வியாழன், 28 மார்ச், 2024

Activity in the body: After 6-7 hours of infection, the body first feels shivery and cold, the brain starts warming the body from the outside by wrapping the patient in a blanket.

நோயெதிர்ப்பியல்  சமீபத்திய ஒரு நிகழ்வு, குறிப்பாக சொல்வதானால் இரண்டு கிழமைகளுக்கு முன்பு, உடல் சற்று உஷ்ணமாகவும் மூக்கில் நீர் வடிதல் தும்மல் இருமல் சளி போன்ற உடல் உபாதைகளுக்கு உட்பட்டிருந்தேன். அட இப்பதானே இளவேனிற் காலமாச்சே அதிகமாக ஹேசல்நட், பிர்ச். மரங்களின் மகரந்தங்கள் பறக்க தொடங்கி இருக்கின்றது.

இது மகரந்த ஒவ்வாமையின் எதிர் வினைவாக கூட இருக்கலாம். ஆனால் மகரந்த ஒவ்வாமைக்கு காய்ச்சல் இருக்காது,கூடவே கண் அரிப்பு வேற இருக்கும்இது கண்டிப்பாக ஏதோ ஒரு வைரஸ், அடினோ வைரஸ் அல்லது காய்ச்சல் வைரஸ் இன்புளுவன்சா தொற்றின் எதிர் விளைவு என்று புரிந்து கொண்டேன்.

என்னுடைய முதல் நடவடிக்கையில் ஒன்றாக ஸ்வெட்டர், சாக்ஸ் அணிந்து கொண்டு என்னை முற்றிலுமாக போர்வையால் போர்த்திக் கொண்டு அமைதியானேன். என்னடா  காய்ச்சல் என்றால் எல்லாரும் மருத்துவரை பார்க்கச் செல்வார்கள் இவன் வீட்டில் இருக்கிறானே சற்று வித்தியாசமாக இருக்கேன் இல்லையா. அன்று இரவு உடல் வியர்த்து காய்ச்சல் குறைய தொடங்கியது சரி இருக்கட்டும்.

நோய் எதிர்ப்பு சக்திக்கு ஒரு சந்தர்ப்பத்தை நாங்கள் வழங்க வேண்டும் அதற்காகத்தான் அது உருவாக்கப்பட்டிருக்கின்றது. எங்களுடைய வசதிக்காக உடல் உபாதைகளிலிருந்து தப்பிப்பதற்காக மருந்து மாத்திரைகளை முழுங்கி அதை நோஞ்சான் ஆக்கி விடுகின்றோம். காலப்போக்கிலே அது பைத்தியக்கார வேலைகளை பார்க்க தொடங்கும். உடலின் சொந்த திசுக்களை தாக்கி அழிக்கும் வேலையில் இறங்கிவிடும்

காய்ச்சல். தும்மல் சளி இருமல் போன்ற உடல் உபாதைகள் ஒரு நோயா. அல்லது குணப்படுத்தும் செயல் முறையா..?!

காய்ச்சல் ஏற்படும்போது நமது உடலில் என்ன நடவடிக்கைகள் முடிக்கி விடப்படுகின்றன. உண்மையில் காய்ச்சல் ஏற்படும் போது நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று பொருள்படும் உங்களது நோய் எதிர்ப்பு சக்தி, அந்நிய ஊடுருவல்களை எதிர்த்துப் போராட தொடங்கி இருக்கின்றது. அப்ப நீங்க ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று தான் பொருள்.

அடினோவைரஸின் தொற்றின் அறிகுறிகள்; இருமல், மூக்கடைப்பு மூக்கில் நீர் வடிதல், தொண்டை புண் மற்றும் கர்ப்பப்பை வாய் நிணநீர் கணுக்கள் வீக்கம். அடினோவைரஸ் தொற்று ஆபத்தானது அல்ல இது போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

இன்ஃப்ளூயன்ஸா [காய்ச்சல்] என்பது காய்ச்சல் வைரஸ்களில் ஒன்றான நுரையீரல் மற்றும் சுவாசக் குழாயின் வைரஸ் தொற்று ஆகும். இது காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை புண், இருமல், தலைவலி மற்றும் தசை வலி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கண்டிப்பாக மருத்துவரின் கண்காணிப்பு அவசியம். மற்றும் வருடாந்த தடுப்பூசி எடுத்துக் கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. தடுப்பூசி இந்த வைரசுக்கு எதிரான சிறந்த தடுப்பாகும்.

இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் ஆர்த்தோமிக்சோவிரிடே [RNA வைரஸ்கள்] குடும்பத்தைச் சேர்ந்தவை மற்றும் இவைகள் தங்களை தக்க வைத்துக் கொள்ள புதுப்புது வடிவங்கள் எடுத்துக் கொள்கின்றன. இன்ஃப்ளூயன்ஸா உண்மையான காய்ச்சல் நோயை ஏற்படுத்துகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தியின் முதல் நடவடிக்கைகளில்  ஒன்றான அதிகமாகும் அன்னிய ஊடர்களை தடுப்பதற்காக  தும்மல் மூக்கில் நீர் வடிதல் சளி போன்ற நடவடிக்கைகளை முடிக்கி விடுகின்றது.

நோயெதிர்ப்பு அமைப்பு எலும்பு மஜ்ஜை, தைமஸ், மண்ணீரல், டான்சில்ஸ், நிணநீர் கணுக்கள் மற்றும் சிறப்பு வெள்ளை இரத்த அணுக்கள் போன்ற உறுப்புகளை உள்ளடக்கியதுநோயெதிர்ப்பு மண்டலத்தின் இந்த செல்கள் லுகோசைட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன மற்றும் கிரானுலோசைட்டுகள், மேக்ரோபேஜ்கள் மற்றும் இயற்கை கொலையாளி செல்கள் [NK செல்கள்] போன்ற பல்வேறு செல் வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

டென்ட்ரிடிக் செல்கள் அவற்றின் சுற்றுச்சூழலை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஒரு முக்கிய செயல்பாட்டை நிறைவேற்றுகின்றனஅந்நிய ஊடுருவல்களை அனலைஸ்[பகுப்பாய்வு] பண்ணுகின்றது. இவன் ஏற்கனவே தெரிந்த குற்றவாளியா அல்லது புது குற்றவாளியா இதற்கான காலதாமதத்தை நோய் எதிர்ப்பு சத்தி எடுத்துக் கொள்கின்றது.

இந்த இடத்தில் தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பு சக்தியின் காலதாமதத்தை சுருக்கி கொடுக்கின்றது. அதாவது உடனடியாக ஆன்ட்டி உடல்களை தயாரிப்பதற்கான அடையாள ஆதாரத்தை நினைவகச் செல்களில் இருந்து பெற்றுக் கொள்கின்றன.

காய்ச்சல்: மனித உடலின்  சாதாரண வெப்பநிலை 37  ° C உடற்பயிற்சி, நீராடுதல் அல்லது உறக்கத்தின் போது  உடலின் வெப்பநிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் C 36.5 ° C - 37.4 ° C இது இயல்பானது.

உடல் 37  °C வெப்பநிலையில் தனது அன்றாட பணிகளை செய்கின்றது, மூளை, இதயம் மற்றும் செரிமான இயக்கங்கள் இந்த வெப்பநிலையில் நன்றாகவே செயல்படும் மற்றும் உடல் தனது திருத்த வேலைகளை முடுக்கி விடும் போது மட்டுமே உடலின் வெப்ப நிலை சற்று உயர்ந்து சூடாக இருக்கும் இது காய்ச்சல் அல்ல,  உஷ்ணம் இதுவும் இயல்பானது. இந்த  அடிப்படை வெப்பநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டால் உணவு ஜீரணமாகாது, மூளை சரியாக இயங்காது ( சிந்திப்பதில் தடுமாற்றம் ) இந்த பணியை முன்நின்று நடத்துவது மூளையின் நடுவில் இருக்கும் ஹைப்போதலாமஸ்.

இந்த இயல்பு நிலையை நோய்கிருமிகள் தொற்றி  குழப்பி விடுகின்றது, காரணம் நோய் எதிர்ப்பு அமைப்பு, குறிப்பாக  ஆன்டிபாடிகளின் பெருக்கத்திற்கு 39. ° C வெப்பநிலை அவசியமானது இது காய்ச்சல் என்ற நிலைப்பாட்டிற்குள்ளே வருகின்றது.

உடலில் செயல்பாடு: நோய்கிருமிகள் தொற்றி  6-7 மணித்தியாலங்கள் கடந்து முதலில் உடல் கூதல், காய்ச்சற்குளிர் உணர்வை  ஏற்படுத்தி நோயாளியை  போர்வையை போர்த்திக்க வைத்து உடலை வெளியிலிருந்தே சூடேற்ற  தொடங்குகின்றது மூளை,

வெப்பநிலை  39. ° C  அடைந்ததும் நோய்கிருமிகளை எதிர்த்து போராடி அழிக்கின்றது. இது ஓரிரு தினங்களில் முடிவடைந்து விடும், அல்லது உடல் 39-40 °C வெப்பநிலையை தாண்டி போயிருந்தால்  உடல் வெப்பநிலையை குறைக்க மருத்துவர், மருத்துவ உதவிகளை நாடவும். காய்ச்சல் ஒரு நோய் அல்ல, அது உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றதொரு பணிப்பாளன்.

உண்மையை சொன்னால்: நோயாளி தன்னுடைய காய்ச்சலை குறைப்பதற்காக போர்வையை போர்த்திக் கொள்ளவில்லை மாறாக, உடலின் வெப்பநிலையை ஏற்றுவதற்காகத்தான் போர்த்திக் கொள்கின்றான்.

குழந்தைக்கு பல்லு முளைக்கும் போது, உடலின் வெப்பநிலை மாற்றம், தொற்று நோய் காரணி போல் காய்ச்சல் ஒரு காட்டு காட்டும் இந்த காலத்தில் பசியின்மை இருந்தும் உணவைத்திணித்தாலும்  உணவு ஜீரணமாகாது வெளியில் துப்பும் அல்லது வாந்தி, வயிற்று போக்கு மாறி மாறி வந்து கொண்டே இருக்கும் உண்மையில் இது தொற்று நோயும் அல்ல வந்ததும் காய்ச்சலும் அல்ல, உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தினால் ஏற்படும் ஒரு உஷ்ணம் தான் இது.

காய்ச்சலைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்? குழந்தைக்கு வெப்பநிலை அதிகமானால் குறைப்பதற்கு வெப்பத்தணிப்பு குதவழி-குளிகை செருகி வைத்தல் மற்றும் வெது வெதுப்பான சூடான ஈரமான பாதி உலர்ந்த துணியை கை, கால்களில் போர்த்தி காய்ச்சலைக் குறைக்கலாம் மற்றும் மருத்துவரின் ஆலோசனையை பெறவும். 

Dendritic cells [டென்ட்ரிடிக் செல்கள்] [DC] நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். மோனோசைட்டுகள், பி லிம்போசைட்டுகள் மற்றும் மேக்ரோபேஜ்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து , அவை பாதுகாப்பு அமைப்பில் உள்ள ஆன்டிஜென் வழங்கும் செல்கள் ஆகும்.டென்ட்ரிடிக் செல்கள் மனித உடலில் உள்ள அனைத்து புற திசு வகைகளிலும் உள்ளன.

நோய்க்கிருமிகளுக்கு எதிரான பாதுகாப்பின் ஒரு பகுதியாக டென்ட்ரிடிக் செல்கள் செண்டினல் செயல்பாட்டை நிறைவேற்றுகின்றன. அவர்கள் தங்கள் சுற்றுப்புறத்தை தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். இந்த செல்கள் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் புற்றுநோய் கூட வராது. அது மட்டும் இல்லை அவையின் செயல்பாடுகள் இன்னும் அறியப்படாதவைகள், இரத்தத்தில் உள்ள நானோ பிளாஸ்டிக்கை கூட முழுங்கி விடும் ஆற்றல் உள்ளது. புற திசுக்களில் முதிர்ச்சியடையாத டென்ட்ரைட்டுகள் நட்சத்திர வடிவிலானவை.

குரோமோசோம் 6

குரோமோசோம் 6; என்பது மனிதர்களில் மொத்தம் 23 நிறமூர்த்த கணுக்களின் இதுவும் ஒன்றாகும். பெரும்பாலான செல்களில் குரோமோசோம் 6, ஜோடிகளாக (டிப்ளோயிட் குரோமோசோம் செட்) கொண்டு கட்டமைக்கப்

http://mahesva.blogspot.de/2018/04/h-uman-l-eukocyte-ntigen-hla-molekule.html

மேலும் வாசிக்க இதில் கிளிக் செய்யவும்.

 

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக