன்று அழைக்கப்படுகின்றது.

பிட்யூட்டரி சுரப்பி (hypophysis) வளர்ச்சிக்குரிய ஹார்மோனை (GHR, growth hormone receptor) சுரந்து உடலில் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது இதில் கணையமும் பெரும் பகுதியை கல்லீரலும் உள்வாங்கி உடல் (IGF 1- recepto) வளர்வதற்க்கான முன் ஏற்பாடு, செய்முறைகளை செய்து இரத்தத்தில் கலந்து உடல் வளர்ச்சியை ஆரம்பித்து வைக்கின்றது ஆனால் இவர்களுடைய கல்லீரல் பரம்பரை மரபணு குறைபாட்டினால் இந்த insulin-like growth factors (IGFs) செய்முறை செயல்பாட்டினை செய்யாமல் விட்டதினால் எலும்பு,தசை, தசைநார்கள் வளர்வதற்க்கான எல்லா விதமான புரத சத்துக்களும் இரத்தத்தில் இருந்தும் IGF 1 - தகவல் கிடைக்காததினால் உடல் வளரமுடியாமல் குள்ளமாகவே இருந்து விட்டது

இதற்க்கு காரணமாக இருந்தது கல்லீரலின் மரபணு குறைபாட்டினால் வரும் லறோன் நோய் - Laron syndrome என மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறிந்தது மட்டு மல்ல, GHR பற்றாக்குறையை ஏற்படுத்தி குள்ள எலிகளை உருவாக்கி, மற்ற எலிகளை விட சர்க்கரை நோய் இல்லாமல் அதிக ஆயுளுடன் வாழ்கின்றன என நிருபித்தும் காட்டியிருக்கின்றார்கள் இதற்க்கு காரணமாக இருந்த லறோன் நோயை கண்டறிவதற்க்கு உதவியாக இருந்தது தற்செயலாக நடை பெற்ற ஒரு நிகழ்வுதான்.

இந்த குள்ள இன மக்களின் குழந்தை ஒன்றுக்கு கடுமையான கல்லீரல் நோயினால் - liver cirrhosis பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதற்க்கான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அந்தக் குழந்தை குணமாகி பின்னால் பெரியவனாக வளர்ந்து வருகையில் அந்தக் குழந்தை குள்ளமாக வளராமல் சாதாரணமான மனிதர்கள் போல் வளர்வதை கண்டார்கள் இந்த எதிர்பாராத நிகழ்வுதான் இந்த நோய்க்கான காரணங்களை கண்டறிய உதவியது இந்த நோயை குணப்படுத்தும் மருத்துவமும் மருந்தும் கண்டு பிடிக்க உதவிய அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றது மனித குலம்.

அங்கப்பாரிப்பு நோய் - Acromegaly - disease - இந்ந நோயைப்பற்றி ஒரு முறை அலசிப் பார்ப்போம் இதுவும் பழைமையான நோய்களில் ஒன்று தான் இது லறோன் நோய் - Laron syndrome நேர் எதிர் மாறானது இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகத்திலுள்ள சகல நோய்களும் வர வாய்ப்புகள் அதிகம் என்றே கூற வேண்டும் மூளையிலுள்ள பிட்யூட்டரி சுரப்பி GHR, growth hormone receptor > IGF 1- வளர்ச்சிக்குரிய ஹார்மோனை கட்டுப்பாடு இல்லாமல் கூடுதலாக உற்பத்தி செய்வதினால் இவர்கள் அளவுக்கு மீறிய உடல் வளர்ச்சி உள்ளவர்களாக இருப்பார்கள்

இவர்களுக்கு புற்று நோய் வருவதற்க்கான வாய்ப்புகள் பெரும்பாலும் அதிகம் என்றே கூற வேண்டும் மற்றும் பெரிய மூட்டுகளில் வலி, தசைநார் கூட்டு பாதிப்பு, கை, கால்களிலுள்ள எலும்புகள் வலுவிழந்து ஊன்று கோலின் - walking stick உதவியுடன் நடக்க வேண்டி வரும் மற்றும் தாடை எலும்புகள் பெரியதாக வளரும் மற்றும் கைகள் மண்வெட்டி- spade போல் தோன்றும் முக எலும்புகளின் அளவுக்கு மீறின வளர்ச்சியினால் முகத்தின் அழகு, வடிவத்தில் மாறுதல்கள் ஏற்படும் பற்கள் இடையே இடைவெளி தோன்றும் வகை - 2 நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் இதய நோய், பெருங்குடல் புற்றுநோய், ஆக்னே வல்காரிஸ் போன்ற நோய்களினால் பாதிக்கப்படுவார்கள் அப்பாடா! இவ்வளவு நோய்களா?

