சனி, 9 ஜூலை, 2022

Nail Fungus: (Onychomycosis)

நக பூஞ்சை: (ஓனிகோ மைகோசிஸ் ) கால்-விரல்-நக பூஞ்சைகள் இரத்தத்தை நச்சு ஊறச்செய்கின்றது மற்றும் நெக்ரோசிஸை ஏற்படுத்துகின்றது. கால் அல்லது கால் விரல்களில் உள்ள இரத்த சுற்றோட்ட பிரச்சனைகள் திசுக்களின் அழிவுக்கும் இறப்புக்கும் (நெக்ரோசிஸ்) நக பூஞ்சை வழிவகுக்கலாம்.

பூஞ்சைகள் சர்க்கரை உண்ணிகள், உணவை தேடி எல்லா இடத்திலும் பரவக்கூடியது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், கால் விரல்கள் மேல் அதி கவனம் அக்கறை உள்ளவர்களாக எப்போதும் இருக்கவேண்டும்.

விரல் நக பூஞ்சைகள்  இரத்த ஓட்டம் மற்றும் நுரையீரல் கணையம் இதயம் வரை பல உள் உறுப்புகளில் நுழைகின்றன, அங்கு அவை இரத்த விஷத்தை உண்டாக்கி உடலை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கின்றது.

நக பூஞ்சை, கால் விரல் நகங்களை மட்டும் பாதிப்பதில்லை, அது கால் வழியாக இரத்த ஓட்டத்தில் நுழைந்து உடல் முழுவதும் பரவுகின்றது. பூஞ்சை நம் உடலை உள்ளே இருந்து அழித்து அனைத்து உறுப்புகளிலும் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.

சிறிய வித்திகள் உட்புற உறுப்புகளுடன் இணைகின்றன மற்றும் அவைகள் தங்களை பெருக்கி, சேதத்தை ஏற்படுத்துகின்றது. காலப்போக்கில் உட்புற உறுப்புகளும் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுகின்றன.

இதன் பொருள் உடல் உள்ளே இருந்து அழுகி போகின்றது. இது காலப்போக்கில், இதய செயலிழப்பு, மூளையில் இரத்த நாளம் கூட  வெடிக்கலாம் மற்றும் கல்லீரல் புற்றுநோய். சிறுநீரக செயலிழப்புக்கும் சாத்தியமாகும்.

நக பூஞ்சையால் பாதிக்கப்பட்ட எவரும் ஆபத்தில் உள்ளனர். அடிக்கடி ஏற்படும் சளியால் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமடைகின்றது. நக பூஞ்சை நுரையீரல் பாதிப்பு மார்புசளி, இருமலுக்கும் காரணியாகின்றது.

மற்றும் மன அழுத்தம், உங்கள் இயல்பில் ஒரு மாற்றத்தை செய்கின்றது, இது திடீர் மரணத்திற்கு வழிவகுக்கும். கொரோனா மட்டும்தான் நுரையீரல் கோளாறுகளை ஏற்படுத்தும் என்று எந்த வரையறை வரம்பும் கிடையாது நக பூஞ்சை கூட சுவாசப்பிரச்சனைகளை ஏற்படுத்தி மரணம் வரை இழுத்துச்செல்லும்.

2019 இல் ஈஸ்ட் பூஞ்சை தொற்று காரணமாக நிறைய பேர்கள், சுமார் 2,00,000 நோயாளிகளுக்கு மேல்  இறந்தார்கள் என்று  மருத்துவ  ஆய்வுக்கட்டுரை ஒன்று சொல்கின்றது. அவர்களின் மரணம் குறித்து ஆய்வு செய்த மருத்துவர் அவர்களின் கால் நகங்களில் தடயங்களை விட்டு சென்றிருக்கின்றது. அதாவது கால்கள் நக பூஞ்சையால் பற்றியிருந்தது தெரிய வந்திருக்கின்றது.

ஈஸ்ட்கள் அல்லது ஈஸ்ட் பூஞ்சைகள் ஒரு செல்லுலார் பூஞ்சைகள், அவை வளரும், படரும் தன்மை கொண்டது. பாண், தோசை, பீஸ்ஸா மற்றும் பீர் தயாரிப்பில் புளிக்கவைக்க பயன்படுத்தப்படுகின்றது.

இந்த பூஞ்சைகள் உணவின் மூலம் உடலில் புகுந்து இருமல் சளி, ஒவ்வாமை,சுவாசக்கோளாறுகள் போன்ற பல வகை சுகாதார பிரச்சனைகளுக்கு அடித்தள காரணியாக இருக்கின்றது. பூஞ்சைகள் உங்களுக்கு தெரியாமல் உங்கள் உடலை பலவீனப்படுத்திக் கொண்டே இருக்கும். இந்த உணவுகளை குறித்து எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்.

ஒரு செல்லுலார் அல்லது இழை பூஞ்சை என்று அழைக்கப்படுகின்ற, நக பூஞ்சை தொற்றுக்கான காரணங்கள்; பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நக  பூஞ்சைக்கு பின்னால் மிகவும் அரிதாக  கரும் பூஞ்சை அல்லது ஈஸ்ட் பூஞ்சையினால் பாதிக்கப்படுவதற்கு வெவ்வேறு வழிகள் உள்ளன.

இந்த காளான்கள் குறிப்பாக பாதங்களில் குதிக்கால்களில்  நன்றாக பெருகி வளரும். இங்குதான் அவர்கள் உகந்த வாழ்க்கை நிலைமைகளைக் காண்கிறார்கள் சூடான, ஈரப்பதமான காலநிலை. நாம் அடிக்கடி பூஞ்சை வித்திகளால் ஒருவருக்கொருவர் பாதிக்கிறோம்.

திருவிழா காலங்களில் காலணிகள் இல்லாது இருப்பது மற்றவர்களின் காலணிகளை அணிவது,நீச்சல் குளத்தில் அல்லது உடை மாற்றும் அறைகளில், நம் சக மனிதர்களின் எண்ணற்ற சிறிய தோல் செல்கள் தரைகளில் துழாவுகின்றன.

பூஞ்சை வித்திகள் பெரும்பாலும் வாரக்கணக்கில் உயிர் வாழ்கின்றன, பித்த வெடிப்பு செதில்கள் நமது நகங்களில் அல்லது கால்விரல்களுக்கு இடையில் வந்தால், நாம் பூஞ்சைகளால் பாதிக்கப்படலாம்.

குறிப்பாக முதியவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் போன்ற நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமடைந்தவர்கள்  ஆபத்தில் உள்ளனர். நீரிழிவு நோயாளிகள் பொதுவாக பலவீனமான பாதுகாப்பைக் கொண்டுள்ளனர் மற்றும் பெரும்பாலும் அவர்களின் கால்களில் இரத்த ஓட்டம் மற்றும் உணர்ச்சி, உணர்வுக் கோளாறுகள் உள்ளவர்கள்

எனவே, அவர்கள் தங்கள் காலில் ஒரு காயம், பித்த வெடிப்பு இருப்பதை கூட அவர்களினால் அடிக்கடி கவனிக்க முடிவதில்லை, இதன் மூலம் பூஞ்சை  இந்த இடங்களை குறிபார்த்து எளிதில் ஊடுருவ முடியும்

மற்றொரு ஆபத்து காரணி, உறுதியான காற்று புகாத காலணிகளை அடிக்கடி அணிவது. காலணிகளில் வியர்வை ஈரப்பதம் குவிந்தால், பாதங்கள் சிறிது மென்மையாகி, பூஞ்சைகளுக்கு நுழைவு வாயிலாக மற்றும் அதே நேரத்தில் உகந்த வாழ்க்கை நிலைமைகளை இந்த வெப்பமான ஈரப்பதம் வழங்குகின்றது. கால்களை சுத்தம் செய்து ஈரப்பதம் இல்லாது வைத்துக்கொள்ளுங்கள்.

கேண்டிடா ஆரிஸ் என்று அழைக்கப்படும் ஈஸ்ட் பூஞ்சைகள். காது வழி மற்றும் சுவாசப்பாதைகளை காலனித்துவப்படுத்துகின்றது, அங்கு குடியமர்ந்து கொண்டு தீராத இருமல், சளி போன்ற சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்.   

இது உள்ளூற இரத்தத்தில் அல்லது காயங்களில் கலந்து கடுமையான தொற்றுநோய்களை ஏற்படுத்துகின்றது. பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு, நீரிழிவு நோயாளிகள் மற்றும் குறைமாத குழந்தைகளுக்கு பூஞ்சை ஒரு கொடிய ஆபத்தான நோய்க் காரணியாக இருக்கின்றது. 

சாராம்சம்:  கரும் பூஞ்சைஈஸ்ட் பூஞ்சை தொற்றின் விளைவுகள்: நகங்களில் அவை மஞ்சள் நிறமாக மாறி, நுண்துளைகளாகவும், உரிக்கக்கூடியதாகவும் உதிரும் வெள்ளை பவுடர் போல் மாறும். பூஞ்சை தொற்று நிச்சயமாக ஒரு மருத்துவரால் சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக