சனி, 16 ஜூலை, 2022

Polyneuropathy: Abbreviated as PNP,

பாலிநியூரோபதி: சுருக்கமாக PNP, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் மிகவும் பொதுவான நரம்பியல் கோளாறுகளில் ஒன்றாகும். மூளை மற்றும் முள்ளந்தண்டு வடத்திற்கு வெளியே இருக்கும் நரம்புகளின் பல்வேறு நோய்களுக்கான பொதுவான ஒரு சொல், மருத்துவ வார்த்தையில் "பாலி" பல ஏன்று குறிப்பிடுவது போல், பல பாதிக்கப்பட்ட நரம்புகளின் சேதம் என்று பொருள்படுகின்றது.

பொதுவாக பாலிநியூரோபதி யாரையும் பாதிக்கலாம். இந்த நரம்பு நோய்க்கான மிக முக்கியமான காரணங்கள், அதில் முதல் இடத்திலிருப்பது சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்) மற்றும் மது அருந்துதல். மது துஷ்பிரயோகம்,

மாத்திரைகளை அள்ளி முழுங்குதல் விற்றமின் மாத்திரைகள் மற்றைய நோய்களுக்காக எடுக்கப்படும் மருந்து மாத்திரைகள் காலப்போக்கில் நச்சாக மாறி, நரம்பு மண்டலத்தை சேதப்படுத்துகின்றது.

பிற நோய்கள், விஷம் மற்றும் சில புற்றுநோய் சிகிச்சைகளும் அடங்கும். அரிதாக பாலிநியூரோபதி மரபணு ரீதியாக, பரம்பரையாகவும் தீர்மானிக்கப்படுகின்றது. சில நேரங்களில் எந்த காரணமும் கண்டுபிடிக்க முடியாதபடி மறைமுக காரணியாகவும் பாலிநியூரோபதி நோய் இருக்கின்றது.

பாலிநியூரோபதி, ஒரு நரம்பு நோய் பொதுவாக கால்விரல்களில் தொடங்குகின்றது. வழக்கமான அறிகுறிகள் கூச்ச உணர்வு, கொட்டுதல், எரிதல், உலர்ந்த சருமம் கண்கள் இதன் நிமித்தம் அரிப்பு, எரிச்சல், மற்றும் உணர்வின்மை போன்ற அசாதாரண உணர்வுகளாக, இவை இரண்டு கால்களிலும் சமச்சீராக நிகழ்கின்றன, காலப்போக்கில் வலுவடைந்து உடலின் நடுப்பகுதி வரை பரவுகின்றது.

உடலில் உள்ள பல புற நரம்புகள் ஒரே நேரத்தில் சரியாக வேலை செய்யாதபோது பாலிநியூரோபதி ஏற்படுகின்றது. நோய்த்தொற்றுகள், நச்சுகள், சில மருந்துகள், புற்றுநோய், ஊட்டச்சத்து குறைபாடுகள், நீரிழிவு நோய், சுய-உடல்-தாக்கி நோய்கள் (ஆட்டோ இம்யூன் நோய்கள்) மற்றும் பிற நோய்கள் பல புற நரம்புகளை ஒரே நேரத்தில் செயலிழக்கச் செய்யலாம்.

பாலிநியூரோபதி நோய்க்கு சரியான சிகிச்சையுடன், அறிகுறிகள் பொதுவாக தணிக்கப்படலாம் இருப்பினும் கடுமையான சந்தர்ப்பங்களில், நரம்பு சேதம் காரணமாக உள் உறுப்புகள் ஏற்கனவே பலவீனமடைந்திருந்தால் பாலிநியூரோபதி ஆபத்தான ஒரு நோய். திடீர் மரணங்களுக்கு வழிவகை தேடித்தரும்.

பாதிக்கப்பட்ட நரம்புகள் ஏற்கனவே சேதமடையவில்லை என்றால் மட்டுமே பாலிநியூரோபதி நோயை குணப்படுத்த முடியும். இது தற்போது தனிப்பட்ட சந்தர்ப்பங்களில் மட்டுமே சாத்தியமாகும் என்று மருத்துவர்கள் சொல்லுகின்றார்கள்.

ஏனெனில் நோய்கள் மற்றும் அவற்றின் காரணங்கள் பெரும்பாலும் தாமதமான கட்டத்தில் மட்டுமே அங்கீகரிக்கப்படுகின்றன. நோய் முத்தி முன்னேறும்போது, ​​நரம்பு சேதம் ஏற்படுகின்றது.

இறுதியில், இவை மூளை, முள்ளந்தண்டு வடம் மற்றும் உடலின் மற்ற பகுதிகளுக்கு இடையேயான தகவல் ஓட்டத்தை சீர்குலைக்கும். இது பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் வாழ்க்கைத் தரத்திற்கும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

பாலிநியூரோபதி நரம்பு நோய், PNPக்கான மொத்தம் சுமார் 600 வெவ்வேறு தூண்டுதல் காரணிகள் இருப்பதாக கணக்கிடப்படுகின்றன. இருப்பினும், கண்டறியப்பட்ட புகார்களில் பாதிக்கு மேல், வளர்சிதை மாற்ற நோய் (சர்க்கரை நோய்) மற்றும் நீண்டகால குடிப்பழக்கம்

ஆல்கஹால் துஷ்பிரயோகத்தின் நீண்டகால விளைவுகளின் விஷம். ஈயம் போன்ற கன உலோகங்கள் மற்றும் ஆர்சனிக் போன்ற நச்சு உலோகங்கள் மூலம் நச்சுத்தன்மையும் நரம்புகளைத் தாக்கி பாலிநியூரோபதியைத் தூண்டுகின்றது.

பாலிநியூரோபதி நரம்பு நோய்க்கு, நோய்த்தொற்றுகள், நீண்ட கால விற்றமின் குறைபாடுகள் (விற்றமின்B1 ) சில புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் விளைவாக PNP அடிக்கடி விவரிக்கப்படுகின்றது.

பாலிநியூரோபதி அறிகுறிகள் பற்றி பேசுகின்ற போது: பல்வேறு காரணங்களால், உடலில் உள்ள பல்வேறு நரம்புகளும் பாதிக்கப்பட்டு, அதற்கேற்ப வெவ்வேறு அறிகுறிகளை ஏற்படுத்துகின்றது. இந்த அறிகுறிகளில் சில நரம்பு செயலிழப்பால் ஏற்படுகின்றன, மற்றவை நரம்புகள் அதிகமாக செயல்படுவதால், அதி உந்துதல் மூளைக்கு தவறான சமிக்ஞைகளை அனுப்புவதால் ஏற்படுகின்றது.

PNP உள்ள அனைவரும் வலியை உணரமுடியும் என்று சொல்ல முடியாது. அதாவது பாதிக்கப்பட்டவரினால் எந்த வலியையும் உணரமுடியாது. தீமிதித்தல், அலகு, முதுகு குத்து காவடி, ஏன் விரல்கள் அறுந்து தொங்கினாலும் கூட உணரமுடியாது, கண்களினால் பார்த்தால் மட்டுமே தெரிந்து கொள்ளமுடியும். என்றாலும்,

அறிகுறிகள் சில சமயங்களில் மிகவும் பலவீனமடையலாம். உதாரணமாக, உணர்திறன் நரம்புகள் பாதிக்கப்பட்டால், அடிக்கடி உணர்வின்மை உணர்வு மற்றும் குளிர், வெப்பம் அல்லது அழுத்தம் ஆகியவற்றின் உணர்வை இழக்க செய்கின்றது.

அதே நேரத்தில், பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு நிலையற்ற நடை இருப்பதாகவும், அடிக்கடி விழுவதாகவும் கூறுகிறார்கள்.

குடிப்பழக்கத்தை குறைத்து, சர்க்கரை நோய்க்கு முறையாக மருத்துவம் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாது போனால் பிற்காலத்தில் PNP நோயினால் அவதிப்படுவீர்கள்.

பாதங்களில் உணர்வின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கமான மருத்துவ பாத பராமரிப்புக்கு அறிவுறுத்தப்படுகின்றார்கள். அடிக்கடி ஏற்படும் அழுத்தம் புண்கள் மற்றும் வீக்கங்களை இந்த வழியில் தடுக்க முடியும்.

பொதுவாக, PNP நோயாளிகள் சுத்தமான காற்றோட்டத்தில் நடப்பது, போதுமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு மற்றும் போதுமான திரவ, நீராகாரங்களை உட்கொள்ளல் ஆகியவற்றுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணை அற்புதமான ஒரு எண்ணை பல நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகின்றது. அதனால்தான் தமிழர்கள் வாழும் நிலங்கள் எல்லாம் தென்னை மரங்கள் நிறைந்து காணப்படுகின்றது.

வேறு எந்த எண்ணையிலும் இல்லாத தனிச்சிறப்பு தேங்காய் எண்ணைக்கு இருக்கின்றது இதில் கொழுப்பு அமிலங்களான லாரிக், கேப்ரிலிக் மற்றும் கேப்ரிக் அமிலம் மற்றும் பல்வேறு பாலிபினால்களின் உள்ளடக்கத்துடன் இந்த எண்ணையை மனிதர்களின் நலனுக்காக இயற்கையினால் நியாயப்படுத்தப்படுகின்றது. 

இந்த அமிலங்கள் உடலில், உள்ளுறுப்புகளில் ஏற்படும் வீக்கம், குடற்புண்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு கொண்டவைகள். ஒவ்வாமை, அரிப்பு, கண் எரிச்சல், மிகைப்படைந்த நோய் எதிர்ப்பு சக்தியை சாந்தப்படுத்தும் வல்லமை தேங்காய்; பால், எண்ணைக்கு உண்டு.

தேங்காய் எண்ணையில் கொலஸ்ட்ரால் கொழுப்பு அறவே இல்லை அதாவது பூச்சியம் இதனுடைய உருகு புள்ளி 23°C டிகிரி செல்சியஸ், சாதாரண மனித உடலின் வெப்பநிலை 37°C டிகிரி செல்சியஸ், இந்த கொழுப்பு அமிலங்கள் உடலில், இரத்தத்தில் ஒருபோதும் கெட்டிப்படாது, உடல் வெப்பத்தில் உருகுநிலை கொண்டது.

இது இரத்த கொழுப்பு அளவுகளில் நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பதாகவும், எடை இழப்புக்கும், *டிமென்ஷியா நோய் மற்றும் புற்றுநோயைத் தடுக்கவும் மற்றும் பாக்டீரியா, வைரஸ்கள், கொரோனா வைரஸ்கள், அம்மை, மற்றும் காளான்கள், பூஞ்சைகளைத் தடுக்கவும் இது உதவுகின்றது. 

*டிமென்ஷியா குறைபாடு என்பது அன்றாட வாழ்வில் தலையிடும் ஒரு கடுமையான மனத் திறன் குறைவு, நினைவாற்றல் இழப்பு கோளாறு இதற்கு எடுத்துக்காட்டாக அல்சைமர் நோயை குறிப்பிடலாம்.

சர்க்கரை நோயாளிகள் அதனை தொடர்து பரிணாமித்த PNP நோயாளிகள் தங்களுடைய அரிப்பு, எரிச்சல் போன்ற உடல் உபாதைகளை தீர்ப்பதற்கு தேங்காய் எண்ணையை பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணையில் 87 விழுக்காடுகள் (100கிராம் எண்ணையில் 87 கிராம்) நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் மற்றும் விற்றமின்-ஈ தவிர வேறு எந்த விற்றமின்கள், ஊட்டசத்துக்களை நாங்கள் பயன்படுத்தும் தேங்காய் எண்ணையில் எதிர்பார்க்க முடியாது.

தேங்காய் எண்ணெய் 100 கிராமுக்கு ஊட்டச்சத்து தகவல்கள்: கொழுப்பு உள்ளடக்கம், நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் 87 கிராம். 

கொலஸ்ட்ரால் கொழுப்பு 0 mg, சோடியம் 0 mg, கார்போஹைட்ரேட் 0 g, நார்ச்சத்து 0 g, சர்க்கரை 0 புரதம் 0 g, விற்றமின் C 0 mg, கால்சியம் 0 mg, இரும்பு 0 mg, விற்றமின் D 0 IU, விற்றமின் B6 0 mg, விற்றமின் B12. 0 µg, மெக்னீசியம் 0 mg . (எல்லாமே பூச்சியம், சுத்திகரிக்கப்பட்ட எண்ணையில் எதுவுமே இல்லை, ஆனால் விலை மதிப்புபிக்க கொழுப்பு அமிலங்களை மட்டும் கொண்டுள்ளது.

பொதுவாக இரண்டு விதமாக எண்ணைகள் தயாரிக்கப்படுகின்றது, ஒன்று சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மற்றது பூர்வீக கலாச்சார முறையில் தயாரிக்கப்படும் குளிர் அழுத்தப்பட்ட கரிம தேங்காய் எண்ணெய்.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்: தேங்காயிலுள்ள பெரும்பாலான ஊட்டச்சத்துக்களை எண்ணை தயாரிப்பின் போது ஏற்படும் சூட்டில் இழந்துவிடுகின்றது. அதனால் இது சுவை மணம் இல்லாது நடு நிலையானது. இந்த எண்ணையை உணவுகளை சமைக்க, வறுக்க பயன்படுத்துங்கள் இது அதிக சூட்டை தாங்க கூடிய, வெப்ப எதிர்ப்பு திறன் கொண்டது.

குளிர் அழுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய்: பூர்வீக, குளிர் அழுத்தப்பட்ட கரிம தேங்காய் எண்ணெய் உற்பத்தி செயல்முறையின் போது மெதுவாக தயாரிக்கப்படுகின்றது, அதனால் அது இன்னும் பல மதிப்புமிக்க ஆன்டி- ஒக்ஸிடன்ட்கள், ஒட்சிசன் ஏற்ற தடுப்பு விற்றமின்கள்,

கனிமசத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களையும் விலை மதிப்புபிக்க கொழுப்பு அமிலங்களையும் பக்குவமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த எண்ணையை அதிகமாக சூடு ஏற்றினால் அதிலுள்ள ஊட்டசத்துகளை இழந்து விடுகின்றது இதை அப்படியே பயன்படுத்துங்கள். (இது மற்ற எண்ணை தயாரிப்புகளுக்கும் பொருந்தும்)

இது அதன் நல்ல மற்றும் மதிப்புமிக்க பண்புகளையும் கொண்டுள்ளது உங்கள் உறக்கத்தை கெடுக்கும் எரிச்சல், அழற்சி போன்ற உடல் உபாதைகளை போக்குவதற்கு குளிர் அழுத்தப்பட்ட தேங்காய் எண்ணெயை வாங்கி பயன்படுத்துங்கள்.

சருமத்தில் தேய்ப்பது மற்றும் வாரத்தில் ஒரு முறை பழம்/இலை சாலட், தயிரில், ஒரு தேக்கரண்டி எண்ணையை கலந்து சாப்பிடுங்கள் சிறிது காலத்தில் நல்ல பலனை எதிர்பார்ப்பீர்கள். தேங்காய் சாப்பிட்டவனை விஷம் வைத்துக்கூட கொல்லமுடியாது அது விஷ முறிப்பு தன்மை கொண்டது.

இருப்பினும் தேங்காய் எண்ணையின் நீண்டகால பயன்பாடு அல்லது தினமும் பயன்படுத்துவது எதிர்காலத்தில் ஆபத்தான ஒரு காரணியாக மாறக்கூடும். இதில் சொல்லப்பட்ட பரிந்துரைகள் ஏற்கனவே மருத்துவ கண்காணிப்பில் உள்ளவர்கள், இதயம் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விலக்கானது, அவர்களின் பயன்பாட்டிற்கு மருத்துவரின் ஆலோசனை அவசியமானது. மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நான் பொறுப்பாளியானவன் அல்ல,  

அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் (ALS) என்பது நரம்பு மண்டலத்தின் குணப்படுத்த முடியாத, தீவிரமான நோயாகும்பெருகிய முறையில், மோட்டார் நரம்பு செல்கள் (மோட்டார் நியூரான்கள்) சேதமடைகின்றன - இயக்கம், கட்டுப்பாடு அசைவு  அதாவது தசைகளை இயக்குவதற்கும்   இயக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் அசைவதற்கும் பொறுப்பான நரம்பு செல்கள்.

பாலிநியூரோபதியா? உங்கள் நரம்புகளை இழக்காதீர்கள்உங்களுக்கு  தெரியாமலே தினமும் ஒவ்வொரு நரம்புகளாக சிதைந்து கொண்டே போகும். சர்க்கரைநோயாளிகளே  மதுவை விட்டு, முறையாக மருத்துவம் எடுத்துக்கொள்ளுங்கள்விற்றமின்-B1,விற்றமின்-B12, ஒமேகா 6 நிறைந்த உணவுகளை  தேர்வு செய்யுங்கள்.

நரம்பிணைப்பி (ஸ்னாப்சே) ; ஒரு நரம்பு அல்லது உணர்திறன் செல் மற்றும் மற்றொரு நரம்பு செல் அல்லது தசை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு தூண்டுதல்களை கடத்த உதவுகின்றது





சனி, 9 ஜூலை, 2022

Nail Fungus: (Onychomycosis)

நக பூஞ்சை: (ஓனிகோ மைகோசிஸ் ) கால்-விரல்-நக பூஞ்சைகள் இரத்தத்தை நச்சு ஊறச்செய்கின்றது மற்றும் நெக்ரோசிஸை ஏற்படுத்துகின்றது. கால் அல்லது கால் விரல்களில் உள்ள இரத்த சுற்றோட்ட பிரச்சனைகள் திசுக்களின் அழிவுக்கும் இறப்புக்கும் (நெக்ரோசிஸ்) நக பூஞ்சை வழிவகுக்கலாம்.

பூஞ்சைகள் சர்க்கரை உண்ணிகள், உணவை தேடி எல்லா இடத்திலும் பரவக்கூடியது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், கால் விரல்கள் மேல் அதி கவனம் அக்கறை உள்ளவர்களாக எப்போதும் இருக்கவேண்டும்.

விரல் நக பூஞ்சைகள்  இரத்த ஓட்டம் மற்றும் நுரையீரல் கணையம் இதயம் வரை பல உள் உறுப்புகளில் நுழைகின்றன, அங்கு அவை இரத்த விஷத்தை உண்டாக்கி உடலை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கின்றது.

நக பூஞ்சை, கால் விரல் நகங்களை மட்டும் பாதிப்பதில்லை, அது கால் வழியாக இரத்த ஓட்டத்தில் நுழைந்து உடல் முழுவதும் பரவுகின்றது. பூஞ்சை நம் உடலை உள்ளே இருந்து அழித்து அனைத்து உறுப்புகளிலும் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.

சிறிய வித்திகள் உட்புற உறுப்புகளுடன் இணைகின்றன மற்றும் அவைகள் தங்களை பெருக்கி, சேதத்தை ஏற்படுத்துகின்றது. காலப்போக்கில் உட்புற உறுப்புகளும் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுகின்றன.

இதன் பொருள் உடல் உள்ளே இருந்து அழுகி போகின்றது. இது காலப்போக்கில், இதய செயலிழப்பு, மூளையில் இரத்த நாளம் கூட  வெடிக்கலாம் மற்றும் கல்லீரல் புற்றுநோய். சிறுநீரக செயலிழப்புக்கும் சாத்தியமாகும்.

நக பூஞ்சையால் பாதிக்கப்பட்ட எவரும் ஆபத்தில் உள்ளனர். அடிக்கடி ஏற்படும் சளியால் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமடைகின்றது. நக பூஞ்சை நுரையீரல் பாதிப்பு மார்புசளி, இருமலுக்கும் காரணியாகின்றது.

மற்றும் மன அழுத்தம், உங்கள் இயல்பில் ஒரு மாற்றத்தை செய்கின்றது, இது திடீர் மரணத்திற்கு வழிவகுக்கும். கொரோனா மட்டும்தான் நுரையீரல் கோளாறுகளை ஏற்படுத்தும் என்று எந்த வரையறை வரம்பும் கிடையாது நக பூஞ்சை கூட சுவாசப்பிரச்சனைகளை ஏற்படுத்தி மரணம் வரை இழுத்துச்செல்லும்.

2019 இல் ஈஸ்ட் பூஞ்சை தொற்று காரணமாக நிறைய பேர்கள், சுமார் 2,00,000 நோயாளிகளுக்கு மேல்  இறந்தார்கள் என்று  மருத்துவ  ஆய்வுக்கட்டுரை ஒன்று சொல்கின்றது. அவர்களின் மரணம் குறித்து ஆய்வு செய்த மருத்துவர் அவர்களின் கால் நகங்களில் தடயங்களை விட்டு சென்றிருக்கின்றது. அதாவது கால்கள் நக பூஞ்சையால் பற்றியிருந்தது தெரிய வந்திருக்கின்றது.

ஈஸ்ட்கள் அல்லது ஈஸ்ட் பூஞ்சைகள் ஒரு செல்லுலார் பூஞ்சைகள், அவை வளரும், படரும் தன்மை கொண்டது. பாண், தோசை, பீஸ்ஸா மற்றும் பீர் தயாரிப்பில் புளிக்கவைக்க பயன்படுத்தப்படுகின்றது.

இந்த பூஞ்சைகள் உணவின் மூலம் உடலில் புகுந்து இருமல் சளி, ஒவ்வாமை,சுவாசக்கோளாறுகள் போன்ற பல வகை சுகாதார பிரச்சனைகளுக்கு அடித்தள காரணியாக இருக்கின்றது. பூஞ்சைகள் உங்களுக்கு தெரியாமல் உங்கள் உடலை பலவீனப்படுத்திக் கொண்டே இருக்கும். இந்த உணவுகளை குறித்து எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்.

ஒரு செல்லுலார் அல்லது இழை பூஞ்சை என்று அழைக்கப்படுகின்ற, நக பூஞ்சை தொற்றுக்கான காரணங்கள்; பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நக  பூஞ்சைக்கு பின்னால் மிகவும் அரிதாக  கரும் பூஞ்சை அல்லது ஈஸ்ட் பூஞ்சையினால் பாதிக்கப்படுவதற்கு வெவ்வேறு வழிகள் உள்ளன.

இந்த காளான்கள் குறிப்பாக பாதங்களில் குதிக்கால்களில்  நன்றாக பெருகி வளரும். இங்குதான் அவர்கள் உகந்த வாழ்க்கை நிலைமைகளைக் காண்கிறார்கள் சூடான, ஈரப்பதமான காலநிலை. நாம் அடிக்கடி பூஞ்சை வித்திகளால் ஒருவருக்கொருவர் பாதிக்கிறோம்.

திருவிழா காலங்களில் காலணிகள் இல்லாது இருப்பது மற்றவர்களின் காலணிகளை அணிவது,நீச்சல் குளத்தில் அல்லது உடை மாற்றும் அறைகளில், நம் சக மனிதர்களின் எண்ணற்ற சிறிய தோல் செல்கள் தரைகளில் துழாவுகின்றன.

பூஞ்சை வித்திகள் பெரும்பாலும் வாரக்கணக்கில் உயிர் வாழ்கின்றன, பித்த வெடிப்பு செதில்கள் நமது நகங்களில் அல்லது கால்விரல்களுக்கு இடையில் வந்தால், நாம் பூஞ்சைகளால் பாதிக்கப்படலாம்.

குறிப்பாக முதியவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் போன்ற நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமடைந்தவர்கள்  ஆபத்தில் உள்ளனர். நீரிழிவு நோயாளிகள் பொதுவாக பலவீனமான பாதுகாப்பைக் கொண்டுள்ளனர் மற்றும் பெரும்பாலும் அவர்களின் கால்களில் இரத்த ஓட்டம் மற்றும் உணர்ச்சி, உணர்வுக் கோளாறுகள் உள்ளவர்கள்

எனவே, அவர்கள் தங்கள் காலில் ஒரு காயம், பித்த வெடிப்பு இருப்பதை கூட அவர்களினால் அடிக்கடி கவனிக்க முடிவதில்லை, இதன் மூலம் பூஞ்சை  இந்த இடங்களை குறிபார்த்து எளிதில் ஊடுருவ முடியும்

மற்றொரு ஆபத்து காரணி, உறுதியான காற்று புகாத காலணிகளை அடிக்கடி அணிவது. காலணிகளில் வியர்வை ஈரப்பதம் குவிந்தால், பாதங்கள் சிறிது மென்மையாகி, பூஞ்சைகளுக்கு நுழைவு வாயிலாக மற்றும் அதே நேரத்தில் உகந்த வாழ்க்கை நிலைமைகளை இந்த வெப்பமான ஈரப்பதம் வழங்குகின்றது. கால்களை சுத்தம் செய்து ஈரப்பதம் இல்லாது வைத்துக்கொள்ளுங்கள்.

கேண்டிடா ஆரிஸ் என்று அழைக்கப்படும் ஈஸ்ட் பூஞ்சைகள். காது வழி மற்றும் சுவாசப்பாதைகளை காலனித்துவப்படுத்துகின்றது, அங்கு குடியமர்ந்து கொண்டு தீராத இருமல், சளி போன்ற சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்.   

இது உள்ளூற இரத்தத்தில் அல்லது காயங்களில் கலந்து கடுமையான தொற்றுநோய்களை ஏற்படுத்துகின்றது. பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு, நீரிழிவு நோயாளிகள் மற்றும் குறைமாத குழந்தைகளுக்கு பூஞ்சை ஒரு கொடிய ஆபத்தான நோய்க் காரணியாக இருக்கின்றது. 

சாராம்சம்:  கரும் பூஞ்சைஈஸ்ட் பூஞ்சை தொற்றின் விளைவுகள்: நகங்களில் அவை மஞ்சள் நிறமாக மாறி, நுண்துளைகளாகவும், உரிக்கக்கூடியதாகவும் உதிரும் வெள்ளை பவுடர் போல் மாறும். பூஞ்சை தொற்று நிச்சயமாக ஒரு மருத்துவரால் சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.