ஞாயிறு, 7 ஜனவரி, 2024

"Finding what is and what is not" is the search for that source of God that has no

"இருப்பதை வைத்து இல்லாததை கண்டறிதல்" மனிதன் என்ற மூலத்தை வைத்து இன்னும் சரியாக துலக்கப்படாத கடவுள் என்ற அந்த மூலத்தை தேடுதல்.

இந்த மண்ணில் உயிர்களை தோற்றுவித்த படைப்பாளி என்ற ஒருவர் [ஒரு குழுமம்] கண்டிப்பாக இருக்கிறார். படைப்பாளி என்ற ஒருவர் இல்லாமல் இந்த மண்ணில் உயிர்கள் தோன்றியிருக்க வாய்ப்புகளே இல்லை ஏனென்றால்  அவர் மனிதனை செதுக்கிய உளியின் தழும்புகளை உயிர்கள் மேல் விட்டு சென்றிருக்கின்றார்.

ஆதி மனிதனுக்கு கடவுளை, படைப்பாளியை நன்றாகவே தெரியும், அவர் கூடவே அவன் நீண்ட காலம் கைகோர்த்து பயணித்திருக்கிறான். ஆனால் அவனால் தான் நேரில் பார்த்ததை தன்னை உருவாக்கியவரை அடுத்த தலைமுறைக்கு எடுத்து வர அவனுக்கு தெரியவில்லை.  கல்லில் செதுக்கி, கிறுக்கி வைத்தான். நாங்கள் அதை புரிந்து கொள்ள இன்று வரைக்கும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்த பரந்த அண்டத்தில் மனிதனுக்கு இணையான உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. குவாண்டம் விதிப்படி ஒன்றின் உருவாக்கம் அது பலவாக எழுதப்படும். ஒன்றை உருவாக்கும் போது அது பலவாக பல இடங்களில் பதிவாகின்றது.  நாங்கள் தனியாக இல்லை எங்களை விட பலமடங்கு  அறிவுள்ள மனித உயிரினங்கள் இந்த பேரண்டத்தில் வாழ்கின்றன..

ஹைட்ரஜனுக்கு மட்டும் ஏன் நியூட்ரான்கள் இல்லை? அணுக்கரு ஒற்றை புரோட்டானையும் மற்றும் இது நேர்மறை மின்னூட்டத்தைக் கொண்டுள்ளது, ஹைட்ரஜன் மறைமுகமாக அது ஒரே ஒரு புரோட்டானைக் கொண்டிருப்பதால். இரண்டு இருந்தால், அவர்கள் தங்கள்  நேர்மறை மின்னூட்டம்  காரணமாக ஒருவரையொருவர் விரட்டுவார்கள்.

நியூட்ரான்கள் அணுக்கரு ஒன்றாக இருப்பதை உறுதி செய்கின்றன,மேலும் இது எதிர்மறை மின்னூட்டத்தைக் கொண்ட ஒற்றை எலக்ட்ரானால் சுற்றுகின்றது. இருப்பினும், ஹைட்ரஜனின் வெவ்வேறு ஓரிடமூலகம் [ஐசோடோப்புகள்] உள்ளன.

புரோட்டியம் எனப்படும் ஹைட்ரஜனின் மிகுதியான ஓரிடமூலகம் [ஐசோடோப்பு] ஒரு புரோட்டானைக் கொண்டுள்ளது மற்றும் அதன் கருவில் நியூட்ரான்கள் இல்லை. இது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஹைட்ரஜனிலும் 99.98% ஆகும்.

ஓரிடமூலகம் [ஐசோடோப்புகள்]: இன்னும் பல மகள் கதிரியக்க தனிமங்களை உருவாக்குகின்றது. மேலும் ஒரே எண்ணிக்கையிலான புரோட்டான்களையும், மற்றும் கருவில் வெவ்வேறு எண்ணிக்கையிலான நியூட்ரான்களையும் கொண்டது. இதன் நிமித்தமாக எளிதில் உடைய கூடியது.

நீரின் பிணைப்பு கோணம் சரியாக 104.5 டிகிரி ஆகும். இந்த டிகிரி கோணத்தில் நீரின் பிணைப்பு அமையவில்லை என்றால், இந்த பூமி வியாழக்கிரகத்தைப் போல் வாயுக்களால் மட்டுமே நிரம்பியிருக்கும். இந்த உலகம் ஒரு உன்னதமான ஒரு படைப்பாளியின் கைவேலையால் உருவாக்கப்பட்டது என்பதற்கு நீர் ஒரு சான்று.

திராவிடம் : திராவிடம் என்ற சொல் பல பார்வைகளை உள்ளடக்கியது. இந்தச் சொல் வரலாற்றில் எந்த இடத்திலும் பதிவாகவில்லை இருப்பினும் இந்தோ ஐரோப்பிய வெற்றியாளர்களால் துரத்தி அடிக்கப்பட்ட மக்களுக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு பெயர். அவங்களுடைய பார்வையில் ஓடுகாலிகள். பயந்தாங்கொள்ளிகள். கோழைகள். ஒருவர் ராணுவத்தில் இருந்து விலகி ஓடினால் எப்படி அழைப்பார்கள். 

அந்த மக்களின் பார்வையில் சத்திரிய குணம், போர்க்குணங்களில் இருந்து விடுபட்டு சமாதானத்துடன் கூடி வாழ விரும்பிய மக்கள். அந்த மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு சிந்து சமவெளிபகுதி,  புலம்பெயர்ந்த மக்கள் [அகதிகள்]  திராவிடம் என்ற சொல் அந்த மக்கள் தங்களுக்கு தாங்களே வைத்துக் கொண்ட பெயர். 

அதனுடைய காலம் "தி"  என்ற தமிழ்ச்சொல்  உருவானதுக்கு பிறகு. இதற்கு முன்னால் இது உருது/சமஸ்கிருத வார்த்தையாக இருந்திருக்கலாம். பலதரப்பட்ட மொழிக் குடும்பங்களை சேர்ந்ததினால் இவர்களை திராவிட மொழிக் குடும்பம் என்றும் அழைக்கப்பட்டார்கள்

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine



https://mahesva.blogspot.com/2020/12/zn2.html?view=magazine



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக