திங்கள், 22 ஜூலை, 2024

Influenza - Vaccination Every year, different types of viruses define this flu epidemic. Each human body has unique features that

தடுப்பூசியின் முக்கியம்:  இதுவரை காலமும் உடல் அறியப்படாத நோய்களுக்கான ஒரு அறிமுகம். இன்று சாதாரண காய்ச்சலாக இருக்கும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் ஏன் அன்று ஒரு கொலையாளியாக இருந்தது?

ஸ்பானிஷ் காய்ச்சல்: வரலாற்றில் மிக மோசமான இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய். 1918 ஆம் ஆண்டில், ஸ்பானிஷ் காய்ச்சல் சில மாதங்களில் உலகம் முழுவதும் பரவியது. 1920 வாக்கில், இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய் முழு முதல் உலகப் போரில் இறந்தவர்களை விட அதிகமான மக்களைக் கொன்றது.

ஸ்பானிஷ் காய்ச்சல் எங்கிருந்து வந்தது என்பது இறுதியாகத் தெரியவில்லை. ஆனால் ஸ்பெயினில் இருந்து அல்ல. முதல் நோயாளி பெரும்பாலும் கன்சாஸில் உள்ள ஃபோர்ட் ரிலேயில் உள்ள இராணுவ தளத்தைச் சேர்ந்த சமையல்காரர் ஆல்பர்ட் கிட்செல் என்று கூறப்படுகின்றது.

கொரோனா வைரஸ் ஏன்  அதிகமாக கொலையாளியாக  மாறவில்லை. கொரோனா வைரஸ் குடும்பம் குறித்து ஏற்கனவே உடல் அறிந்திருந்தது இருப்பினும் அதனுடைய புதிய  மாறுபாடுகள் குறித்து அறிந்திருக்கவில்லை. இந்த இடத்தில் தடுப்பூசிகள் மனிதனை காப்பாற்றியது.

இதற்கு முன்னால் அறியப்படாத ஒரு புதிய எதிராளி: புதிதாக ஒரு தொற்றுநோய் பரவத் தொடங்கினால் அதைக் குறித்து மிக அவதானமாக இருங்கள். காரணம் அந்த அந்நிய ஊடுருவலை இதற்கு முன்னால் அறியாமல் கூட உங்கள் உடல் இருக்கலாம்.

புதிதாக வந்த அந்த அந்நிய ஊடுருவலை எதிர்த்துப் போராட திராணியில்லாமல் நிராயுதபாணியாக உங்கள் உடல், உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு இருக்கலாம். சுருக்கமாக சொன்னால் ஒரு பாதுகாப்பு கவசத்தை அது ஏற்படுத்தி வைக்கவில்லை இந்த நேரத்தில் ஏற்படும் அந்நிய ஊடுருவல்கள் உங்கள் உடலை கொள்ளை அடித்து செல்லும். இந்த இடத்தில் தடுப்பூசிகள் உங்களை பாதுகாக்கின்றது.

ஃப்ளூ காய்ச்சல் - தடுப்பூசி: ஆண்டுதோறும், பல்வேறு வகையான வைரஸ்கள் இந்த காய்ச்சல்  தொற்றை வரையறுக்கின்றது. ஒவ்வொரு மனித உடலில் பிரத்தியோக அம்சங்களை கொண்டுவைரஸ் வடிவங்களை எடுத்து, சாமர்த்தியமாக தடுப்பூ மருந்துகளிலிருந்து தப்பித்துக் கொள்கின்றது. இதன் விளைவாக, சிலருக்கு தடுப்பூசி செலுத்தியும்  ஃப்ளூ காய்ச்சல் வருகின்றது,

சாதாரண காய்ச்சல் கிருமிகள்  தங்களுடைய தனித்துவமான அம்சங்களை  அடிக்கடி மாற்றிக்கொண்டு புதுப்புது  வைரஸ் வடிவம், அவற்றின்  தனிப்பட்ட  பாகங்களின் மாற்றங்களை கொண்டு, மீண்டும் மீண்டும் அதன் தோற்றம் மாறிக் கொண்டே இருக்கும்.

- இன்ப்ளுயன்சா பி வைரஸ்கள்

- இன்ப்ளுயன்சா வைரஸ்கள்   தொடர்ந்து படிக்க

 

இந்த கலியுகத்தில் (mahesva.blogspot.com)

 

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine




ஒரு தாய் வயிற்று பிள்ளை போல் பேசும் மனிதர்கள் ஏன் ஒற்றுமை இல்லாமல் வாழ்கிறார்கள். இந்த கேள்விக்கான பதிலை ஆதிமனிதனே விட்டுச்சென்றிருக்கின்றான். மனித இனம் ஒன்றல்ல பல மனித இனங்கள் இந்த பூமியில் வாழ்ந்திருக்கின்றன. அதனால்தான் கலப்பின மனிதன் உருவானான். இன்றுள்ள மனிதன் ஒரு கலப்பினம்.

 

ஆதி மனிதனுக்கு கடவுள், இயற்கை வழிபாடு இருந்திருக்கின்றது. ஆனால் மத வேற்றுமை இருந்ததில்லை இருப்பினும் அவனுக்குள்ளே இன வேறுபாடு [ஜாதி] இருந்தது. நியாண்டர்தால்கள் அழிவை குறித்து பேசும்போது ஹோமோசாபியன். நியாண்டர்தால்கள் இடையே உள்ள இன வேற்றுமைநியாண்டர்தால்கள் அழிவை சந்தித்தனர்.

 

இவர்களின் வழித்தோன்றலில் வந்த நாங்களும் பகை உணர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மனித இனம் இருக்கும் வரைக்கும் மனிதன் சகமனிதனுடன் சண்டை செய்து கொண்டுதான் இருப்பான். எவராலும் மனிதனை திருத்தமுடியாது. இது அவனுக்கு எழுதிய தலைவிதி.

 

ஹோமோசாபியன் மற்றும் நியாண்டர்தால்கள்.[A hybrid]

ஹோமோசாபியன்:

இனம்: ஹோமோ

வகை: மனிதன்

குடும்பம்: கிரேட் ஏப்ஸ் (ஹோமினிடே)

பழங்குடி: ஹோமினினி

தொழில் சார்பு ஜாதிகள்:

வேட்டை சமூகம் மற்றும் வேளாண் சமூகம்.

 

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine

 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக