வியாழன், 28 டிசம்பர், 2017

💚💛கியூபா சருகு நண்டுகள்

கடல் ஆமைகள் கடலில் வாழ்ந்தாலும் இனப் பெருக்க காலத்தில்  நீண்ட தூரம் நீந்தி வந்து கடற்கரை மண் குழியில் முட்டைகளை இட்டு விட்டு கடலுக்கு திரும்புகின்றன,

கியூபா, ஹவாய் தீவு தரை வாழ் சிவப்பு நண்டுகள் நிலத்தில் வாழ்ந்தாலும் இனப் பெருக்க காலத்தில் நீண்ட தூரம் பயணப்பட்டு கடலில் முட்டைகளை கலந்து விட்டு, திரும்பவும் தரைக்கு திரும்புகின்றது. இதில் பெரும் எண்ணிக்கையான நண்டுகள் இறந்தும் விடுகின்றது.

புதுசு புதுசாக கட்டிடம் சாலைகள் என்று, சுற்றுச்சூழல் இடங்கள் மாறி இருந்தாலும், இந்த நண்டுகள் எப்படித்தான் கடல் இருக்கும் இடத்தை நினைவில் வைத்து திரும்பவும் பிறந்த இடத்திற்கு செல்கின்றன  என்பது  ஒரு ஆச்சரியம் தான்.
பட்டாசு-2018
புது வருட கொண்டாட்டத்திற்காக மத்தாப்பூ வானவேடிக்கை  பட்டாசுகளை வாங்க விருப்பப்பட்டால் தேவைக்கு ஏற்ப அளவோடு வாங்கி முற்றிலும் தீர்ந்து போகும்
மட்டும் வெடித்து மகிழ்ந்து விடுங்கள். அதில் எதையாவது ஒன்றை மிச்சப்படுத்தி வீட்டில் மறைத்து வைக்காதீர்கள். அது பின் வரும் நாட்களில் பெரிய தீ விபத்துக்களுக்கு காரணமாக அமையலாம்.

❤ - வெடிக்காத பட்டாசுகளை அப்படியே நிலத்தில் விட்டு விடுங்கள், அதை எடுத்து மீண்டும் வெடிக்க வைக்க முயற்சிக்காதீர்கள்.

❤ -  கறுப்பு சந்தை மற்றும் அரசு அங்கீகாரம் இல்லாத பட்டாசுகளை மலிவு என்று வாங்க முயற்சிக்காதீர்கள் . தரக்கட்டுப்பாட்டு முத்திரை இருக்கா என்று பார்த்து வாங்குங்கள்.

❤ - எவ்வளவுதான் பாதுகாப்பான பட்டாசுகளாக இருந்தாலும் கூடுமான வரை கையில் வைத்து வெடிக்காதீர்கள். சில சமயங்களில்   சேமிப்பு கிடங்கு,போக்குவரத்து சேவையில் ஏற்பட்ட பழுது மற்றும் தயாரிப்பு தவறுகளை கண்டு கொள்ளாமல் விடப்பட்டிருக்கலாம்.

❤ - முதியவர்கள் இல்லம், மருத்துவமனை மற்றும் பறவைகள் படுத்துறங்கும் அடர்ந்த மரங்கள் உள்ள இடங்களை தவிர்க்கவும்.

❤ - தீ விபத்துக்களை உண்டுபண்ணும் இடங்கள், குப்பைத்தொட்டிகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் இடம்,  பாதாள அறைகளை கூடுமான வரை தவிர்க்கவும்.

❤ - வீட்டில் செல்லப்பிராணிகள் இருந்தால் பாதுகாப்பான ஒரு இடத்தில் விட்டு விடுங்கள் மற்றும் ஆடு, மாடு போன்ற வளர்ப்பு விலங்கு பண்ணை இடங்களையும் தவிர்க்கவும்.

-குழந்தைகள் பெரும்பாலும் கேளிக்கை மகிழ்ச்சியில் அங்கும் இங்கும் ஓடித்திரிபவர்களாகத்தான் இருப்பார்கள், அவர்களை உங்கள் பார்வையில் வைத்திருங்கள். வானவேடிக்கை தீப்பொறிகள் சில சமயங்களில் அவர்களின் புது ஆடையில் பற்றிக் கொள்ளலாம்

மேலும் பட்டாசுகள் வெடித்து சிதறும் போது நிலத்திலுள்ள கல் மண் போன்ற பிற பொருட்கள் மிக வேகமாக சுழற்றி குழந்தைகளின் முகத்தில் வீசப்படும் சாத்தியங்களும் இருப்பதினால் அவர்களை ஒரு பாதுகாப்பான இடத்திலிருந்து வேடிக்கை பார்க்க அனுமதியுங்கள்.

❤ -மதுபோதை, சுய நினைவு இழந்த நிலையில் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்காதீர்கள், பெரும்பாலும் விபத்துக்கள் ஏற்பட காரணமாக இருப்பது இந்த சூழல்தான்.

❤ -ஆர்வக்கோளாறு காரணமாக அயலவர்களின் வீட்டு மொட்டைமாடி, முற்றம், முக்கியமாக அவர்களின் பூச்செடிகள் மீது பட்டாசுகளை கொளுத்தி எறிதல் மேலும் ஹிக்-போதைக்காக வெற்று டப்பாக்களை வெடிக்க வைத்து பறக்க விடுவது,


வர்ண்ணப் பொடி பொட்டலங்கள் சுற்றி வெடிக்க வைப்பது போன்ற விபரீத விளையாட்டுக்கள், ஆபத்தானது மட்டுமல்லாமல்  சட்டவிரோதமானதும் கூட, எப்பொழுதும்  நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் வெடி பொருட்கள், நெருப்பும்  ஒரு விளையாட்டு பொருள் இல்லை என்பதை.

❤ - எதிர் பாராமல் ஏதாவது விபத்து ஏற்பட்டால் தாமதிக்காமல் அவசர அழைப்பு, மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுங்கள். மதுபோதையில் முதலுதவி என்ற பேரில் ஏதாவது ஒன்றை செய்து வைக்காதீர்கள், மருத்துவமனை மருத்துவரின் உதவி உடனடியாக தேவை என்பதை நினைவில் வைத்து செயல்படுங்கள்.   

நன்றி மகேஷ்-இரவி


❤ - இனிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்.

பரப்பிரமத்தின்  ஆட்சி மலரட்டும்.   ......
sri rama jyam-2016.jpg

வெள்ளி, 15 டிசம்பர், 2017


பிக் பேங் (பெருவெடிப்பு)

ஒற்றை நட்சத்திர மண்டலத்திற்கு ஒரு சூரியனும் அதற்கு ஒரேஒரு பூமியும் நிலவும் இருப்பதாக நம்பி வந்த ஆதி மனிதன் அறிவு வளர்ச்சியில் இல்லை இல்லை, வானத்தில் கொட்டிக் கிடக்கும் அத்துனை நட்சத்திரங்களும் சூரியன்கள் என்று நம்பி கொண்டிருந்தான், பின்பு விஞ்ஞான வளர்ச்சியில் அத்துனை நட்சத்திரங்களும்  ஒற்றை நட்சத்திரங்கள் இல்லை அவை அத்துனையும்  நட்சத்திர கூட்டம், அதாவது  அவைகள்  அத்துனையும்  விண்மீன் கூட்டங்கள்/கேலக்ஸி  என்று நம்பினான்.

இன்று நாங்கள் வாழ்கின்ற அண்டத்தில்/பிரபஞ்சத்தின் கோடிக்கணக்கில் விண்மீன் கூட்டங்கள் இருக்கின்றது, அதில் ஒன்றுதான் எங்களுடைய பால்வீதி மண்டலம் . இது இதனுடன் முடிந்து விடவில்லை, ஒற்றை மாட்டு வண்டியாக இருந்த விஞ்ஞான அறிவு இன்று சாமானிய குடி மக்களும்  சேர்ந்து இழுக்கும் இயந்திர வண்டியாக மாறி இருக்கின்றது.

இன்றய  தலைமுறையினர்கள் இணையதள வசதிகளை பயன்படுத்தி, வின்வெளி ஆய்வு நிலையங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி  அண்டவெளியை சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருக்கின்றான் ஏதாவது ஒரு சூரியக்குடும்பத்தில் உயிர்கள் வாழ்கின்றனவா என்று,  இதற்கு இன்று வரைக்கும் தீர்க்கமான பதில் ஏதும் இல்லை, இருந்தாலும் விடை காண முடியாத பல கேள்விகளை கேட்க வைத்திருக்கின்றது.

ஆரம்பத்தில்  எலுமிச்சை  பழம்  அளவிலிருந்த இந்த பிரபஞ்சம் ஒன்றிலிருந்து (ஹைட்ரஜன்) பலவாக  எப்படி விரிவடைந்தது.?

ஒரு வெடிப்பு நிகழ்வதற்கு ஒரு இடம் கண்டிப்பாக அவசிம் , ஒரு வெற்று  இடம் கூட இல்லாமல், இன்னும் சுருங்கச் சொன்னால் ஏதுமே இல்லாமல்  ஆரம்பத்தில் எலுமிச்சை   அளவிலிருந்த அண்டம் அல்லது அதை விட இன்னு சின்னப் புள்ளியாக இருந்த பிரபஞ்சம், பெருவெடிப்பு  என்று சொல்வது கூட தவறு, ஏனென்றால்,  ஒரு சின்னப் புள்ளி  ஒரு வெற்று  இடம் கூட இல்லாமல் எப்படி ஒரு பெருவெடிப்பை உண்டுபண்ணியிருக்க முடியும்  அங்கு ஒரு வெடிப்பே நிகழவில்லை என்பது தான் உண்மை,

அந்த புள்ளி விரிவடைந்தது (பிக் பேங்) விரிவடைந்து கொண்டே இருக்கின்றது என்று சொல்வது தான் மிகப்பெருத்தமாக இருக்கும். எங்கள்  பிரபஞ்சத்தை தாங்கி பிடிக்கும்  கறுப்பு அண்டம்  எங்கிருந்து வந்தது? இந்த  பிரபஞ்சம் அழிந்த பிற்பாடு  என்ன நடக்கின்றது,  கருந்துளைகளின் வெளிப்பாடு மற்றும்  எங்களுடைய பால்வீதி மண்டலத்தின் மையப்பகுதியில் என்ன நடக்கின்றது ?

ஒரேஒரு பிரபஞ்சம் மட்டும் தானா இல்லை, அதுவும் விண்மீன் கூட்டங்கள் போல் பல இருக்கின்றனவா ?  இந்த கேள்விக்கு ஓரளவிற்கு பதில் சொல்ல முடியும், எங்களுடைய பிரபஞ்சம் போல் முடிவில்லாத பல பிரபஞ்சங்கள் . மகா அண்டத்திற்குள்ளே இருக்கின்றது.

பெருவெடிப்பு என்பது மகா அண்டத்தில் (பரப்பிரமத்தில்) நிகழவில்லை அதற்கு மாறாக ஒரு புள்ளி விரிவடைந்தது, எல்லையற்ற ஒரு கோட்பாடு அண்டத்திற்கு கிடையாது எண்ணற்ற பல பிரபஞ்சங்களில் ஒன்றுதான் எங்களுடைய  பால்வீதி மண்டலம் இருக்கும் பிரபஞ்சம்,

ஒற்றை பிரபஞ்ச கோட்பாடு, ஒரு கடவுள் கோட்பாடு முற்றிலும் முரண்பாடானது, பல பிரபஞ்சங்கள் இருப்பது போல் பல கடவுள்களும் இருக்க முடியும் என்பது என்னுடைய ஒரு யூகமாக இருந்தாலும் நாளைய தலைமுறையினர் இதற்கான விடையை கண்டிப்பாக கண்டறிவார்கள்.
 
☐ கறுப்பு அண்டம், அண்டவெளி வெற்றிடம் கூட பல பில்லியன் வருடங்கள் கடந்து தான் உருவானது.
☐ ஒரு அணு வேற்று பொருள்களின் துணையின்றி எப்படி பல தனிமங்களை உருவாக்கியது.
☐ ஒரு தனிமம்  இன்னுமொரு தனிமமாக மாறுவதற்கு, பல வருடங்கள்
தேவைப்படும் இதற்கான காலச்சக்கரம் யார் கையில் இருக்கின்றது.
☐ ஆரம்பத்தில் புரோட்டான்களை கொண்ட ஒரு புள்ளி,பின்னால்  நியூட்ரான்களின் துணை கொண்டு ஒரு அணுவாக உருவானது, அந்த அணு இன்னும் சில நிமிடத்தில் எலக்ட்ரான்களை உருவாக்கி இன்று எங்கள் உடம்பில்/பூமியில் இருக்கும் தனிமங்களாக உருவானது.
☐ ஒரு அணுவில் தனித்து புரோட்டான்கள் மட்டும் இருந்தால் அது இணைய முடியாமல் எப்போதும் பிரிந்து கொண்டே இருக்கும், இடையில் நியூட்ரான்களை செருகி வைத்து அதை ஒரு அணுவாக மாற்றியது எது / யார்;  இந்த நியூட்ரான்கள் எலக்ட்ரான்கள் எங்கிருந்து வந்தது ?



👶பால் சர்க்கரை ( லாக்டோஸ்) ஒவ்வாமை என்றால் என்ன?
பெரும்பாலும் லாக்டோஸ்,  தாய்ப்பால் உட்பட, பாலில் காணப்படும்
கார்போஹைட்ரேட்டு இரட்டை-சர்க்கரை  அல்லது எடுத்துச்செல்லும்
சர்க்கரை ஆகும். இந்த இரட்டை பால் சர்க்கரையை ஜீரணிக்க
தொப்புக்கொடி உறவு மூலம் குடலில் சுரக்கும் இலற்றாசு என்னும்
என்சைம்களின் சேவை மிகவும் முக்கியமானது.

இந்த என்சைம்கள் தாய்ப்பாலின் தேவை முடிய, 2-3 வருடங்களில்
பெரும்பாலும் நிறுத்திக் கொள்ளும் அல்லது குறைத்துக்கொள்ளும். இந்த
இடத்தில் தான் ஒவ்வாமை ஏற்படுகின்றது, இலற்றாசு என்னும்
என்சைம்களின் உருவாக்கம் நிறுத்தம்/ இல்லாது போது இந்த பால் சர்க்கரை
ஜீரணிக்க முடியாமல் வயிற்று வலி, தொப்புளை சுற்றிவலி முடிவில்
வயிற்றுப்போக்கை உண்டு பண்ணுகின்றது. இது மனிதர்களுக்கு
மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் ஏற்படும் பொதுவானதொரு  குறைபாடு.

பால் மற்றும் பால் தயாரிப்புக்களில் இருக்கும் கார்போஹைட்ரேட்டு
சர்க்கரை  லாக்டோஸ் (C₁₂H₂₂O₁₁) மற்றும் நேரடி-சர்க்கரை குளுக்கோசு (C₆H₁₂O₆)
இணைப்பை கொண்ட இரட்டை-சர்க்கரை  ஆகும்


இந்த சர்க்கரையை குடலில் சுரக்கும் இலற்றாசு என்னும் என்சைம்கள் தான்
(Lactase - Enzyme) லாக்டோஸ் வெட்டப்பட்டு குடல்-வாழ்
நல்ல-பாக்டீரியாக்களுக்கு உணவாகவும் பிரிக்கப்பட்ட குளுக்கோசை (C₆H₁₂O₆)
இரத்தத்தில் கலக்க உதவுகின்றது.


பல இணைப்புகள் கொண்ட சர்க்கரைகள் இருந்தாலும், குளுக்கோஸ் (C₆H₁₂O₆)
இணைப்புள்ள  சர்க்கரையை மட்டும் தான் இரத்தத்தில் கலந்து எடுத்துச்
செல்லப்படும், மற்ற சர்க்கரைகள் எல்லாம் கழிவு சர்க்கரையாக குடலிலேயே
விட்டு விடப்படும்.இந்த பால் சர்க்கரை, லாக்டோஸ் குழந்தைகளுக்கு எவ்வளவு
முக்கியமானது

தெரியுமா, புதிதாக பிறந்த மழலைகளின் குடலில் குடல்-வாழ்-நல்
பாக்டீரியாக்களை ( குடல் ஃபுளோரா) உருவாக்கும் பொறுப்பு இந்த பால்
சர்க்கரைக்கு உண்டு, மற்றும் குழந்தைக்கு  ஆற்றல்/சக்தி வழங்கும்
மற்றொரு பணியினையும் கொண்டுள்ளது.குடல்-வாழ்-நல் பாக்டீரியாக்களின்
பங்களிப்பு தீங்கு விளைவிக்கும் நுண்பாக்டீரியாக்களின் வருகை,
காலனியாதிக்கத்தை தடுத்து, மழலைப்பருவத்திலிருந்தே ஆரோக்கியமான,  
அமைதியான ஒரு ஜீரண அமைப்பைஉருவாக்கும் பெரும் பணியை செய்கின்றது,
மேலும் மனித உடல்நலத்திற்காக முக்கிய காப்பாக இருக்கும் பிபிடோ-பாக்டீரியா
உருவாவதையும் இது ஊக்குவிக்கிறது.

பின்னால் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும்  குடல்/உணவுக்குழாய் மற்றும்
மூச்சுக்குழாய்/நுரையீரல்  நோய்கள் ஏற்படாமல் ஆரம்ப தடுப்புச் சுவராக
இருக்கின்றது. இதிலிருந்து தெரிகின்றது மழலைகளுக்கு தாய்ப்பால்
சர்க்கரை எவ்வளவு முக்கியமானது.
☝இந்த நோய் உள்ளவர்களுக்கு இரத்த சர்க்கரையின் அளவு  
குளுக்கோஸ் (C₆H₁₂O₆) இழப்பு/ குறைந்து  காணப்படும்.



👶பசைப்புரத ஒவ்வாமை (செலியாக்)
இதுவும் சுய-உடல்-தாக்கி நோய் குடும்பத்தை சேர்ந்த நோய்க்காரணி,
பெரும்பாலும் கோதுமை உணவுகளிலிருக்கும்  பசைப்புரதத்திற்கு எதிராக
நோய்  எதிர்ப்பு சக்தி, உணவுசத்துக்களை உறுஞ்சும் பணிகளை செய்யும்
சத்துறுஞ்சி-விரலிகளை தாக்கி அழிப்பது.
  • ஊட்டசத்து குறைபாடு ( இரும்பு சத்து, விற்றமின் பி12 மற்றும்
 குளுக்கோஸ் (C₆H₁₂O₆) இழப்பு)
  • கடுமையான வயிற்று வலி.
  • சரும அரிப்பு
  • வயிற்றுப் போக்கு
  • உடல்/மன சோர்வு
  • தீராத தலைவலி
  • வாந்தி, குடல் பெருமல்.
பெரும்பாலும் குழந்தைகளில்,  இந்த குறைபாட்டின் தாக்கம்  உணவில்
நாட்டமின்மையை கொண்டு அறிய முடியும், இது போன்ற ஒவ்வாமை
காரணங்களினால் வரும் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்து, மருத்துவம்  எது
என்று கேட்டால் அந்த உணவுப் பொருட்களை விட்டு விலகியிருப்பது தான்.
👎பசையம்:  சகல தானியங்களில் இருக்கும் ஒரு புரதம் இதனுடைய இணைப்பு
இல்லாமல் போனால் மாப்பொருள் (கார்போஹைட்ரேட்)  உலுர்ந்து கொட்டுண்டு
போகும். பசை போல் ஒட்டிப்பிடிக்கும் இந்த புரதம் சிறு தானியங்களில்
குறைவாகவும், பெரும்பாலும் கோதுமை மாவில் அதிகமாகவும் இருக்கும்,
இதனால்த்தான்  இடியப்பம்  மற்றும் பலகார சிற்றுண்டிகள் தயாரிக்கும் போது
பசையம் இல்லாத/ குறைவாக இருக்கும் அரிசி மா மற்றும் மற்றய தானிய மாவுடன்
சிறிது கோதுமை மாவும் சேர்த்து  உணவுகள் தயாரிக்க முடிகின்றது.
இந்த பசைப்புரதம்  அவசியமான ஒன்றுதான் இருந்தாலும்,  இது ஒவ்வாமை நோயை
உண்டுபண்ண  காரணமாக இருக்கின்றது என்பது ஒரு வருத்தமான உண்மை
மேலும் புதிய, நவீன ரக கோதுமையில் அதிகளவில் (75 விழுக்காடு) இந்த பசையம்
இருக்கும்படி சாகுபடி செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இருநூறு கிராம்  கோதுமை மாவை ஒரு பாத்திரத்திலிட்டு, நிறைய தண்ணீர் ஊற்றி,
பத்து பதினைந்து நிமிடங்கள் கையால் பிசைந்தீர்களானால் உங்கள்
உள்ளங்கையில் சற்று கெட்டியான ஒரு பொருள் அகப்படும் அதுதான் இந்த
பசையம். அதை எடுத்து முகம் துடைக்கும்  துணியில்  ஒட்டினால் அது சவ்வு மெல்லு
முட்டாய் (சுவிங்கம்) மாதிரி ஒட்டிப்பிடிக்கும் இது போலத்தான் குடலிலும்
செயல்படுகின்றது.


👽பசையம்  உள்ள உணவுகள்
- ஓட்ஸ்.
- பார்லி.
- கோதுமை.
- எம்மர்.
- சகல கோதுமை உணவுகள்
- சிவப்பு, வெள்ளை நெல் உணவுகள்.
- ஓசைவ (Vegan) உணவுகள்,
- சைட்ரான் உணவுத்தயாரிப்புகள்



💢 சத்துறுஞ்சி-விரலிகளில் அழிப்பு
சுய-உடல்-தாக்கி நோய் (ஆட்டோ இம்யூன் நோய்)
குடலிலிருந்து ஊடுருவி வருகிற ஜீரணமாகாத பசையம், புரதத் துண்டுகள்
சத்துறுஞ்சி-விரலிகளை அடையும் போது, நோயெதிர்ப்பு மண்டலம்  பசைய
துண்டுகளை நோய்க்குரிய குறியீடாக அடையாளம்  கண்டு ( எதிராளியாக) தாக்க
முற்படுகின்றது ஆனால், இப்போது தான் ஒரு முக்கியமான அம்சம் வருகிறது அது
என்னவென்றால், சத்துறுஞ்சி-விரலிகளில் ஒட்டியிருக்கும்  பசைய துண்டுகளுடன்
இணைத்து நல்ல உடல்  திசுக்களையும் (சத்துறுஞ்சி-விரலிகள்)   தாக்கி
அழிக்கின்றது இதனால்த்தான் இதற்கு சுய-உடல்-தாக்கி நோய் என
அழைக்கப்படுகின்றது.

😛 சுய-உடல்-தாக்கி நோய்க்கு: இன்று வரைக்கும் சரியான காரணம் தெரியா விட்டாலும், ஒரு  காரணத்தை  மட்டுமே   ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கின்றது. நோய் எதிர்ப்பு  சக்தி செய்ய வேண்டிய வேலையை தட்டிப்பறிக்கும் மருந்துகள்,  சின்னதாக காய்ச்சல் வந்தால் போதும், உடனடியாக  (ஆண்டிபயாடிக்) மருந்துகளை போட்டு அமுக்கிவிடுகிற பழக்கம் இன்றய  நவநாகரிக மனிதனின் ஒரு அடையாளம்.

மனிதன் என்ற உருவமைப்பு தோன்றுவதற்கு முன்னாலிருந்தே, டைனோசர் போன்ற தொல்லுயிர்களில்,  இரத்தம் தசை எலும்பு மூளை இதயம்  என்று உள்/வெளி உறுப்புகள் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு என சகல உடல் இயக்கங்களும் பரிச்சாத்தமாக இயங்கத் தொடங்கி விட்டது, நோய் பாதுகாப்பு  என்னவென்று, நோய் எதிர்ப்பு மண்டலம் பல கோடி வருடங்களாக, பரிணாம வளர்ச்சியில் கற்று வந்திருக்கின்றது.

இந்த அற்புதமான முற்காப்பு  அரனை குறுகிய காலத்தில் உருவான மருந்து, மருத்துவம் மற்றும் மாசுபடிந்த உலகத்தின் நச்சு,  நவீன தர சாகுபடி உணவுகள் குழப்பி விட்டதின் விளைவு இந்த சுய-உடல்-தாக்கி நோய்க்கான  முதற் காரணியாக முன்மொழிவு செய்வது மட்டுமல்லாமல் துரதிருஷ்டவசமாக மனித குலத்தை அச்சுறுத்தி எச்சரிக்கும் ஒரு  நோயாகவும் பார்க்க முடிகின்றது.


60, மேற்பட்ட சுய-உடல்-தாக்கி நோய்கள் உள்ளன,
இந்த கலியுகத்தில்
  
💖தூக்கமின்மை  
தொழில்மயமான இந்த அவசர உலகத்தில் தூக்கமின்மை என்பது ஒரு வியாதியாக
மனிதனை பின்தொடர்ந்து வருகின்றது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும்  
ஒரு சில காரணங்கள் மட்டுமே  அடிப்படை காரணமாக இருக்கின்றது.
⛻- இரைச்சல். ( வாகனம், தூங்கா நகரங்கள்)
⛻- வெளிச்சம்.( அதிகளவு செயற்கை வெளிச்சம்)
⛻- கதிர்வீச்சு. ( செல்போன், வைஃபி)
⛻- மின்னொழுக்கு (மின் புகை)
⛻- சுத்தம் சுகாதாரமில்லாத சுற்றுச்சூழல் ( மாசுபடிந்த உலகத்தின் நச்சுக்கள்)
⛻- வெறுமையான வாழ்வு (மன உளைச்சல், அமைதியின்மை)
⛻- அமைதி இல்லாத கால்கள் (கால் உளைவு) மற்றும் இருமல், மார்புச்சளி,
       சுவாசக் கோளாறு.
⛻- காற்றோட்டமில்லாத படுக்கை அறை ( இட  நெருக்கடி மற்றும் கூடுதல்
      நபர்கள்)
⛻-  உணவு ஜீரணமின்மை  ( இதற்கும் பல காரணங்கள் உண்டு, நேரம்  கடந்த
     இரவு உணவு,  மதுபோதை, புகைத்தல், கலப்பட உணவுகள்  மற்றும் கடின
       உணவுகள் )  
⛻- ஆடை, வீட்டு சுவர் சாயம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள்,   வீட்டு தளபாட
     நச்சு  புகை போன்றவைகள்.


💚💚உறக்க பண்புகளை தணிவிக்கும்
  • செல்போன், கணினி.
  • ஆடைகள், பாதணிகள்.
  • அலங்கார பொருட்கள்.
  • தாவரங்கள், வாசனை பொருட்கள்.
  • மின்சார உபகரணங்கள்.
  • ஒலிகளை எழுப்பும் சாதனங்கள்.
  • காற்றோட்டமில்லாத அடைக்கப்பட்ட அறை.
இது போன்ற  ஒரு சூழல்  இல்லாமல் இருப்பது ஆரோக்கியமானது அல்லது
ஜன்னல்/காற்று பரிமாற்றும்  சாதனங்கள் பொருத்தப்பட்ட  ஒரு வெற்று அறை
சாலச்சிறந்தது.
💀மாசுபடிந்த சுற்றுச்சூழல் நச்சுகளினால் தூக்கம் கெட்டுப்போகும்
சுற்றுச்சூழல் நச்சுகள்  உடலில், இரத்தத்தில் கலந்து  மூளையில் தேக்கம் அடையும்
போது, மூளையில் அதிகளவில் நீர் உற்பத்தியாகி அதன் மூலம் நச்சுக்களை
வெளியேற்றுகின்றது, இந்த செயல்பாடு இரவு நேரத்தில் இதயம் சுவாசம் மற்றும்
மன‍ அழுத்த ஹார்மோன்களின்  உதவியுடன் நடை பெறுவதினால் இரவு நேரத்தில்
அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் உந்துகின்றது.இதன் நிமித்தம் மூளை  தூங்க வேண்டிய
நேரத்தில்  விழித்து இயங்கி கொண்டிருப்பதினால் தூக்கம் கெட்டுப்போகின்றது.
💀 போராட்டங்களில் பகுத்தறிவின்றி எரிவூட்டப்படுகின்ற கார் டயர்கள் வெளிவிடும்
புகையில் மன நோய், புற்றுநோய் மற்றும் சுவாச நோய்களை உண்டுபண்ணக்கூடிய,
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நச்சு இணைப்புகளை உருவாக்கக்கூடிய நச்சுக்கள்
உள்ளது.


👌 ஒரு கற்பனை 2017-2018
ஒரு காவல்துறை அதிகாரி வேறு மாநிலத்திலிருந்து, தான் மாற்றலாகி வந்த  காவல்
நிலையத்தில் பணிகளை ஏற்றுக் கொண்ட அன்றய தினத்தில், தொடர்ந்து பயனிக்க
முடியாமல் நிலுவையில் கிடந்த பல குற்றத் பதிவுகளை பார்வையிட்டு
கொண்டிருந்தார்.
அப்பொழுது அவர் கண்ணில், இருபது வருடங்களாக தகுந்த ஆதாரம் சாட்சிகள்
ஏதுமில்லாமல் நிலுவையில் கிடந்த ஒரு  வழக்கை புரட்டிப் படித்தார். அதில்
திருமணமான, படிப்பும் வசதியும் படைத்த  ஒரு நடுத்தர வயதுடையவர்
தன்னுடைய மனைவியை காணவில்லை என்றொரு புகார் இருந்தது.
அதே சமயத்தில்  அதிகம் மக்கள் நடமாட்டம் இல்லாத  அந்த ஊர் எல்லைப்பகுதியில்
இருக்கும் காட்டில், வழிப்போக்கர்களினால் கண்டெடுக்கப்பட்டு  ஒப்படைக்கப்பட்ட
சில பொருட்களும்  அந்த காவல் நிலையத்திலிருப்பதும் தெரிய வந்தது, அந்த
பொருட்கள் பற்றிய தகவல்களை அங்கு நீண்ட காலமாக பணியிலிருந்தவர்களிடம்
இருந்து தெரிந்து கொண்டு, மேலும் தகவல்களை சேகரிக்கும் நோக்கில் அந்த
பொருட்கள்   கண்டெடுக்கப்பட்ட காட்டுப் பகுதியை பார்வையிட,   சில துணை
அதிகாரிகள்  அடங்கிய ஒரு சிறு குழுவாக,  அந்த புது அதிகாரி  புறப்பட்டு
வந்தடைந்தார்.  
அந்த காட்டுப்பகுதியை பார்வையிடும்  அதே நேரத்தில் தன் மனைவியை
காணவில்லை என்று புகார் கொடுத்தவருக்கு அவசர அவசரமாக போனில் அழைப்பு
 விடுத்து உங்கள் மனைவி  காணாமல் போகவில்லை அவங்க கொலை
செய்யப்பட்டிருக்கின்றார்  அவரை அடையாளம் காட்ட உடனடியாக கொலை
நடந்த இடத்திற்கு வரவும் என்று சொல்லி தன் அழைப்பை துண்டித்தார்.  
சிறிது நேரத்தில் அந்த ஊர் எல்லையில் இருக்கும் காட்டுப் பகுதியை வந்தடைந்தார்
தன் மனைவியை காணவில்லை என்று புகார் கொடுத்தவர். அப்போது மற்ற
அதிகாரிகளினால் புரிந்து கொள்ள முடியாத ஒரு காரியத்தை செய்தார் அந்த புது
அதிகாரி,
அடையாளம் காட்ட வந்த  கணவனிடம் சென்று உங்கள் மனைவியை கொலை செய்த
குற்றத்திற்காக உங்களை கைது செய்கின்றேன் என்று சொல்லி, அவர் கைகளுக்கு
விலங்கு மாட்டினார். கடந்த   இருபது வருடங்களாக மூலையில் முடங்கி கிடந்த ஒரு
வழக்கை அந்த புது அதிகாரி எப்படி கண்டு பிடித்தார் ?

தங்கள் மரணத்தில் கோல்மால் செய்த பிரபலமான தலைவர்கள் மற்றும் ஹாலிவுட்
நட்சத்திரங்களை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். ஆடோல் ஹிட்லர் இவரைப்
பற்றி தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது இவருடைய மரணம் குறித்து இன்று
வரைக்கும் தெளிவாக விபரிக்கப்படவில்லை என்பது தான் உண்மை. இவர்
தன்னுடைய மரணத்தை  நேரடியாக இருந்து அரங்கேற்றியவர்,  தான் விஷம்  
குடித்து இறந்து விட்டதாகவும், தன்னுடைய உடல் பெட்ரோல் ஊற்றி
எரிவுட்டப்பட்டதாக ஒரு போலியான காட்சியை  ஏற்பாடு செய்து விட்டு தப்பித்து
போனவர், இவருடைய மூளையில் /சிந்தனையில்த் தான்இன்றய ஐரோப்பாவே
வடிவமைக்கப்பட்டிருக்கின்றது என்பது ஒரு ஆச்சரியமான தகவல்

.மேலும் பிரபலமான பொப் பாடகர்கள் எல்விஸ் பிரெஸ்லி, மைக்கேல் ஜாக்சன்
மற்றும்  மர்லின் மன்றோ, புரூஸ் லீ  தங்கள் மரணத்தை ஒரு நாடகமாக
வடிவமைத்து விட்டு, சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ்ந்து பின்பு, இயற்கையாக
இறந்து போனவங்கள். இந்த பட்டியலில் இன்னும் சில பிரமுகர்கள்; தெற்காசியா
பெரும் செல்வந்தர் மற்றும் அரசியல் பிரபலங்களும் இருக்கின்றார்கள்.

இவங்கள் எதற்காக புகழின் உச்சியிலிருக்கும் போதே இப்படி ஒரு நாடகத்தை
அரங்கேற்றினார்கள் என்பது அவங்களுக்கே தெரிந்த ஒரு இரகசியம்.
தேவையில்லாமல்  அந்த  இரகசியத்தை  தோண்டிக்கிளறி எதற்காக
அவங்களுடைய தூக்கத்தை கெடுப்பான்  அப்படியே விட்டு விடுவோம் இதை ஒரு
கற்பனை கதையாக  ......  நன்றி

பரப்பிரமத்தின்  ஆட்சி மலரட்டும்.   ......

sri rama jyam-2016.jpg