ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020


கல்லீரல் என்னும் மருந்துப்பெட்டகம்

கல்லீரல் மிகப்பெரிய மருந்துப்பெட்டகம் சகல நோய்களுக்குமான தீர்வும் பரிந்துரையும் மருந்தும் மருத்துவமும் இந்த இடத்திலிருந்துதான் முடுக்கிவிடப்படுகின்றது. இது பழுதடைந்துபோனால் அல்லது பழுதடையச் செய்யும் காரியங்களை மேற்கொண்டால் கல்லீரல் அதனது பணியை சிறப்பாக செய்யமுடியாமல் போகின்றது.

 

ஏதோ ஒரு காரணத்தின் நிமித்தம் கல்லீரல் பழுதடைந்து போனால் அதை திரும்ப நிலைநாட்ட, அதனது பணியை சிறப்பாக செய்வதற்கு அதற்கு ஓய்வு கொடுத்தாலே போதுமானது. ஒரு வருடத்திற்குள்ளே தன்னைத்தானே புதிப்பித்துக்கொள்ளும் அற்புத சக்தி படைத்தது கல்லீரல்.

 

ஓய்வு என்பது உங்களுக்கானது மட்டுமல்ல கல்லீரலுக்குமான ஓய்வைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கின்றேன். கல்லீரலுக்கான ஓய்வு என்பது நித்திய நைமித்திய விரதங்கள் கடைப்பிடிப்பது, எடுத்துக்காட்டாக கல்லீரலை பாழ்படுத்தும் உணவுகள் மதுபானம், பெரும்தீனிக்கு விலகியிருப்பது மற்றும் கண்டநேரமும் கண்டதை போட்டு அரைத்துக் கொண்டிருப்பது மற்றும் மருந்து என்ற பெயரில் கிடைச்ச தெல்லாத்தையும் அரைத்து போட்டு முழுங்குவது.

 

கல்லீரலுக்கான மிகச்சிறந்த மருந்து மருத்துவம் எது என்றுபார்த்தால் எதையுமே உண்ணாமல் இருப்பது/உண்ணாநோன்புநல்ல காற்றோட்டமான அறைகளில் உறங்குவது நன்னீர் மற்றும் உப்புநீரில் மாறிமாறி குளிப்பது.

 

இதையெல்லாம் கடந்து கல்லீரலை தாக்கி அழிக்ககூடியது வைரஸ்கள் கண்டிப்பாக மருந்து மருத்துவ உதவியின்றி குணப்படுத்தமுடியாது என்பதுதான் உண்மை. கல்லீரலை தாக்கி கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தும்

 

கல்லீரலின் நாள்பட்ட வைரஸ் தொற்றுகள். ஹெபடைடிஸ் B மற்றும் ஹெபடைடிஸ் C ஆகியவை உலகளாவில் மிகவும் பொதுவான தொற்று நோய்களில் ஒன்றாகும். பெரும்பாலும் இந்த வைரஸ் தொற்று உள்ளவர்கள் பல நாள்பட்ட  போக்கை கொண்டிருப்பார்கள் மேலும் இந்த வைரஸ் உடலில் தொற்றியிருப்பது நீண்ட வருடங்களுக்கு தெரியாமல் மறைந்திருந்து அதிக ஆபத்தை கொண்டுவரும்.

 

ஹெபடைடிஸ் சி வைரஸ் எச்..வி வைரஸ்க்கு இணையானது. சுகாதாரமற்ற இரத்த தானம்மகப்பேறு, அறுவைச்சிகிச்சை, மருத்துவமனை சிகிச்சை மற்றும் பாலியல் நோய்களுடன் நெருங்கிய தொடர்புடையது ஒரு முறை தொற்றினால் அவ்வளவு சீக்கிரத்தில் உடலைவிட்டு கழன்றுபோகாது வாழ்க்கை பூராகவும் உடலில் ஒட்டியிருந்து தொல்லை கொடுத்து தொல்லை கொடுத்து தொலைத்துகட்டிவிடும்.

 

கல்லீரலின்  இயற்கையான  திறன் பிகோர்னா RNA-வைரஸ் மற்றும் ஹெர்பெஸ் DNA-வைரஸ் குடும்பத்தை சேர்ந்த ஹெபடைடிஸ் -A,B-C,D,E–DNA 🧬 RNA வைரஸ்களினால் பாதிக்கப்படும் போது கல்லீரல் அதனது சேவையை சரியாக செய்ய முடியாமல் போக, இரத்தத்தில் அதிகரிக்கும் பிலிரூபின்  நிறப் பொருள் (பித்தநிறப்பொருள்) இதற்கு காரணமாக இருந்த  இந்த வைரஸ்களின் தாக்கத்தை கண்களின் மஞ்சள் நிறத்தை வைத்து அறிந்து கொண்டு, ஓரளவிற்கு மருந்துகள் மூலம் குணப்படுத்திக் கொள்ளமுடியும்.

 

கல்லீரல் அழற்சி, மஞ்சள் காமாலை நோய்க்கு வைரஸ்கள் மட்டுமில்லாமல் பாக்டீரியா, மலேரியா காய்சலை உண்டாக்கும் பிளாஸ்மோடியன் ஒட்டுண்ணி, அதிகளவு மதுபானம் இரும்புசத்து சேமிப்பு/நுகர்வு மற்றும் சுய-உடல்-தாக்கி-நோய்,(மிகைப்படைந்த நோய் எதிர்ப்பு சக்தி) கொழுப்பு கல்லீரல், பித்தப்பை கல்லடசல், மருந்துகளின் பக்கவிளைவுகளும் மிகப்பெரிய காரணியாகின்றது.  

 

A,B வைரஸ்கள்: பெரும்பாலும் அசுத்தமான உணவு, குடிநீர் மூலம்  இரைப்பை அமிலத்தை எதிர்த்து, சிதைவுறாமல் உடலில் பரவக்கூடியது மேலும் சில சமயங்களில்  சுத்தம் சுகாதாரம் இல்லாத மருத்துவமனை மகப்பேறு, அறுவைச்சிகிச்சை மூலமும் தொற்றக்கூடியதுஉடலில் தொற்றியிருப்பதை கூட சரியாக அறிந்து கொள்ளமுடியாதபடி பதுங்கியிருக்கும் இருப்பினும் அவ்வப்போது ஒரு சில நோய்க்குறிகளை  தென்படுத்தியிருக்கும் பரபரப்பான வாழ்க்கையில் அதை கவனத்தில் கொள்ளாமல் கடந்துபோயிருப்பீர்கள்.

 

இதற்கான தடுப்பு மருந்துகள்  தடுப்பூசிகள் மருத்துவர்களினால் பரிந்துரை செய்யப்படுகின்றது விரும்பினால் சுற்றுலாபயணங்களின் போது  ஓரிரு கிழமைகளுக்கு முன்பாக போட்டுக்கொள்ளலாம் மகிழ்ச்சியான உங்கள் பயணத்தை ரசிக்கதெருக்கடை பண்டங்களை ருசி பார்ப்பதற்கு பாதுகாப்பாக அமையும்.

 

பெரும்பாலும் மஞ்சள் காமாலை நோய்க்கு முழுமுதற்காரணி ஹெபடைடிஸ்-A  RNA ஒற்றைக்கால் வைரஸ் மற்றும் ஹெபடைடிஸ்-B DNA இரட்டைக்கால் வைரஸ்கள். இந்த வைரஸ்கள் உடலின் மாறுபட்ட எதிர்ப்பு ஆன்டி டல்களை வெளிப்படுத்தும் முழு இரத்தசீரம் / பிளாஸ்மா  IgG / IgM  வெளிப்பாடு மற்றும் மலம் மூலமும் அறிந்து கொள்ளமுடியும்.

 

ஹெபடைடிஸ்-C, RNA வைரஸ் (HCV)

1989-90 களில் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் இதற்கு  பல ஆண்டுகளுக்கு முன்னால் மக்களிடையே பரவியிருந்திருக்கின்றதுஇந்த ஹெபடைடிஸ்-C வைரஸ் நோய் HIV எய்ட்ஸ் வைரஸ்சை விட பல மடங்கு சக்தி வாய்ந்த உயிர்கொல்லி நோயாக பல்கிப்பெருகி வருகின்றது. இதற்கு எதிரான தடுப்பூசி இதுவரைக்கும் சாத்தியம் இல்லாத ஒன்றாகவே இருக்கின்றது அதற்கான காரணமும் நிலையற்ற இந்த வைரஸ்கள் தான்.

 

C-வைர‍ஸ்கள்  ஏற்படுத்தும் பாதிப்புகளும் மற்றய  ஹெபடைடிஸ் வைரஸ்கள் போல் கல்லீரல் அழற்சி அதை தொடரும் மஞ்சள் காமாலை நோய், இனிவரும் காலங்களில் இந்த வைரஸ்களும் கடுமையாக கல்லீரலை தாக்கி அழிக்கும் நோய்களில் முதல் இடத்தை  பிடிக்கப் போகின்றது என்று பலதரவு ஆய்வு அறிக்கைகள் எச்சரிக்கின்றன, தற்சமயம் மாறுபட்ட மேக்கப் தலைகளுடன் சதிராடும் கொரோனா வைரஸ்கள்போல இதிலும் மரபணு பிறழ்ச்சிக்கு உள்ளான பல கிளை வைரஸ்கள் இருக்கின்றது எடுத்துக்காட்டாக: அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஹெபடைடிஸ்-C 1 வைரஸ், ஆசியாவிற்கு வெவ்வேறு கிளை வைரஸ்கள் இருக்கின்றது.

 

கொரோனா வைரஸ்களுக்கும் ஹெபடைடிஸ் வைரஸ்களுக்கும் இடையிலான மிகப்பெரிய வித்தியாசம் எதுவென்றால் கொரோனா தனியாக வைரஸ் உறையை மட்டும் கொண்டது. மரபணு தகவல்கள் இதற்குள்ளே திறந்த புத்தகமாக இருக்கின்றது.

 

ஹெபடைடிஸ் B,C,D வைரஸ்கள் வெளி உறை மற்றும் பிரத்தியோகமாக கேப்சிட் என்று சொல்லக்கூடிய ஒரு அடைப்பகத்தையும் கொண்டுள்ளது இதற்கு இரண்டடுக்கு காப்பு அதற்குள்ளே வெளிக்காரணிகளினால் சிதைவுற்று போகாமல் பாதுகாப்பாக மரபணு தகவல்கள் வைக்கப்பட்டிருக்கின்றது மற்றும் அளவிலும் பெரியது. ஹெபடைடிஸ் A,E வைரஸ்கள் வெளி உறை இல்லாமல் தனித்து கேப்சிட் மட்டும் கொண்டது மற்றும் மறைந்திருக்கும் அளவு, அளவிலும் சின்னது  ஆனால் அதிகம் பாதிப்புக்களை ஏற்படுத்தாதது என்பது ஒரு மருத்துவகணிப்பு.

 

இந்த C வைரஸ்கள் போதை ஊசி மற்றும் தகாத பாலுறவுகள் மூலம் பரவக்கூடியது. ஹெபடைடிஸ் B மற்றும்வைரஸ்களின் நாள்பட்ட அழற்சி  இறுதி நிலைக்கு கொண்டு செல்லும் என அச்சுறுத்துகின்ற ஆய்வுகளும் அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது.

 

ஆரம்பத்தில் வைரஸ்களை அடையாளம் கண்டு மருத்துவ உதவிகளை நாடினால் முற்றுலுமாக குணப்படுத்தமுடியும் என்கின்றது நவீன மருத்துவம். நோய் தொற்றி ஆரம்ப காலத்தில் எந்தவிதமான நோய்க்குறிகளையும் வெளிப்படுத்தாது. தொற்று ஏற்பட்டு குறைந்தது 15,20 வருடங்கள் எந்த நோய்க்குறிகளையும் வெளிப்படுத்தாமல் மறைந்திருக்கும்.பெரும்பாலான வைரஸ்கள், எய்ட்ஸ் வைரஸ் தொட்டு கொரோனா வைரஸ் வரைக்கும் மிக நீண்ட காலம் நோய்க்குறிகளை  வெளிப்படுத்தாது மறைந்திருந்து தாக்கும் தன்மை கொண்டது.

 

இந்த வைரஸ்கள் அடையாளம் காணமுடியாமல் மறைமுகமாக கல்லீரலில் நாள்பட்டு மறைந்திருந்தால் வாழும்காலம் வரை ஏதாவது ஒரு நோயை சருடி மருந்தும் கையுமாக அலையவைத்து இறுதி படுக்கை வரை அழைத்துச்செல்லும் கொடூரமானதொரு வைரஸ் இதனுடன் கொரோனா வைரஸ் தொற்றும் சேர்ந்து ஏற்பட்டால் என்னவாகும்.?(.....)

 

ஹெபடைடிஸ்-D, RNA வைரஸ்(HDC)

B வைரஸ்சின் மறு உருவம் அல்லது அதனுடைய தொடர்ச்சி தான்,  D வைரஸ் என ஆய்வுகள் சொல்கின்றது இது B வைரஸ்சின் கோட்-புரதமுடன்-HBsAg பிணைப்பினை ஏற்படுத்திக் கொண்டு உருவான புது வகை வைரஸ்-HDV இது இயற்கையில் இல்லாத ஒரு வைரஸ் இதுவும் எய்ட்ஸ் நோயைப்போலத்தான் சக மனிதர்கள் மூலம் தகாத உறவுகளினால் பரவுகின்றது. மற்றைய தொற்றுநோய்களை காட்டிலும் ஹெபடைடிஸ் வைரஸ்கள்தான் மக்களிடையே பெருமளவில் பல்கி பெருகி பரவிக்கிடக்கின்றது.

 

மனிதன் எவ்வளவு அவதூறு படைத்த ஒரு விலங்கு காட்டில் ஏதோ ஒரு விலங்கில் இருந்த வைரஸை ஆய்வு என்ற பெயரில் தொற்ற வைத்துக் கொண்டு நாட்டில் புதுப்புது வைரஸ்களை உற்பத்திசெய்துவிட்டு வேடிக்கை பார்க்கின்றான்.ஆரம்பத்தில் ஏதோ ஒன்று இரண்டு வைரஸ்கள்தான் இயற்கையில் இருந்தது அதை ஆயிரக்கணக்கில் வகை வகையாக பெருக்கிவிட்ட பெருமை மனிதனையே சேரும்.

 

ஹெபடைடிஸ்-E RNAவைரஸ்(HEV) எச்சில் உமிழ்நீர் உணவின் மூலம் இரைப்பை அமிலத்தை எதிர்த்து உடலில் பரவக்கூடியது. அமிலத்தில் சிதைவுறாமல் குடலில் இருந்து கொண்டு குடல் சுருக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் இதனுடைய நோய்க்குறிகள் அனோரெக்ஸியா என்று அழைக்கப்படும் ஒரு குறைபாடு  

 

உணவில் நாட்டமின்மை, ருசி அறியாமை, ஓங்காளம் வயிற்றுப் பிரட்டல் நாளடைவில் எலும்பும் தோலுமான ஒரு உருவம், தொடரும் உடல்நலக்குறைவு, நாக்கு தடித்து பேச்சு உளறல் உச்சரிப்பு தடங்கல் ஏற்படும் மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட வைரஸ், ஹெபடைடிஸின் பொதுவான அறிகுறிகளையும் இந்த  இரண்டு கிளை வைரஸ்களும் ஏற்படுத்துகின்றது.

 

ஹெபடைடிஸ்-E வைரஸில் (HEV) 4 மரபணு வகைகள் உள்ளன. இவை அத்துனையும் கடுமையான கல்லீரல் வைரஸ், ஹெபடைடிஸை பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன, (ஹெபடைடிஸை என்றால் கிரேக்க மொழியில் கல்லீரல்+அழற்சி என்று பொருள்படும்.)

 

ஹெபடைடிஸ் வைரஸ்கள் A யில் இருந்து E யுடன் முடிந்துவிடவில்லை இதனுடைய தொடற்சியாக பல வைரஸ்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் இருக்கின்றது இதில் ஆபத்தானது எது என்று பார்த்தால் எந்தவிதமான பாதிப்புகளையும் வெளிக்காட்டாமல் கல்லீரலில் பதுங்கியிருந்து கருவறுக்கும் C , E வைரஸ்கள் தான்.

 

 ஆரம்பத்தில் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் தோன்றி நாள்ப்பட்ட சோர்வு, களைப்பு, பசியின்மை, மேல் வயிற்று வலி, மூட்டு மற்றும் தசை வலி, ஒருவேளை காய்ச்சல், கண் மற்றும் தோலின் மஞ்சள் நிறம் (மஞ்சள் காமாலை) சாம்பல்-மஞ்சள் மலம், பழுப்பு நிற சிறுநீர், தோலில் அரிப்பு என்று பல்வேறு அறிகுறிகள் தென்படும்.

 

இந்த வைரஸ்களின் தொற்றின் நோய்க்குறிகள் ஒன்று போல் இருந்தாலும் மாறுபட்ட நோய்களுக்கு ஆரம்ப அடிக்கல்லாக இருக்கின்றது. வளர்சிதைமாற்ற கோளாறு(சர்க்கரை நோய்) கல்லீரல் அழற்சி, கல்லீரல் சுருங்கி பாறையாகுதல் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகை தேடித்தரும் இதனால் பெருவாரியான சர்க்கரை நோயாளிகளை உற்பத்தி செய்துவிட்டிருக்கின்றது கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தும் இந்த ஹெபடைடிஸை வைரஸ்கள்.

 

இந்த வைரஸ்களுக்கு எதிராக இன்னும் சரியான தடுப்பூசியோ மருந்தோ கிடையாது அப்படி ஏதாவது ஒன்று இரண்டு மருந்து இருந்தாலும் எல்லோராலும் வாங்கமுடியாதபடி அதனுடைய விலை உயரத்திலிருக்கும். ஹெபடைடிஸை வைரஸ்களுக்கு எதிரான மருந்துகள் நச்சு காய்ச்சல், தலையிடி என்று கடுமையான பக்கவிளைவுகளையும் கொண்டது.

 

இன்னும் 10-15 வருடங்களில் ஹெபடைடிஸை வைரஸ்களுக்கு எதிரான மருந்துகள் வறுமைக் கோட்டுகு கீழ் வசிக்கும் மக்களுக்கு கிடைக்ககூடியளவு  மலிவுவிலையில் உற்பத்தி செய்யப்படும் என்று மருத்துவசந்தை செய்திகள் சொல்கின்றது.

 

மருந்துகள் தடுப்பூசிகளை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, வருமுன் காப்பு  சுத்தம் சுகாதாரம் இல்லாத உணவுகள் என்று தெரிந்தால் உண்பதை தவிர்ப்பது, தவறான வாழ்க்கையை விட்டு விலகுவது என்று முற்காப்பு நடவடிக்கைகள் சாலச்சிறந்தது.மேலும் சில தகவல்களை அறிந்து கொள்வதற்கு இதில் அழுத்தவும்     கல்லீரல்-நோய்கள்-iver-disease

 


முதுகெலும்பு கால்வாயின் சுருக்கம்

முதுகெலும்புடன்  இணைந்த நரம்புமண்டலத்தை முதுகெலும்பு கால்வாய் என்று அழைக்கப்படுகின்றது. இதில் ஏற்படும் தசை நெரிவு இதன் நிமித்தம் நரம்புகளில் நெருக்கம்  மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் இடையிலான  சமிக்கைகள் தடை, ஓடும் போதும் நடக்கும் போதும் கால்களில் வலி  மற்றும் கடுமையான முதுகுவலி கூட ஏற்படலாம் 


எடுத்துக்காட்டாக: ஒருவர் சாலையில் நிதானமாக நடக்கும் போது இனியும் தொடர்ந்து நடப்பது சாத்தியமில்லை ஏனென்றால் நடக்கவோ நிற்கவோ முடியாது என்ற நிலைக்கு  முதுகெலும்பு கால்வாயின் சுருக்கம்  தடையாகவும் காரணியாகவும் இருக்கின்றது.


தெருவில் நடந்து செல்லும் வழிப்போக்கர்களை கவனித்துக்பார்த்தால் தெரிந்து கொள்ளமுடியும் குறிப்பாக வயதானவர்கள்  பத்து அடி நடப்பார்கள் அதற்கு மேலே ஒரு அடி கூட எடுத்து வைக்கமுடியாமல் நின்று நின்று  களைப்பாறுவார்கள். இவர்களின் கால்கள் திடீர் திடீர் என்று களைத்து பாரமாகி அடுத்த அடி எடுத்து வைப்பதற்கே சிரமப்படுவார்கள் கண்டிப்பாக இவர்களுக்கு முதுகெலும்பு கால்வாயில் சுருக்கம் நெருக்கம் ஏற்பட்டிருக்கும்.


இதற்கான  பல காரணங்களை முன்வைக்கலாம் முதுமை, விபத்து, நோய்கள் குறிப்பாக முதுகெலும்பு  பாறையாகுதல், மிகைப்படைந்த வளர்ச்சி மேலும் கழலை கட்டிகள் நீண்ட நேரம் இருக்கை  பணிகள் மற்றும் உடல் பருமன், தொப்பை பாரம் துக்கும் வேலைகள் விளையாட்டுக்கள், தவறான அசைவுகள், உடற்பயிற்சி என்று காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்இதில் ஏதோ ஒன்று இரண்டு காரணிகள் முதுகெலும்பு கால்வாயின் சுருக்கத்திற்கு காரணமாகலாம்.


இதுபோன்ற காரணிகள், தவறுகளால் ஏற்படும் முதுகெலும்பு கால்வாய் நெருக்கத்தை ஆரம்பத்தில் கண்டறிந்து மருத்துவ உதவியுடன் குணப்படுத்திக் கொள்ளமுடியும் மேலும் இதற்கான மாற்றுவழி பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மையங்களும் இருக்கின்றது.


ஒரு சிறிய குறைபாடு வாழ்க்கையில் பெரும் பிரச்சனைகளுக்கு அடிகோலியாக அமைந்துவிடுகின்றது இல்லையா. மனித உடலை ஒரு மின்சார பொம்மையாகவும் லட்ரானிக் கருவியாகவும் மனதில் வைப்பீர்களானால் உங்கள் உடல் பழுதுகளை நீங்களாகவே  பழுதுபார்த்து கொள்ளமுடியும்.

கடவுள் இறந்துவிட்டார், நாங்கள் அவரைக் கொன்றுவிட்டோம் நாம் அனைவரும் கொலையாளிகள் நம்மை நாம் எப்படி ஆறுதல்படுத்துவோம், கடவுள் மறுப்பு தத்துவ ஞான சாஸ்த்திரங்கள் கடவுள் இறந்துவிட்டார் என்று சொல்லும் சித்தாந்த நூல்களும் படிப்பதற்கும் கேட்பதற்கும் வேண்டுமென்றால்  நல்லாயிருக்கும் ஆனால் அது நல்லொரு சமூகநீதிக்கு நல்ல  மனித வாழ்க்கைக்கு ஒருபோதும் உதவாது.


பிரெட்ரிக் வில்ஹெல்ம் நீட்சே ஒரு ஜெர்மன் கிளாசிக்கல் தத்துவவியலாளர்.(1844-1900) தொழில்: பேராசிரியர். மணமாகாதவர், பல தீராத நோய்களுக்குள்ளே சிக்கியுள்ள ஒரு ஆன்மா, நீட்சே பல நல்ல தத்துவங்களையும் கருத்துக்களயும் தனது இரண்டாவது விருப்பமாக பல நல்ல கவிதைகள் மற்றும் இசை அமைப்புகளையும் எழுதி இந்த உலகத்திற்கு தந்துவிட்டு போனவர்நீட்சே பகவான் புத்தரை போல் தனித்துவமானவர், அவரின் அடையாளம் புல்லுக்கட்டு போல் வளர்ந்திருக்கும் அவரின் மீசை.


அவர் கடவுள் இறந்துவிட்டார் என்று சொன்னது மனிதர்கள் உருவாக்கிய மதக்கடவுள்களை குறிப்பாக கிரேக்க தத்துவ கடவுள்களை, இதற்காக அவர் விவாத மேடைகளை கூட சந்தித்திருக்கின்றார் நீட்சே கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு மனிதர் அவர் தன்னை பீடித்துள்ள தீராத நோய்களை குணமாக்கவேண்டி அடிக்கடி பிராத்தனை செய்திருக்கின்றார்.


பகவான் புத்தரும் இயேசுவும் கடவுளின் பெயரால் செய்யப்படும் கொடூரங்கள், பலிகளை எதிர்த்து இறைமறுப்பு செய்தார்கள் உங்கள் கடவுள்களை நாங்கள் கொன்றுவிட்டோம் உங்கள் பாவங்களின் பலி ஆடு நானே, இதோஉங்களுக்காக  பரலோக ராஜ்ஜியம் திறந்திருக்கின்றது. ”இயேசு பரலோக பிதாவே' என்று தனக்குள்ளே ஒரு நிலையான கடவுள் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டார்.  


நீட்சே ஒரு தத்துவ ஞானி மட்டுமின்றி அவர் ஒரு தீர்க்கதரிசி அடுத்த இரண்டு வருடங்களில் ஐரோப்பாவில் என்ன நடக்கப்போகின்றது என்பதை சொன்னவர், ஐரோப்பாவில் பின்னால் நடக்கப்போகும் துன்பங்களை முன்னாடியே அறிந்தவர்.


நான் சொல்வது அடுத்த இரண்டு நூற்றாண்டுகளின் கதையை, நான் வருவதை விவரிக்கின்றேன், வேறு எதுவும் வர முடியாது, நெலிசத்தின் தோற்றம் தொடர்ந்து நடக்கப்போகும் செயல்முறைவடிவம் இது”


இதன்பொருள்: இது முதலாம் இரண்டாம் உலகயுத்தங்களுடன் முடிவடையும் செயல் கிடையாது தொடர்ந்து இந்த பூமியில் நடத்தப்படும்/நடத்தப்படவிருக்கும் ஒரு செயல்முறை வடிவம் இது.(Process format) அவங்களுடைய கைகளில் ஒரு படிவம் இருக்கின்றது அதன்படி அன்றிலிருந்தே இன்றுவரை இந்த உலகம் நகர்ந்து வந்திருக்கின்றது.


நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுத்தபிற்பாடும் அவர்கள் உங்களிடம் வந்து அரிசிதா, பருப்புத்தா, காசுதா என்று தொல்லை  கொடுத்தால் என்ன சொல்லுவீர்கள் அவனை உழைத்து சாப்பிட சொல்லு, சொந்த காலில் நிற்கசொல்லுஇன்னும் ஒருபடி மேலேபோய் இனிமேல் என்னிடத்தில் காசு கேட்டு வராதே உன் அப்பன் செத்துவிட்டான் என்றுபோய் சொல்லு என்பீர்கள். அதற்காக நீங்கள் இறந்துவிட்டதாக பொருள்படுமா என்ன.


நெலிசம் என்பது கடவுளை ஒரு மறைபொருளாக பயன்படுத்துவது, கடவுள் நமக்கு இனிமேல் உதவமாட்டார் நாமே நம்மை காப்பாற்றிக்கொள்வோம் இது நீட்சேயின் அடிப்படை தத்துவம்.


நெலிசம் என்ற சொல் கிரேக்க தத்துவத்திலிருந்து வந்தது இந்த சொல்லுக்கு சரியான பொருள் எவருக்கும் தெரியாது. பண்டையகாலத்தில் ஏதோ ஒரு தோற்றத்திலிருந்து வந்திருக்கலாம்.


நீட்சே இதற்கு நெலிசம் என்ற சொல்லை பயன்படுத்திக்கொண்டார், கிரேக்க தத்துவஞானிகள் உலகம் பூராகவும் பரந்துவிரிந்து அந்தந்த நாடுகளின் மொழிகளை கற்று பல தத்துவ நூல்களை எழுதிவைத்தார்கள்,


குறிப்பாக இந்தியாவில் இன்றும் கூட பெயர் தெரியாதவர்களினால் எழுதப்பட்ட பல நூல்கள் இருக்கின்றது அந்த தத்துவ ஞான சாஸ்த்திர நூல்கலெல்லாம் கிரேக்க தத்துவஞானிகளினால் எழுதப்பட்டது/ எழுதப்பட்டிருக்கலாம்.


நீட்சே இன்றைய நவீன உலகத்திற்கு முதல் வித்திட்டவர், மனிதா நீ கடவுளை நம்பிக்கொண்டிராதே நாங்களாகவே எமக்காக ஒரு புது உலகத்தை உருவாக்குவோம்.” அவரின் நல்ல பல கருத்துக்களை தவறாக புரிந்து கொண்டார்கள். நான் மனிதனல்ல நானொரு டைனமைட் உங்கள் பாழ்பட்ட மனங்களை தகர்த்தெறியப்போகின்றேன்” அன்று அந்திக்கிறிஸ்துவாக பேசப்பட்டவரும் இவரே.


கடவுள் மறுப்பு புத்தகங்கள், தத்துவங்கள் ஒரு புத்தரையோ அல்லது  ஒரு ஞானியையோ உருவாக்கவில்லை மாறாக ஒரு கொலைகாரன் ஹிட்லரை உருவாக்கிவிட்டது. 75 வருடங்கள் கடந்த நிலையிலும் இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்திய காயங்கள், பாவங்களிலிருந்து ஜெர்மன் மக்கள் இன்னும் விடுபடவில்லை.


அதற்காக அவங்கள் இன்றும் கூட மனவருத்தப்படுகின்றார்கள் தாங்கள் யூத மக்களுக்கு செய்த பாவகாரியத்திற்காக பல தானதர்மங்கள் மற்றும் வறியநாடுகளுக்கு உதவிகள் செய்கின்றார்கள்.


போர்களினால் பாதிக்கப்பட்ட அகதிகளை எடுத்து பராமரிக்கின்றார்கள்..நாங்கள் எந்தக்காலத்திலும் யுத்தங்கள் செய்யமாட்டோம் ஜெர்மன் மண்ணில் இனி யுத்தம் என்னும் சொல்லுக்கு இடமே இல்லை என்று பலமான அரசியல் சட்டங்களை உருவாக்கிவைத்திருக்கின்றார்கள்.


நீட்சேயின் சமகாலத்தில், ஐரோப்பாவில் மதவாத கொள்கையினால் அப்பாவி மக்கள் சூனியக்காரர்கள் என முத்திரை குத்தப்பட்டு உயிரோடு தீயிலிட்டு கொல்லப்பட்டார்கள், மனமுடைந்து "போங்கடா நீங்களும் உங்கள் மதக்கொள்கைகளும் கடவுள் இறந்துவிட்டார்” என்று சொந்த மதத்திற்கு எதிராக கடவுள் மறுப்பு கொள்கையை பரப்புரை செய்தார்.  


நீட்சேயின் கனவு, மனிதன் எந்தவிதமான மதக்கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் இல்லாமல்  சுகந்திரமாக சிந்தித்து சுகந்திரமாக வாழவே ஆசைப்பட்டார், ஆனால் ஐரோப்பாவில் இதற்கு எதிர்மாறாக நடந்தது, மக்கள் ஆட்டு மந்தைகளாக அடைக்கப்பட்டு ஊதியம் இல்லாத கட்டாய வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள்.


நான் ஹிட்லர், ஜோசப் ஸ்டாலின் வருகையை குறித்து பேசுகின்றேன். இவர்களினால் ஐரோப்பா தீயிலிட்டு எரிக்கப்படபோகின்றது”.


தத்துவஞானிகள் கடவுள் மறுப்பு கொள்கையை உருவாக்கி விட்டதிற்கான காரணம் மனிதன் தொட்டதற்கெல்லாம் கடவுளையே நம்பிக்கொண்டிருந்தான் அவனை அவன். முயற்சியில் வாழவைப்பதற்கும் மனித சக்தியை வென்றெடுப்பதற்காக இறைமறுப்பு தத்துவங்களை பரப்புரைத்தார்கள் இதனால் தேவாலயத்திற்கு செல்வோர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து  ஐரோப்பாவில் பல கண்டுபிடிப்புகளும் தொழில் வளர்ச்சியும் ஏற்பட்டது.


எல்லா கடவுள்களும் இறந்துவிட்டார்கள் இப்போது நாமே நமக்கு சூப்பர்மேனாக வாழ வேண்டும் என்று விரும்புகின்றேன்”


ஒட்டுண்ணிநோய்கள்(பிளேக்) ஸ்பானிஷ் காய்ச்சல் கடவுள் மனிதனுக்கு கொடுத்த தண்டனை என்று நம்பிக்கொண்டிருந்த மத நம்பிக்கையுள்ள மனிதனை ரஷ்ய விஞ்ஞானிகள் இல்லை, இதெல்லாம் பாக்டீரியா, தொற்றுநோய் கிருமிகளினால் வந்தது என்று விவாதிக்கப்பட்டு மருந்துகளை கண்டுபிடித்தார்கள். (வைரஸ்கள் பற்றி அறியாதகாலம்)


இதோ மனிதன் கடவுளின் உதவியின்றி வாழமுடியும் என்று நிருபித்துவிட்டான்” நான் உண்மையான கடவுள் உலகத்தை பற்றி பேசுகின்றேன்.


நீட்சேவின் நவீன ஐரோப்பாவின் கனவு முடிந்துவிட்டதாகத் தெரிகின்றது. அதற்கு பதிலாக, ஐரோப்பாவில் ஒரு புதிய தேசியவாதம் செழித்து வளர்கின்றது நீட்சே அதை கொம்பு வைத்த கால்நடை தேசியம் என்று விவரித்தார்,


முதலாளித்துவம், சோசலிசம் (கால்நடை கொம்பு தேசியம்) முதலாளித்துவம் உள்ளம்கை என்றால் சோசலிசம் பிறங்கை போன்றது”


பொதுவுடைமை கொள்கையில் மனிதர்கள் எல்லோரும் சமம் அதற்காக உழைப்போம் என்று சொல்லி அவர்களை கால்நடைகளாக பயன்படுத்தி அவர்களின் உழைப்பை திருடினார்கள்.   இந்த மண்ணில் மனிதர்கள் எப்போதும் ஏற்றத்தாழ்வு உள்ள மனிதர்களாகத்தான் வாழ்கின்றார்கள்/வாழ்ந்திருக்கின்றார்கள். மனிதர்கள் எப்போதும் சமனாக, சமமாக இருந்ததில்லை  சோசலிசம் பொய்யானது.


இதற்குப் பின்னால் ஏதேனும் சித்தாந்த சிந்தனை இருக்கின்றதா, பொதுவான நலன்களைச் சுட்டிக்காட்டும் ஏதேனும் மதிப்பு இருக்க முடியுமா, இவர்களே தங்களை ராஜாக்களாகவும் கடவுள்களாகவும் மாற்றிக்கொண்டார்கள்”


ஹிட்லர், கார்ல் மார்க்ஸ் சோசலிசம் ஜோசப் ஸ்டாலின் இதே கடவுள் மறுப்பு, நாத்திக கொள்கையை வைத்து மக்களை கூட்டம் கூட்டமாக அடைத்து வைத்து கொன்று குவித்தார்கள். அன்றைய நீட்சேவின் விமர்சனங்கள் நித்தியமாக இருக்கின்றது.


கடவுளாக மாற வேண்டிய அவசியமில்லாத அத்துனை கொலைகாரர்களின் கொலைகளுக்கு நாம் எப்படி ஆறுதல் கூறுவோம்.” யூதர்களுக்கு எதிரான பெயர் மோசமாக்கப்பட்டது. யூத-விரோத செயல் மூர்க்கத்தனமான முட்டாள் கும்பலை யூதர்கள் மன்னிப்பார்களா.


நீட்சே அடக்குமுறை தேசியவாதத்திற்கு எதிரானவர் அவர் எப்படி கடவுள் நம்பிக்கைக்கு எதிராக இருந்திருப்பார். சண்டை இல்லாத ஐரோப்பாவின் ஒற்றுமை கூட்டமைப்பு அவரின் கனவு.


நல்ல கூட்டுறவு  திடமான தொழில் வளர்ச்சி, ஒரு கனவு 30 வருட யுத்தம் மற்றும் பல நெருக்கடிகளுக்குப் பிறகு பல தசாப்தங்களாக, படிப்படியாக நனவாகியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம். ஜப்பானியர்கள், சீனர்களின் தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக இருந்ததும் நீட்சேயின் இந்த கனவுகள்தான்


மனிதன் ஒரு விலங்கு, எந்த நேரத்தில் என்ன செய்வான் என்று அவனுக்கே தெரியாது. மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை எவ்வளவு முக்கியமானது சமூகநீதியை, சமூக ஒழுக்கத்தை வளர்த்தெடுக்க உதவியிருக்கின்றது..


"நாட்டை காக்க வேண்டிய அரசனிடம் உன் மத சிந்தனையை விதைக்காதே, உன் தேசம் அடிமைப்பட்டு போகும்"


மாமிசம் சாப்பிட தெரிந்தவர்களில் எத்தனை பேர்களுக்கு அந்த ஆட்டை வெட்டுகின்ற தைரியம் இருக்கும், "உன் அன்பு நெறியை அவனுக்கு போதிக்காதே உணக்கு உணவு இல்லாமல் போய்விடும்."


நீங்கள் இன்னும் சகமனிதனினால் மதிக்கப்படுகின்றீர்களா, கடவுளுக்கு இணையாக வணங்கப்படுகின்றீர்கள் என்றால்  இன்னும் மனிதனுக்குள்ளே இருக்கும் கடவுள் நம்பிக்கையும் அதனால் வந்த மனிதநேயமும் தான் காரணமாக இருக்கமுடியும்.


சக உயிர்கள் மேல் வைத்திருக்கும் மதிப்பு, கடவுள் மேலுள்ள பயம் கருனை மனிதனுக்குள்ளே இல்லை என்றால் அவன் எதற்குமே அஞ்சமாட்டான். தன் விருப்பம் போல் சகல உயிர்களையும் அடித்து துன்புறுத்துவான் சமூகநீதி சமூக ஒழுக்கம் சீர்குலைக்கப்படும் உங்களினால் ஒரு நாள் கூட நிம்மதியாக வாழமுடியாதபடி அவர்களின் ரவுடித்தனம் மேலோங்கியிருக்கும்.பள்ளிக்கு சென்ற பிள்ளையை காணவில்லை என்று தேடவேண்டிய ஒரு நிலையை உருவாக்கிவிடும்.


உங்களுக்கு பின்னால் இன்னுமொரு நல்ல சமூகத்தை விட்டுச்செல்லுங்கள் அது நல்ல ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கிவிடும்.

மதுபானம் VS மனிதன் (ஒருவருக்கொருவர் எதிராக (VS) குடிப்பவர்கள் எவரும் கெட்டவர்களும் கிடையாது, குடிக்காத எவனும் நல்லவனும் கிடையாது.”


மதுபானம் மக்களை மகிழ்விக்க வந்த ஒரு நடனக் கலைஞன், மது மனதை மயக்கும் ஒரு வித்தைக்காரன் அதை கண்டு யாரும் பயந்து விலகி ஓடவேண்டியதில்லை அதுவும் ஒரு வாசனை திரவிய பாட்டில் மாதிரி அவ்வப்போது அடித்துக்கொள்ளும் ஔடதமாக இந்த உலகில் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றது.


மனித உடலை பொறுத்தவரை சாராயம்/ ஆல்கஹால் ஒரு நச்சு, ஆனால் பரிணாம வளர்ச்சியில் உயிரினத்தின் கல்லீரலினால் பல பில்லியன் வருடங்களாக அறியப்பட்ட ஒரு நச்சு அதனால்தான் அதை தீவிரமாக உடல் வெளியேற்றுகின்றது. கல்லீரல் இந்த உதவியை செய்யவில்லை என்றால், மதுவை குடித்தவுடனே மனிதன் இறந்து போயிருப்பான்.


கல்லீரல் என்னும் மருந்து பெட்டகம் அவசரமருத்துவமனையை வைத்துக்கொண்டு இந்த உலகில் மது வியாபாரம் அற்புதமாக நடக்கின்றது. மதுபானத்தை பற்றிய ஒரு எதிர்மறை செய்திதான் இருப்பினும் இதுதான் உண்மை. சரி இருக்கட்டும் மதுபானத்தை நாங்கள் ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிடவும் முடியாது மதுபானத்திற்கென்று ஒரு சில நல்ல பக்கங்களும் உண்டு.


குடி குடியை கெடுக்கும் என்பது உண்மைதான் இருப்பினும் அதுவும் ஒருசில நல்லகாரியத்திற்கும் உதவுகின்றது.


மனவழுத்தம், வேலைப்பளு, உடல் வலி, மனச்சோர்விற்கு ஒரு மருந்தாக மதுபானம் பயன்படுகின்றது. மதுபானம் என்றொன்று இல்லை என்றால் இந்த உலகத்தின், இன்றைய நெருக்கடியில் ஒரு நிமிடத்திற்கு நூறுபேர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பார்கள்.


பெரும்பாலும் உயிர்காக்கும் மருந்து தயாரிப்புகளில் ஆல்கஹால் பயன்பாடு இன்றியமையாதது. தாவரங்களிலிருந்து வேதிப்பொருளை பிரித்தெடுப்பதற்கு உதவுகின்றது. மற்றும் வர்ணப் பூச்சு, தொற்றுநீக்கி, சுத்திகரிக்கும் திரவங்களில் இதனுடைய பங்களிப்பு இன்றியமையாதது.    


முதல் (மதுபானம்) திராட்சை ஒயின்  கிமு 3,000 ஆண்டில் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவும் தற்செயலான ஒரு அறிமுகம் தான் . பார்வோன், அரண்மனை தோட்டத்தில் அழகாக இருந்த திராட்சை பழங்களை பறித்து அரசவையில் பூச்சாடியில் வைத்து அழகு பார்ப்பான், அது நீண்ட  நாட்களாக அங்கேயே இருந்ததினால் அழுகி புளித்து போயிருந்தது,


கோவப்பட்ட அரசன் அதை சுத்தம் செய்ய மறந்த வேலைக்காரனை அழைத்து தண்டனையாக அதை குடிக்க வைத்தான். சற்று நேரத்தில் அவன் இறந்துவிடுவான் என்று நினைத்த பார்வோனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அவன் மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்து ஆடுவதை பார்த்தான் அன்றிலிருந்து திராட்சை ஒயின். இந்த உலகத்திற்கு அறிமுகமானது.


கோதுமை பீர் தன்னை இப்படி அறிமுகப்படுத்துகின்றது முதல் தானியம்/கோதுமை பீர்சுமேரியர்கள் கிமு 3000 இல்  தயாரிக்கப்பட்டது. நதிக்கரை நாகரீகம் ஒரு ஏழை குடியவன் வீட்டில் வீட்டுக்காரம்மா அரைப்பதற்காக கோதுமை அரிசியை தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, தன் தாய் வீடு சென்று திரும்புகையில்


தான் மறந்துவிட்ட கோதுமையை எட்டிப்பார்த்தாள் அது புளித்து நுரைத்துப்போயிருந்தது இனி அதை பயன்படுத்தமுடியாது, சோர்ந்து படுத்துக்கிடந்த  தங்கள் வீட்டு பசுக்களுக்கு அரைத்து நீரில் கலந்து வைத்தாள். அவளுக்கும் ஆச்சரியம் காத்திருந்தது சோர்ந்திருந்த பசுக்களும் துள்ளிக்குதித்து ஓடியது.


கிமு 9000 முதல் 5000 வரை பெயரிடப்படாத மற்றும் தெரியாத கண்டுபிடிப்பாளர்கள் தானியத்திலிருந்து பீர் தயாரிப்பது எப்படி என்று கண்டுபிடித்தனர். உலகின் முதல் உயர் கலாச்சாரம், தெற்கு மெசொப்பொத்தேமியாவில் உள்ள பண்டைய சுமேரியர்களுக்கு பீர் தயாரிக்க தெரியும் என்பது அகழ்வாராய்ச்சி மூலம் உறுதியானது. இது 8,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது


ஆனால் எகிப்தியர்கள், பிரமிட் கட்டிட பணியாளர்கள்தான் அதிகமாக பீர் குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்திருக்கின்றார்கள்.  சுத்தமான குடிநீர் கிடைக்காத இடங்களில் பீர் தண்ணீருக்கு பதிலாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.


தண்ணீரிலிருக்கும் நோய்க்கிருமிகள் எதுவும் பீரில் இருப்பதில்லை, பீர் ஒரு கிருமி கொல்லியாகவும் அன்றைய பயன்பாட்டில் இருந்திருக்கின்றது. இன்றைய அறிவியல் கண்ணோட்டத்துடன் பயன்படுத்தியிருக்கமாட்டார்கள் ஆனால் பீர் குடிப்பதினால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் அறிந்து வைத்திருக்கின்றார்கள்.


பீர் இல்லை என்றால் எகிப்தில் பிரமிட்களை கட்டுவதில் பெரும் சிரமங்களை அன்றைய கட்டிட பொறியாளர்கள் கொண்டிருப்பார்கள். கட்டிட பணியாளர்களின் பிரதான குடிபானமாக பீர் இருந்திருக்கின்றது. பீர் எகிப்தின் அரசு பானமாக அறிவிக்கப்பட்டு, எகிப்தில் விளைந்த தானியங்களில் பெரும் பகுதி பீர் தயாரிக்கவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.


பீர் தயாரிப்பு புரட்சியில் ஜெர்மன் மக்கள் தன்னிறைவு கண்டிருக்கின்றார்கள் ஜெர்மன் பீர் உலகில் முதல் தரமான மதுபானமாக  இன்றும் இருக்கின்றது.


திராட்சை ஒயின் அரச குடும்பத்தில் பிறந்தது, கோதுமை பீர் ஏழை குடியவன் வீட்டில் பிறந்தது. அதனால்தான் என்னவோ பீர் இன்று வரைக்கும் ஏழைகளின் குடிபானமாகவே இருக்கின்றது


தென்னை பனை மர கள்ளு இறக்குதல், சாராயம் வடிகட்டுதலின் செயல்முறையின் ஆரம்ப சான்றுகள் கிமு 3,000 நம் முன்னோர்களினால் வடிக்கப்பட்டிருக்கலாம். ஏட்டில் கல்வெட்டுகளில் எழுதப்பட்டததுதான் நாளைய சரித்திரமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. எழுதப்படாத செவிவழி கதைகள் நம்மிடத்தில் நிறைய உண்டு இவைகள் சரித்திரமாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.      


எளிமையான ஆவியாதல் செயல்முறைகளைப் பயன்படுத்துகின்ற அத்தியாவசிய எண்ணெய்களை உற்பத்தி செய்யும் தொழில் நுட்பம் கிமு13 ஆம் நூற்றாண்டில் சுமேரியர்களினால்(ஆதித்தமிழர்கள்அறிமுகமானது என்று இன்று நாம் அறிவோம்.


மிகவும் புகழ்பெற்ற கிரேக்க அறிஞர் ஹிப்போகிரேட்ஸ் (கிமு 460 முதல் 377 வரை) போதை விளைவுகளை கொடுக்கும்  மது, ஒயினையும் நன்கு அறிந்திருந்தார், ஆனால் ஆல்கஹாலை தனிமைப்படுத்தும் முறையை அவர்கள் அறிந்திருக்கவில்லை.


டாங் வம்சத்தின் போது சீனாவில் வடிகட்டிய சாராயத்தின் பயன்பாட்டிற்கு சான்றுகள் உள்ளன. பழங்களை ஊறவைத்து காய்ச்சி வடிகட்டுதல் மூலம் ஒரு பிராண்டியை தயாரித்தார்கள் அதை அவர்கள் குடிபோதைக்கு பயன்படுத்தாமல் நோய்களை  குணப்படுத்தும் ஒரு மருந்தாக பயன்படுத்தி இருக்கின்றார்கள்.


16-ஆம் நூற்றாண்டில் இயற்கை மருத்துவராக அறியப்பட்டு,  45 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் நிறைந்த நிபுணத்துவ பயிற்சி.பள்ளி நடத்தியவர், ரசவாதி, பொது இறையியலாளர் மற்றும் சமூக நெறிமுறையாளர் மருத்துவராக கருதப்பட்ட  ஸ்விஸ்-பாராசெல்சஸ் அவர்கள் மூலம் உயர்-ஆதார ஆல்கஹால் தொடர்பாக வடிகட்டுதல் பற்றிய முதல் நம்பகமான குறிப்புகள் உள்ளது.


குடிக்கக்கூடிய ஆல்கஹால் (எத்தனால்) நீலச்சுடர் எத்தனால் எல்லா வகையான மது பானங்களிலும் காணப்படுகின்றது, சில மருந்துகள் மற்றும்  பழங்கள் உணவுகளிலும் உள்ளது. (C₂H₆—OH) 40% அருந்தக்கூடியது இதற்கு மேலே 90% இதுவும் ஒரு எரிபொருள் கார் ஓட்டுவதற்கு பயன்படுகின்றது.


குடிக்க கூடாத ஆல்கஹால் (மெத்தனால்) பச்சைசுடர் நச்சு சாராயம் பிளாஸ்டிக் உற்பத்தியில் மெத்தனால் பயன்படுத்தப்படுகின்றது, வண்ணப்பூச்சுகள் மற்றும் வார்னிஷ்களுக்கு கரைப்பானாகவும் மோட்டார் வாகனங்களுக்கு எரிபொருளாகவும் பயன்படுகின்றது. (CH₃—OH) கள்ள சாராயம் வடிகட்டுபவர்கள் செய்யும் தவறு காய்ச்சும் போது அதனுடைய வெப்பநிலையை சரிபார்ப்பது கிடையாது இதனால் அந்த கலவை ஒரு கார்பனை இழந்து மெத்தனால் நச்சு சாராயமாக மாறுகின்றது.


குடிகார நாடுகளின் பட்டியல் 2010-2021 அதிகம் குளிர்நாடுகளில் வாழுகின்ற

மக்களே அதிகமாக குடிக்கின்றார்கள், இந்த மக்களே மிகவும் குடிபோதையிலும் மிதக்கின்றவர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்கள் குடிப்பதற்கு தாங்கமுடியாத குளிர் ஒரு காரணமாக இருக்கின்றது, காரணமே இல்லாமல் குடிக்கின்ற சமூகம் நம்ம சமூகம்தான்.


மதுபானம் இல்லாத நாடுகள்/ மிகவும் குறைவாக பயன்படுத்தும் நாடுகள். பொதுவில் சொன்னால் இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தான், பங்களாதேஷ், குவைத் போன்றவை.


1 பெலாரஸ் ஒரு தலைக்கு 17.5 லிட்டர் மதுபானம் அருந்துகின்றார்கள்.

2 மால்டோவா ஒரு தலைக்கு 16.8 லிட்டர்.

3 லிதுவேனியா ஒரு தலைக்கு 15.4 லிட்டர்

4 ரஷ்யா ஒரு தலைக்கு 15.1 லிட்டர்

5 ருமேனியா ஒரு தலைக்கு 14.4 லிட்டர்

6 உக்ரைன் ஒரு தலைக்கு 13.9 லிட்டர்

7 அன்டோரா ஒரு தலைக்கு 13.8 லிட்டர்

8 ஹங்கேரியர்கள் ஒரு தலைக்கு 13.3 லிட்டர்

9 செக் குடியரசு, ஸ்லோவாக்கியா 13 லிட்டர்

10 போர்ச்சுகல் ஒரு தலைக்கு 12.9 லிட்டர்

11 செர்பியா ஒரு தலைக்கு 12.6 லிட்டர்

12 கிரெனடா, போலந்து ஒரு தலைக்கு 12.5 லிட்டர்

13 தென் கொரியா, பின்லாந்து, லாட்வியா 12.3 லிட்டர்

14 ஆஸ்திரேலியா, பிரான்ஸ், குரோஷியா 12.2 லிட்டர்

15 அயர்லாந்து, லக்சம்பர்க் ஒரு தலைக்கு 11.9 லிட்டர்

16 ஜெர்மனி(ஐரோப்பா) ஒரு தலைக்கு 10,5 - 11.8 லிட்டர்

17 அமெரிக்கா,சீனா, இங்கிலாந்து ஒரு தலைக்கு 7,5 - 9.9 லிட்டர்

20 இலங்கை/இந்தியா ஒரு தலைக்கு 4.8 லிட்டர் அல்லது இதற்கும் அதிகமாக, குடிபோதையில் இறப்புவீதம் கூடிய நாடுகளில் முதல் இடத்திலிருப்பதும் நம்ம நாடுகள்தான்.


"உலக மக்கள் தொகை துப்பாக்கியின் கீழ் வைக்கப்படவில்லை, மாறாக விஞ்ஞானத்தின் முனையில் வைக்கப்பட்டிருக்கின்றது."


11 செப்டம்பர் 2001 இல் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் இரட்டை கோபுரங்கள் தகர்ப்பு, இதை  சாதாரணமாக நினைத்து விடாதீர்கள் அன்றிலிருந்து  இந்த உலக சரித்திரம் வேறுவிதமாக மாற்றி எழுதப்பட்டுவிட்டது. அதனுடைய முதல் அடிதான் ஈழத்தமிழர் போராட்டம் தகர்த்தெறியப்பட்டது. இதன் தொடர்ச்சியைத்தான் இன்று நாங்கள் பார்க்கின்றோம்.


இதை எப்படி புரிந்துகொள்வது, எடுத்துக்காட்டாக என்னுடைய பள்ளிப்பருவத்தில் நடந்த ஒரு நினைவை சொல்லுகின்றேன் எங்கள் நாட்டிற்கு முதல்முறையாக கோதுமை மா விற்பனைக்கு வந்தது அதை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை உணவு தயாரிப்பிலும் சேர்த்துக்கொள்ளவில்லை, தரம் குறைத்து மதிப்பிட பட்டு, அதிகமாக சுவர் ஒட்டி பசையாக பயன்படுத்தினார்கள்  இதை கண்டு பொறுக்கமுடியாத  நிறுவனங்கள் எங்கள் நாட்டையே பட்டினிக்காடாக மாற்றினார்கள்.


எங்கு பார்த்தாலும் உணவுத்தட்டுப்பாடு, உழுத்துப்போய் வண்டுகள் ஊரும் கோதுமை மாவில் தயாரித்த பாண் ரொட்டிகளை வரிசையில் நின்று வாங்கி சாப்பிடும்படி செய்தார்கள். ஒரு ரொட்டியில் நூறு வண்டுகளுக்கு மேலிருக்கும் நானே பிய்த்தெடுத்து பார்த்திருக்கின்றேன்.


என்ன வளம் இல்லை எங்கள் தாய்நாட்டில் விட்டுக்கொடுக்காத தன்மானம் வீட்டு முற்றங்கலெல்லாம் மரவள்ளி தண்டு ஊன்றும் படி செய்தது, பட்டினியை வென்றெடுத்தோம் புரிந்தவர்கள் புத்திமான்கள்.


எது நடந்தாலும் சரி, எங்கள் பூமி சுற்றுவதை ஒருபோதும் நிறுத்தாது டைனோசர்கள் இல்லை என்றால் என்ன, பரப்பிரமம் ஒரு யானை, மனிதனை வைத்து  இந்த பூமியை அழகு பார்க்கவில்லையா என்ன, மனிதன் இல்லாது அழிந்து போனாலென்ன இன்னுமொரு உயிரினத்தை உருவாக்கி வைத்து அழகு பார்க்கும் அற்புத திறன் படைத்தது எங்களுடைய பூமி,.  இந்த பூமி ஒருபோதும் அழிந்து போகாது அது தன்னைத்தானே புரணமைத்துக்கொண்டு உயிர்களை பிறப்பிக்கும்.


அன்று பெரிய விரிச்சங்கள், ஆலமரங்கள் உள்ள இடத்தில் யெல்லாம் இன்று மனிதர்கள் கட்டிடங்களை கட்டியிருந்தாலும் அதே இடத்தில் மீண்டும் விரிச்சங்கள் முளைக்கும் அதை எங்களினால் பார்க்கமுடியாது அதை டைனோசர்கள் வாழ்வதை கண்டு மகிழ்ந்த இந்த மண்ணும் நீரும் நிலமும் சூரிய சந்திரனும் பார்க்கும் பாக்கியமுள்ளவைகள். இவைகள் அத்துனைகளும் அழியா வரம் பெற்ற நித்தியங்கள்..      


நாங்கள் வாழும் இந்த பூமி எங்களுடைய சூரிய குடும்பத்தை சேர்ந்தது கிடையாது இன்னுமொரு பெரிய சூரிய குடும்பத்திலிருந்து இங்கு வாழ வந்தது, எங்கள் பூமி தனித்துவமான ஒரு கிரகம் இதை போல் வேறெங்கும் இல்லை தங்கம் வெள்ளி இரும்பு, செப்பு வைரம் வைரூரியம் மாணிக்கம், நீலம் முத்து பவளம் என பல பொக்கிஷங்களை சீர்வரிசையாக எமக்கு  கொண்டுவந்து கொடுத்துள்ளது.

கோல்டன் மடோனா என்னுடைய நகரம் - எசன் நகரத்தில்

எசன் நகரத்தை பாதுகாக்கும் தேவதையாக  கருதப்படும் முன்ஸ்டர் பெண்கள் தேவாலயத்தின் தங்க மாதா (கோல்டன் மடோனாஇந்த தேவாலையம் மத்திய காலம் 852 ம் ஆண்டு நிறுவப்பட்ட, உலகத்தில் முதல் மாதா வழிபாட்டு கலாச்சாரமாக சொல்லப்படுகின்றது.


மரத்தினால் செதுக்கப்பட்ட மாதா சிலைக்கு பளபளக்கும் தங்க சரிகை  பூசப்பட்டு கருவூலத்தில் மக்கள் வழிபாட்டிற்காக அன்று தொட்டு இன்று வரைக்கும் வைக்கப்பட்டிருக்கின்றது


யுத்தம், தீ வைப்பு, திருட்டு, சாதகமற்ற கால நிலை போன்ற அழிவுகளில் இருந்து இறை அருள் பாதுகாத்து அடுத்த தலை முறைக்கு கொடுத்திருக்கும் ஒரு அரிய பொக்கிஷமாக  கருதப்படுகின்றது


மிகவும் பழமை வாய்ந்த அரியவகை இரத்தினங்கள்  பதித்த தங்க மகுடம், கிண்ணம், விளக்குகள் மற்றும் பூசை உபகரணங்கள் போன்ற  அரிய பொக்கிஷங்களை இந்த தேவாலயத்தில் பார்க்க முடியும்


845-870  வருடம்(25 வருட கட்டிடபணி) கட்டிய கட்டிடத்தின்  எஞ்சியிருந்த, பழைய அடித்தளங்களில் இருந்து 1952 ம் ஆண்டு கட்டப்பட்ட மூன்றாவது தேவாலயம் இது.இங்கு தேவாலய குருக்களின் புனித நினைவு சமாதிகளை இங்கு  காணமுடியும். நான் மாதத்தில் ஒரு முறையாவது அங்கு சென்றுவருவேன்

ஸ்ரீராம ஜெயம் ஸ்ரீராம ஜெயம் அனுமன் இருக்கையில் ஏது பயம்