வெள்ளி, 13 செப்டம்பர், 2024

Why did language appear? Why is it popular among humans? Searching for clues to the creator...

மொழி ஏன் தோன்றியது? ஏன் மனிதர்களில் அது பிரபலமானது ?  படைப்பாளியின் தடயங்களை தேடி...... கையில் இருப்பதை வைத்து இல்லாத ஒன்றை தேடுதல்,  மனிதன் என்ற இறுதி தயாரிப்பை வைத்து இன்னும் அறியப்படாத, கடவுள் என்ற படைப்பாளியை தேடுதல்.

முதலில் மொழி என்பது ஒலி. இந்த ஒலி அமைப்பு சக உயிரினத்துடன் தொடர்பை வைத்துக்கொள்ளவே உருவானது.

மொழி போன்ற சிக்கலான ஒன்று மனிதர்களிடம் மட்டுமே உள்ளது என்பது தவறு, மற்றய உயிரினங்களும் சக உயிரினத்துடன் தொடர்பை வைத்துக்கொள்ள ஏதோ ஒரு ஒலியை எழுப்புகின்றனர்.

இருப்பினும் மனிதர்களால் ஏன் மொழியை வளர்க்க முடிந்தது? மொழி என்பது தொடர்பு மற்றும் சமூகப் பரிமாற்றத்திற்கான ஒரு தனித்துவமான கருவியாகும் . மேலும் இதுபோன்ற சிக்கலான நடத்தையை மனிதர்கள் மட்டுமே கற்றுக்கொண்டதாகத் தெரிகின்றது.

பிற உயிரினங்கள் ஏன் மொழியைக் கண்டுபிடிக்கவில்லை? துல்லியமாக மனிதர்கள் ஏன் மொழியில் தேர்ச்சி பெறுகிறார்கள்? அவர் குறிப்பாக புத்திசாலி மற்றும் ஒரு அதிநவீன பேச்சு கருவியைக் கொண்டிருப்பதாலா?

இது உண்மையில் அப்படி இல்லை, பசாவ் பல்கலைக்கழகத்தில் பன்மொழி கணக்கீட்டு மொழியியல் உதவி பேராசிரியரான கிறிஸ்டியன் பென்ட்ஸ் விளக்குகிறார்: "கிப்பன் குரங்குகள் காலையில் பாடும் பாடல்களும் உள்ளன. அவைகள் அந்த பாடலை தேவைக்கேற்ப மாற்றியமைத்து பாடக்கூடியவை.

மேலும் இவை சமூக தகவல்தொடர்புடன் ஏதோவொரு தொடர்பு கொண்டவை. எனவே, சிம்பன்சிகளுடன் நமது கடைசி பொதுவான மூதாதையர்கள் இதே போன்ற பாடல்களைக் கொண்டிருந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அதாவது எங்களுடைய மூதாதையர்கள் பாடல்களை பாடும் திறன் உள்ளவர்களாக இருந்திருக்கின்றார்கள்.

கிப்பன்ஸின் ஒலிகள் எதிரிகளை எச்சரிக்கின்றன: கிப்பன்கள் பாம்புகள், சிறுத்தைகள் மற்றும் வேட்டையாடும் பறவைகள் போன்றவற்றுக்கு ஒலி எழுப்புகின்றன. பாம்பு சத்தம் கேட்டால், குரங்குகள் எழுந்து சுற்றிப் பார்க்கின்றன;

சிறுத்தைகளின் சத்தத்தில் அவை மரங்களில் ஏறுகின்றன; வேட்டையாடும் பறவை ஒலி எழுப்பும்போது, ​​மற்ற கிப்பன்கள் மேலே பார்க்கின்றன. இது மக்கள் உயிர்வாழ உதவுவதை நீங்கள் கற்பனை செய்யக்கூடிய ஒரு அமைப்பு" மற்றும் அதனால்தான் மொழி நிறுவப்பட்டது .

ஆபத்து, எச்சரிக்கை ஒலியை சகல உயிரினங்களும் ஒரே மாதிரியாக புரிந்து கொள்கின்றன. அந்த எச்சரிக்கை ஒலியை எந்த விலங்கு எழுப்பியது என்ற பேதம் கிடையாது.  அந்த எச்சரிக்கை ஒலி பொதுவாக உள்ளது.

எடுத்துக்காட்டாக: கிராமத்தில் ஆடு மாடு வளர்ப்பவர்களுக்கு தெரியும் . ஆடு கத்தும் போது "இது சினை காலம்" அதுதான் கத்துகிறது என்பார்கள். அந்த பண்ணையாளர்களுக்கு நன்றாகவே தெரியும் ஒரு வளர்ப்பு விலங்கின் தேவை என்ன என்று அதை புரிந்து கொள்கின்றார்கள் அதற்கு பெயர்தான் மொழி பரிமாற்றம்.

மொழி(ஒலி) தேவை கருதி உருவாக்கப்பட்டது. அது சகல உயிரினங்களில், மனிதர்கள் உட்பட தோன்றிய காலத்திலிருந்தே இருந்தது. எழுத்தறிவு பிற்காலத்தில் வளர்ச்சி பெற்றிருந்தாலும். பேச்சு என்பது ஆதியானது. அது தேவை கருதி ஆரம்பத்திலிருந்தே ஒருங்கிணைக்கப்பட்டது.

மிக நீண்ட காலத்திற்கு முன்பே மக்கள் நெருப்பை உருவாக்கக் கற்றுக்கொண்டனர். 500,000 ஆண்டுகளுக்கு முன்பு அப்படித்தான் இருந்திருக்கலாம். நீங்களே நெருப்பை உருவாக்குவது ஒரு அற்புதமான திறமை என்கிறார் ஹாஸ்பெல்மாத்.

இந்த மக்கள் தற்செயலாக நெருப்பைக் கண்டுபிடிக்கவில்லை, மாறாக அவர்கள் அதை மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொண்டனர்.அறிவுள்ள ஒருவர் அதை கற்றுக்கொடுத்தார். மேலும் இந்த அறிவைப் மொழி(ஒலி) மூலம் பெற்றனர்.

மனிதன் எப்போது பேச கற்றுக்கொண்டான்?  ஹோமோ எரெக்டஸ் ஏற்கனவே குறைந்தபட்சம் உடற்கூறியல் ரீதியாக வெளிப்படையான ஒலிகளை உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கலாம். 1.5 மில்லியன் முதல் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு மனித மொழித் திறன் வளர்ந்ததாக மொழியியலாளர்கள் நம்புகின்றனர்.

ஆரம்பத்தில் தன்னை சார்ந்தவர்களையும் எதிரிகளை எச்சரிக்கவும், ஜோடிகளுக்கு அழைப்பு குரல் கொடுக்கவும், குழந்தைகளை பாதுகாப்பு செய்யவும் மற்றும் ஒன்றிணைந்து உணவு தேடுதல் வேட்டையாடவும் மொழி(ஒலி எழுப்புதல்) பயன்பாட்டில் இருந்தது. 

மொழி அறிவின் இந்த பரிமாற்றத்திற்கு படைப்பாளியின் சித்தாந்தம் ஒரு காரணம் .குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடி கட்டுதல் யார் கற்றுக்கொடுத்தார்.இந்த அறிவை எங்கிருந்து பெற்றார்கள்..?... 500,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே  அறிவுள்ள ஒருவரிடமிருந்து பாடநெறி பெற்றிருக்கின்றான்.  

படைப்பாளியின் தடயங்களை தேடி......

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக