வியாழன், 16 ஜூலை, 2020

இதய-படிநிலை-முடுக்கி:
(பேஸ்மேக்கர்) பொருத்தப்பட்ட ஒரு இதயநோயாளி  அன்றாடம் பயன்படுத்தும்மின்
சாதனங்களுக்கு இடையில் எவ்வளவு தூரம் இருந்தால் பாதுகாப்பானதாக இருக்கும்.

ஏனென்றால் மின்காந்தபுலங்களை வெளியிடும் சாதனங்களினால் பேஸ்மேக்கர் குறுகிய நேரத்தில் அதனது செயல்த்திறனை இழந்து பழுதடைந்து உயிர் ஆபத்தை
ஏற்படுத்தலாம்.

பொதுவாக எட்டு முதல் பத்து ஆண்டுகள் வரை அதனுடைய பயன்பாடு நீடிக்கும் என்று அதை தயாரிக்கும் நிறுவனங்களின் நிபுணர்கள் கூறுகின்றார்கள் இருப்பினும் அதில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரி நிலை மற்றும் பொது இதயமுடுக்கி செயல்பாடுகள் வழக்கமான பின்தொடர்தல் ஹார்ட் ரிதம் தினமும் கண்காணிக்கப்பட வேண்டும் .

மேலும் 4-6 வருடம்  புது பேட்டரி அறுவைசிகிச்சை மூலம் மாற்றுதல் செய்யப்படுகின்றது. இதயமுடுக்கியின் பேட்டரி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது  அதனுடைய மாதிரி மற்றும் சாதனத்தின் செயல்பாடுகளின் வரம்பைப் பொறுத்தது. ஆயுட்காலம் சுமார் நான்கு முதல் ஆறு ஆண்டுகள் வரை மதிப்பிடப்படுகின்றது. இதயமுடுக்கி பொருத்தப்பட்ட  எவரும் இதயமுடுக்கி முறையான இடைவெளி காலம்  சரிபார்க்க வேண்டும். செயல்பாடு மற்றும் பேட்டரி செயல்திறன் சரிபார்க்கப்படுகின்றன.

வழக்கமாக நோயாளியின் அன்றாட வாழ்க்கையில் இதயமுடுக்கி அவ்வளவாக தொந்தரவு செய்யாது இதனால் அவர்கள் துறை, பணி சார்ந்த தடங்கல்கள் மிகச் சிறியவை அவர்கள் அன்றாட நடவடிக்கைகளை விருப்பம் போல் செய்துகொள்ளலாம்.

இருப்பினும்  இதய-படிநிலை-முடுக்கி (pacemakers) பயன்படுத்தும் இதயநோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய பல விடையங்கள் இருக்கின்றது கண்டிப்பாக மதுபானம் அருந்தக் கூடாது மற்றும் இதயமுடுக்கி பொருத்தப்பட்டிருக்கும் இடத்தில் (வலது/ இடது பக்கம்) பொதுவில் சொன்னால் உடலின் மேற்பரப்பில் அடிபடுதல், அதிர்ச்சிகளை ஏற்படுத்தும் மோதல்களை தவிர்க்கவேண்டும் 

குறிப்பாக கால்பந்து விளையாட்டு அடி உதை விளையாட்டுக்கள், பாக்ஸிங், கராத்தே போன்ற தற்காப்பு கலைகள் மற்றும் மல்யுத்தம், ஜல்லிக்கட்டு  பொது இடங்களில் ஏற்படும் இழுபறி, தள்ளுப்பாடு முட்டிமோதும்  மக்கள் கூட்டம், நெரிசல்கள்

மேலும் மொபைல் போன், வைஃபை ரவுட்டர்கள், ரேடியோ டிரான்ஸ்மிட்டர்கள், 5G தொழில்நுட்பம், ஹேர்டிரையர்கள் (முடி உலர்த்தி) மின்-சவரக்கத்தி (ரேஸர்) மைக்ரோ ஓவன், சமையலறை மின் அடுப்புகள், சலவை இயந்திரம் மற்றும் மிக்ஸி கிரைண்டர், பணியிட சாதனங்கள் வெல்டிங் மெஷின், மின்காந்த மோட்டார்கள்

குறிப்பிட்டு சொல்வதாயின் மின்காந்த அலைகளை வெளியிடும் சாதனத்திற்கு இதய-படிநிலை-முடுக்கி இடையே சுமார் 15-30 செ.மீ பாதுகாப்பு தூரம்  போதுமானது மேற் சட்டை பையில் மொபைல் போன் வைத்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.  புதிதாக பொருத்தப்பட்ட இதயமுடுக்கி (பேஸ்மேர்கர்) உடன் உடனடியாக பயணம் செய்ய வேண்டாம். கூடுமானவரை பயணங்களை தவிர்ப்பது நல்லது.

இதய-படிநிலை-முடுக்கி பொருத்தப்பட்ட இதயநோயாளிகளுக்கு இந்த சாதனங்களை மிக நெருக்கமாக கையாளப்படும் போது மிகவும் ஆபத்தான காரணியாக மாறிவிடுகின்றது

தனக்கு இதய-படிநிலை-முடுக்கி  பொருத்தப்பட்டிருப்பதை மிகவும் இரகசியமாக பாதுகாத்து வரவேண்டும் ஏன்னென்றால் உங்களுக்கு வேண்டாதவர்கள் யாராவது மொபைல்-போன் வழியாக உங்கள் இதயத்துடிப்பை கட்டுப்படுத்தி கொலை மிரட்டல்கள் விடலாம்.

பேஸ்மேக்கர் சாதனம் நவீன தொழில்நுட்பங்களுக்கு அடிபணிந்து போகலாம் அல்லது தொழில்நுட்பத்தினால் பழுதடைந்து போகலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

இதுபோன்ற அவலங்களை தவிர்பதற்கும் இதயத்தை வருமுன் காத்துக் கொள்ளுங்கள். எலக்ட்ரோலைட் உள்ள உணவுகள், எடுத்துக்காட்டாக பொட்டாசியம், துத்தநாகம் மெக்னீசியம்,

இந்த சத்துக்கள் இதயத்தை இயக்கும் தீப்பொறி ஆற்றலுள்ளது இதயத்தை அறுத்து வெளியில் வைத்தால் கூட இந்த சத்துக்கள் அதிகமாக இருந்தால் துடித்துக் கொண்டுதான் இருக்கும் அவ்வளவு மின்னாற்றலுள்ளது. ஏனென்றால் மனிதனும் பேட்டரியில் இயங்கும் ஒரு மின்சாரப் பொம்மை தான் மேலும் பாதுகாப்பான உடற்பயிற்சி செய்துகொள்ளுங்கள்

உடற்பயிற்சியின் போது இதயம் அதனது பளுவை குறைத்து கொண்டு மிதமாக இயங்குகின்றது. எதற்காக என்றால் அதிகரிக்கும் இரத்த சுற்றுக்கு உடல் தசைகளும், உடற்சூடும் காலில் தேக்க நிலையிலுள்ள குளிர்ந்த  இரத்தத்தை உந்தி இழுத்து உதவிசெய்கின்றது மற்றும்  மின்னோட்டத்தையும் சீர் செய்கின்றது. எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய முக்கியமான இந்த பரிந்துரைகளை சுருக்கமாகக் கூறியுள்ளேன் கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள். நன்றி....

ஹிஸ்டமின் சகிப்புத்தன்மை ஹிஸ்டமின் உடலில் அதிகமானால் குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படுமா. கண்டிப்பாக ஹிஸ்டமின் இரத்த நாளங்களை விரிவடைய வைத்து குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு அதிகரிக்க காரணியாகின்றது. இதனால்த்தான் அலர்ஜி உள்ளவர்கள் எப்பவும்   சோர்மானமாக காணப்படுவார்கள்.

ஹிஸ்டமின்  மூன்று வழிகளில் உடலில் வந்து சேர்கின்றது ஒன்று மாஸ்ட் செல்கள் உற்பத்தி செய்யும் ஹிஸ்டமின். இரண்டாவது உணவின் மூலம் வந்துசேரும் ஹிஸ்டமின் மற்றது  குடலில் வாழும்  கெட்ட பாக்டீரியாக்கள்  உற்பத்தி செய்யும் ஹிஸ்டமின்.

பெரும்பாலும் ஹிஸ்டமினை உடல் சுயமாக உற்பத்தி செய்கின்றது, அலர்ஜி/ ஒவ்வாமைக்கு காரணியானது. உணவு செரிமானத்தின் போது இரைப்பை சளிச்சுவர்கள் மற்றும் மகரந்தம் தூசி சகிப்பின்மை, குடலில் அழற்சி, புண்கள் ஏற்படும் போது நோயெதிர்ப்பு  செல்களினால் உற்பத்தியாகி அழற்சி மத்தியஸ்தராக இது பணியாற்றுகின்றது.

எடுத்துக்காட்டாக: கை காலில் செடி முள் கீறினால் அல்லது குளவி கொட்டினால் அந்த இடத்தை சுற்றி ஒரு இதமான அரிப்பும் வீக்கமும் ஏற்படுவதற்கு மாஸ்ட் செல்கள் உற்பத்தி செய்யும் ஹிஸ்டமின்தான் காரணம்.

மாஸ்ட் செல்கள் என்பது உடலின் சொந்த பாதுகாப்பின் செல்கள், அவை ஹிஸ்டமின் மற்றும் ஹெப்பரின் உள்ளிட்ட தூதர் பொருட்களை சேமித்து வைத்திருக்கின்றன இந்த இரண்டு சமிக்கை பொருட்களுமே இரத்த நாளங்களை விரிவடைய வைத்து குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு அதிகரிக்க காரணியாகின்றது.

ஹிஸ்டமினின் முறிவு முதன்மையாக டயமைன் ஒக்சிடேஸ் (DAO) என்ற நொதியம் வழியாக நடைபெறுகின்றது. எனவே இது ஹிஸ்டமின் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது வெளியில் இருந்து உணவுகள் மூலம் வரும் ஹிஸ்டமினை உடைப்பதன் மூலம் அளவுக்கு அதிகமாக சேரும் ஹிஸ்டமினை வெளியேற்றி உடலை பாதுகாக்கின்றது.

டயமைன் ஒக்சிடேஸ் என்பது குடல் வளரிகளினால்  அல்லது மொட்டுக்களினால் உற்பத்தி செய்யப்படுகின்ற ஒரு நொதியம், இதன் உற்பத்தி முடக்கம் பரம்பரையாக வரக்கூடியது. இன்றைய மருத்துவ சந்தையில் டயமைன் ஒக்சிடேஸ் (DAO)  மாத்திரை வடிவில் கிடைக்கின்றது.

இரத்த நாளங்களின் விரிவு இதன் நிமித்தம் ஏற்படும் இரத்த அழுத்தத்தில் சரிவு, சளி சவ்வு வீக்கம், மூக்கு ஒழுகுதல், கண் தோல் அரிப்பு, ஆஸ்துமா மற்றும் தலையிடிக்கு காரணியாகின்றது.

ஹிஸ்டமின் உற்பத்தியில் மனிதனுக்கு கேடு விளைவிக்கும் ஒரு சில பாக்டீரியாக்களும் முன்னெடுக்கின்றன, ஹஃப்னியா ஆல்வீ, க்ளெப்செல்லா, என்டோரோபாக்டர், செராட்டியா, சிட்ரோபாக்டர், .கோலி. அல்லது மோர்கனெல்லா  பாக்டீரியாக்கள்.

இவை அத்துனையும் கெட்ட பாக்டீரியாக்கள், ஹிஸ்டமின் சகிப்புத்தன்மையை ஏற்படுத்தும்  அலர்ஜி/ஒவ்வாமைக்கு காரணியானது. இந்த பாக்டீரியாக்கள் குடலில் அதிகமாக காணப்பட்டால்  ஒவ்வாமையை உண்டுபண்ணும்.

விற்றமின்-C, B6,  துத்தநாகம், செப்பு போன்ற ஊட்டச்சத்து குறைபாடு, குடல்-வாழ்-நல்ல பாக்டீரியாக்களின் அழிவு .. ஆண்டிபாயாடிக் மருந்து, மற்றும் கலப்பு உணவுகள்.மாசுபட்ட சுற்றுச்சூழல், ஹிஸ்டமின்  மற்றும் தூண்டும்  உணவுகள் 

எடுத்துக்காட்டாக: இறால் நண்டு கத்திரிக்காய் போன்ற கிரந்தி உணவுகள் மேலும் செரிமானம் முடிவடைந்ததும் ஹிஸ்டமினை வெளியேற்றும் எம்சையும், குடலில் உற்பத்தியாகும் டயமைன் ஒக்சிடேஸ் (DAO)  குறைவு/ அல்லது உற்பத்தியை தடுக்கும் உணவுகள் மாத்திரைகள்.

எடுத்துக்காட்டாக: அமில மிகைப்பு மாத்திரைகள் மற்றும் மதுபானம்/ஒயின் இந்த இரண்டும் ஹிஸ்டமினை வெளியேற்றும் எம்சைமை தடுக்கின்றது. ஒருவருக்கு நீண்டகாலமாக ஹிஸ்டமின் சகிப்புத்தன்மை  இருந்தால் தூக்கமின்மை, இதயத்துடிப்பு அதிகரிக்க காரணியாகின்றது.

அலர்ஜி/ ஒவ்வாமை கோளாறை நிரந்தரமாக குணப்படுத்தமுடியாது, ஆனால் ஆன்டி ஹிஸ்டமின்க மருந்து மாத்திரைகள் மூலம் தணித்துக்கொள்ளமுடியும்.

அலர்ஜி, ஹிஸ்டமின் சகிப்புத்தன்மையை சாதாரணமாக நினைக்காதீர்கள் சின்ன சத்தம் கேட்டாலும் திடுக்கிட வைக்கும் அளவிற்கு உங்கள் இதயத்தை பலவீனப்படுத்தும்.

◼️அலர்ஜி, ஆஸ்துமா பரம்பரையாகவும் வரக்கூடியது மேலும் கிரந்தி/ஹிஸ்டமின் உள்ள உணவுகளை சமையல் செய்து சாப்பிட்டால் இல்லாது போகுமா என்று கேட்டால் எதிர் பொருட்களை உருவாக்கும் புரதங்கள் இருந்தால் மாற்றமடையும் திசுக்களில் சேமிக்கப்பட்ட ஹிஸ்டமின் கண்டிப்பாக போகாது,

◼️ஹிஸ்டமின் குளிர் மற்றும் வெப்பத்திற்கு நிலையானது மற்றும் சமையல், வறுத்தல் அல்லது பேக்கிங் அல்லது ஐஸ்கிரிம்/உறைபனி ஆகியவற்றால் ஹிஸ்டமினை அழிக்க முடியாது.

தேவைக்கு பயன்படுத்த வசதியாக ஹிஸ்டமின் உடலில் தீவிரமாக உருவாகி பல்வேறு உயிரணுக்களில் சேமிக்கப்படுகின்றது. மூக்கு, அரிப்பு, நீர் நிறைந்த கண்கள், வெப்பம், சிவத்தல், அரிப்பு, குறைந்த இரத்த அழுத்தம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் இரைப்பை குடல் கோளாறுகள் போன்ற எதிர்வினைகளை ஹிஸ்டமின் ஏற்படுத்துகின்றது.

◼️நோய் எதிர்ப்பு சக்தி பலம் குன்றிய வயதான காலத்தில் அலர்ஜி/ஒவ்வாமையின் தாக்கம் குறைந்து போகும் இதுவே இளமைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பலம் அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வாமை/அலர்ஜியின்  வேகம் அதிகரிக்கும், மிகைப்படைந்த நோய் எதிர்ப்பு அமைப்பு ஆபத்தானது.
கொரோனா வைரஸ் தொற்றின் நீண்டகால பாதிப்புக்கள் எப்படியிருக்கும். அதாவது தொற்று ஏற்பட்டு அரையும் குறையுமாக குணமடைந்திருந்தாலும் அல்லது எந்த விதமான நோய்க்குறிகளும் தெரியாமல் லேசான சாய்வுகளுடன் கொரோனா வைரஸ் தொற்றியிருந்தால் பிற்காலத்தில் என்னென்ன பாதிப்புகளை கொண்டுவரும்.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் பூராகவும் 75 விழுக்காடு மக்களை தொட்டிருக்கின்றது இது வைரஸ்களின் தந்திரங்கள் தெரிந்த எவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இருப்பினும் இன்னும் ஆய்வுகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படவில்லை காரணம் கொரோனா வைரஸ் பரவியதின் நோக்கம் இன்னும் சரியாகத் தெரியாது இனிமேல்தான் ஒன்றொன்றாக வெளியில் வரும்.

கொரோனா வைரஸ் காற்றில், மழையில், வெயில் காலத்தில்  அதிகமாக பரவுமா என்று கேட்டால் வெளியில் சிதைவுறாமல் இருந்தால் கண்டிப்பாக தொற்றும் அபாயம் இருக்கின்றது. நெரிசலான இடங்கள் சுற்றுலாபயணம், விமானம்ரயில் பஸ்களில்  நெருக்கமான பயண இருக்கைகள் மற்றும் அதிகம் நெருக்கமாக வசிக்கும் அறைகள், அரங்கங்கள், வகுப்பறைகளில் மிகவும் விரைவாக காற்றில் பரவுகின்ற அபாயம் இருக்கின்றது

கொரோனா வைரஸ்கள் இருமல் தும்மலின் போது தெளிக்கப்படும் நீர்த்துளிகளில்  என்ன பங்கு வகிக்கின்றன? பெரும்பாலும் பெரிய துளிகள்  தரையில் விரைவாக மூழ்கிவிடும் அது கண்ணுக்கு தெளிவாகின்றது ஆனால்  கொரோனா வைரஸ்கள்  கண்ணுக்கு தெரியாத மிகச்சின்ன நீர்த்துளிகளில்  காற்றில் பறந்து நீண்ட காலம் இருக்கக்கூடும் இதன் நிமித்தம் மழைக்காலங்களில் மற்றும் ஈரலிப்பான பகுதி, காலங்களில் தொற்று அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். காற்றில் பறந்துவரும் ஒரு மினி நீர்த்துளியில் 10,000 மேற்பட்ட வைரஸ் கூட்டம் இருக்கும்.

கொரோனா வைரஸ் தொற்றின் நீண்டகால பாதிப்புகளில் மிகவும் முக்கியமானது மூளை சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளின் செயலிழப்பு மற்றும் நரம்பு மண்டலத்தின் பாதிப்புக்கள். சுவை மணம் அறிதல் நிரந்தரமாக இல்லாது போதல் மற்றும் சோர்வு களைப்பு இவர்களை நிரந்தரமாக பின்தொடரும் பழையபடி இவர்களினால் சுறுசுறுப்பாக இயங்கமுடியாமல் கூட போகலாம்.

மேலும் இதில் மிகவும் ஆபத்தான பாதிப்புக்கள் எதுவென்றால் புத்தி பேதலித்து நடந்து கொள்ளுதல் மற்றும் அறிவுத்திறன் புத்திமக்கு பேச்சுத்திறனில் மந்தம் பக்கவாதம் மாரடைப்பு ஏற்படலாம் இதெல்லாம் வருங்காலத்தில் குணமான மற்றும் மந்தமான கொரோனா தொற்றுநோயாளிகள் சந்திக்கவிருக்கும் பிரச்சனைகள் இந்த கோளாறுகளுக்கு சரியான காரணங்கள் கூட சொல்லமுடியாமல் போகலாம்.

இதற்கான காரணம் எதிர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடும் எங்களுடைய நோய் எதிர்ப்பு சக்திதான் முழுமுதற் காரணியாக இருக்கின்றது. சாதாரணமாக கொரோனா வைரஸை காட்டிலும் கோவிட் 19 வைரஸ்களுக்கு எங்களுடைய நோய் எதிர்ப்பு அமைப்பு அதிகமாக கோவமடைந்து மிகைப்படைய வைக்கின்றது.

கொரோனா, சார்ஸ்-கோவி -2, கோவிட் -19 வைரஸ்களை சாதாரணமாக நினைக்காதீர்கள் அது உங்களின் சுகந்திரத்தில், எதிர்காலத்தில் கைவைத்திருக்கின்றது வளரும் சந்ததியினரின் தொழில், வேலை வாய்ப்பு, பள்ளிப்படிப்பு, ஆரோக்கியம் என்று சகலத்தையும் கேள்விக்குறியாக்கிய கோவிட்-19, 100 வருட பொருளாதாரத்தையும் அடித்து  நொருக்கி தின்று ஏப்பம் விட்டிருக்கின்றது.   

கோவிட்-19 நீண்ட கால விளைவுகள்

மூளை அழற்சி போன்ற நரம்பியல் கோளாறுகள்
மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டல பாதிப்புக்கள்
47% அன்றாட நடவடிக்கைகளில் சோர்வு/களைப்பு.
32% தினமும் தலைவலி, மனப்பாரம் 
18% தலைச்சுற்றல் மற்றும் லேசான தலைவலி
சுவாச பிரச்சனைகள்
24% மூச்சுத் திணறல், மூச்சு விடுவதில் சிரமம்
மூச்சுத் திணறல் உணர்வுகள், களைப்பு
செரிமான பிரச்சனைகள்
11% வயிற்றுப்போக்கு,
தோலில் மாற்றங்கள்
8% சொறி, தடிப்புகள்
இருதய பிரச்சினைகள்
ஒழுங்கற்ற இதய துடிப்பு, மெதுவான இதயத்துடிப்பு.
வளர்சிதை மாற்ற கோளாறுகள்
சர்க்கரை நோய், சக்தி மாற்ற கோளாறுகள்(ATP)
ஒரு கேள்வியாக இதற்கான பதிலை தேடுகின்றேன் புதிய கொரோனா வைரஸ் ஆண்கள் பெண்கள் மத்தியில் மலட்டுத்தன்மையை கொண்டுவரும்.

இனியும் தடுப்பூசி  தேவையா....? முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு உலக மக்கள் கொரோனாவில் நனைந்த பிற்பாடு தடுப்பூசி ஒன்று தேவையாஉங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள் கொரோனா தொற்றிலிருந்து இயற்கையாகவே  உடலில் வைரஸ்களுக்கு எதிராக ஒரு காப்பு ஏற்பட்டுவிட்டது இதற்கு மேலேயும் இன்னுமொரு காப்பு தேவையா, புதிதாக பிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கு வேண்டுமென்றால் தடுப்பூசி பயன் உள்ளதாக அமையும்.

சரி இருக்கட்டும் தடுப்பூசி எதற்காக போடப்படுகின்றது ஒரு தொற்றுநோயை வருமுன் காப்பதற்கு, தடுப்பூசியின் தத்துவம் ஒருமுறை வந்தால் திரும்ப வராது அப்படி வந்தாலும் பெரியதாக பாதிப்புகளை ஏற்படுத்தாது என்பது பெரியம்மை போலியோ போன்ற தொற்று நோய்கள் பண்டமி என்ற நிலவரம் இல்லாத காலத்தில் ஒரு காப்பாக போடப்படுகின்றபோது அது பயன் உள்ளதாக இருக்கின்றது எடுத்துக்காட்டாக ஆசியாவில் ஒரு தொற்று நோய் பரவினால் ஐரோப்பா மக்கள் தடுப்பூசி போட்டால் அதில் ஒரு எதார்த்தம் இருக்கும்.

கொரோனா பண்டமி வைரஸாக உலகம் பூராகவும் 75 விழுக்காடு மக்களை தொட்டிருக்கின்றது இதில் பாதிக்கு மேல் கோவிட் 19 வைரஸ்களுக்கு  எதிராகா ஆன்ரி உடல்கள்  வெளிப்பட்டு நினைவக செல்களில் பதிவும் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த வேலையைத்தான் தடுப்பூசியும் செய்யப்போகின்றது.

சுய காப்பு, பலமில்லாத வயதானவர்கள் நோயாளிகளை காப்பாற்றுவதற்கு வேண்டுமென்றால் தடுப்பூசிக்கு பதில் விரைவாக ஒரு தடுப்பு மருந்து வந்தால் உள்ளுறுப்பு சேதம், இறப்புகளை குறைக்க முடியும்.

பொதுவில் தடுப்பூசிகள் பிள்ளைகளுக்கு மட்டும் பயன் உள்ளதாக அமையும் 50, 70 வயதை கடந்தவர்களுக்கு அவ்வளவாக பலன் தராது, காரணம்  பலம் குன்றிய நோய் எதிர்ப்பு அதை உள்வாங்கி திறமையாக செயல்படாது மாறாக கடுமையான பக்கவிளைவுகளைத்தான் ஏற்படுத்தும்.(.....)

பல வகையான கொரோனா கிளை வைரஸ்கள் இருக்கும் போது ஒரு தடுப்பூசி பலன் தருமா.. ஏற்கனவே கொரோனா தொற்றி எந்த விதமான நோய்க்குறிகளும் இல்லாமல் இருக்கும் ஒரு நபருக்கு தடுப்பூசி போட்டால் என்ன நடக்கும்.(.....)

உண்மையை சொன்னால் இன்று வரைக்கும் எந்தவொரு வைரஸ்களுக்கும் எதிராக சரியான தடுப்பூசியோ, மருந்தோ கிடையாது அதற்கான காரணம் நிலையற்ற வைரஸ்கள்தான் அதாவது மரபணு பிறழ்ச்சிக்கு உள்ளாவது , தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கு அடிக்கடி மாற்றிக்கொள்வது. நீங்கள் ஒரு மருந்தை  வைரஸ்களுக்கு எதிராக எடுத்துக் கொண்டால்  அதை எதிர்க்கும் அடுத்த தலைமுறையை உருவாக்கிவிடும். இயற்கை சாகா வரம்  பெற்றது இன்று நீங்கள் பயன்படுத்தும் களைகொல்லிகளை எதிர்த்து வாழக்கூடிய புல்லினங்கள் கண்டிப்பாக உருவாகும்.

இன்றைய நிலவரங்களின்படி பத்து பேர்களில் மூன்று அல்லது நான்கு பேர்களுக்கு மாறுபட்ட மரபணு பிறழ்ச்சி உள்ளான வைரஸ் தொற்றியிருக்கும் இந்த நிலையில் எந்த வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசி போடுவது.

வைரஸ்கள் வேகமாக செறிந்து பரவும்போது வருடத்திற்கு ஒருமுறையல்ல நிமிடத்திற்கு ஒரு முறை தன்னை மாற்றியமைத்துக்கொள்ளும் ஒரு நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றது எடுத்துக்காட்டாக: ஒரு குடும்பத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால் தந்தைக்கும் தாய்க்கும் பிள்ளைகளிடையே பலதரப்பட்ட மரபணு பிறழ்ச்சிக்கு உள்ளான வைரஸ்கள் உருவாகியிருக்கும்.

தாய்க்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம் பிள்ளைகளுக்கு பாதிப்பு இல்லாமல் உறைந்தும் கூட போகலாம். கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்இன்னும் மரபணு பிறழ்ச்சிக்கு உள்ளாகாமல் இருக்கும் கொரோனா வைரஸ்கள் ஆபத்தானது இந்த வைரஸ்கள் வீறு கொண்டெழுந்த அலையாக மழைகாலத்தில் மிகவும் வேகமாக பரவலாம்.       

உன்னால் முடிந்தால் உன்னை நீ காப்பாற்றிக்கொள் மற்றவர்களை நம்பி ஏமாந்து போகாதே, உனக்காக கொடுக்கப்பட்ட காலம் குறுகியது. காற்றுள்ள போது தூற்றிக்கொள் பணம் உள்ளபோது சேர்த்துக்கொள் வழியுள்ள போது விழித்துக் கொள்.”