புதன், 24 ஆகஸ்ட், 2022

Electronics and Physics: Magical Number 1/137

 பகுத்தறிவு, பகுத்தறிந்து பார்ப்பது. பாகம்- 2 மின்காந்தவியல் மற்றும் இயற்பியல்: 1+1= 1/137 இந்த எண், மின்காந்தவியல், இயற்பியலில் மிகப் பெரிய மர்ம இலக்கம் இது பிரபஞ்ச ஒழுங்கில் ஒரு மூலக்கல்லாகும். இந்த இலக்கம் இயற்பியலின் மிகப் பெரிய மர்மங்களில் ஒன்றாக இன்று வரைக்கும் பார்க்கப்படுகின்றது.

மனிதனால் புரிந்துகொள்ள முடியாத ஒரு மாய எண்ணை கடவுளின் கைகள் எழுதியது/எழுதியதா…? கடவுள் விட்டுச்சென்ற தடயங்களில் மிகப்பெரிய தடயம் இது.

வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்வதில் இந்த இலக்கம் முக்கிய பங்கு வகிக்கின்றது என்றும் கூறப்படுகின்றது. அறிவியல் வளர்ச்சியில் முன்னேறியிருந்த வேற்றுகிரகவாசிகளுக்கு கண்டிப்பாக, இந்த தனிமம் இந்த எண்ணைப்பற்றி தெரிந்திருக்கும்.

தனிம அட்டவணையில் முதல் மூலகம் ஹைட்ரஜன்-H தொடங்கி கடைசி மூலகம் ஓகனேசன்-Og வரைக்கும் 118 தனிமங்கள் உள்ளது. 137 அணு எண் கொண்ட கடைசி மூலகம் Untriseptium = 137 எலக்ட்ரான் [2, 8, 18, 32, 50, 18, 8, 1] (ஃபெய்ன்மேனியம் ) இருக்கும் என்று இயற்பியலாளர்களின் கருத்து. அதன் எலக்ட்ரான்கள் ஒளியின் வேகத்தை விட வேகமாக பயணிக்ககூடியது.

ஃபைன்மேனியம் என்பது: FY மற்றும் அணு எண் 137 என்ற குறியீட்டைக் கொண்டு கண்டுபிடிக்கப்படாத உறுப்பின் தற்காலிகமற்ற பெயர் ஆகும். ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் (1918-1988) மரியாதைக்குரிய ஃபெய்ன்மேனியம் என்று பெயரிடப்பட்டது,

அவர் குவாண்டம் மெக்கானிக்ஸ், குவாண்டம் எலக்ட்ரோடினமிக்ஸ் மற்றும் பாதையின் ஒருங்கிணைந்த உருவாக்கம், துகள் இயற்பியல் துறைகளில் பணியாற்றியவர். கடவுள் பாரமான இந்த தனிமத்தை கொண்டு ஹைட்ரஜன்-H அடித்து அடித்து மற்ற மூலகங்களை உருவாக்கினார்/உருவாக்கினாரா..?

கார்பன்-C கட்டமைப்பை பற்றி பேசுகின்றபோது, இந்த பிரபஞ்சத்தை வடிவமைத்த மந்திர எண் 1/137 எண்ணுக்கு பதிலாக 1/138 போன்ற வேறு ஏதாவது எண் இருந்திருந்தால், நட்சத்திரங்களால் கார்பனை-C உருவாக்கியிருக்க முடியாது.

இயற்பியலாளர்கள் அதற்கான ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளார்கள் பௌதிகம் சூத்திரம், விதிகள், எண்கணக்கு அடிப்படையாக கொண்டது படிப்பதற்கு அவ்வளவு சுலபமான பாடம் கிடையாது. கொஞ்சம் விளங்கிக்கொள்வது கடினம், மின்காந்தவியல் ஒளியின் வேகம் குவாண்டம் பௌதிகம், பை பற்றி தெரிந்தவர்களுக்கு வெகு சுலபமாக புரியும், இருப்பினும், இயற்பியலாளர்கள் சொன்னதை உங்களுக்கு புரியும்படி எழுதுகின்றேன்.

எலக்ட்ரான் மற்றும் மியூன் போன்ற சார்ஜ் செய்யப்பட்ட அடிப்படைத் துகள்கள் ஒளியின் ஃபோட்டான்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதைக் கட்டுப்படுத்தும் மின்காந்த விசை. நுண்-கட்டமைப்பு மாறிலி என்பது பிரபஞ்சத்தின் முக்கிய இயற்பியல் மாறிலிகளில் ஒன்றாகும்.

இந்த மாறாத எண், நட்சத்திரங்கள் எவ்வாறு எரிகின்றன வேதியியல் எவ்வாறு நிகழ்கின்றது மற்றும் அணுக்கள் உள்ளனவா என்பதை தீர்மானிக்கின்றது.

அறிவியலில் இந்த மந்திர எண், நுண்ணிய அமைப்பு மாறிலி α" என்று அழைக்கப்படுகின்றது, இதை 1/137 (அல்லது 1/137.03599913) விவரிக்கின்றது

மாறிலி α” பற்றிய சிறப்பு: நிலையானது மற்றும் ஒரு தூய எண்ணின் சிறந்த உதாரணமாகக் கருதப்படுகின்றது, அதாவது கிலோகிராம்கள் அல்லது சென்டிமீட்டர்கள் போன்ற அலகு வடிவத்தில் அதற்கு பரிமாணம் இல்லை.

இது அடிப்படை இயற்கை மாறிலிகள் e (மின்சாரம்), h (விளைவு குவாண்டம்) மற்றும் c (ஒளியின் வேகம்) ஆகியவற்றின் கலவையாக விளைகின்றது, மேலும் இந்த வழியில் குவாண்டம் கோட்பாடு (e,h) மற்றும் சிறப்பு சார்பியல் கோட்பாடு (c) ஆகியவற்றை ஒன்றோடொன்று இணைக்கின்றது. இதன் விளைவாக, மாறிலி α” சார்பியல் குவாண்டம் இயக்கவியலின் மைய உறுப்பு என்று கருதப்படுகின்றது.

நுண் கட்டமைப்பு மாறிலி α” இன் நோக்கம் என்ன? குவாண்டம் எலக்ட்ரோடைனமிக்ஸில் உள்ள நுண்ணிய கட்டமைப்பு மாறிலியின் ஒரு பயன்பாடு, மின்காந்த புலங்களுடன் எலக்ட்ரான்கள் போன்ற சார்ஜ் செய்யப்பட்ட துகள்களுக்கு இடையிலான தொடர்புகளை அளவிடுவதாகும்.

இங்கே, α, எடுத்துக்காட்டாக, மின்சாரம் சார்ஜ் செய்யப்பட்ட துகள்களுக்கு இடையில் எவ்வளவு வலுவான விரட்டும் மற்றும் கவர்ச்சிகரமான சக்திகள் செயல்படுகின்றன என்பதைக் குறிக்கின்றது, அதாவது, மற்றவற்றுடன், உற்சாகமான அணு எவ்வளவு விரைவாக ஒரு ஃபோட்டானை வெளியிடும். அதே நேரத்தில், α அணுக்களின் ஒளி வெளியீட்டை பாதிக்கின்றது.

எடுத்துக்காட்டாக, "நுண்ணிய அமைப்பு" எனப்படும் அணுக்களிலிருந்து வெளிப்படும் ஒளியின் மாறுதல் வடிவத்தை ஆராய்ச்சியாளர்கள் கவனித்துள்ளனர். இது சூரிய ஒளி மற்றும் பிற நட்சத்திரங்களின் ஒளி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சிறந்த அமைப்பு மாறிலி (\ஆல்பா α). \ Frac {1} {137} 1371 மதிப்பைக் கொண்ட \ ஆல்பா bos காரணமாக, ஒரு எலக்ட்ரானின் வேகம் a ஹைட்ரஜன் அணு \ frac {1} {137} 1371 ஒளியின் வேகம். பாஸ்போரசன்ட் திரைகளை \ frac {1} {137} 1371 இல் தாக்கும்போது ஒளியை வெளியிடும் எலக்ட்ரான்களின் பகுதியை இது அமைக்கின்றது.

அணுக்களில் எலக்ட்ரான்களின் வேகம் போன்ற அடிப்படை பண்புகளைத் தீர்மானிப்பது பொருள் \ ஆல்பா α அணுக்கள் எவ்வளவு பெரியவை என்பதை தீர்மானிக்கின்றது, இது மூலக்கூறுகள் கூட சாத்தியமானவை என்பதை தீர்மானிக்கின்றது.

வேறுபட்ட \ ஆல்பா a நீரின் உருகும் புள்ளி மற்றும் அணுக்கருக்களின் நிலைத்தன்மை போன்ற பண்புகளை மாற்றும். \ ஆல்பா α அதன் தற்போதைய மதிப்பிலிருந்து வெறும் 4 விழுக்காடுகள் வேறுபட்டது என்று இயற்பியலாளர்கள் கணக்கிட்டார்கள்,

கார்பன்-C -12 உற்சாகமான ஆற்றல் நிலை சரியான இடத்தில் இருக்காது.\ ஆல்பா \ \ frac {1} {131} 1311 அல்லது \ frac {1} {144} 1441 எனில் கிட்டத்தட்ட இந்த பிரபஞ்சத்தில் கார்பன்-C என்ற மூலகம் இருந்திருக்காது. என்பது நல்ல தத்துவார்த்த இயற்பியலாளர்களின் கருத்து.

மாறுபட்ட வேறு ஏதாவது எண் அந்த இடத்தில் இருந்திருந்தால் அதனால் எந்த பிரயோஜனமும் இருந்திருக்காது அதனால்தான் இந்த (1/137.03599913) இலக்கம் மந்திர எண்ணாக பார்க்கப்படுகின்றது.

ஹைட்ரஜன் அலை, செயல்பாடு: ஒரு திசைகாட்டி ஊசியின் இயக்கம் மின்காந்த சக்தியால் இயக்கப்படுகின்றது. இந்த மின்காந்த சக்தியின் வலிமை ஒரு பரிமாணமற்ற மாறிலி மூலம் தீர்மானிக்கப்படுகின்றது.

வெவ்வேறு ஆற்றல் மட்டங்களில் ஹைட்ரஜன் அணுவில் எலக்ட்ரானின் அலை செயல்பாடுகளை குவாண்டம் மெக்கானிக்ஸ் விண்வெளியில் ஒரு துகள் இருக்கும் இடத்தை துல்லியமாக கணிக்க முடியாது, வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வடிவம் எடுக்கின்றது

இருப்பினும், வெவ்வேறு இடங்களில் அதைக் கண்டுபிடிப்பதற்கான நிகழ்தகவு ஒரு பிரகாசமான பகுதி எலக்ட்ரானைக் கண்டுபிடிப்பதற்கான அதிக நிகழ்தகவைக் குறிக்கின்றது. படத்தில் இருப்பது போல்.

இவைகளை கொண்டு வேற்றுகிரகவாசிகளை எப்படி அடையாளம் காண்பது. உங்களுக்குத் தெரியுமா மின்காந்தம் குவாண்டம் சிறப்பு சார்பியல் இயற்பியல் அடிப்படையில், இரண்டு கைகளுக்கு பதிலாக பைனரி எண்ணாக 12 கைகள் கூட வேற்றுகிரகவாசிகளுக்கு கிடைத்திருக்கலாம்.

நீங்கள் வேற்றுகிரகவாசிகளை சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்கு ஒரு தலை இரண்டு கைகள் இருக்கவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. அவர்களுக்கு இரண்டு  அல்லது ஆறு தலைகள் உள்ளவர்களாக கூட இருக்கலாம்.

ஒரு மூலகம், புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் மற்றும் குவார்க் அடிப்படையை கொண்டு கட்டமைக்கப்பட்டது. புவியீர்ப்பு விசை[G] நிறை ஆற்றல்[C] புரோட்டான் ஆற்றல்[h] மற்றும் எலக்ட்ரான் ஆற்றல்களையும் கொண்டது. இதில் எலக்ட்ரான் ஆற்றல்: மின்சாரம், வேதியியல். மின்காந்தவியல் விதிகளுக்கு உட்பட்டது.

 





வியாழன், 18 ஆகஸ்ட், 2022

Where did the black ash carbon-C come from?

பகுத்தறிவும் பகுத்தறிந்து பார்ப்பதும்; பகுத்தறிவு, பகுத்தறிந்து பார்ப்பது, பகுத்தறியாமல் கடவுள் இல்லை என்பதும் ஒரு மூடநம்பிக்கை. அகல் விளக்கு காலத்தில் சொன்ன ஒரு கருத்தை இன்று வரைக்கும் எடுத்துவருவது அதைவிட மூடத்தனம்.

இருப்பதை வைத்து இல்லாததை தேடுதல், மனிதன் என்ற ஒரு மூலத்தை வைத்து இன்னும் அறியப்படாத, இன்னும் சரியாக துலக்கப்படாத கடவுள் என்ற அந்த ஆதி மூலத்தை தேடுதல்.

கடவுள் இல்லை அல்லது கடவுள் மறுப்பு சொன்ன அத்துனை மாபெரும் மேதைகள், அண்டவெளியை அண்ணாந்து பார்த்தார்களே தவிர, தங்களுடைய சொந்த உடலை கூர்ந்து பார்க்க தவறிவிட்டார்கள். அப்படி அவர்கள் பார்த்திருந்தால் கடவுள் விட்டுச்சென்ற படைப்பின் கைஎழுத்துப்பிரதியின் தடையங்களை அவர்களினால் அறிந்திருக்க முடிந்திருக்கும்.

கடவுள் என்ற மூலம் மண்ணில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்னால் இருந்தே இருக்கின்றது, குறிப்பாக மனிதனுக்கு முற்தோற்றமாக இருந்தது. மனிதனுக்கு பிற்தோற்றமாக அந்த மூலம் மனிதனால் உருவமாக்கப்பட்டது. அதற்கு ஒரு உருவக சிலை, பெயர், பிற்காலத்தில் அது மதமாக்கப்பட்டது.

பரப்பிரமம் விட்டுச்சென்ற அந்த தடயங்கள், கை எழுத்துபிரதியை பார்ப்போம்.

சிறுநீரகங்கள் பழுதடைந்து டயாலிசிஸ்(இரத்தம் கழுவுதல்), சிறுநீர் பையுடன் சுற்றித்திரிபவர்களிடம் கேட்டால் தெரியும் எவ்வளவு சிரமம் என்று.

பொத்தி வைத்த கையளவு, 150 கிராம் நிறையிள்ள ஒரு சின்னஞ்சிறு சிறுநீரகம் எவ்வளவு பணிகளை செய்கின்றது இந்த அற்புதமான வடிகட்டியை யார் வடிவமைத்தார் இதற்குப்பின்னால் யாருடைய கைகள் இருக்கின்றது. நான்தான் எல்லாம் என்றால் இதை ஏன் என்னால் பழுதுபார்க்க முடியவில்லை என்று ஒரு நிமிடம் சிந்தித்திருந்தால் தன்னுடைய நிலைப்பாட்டை அன்றே மாற்றியமைத்திருப்பார்.

எங்களது சிறுநீரகங்கள் ஒரு நாளைக்கு நானோ வடிகட்டிகள் வழியாக 5-6 லிட்டர் இரத்தத்தை 300 தடவைகள். சுமாராக சொன்னால் ஒவ்வொரு நாளும் 1700 லிட்டர் இரத்தத்தை வடிகட்டுகின்றது, வடிகட்டிய 170 லிட்டர் திரவத்தை பகுப்பாய்வு செய்து நீர் இழப்பு ஏற்படாதவாறு திரும்பவும் இரத்தத்தில் கலந்துவிடுகின்றது,

மிகிதம் தேவையற்ற கழிவுகள் சிறுநீர் பைக்கு அனுப்புகின்றது. ஒரு துளி சிவப்பணுக்கள், விற்றமின்கள் கனிமசத்துக்கள் வெளியேறாதபடி எவ்வளவு பக்குவமாக இந்த பணியை செய்கின்றது.

இது மட்டும் அதனுடைய பணி கிடையாது. மேலதிக பணியாக இயற்கை/ பரப்பிரம்மம் சிறுநீரகங்களில் மிக முக்கியமான 6 செயல்பாடுகளையும் வைத்து கட்டமைத்திருக்கின்றது.

திரவம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை ஒழுங்குபடுத்துதல். இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துதல். அமிலம் மற்றும் அடிப்படை சமநிலையை ஒழுங்குபடுத்துதல். உடலின் நச்சு நீக்கம். சிவப்பு இரத்த அணுக்கள் (எரித்ரோசைட்டுகள்) உருவாவதை ஒழுங்குபடுத்துதல்

மற்றும் சர்க்கரை மறுசுழற்சி, மிக முக்கியமான மன அழுத்த ஹார்மோன் கார்டிசோல் சுரப்பு, எலும்பு வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துதல் போன்றவைகள். ஒரு சிறுநீரகத்திற்கே இவ்வளவு பணிப்புகளை வைத்து கட்டமைத்திருக்கின்றது.

கடவுள் இருக்கின்றாரா, இல்லையா என்ற அரைகுறை சிந்தனையுடன் மருத்துவ படிப்பிற்காக பல்கலைக்கழகம் நுழைந்த அத்துனை மாணவர்களும் தங்கள் மருத்துவப்படிப்பு முடிந்து வெளியேறும் போது கண்டிப்பாக கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகத்தான் திரும்புவார்கள். அவர்கள் படித்த படிப்பிற்கான முதிர்வு அதுவாகத்தான் இருக்கும்.

எங்களுடைய அண்டவெளி தானாக வந்தது கிடையாது அது ஏதோவொரு தேவைக்காக உருவானது/உருவாக்கப்பட்டது. அண்டவெளி வெறும் வெற்று வெளியும் கிடையாது அது ஆரம்பத்திலிருந்தே ஆறு இணைப்பை கொண்ட கார்பன்(C) துகள்களினால் நிரப்பப்பட்டிருந்தது. அண்டவெளி ஒரு கிராஃபைட் வலை. ஆதனில் இதற்கு கறுப்பு அண்டம் என்று பெயர் வந்தது.

இந்த கறுப்பு சாம்பல், கார்பன்-C எங்கிருந்து வந்தது, இந்த அண்டத்திற்கு யார் கருப்பு சாயம் பூசியது. கார்பனின் தோற்றமும். ஆதியில் ஹைட்ரஜன்(H) என்ற மூலகம் தனியாக இருந்தது, இரண்டு ஹைட்ரஜன்கள் இணைந்து ஹீலியம்(He) மற்றும் மூன்று எலக்ட்ரான்கள் கொண்ட லித்தியம்(Li), நான்கு  பெரிலியம்(Be) உருவானது, இந்த காலகட்டத்தில்தான் நெருப்புக் கோளங்கள், சூரியன் போன்ற நட்சத்திரங்கள், மின்சக்தி உருவானது.

நெருப்பு கோளத்தில்(நட்சத்திரம்) இரண்டு ஹீலியம்(He) மோதிக்கொள்ளும் போது அதாவது, 100,000,000 டிகிரி வெப்பநிலையில் அணு இணைவின் போது நிலையற்ற தன்மை கொண்ட பெரிலியம்(Be) உருவாகின்ற நேரத்தில் தொடர் ஹீலியம்(He) மோதல்களில் ஒரு விளைபொருளாக, சாம்பலாக இந்த அறுகோணங்கள் கொண்ட கார்பன்(C) உருவாகின்றது.

இது வரைக்கும் பூமி போன்ற பாறை கிரகங்கள் எதுவும் இல்லாது இருந்த அண்டவெளி, வலிமை மிக்க கார்பன்(C) என்ற மூலகத்தை வைத்து கிரகங்களை கட்டமைக்கின்றது.

அதில் ஒன்றுதான் எங்களுடைய பூமி, படைப்பு என்றால் ஒழுங்கு, குப்பையாக ஓரிடத்தில் கொட்டிவைப்பதற்கும் ஒழுங்காக அடுக்கிவைப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு அண்டவெளியிலிருந்து எங்களுடைய பூமி வரைக்கும் எல்லாமே ஒரு ஒழுங்காக, வரிசை மாறாமல் அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றது. எடுத்துக்காட்டாக: காலச்சக்கரத்தின் காலண்டர், தனிம அட்டவணையை பார்த்தால் தெரிந்து கொள்ளமுடியும் இதனுடைய வரிசையையும் ஒழுங்கையும்.

அன்று நடந்த நிகழ்விற்கு சாட்சியாக, 13,8 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வுகள் போல் இன்றைக்கும் நட்சத்திரங்களில் நடக்கின்றது. அண்டவெளியில் நட்சத்திரங்கள் சாம்பலை/கார்பன் துகள்களை இன்று வரைக்கும் தூவுகின்றது.

இந்த ஒழுங்கை, இந்த வரிசையை பூமியை ஆய்வு செய்து பார்த்தால் தெரிந்து கொள்ளமுடியும். கல், மண், வைரம், இரும்பு, கனிமம் தொடங்கி, மரம், பயிர், ஜீவராசிகள், சர்க்கரை, எண்ணைய், எரிவாயு, அமினோ அமிலங்கள், எங்களுடைய மரபணு வரைக்கும், பூமியில் அத்துனை மூலங்களும் 99 விழுக்காடுகள் கார்பன்(C) என்ற மூலகத்தை கொண்டுதான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது, கார்பன் இல்லாமல் எந்த கட்டிடமும் இல்லை எந்த கட்டுமானமும் இல்லை.

பரப்பிரமம், கார்பனுக்கு 6 எலக்ட்ரான்களை வைத்து கட்டமைத்ததற்கு அதை தொடர்ந்து வரப்போகும் மற்றய தனிமங்களுடன் இணைய வைப்பதற்காகவே, கார்பன் பெரும்பாலான தனிம அட்டவணை தனிமங்களுடன் இணையக்கூடியது. ஆறு எலக்ட்ரான்களுக்கு பதில் 2,8 எலக்ட்ரான்களை வைத்து கட்டமைத்து இருந்திருந்தால் அந்த கார்பன் எதனுடனும் இணைந்திருக்காது,

அண்ட வெளியில் வெறும் நட்சத்திரங்கள் மட்டுமே இருந்திருக்கும் அதை பார்ப்பதற்கு நாங்கள் இருந்திருக்கமாட்டோம். கார்பன் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டதா அல்லது தானாக உருவானதா, எல்லா கட்டுமானங்களுக்கும் பின்னால் ஒரு நோக்கம், ஒரு குறிக்கோள் பரப்பிரமத்தின் கையெழுத்துபிரதி ஒளிந்திருக்கின்றது.

நட்சத்திரத்தில் பெரும் எரிபொருள் சக்தியின் விளைபொருளாக இருந்த சாம்பல்/கார்பன்-C, பூமியில் சிறிய சர்க்கரை (டி-குளுக்கோஸ்-C👉C₆H₁₂O₆) மூலக்கூறுகளாக இணைந்து மண்ணில் உயிர்களுக்கு சக்தி வழங்குகின்றது. மண்ணில் உயிர்களை தோற்றுவிப்பதற்காகவே எல்லாமே முன்கூட்டியே திட்டமிடப்பட்டவைகள்.

தாவரங்கள் மூலம் சூரிய ஒளியை பயன்படுத்தி இந்த சர்க்கரை-குளுக்கோஸை கட்டமைக்கின்றது. இந்த மண்ணில் தோன்றிய ஒரே ஒரு சர்க்கரை, குளுக்கோசு மட்டும்தான் மற்றவை எல்லாம் ஒற்றை சர்க்கரை, குளுக்கோசு இணைந்த கட்டமைப்புகள் இதில் நல்ல சர்க்கரை கெட்ட சர்க்கரை என்று எதுவும் கிடையாது.

எங்கள் பூமியும் பல மில்லியன் வருடங்களுக்கு முன்னால் ஒரு எரி கோளமாக இருந்து ஆறிப்போனதுதான். ஏனென்றால் திரவநிலை கொண்ட இரும்பை மைய கருவை உருவாக்கும் திறன் நட்சத்திரம்களுக்கு மட்டுமே உண்டு.

அழிவு இல்லாமல் ஆக்கம் இல்லை நட்சத்திரங்களின் மரணம் இல்லாமல் பூமியில் உயிர்கள் தோன்றியிருக்காது. நமது பூமியையும் நம்மையும் உருவாக்கும் ஒவ்வொரு கனமான உறுப்புகளும் பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நட்சத்திரங்களில் உருவாக்கப்பட்டன.

எனவே நாம் ஒவ்வொருவரும் எரிந்த நட்சத்திரங்களின் சாம்பலை நமக்குள்ளே சுமந்து செல்கிறோம். சூப்பர்நோவா வெடிப்புகளின் சாம்பலில் இரும்பும் உள்ளது. பூமியின் காந்த புலம் உருவாவதற்கு திரவநிலை கொண்ட இந்த இரும்புதான் காரணம். நட்சத்திரங்கள் பருப்பொருட்களை உருக்கி, பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு உருக்கு ஆலையாக செயல்பட்டிருக்கின்றது.

இரண்டு ஹைட்ரஜன் மூலகங்கள் ஒரு போதும் இயற்கையாக இணையாதுஅதற்கு காரணம்  முதன்மை மூலகம் ஹைட்ரஜன்-H, ஒரு புரோட்டான் (+) கொண்டது. இரண்டு நேர்மறை மூலகங்கள்  ஒன்றை ஒன்று வேகமாக தள்ளக்கூடியது. அதை ஒன்றுடன் ஒன்று மோதவைத்து இணைப்பதற்கு மாபெரும் சக்த்தி வாய்ந்த உந்துதல், மில்லியன்  மில்லியன்  கிராட்  வெப்பநிலை கொண்ட  ஒரு நட்சத்திரம் தேவை, அது எங்கிருந்து வந்தது அதை யார் பற்றவைப்பு செய்தது,

முற்தோற்ற நட்சத்திரங்கள்  நியூட்ரான் நட்சத்திரங்களா? நியூட்ரான் நட்சத்திரங்கள் சூப்பர்நோவா வெடிப்பின் போது தோன்றியவை. அவைகளின் எரிபொருளும் ஹைட்ரஜன்-H,

ஹைட்ரஜன் உருகி ->ஹீலியம் -> கார்பன், இரும்பு, ஒட்சிசன்  இந்த நிலையில் ஒரு நட்சத்திரத்தில் ஹைட்ரஜன், ஹீலியம்  தீர்ந்து போனால் அந்த  நட்சத்திரம் நியூட்ரான் நட்சத்திரங்களாக மாறுகின்றது. (இறந்த நட்சத்திரம்)

நாங்கள் யார், நாங்கள் எங்கிருந்து வந்தோம், இதுவெல்லாம் தானாக வந்ததா அல்லது யாராவது திட்டமிட்டு வடிவமைத்தார்களா என்ற கேள்விகளுக்கு, நாங்கள் நட்சத்திர துகள்களிலிருந்து வந்தவர்கள் என்று தையிரியமாக பதிலளிக்கமுடியும்..

நம்பியிருங்கள் கடவுள் இருக்கின்றார், கடவுள் நம்பிக்கை மட்டுமே துன்பத்திலிருக்கும் மனிதனை மீட்டெடுத்து திரும்பவும் இந்த பூமியில் சமாதானத்துடன் வாழவைக்கமுடியும்.

சமூகம் மற்றும் தொழில் ரீதியான உன் அடையாளத்தை இழக்காதே, அதே நேரத்தில் உன்னுடன் வாழும் சகமனிதனிடம் ஏற்றத்தாழ்வு பார்க்காதே அவனும் உன்னைப்போன்றவன். நீ உருவான அதே நட்சத்திர துகளிலிருந்து தான் அவனும் உருவானான்.

கடவுளுடைய பொது மன்னிப்பு காலத்தில் நாங்கள் வாழ்கின்றோம், நீங்கள் யாரையாவது மன்னிக்க விரும்பினால் அல்லது அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ள விரும்பினால், இதுதான் உங்களுக்கான சரியான நேரம், இதை தவறவிட்டால் பிறகு எந்தக்காலத்திலும் அவர்களை மன்னிக்க முடியாமல் போகலாம்.

மன்னிப்பு கேட்டுக்கொள்ளுங்கள், மன்னிப்பை கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள், மன்னித்துக் கொள்ளுங்கள் உங்கள் மன்னிப்பை கடவுள் ஏற்றுக்கொள்வார், நீங்கள் கடவுளுக்கு சமமாக மதிக்கப்படுவீர்கள்.bநன்றி மகேஷ்-ரவி.