நெடு நெடு என்று ஒட்டக சிவிங்கி போல் வளர்ந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்குரிய ஹார்மோனை கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் பாருங்கள் இல்லை என்றால் இந்த நோய்கள் உங்களையும் எட்டிப்பார்க்கும் நோய்களை வென்றவர் அகத்திய பெருமான் அவர்கள் குள்ளமாக இருந்ததற்க்கு காரணம் இது தானோ!

இந்த இரண்டு நோய்களுக்கும் நூறு வயதுக்கு மேல் ஆரோக்கியமாக வாழ்வதற்க்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று பார்த்தால் GF 1 - வளர்ச்சிக்குரிய ஹார்மோன் கூடியும் குறைந்தும் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது இந்த ஆய்வின் முடிவுகளாக இருக்கின்றன இந்த ஹார்மோனை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் somavert - ஊசி மருந்துகள் இருந்தாலும் இந்த மருந்துகள் எல்லோரையும் சென்றடையுமா என்பது கேள்விக்குறிதான் ?

பிறந்தவர்கள் ஒரு நாள் இறக்க வேண்டும் என்பது இயற்க்கையின் நியதி ஆனால் நோய் வாய்பட்டு இறக்க வேண்டும் என்பது மனிதனின் தலை எழுத்து அதை அறிவினால் மாற்றி அமைத்து வாழமுடியும் fastfood, Genfood, chemi food, design food, ready food, hormone meat.... என்று சொல்லிக் கொண்டேபோகலாம் இன்று நாம் உண்ணும் உணவுகளில் பெரும்பாலும் ரசாயணம் கலந்த நச்சு உணவுகளைத்தான் நாம் உண்ணுகின்றோம் இவைகள் மனித உடலில் உள்ள வளர்ச்சிக்குரிய ஹார்மோன்களை தூண்டி விடக்கூடியவைகள்

இன்றைய இளையதலை முறையினரை பார்த்தால் தெரிந்துவிடும் இவர்கள் தங்களுடைய தாய் தந்தையர்களை விட உயரமாக வளர்ச்சியடைந்து இருப்பதற்க்கு காரணம் இவர்களுடைய நவீன உணவு பழக்கங்கள் தான் இதை மாற்றி அமைத்தால் குறைந்த பட்சமாவது புற்று நோய் இல்லாமல் வாழலாம் 55 வயதை தாண்டியவர்கள் தங்களுடைய உணவுத்தேவையை குறைத்தும், அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை உண்பது ஆரோக்கிமான நீண்ட ஆயுளைக் கொடுக்கும்



https://mahesva.blogspot.com/?view=magazine

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்


 My old post லறோன் நோய் - Laron syndrome




வெள்ளி, 3 அக்டோபர், 2025

How to clean the lungs? When dust and dirt accumulate, how does the body maintain it,

நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி ?  தூசி அழுக்குகள் தேங்கிநிற்கும் போது   அதை உடல் எப்படி பராமரிக்கின்றது, எந்த நோய் எதிர்ப்பு அதற்கு பொறுப்பாக வேலை செய்கின்றது. எங்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலம் மிகப்பெரிய இராணுவ கட்டமைப்பு கொண்ட ஒரு காவலாளி, அதை மீறி எதுவும் உள்ளே நுழைந்திட முடியாது,

அப்படி நுழைந்தாலும் முதல் நடவடிக்கையாக தும்மி வெளியேற்றி விடும். நுரையீரலில் மிகப்பெரிய நோய் எதிர்ப்பு குவிக்கப்பட்டுள்ளது  அதை ஆரோக்கியமாக வைத்திருந்தால் உன் வாழ்நாளில் நீ தான் ஆரோக்கிய ராஜா.நுரையீரலின் அல்வியோலர் பகுதியை சுத்தம் செய்வது முக்கியமாக, சிறப்பு மொபைல் பாகோசைட்டுகளால் மேற்கொள்ளப்படுகின்றது,

 

அவை அல்வியோலர் மேக்ரோபேஜ்கள் [விழுங்கி செல்கள்] என்று அழைக்கப்படுகின்றன. இந்த செல்கள் தூசித் துகள்களை உறிஞ்சி, ஏற்றப்படும்போது, நிணநீர் திரவம் அல்லது இரத்த நாளங்கள் வழியாக நுரையீரலில் இருந்து அகற்றப்படுகின்றன.இது சரியாக வேலை செய்யவில்லை என்றால், நுரையீரலில் அதிக அளவு சுரப்பு குவிந்து, [குப்பை சேகரிப்பு] சுவாசத்தை பாதிக்கின்றது மற்றும் நுரையீரல் தொற்று அபாயத்தையும் அதிகரிக்க செய்கின்றது.

 

ஆல்வியோலர் மேக்ரோபேஜ்கள் [விழுங்கி செல்கள்]: நோயெதிர்ப்பு மண்டலத்தின் பாகோசைட்டுகள், அவை ஆல்வியோலியில் பல்வேறு செயல்பாடுகளைச் செய்கின்றன, அதாவது அந்நிய ஊடுருவல் துகள்களை [நோய்க்கிருமிகள், தூசி, புகை] உட்கொள்வதன் மூலம் நுரையீரலை சுத்தம் செய்தல். அவை அழற்சி மற்றும் அதிக உணர்திறன் எதிர்வினைகளிலும் ஈடுபட்டுள்ளன.

 

ஆல்வியோலர் மேக்ரோபேஜ்கள் எலும்பு மஜ்ஜையில் உள்ள மோனோசைட்டுகளிலிருந்து உருவாகின்றன, இரத்த நாளங்கள் வழியாக நுரையீரலுக்குள் இடம்பெயர்ந்து நுரையீரல் நுண்குழாய்களின் எண்டோதெலியத்துடன் ஒட்டிக்கொள்கின்றன. அந்நிய ஊடுருவல் துகள்கள் தோன்றும்போது, அவை அல்வியோலியில் இடம்பெயர்கின்றன. அங்கு அவை தங்கள் பணிகளை செய்கின்றன.

 

நுரையீரல் திசுக்களை வரிசையாகக் கொண்ட வகை 1 ஆல்வியோலர் எபிதீலியல் செல்கள், ஒட்சிசன்(O₂) மற்றும் கார்பன் டை ஆக்சைடு(CO₂) வாயுக்களின் பரிமாற்றத்திற்கு முக்கியமானவை. மேலும் வகை 2 (AT2) ஆல்வியோலர் எபிதீலியல் செல்கள், ஆல்வியோவில் காயமடைந்த அல்லது இறந்த எபிதீலியல் செல்களை மாற்றுவதற்கு ஸ்டெம் செல்களாக செயல்படுவதாக அறியப்படுகின்றது.

 

இயற்கை மூலிகைகள்: அதிமதுரம் மிகச்சிறந்த  தீர்வாக இருக்கும் இயற்கையில் ஒரு சில மூலிகைகள் உள்ளன நோய் உள்ள இடங்களை தேடிச்சென்று / [பழுதுபட்ட இடங்கள்] அந்த இடங்களிலுள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தம் செய்து திருத்த வேலைகளை செய்யக்கூடியது  அதில் அதிமதுரமும் ஒன்று.

 

சுவாச அமைப்பு: அதிமதுரம் வேர் சாறுகள் சளி நீக்கும் மற்றும் சளி நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன, எனவே அவை இருமல் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன.

 

வயிறு மற்றும் குடல்: அழற்சி எதிர்ப்பு விளைவு இரைப்பை குடல் புண்களுக்கும் வயிற்று அசௌகரியத்தை போக்கவும் உதவியாக இருக்கும்.

 

தோல்: வெளிப்புறமாகப் பயன்படுத்தப்படும் அதிமதுரம் தோல் எரிச்சல் மற்றும் அரிக்கும் தோலழற்சியை ஆற்றும் மற்றும் விடுவிக்கும்.

 

பாக்டீரியா எதிர்ப்பு/பூஞ்சை எதிர்ப்பு விளைவுகள்: அதிமதுரம் பல்வேறு பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளில் ஒரு தடுப்பு விளைவைக் கொண்டுள்ளது.

 

கவனிக்கப்பட வேண்டியது: வேரில் கிளைசிரைசின் போன்ற சேர்மங்கள் உள்ளன,

இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் நீர் சமநிலையை பாதிக்கும், எனவே ஏற்கனவே இருக்கும் சில நிலைமைகளின் சந்தர்ப்பங்களில் அதிகப்படியான நுகர்வு மற்றும் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.


மைக்ரோக்லியா என்பது: மூளையின் பாதுகாப்பு மேக்ரோபேஜ்கள் [விழுங்கி செல்கள்]மைக்ரோக்லியா என்பது மத்திய நரம்பு மண்டலத்தில் (CNS) காணப்படும் ஒரு வகை சிறப்பு நோயெதிர்ப்பு உயிரணு ஆகும், இது நோயெதிர்ப்பு கண்காணிப்பு, சேதமடைந்த செல்களை நீக்குதல் மற்றும் மூளையில் சமநிலையை (ஹோமியோஸ்டாஸிஸ்) பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை மஞ்சள் கரு சாக் செல்களிலிருந்து எழும் மூளையின் வசிக்கும் மேக்ரோபேஜ்கள் ஆகும்,

 

குஃப்ஃபர் செல்கள்: கல்லீரல் மேக்ரோபேஜ்கள் [விழுங்கி செல்கள்]  கல்லீரலில் வசிக்கும் மேக்ரோபேஜ்கள் ஆகும், அவை பாதுகாப்பு செல்களாக செயல்படுகின்றன மற்றும் இரத்தத்திலிருந்து நுண்ணுயிர் பொருட்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களை உறிஞ்சுவதற்கு பொறுப்பாகும்.

 

நுரையீரலை சுத்தம் செய்யும் மேக்ரோபேஜ்கள் [விழுங்கு செல்கள்]ஆல்வியோலர் மேக்ரோபேஜ்கள் காற்றுப்பாதைகளில் உள்ள சிறப்பு நோயெதிர்ப்பு செல்கள் ஆகும், அவை உள்ளிழுக்கும் துகள்கள், நோய்க்கிருமிகள் மற்றும் நச்சுகளை விழுங்கி அழிப்பதன் மூலம் நுரையீரலைப் பாதுகாக்கின்றன,

 

இந்த மூவரும் மிக முக்கியமான துப்புரவுப் பணியாளர்கள்  ஒரே ஒரு நாள் வேலை செய்யாமல் இருந்தாலே போதும் உ டல்  குப்பை குழமாக மாறிவிடும்.





https://mahesva.blogspot.com/?view=magazine

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்





ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

Can hydrogen gas be used directly as a cooking gas? Yes, hydrogen can be used as a cooking gas, eithe

 ஹைட்ரஜன் வாயுவை நேரடியாக சமையல் வாயுவாகப் பயன்படுத்த முடியுமா?

ஆம், ஹைட்ரஜனை சமையல் வாயுவாகப் பயன்படுத்தலாம், இருப்பினும் அது நேரடியாக மாற்றியமைக்கப்பட்ட எரிவாயு சாதனங்களில் அல்லது மறைமுகமாக அதை மின்சாரமாக மாற்றும் எரிபொருள் செல் வழியாக, பின்னர் அது ஒரு வெப்ப மூலத்தை உண்கிறது.


இருப்பினும், தூய ஹைட்ரஜனுடன் நேரடி சமைப்பதற்கு சிறப்பு உபகரணங்கள் தேவைப்படுகின்றன, ஏனெனில் அதன் எரிப்பு நடத்தை இயற்கை எரிவாயுவிலிருந்து வேறுபடுகிறது, மேலும் எரிப்பு விரும்பத்தகாத துணை தயாரிப்புகளுக்கு வழிவகுக்கும். ஹைட்ரஜனை சமையல் வாயுவாக பரவலாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்த உள்கட்டமைப்பு மற்றும் உபகரண தழுவல்கள் இன்னும் அவசியம்.


நேரடி எரிப்பு: இயற்கை எரிவாயுவைப் போலவே, ஹைட்ரஜனையும் நேரடியாக சமையலுக்குப் பயன்படுத்தலாம். இருப்பினும், இதற்கு சமையல் சாதனங்களை மறுசீரமைக்க வேண்டும், ஏனெனில் ஹைட்ரஜன் இயற்கை எரிவாயுவை விட வித்தியாசமாக எரிகின்றது.


எரிபொருள் மின்கலங்களில் ஹைட்ரஜன்: எரிபொருள் மின்கலத்தில் ஹைட்ரஜனை மின்சாரமாக மாற்றலாம். இந்த மின்சாரம் பின்னர் சமையலுக்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு வெப்ப மூலத்தை [எ|கா ஒரு தூண்டல் குக்கர்] உருவாக்குகின்றது.


இதன் சவால்கள்: சாதனங்கள் மற்றும் உள்கட்டமைப்பு: ஹைட்ரஜனால் 100% இயக்கக்கூடிய சில உபகரணங்கள் இன்னும் உள்ளன, மேலும் முழு எரிவாயு கட்டமும் தூய ஹைட்ரஜனை கொண்டு செல்ல மாற்றியமைக்கப்பட வேண்டும்.


எரிப்பு நடத்தை: ஹைட்ரஜன் இயற்கை எரிவாயுவை விட அதிக ஆற்றல் அடர்த்தி மற்றும் வேறுபட்ட எரிப்பு நடத்தையைக் கொண்டுள்ளது. துணை தயாரிப்புகள்: அதிக வெப்பநிலையில் ஹைட்ரஜனை நேரடியாக எரிப்பதால் நைட்ரஸ் ஆக்சைடு, ஒரு சக்திவாய்ந்த கிரீன்ஹவுஸ் வாயுவை உருவாக்க முடியும்.


கிரீன்ஹவுஸ் வாயுக்கள் என்பது பொதுவான பசுமை இல்ல வாயுக்களில் நீர் நீராவி, கார்பன் டை ஆக்சைடு (CO₂), மீத்தேன் (CH₄) மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு (N₂O) ஆகியவை அடங்கும். மனித நடவடிக்கைகள், குறிப்பாக புதைபடிவ எரிபொருட்களை எரிப்பது, இந்த வாயுக்களின் செறிவை அதிகரித்துள்ளது, இது புவி வெப்பமடைதல் மற்றும் மானுடவியல் காலநிலை மாற்றத்திற்கு வழிவகுக்கின்றது.


மற்றும் ஹைட்ரஜன் ஏரிப்பு அதன் விளைபொருள் நீராவி என்பதால் சமையல் அறை வியர்த்து நனைந்து போகும்.


ஹைட்ரஜன் சுடர் அதன் நீல நிறத்தின் காரணமாக பகலில் அரிதாகவே தெரியும், ஏனெனில் அது மிகவும் பலவீனமான கதிர்வீச்சை வெளியிடுகிறது மற்றும் காற்றில் எரிகிறது. எரிப்பு நீரை உருவாக்குவதால் இந்த நிறம் ஏற்படுகிறது. தீ பெரும்பாலும் வெப்பத்தால் மட்டுமே உணரப்படுகிறது.


எரிபொருள் செல் தொழில்நுட்பம்:


சுடர் அரிதாக தெரிவதின் காரணமாக விபத்துக்கள் ஏற்படலாம், சுடர் அரிதாகவே தெரிவதற்கான காரணம் பலவீனமான கதிர்வீச்சு: ஹைட்ரஜன் எரியும் சுடர்கள் சிறிய வெப்பத்தை வெளியிடுகின்றன, இதனால் அவை பகலில் கிட்டத்தட்ட கண்ணுக்கு தெரியாது.


நீல நிறம்: சுடர் நீல நிறமானது, ஆனால் மிகவும் பலவீனமாக இருப்பதால் அது அதன் சுற்றுப்புறங்களுடன் எளிதில் கலக்கிறது.


ஆபத்து எச்சரிக்கை: நெருப்பில் இந்த சுடர் கண்ணுக்குத் தெரியாதது என்பது இதனுடைய பெரிய ஆபத்தாகும், ஏனெனில் நீங்கள் மிக அருகில் இருக்கும் வரை சுடரை உணர முடியாது.


ஹைட்ரஜனின் எரிப்பு நைட்ரஜன் ஆக்சைடு வெளியேற்றத்தை அதிகரிக்க செய்கின்றன, இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.


இன்னுமொரு சிக்கலும் உள்ளது, எரிப்பு இயக்கவியல், இது வெப்ப ஒலியியல் என்றும் அழைக்கப்படுகிறது. [ "டுப்" என்ற வெடிப்பு சத்தம்] கொந்தளிப்பான எரிப்பு செயல்முறை எரிப்பு அறை சுவரால் பிரதிபலிக்கும் ஒலி அலைகளை உருவாக்கி, மீண்டும் ஒலி அலைகளுடன் மோதுவதால், ஒலி அலைகள் மிகவும் பெருகி, மிகப்பெரிய அழுத்தத்தை உருவாக்கக்கூடும். இந்த தீய வட்டத்தின் விளைவாக ஏற்படும் இந்த அழுத்த ஏற்ற இறக்கங்கள் மிக அதிகமாகி, அவை எரிப்பு அறையை அழிக்கக்கூடும்.


மெலிந்த ஹைட்ரஜன் தீப்பிழம்புகளின் வெப்ப ஒலியியல் பற்றி இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது, ஏனெனில் தற்போதைய ஆராய்ச்சி இந்த தலைப்பை ஒப்பீட்டளவில் குறுகிய காலமாக மட்டுமே எடுத்து வருகிறது. "ஹைட்ரஜன் எரிப்பின் போது சுடர் நிலையற்றதாகிவிடும் என்றும் எச்சரிக்கின்றது.


ஹைட்ரஜனை பல்வேறு செயல்முறைகள் மற்றும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யலாம், அதனால்தான் ஹைட்ரஜன் நிறத்தால் வகைப்படுத்தப்படுகிறது.


அதாவது, ஹைட்ரஜன் உற்பத்திக்கான மின்சார எரிபொருளை பொறுத்தது அதிகப்படியான மின்சாரத்தை சேமிக்கப் பயன்படுத்தக்கூடிய ஹைட்ரஜன் நீரின் மின்னாற்பகுப்பு மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்சாரத்தின் உதவியுடன், நீர் ஹைட்ரஜன் மற்றும் ஒட்சிசன் (O₂) மாற்றப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து மின்சாரம் வரும்போது பச்சை ஹைட்ரஜன் ஹைட்ரஜனாகும்


ஹைட்ரஜன் நச்சுத்தன்மையற்றது என்றாலும், ஒட்சிசன் (O₂)னுடன் இணைந்தால் அதிக எரியக்கூடியது மற்றும் வெடிக்கும் தன்மை கொண்டது, மேலும் அதிக செறிவுகளில் இது சமையலறை ஒட்சிசன் (O₂) பற்றாக்குறையால்  சமைப்பவர்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தும்.


இதில் மின்சாரத்தின்  வரவு/செலவில் ஒரு அளவுகோல் தேவைப்படுகின்றது. ஹைட்ரஜன் வாயு பிரிப்பு நடவடிக்கையில்  நேரடியாக சாதாரண குழாய் நீரை பயன்படுத்த முடியாது இதற்கு காய்ச்சி வடிகட்டிய நீர் (Distilled water) தேவை அதற்கான செலவும் கணக்கிடபடவேண்டும்.என் கருத்துப்படி, மின்சார அடுப்புகள் இன்று பாதுகாப்பானவை மற்றும் மலிவானவை.

 

My old post

http://mahesva.blogspot.com/2020/12/zn2.html?view=magazine


https://mahesva.blogspot.com/?view=magazine

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

























ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

"Life on this earth did not emerge through evolution, but rather, it has adapted to live in the next worl

 "எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

உலகம் அழியப்போகுது என்று நம்பி உன் வாழ்க்கையை வீணாக்காதே. சண்டையும் சச்சரவும் மனித இனத்தின் இயல்பான குணங்கள் அது ஒரு போதும் விட்டொழியாது,  நாடுகளின் மோதல்களை கண்டு பயந்து ஒடிங்கி ஓடி ஒழிந்து விடாதே. அடுத்த தலைமுறைக்காக உன்னை தயார்படுத்திக்கொள்,அடுத்த தலைமுறை உன் முன் வீறு கொண்டு எழுந்து நிற்கும். அதை எதிர்கொள்ள தயாராக இரு.

 

எத்தனை அணுக்குண்டுகள் வெடித்தாலும் இந்த பூமி ஒருபோதும் சுழல்வதை நிறுத்தாது, உயிர்கள் அழியப்போவதுமில்லை, தொடர்ந்து இந்த மண்ணில் உயிர்கள் வாழத்தான் போகின்றது மனிதன் உற்பட, இன்னும் 10000 வருடம் கடந்தும் மனிதன் புது வருடம் கொண்டாடத்தான் போகின்றான். அன்று மனிதன் எந்த மாதிரி உடை, வாகனம் எந்த உணவை உண்ணப்போகின்றான் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

 

அன்று காடு/ கடல் வளம் புதிப்பிக்கப்பட்டிருக்கும்  புது மீன்கள் துள்ளி ஓடும், அன்றும் தமிழர்கள் சிதறுண்ட சமூகமாகத்தான்  இருப்பார்கள் எனக்கு  திரும்பவும் ஒரு சர்ந்தர்ப்பம் கிடைக்கும்  தமிழை எழுதுவதற்கு , இந்த மண்ணில் உயிர்கள் பரிணாம வளர்ச்சியில் தோன்றவில்லை மாறாக, அடுத்த உலகத்தில் வாழ்வதற்கு, தம்மை தகவமைத்துக் தாவிக்கொண்டே வந்திருக்கின்றன. இந்த வருடத்திலிருந்தே தாங்க முடியாத வெப்ப அலை வீசத்தொடங்கி விட்டது இனி வரும் காலத்தில் இதை விட மோசமாக வெப்பம் சுட்டெரிக்கப்போகின்றது.இந்த மண்ணில் உயிர்கள் எப்படி தப்பி பிழைக்கபோகின்றன. உணவு, தண்ணீர் பற்றாக்குறை/விலை உயர்வு மனித வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள்.

 

இயற்கையான வெப்பத்தை காட்டிலும், தொழில் நகர்ப்புற மனிதன் உற்பத்தி செய்யும் வெப்பம் 60 விழுக்காடு அதிகம். இதனால் ஏற்படும் வெப்பம், வெப்பத்தாக்கம் மனிதனின் உணவுத் தேவையில் பல பாதிப்புகளை கொண்டு வரப்போகின்றது.

 

இன்று தொழில்மயமாக்கப்பட்ட நகர்ப்புறங்களில் உற்பத்தி செய்யப்படும் வெப்பம் இயற்கையான வெப்பத்தை விட கணிசமாக அதிகமாக உள்ளது,

 

இது மனித உணவுத் தேவைகளை எதிர்மறையாக பாதிக்கும் வெப்ப அழுத்தத்திற்கு வழிவகுக்கின்றது. நகர்ப்புற வெப்ப தீவு விளைவால் அதிகரிக்கும் இந்த அதிகப்படியான வெப்பம், விவசாய விளைச்சலைக் குறைக்கும், உணவு உற்பத்தியை சீர்குலைக்கும் மற்றும் உணவு விநியோகத்தின் தரம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும்.

 

பாதிக்கப்படக்கூடிய மக்கள் தொகை, வெப்ப அழுத்தம் வயதானவர்கள், ஏற்கனவே உள்ள சுகாதார நிலைமைகள் உள்ளவர்கள் மற்றும் வெளிப்புற தொழிலாளர்கள் உட்பட பாதிக்கப்படக்கூடிய மக்களை விகிதாசாரமாக பாதிக்கப்போகின்றது. இதை நீ எதிர்கொள்ளத்தான் போகின்றாய்.

 

மற்றவர்களை நம்பி ஏமாந்துபோகாதே உன்னால் முடிந்தவரை உன்னை நீயை காப்பாற்றிக் கொள் எதுவெல்லாம் இயற்கையை அனுசரித்து வாழப் பழகிக் கொள்கின்றனவோ அவையே இந்த பூமியில் நிலைத்து நிற்கும். "இந்த நிலத்தில் வாழ்க்கை பரிணாம வளர்ச்சியின் மூலம் தோன்றவில்லை, மாறாக, அது அடுத்த உலகில் வாழத் தழுவித் தாவியுள்ளது." நன்றி.

 

https://mahesva.blogspot.com/?view=magazine

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்