புதன், 22 நவம்பர், 2023

Diabetes and Pancreas; Pancreas and the coronavirus SARS-CoV-2;

 சர்க்கரை நோயும் கணையமும்; கணையமும் கொரோனா வைரஸ் SARS-CoV-2; சர்க்கரை நோய்க்கு சக்கரையை குறைத்தால் சரியாக போய்விடும் என்று சர்க்கரை நோயாளிகளில் பல பேர் நினைக்கிறார்கள். எனக்கு சக்கரை 300 தாண்டி ஓடிக் கொண்டிருந்தது இப்போது சரி பாதியாக குறைந்துவிட்டது நான் குணமாகிவிட்டேன் என்றும் கூட நினைக்கிறார்கள்.

அவர்களுக்கு தெரிவதில்லை சர்க்கரையை  உடல் பயன்படுத்த முடியாமல்,  அதிகரித்த  சக்கரையை உடல் சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது என்று. இதனால் இரத்த சர்க்கரை குறைவு ஏற்படும். இது ஆபத்தானது  ஏனென்றால் ஒரு காலகட்டத்திற்கு மேல்  சக்கரைநோயாளியின் உடல், சர்க்கரையை மட்டுமின்றி அல்புமின் புரதங்களையும் சேர்த்து வெளியேற்றுகின்றது.

24 க்கு 30 முதல் 300 மி.கி வரை சிறுநீரில் அல்புமின் வெளியேற்றம் மைக்ரோஅல்புமினுரியா என்று அழைக்கப்படுகின்றது மற்றும் நீரிழிவு நோயில் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதைக் குறிக்கின்றது.  300 mg/24 h க்கு மேலான மதிப்புகள் மேக்ரோஅல்புமினூர் அல்லது அதற்கு இணையாக புரோட்டினூரியா என்று அழைக்கப்படுகின்றன. இது கடுமையான சிறுநீரக பாதிப்புக்கான அறிகுறியாகும்.

சக்கரை நோய் ஒரு வளர்ச்சிதை மாற்றக் கோளாறு அது குறைந்தது 15 முதல் 20 வருடங்களுக்கு முன்னால் இருந்தே அதனுடைய குறைபாடு ஆரம்பிக்க தொடங்குகின்றது.  இந்த வளர்ச்சிதை மாற்ற குறைபாட்டின் ஒரு வெளிப்பாடு தான் இரத்த சர்க்கரை உயர்வு.

சக்கரை நோய்க்கு கணையம் மட்டும் காரணம் கிடையாது. அதனுடைய தொடக்கப்புள்ளி சீரற்ற உணவு, வறுமை பட்டினி, பெருந்தீனி ஒழுங்கற்ற வாழ்க்கை உடல் பருமன் தொப்பை கொழுப்பு கல்லீரல் தொடங்கி பழுதுபட்ட உடல் திசுக்கள் இன்சுலின் முறிவு, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வைரஸ் தொற்று, தலைமைச் சுரப்பி பிட்யூட்டரி சுரப்பி வரைக்கும் அதனுடைய பாதிப்பின் தாக்கங்கள் காரணிகளாக இருக்கின்றன.

ஒரு சில சக்கரை நோயாளிகளுக்கு கணையம் சீராக இயங்கும் மற்றும் குறை இல்லாமல் இன்சுலின் சுரக்கின்றது. இருந்தும் அந்த இன்சுலினை  உடல் திசுக்கள் பயன்படுத்த முடியாமல் முறிந்து போகின்றது. இந்த காலகட்டத்தில் கணையம் அதிகமாக  இன்சுலினை சுரந்து முடிவில் களைப்புற்று ஓய்ந்து போகின்றது.

கணையம்: கணையம் பல செயற்பாடுகளை கொண்டது . அதனுடைய செயல்பாடு குறித்து ஒரு 30 வீதம் தான் அறியப்பட்டிருக்கின்றது உடலில் கட்டிகள், புற்றுநோய்  வராமல் தடுக்கும் திறன் கொண்டது மற்றும் புண்களை ஆற்றும் திறன் கொண்டது. குடலில்  பாலிப் கட்டிகள் புற்றுநோய் செல்கள் பெருங்குடல் புற்றுநோய் குடல் பாலிப்பிலிருந்து உருவாகின்றது. 

கணையமும் மற்றைய உள் உறுப்புகள் போல் அவ்வளவு முக்கியமானது. கணையம் தொடர்ந்து அதிகமாக இன்சுலினை சுரந்து முடிவில் களைப்புற்று போகின்றது. இதன் நிமித்தம் மற்றைய பணிகள் கூட பாதிக்கப்படுகின்றது. கணையத்தை காப்பாற்ற முறையாக மருத்துவம் எடுத்துக் கொள்ளுங்கள்.

சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த மருத்துவம், சர்க்கரையை உடல் பயன்படுத்தும்படி பார்த்துக்கொள்வது மற்றும் இன்சுலின் தேவையை பூர்த்தி செய்வது..இது அதிர்ந்து, களைத்துப்போன கணையத்தை ஆறுதல்படுத்த உதவுகின்றது.

கணையத்தின்  முக்கியமான பணி செரிமான திரவங்களை சுரப்பது.

1) ஆல்பா செல்கள் குளுகோகனை சுரக்கின்றது.

2) பீட்டா செல்கள் இன்சுலினை சுரக்கின்றது.

3)டெல்டா செல் சோமாடோஸ்டாடின் சுரக்கின்றது.

4)  எஃப் செல் கணைய பாலிபெப்டைடை சுரக்கின்றது.


கணையமும் கொரோனா வைரஸ் SARS-CoV-2; கொரோனா வைரஸ் ஒரு இரகசிய கொலைகாரன். இது பல நோய்களுக்கு அடித்தளம் போட்டு வருகின்றது, அதிலை ஒன்றை அது இன்று  வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது, கணைய பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.


எதிர்காலத்தில் இன்னும் அதிகமானோர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படப்போறார்கள். சார்ஸ்-கோவி-2 தொற்று ஏற்படுத்திய,  இன்சுலின் குறைபாட்டுடன் கூடிய வகை 1 நீரிழிவு நோய்  இருப்பது கண்டறியப்பட்டிருக்கின்றது. SARS-CoV-2 கணையத்தின் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களையும் பாதிக்கிறது.கணைய, இன்சுலின் உற்பத்தி பீட்டா செல்களை வைரஸ்கள் தாக்கி அழிக்கின்றது.


SARS-CoV-2 நம் உடலை பல்வேறு முனைகளில் தாக்குகின்றது என்பது ஆய்வுகள் மூலம் தெளிவாகின்றது. நுரையீரல், நாளங்கள் மற்றும் இதயம் முதல் குடல் மற்றும் சிறுநீரகங்கள் வரை நரம்பு மண்டலம் மற்றும் மூளை வரை இதனுடைய பாதிப்புகள் தொடர்கின்றது.


இப்போது சில காலமாக, கடுமையான கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இரத்தத்தில் சர்க்கரை அளவுகள் அதிகரித்திருக்கும் அறிக்கைகள் அதிகரித்து வருகின்றன. அறிகுறிகள் கடுமையான ஹைப்பர் கிளைசீமியாவிலிருந்து கெட்டோஅசிடோசிஸ் வரை, கடுமையான நீரிழிவு நோயின் பொதுவான இரத்தத்தின் அதிகப்படியான அமிலத்தன்மை இருப்பது தெரியவருகின்றது.

விற்றமின்களை  அதிகமாக  எடுத்துக்கொள்ளக்கூடாது . அதிகமாக மாத்திரைகள் மூலம் எடுத்துக் கொண்டால் ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுமா? விற்றமின்கள் மனித உடலுக்கு இன்றியமையாதவை, அதிலும் நுண்ணூட்டச் சத்துக்கள் மிகவும் இன்றியமையாதது. விற்றமின்களை அதிகமாக எடுத்துக் கொள்வதினால் பெரிய அளவில் எந்த பாதிப்புகளும் இல்லை.


இருப்பினும்  விற்றமின்களை  மாத்திரை வடிவில் அதிகமாக  எடுத்துக்கொள்வது ஹைப்பர் விற்றமின்மினோசிஸுக்கு வழிவகுக்கும் மேலும்  தாதுக்கள். கனிமச்சத்துக்களை தேவைக்கு அதிகமாக எடுக்கும் போது பக்க விளைவுகள் ஏற்படும். குறிப்பாக இரும்புச் சத்து துத்தநாகம், செப்பு போன்றவைகளை அதிகமாக நுகரும் போது  உடல் எதிர்வினை தாக்கங்களை ஏற்படுத்துகின்றது.


எடுத்துக்காட்டாக துத்தநாகம் அதிகமாக நுகரும் போது தோல் அதிகளவில் கருமை நிறத்தை பிரதிபலிக்கும்.துத்தநாகத்தின் அதிகப்படியான சப்ளை வயிற்று வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற  அறிகுறிகளுக்கு வழிவகுக்கின்றது.


அதிகப்படியான அளவு பொதுவாக நீண்ட கால விளைவுகள் இல்லாமல் வாந்தி மற்றும் இரைப்பை குடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றது. இருப்பினும், நீண்ட காலத்திற்கு துத்தநாகம், தாமிரத்தை உட்கொள்ளும் எவரும் கடுமையான, மீள முடியாத சேதத்தை எதிர்பார்க்கலாம், அதாவது: கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு மற்றும் உறுப்பு செயலிழப்பு. மூளை பாதிப்புக்கு வழிவகைகளை இட்டுச் செல்லுகின்றது.


மனித வாழ்க்கையின் தொடர்ச்சியான இருப்புக்கு விற்றமின்கள் மற்றும் தாதுக்கள் மிகவும் அவசியம்உடலால் இந்த நுண்ணூட்டச் சத்துகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது.அதாவது   தாவரங்கள் மற்றும் பாக்டீரியாக்களைப் போலல்லாமல், மனித உடலானது கரிம மூலக்கூறுகளை உற்பத்தி செய்யாது, எனவே, சப்ளை முக்கியமாக உணவில் இருந்து வருகின்றது.


கண்டிப்பாக  வெளியிலிருந்து உணவின் மூலம் பூர்த்தி செய்தே ஆகவேண்டும்.சமச்சீர் உணவு உடலின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்கின்றதாஎன்றால் அதுவும் 100 விழுக்காடுகள் கிடையாது. மாறுபட்ட  குடல் கோளாறுகள் நோய்கள் குறிப்பாக செலியாக் [குளுட்டன் சகிப்புத்தன்மை/ பசைப்புரத ஒவ்வாமை] மற்றைய குடல் நோய்கள் விற்றமின்கள் தாதுக்கள் உறுஞ்சுவதை தடுத்துவிடுகின்றது.


விற்றமின்கள் இன்றியமையாதவை என்பதை குழந்தைகள் பள்ளியில் கற்றுக்கொள்கிறார்கள்அது உணவின் அவசியத்தை புரிந்து கொள்ள உதவுகின்றது விற்றமின்கள் கிட்டத்தட்ட அனைத்து வளர்சிதை மாற்ற செயல்முறைகளிலும் ஈடுபட்டுள்ளன அவை நோயெதிர்ப்பு அமைப்பு, உயிரணு அமைப்பு, எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்துகின்றன,


மேலும் இரத்த உருவாக்கத்திற்கு பெரும் பங்களிப்பையும் செய்கின்றன. இருப்பினும், ஒரு சிக்கல் உள்ளது  பள்ளிப்பாடங்கள் மற்றைய  மன அழுத்தம் காரணமாக, இன்று பலருக்கு விற்றமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சுவதில் சிக்கல் உள்ளது. குறிப்பாக  இரத்த உற்பத்தியில் பங்கெடுக்கும் விற்றமின் B12 உறிஞ்சுவதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றது.


விற்றமின் B12 குறைபாடு பரவலாக உள்ளது குறிப்பாக மாத சுழற்சி உள்ள இளம் பெண்கள் அதிலும் சைவ உணவு எடுத்துக்கொள்ளும் பிள்ளைகளின்  இரத்தத்தில் விற்றமின் B12 மிகக் குறைவு. 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் நான்கில் ஒருவர் விற்றமின் B12 குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.. விற்றமின் B12 குறைபாடு, நரம்பு பாதிப்பு ஏற்படும். சாத்தியமான விளைவுகளில் சோர்வு, பலவீனம், இரத்த சோகை மற்றும் நரம்பு மண்டல கோளாறுகள் போன்ற அறிகுறிகள் அடங்கும். மற்றும் மன அழுத்தம் அதிகமாகி தவறான முடிவுகளுக்கு காரணியாகின்றது


மற்றுமொரு முக்கிய காரணம் போதிய ஊட்டச்சத்துசத்தான உணவுகள் பொதுவாக நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றது. இது உங்கள் ஆரோக்கியத்தை மேலும்  பலப்படுத்த உதவுகின்றது.

பாடசாலை மதிப்பெண்களை எப்படி வீதம்% கணிப்பது. பிள்ளைகளே உஷார், உங்கள் தேர்வின் மதிப்பெண்கள் குறித்து  கவனமாக இருங்கள். உங்கள் தேர்வு மதிப்பெண்கள் தவறாக மதிப்பிடப்படாமலிருக்க நீங்கள்  விழித்துக்கொள்ளுங்கள்..


பாடசாலை மதிப்பெண்களை எப்படி வீதம்% கணிப்பது.பள்ளி மதிப்பெண்களின் சதவீதத்தைக் கணக்கிட, நீங்கள் பின்வரும் படிகளைப் பின்பற்ற வேண்டும்.


1. சாத்தியமான மொத்த மதிப்பெண்களைத் தீர்மானிக்கவும்: ஒரு குறிப்பிட்ட பாடம் அல்லது தேர்வில் பெறக்கூடிய மதிப்பெண்கள் அல்லது புள்ளிகளின் மொத்த எண்ணிக்கையைக் கண்டறியவும்.  இந்தத் தகவல் பொதுவாக உங்கள் பள்ளி அல்லது ஆசிரியரால் வழங்கப்படும்.


2. நீங்கள் பெற்ற மதிப்பெண்களைக் கணக்கிடுங்கள்: அந்தப் பாடம் அல்லது தேர்வில் நீங்கள் பெற்ற மதிப்பெண்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கவும்.


3. பெற்ற மதிப்பெண்களை மொத்த மதிப்பெண்களால் வகுக்கவும்: நீங்கள் பெற்ற மதிப்பெண்களை மொத்த சாத்தியமான மதிப்பெண்களால் வகுக்கவும்.


4. 100 ஆல் பெருக்கவும்: படி 3 இலிருந்து முடிவை எடுத்து 100 ஆல் பெருக்கி அதை சதவீதமாக மாற்றவும். சதவீதத்தைக் கணக்கிடுவதற்கான formula: [சூத்திரம்]


சதவீதம் = (பெறப்பட்ட மதிப்பெண்கள் / மொத்த மதிப்பெண்கள்)  ×100


உதாரணமாக, ஒரு பாடத்திற்கான மொத்த மதிப்பெண்கள் 100 மற்றும் நீங்கள் 85 மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.  சூத்திரத்தைப் பயன்படுத்தி: சதவீதம் = (85 / 100) ×100 = 0.85× 100 = 85% எனவே, இந்த விஷயத்தில், அந்த பாடத்தில் உங்கள் சதவீதம் 85% ஆக இருக்கும்.


தசமம் மற்றும்  வீதம் இடையே உள்ள வேறுபாடுகள்:  தசமம் என்பது முழுதாக இல்லாத எண்களைக் குறிக்கும் ஒரு வழியாகும்.  இது 10 இன் அதிகாரங்களை அடிப்படையாகக் கொண்டது. தசமப் புள்ளி முழு எண் பகுதியை பின்ன பகுதியிலிருந்து பிரிக்கின்றது.  எடுத்துக்காட்டாக, 3.25 என்பது ஒரு தசமமாகும், இதில் 3 என்பது முழு எண் பகுதியாகவும், 0.25 என்பது பின்ன பகுதியாகவும் இருக்கும்.


ஒரு விகிதம், மறுபுறம், இரண்டு அளவுகளை வெவ்வேறு அலகுகளுடன் ஒப்பிடும் ஒரு சிறப்பு வகை விகிதமாகும்.  விகிதங்கள் பொதுவாக இரண்டு எண்களின் விகிதமாக அல்லது ஒரு பின்னமாக வெளிப்படுத்தப்படுகின்றன.  உதாரணமாக, நீங்கள் 200 மைல்களை 4 மணிநேரத்தில் ஒரு வாகனத்தை ஓட்டினால், உங்கள் வேகத்தின் வீதம் 200 மைல்களை 4 மணிநேரத்தால் வகுத்தால், அதை மணிக்கு 200/4 அல்லது 50 மைல்கள் என எழுதலாம்.


விகிதங்களை சதவீதமாகவும் வெளிப்படுத்தலாம், இது 100 இன் பகுதியைக் குறிக்கும் ஒரு வழியாகும். எடுத்துக்காட்டாக, ஒரு வகுப்பில் உள்ள 100 மாணவர்களில் 40 பேர் சிறுவர்கள் என்றால், வகுப்பில் உள்ள சிறுவர்களின் விகிதம் அல்லது சதவீதம் 40% ஆகும்.  100க்கு 40 மாணவர்கள் சிறுவர்கள் என்று குறிப்பிடுகின்றது. இதுவே ஒரு மண்டபத்தில் 850 மாணவர்களில் 400 பேர்கள் மாணவிகள் என்றால் (400/1000) × 100 = 40%   என்று எடுத்துக் கொள்ளலாம்


சுருக்கமாக, தசமங்கள் முழுமையடையாத எண்களைக் குறிக்கும் ஒரு வழியாகும், அதே சமயம் விகிதங்கள் இரண்டு அளவுகளை வெவ்வேறு அலகுகளுடன் ஒப்பிடும் விகிதங்கள் மற்றும் பின்னங்கள் அல்லது சதவீதங்களாக வெளிப்படுத்தப்படலாம். 

இந்த பிரபஞ்சத்தின் ஆற்றல்: கடவுளின் தடயங்களை தேடி…  இந்த உலகம், இந்த பிரபஞ்சம்  அசைவற்றது. ஒரேஒரு பொருள் மட்டும்தான் அசைகின்றது அதனால்தான் நாங்கள் எல்லோரும்  இயங்குகின்றோம் என்று சொன்னால்  நம்புவீர்களா, அசைகின்ற அந்த பொருள் எலட்ரான்கள். ஒரு அணுவுக்குள்ளே எலட்ரான்கள்  அங்கும் இங்குமாக ஓடித்திரியவில்லை என்றால் இந்த உலகம் இயக்கமற்றதாக இருந்திருக்கும்.


ஒளி, ஒலி, வர்ணம், வேகம், விசை மின்சாரம், தகவல் பரிமாற்றம், நியூரோன் இயக்கம்: நரம்பியல் செயல்பாடு மற்றும் நினைவக செயல்திறன் உட்பட மூளையின் பல்வேறு செயல்பாடுகள்,  அணுக்களின் பிணைப்பு: எலக்ட்ரான் ஜோடி பிணைப்பு வழியாக இரண்டு அணுக்கள் இணைக்கப்படும்போது, ​​​​ஒரு மூலக்கூறு உருவாகின்றது. இது போன்று பல் வேறு இயக்கங்கள் அத்துனைக்கும் எலட்ரான்கள்தான்  காரணியாக இருக்கின்றது.


இந்த பிரபஞ்சத்தின் வெப்பநிலை -270°  டிகிரி செல்சியஸ்  ஆற்றல் பாதுகாப்பு விதியின் படி, இது பாதுகாக்கப்படுகிறது. ஆற்றலை ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்றலாம் அல்லது வெவ்வேறு பொருள்கள் அல்லது அமைப்புகளுக்கு இடையில் மட்டுமே மாற்ற முடியும்.  எடுத்துக்காட்டாக, சாத்தியமான ஆற்றலை இயக்க ஆற்றலாக மாற்றலாம், மின் ஆற்றலை ஒளி ஆற்றலாக மாற்றலாம் அல்லது வெப்ப ஆற்றலை சூடான பொருளிலிருந்து குளிர்ந்த பொருளுக்கு மாற்றலாம்.


இந்த கொள்கையானது பிரபஞ்சத்தில் ஆற்றல் ஒரு அடிப்படை அளவு மற்றும் அதன் மொத்த அளவு நிலையானது இதன் பொருள் பிரபஞ்சம் ஒருபோதும் வெப்பமடையாது. என்ற புரிதலின் அடிப்படையில் அமைந்துள்ளது.  ஆற்றல் அதன் வடிவத்தை மாற்றலாம் அல்லது மாற்றப்படலாம், ஒரு மூடிய அமைப்பில் உள்ள மொத்த ஆற்றல் பாதுகாக்கப்படுகிறது.  அது என்றென்றைக்கும் நிலையானது -270°  டிகிரி செல்சியஸ்.


கார்பனின் தனித்துவமான பண்புகள். 1) கார்பன் நிலையானது. எடுத்துக்காட்டாக ஒரு வைரத்தை எரித்தாலும் அது திரும்பவும் கரி, கார்பனாகத்தான் மாறும்.  கார்பன் அழிவற்றது. நிலையானது.


2) கார்பன் மற்றய கார்பனுடன் கோவலண்ட பிணைப்புகளை உருவாக்கக் கூடியது. 3) கார்பன் நான்கு வேலன்ஸ் எலக்ட்ரான்களை கொண்டது.


4) கார்பன் ஒற்றை, இரட்டை மற்றும் மூன்று பிணைப்புகளை உருவாக்கக் கூடியது. கார்பன் நீண்ட சங்கிலி பினைப்புகளை கொண்ட ஒரு நெட்வொர்க்கை உருவாக்க முடியும். கார்பன், இனிப்பு உறைப்பு புளிப்பு இயற்கை சேர்க்கை பொருள் அத்துனையிலும் கார்பனுடன் பிணைப்பு இருக்கும்.


கார்பன் தன்னுடன் நிலையான பிணைப்புகளை உருவாக்குகின்றது, இது கார்பன் நானோகுழாய்கள் மற்றும் கிராபெனின் உருவாக்கத்திற்கு வழிவகுக்கின்றது, அவை தனித்துவமான மின் மற்றும் இயந்திர பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த பூமியையும் அதில் வாழ் உயிரிணங்களையும் உருவாக்க பரப்பிரம்மம் எடுத்துக்கொண்ட ஒரேஒரு மூலப்பொருள் கார்பன். [கரி, சாம்பல், விபூதி எப்படி வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள்]

 

 கோவலன்ட் பிணைப்பு [பங்கீட்டு பிணைப்புகள்] எலட்ரான்களை பகிர்ந்து கொள்ளுதல்


 


 

புத்தக வடிவில் படிப்பதற்கு இதில் அழுத்தவும்

http://mahesva.blogspot.com/?view=magazine



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக