வியாழன், 18 ஆகஸ்ட், 2022

Where did the black ash carbon-C come from?

பகுத்தறிவும் பகுத்தறிந்து பார்ப்பதும்; பகுத்தறிவு, பகுத்தறிந்து பார்ப்பது, பகுத்தறியாமல் கடவுள் இல்லை என்பதும் ஒரு மூடநம்பிக்கை. அகல் விளக்கு காலத்தில் சொன்ன ஒரு கருத்தை இன்று வரைக்கும் எடுத்துவருவது அதைவிட மூடத்தனம்.

இருப்பதை வைத்து இல்லாததை தேடுதல், மனிதன் என்ற ஒரு மூலத்தை வைத்து இன்னும் அறியப்படாத, இன்னும் சரியாக துலக்கப்படாத கடவுள் என்ற அந்த ஆதி மூலத்தை தேடுதல்.

கடவுள் இல்லை அல்லது கடவுள் மறுப்பு சொன்ன அத்துனை மாபெரும் மேதைகள், அண்டவெளியை அண்ணாந்து பார்த்தார்களே தவிர, தங்களுடைய சொந்த உடலை கூர்ந்து பார்க்க தவறிவிட்டார்கள். அப்படி அவர்கள் பார்த்திருந்தால் கடவுள் விட்டுச்சென்ற படைப்பின் கைஎழுத்துப்பிரதியின் தடையங்களை அவர்களினால் அறிந்திருக்க முடிந்திருக்கும்.

கடவுள் என்ற மூலம் மண்ணில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்னால் இருந்தே இருக்கின்றது, குறிப்பாக மனிதனுக்கு முற்தோற்றமாக இருந்தது. மனிதனுக்கு பிற்தோற்றமாக அந்த மூலம் மனிதனால் உருவமாக்கப்பட்டது. அதற்கு ஒரு உருவக சிலை, பெயர், பிற்காலத்தில் அது மதமாக்கப்பட்டது.

பரப்பிரமம் விட்டுச்சென்ற அந்த தடயங்கள், கை எழுத்துபிரதியை பார்ப்போம்.

சிறுநீரகங்கள் பழுதடைந்து டயாலிசிஸ்(இரத்தம் கழுவுதல்), சிறுநீர் பையுடன் சுற்றித்திரிபவர்களிடம் கேட்டால் தெரியும் எவ்வளவு சிரமம் என்று.

பொத்தி வைத்த கையளவு, 150 கிராம் நிறையிள்ள ஒரு சின்னஞ்சிறு சிறுநீரகம் எவ்வளவு பணிகளை செய்கின்றது இந்த அற்புதமான வடிகட்டியை யார் வடிவமைத்தார் இதற்குப்பின்னால் யாருடைய கைகள் இருக்கின்றது. நான்தான் எல்லாம் என்றால் இதை ஏன் என்னால் பழுதுபார்க்க முடியவில்லை என்று ஒரு நிமிடம் சிந்தித்திருந்தால் தன்னுடைய நிலைப்பாட்டை அன்றே மாற்றியமைத்திருப்பார்.

எங்களது சிறுநீரகங்கள் ஒரு நாளைக்கு நானோ வடிகட்டிகள் வழியாக 5-6 லிட்டர் இரத்தத்தை 300 தடவைகள். சுமாராக சொன்னால் ஒவ்வொரு நாளும் 1700 லிட்டர் இரத்தத்தை வடிகட்டுகின்றது, வடிகட்டிய 170 லிட்டர் திரவத்தை பகுப்பாய்வு செய்து நீர் இழப்பு ஏற்படாதவாறு திரும்பவும் இரத்தத்தில் கலந்துவிடுகின்றது,

மிகிதம் தேவையற்ற கழிவுகள் சிறுநீர் பைக்கு அனுப்புகின்றது. ஒரு துளி சிவப்பணுக்கள், விற்றமின்கள் கனிமசத்துக்கள் வெளியேறாதபடி எவ்வளவு பக்குவமாக இந்த பணியை செய்கின்றது.

இது மட்டும் அதனுடைய பணி கிடையாது. மேலதிக பணியாக இயற்கை/ பரப்பிரம்மம் சிறுநீரகங்களில் மிக முக்கியமான 6 செயல்பாடுகளையும் வைத்து கட்டமைத்திருக்கின்றது.

திரவம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை ஒழுங்குபடுத்துதல். இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துதல். அமிலம் மற்றும் அடிப்படை சமநிலையை ஒழுங்குபடுத்துதல். உடலின் நச்சு நீக்கம். சிவப்பு இரத்த அணுக்கள் (எரித்ரோசைட்டுகள்) உருவாவதை ஒழுங்குபடுத்துதல்

மற்றும் சர்க்கரை மறுசுழற்சி, மிக முக்கியமான மன அழுத்த ஹார்மோன் கார்டிசோல் சுரப்பு, எலும்பு வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துதல் போன்றவைகள். ஒரு சிறுநீரகத்திற்கே இவ்வளவு பணிப்புகளை வைத்து கட்டமைத்திருக்கின்றது.

கடவுள் இருக்கின்றாரா, இல்லையா என்ற அரைகுறை சிந்தனையுடன் மருத்துவ படிப்பிற்காக பல்கலைக்கழகம் நுழைந்த அத்துனை மாணவர்களும் தங்கள் மருத்துவப்படிப்பு முடிந்து வெளியேறும் போது கண்டிப்பாக கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகத்தான் திரும்புவார்கள். அவர்கள் படித்த படிப்பிற்கான முதிர்வு அதுவாகத்தான் இருக்கும்.

எங்களுடைய அண்டவெளி தானாக வந்தது கிடையாது அது ஏதோவொரு தேவைக்காக உருவானது/உருவாக்கப்பட்டது. அண்டவெளி வெறும் வெற்று வெளியும் கிடையாது அது ஆரம்பத்திலிருந்தே ஆறு இணைப்பை கொண்ட கார்பன்(C) துகள்களினால் நிரப்பப்பட்டிருந்தது. அண்டவெளி ஒரு கிராஃபைட் வலை. ஆதனில் இதற்கு கறுப்பு அண்டம் என்று பெயர் வந்தது.

இந்த கறுப்பு சாம்பல், கார்பன்-C எங்கிருந்து வந்தது, இந்த அண்டத்திற்கு யார் கருப்பு சாயம் பூசியது. கார்பனின் தோற்றமும். ஆதியில் ஹைட்ரஜன்(H) என்ற மூலகம் தனியாக இருந்தது, இரண்டு ஹைட்ரஜன்கள் இணைந்து ஹீலியம்(He) மற்றும் மூன்று எலக்ட்ரான்கள் கொண்ட லித்தியம்(Li), நான்கு  பெரிலியம்(Be) உருவானது, இந்த காலகட்டத்தில்தான் நெருப்புக் கோளங்கள், சூரியன் போன்ற நட்சத்திரங்கள், மின்சக்தி உருவானது.

நெருப்பு கோளத்தில்(நட்சத்திரம்) இரண்டு ஹீலியம்(He) மோதிக்கொள்ளும் போது அதாவது, 100,000,000 டிகிரி வெப்பநிலையில் அணு இணைவின் போது நிலையற்ற தன்மை கொண்ட பெரிலியம்(Be) உருவாகின்ற நேரத்தில் தொடர் ஹீலியம்(He) மோதல்களில் ஒரு விளைபொருளாக, சாம்பலாக இந்த அறுகோணங்கள் கொண்ட கார்பன்(C) உருவாகின்றது.

இது வரைக்கும் பூமி போன்ற பாறை கிரகங்கள் எதுவும் இல்லாது இருந்த அண்டவெளி, வலிமை மிக்க கார்பன்(C) என்ற மூலகத்தை வைத்து கிரகங்களை கட்டமைக்கின்றது.

அதில் ஒன்றுதான் எங்களுடைய பூமி, படைப்பு என்றால் ஒழுங்கு, குப்பையாக ஓரிடத்தில் கொட்டிவைப்பதற்கும் ஒழுங்காக அடுக்கிவைப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு அண்டவெளியிலிருந்து எங்களுடைய பூமி வரைக்கும் எல்லாமே ஒரு ஒழுங்காக, வரிசை மாறாமல் அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றது. எடுத்துக்காட்டாக: காலச்சக்கரத்தின் காலண்டர், தனிம அட்டவணையை பார்த்தால் தெரிந்து கொள்ளமுடியும் இதனுடைய வரிசையையும் ஒழுங்கையும்.

அன்று நடந்த நிகழ்விற்கு சாட்சியாக, 13,8 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வுகள் போல் இன்றைக்கும் நட்சத்திரங்களில் நடக்கின்றது. அண்டவெளியில் நட்சத்திரங்கள் சாம்பலை/கார்பன் துகள்களை இன்று வரைக்கும் தூவுகின்றது.

இந்த ஒழுங்கை, இந்த வரிசையை பூமியை ஆய்வு செய்து பார்த்தால் தெரிந்து கொள்ளமுடியும். கல், மண், வைரம், இரும்பு, கனிமம் தொடங்கி, மரம், பயிர், ஜீவராசிகள், சர்க்கரை, எண்ணைய், எரிவாயு, அமினோ அமிலங்கள், எங்களுடைய மரபணு வரைக்கும், பூமியில் அத்துனை மூலங்களும் 99 விழுக்காடுகள் கார்பன்(C) என்ற மூலகத்தை கொண்டுதான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது, கார்பன் இல்லாமல் எந்த கட்டிடமும் இல்லை எந்த கட்டுமானமும் இல்லை.

பரப்பிரமம், கார்பனுக்கு 6 எலக்ட்ரான்களை வைத்து கட்டமைத்ததற்கு அதை தொடர்ந்து வரப்போகும் மற்றய தனிமங்களுடன் இணைய வைப்பதற்காகவே, கார்பன் பெரும்பாலான தனிம அட்டவணை தனிமங்களுடன் இணையக்கூடியது. ஆறு எலக்ட்ரான்களுக்கு பதில் 2,8 எலக்ட்ரான்களை வைத்து கட்டமைத்து இருந்திருந்தால் அந்த கார்பன் எதனுடனும் இணைந்திருக்காது,

அண்ட வெளியில் வெறும் நட்சத்திரங்கள் மட்டுமே இருந்திருக்கும் அதை பார்ப்பதற்கு நாங்கள் இருந்திருக்கமாட்டோம். கார்பன் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டதா அல்லது தானாக உருவானதா, எல்லா கட்டுமானங்களுக்கும் பின்னால் ஒரு நோக்கம், ஒரு குறிக்கோள் பரப்பிரமத்தின் கையெழுத்துபிரதி ஒளிந்திருக்கின்றது.

நட்சத்திரத்தில் பெரும் எரிபொருள் சக்தியின் விளைபொருளாக இருந்த சாம்பல்/கார்பன்-C, பூமியில் சிறிய சர்க்கரை (டி-குளுக்கோஸ்-C👉C₆H₁₂O₆) மூலக்கூறுகளாக இணைந்து மண்ணில் உயிர்களுக்கு சக்தி வழங்குகின்றது. மண்ணில் உயிர்களை தோற்றுவிப்பதற்காகவே எல்லாமே முன்கூட்டியே திட்டமிடப்பட்டவைகள்.

தாவரங்கள் மூலம் சூரிய ஒளியை பயன்படுத்தி இந்த சர்க்கரை-குளுக்கோஸை கட்டமைக்கின்றது. இந்த மண்ணில் தோன்றிய ஒரே ஒரு சர்க்கரை, குளுக்கோசு மட்டும்தான் மற்றவை எல்லாம் ஒற்றை சர்க்கரை, குளுக்கோசு இணைந்த கட்டமைப்புகள் இதில் நல்ல சர்க்கரை கெட்ட சர்க்கரை என்று எதுவும் கிடையாது.

எங்கள் பூமியும் பல மில்லியன் வருடங்களுக்கு முன்னால் ஒரு எரி கோளமாக இருந்து ஆறிப்போனதுதான். ஏனென்றால் திரவநிலை கொண்ட இரும்பை மைய கருவை உருவாக்கும் திறன் நட்சத்திரம்களுக்கு மட்டுமே உண்டு.

அழிவு இல்லாமல் ஆக்கம் இல்லை நட்சத்திரங்களின் மரணம் இல்லாமல் பூமியில் உயிர்கள் தோன்றியிருக்காது. நமது பூமியையும் நம்மையும் உருவாக்கும் ஒவ்வொரு கனமான உறுப்புகளும் பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நட்சத்திரங்களில் உருவாக்கப்பட்டன.

எனவே நாம் ஒவ்வொருவரும் எரிந்த நட்சத்திரங்களின் சாம்பலை நமக்குள்ளே சுமந்து செல்கிறோம். சூப்பர்நோவா வெடிப்புகளின் சாம்பலில் இரும்பும் உள்ளது. பூமியின் காந்த புலம் உருவாவதற்கு திரவநிலை கொண்ட இந்த இரும்புதான் காரணம். நட்சத்திரங்கள் பருப்பொருட்களை உருக்கி, பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு உருக்கு ஆலையாக செயல்பட்டிருக்கின்றது.

இரண்டு ஹைட்ரஜன் மூலகங்கள் ஒரு போதும் இயற்கையாக இணையாதுஅதற்கு காரணம்  முதன்மை மூலகம் ஹைட்ரஜன்-H, ஒரு புரோட்டான் (+) கொண்டது. இரண்டு நேர்மறை மூலகங்கள்  ஒன்றை ஒன்று வேகமாக தள்ளக்கூடியது. அதை ஒன்றுடன் ஒன்று மோதவைத்து இணைப்பதற்கு மாபெரும் சக்த்தி வாய்ந்த உந்துதல், மில்லியன்  மில்லியன்  கிராட்  வெப்பநிலை கொண்ட  ஒரு நட்சத்திரம் தேவை, அது எங்கிருந்து வந்தது அதை யார் பற்றவைப்பு செய்தது,

முற்தோற்ற நட்சத்திரங்கள்  நியூட்ரான் நட்சத்திரங்களா? நியூட்ரான் நட்சத்திரங்கள் சூப்பர்நோவா வெடிப்பின் போது தோன்றியவை. அவைகளின் எரிபொருளும் ஹைட்ரஜன்-H,

ஹைட்ரஜன் உருகி ->ஹீலியம் -> கார்பன், இரும்பு, ஒட்சிசன்  இந்த நிலையில் ஒரு நட்சத்திரத்தில் ஹைட்ரஜன், ஹீலியம்  தீர்ந்து போனால் அந்த  நட்சத்திரம் நியூட்ரான் நட்சத்திரங்களாக மாறுகின்றது. (இறந்த நட்சத்திரம்)

நாங்கள் யார், நாங்கள் எங்கிருந்து வந்தோம், இதுவெல்லாம் தானாக வந்ததா அல்லது யாராவது திட்டமிட்டு வடிவமைத்தார்களா என்ற கேள்விகளுக்கு, நாங்கள் நட்சத்திர துகள்களிலிருந்து வந்தவர்கள் என்று தையிரியமாக பதிலளிக்கமுடியும்..

நம்பியிருங்கள் கடவுள் இருக்கின்றார், கடவுள் நம்பிக்கை மட்டுமே துன்பத்திலிருக்கும் மனிதனை மீட்டெடுத்து திரும்பவும் இந்த பூமியில் சமாதானத்துடன் வாழவைக்கமுடியும்.

சமூகம் மற்றும் தொழில் ரீதியான உன் அடையாளத்தை இழக்காதே, அதே நேரத்தில் உன்னுடன் வாழும் சகமனிதனிடம் ஏற்றத்தாழ்வு பார்க்காதே அவனும் உன்னைப்போன்றவன். நீ உருவான அதே நட்சத்திர துகளிலிருந்து தான் அவனும் உருவானான்.

கடவுளுடைய பொது மன்னிப்பு காலத்தில் நாங்கள் வாழ்கின்றோம், நீங்கள் யாரையாவது மன்னிக்க விரும்பினால் அல்லது அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ள விரும்பினால், இதுதான் உங்களுக்கான சரியான நேரம், இதை தவறவிட்டால் பிறகு எந்தக்காலத்திலும் அவர்களை மன்னிக்க முடியாமல் போகலாம்.

மன்னிப்பு கேட்டுக்கொள்ளுங்கள், மன்னிப்பை கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள், மன்னித்துக் கொள்ளுங்கள் உங்கள் மன்னிப்பை கடவுள் ஏற்றுக்கொள்வார், நீங்கள் கடவுளுக்கு சமமாக மதிக்கப்படுவீர்கள்.bநன்றி மகேஷ்-ரவி.

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக